Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
தாக்க வந்த விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
தாக்க வந்த விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
ஈராக்கின் ஐன் அல்-அசாத் விமானத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தும் நோக்குடன் பயணித்த ,விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
ஈராக்கின் அல்-அசாத் விமானத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில்,
பயணித்த விமானமே ,அமெரிக்கா இராணுவத்தால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
இந்த விமானம் உளவு விமனமா அல்லது வெடிகுண்டுகள் தாங்கியபடி ,
பறந்து வந்ததா என்பது தொடர்பில் ,ஈராக்கிய படைகள் எதனையும் தெரிவிக்கவில்லை .
ஈரான் தற்கொலை தாக்குதல் நடத்தும் விமானங்களாக ,இவை இருக்கலாம் என கருத படுகிறது .
இந்த விமான தளம் தொடராக, ஏவுகணை மற்றும் ,விமான தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது .
வடகொரியாவுக்கு நெருக்கடி வழங்க ஐரோப்பா பறந்த ஜப்பான் பிரதமர்
வடகொரியாவுக்கு நெருக்கடி வழங்க ஐரோப்பா பறந்த ஜப்பான் பிரதமர்
வடகொரியாவுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்த ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவுக்கு ஜப்பான் பிரதமர் பயணித்துள்ளார் .
வடகொரியா தமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு என தெரிவித்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக முதல் சோதனை செய்து வருகிறது .
இதனால் கொரியா பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
வடகொரியாவின் இந்த மிரட்டும் செயலை தடுக்கவும் ,
ஜப்பானின் பாதுகாப்பை பலப்படுத்தவும் ,இந்த பயணத்தை ஜப்பான் பிரதமர் மேற்கொண்டுள்ளார் .
ஜெர்மனியில் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு
ஜெர்மனியில் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு
ஜெர்மன் டோஸில் டோப் பகுதியினுள் நடத்த பட விருந்து விஷவாயு ,சயனைட் தாக்குதல் முறியடிக்க பட்டுள்ளது .
ஈரான் நாட்டை சேர்நத 32 வயது நபர் ஒருவர் மூலம் ,
இங்கு நடத்தப்பட இருந்த மிக பெரும் ,தாக்குதல் முறியடிக்க பட்டுள்ளது .
ஈரான் நாட்டை சேர்ந்த இந்த தீவிரவாதியால் ,
நடத்தப் பட இருந்த தாக்குதலை ,மேப்பம் பிடித்த இஸ்ரேல் மொஸாட் ,
ஜெர்மன் உளவுத்துறைக்கு வழங்கிய தகவலை அடுத்து ,
இந்த நபர் கைது செய்யப் பட்டார் .
கைதானவர் தொடர்ந்து ,
விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்ட வண்ணம் உள்ளார் .
முஸ்லீம் மதவாத தாக்குதலை நடத்த,
இவர் திட்டமிட்டதாக ,ஜெர்மன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இரு பேரூந்து நேரெதிர் மோதல் 40 பேர் பலி -78 பேர் காயம்
இரு பேரூந்து நேரெதிர் மோதல் 40 பேர் பலி -78 பேர் காயம்
பயணிகள் பேரூந்து இரண்டு ஒன்றுடன் ஒன்று நேரெதிர் மோதி விபத்தில் சிக்கியதில்
சம்பவ இடத்தில 40 பேர் பலியாகினர் ,மேலும் 78 பேர் காயமடைந்துள்ளனர் .
மத்திய செனகலில் பேருந்து விபத்தில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர்,
மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் என்று நாட்டின் ஜனாதிபதி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
ஜனாதிபதி மேக்கி சால் ட்வீட் செய்ததாவது, காஃப்ரைன் பகுதியில் உள்ள கினிவி கிராமத்தில் அதிகாலை 3:30 மணியளவில் இந்த பேரூந்துகள் நேரெதிர் மோதின .
