சீமான் வீட்டில்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

சீமான் எங்கள் தமிழ் படை |tamil kavithaikal /Vanni mainthan kavaithai

சீமான் எங்கள் தமிழ் படை |tamil kavithaikal /Vanni mainthan kavaithai

https://www.youtube.com/watch?v=_fsmxBO5EnE
உன்னால் தவிக்கிறோம்
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னால் தவிக்கிறோம்

உன்னால் தவிக்கிறோம் |முரசுமோட்டை மூன்றாம் யூனியயை சேர்ந்த அமிர்தலிங்கம் தவபாக்கியம் அவர்களது துயர் பகிர்தல்

https://www.youtube.com/watch?v=903y5dFuOcQ

உள்ளம் தா உயிர் வாழ்கிறேன் | kavithaikal |Vanni mainthan kavaithai
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

உள்ளம் தா உயிர் வாழ்கிறேன் | kavithaikal |Vanni mainthan kavaithai

உள்ளம் தா உயிர் வாழ்கிறேன் | kavithaikal |Vanni mainthan kavaithai

இன்னும் எனக்குள் நீ |காதல் சோக கவிதை | tamil kavithaikal /Vanni mainthan kavaithai
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

இன்னும் எனக்குள் நீ |காதல் சோக கவிதை | tamil kavithaikal /Vanni mainthan kavaithai

இன்னும் எனக்குள் நீ |காதல் சோக கவிதை | tamil kavithaikal /Vanni mainthan kavaithai

https://www.youtube.com/watch?v=VFh6ELvkL0g
எங்கள் தேவதைக்கு அகவை வாழ்த்துக்கள்
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

எங்கள் தேவதைக்கு அகவை வாழ்த்துக்கள்

எங்கள் தேவதைக்கு அகவை வாழ்த்துக்கள்

இன்றுந்தன் அகவையே –

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்ல குட்டி.

இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்

https://www.youtube.com/watch?v=40Bi0ufUytA
நீ வாழ என் வாழ்த்து |tamil kavithaikal
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

நீ வாழ என் வாழ்த்து |tamil kavithaikal

நீ வாழ என் வாழ்த்து |tamil kavithaikal

நண்பர் ஆனந்தம் அவர்கள் அகவை நாளில் ,அவரை எண்ணி சிலவரிகள் ,நீ வாழ என் வாழ்த்து ,நினைந்துருகி வாழ்த்துகிறேன்.

https://www.youtube.com/watch?v=U7Z4ayazNCA
திருமணம் செய்வோம் வா
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

திருமணம் செய்வோம் வா

திருமணம் செய்வோம் வா

பக்கம் பக்கமாக கவிதை எழுதி
படித்து காட்ட வந்தாலும்
வெட்க பட்டு ஓடுறியே
வெருளியாக மாறிரியே

அச்சத்தில் நீ சிரிக்கையிலும்
அத்தனை பல்லும் அழகாச்சு
முத்தமிட முன் மொழியும் – உன்
உதடு இரண்டும் தெளிவாச்சு

சத்தமிடா நீ இருந்தா
சாந்தமாக ஆகிடுவேன்
உத்தரவு நீ கொடுத்தா
உன்னை நான் ஏற்றிடுவேன்

இத்தனை நாள் தவமிருந்தேன்
இந்த ஒரு நாளுக்காய்
இன்றேனும் ஏற்று விட்டாய்
இணைவோம் வா இல்லறத்தில் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-11-2022

https://www.youtube.com/watch?v=DTjw9V_C490
செல்லத்தம்பி செல்வகுமார்
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

துயர் தந்து ஏன் மறைந்தாய் video

துயர் தந்து ஏன் மறைந்தாய் video

துயர் தந்து ஏன் மறைந்தாய் video செல்லத்தம்பி செல்வகுமார் 31 ஆம் நாள் நினைவு பகிர்வு இரங்கல் கவிதை துயர் தந்து ஏன் மறைந்தாய்.video

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் .

https://www.youtube.com/watch?v=L2uq4ZdNoAc
என்னோடு வா
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

என்னோடு வா

என்னோடு வா

கவிதைக்குள் உன்னை நான் வரைய வா – என்
கனவுக்குள் என்றும் நீ மலர வா
இதயத்தை என்றும் திறக்க வா – என்
இதயத்தில் என்றும் இருக்க வா

