Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
போரினை முடிவுக்கு கொண்டுவர ரசியாவுக்கு சீனா அழுத்தம்
போரினை முடிவுக்கு கொண்டுவர ரசியாவுக்கு சீனா அழுத்தம்
உக்கிரேன் ரசியவனுக்கு இடையில் ஏற்பட்ட போரினை முடிவுக்கு கொண்டும் வரும் படி
ரசியாவை சீனா கேட்டு வருகிறது ,இந்த அமைதி நடவடிக்கையை மேற்கொள்ள சீனா
ரசியாவுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன
போரினை முடிவிக்கு கொண்டு வந்து இயல்பு நிலைக்கு மீள்வும் இரு நாடுகளும் இயங்குவதற்கு
உக்கிரேனை ஆக்கிரமித்த பின்னரே ரசியா இந்த அமைதிக்கு உடன்படும் என எதிர்பார்க்க படுகிறது
அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்
அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்
சிரியாவில் உள்ள Al-Omar அமெரிக்கா இராணுவ தளத்தின் ஆயில் நிலைகள் மீது மதியம் அளவில் ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இந்த தாக்குதலில் அந்த முகாம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
எனினும் அமெரிக்கா இராணுவ தரப்பில் இருந்து எதுவித தகவலும் வெளியாகவில்லை
இனையத்தில் வைரலாகும் 12 கிலோ சிசு
இனையத்தில் வைரலாகும் 12 கிலோ சிசு
உலக மக்களை அதிகம் கட்டி போட்டுள்ள சமூக வலைத்தளங்களில் சீனாவின் டிக் டொக் முதன்மை இடத்தை வகிக்கிறது
இதில் 12 கிலோ எடையுள்ள சிசு ஒன்றின் காணொளி வெளியாகி வேகமாக வைரலாகி வருகிறது
September 28 at Tunbridge Wells மருத்துவமனையில் பிறந்த இந்து சிசுவே உலகில் அதிக
எடை கூடிய சிசு என்ற பெருமையை பெற்றுள்ளார்
உக்கிரேன் களத்தில் அமெரிக்கா ஏவுகணைகள்
உக்கிரேன் களத்தில் அமெரிக்கா ஏவுகணைகள்
உக்கிரேன் மீது ரசிய இராணுவம் பாரிய ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளது
இந்த இராணுவ நகர்விற்கு எதிராக உக்கிரேன் சமராடி வருகிறது ,நேட்டோ ,பிரிட்டன் ,அமெரிக்கா,கனடா உள்ளிட்ட நாடுகள் அதி நவீன் ஆயுதங்களை வழங்கி வருகிறது
மர்ம ஆயுத சோதனை
,இந்த ஆயுதங்கள் யாவும் ரசியா இராணுவம் மேற்கொள்ளும் இராணுவ நகர்வின் ஆழத்தை சோதனை செய்து பார்க்கும் முகமாக உடனடியாக உதவி என்ற போர்வையில் உக்கிரேனுக்கு ஆயுத உதவிகள் வழங்க படுகிறது
இந்த ஆயுத பாவனை மூலமே ரசிய இராணுவத்தின் முன்னேற்றம் தடுத்து நிறுத்த பட்டுள்ளதாக நேட்டோ உள்ளிட்ட வல்லரசு நாடுகள் கற்பனை காண்கின்றன ,
ஆனால் அது உண்மை தான் என்பதை போலவே இதுவரை ரசியா நாட்டு 80 உலங்கு வானூர்திகள் மற்றும் விமானங்கள் உள்ளடங்களாக அழிக்க பட்டுள்ளன
இவை ரசியா இராணுவத்தின் ஆயுத பலத்தினுள் பெரும் அழிவாகும்
பேரழிவு
அது போலவே ஐம்பதுக்கு மேற்பட்ட டாங்கிகள் அழிக்க பட்டுள்ளன ,இது ரசியா இராணுவத்திற்கு கிடைத்த மரண அடி என உக்கிரேன் ஆதரவு ஐரோப்பியா மற்றும் அமெரிக்கா மேற்குலக நாடுகள் கூறுகின்றன ,
உக்கிரேன் களத்தில் அமெரிக்கா ஏவுகணைகள்