இரு பேரூந்து நேரெதிர் மோதல் 40 பேர் பலி -78 பேர் காயம்
40 மரணங்கள் மற்றும் பல கடுமையான காயங்களை ஏற்படுத்திய சோகமான சாலை விபத்தில் நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதுடன் , காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திப்பதாக தெரிவித்தார்
திங்கள்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்த அவர், சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க மத்திய அமைச்சர்கள் குழுவை நடத்தப் போவதாகக் கூறினார்.
சாலை விபத்தில் இறந்த மக்களுக்கு ,மூன்று நாள் துக்க தினம் அனுஸ்டிக்கும் நாட்டின் தலைவராக இவர் உள்ளது வியந்து பார்க்க படுகிறது .
ஈரானிடம் தற்கொலை விமானங்களை வாங்கி குவிக்கும் ரசியா
ஈரானிடம் தற்கொலை விமானங்களை வாங்கி குவிக்கும் ரசியா
உக்கிரேன் மீதன போரில் மேலும் ஆதிக்கத்தை செலுத்திட ,
ஈரானிடம் இருந்து ,மேலும் 500 கரும்புலி தற்கொலை தாக்குதல்
விமானங்களை கொள்வனவு செய்திட ரசியா பேச்சில் ஈடுபட்டுள்ளது .,
முன்னர் மேற்கொள்ள பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் ,
300 விமானங்கள் வழங்க பட்டு இருந்தன .
அதன் பின்னர் இரண்டு வாரங்களுக்கு முன்னரும் ,
இவ்வகையான விமானங்கள் ரசியாவுக்கு சென்றடைந்தது .
ஈரானிடம் தற்கொலை விமானங்களை வாங்கி குவிக்கும் ரசியா
இதனை அடுத்து மேலும் இவ்வகையான விமானங்களை ,
கொள்வனவு செய்திட ரசியா முயற்சிகளை,
மேற்கொண்டுள்ளதாக உக்கிரேன் உளவுத்துறையினர் அறிவித்துள்ளனர் .
ஈரான் தற்கொலை விமானங்கள் போன்றவற்றை,
தற்போது உக்கிரேன் தயாரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
உக்கிரேனில் 300 சிறுவர்களை கடத்திய ரசியா
உக்கிரேனில் 300 சிறுவர்களை கடத்திய ரசியா
உக்கிரேன் நாட்டின் லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க்,
பிராந்தியங்களில் இருந்து,
300 குழந்தைகளை வலுக்கட்டாயமாக ரஸ்யா கடத்திச் சென்றுள்ளது .
குறித்த சிறுவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவை என,
கூறி மாஸ்கோவிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கி வருகிறது.
உக்கிரேனில் மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு,
என கூறியே ,ரசிய படைகளினால் ,இந்த சிறுவர்கள்
அழைத்து செல்ல பட்டுள்ளனர் .
உக்கிரேனில் 300 சிறுவர்களை கடத்திய ரசியா
இந்த சிறார் கடத்தல் மிக பெரும் அப்பட்ட போர்க் குற்ற மீறலாகும் என,
உக்கிரேன் தெரிவித்து வருகிறது .
முள்ளி வாய்க்கால் இறுதி போரில் காயமடைந்த தமிழ் மக்களை ,
சிங்கள இராணுவ பகுதிக்கு கப்பல் மூலம் அழைத்து செல்ல பட்டது போன்ற செயலாக ,
இதனை கூறலாம் .
அவ்வாறே தமது மனித நேய உதவி இது என்கிறது ரசியா .
ஆனால் எதிரியான உக்கிரேனோ இது கடத்தல் என்கிறது .
பத்து மாதங்கள் கடந்து பயணிக்கும் போரில் ,
இவ்விதமான பரப்புரை பட்டாசு வெடிகளுக்கு பஞ்சம் இல்லாது கழிகிறது .
ரசியா இராணுவத்திடம் வீழ்ந்த உக்கிரேன் நகரம்
ரசியா இராணுவத்திடம் வீழ்ந்த உக்கிரேன் நகரம்
உக்கிரேன் இராணுவ கட்டு பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் ஒப்லாஸ்டில் உள்ள Soledar நகரத்தை ,ரசியா இராணுவம் மீள கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது .
ரசியா மற்றும் உக்கிரேன் இராணுவத்தினருக்கு இடையில்,
கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த மோதல்களின் விளைவால் ரசியா இராணுவத்திடம் ,
Soledar நகரம் வீழ்ந்துள்ளது என்கிறது ரசியா .
ஆனால் உக்கிரேன் கிழக்கு படைகளின் இராணுவ ,
தாக்குதல் படை பீடத்தின் பேச்சாளர் ,
தொடர்ந்து தமது கட்டு பாட்டிலியே இந்த பகுதி உள்ளது என்கிறார் .
ரசியா இராணுவத்திடம் வீழ்ந்த உக்கிரேன் நகரம்
எனினும் கடும் யுத்தம் இடம்பெற்று வருவதை ஒப்பு கொள்கிறார் .
ரசியா பத்து உடைப்பு தாக்குதலை மேற்கொண்டது எனவும் ,
ஆனால் அவையாவும் உக்கிரேன் இராணுவத்தினால் வெற்றிகரமாக ,முறியடிக்க பட்டுள்ளது என்கிறார் .
இந்த மோதல்களில் சிக்கி ரசியா இராணுவத்தில் 300 க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என்கின்ற விடயத்தை அறிவித்தார் .
உக்கிரேன் இராணுவத்தின் உயிரிழப்ப்பு ,
மற்றும் காயமடைந்தோர் இழப்பு விடயங்களை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார் .
பசுபிக் கடலில் சீனா நட மாட்டம் கொதிக்கும் அமெரிக்கா
பசுபிக் கடலில் சீனா நட மாட்டம் கொதிக்கும் அமெரிக்கா
பசுபிக் கடலில் தமது பலத்தை அதிகரிக்கும் நோக்குடன் ,சீனா கடல் படை
படை பலத்தை அதிகரித்து வருகிறது .
சீனக் கடற்படை மேற்கு பசிபிக் மற்றும் தென் சீனக் கடலில் ,
தமது விமான தாங்கி ,ஆணு ஆயுத கப்பல்களை,
ரோந்தில் ஈடுபட அனுப்பி வைத்துள்ளது .
பசுபிக் கடலில் சீனா நட மாட்டம் கொதிக்கும் அமெரிக்கா
மேலும் இந்த பகுதியில் தமது நடமாட்டத்தை அதிகரிக்க ,
புதிய கப்பல்கள் கட்டுமானம் ,மற்றும் புதிய தொழில் நுட்பங்கள் ஊடாக ,
அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .
தென் சீனா கடலை அண்மித்த பகுதியில் ,
அமெரிக்காவின் கண்காணிப்பு கப்பல்கள் நடமாட்டம் உள்ளதும் ,
இதே பகுதியில் கடற்படை விமான தாங்கி கப்பல் ஒன்றில் இருந்து ,
பறப்பில் ஈடுபட்ட விமானம் ஒன்றுடன்,
சீனா விமானம் மோதும் நிலையை ஏற்படுத்தி ,மிரட்டி சென்றதன் பின்னர் ,
இந்த படை விரிவாக்கம் அதிகரிக்க பட்டுள்ளமை கவனிக்க தக்கது .
ஈரானில் போராட்டம் நடத்திய இருவர் தூக்கிலிட்டு கொலை
ஈரானில் போராட்டம் நடத்திய இருவர் தூக்கிலிட்டு கொலை
ஈரானில் ஆளும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களில் ,
இருவர் தூக்கிலிடப் பட்டு
கொலை செய்ய பட்டுள்ளனர் .
மேற்குலக நாடுகளின் புலனாய்வார்களின் தூண்டுதலில் ,
ஈரானின் ஆட்சிக்கும் ,நாட்டின் அமைதிக்கும் பங்கம் விளைவித்ததுடன் ,
இராணுவ ஆதரவு துணை குழுக்கள் இருவரை கொன்றமை தொடர்பில் ,
இவர்களுக்கு இந்த தூக்கு தண்டனை விதிக்க பட்டுள்ளது,
என ஈரான் அறிவித்துள்ளது .