உனக்காக என்றும் நான் வாடவோ – உன்
உயிரோடு என்றும் நான் கூடவோ
பிறந்தாயே நீ தானே எனக்காக – இந்த
பிரளயத்தை பிளக்க வா துணையாக ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-11-2022

https://www.youtube.com/watch?v=1sOvAMCME48
வந்தவன் ஆள்கிறான் இங்கிலாந்து
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

வந்தவன் ஆள்கிறான் இங்கிலாந்து

வந்தவன் ஆள்கிறான் இங்கிலாந்து

ஆண்ட பரம்பரை வீழ்ந்து படுத்தது
ஆண்ட தேசத்தில
அடிமையானவர் அடக்கியாண்டவர்
ஆள்கிறான் தேசத்தில

இங்கிலாந்திலும் இந்து ஆளலாம்
இங்கு நெறி இருக்கு
இன்று ஆளும் ரிஷி சுனெக்
இந்து தருமத்தில் இருக்கு

முந்தி வந்தெம்மை ஆண்டு மகிழ்ந்தவன்
முன்னே விழிக்கிறான்
முன்னேற்றம் காண நிலையிலே
முன்னேறி ஆள்கிறான்

வந்தவன் ஆள்கிறான் இங்கிலாந்து

வந்தவர் இங்கு ஆளும் புலமை
வாயிலில் இருக்கு
வாய் உரைக்கும் மொழியின் புலமை
வளத்தில் நிறைந்திருக்கு

ஈர் நூறண்டு வரலாறு
இன்று உடைந்தது
இங்கிலாந்தின் இளம் வயது
இவன் என்றே மலர்ந்தது

முதல் இந்திய குடிமகன்
முன் பெயரே ஒலித்தது
வந்தேறி குடி மகன் ஆளும்
வசதி நெறி கிடைத்தது

இந்திய நாடு இலங்கையில்
இது போலொரு நெறி உண்டோ
இங்கிலாந்தின் ஆட்சி முறை
இனியேனும் பற்றுமோ …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 25-10-2022
இங்கிலாந்தை ஆளும் இந்திய பிரதமர் ரிஷி சுனெக் 25/10/2022 பதவி ஏற்ற பொழுது

நீதிக்கு இன்று பிறந்த நாள் சட்டத்தரணி பி[பிரியன்
Posted in பிறந்த நாள் வாழ்த்துக்கள் வன்னி மைந்தன் கவிதைகள்

நீதிக்கு இன்று பிறந்த நாள்

நீதிக்கு இன்று பிறந்த நாள்

அன்பிற்கும் பண்பிற்கும் முதலானவன்
அறத்திலே உதிர்கின்ற பெருமாளிவன்
நெஞ்சுக்குள் நிற்கின்ற நேயனிவன்
நேர்மையில் இவனொரு தாயானவன்

சொல்லுக்குள் நேயத்தின் வில்லானவன்
சொன்னதை செய்கின்ற பிரபாகரன்
கண்ணுக்குள் தெறிக்கின்ற ஒளியானவன்
கரிகால பரம்பரை பேரனிவன்

வெள்ளையர் நாட்டில் வெறியானவன் – நீதி
வெந்தணல் மூழ்கியே முடிகின்றவன்
அடிமையை ஏறியே உதைக்கின்றவன்
அடக்கிட நினைத்தாரை மிதிக்கின்றவன்

தன்னலம் இன்றியே நடக்கின்றவன்
தரணியில் தன் புகழ் விதைக்கின்றவன்
வந்தாரை கரையேற்றி வைக்கின்றவன்
வழிகாட்டி வாழ்வியல் கொடுக்கின்றவன்

சட்டத்தில் வித்தைகள் குடிக்கின்றவன்
தர்க்கத்தில் தன் வித்தை கொட்டிறவன்
நுணுக்கத்தில் நூலாகி நுழைகின்றவன்
நுண்ணுயிர் போலாகி வெல்கின்றவன்

பிரம்மனாய் இன்று நீ பிறப்பெடுத்தாய்
பிரமைகள் பலதை உடைத்தெறிந்தாய்
இறவா நடக்கின்ற நீதிவானாய்
இன்று போல் என்றும் வாழ்ந்திடுவாய்

பிரியத்தை பிழிகின்ற பிரியனே – என்
பிரியத்தில் உறைகின்ற முதல்வனே
தலைகள் வணங்கிடும் தலைவனே – நீதி
தரணியை ஆண்டிடு மைந்தனே .