இரண்டாம் உலக போரில் பலத்த வெற்றியை தனதாக்கிய ரசியா என்ற இராணுவத்தின் சாம் ராச்சியத்தை கட்டி காத்த ரசியா படைகள் உக்கிரேன் மீது தொடுக்க பட்ட தாக்குதலில் இருந்து திணறி வருகிறது
உக்ரேனுக்கு வெளிநாடுகள் ஆயுத உதவிகளை வழங்காது விட்டிருப்பின் ரசியா உக்கிரேனை முழுவதுமாக தனது ஆக்கிரபிறக்குள் உள்ளாக்கி தனது நாட்டுடன் உக்கிரேனை இணைத்து இருக்கும் என நம்ப படுகிறது
உக்கிரேன் சமர் களத்தில் பயன் படுத்த படும் அமெரிக்கா ஏவுகணைகள்மற்றும் நேட்டோ ஏவுகணைகள் செயல் திறன் அதிகரித்து செல்வதை இந்த ஆயுத இழப்பு காண்பிக்கிறது
யேர்மனி அரசு 2700 Soviet-made anti-aircraft ஏவுகணைகளை வழங்கியுள்ளது இதன் ஒரு வெளிப்பாடு என அடித்து கூறலாம் ஆழம் பார்ப்பதில் யேர்மனிக்கு அத்தனை இன்பம் போலும் ,எல்லாம் பீதி தான் காரணம் ..!
- வன்னி மைந்தன் –
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி
- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு
- மோட்டார் சைக்கிள் திருட்டு
- டெங்கு அபாயம் தொடர்கிறது
- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை
- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்
- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை
- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்
- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது
ரஷியா டாங்கியை இழுத்து செல்லும் விவசாயிகள் – photo
ரஷியா டாங்கியை இழுத்து செல்லும் விவசாயிகள் – photo
உக்கிரேன் நாட்டின் மீது இராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ள ரசிய
இராணுவத்திற்கும் உக்கிரேன் இராணுவத்துக்கும் இடையில் கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இரு தரப்பிலும் பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன
இவ்வேளை தாமே பலம் பொருந்தியவர்கள் என உலக ஊடகங்கள் வாயிலாக பரப்புரை புரிந்து வரும் உக்கிரேன் ரசிய இராணுவத்தின் தாங்கி ஒன்றை விவசாயிகள் உளவு
இயந்திரம் மூலம் கட்டி இழுத்து செல்வதாக காட்சி ஒன்றை வெளியிட்டு ரசியாவை கிண்டல் புரிந்துள்ளனர்
உண்மையில் அந்த வாகன ஓட்டிகள் விவசாயிகள் என்பதற்கு எந்த சான்றும் இல்லை ,உளவு இயந்திரம் ஒட்டுகிறார்கள் என்பதற்க்காக அவர்கள் விவசாயிகள் என கூறிட முடியுமா என்ன ..?,
இதன் ஊடக ஐரோப்பிய நாடுகளின் முக்கிய ஊடகங்கள் தமது எதிர்ப்பையும்,.இழிவையும் இவ்விதம் ரசியா மீது கொட்டி தீர்த்து மக்களை திசை
திருப்பும் நகர்வுக்கு இட்டு செல்கின்றனர் என்பதை வரும் செய்திகளின் வாயிலாக காண முடிகிறது
இராணுவ ,அரசியலில் இது எல்லாம் சகாயமப்பா
- வன்னி மைந்தன் –
ஐரோப்பிய யூனியனில் இணைகிறது உக்ரைன்
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் காணொலி மூலம் பேசிய ஜெலன்ஸ்சி, உக்ரைன் மக்கள் வலிமையானவர்கள் என்று தெரிவித்தார்.