இவ்வாறான தூக்கு தண்டனை ஊடாக ,
அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை அடக்கி ஒடுக்க ,
அரசு இவ்விதம் மோசடியான குற்ற சாட்டுக்களை சுமத்தி ,
அப்பாவிகளுக்கு மரண தண்டனை வழங்கி வருகிறது ,
என்கிறது பாதிக்க பட்ட மக்கள் தரப்பு .
அமெரிக்கா பள்ளியினுள் டீச்சரை சுட்டு கொன்ற 6 வயது சிறுவன்
அமெரிக்கா பள்ளியினுள் டீச்சரை சுட்டு கொன்ற 6 வயது சிறுவன்
அமெரிக்கா வர்ஜீனியாவில் உள்ள ரிச்நெக் தொடக்கப் பள்ளியில் ஆறுவயது சிறுவன் ஒருவன்30 வயது டீச்சரை சுட்டு கொன்றுள்ளான் .
டீச்சருக்கு மாணவனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ,இந்த படு கொலையை அவன் அரங்கேற்றியுள்ளான் .
ஆறு வயது சிறுவன் ஒருவன் பாடசாலை ஒன்றுக்குள்,
டீச்சரை சுட்டு கொன்ற சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
எனினும் இந்த சம்பவதின் போது ஏனைய மாணவர்கள் காயங்கள் மற்றும் ,
உயிர் சேதங்கள் இன்றி தப்பித்து கொண்டனர் .
சமீப காலங்களாக அமெரிக்காவில் ,
இவ்வாறு சிறுவர்களினால் சுட்டு கொலை செய்யப் படுகின்ற சம்பவங்கள் அதிகரித்து காண படுகிறது .
30 ஆயிரம் அகதிகளை உள்ளே அழைக்கும் அமெரிக்கா
30 ஆயிரம் அகதிகளை உள்ளே அழைக்கும் அமெரிக்கா
அமெரிக்கா மாதம் ஒன்றுக்கு,
நான்கு நாடுகளை சேர்ந்த, 30 ஆயிரம் அகதிகளை ,
அமெரிக்காவிற்கும் நுழைய அனுமதிக்கிறது என்கின்ற விடயத்தை அறிவித்தார் .
வெனிசுலா, கியூபா, நிகரகுவா மற்றும் ஹைட்டியில் இருந்து,
மாதத்திற்கு 30,000 குடியேறியவர்களை, ஏற்றுக்கொள்கிறது என்பது ,
அவரது அறிவிப்பாக உள்ளது .
30 ஆயிரம் அகதிகளை உள்ளே அழைக்கும் அமெரிக்கா
மேலும் இவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்து தான் ,
விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை .
அவர் தம் நாடுகளில் இருந்தவாறே விண்ணப்பிக்க முடியும் ,
என்கின்ற புதிய அறிவிப்பை வெளியிட்டு ,
குறித்த நாடுகளின் மக்களை மகிழ்ச்சியில் குளிக்க வைத்துள்ளார் .
இவரது இந்த குடியேற்றவாசிகள் நுழைவுக்கு,
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ,கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார் .
போதைவஸ்து கடத்தல் மன்னன் கைது 29 பேர் சுட்டு கொலை
போதைவஸ்து கடத்தல் மன்னன் கைது 29 பேர் சுட்டு கொலை
மெக்சிகோவில் போதைவஸ்து குழு மற்றும் ஆயுதம் ஏந்திய காவல் துறையினருக்கு ,
இடையில் ஏற்பட்ட மோதல்களில் சிக்கி 29 பேர் பலியாகினர் .
இந்த மோதல்களின் பொழுது போதைவாஸ்து கடத்தல் குழுவை சேர்ந்த,
19 பேரும் , காவல்துறை சிப்பாய்கள் 10 பேரும் பலியாகினர் .