இன்றிவன் இன்றிவன் பிறந்தானாம்
இதயத்தில் இறைவனாய் நின்றானாம்
இன்றுபோல் என்றும் நீ வாழ்ந்திடனும்
இதயமே வாழ்திறேன் நீ ஆண்டிடனும் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 06-10-2022

பிரிட்டனில் சட்டத்தரணி பிரியன் அவர்கள் பிறந்த நாளான இன்று 06-10-2022
வாழ்த்திய வாழ்த்து பா .

உங்கள் வாழ்த்துக்களை கீழ் உள்ள கருத்து பகுதியில் NAME மற்றும் கருத்தை பதிவு செய்தல் போதுமானது – மின் அஞ்சல் தேவை அல்ல

நீதிக்கு இன்று பிறந்த நாள் சட்டத்தரணி பி[பிரியன்
நீதிக்கு இன்று பிறந்த நாள்
மரண அறிவித்தல் செல்லத்தம்பி செல்வகுமார் அன்னார் செல்லத்தம்பி
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

விடை பெற்று ஏன் போனாய்

விடை பெற்று ஏன் போனாய்

நேற்றெங்கள் நெஞ்சத்தில்
நெடு நாளாய் உறைந்தவா
நேரலையில் ஓடி வந்து
நெடு நேரம் பேசியவா

ஆவி உடல் துறந்தின்று
ஐயா நீ வீழ்ந்தாயோ
ஆறா துயரினிலே
அழ வைத்து பார்த்தாயோ

வீடு வந்த உன்னை
வீதியில வழி மறித்து
விபத்தில் ஊனாக்கி
வீழ்ந்து போக வைத்தாரே

பத்து மாதம் கோமாவில்
பார்வை இழந்து கிடந்தவரே
எழுந்து வர நீ மறந்து
ஏக்கம் தந்து ஏன் மறைந்தாய்

கனி மரத்து தோப்பாகி
காலம் எல்லாம் காத்தவரே
விழி எல்லாம் நீர் வைத்து
விடை பெற்று ஏன் போனாய் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-10-2022

செல்லத்தம்பி செல்வகுமார் துயரில் தோய்ந்தவர்க்கு கண்ணீர் சமர்ப்பணம் .

மரண அறிவித்தல் செல்லத்தம்பி செல்வகுமார்

Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எங்கள் அவலம் இன்று புரிகிறதா

எங்கள் அவலம் இன்று புரிகிறதா

ஆகாயம் ஆடிடும் அழகான நாடு
அதோபார் அந்தோபார் அசிங்கத்தின் கேடு
அடித்த கொள்ளையில் அரைவாசி கொட்டு
அன்றாட அவமானம் அதனை ஒட்டு

எரிபொருள் எங்கென்ற ஏக்கம் போக்கு
எந்நாளும் ஏறும் விலை ஏற்றம் நீக்கு
பட்டினி படரா பாதையை காட்டு
பகைவராய் பார்க்கும் பார்வையை ஒட்டு

இல்லாத இழிநிலை இன்றே ஒட்டு
இலங்கை இருக்கென்று இவ்வுலகில் காட்டு
நாட்டுக்குள் நாட்டை நாட்டியே காட்டு
நம்மவர் வாழும் வாழ்வியல் கூட்டு

ஓட்டுக்கு ஓடும் ஓலம் ஒட்டு
ஒன்றாகும் ஓர்மத்தின் ஓட்டை நாடு
இல்லாமல் தவிக்குது இலங்கையில் வீடு
இதுதானே இதுதானே இலங்கையில் கேடு

சிங்களநாடு சிறையிலே சிறையிலே
சிறுபான்மை கண்டது இவையாவும் போரிலே
இல்லாத நிலையிலே இன்றிந்த போராட்டம்
இனத்தமிழ் அழித்தாயே இதனாலே வாட்டம் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 23-09-2022

Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

நீ மட்டும் வா

நீ மட்டும் வா

அஞ்சிடாத நெஞ்சு என்றால்
அருகில் வந்து நில்லு – நான்
அழைக்கும் போது ஓடி வந்து
என்னை நீயும் கொஞ்சு

பிஞ்சு போல பேசுகின்ற
உந்தன் பேச்சு வேண்டும்
பிரியமுடன் நீயணைக்கும்
பிரியா வரம் வேண்டும்

நீயும் நானும் வாழ்ந்து விட
இந்த பூமி போதும்
நீ அணைக்கும் போதினிலே
இருள் மட்டும் வேணும்

கண்ணுறங்கும் போதினிலே – உன்
காதல் பாட்டு வேண்டும் – நான்
காலம் எல்லாம் வாழ்ந்துவிட – நீ
காலடியில் வேண்டும் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 20-09-2022

Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

வாழ்வோம் வா

வாழ்வோம் வா

உந்தன் மனதில் யாரோ
உண்மை சொல்வாய் நீயோ
என்னை எண்ணி தானோ
எங்கிராய் இன்று நீயோ

அலைகளின் ஆடலில் மோதல்
மரங்களின் உரசலில் காற்று
உந்தன் உரசலில் யாரோ
உண்மை சொல்வாய் நீயோ

உன்னை ஏற்று நானே
உலகில் வாழ்வேன் மானே
இதயம் தாரேன் நானே
ஏற்று வருவாய் தேனே

இரவும் இங்கு பகலாகும்
இந்த பூமி சுகமாகும்
இதயம் நாளும் மகிழ்வேறும்
இது தான் வாழ்வு சுகம் ஆளும்

03-08-2022

https://www.youtube.com/watch?v=73Hc61mg7jE
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

பதில் சொல்

பதில் சொல்

இரவுகளை மட்டும்
இரவல் கேட்கிறாய்
இது தான்
இன்றுந்தன் காதலா

உன் இச்சை தீர்ந்ததும்
உதறி போனாயே
காதல் என்ற போர்வையில்
கண்ணீரை ஏன் தந்தாய்

சுகமான காதலை
சுமையாக்கி போனாயே
என்னை கொன்றிட தான்
எமனாகி வந்தாயா

தேடி வந்த போதெல்லாம்
தேய் பிறையை தேய்ந்தேனே
காலாவதி ஆகினேனோ
கழித்து விட்டு போனாய்

03-09-2022

https://www.youtube.com/watch?v=lczTOQYV9t0
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

இறந்து போ

இறந்து போ

சாக்கடையை தூவி அன்று
சாதனைகள் படித்தவர்
பூக் கடைகள் ஏதுமினிறி
புழுங்கி ஏன் அழுகிறார்

வேர்க் கடலை இதுவென்று
வெற்றிகளாய் உரைத்தவர்
வேர் அறுந்து வீழ்ந்ததென்ன
வேடிக்கையார் கேட்கிறார்

கை கூப்பி கும்பிட்டு
கால் வீழ்ந்து அழுதாரை
மேல் உதைத்து வீழ்த்தி
மேனியை சுட்டீரே

துப்பாக்கி இருக்கென்று
துணிவுடனே சுட்டவரே
தப்பாகி போனீரே
தரணி சொல்கிறதே

இறந்து போ

பெரும் பான்மை நீர் என்று
பெருமையாய் சொன்னவரே
பெரும் பான்மை துரத்தையிலே
பொடியாகி பறந்ததென்ன

கோட்டையில இருப்பதாய்
கொக்கரித்த கோட்டாவே
நாட்டை விட்டு போனதென்ன
நாடோடி ஆனதென்ன

பார்த்தாயா தமிழரது
பழி உன்னை துரத்திறது
கேட்டாயா நீ அன்று
கேடு கெட்டாயே

பூக்குமா இனி உந்தன்
பூந்தோப்பு அங்கு
பார்க்குமா இனி உன்னை
பலம் கொண்ட அன்பு

வேற்கிறதா இன்று
வேதனை தெரிகிறதா
காத்தவரே உன்னை
கை விட்ட கேவலமா

இருந்தென்ன இனி காண்பாய்
இன்றேனும் இறப்பாய்
இன்றேனும் உந்தன்
பிடிவாதம் துறப்பாய் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 29-08-2022

உன்னில் நன் என்னை நம்பு
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னில் நான் என்னை நம்பு

உன்னில் நான் என்னை நம்பு

காயம் கொஞ்சம் நீ தந்தால்
கண்ணீர் நான் தருவேன்
காலம் எல்லாம் நீ வாழும்
கவிதை யான் வடிப்பேன்

புத்தகத்தில் உனை புதைத்து
புது முகம் நான் தருவேன்
புயலாகி வீசி விடும்
புத்துயிர் நான் இடுவேன்

எழுத சொன்னால் நானும் கொஞ்சம்
ஏற்றே எழுதிடுவேன்
என் உயிரில் கலந்து விட்டால்
ஏணி நான் தருவேன்

மூச்சு தந்து உன்னை கொஞ்சம்
முன்னே வாழ வைப்பேன்
முன் பகலில் காயும் புடவை
போல உனை மடிப்பேன்

காட்டு வழியில் நீ நடந்தால்
காவல் நான் வருவேன்
கை தொழும் கடவுளாக – உன்
கண்ணில் நான் இருப்பேன் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 03-08-2022