ஐரோப்பிய யூனியனில் இணைகிறது உக்ரைன் – விண்ணப்பத்தை ஏற்றது ஐரோப்பிய பாராளுமன்றம்
27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய யூனியனில் இணையும் முயற்சிகளில் உக்ரைன் ஈடுபட்டு வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷியா, அந்நாடு மீது போர் தொடுத்துள்ளது.
இதையடுத்து உக்ரைன் விடுத்த கோரிக்கையை அடுத்து ஐரோப்பியயூனியன்
நாடுகள் ஆயுதங்கள் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கான விண்ணப்பத்தில் திங்கள் கிழமையன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்சி கையெழுத்திட்டார். தொடர்ந்து ஐரோப்பிய பாராளுமன்றத்தில் காணொலி மூலம் அவர் பேசியதாவது:
உக்ரைன் மக்கள் வலிமையானவர்கள். நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். நீங்கள் எங்களோடு இருப்பதை நிரூபியுங்கள். எங்களை போக விட மாட்டீர்கள் என்பதை நிரூபியுங்கள். நீங்கள் உண்மையிலேயே ஐரோப்பியர்கள் என்பதை நிரூபியுங்கள்.அப்போதுதான் மரணத்தை வாழ்க்கை வெல்லும். இவ்வாறு அவர் பேசினார்.
அவரது உரை முடிந்தவுடன் அங்கிருந்த உறுப்பினர்கள் கைதட்டி பலத்த கரகோஷம் எழுப்பினர். இதையடுத்து ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடாக உக்ரைனின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஐரோப்பிய பாராளுமன்றம் அறிவித்துள்ளது
ரஷியாவின் பீரங்கியை திருடிய உக்ரைன் விவசாயி
ரஷியாவின் பீரங்கியை திருடிய உக்ரைன் விவசாயி
விவசாயி ஒருவர் தனது டிராக்டரில் பீரங்கியை கட்டி இழுத்து செல்ல அதன் பின்னால் ராணுவ வீரர் ஒருவர் ஓடும் காட்சி இடம் பெற்று உள்ளது.
ரஷியாவின் பீரங்கியை திருடிய உக்ரைன் விவசாயி
உக்ரைன் விவசாயி பீரங்கியை டிராக்டரில் கட்டி இழுத்து செல்லும் காட்சி.
உக்ரைன் மீது ரஷிய ராணுவம் கடந்த 6 நாட்களாக போர்தொடுத்து வருகிறது. உக்ரைனை கைப்பற்றும் முயற்சிகளில் ரஷியா ஈடுபட்டு உள்ளது. இதற்கு உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
உக்ரைன் நகருக்குள் உள்ள ரஷிய ராணுவத்தினர் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் உக்ரைனை சேர்ந்த விவசாயி ஒருவர் கிவ் எல்லை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ரஷியாவின் பீரங்கி வாகனத்தை தனது டிராக்டரில் கட்டி இணைத்து இழுத்து திருடி சென்றார்.
இந்த வீடியோவை இங்கிலாந்தின் பிளைமவுத் நாடாளுமன்ற எம்.பி. ஜானி மெர்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
அந்த வீடியோவில் விவசாயி ஒருவர் தனது டிராக்டரில் பீரங்கியை கட்டி இழுத்து செல்ல அதன் பின்னால் ராணுவ வீரர் ஒருவர் ஓடும் காட்சி இடம் பெற்று உள்ளது. இந்த வீடியோவை வெளியிட்டு ஜானி மெர்சர் கூறுகையில்,
“இந்த வீடியோவின் மூலம் ரஷியா சிறந்த நிபுணத்துவம் பெற்ற நாடு இல்லை என்பது தெரிகிறது.
உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு சிறப்பாக நடப்பதாக தெரியவில்லை. உக்ரைன் நாட்டு டிராக்டர், ரஷியாவின் பீரங்கி வாகனத்தை திருடி உள்ளது” என்றார்.
இந்த வீடியோ இணைய தளத்தில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை இதுவரை 46 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்து உள்ளனர்.