போதைவஸ்து கடத்தல் மன்னன் கைது 29 பேர் சுட்டு கொலை
50 கலிபர் இயந்திர துப்பாக்கிகளை தாங்கிய படி அணிதிரண்ட ,
போதைவஸ்து குழுக்களுடன் மோதல் இடம்பெற்றது .
தாக்குதல்கள் தீவிரம் பெற்ற நிலையில் ,இராணுவம் வரவழைக்க பட்டதுடன் ,
உலங்கு வானூர்திகளும் வரவழைக்க பட்டு , சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த பட்டது .
இந்த தாக்குதலில், போதைவஸ்து மன்னன் உள்ளிட்ட,
இருபது பேர் கைது செய்யப் பட்டனர் .
இவரது கைதை அடுத்து ,குலியாக்கன் நகரம் முழுவதும் ,
கடும் துப்பாக்கி சண்டைகள், இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
அமெரிக்காவினால் தேடப்பட்டு வரும் ,
முக்கிய போதைவஸ்து மன்னனே ,
கைது செய்ய பட்டு சென்றுள்ளார் .
போதைவஸ்தின் தாயகமாக ,
மெஸ்சிக்கோ விளங்கி வருவது குறிப்பிட தக்கது .
வெள்ளத்தில் மிதந்த லண்டன் வீடியோ
வெள்ளத்தில் மிதந்த லண்டன் வீடியோ
லண்டன் லூசியம்பகுதி திடீரென வெள்ளத்தால் சூழ .பட்டது
லீ கை பிரதான வீதி எள்த்தம் பகுதியில் நீர் குழாய் அடைத்து , வெடிப்பின் காரணாமாக இந்த வெள்ளம் ஏற்பட்டது .
அதி காலை நான்கு மணி முதல் ஆரம்பித்த இந்த வெள்ளம் ,11 மணிவரை காணப்பட்டது .
அதன் பின்னர் இயல்பு நிலைக்கு சென்றது .அதன் காட்சிகள் இங்கே
இதில் அழுத்தி காணொளி பார்க்கவும் .
60 லொறிகளில் எண்ணெய் திருடி சென்ற அமெரிக்கா
60 லொறிகளில் எண்ணெய் திருடி சென்ற அமெரிக்கா
சிரியாவில் இருந்து டாங்கர் மூலம் அமெரிக்கா, இராணுவத்தினர் ஒயில் திருடி சென்றுள்ளது அம்பலமாகியுள்ளது .
இந்த தொடர் ரோந்து அணியில் பலத்த பாதுகாப்புடன், இந்த டங்கர்கள் சிரியாவில் இருந்து ,வடக்கு ஈராக்கிற்கு எடுத்து செல்லப் பட்டுள்ளது .
பயங்கரவாதம் என்ற போர்வையில் படையெடுப்பை நடத்திய ,அமெரிக்கா அங்கிருந்து எண்ணெய் ,வளத்தை கொள்ளையடித்து செல்கிறது .
இந்த கொள்ளையை தடுக்க முடியாது சிரியா அரசு கை கட்டி வேடிக்கை பார்க்கிறது .
25 பேரை கொன்றேன் பிரிட்டன் இளவரசர் அறிவிப்பு
25 பேரை கொன்றேன் பிரிட்டன் இளவரசர் அறிவிப்பு
பிரிட்டன் இளவரசராக விளங்கிய ,கரி அவர்கள் 25 பேரை கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளார் .
இவர் எழுதிய நூல் ஒன்றில் இது விடயம் குறித்துள்ளார் .
2007 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ,இராணுவ பணியில் ஈடுபடடர் .
அங்கு தலிபான்கள் கோட்டையாக விளங்கிய ,Helmand பகுதியின் முன்னரங்களில் பணி புரிந்தார் .
அப்பொழுது 25 பேரை கொன்றதாக தெரிவித்துள்ளார் .
