லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல்

லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல்
Spread the love

லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல்

லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல் இடம்பெறவுள்ளது .குமுதினி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் லண்டன் Harrow பகுதியில் நாளை புதன்கிழமை (15/05/24)நடைபெற உள்ளது.

இலங்கை கடற்படையின் காட்டுமிராண்டித்தனமான படுகொலையின் வெளிப்பாடாகக் குமுதினிப் படுகொலை கருதப்படுகின்றது .

குமுதினிப் படுகொலை

குமுதினிப் படுகொலை இடம்பெற்று 39 வருடங்கள் கடந்த நிலையில் நாளை லண்டனில் இந்த நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற உள்ளது.

குமுதினிப் படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும்,புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய பொழுது இடம்பெற்றது .

குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட தினமாகும்.

1985 ஆம் ஆண்டு காலை 07 மணி அளவில் சுமார் 67 பேருடன் பயணித்த குமுதினி படகை சுற்றிவளைத்த கடற்படையினர் குழந்தைகள் சிறுவர்கள் முதியவர்கள் என பாராது 36 பேரை குத்தியும் வெட்டியும் கொலை செய்தனர்.

அவ்வாறன இனவாத அரசாள நடத்திய அந்த குமுதினி நினைவு நாள் இடம்பெறுகிறது என்பதை நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிய படுத்தியுள்ளனர் .

தகவல் –ஈழம் ரஞ்சன்