இந்த வீடியோவை ஆஸ்திரியாவுக்கான உக்ரைன் நாட்டு தூதர் அலெக்சாண்டர் ஷெர்பாவும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார். அவர் கூறுகையில், “உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் மிகவும் பலசாலிகள்” என்றார்
இராணுவத்தை உடனே விலக்க வேண்டும் ஐநா ரசியாவுக்கு எச்சரிக்கை
இராணுவத்தை உடனே விலக்க வேண்டும் ஐநா ரசியாவுக்கு எச்சரிக்கை
உடனடியாக போர் நிறுத்தம் மேற் கொள்ள வேண்டும் என்று ஐ.நா.சபை சிறப்பு அவசர கூட்டத்தில் பங்கேற்ற நாடுகள் கேட்டுக் கொண்டுள்ளன.
ராணுவ வீரர்களை திரும்ப பெற வேண்டும் – ரஷியாவிற்கு ஐ.நா.சபை வலியுறுத்தல்
அன்டோனியா குட்டரெஸ்
ஜெனீவா:
உக்ரைன் ரஷியா இடையேயான போர் 5-வது நாளாக தொடரும் நிலையில், ரஷியாவின் போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அவசர கூட்டம் இன்று இரவு 8.30 மணியளவில் தொடங்கியது.
இதில் பேசிய ஐ.நா.பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ், உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.
போர் நடவடிக்கையால் அப்பாவி பொதுமக்கள் பலியாவதாகவும், இதனால் ரஷிய ராணுவ வீரர்கள் திருப்பி செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டியது அத்தியாவசிய தேவையாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
சமாதானம் மட்டுமே இந்த பிரச்சினைக்கான தீர்வாக இருக்கும் என்றும், உக்ரைனுக்கு ஐ.நா.சபை தொடர்ந்து உதவி செய்யும், அவர்களை கைவிடாது எனவும் அவர் குறிப்பிட்டார். உக்ரைன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவோம் என்று அந்நாட்டு அதிபருக்கு தாம் உறுதி யளித்துள்ளதாகவும் ஐ.நா.பொதுச்செயலாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், ரஷியா-உக்ரைன் இடையே உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும், தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்ற நாடுகளின் ஒட்டு மொத்த கருத்ததாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்…உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள்- ரஷிய வீரர்களுக்கு உக்ரைன் அதிபர் எச்சரிக்கை
உக்கிரேன் மீது அனைத்து வழியூடாக ரசியா தாக்குதல் – 24 மணித்தியாலத்தில் பேச்சுவார்த்தை
உக்கிரேன் மீது அனைத்து வழியூடாக ரசியா தாக்குதல் – 24 மணித்தியாலத்தில் பேச்சுவார்த்தை
ரசியாவுக்கும் ,உக்கிரேனுக்கும் இடையில் பலத்த சமர் இடம்பெற்று வரும் நிலையில் ரசியவனுடன் பேசிட உக்கிரேன் தயாராக உள்ளது
எதிர்வரும் 24 மணித்தியாலத்தில் இரு தரப்பும் பேச்சுக்களில் ஈடுபட உள்ளது
இதில் ரசியாவின் கோரிக்கையை ஏற்க உக்கிரேன் மறுத்தால் நாடு முழுவதும் ரசியாவின் கட்டு பாட்டில் சென்று விடும் என எதிர் பார்க்க படுகிறது ,இராணவ
பலத்துடன் ஏறி நின்று பேச போகும் ரசியாவிடம் அடிபணிந்து செல்வதை தவிர உக்கிரேனுக்கு வேறு வழியில்லை என்பதே இன்றைய களநிலவரமாக உள்ளது
குண்டுகளினால் உக்கிரேன் அதிர்ந்த வண்ணம் உள்ளது என உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது
லண்டன் Dartford பார்க்கில் உலவியவரை கடித்து குதறிய நாய்
லண்டன் Dartford பார்க்கில் உலவியவரை கடித்து குதறிய நாய்
லண்டன் Dartford பார்க் பகுதியில் உலவிய நபர் ஒருவரை அங்கு நுழைந்த நாய் ஒன்று கோரமாக கடித்து குத்தறியது