இந்த விடயம் தற்போது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தலிபான்கள் வேட்டையில் முக்கிய 8 பேர் படுகொலை
தலிபான்கள் வேட்டையில் முக்கிய 8 பேர் படுகொலை
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் எட்டு ஐ எஸ் தீவிரவாதிகள் ,கொலை செய்யப்பட்டுள்ளனர் .
கொலை செய்யப் பட்ட எட்டு பேரும் ,தலிபான்கள் ஆட்சியின் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து ,தாக்குதல் நடத்தியவர்கள் என தெரிவித்துள்ளனர் .
கொட்டல் ,அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் தூதரங்கங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீதே நடத்த பட்ட தாக்குதலில் ,இந்த எட்டு பேரும் .கொலை செய்யப்பட்டதுடன் ,மேலும் பல கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மூவர் சுட்டு கொலை எகிறும் துப்பாக்கி படுகொலைகள்
மூவர் சுட்டு கொலை எகிறும் துப்பாக்கி படுகொலைகள்
அமெரிக்கா Washington, D.C பகுதியில் மூவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .
இவ்வாறு சுட்டு படுகொலை செய்யப் பட்டவர்களில் ,எட்டு வயது சிறுவனும் உள்ளடங்களுமென காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர் .
வாகன நெரிசல் கொண்ட வேளையில் திடீரென துப்பாக்கி சூட்டினை நடத்தி விட்டு ,கொலையாளிகள் தப்பி சென்றுள்ளனர் .
இந்த கொலை வெறி செயலுக்கான காரணம் தெரியவரவில்லை .
காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
72 போனை திருடிய திருடன் மடக்கி பிடிப்பு
72 போனை திருடிய திருடன் மடக்கி பிடிப்பு
லண்டனில் கைப்பேசிகளை திருடிய திருடன் ஒருவரை ,காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர் .
லண்டனில் ஆறுவாரத்தில் 72 கைபேசிகளை மோட்டார் சைக்கிளில் திருடிய ,22 வயது திருடனை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர் .
இவ்வாறு மடக்கி பிடிக்க பட்ட நபர் காவல்துறை விசாரணைகளின் பின்னர் ,தற்போது நீதிமன்றின் முன்பு நிறுத்த பட்டுள்ளார் .
கற்பனை கூட செய்து பார்க்க முடியா அளவுக்கு ஆறு வாரத்தில் 72 கைபேசிகள் ,மாயாவி திருடனாக இருப்பார் போல .
தீயில் கருகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்
தீயில் கருகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்
ஜோர்டானில் உள்ள பண்ணை ஒன்றில் திடீரென தீ பற்றி கொண்டது .
இந்த தீ விபத்தில் சிக்கி .ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலியாகியுள்ளனர் .
இவ்வாறு இறந்தவர்களில் மூன்று மகள்கள், மற்றும் தாய் தந்தை ஆகியோரே தீயில் கருகிய நிலையில் இறந்துள்ளனர் .
மேலும் சிலர் தீ காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
இதே பகுதியில் பல பண்ணைகளில் ,பாகிஸ்தான் எகிப்து நாட்டை சேர்ந்த மக்களும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிட தக்கது .
பாகிஸ்தானில் இரண்டு உளவுத்துறை அதிகாரிகள் சுட்டு கொலை
பாகிஸ்தானில் இரண்டு உளவுத்துறை அதிகாரிகள் சுட்டு கொலை
கிழக்கு பாகிஸ்தானில் ஆயுத தாரி நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ,இரண்டு உளவுத்துறை அதிகாரிகள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர் .
இவ்வாறு கொலை செய்யப் பட்ட நபர்கள் ,பல ஆயுத குழு சிப்பாய்கள் கைதாக காரணமாக விளங்கியவர்கள் என படுகிறது .
அவ்வாறான உளவுத்துறை நபர்களை,இலக்கு வைத்து ஆயுத குழு தாக்குதல் நடத்தியுள்ளது .





