இதயமே எந்நாளும் உனை தாங்குவேன்
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

இதயமே எந்நாளும் உனை தாங்குவேன்

இதயமே எந்நாளும் உனை தாங்குவேன்

என்பாட்டை என்பாட்டை நீ பாடவா
எனக்குள்ளே நீதானே எழுந்தாடவா
உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்
உள்ளத்தை தந்தே உயிராகினேன்

கறுப்பென்ன சிவப்பென்ன ஒன்றாகினோம்
கலந்தாடி தானே மகிழ் வேற்றினோம்
உன்மொழி எனக்கு பலம் இட்டதே
உலகாழ எனக்கு வழி தந்ததே

நீயின்றி நானின்றி உலகாடுமா
நினைவுகள் இலலாமல் உயிர் வாழுமா
உன்போல உறவொன்றை நான் காணுமோ
உயிராகி நின்றாய் அது போதுமே

இல்லாமை இருக்கின்ற வேளையிலே
இதயத்தில் உன் பாசம் குறையலையே
இதுதானே நீ தந்த காதல் என்றேன்
இதயமே எந்நாளும் உனை தாங்குவேன் ….!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 01-08-2022

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    சிக்கன் கடை நாற்றம்

    சிக்கன் கடை நாற்றம்

    சிக்கன் கடை சிக்கன் கடை
    சிரிப்பு வருகுது
    லண்டனில சிக்கன் கடையில்
    நாற்றம் எழுகுது

    பணத்தை கொடுத்து உணவு வாங்க
    பறந்து வருகிறான்
    பழசை விற்று பணத்தை வாங்கி
    பறந்து திரிகிறான்

    வீடு காரு எல்லாம் இங்கே
    கடனில் ஓடுறான்
    பணக்காரன் என்றே தன்னை
    பந்தா காட்டுறான்

    காரில் இருந்து கமரா பார்த்து
    கடைக்குள் நுழையுறான்
    வேலை செய்யும் தொழிலாளியை
    வெறித்து முறைக்கிறான்

    தொழிலாளி போல வேலை செய்ய முடியல
    தொந்தி வைத்த வயிறால ஏதும் முடியல
    அரை குறையா ஆங்கிலமும் பேசி அலைகிறான்
    அதிலேனும் புலமையில்லா இவனும் கிடக்கிறான்

    பண்டியையும் கோழியையும்
    ஒண்ணா பொரிக்கிறான்
    பள்ளி வாசல் போறவனும்
    பாவம் திண்ணுறான்

    பாபுக்கி கிரில் சிக்கன்
    வாங்கி உண்ணாத
    பழைய சிக்கன் இதுதாங்க
    மறந்து போகாத

    இவர்கள் போல குப்பையர்கள்
    இங்கு யாரும் இல்லையே
    இவரை இங்கு சிறையில் போட
    எவரும் முனையல

    சிக்கன் கடை நாற்றம்

    உழைத்த பணத்தில் வரியை கட்ட
    ஊதி மறைக்கிறான்
    ஊருக்குள்ள முதலாளி
    ஊனம் போகிறான்

    இவரை கண்டால் செருப்பெடுத்து
    இன்றே அடியடா
    இடுகாடு உள்ளே இழுத்து
    இன்றே புதையடா

    கலர் படத்தை செய்கிறவன்
    கலராய் திரிகிறான்
    நாற நாற சிக்கன் விற்கும்
    நாயு போகிறான்

    கோழிக் கடையில் கொஞ்சம் நீங்க
    வேலை செயுங்க
    கொள்ளை அடிக்கும் கொள்ளையரை
    அங்க பாருங்க

    சூடு ஒயிலை வடிக்கிறாங்க
    ரப்பர் வாளியில்
    சுகாதார பாதுகாப்பு
    மறந்து போறாங்க

    சட்டம் வாழும் நாட்டில தான்
    எல்லாம் நடக்குது
    சாட்ச்சி களாய் சொன்னேன் இதை
    எடுத்து பேசுங்க

    லண்டனில சிக்கன் கடை
    கூத்து பாருங்க
    நம்ம தமிழர் கடையில் இந்த
    நாற்றம் கேளுங்க

    பெண்டாட்டி பேரில
    கடைகள் பாருங்க
    பொறுப்பற்று திரியும்
    இந்த ஊழல் வாதிங்க

    சொலவதெல்லாம் உண்மை என்றே
    சொல்லி போறெங்கே
    சொன்னதில பொய் இருந்தா
    சொல்லி திருத்துங்க …!

    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் 31-07-2022