நாயின் கடிக்கு உள்ளான் நபர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
நாயின் உரிமையாளர் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்
ரசியா தாக்குதல் ஐரோப்பாவில் இராணுவத்தை குவிக்கும் நேட்டோ
ரசியா தாக்குதல் ஐரோப்பாவில் இராணுவத்தை குவிக்கும் நேட்டோ
ரசியா இராணுவம் உக்கிரேனுக்குள் நுழைந்துள்ளதால் ஐரோப்பிய நாடுகள் மீது ரசியா
போரை தொடுக்கலாம் என்ற நிலையில் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகள் குவிக்க பட்டு வருகின்றன
இவ்விதம் அமெரிக்கா தனது இராணுவத்தின் விசேட பிரிவு ஒன்றை ரொமேனியா,போலந்து உள்ளிட்ட பகுதியில் குவித்து வருகிறது
தாம் ஐரோப்பா மீது தாக்குதலை தொடுக்கவில்லை என புட்டீன் அறிவித்திருந்த
நிலையில் நேட்டோ தனது படைகளை குவித்து வருகின்றமை மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது
வெடித்து பறக்கும் குண்டுகள் – வடிந்தோடும் கண்ணீர்
வெடித்து பறக்கும் குண்டுகள் – வடிந்தோடும் கண்ணீர்
ரசியா இராணுவம் உக்கிரேன் தலைநகர் வடக்கு பகுதி வழியாக ஆட்டிலறி மற்றும் ஏவுகணைகள் வசம் நுழைந்துள்ளது
இந்த இராணுவம் நுழைத்துள்ளதால் அடுத்து வரும் நாட்களுக்குள் தலைநகர் ரசியா படைகள் வசம் வீழ்ந்து விடும் என எதிர்வு கூற படுகிது
இராணுவ தாக்குதல்
தாம் இராணுவத்தின் இலக்குகளை மட்டும் குறிவைத்து தாக்கி வருவதாகவும் ,அப்பாவி
மக்கள் மீது அல்ல என ரசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்து வருகிறது ,இதனையே புட்டீன் அவர்களும் தெரிவித்துள்ளார்
அகதிகள்
இராணுவம் மேற்கொள்ளும் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கும் ஓசையினால் சிறார் உள்ளிட்ட மக்கள் பீதியடைந்து வருகின்றனர் ,மேலு ஒரு லட்சத்திற்கு அதிகமான
மக்கள் உக்கிரேன் எல்லையோர நாடுகளான போலந்து ,ரோமானிய போன்ற நாடுகளுக்கு தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர்
விமானங்கள் இரத்து
இந்த தாக்குதல்கள் வெடித்துள்ளதால் ,மக்கள் பயணிகள் விமானங்கள் யாவும் உக்கிரேன் மேலாக பறப்பதற்கு தடை விதிக்க பட்டுள்ளது
வெடித்து பறக்கும் குண்டுகள் – வடிந்தோடும் கண்ணீர்
இதனால் வான்வழி பயணங்கள் முடக்க பட்டுள்ளன
குளிர் நிலை
ஆளை கொள்ளும் சினோ பொழிந்து வருவதால் ,மக்கள் பதுங்கு குழிக்குள் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது ,சிறார் உள்ளிட்டவர்கள் பதுங்கு குழிகளுக்குள் வசித்த வண்ணம் உள்ளனர்
பெரும் சிரமத்தின் மத்தியில் அந்த மக்கள் அங்கும் கண்ணீருடன் வசித்த வண்ணம்
உள்ளனர் ,மேலும் ரயில்வே நிலையங்களில் ,நில கீழ் சுரங்க வழியிலும் மக்கள் தமது இருப்பிடங்களாக மாற்றி வசித்து வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன
கண்டனங்கள்
ரசியாவின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலதும் கண்டித்துள்ளன ,தற்போது ஜெர்மனி மற்றும்
பெல்ஜியம் என்பனவும் கண்டித்துள்ளதும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூடியுள்ள பொழுதும் தீர்வு ஏதும் எட்டப்படாத நிலை காண படுகிறது
உக்கிரேன் மாதான போர் உலா ஒழுங்கு வீதியில் பெயரம் மாற்றத்தை ஏற்படுத்த போகிறது
ரஷியா தனது இலக்கு நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது ,வரும் நாட்களில் புதிய அத்தியாயம் எழுத படும் என எதிர் பார்க்கலாம்
