Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
ஐந்தாவது விசேட விமானம் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டது
ஐந்தாவது விசேட விமானம் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டது
. இலங்கையில் சிக்கியிருந்த 153 இந்திய பிரஜைகள் விசேட ஏர் இந்தியா விமானம் (AI 0282) மூலமாக 2020 ஜூலை 08 ஆம் திகதி கொழும்பிலிருந்து டில்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். கொவிட்19
காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் உலகளவில் சிக்கியிருக்கும் இந்திய பிரஜைகளை இந்தியாவுக்கு
அனுப்புவதற்கான, இந்திய அரசின் ‘வந்தே பாரத் மிஷன்’ திட்டத்தினுடைய நான்காவது கட்டத்தின் ஓர் அங்கமாக இந்த விமானப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இலங்கையிலிருந்து அடுத்த விசேட விமானம் ஏர் இந்தியா AI 0282 கொழும்பிலிருந்து டில்லிக்கு 2020 ஜூலை 18 ஆம் திகதி பயணிக்கவுள்ளது.
- பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜைகளை சந்தித்திருந்த இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே அவர்கள், அப்பயணிகளின் பாதுகாப்பான
- பயணத்துக்காக வாழ்த்துக்களையும் பகிர்ந்திருந்தார். இலங்கையில் சிக்கியிருந்த இந்திய பிரஜைகளை சொந்த நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கைகளில் இலங்கை
- அரசாங்கத்தினதும் மக்களினதும் ஒத்துழைப்புக்காகவும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
- இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மேற்கொள்ளப்பட்ட
- பதிவுகளின் அடிப்படையில் இந்த விமானத்திற்கான பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவசரமாக நாடு திரும்ப வேண்டிய நிலையில்
- இருப்பவர்களுக்கு, குறிப்பாக நிர்க்கதியாகியுள்ள குடிபெயர் தொழிலாளர்கள், விசா காலாவதியான நிலையில் தங்கியிருப்பவர்கள், மருத்துவ உதவிகள் தேவைப்படுவோர்
- , கர்ப்பிணிகள், பெண்கள், முதியவர்கள், குடும்ப உறுப்பினரின் மரணத்தை தொடர்ந்து உடனடியாக இந்தியா திரும்புவதற்கு கோரிக்கைகளை முன் வைத்திருப்போர்
- மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்குவெளிநாடுகளில் சிக்குண்டிருப்பவர்களுக்காக இந்திய உள்துறை
- அமைச்சினால் வெளியிடப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட செயற்பாட்டுமுறைமையின் பிரகாரம், முன்னுரிமை வழங்கப்படும்.
- கொவிட் 19 காரணமாக சர்வதேச பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் சிக்கியிருந்த இந்திய பிரஜைகள், சொந்த நாடு நோக்கிய தமது பயணம் குறித்து மகிழ்ச்சியினை
- வெளிப்படுத்தியிருந்தனர். கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு ஜூன் 01ஆம் திகதி இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பற் சேவை, 2020 மே 29, ஜூன் 15, ஜூன் 22 மற்றும்
- ஜூலை 03 ஆகிய திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட ஏர் இந்திய விமான சேவைகள், ஏனைய பல விசேட விமான
- சேவைகள் மற்றும் நேற்றைய விமான சேவை உட்பட்ட சேவைகள் மூலமாக 1600 க்கும் அதிகமான இந்திய பிரஜைகள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
- நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் இதுவரையில் தம்மை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்ய தவறியிருப்பின் கீழ்வரும் இணையத்தளத்தில் பதிவு
- செய்யுமாறு கோரப்படுகிறார்கள். https://hcicolombo.gov.in/COVID_helpline நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய பிரஜைகள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளம் மற்றும் சமூக
- ஊடகங்களில் பதிவிடப்படும் அறிவித்தல்களை அறிந்து கொள்ளுமாறும் நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
கனடாவில் வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது
கனடாவில் வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது
வழங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட இந்தியர் ஒருவர் பம்பலபிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (01) மதியம் 1.30 மணியளவில் குறித்த நபர் கொழும்பு மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு மோசடி விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

ரிஷாட் பதியுதீன் CID இல் ஆஜர்
ரிஷாட் பதியுதீன் CID இல் ஆஜர்
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வாக்குமூலம் ஒன்றை
வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்
ஆஜராகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
176 துப்பாக்கிகள் மீட்பாம் – இராணுவம்
176 துப்பாக்கிகள் மீட்பாம் – இராணுவம்
நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பல்வேறு வகையான 176 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
2020.06.06 முதல் 2020.07.08 வரையான காலப்பகுதியிலேயே குறித்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் ரி 56 துப்பாக்கிகள் 11, ரி 81 ரக துப்பாக்கி ஒன்று, போரா 12 துப்பாக்கி 42, பிஸ்டல் 4, கல்கடஸ் 29, ரிபீடர் 74 மற்றும் வேறு வகை துப்பாக்கிகள் 15 கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு ஜப்பான்1,400 மில்லியன் ரூபாய் நிதி உதவி
இலங்கைக்கு ஜப்பான்1,400 மில்லியன் ரூபாய் நிதி உதவி
கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு எதிராக இலங்கையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு வலுச்சேர்ப்பதற்காக
மருத்துவ சாதனங்களை பெற்றுக் கொள்ள 800 மில்லியன் ஜப்பானிய யென் (சுமார் 1,400 மில்லியன் ரூபாய்) தொகையை ஜப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ளது.