ரசியா வான் பறப்பிற்கு மேலாக பிரிட்டன் விமானங்கள் பறக்க தடை
ரசியா வான் பறப்பிற்கு மேலாக பிரிட்டன் விமானங்கள் பறக்க தடை
ரஷியா உக்கிரேன் மீதான இராணுவ நகர்வை ஆரம்பித்த நிலையில் பிரிட்டன் ரசியாவின் முக்கிய வங்கிகள் மற்றும் அதன் சொத்துக்களை முடக்கியது ,அந்த
வங்கியால் செயல் பாடாமை அதன் சொத்துக்களை முடக்கியதன் எதிரொலியாக ரசியா தமது வான் பரப்பின் எல்லை அருகில் பிரிட்டன் விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது
அத்து மீறி பறப்பில் ஈடுபட்டால் அவற்றை சுட்டு வீழ்த்தவோ அல்லது சிறை பிடிக்கவோ
முடியும் ,இரு நாடுகளுக்கு இடையில் மேற்படி சம்பவம் பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது
இந்த தடையினை அடுத்து பிரிட்டன் விமானங்கள் அதன் பயண பாதையினை மாற்றி
செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது ,இதனால் விமான டிக்கட் விலைகள் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
உக்கிரேனில் தொடரும் மோதல் – 100.ஆயிரம் மக்கள் இடபெயர்வு
உக்கிரேனில் தொடரும் மோதல் – 100.ஆயிரம் மக்கள் இடபெயர்வு
உக்கிரேனில் ரசியா இராணுவத்தினர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ள
நிலையில் சுமார் ஒருலட்சம் மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்
அயல் நாடுகளில் இந்த மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர் ,தொடர்ந்து பெரும் பதட்டம்
இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,உக்கிரேன் முழுவதும் ரசியா இராணுவத்தின் வசம் விரைவில் வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்க படுகிறது
5 ரஷ்ய வங்கிகள் மீது இங்கிலாந்து பொருளாதாரத் தடை
5 ரஷ்ய வங்கிகள் மீது இங்கிலாந்து பொருளாதாரத் தடை
ஜெனடி டிம்சென்கோ, போரிஸ் ரோட்டன்பெர்க் மற்றும் இகோர் ரோட்டன்பெர்க் ஆகிய மூன்று பேரின் சொத்துக்கள் முடக்கப்படுவதுடன் இங்கிலாந்தில் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
5 ரஷ்ய வங்கிகள் மீது இங்கிலாந்து பொருளாதாரத் தடை விதிப்பு
இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கிழக்கு உக்ரைனுக்குள் படைகளை அனுப்பியதை அடுத்து, 5 ரஷ்ய வங்கிகள் மற்றும் 3 பேரின் உயர் நிகர சொத்துக்கள் மீது தடைகள் விதிக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
அதன்படி, ஜெனடி டிம்சென்கோ, போரிஸ் ரோட்டன்பெர்க் மற்றும் இகோர் ரோட்டன்பெர்க் ஆகிய மூன்று பேரின் சொத்துக்கள் முடக்கப்படுவதுடன் இங்கிலாந்தில் நுழையவும் தடை விதித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:-
இங்கிலாந்தில் வைக்கப்பட்டிருக்கும் 3 பேரின் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும். சம்பந்தப்பட்ட நபர்கள் இங்கு பயணிக்கவும் தடை விதிக்கப்படும்.
இங்கிலாந்தில் உள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் அவர்கள் எந்த விதமான தொடர்புக் கொள்வதற்கும் தடை செய்யப்படுகிறது.
மேலும், ஐந்து ரஷ்ய வங்கிகளான ரோசியா, ஐஎஸ் வங்கி, ஜெனரல் வங்கி, ப்ராம்ஸ்வியாஸ் பேங்க் மற்றும் பிளாக் சீ ஆகிய வங்கிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது.
இறையாண்மையுள்ள உக்ரைனில் ரஷ்யா படைகளை நிலைநிறுத்துவது அந்நாட்டின் மீது மீண்டும் படையெடுப்பதற்கு சமம் என்பதில் சபைக்கு எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
வெள்ளத்தில் மிதக்கும் லண்டனின் ஒரு பகுதி
வெள்ளத்தில் மிதக்கும் லண்டனின் ஒரு பகுதி
கடந்த சில நாட்களாக இடம் பெற்று வரும் கனமழை புயல் காரணமாக பிரிட்டன்
தழுவிய நிலையில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளது ,தற்போது லண்டன் கென்ட்
பகுதியில் உள்ள சில கிராம பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன
வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்த நிலையில் மக்கள் பெரிதும் அவதியுற்ற வண்ணம் உள்ளனர்
போலந்தில் முகாம் அமைக்கும் அமெரிக்கா இராணுவம்
போலந்தில் முகாம் அமைக்கும் அமெரிக்கா இராணுவம்
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில் போலந்து
உக்கிரேன் எல்லை பகுதியில் அமெரிக்கா இராணுவத்தினர் பாரிய இராணுவ முகாம் ஒன்றை அமைத்து வருகின்றனர்
சுமார் 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினருடன் இந்த முகாம் அமைக்க பட்டு வருகிறது
இதில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் கனரக ஆயுதங்களுடன் இந்த முகம் நிறுவ பட்டு வருகிறது
உக்கிரேன் வீழ்ச்சி அடைந்தால் போலந்தை இலகுவாக ரசியா படைகள் ஆக்கிரமித்து
விடும் என்ற நிலை தோன்றியுள்ளதாக சர்வதேச இராணுவ வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
பிரிட்டனில் புயலின் கோரம் உடைந்து வீழ்ந்த வீடுகள் ,கடைகள் ,மரங்கள் – படங்கள் உள்ளே
பிரிட்டனில் புயலின் கோரம் உடைந்து வீழ்ந்த வீடுகள் ,கடைகள் ,மரங்கள் – படங்கள் உள்ளே
பிரிட்டனில் வரலாறு காணாத பெரும் புயல் வீசிய வண்ணம் உள்ளதால் தொடர்ந்து பேரழிவு இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இந்த புயலின் கோரத்தில் சிக்கி வீடுகள் ,மரங்கள் ,கடைகள் என்பன பாதிக்க
பட்டுள்ளன ,மேலும் அதிக மழை வீழ்ச்சியால் வெள்ள பேருக்கும் ஏற்பட்டுள்ளது

டிக்டோக்கில் வைரலாகும் ரஷியா இராணுவ வண்டிகள் – வீடியோ
டிக்டோக்கில் வைரலாகும் ரஷியா இராணுவ வண்டிகள் – வீடியோ
உகிரேனை நோக்கி படையெடுக்கும் ரஷியா இராணுவத்தின் இராணுவ வண்டிகள் தொடர்பாக
தற்போது சமூக வலைத்தளங்களான டிடோக்கில் புதிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது
பிரதான சாலை ஒன்றின் வழியாக படை எடுக்கும் இந்த வண்டிகள் தொடர்பான காட்சிகளில் ஒன்றே இவையாகும்
லண்டனில் காரின் மேல் உடைந்து வீழ்ந்த கட்டடம்
லண்டனில் காரின் மேல் உடைந்து வீழ்ந்த கட்டடம்
லண்டன் கென்ட் பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றின் மேல் வீழ்ந்து நொறுங்கும் காட்சி ஒன்று வைரலாகி வருகிறது
புயல் வீசிய பொழுது இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது
மேலும் கென்ட் பகுதியில் 33 ஆயிரம் வீடுகள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றன
மின்சார கம்பங்கள் அறுந்து வீழ்ந்த்தனால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது



