இந்த நன்கொடை தொடர்பான உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் சுகியாமா அகிரா மற்றும் நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்
எஸ்.ஆர்.ஆடிகல ஆகியோர் கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வு நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சில் நேற்று (08) இடம்பெற்றது.
கொவிட்-19 தொற்றுப் பரவல் என்பது, மனித குலத்துக்கு பெரும் ஆபத்தைத் தோற்றுவித்துள்ளதுடன், சமூகத்துக்கும் பொருளாதாரத்துக்கும் பாரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த அவசர மருத்துவ நிலையை கவனத்தில் கொண்டு, இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பிரகாரம், 2020 மார்ச் மாதம் முதல் ஜப்பானிய அரசாங்கத்தினால் மருத்துவ சாதனங்கள் மற்றும்
தொழில்நுட்ப உதவிகள் போன்றன வழங்கப்பட்டவண்ணமுள்ளன. இந்த சவால் நிலையை கட்டுப்பாட்டினுள் பேணுவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட உறுதியான
தலைமைத்துவத்தை பாராட்டியதுடன், ஜப்பானிய அரசாங்கத்தினால் இலங்கையில் தொடர்ந்தும் மருத்துவ
சேவைகளை வழங்குவதற்கு மேம்படுத்திப் பேணும் வகையில், உதவிகளை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நன்கொடையினால் பெற்றுக் கொள்ளப்பட்ட சாதனங்களில் MRI ஸ்கானர்கள், CT ஸ்கானர்கள், சிஸ்டம்கள் மற்றும் சென்ரல்
மொனிடர்கள் போன்றன அடங்குகின்றன. இவை உடனடியாக கொவிட்-19 சிகிச்சைகள் வழங்கப்படும் தெரிவு செய்யப்பட்ட
வைத்தியசாலைகளிலும், சிகிச்சை நிலையங்களிலும் பொருத்தப்படும்.
இரு நாடுகளுக்குமிடையிலான நீண்ட கால மற்றும் சுமூக உறவுகளைப் பிரதிபலிக்கும் வகையில், கொவிட்-19 பரவலை
கட்டுப்படுத்துவது மாத்திரமன்றி, இலங்கையில் நிலைபேறான மருத்துவ கட்டமைப்பை உருவாக்குவதிலும் ஜப்பானிய அரசாங்கம்
பங்களிப்பு வழங்கும். இது இரு நாடுகளுக்குமிடையில் பரஸ்பர நன்மதிப்பு மற்றும் சுபீட்சத்தை மேம்படுத்துவதாக அமைந்திருக்கும்.
Stop Fighting Start Voting’ ஈழத்தமிழர்களுக்கும் பொதுவாக்கெடுப்பு கோரும் பன்னாட்டு இயக்கம்
Stop Fighting Start Voting’ ஈழத்தமிழர்களுக்கும் பொதுவாக்கெடுப்பு கோரும் பன்னாட்டு இயக்கம்
சண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக ‘Stop Fighting Start Voting’ எனும் முழக்கத்துடன் ஜனநாயகத்துக்கான பன்னாட்டு பிரச்சார இயக்கமொன்று உலக மக்களின்
உரிமைக்கான குரல்களில் ஈழத்தமிழர்களின் அரசியற் பொதுவாக்கெடுப்பினை வலியுறுத்தியுள்ளது.
பிணக்கைத் தீர்க்க ஓர் அமைதியான வழியாக மக்களின் அரசியல் விருப்பினை வெளிப்படுத்தும் பொறிமுறையாக பொதுவாக்கெடுப்பினை முன்னிறுத்தி 60 விநாடிகள் ஒடும்
காணொளிப் பரப்புரையில் ஹொங்காங் முதல் சிறிலங்கா வரை உள்ளடக்கப்பட்டுள்ளது. (https://vimeo.com/424953043 ) இதில்
இலங்கைத்தீவில் ஈழத்தமிழர்களின் நெடுநாளைய விடுதலைப் போராட்டத்தின் அரசியற் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பினை வலியுறுத்துகின்றது.
அமெரிக்காவைத் தளமாக கொண்ட Citizens in Charge Foundation எனும் அறக்கட்டளையால் தொடங்கப்பெற்ற www.stopfightingstartvoting.org இவ்இயக்கத்தின் இந்த பிரச்சார முழக்கத்தில் பிரசித்தி பெற்ற பன்னாட்டு ஜனநாயக வல்லுநர்கள், ஆய்வாளர்கள், சட்டத்தரணிகள், அரசுசாரா அமைப்புகள், கல்வியாளர்கள், அமைப்புக்கள் என பலரும் இணைந்துள்ளனர்.
Daniela Bozhinova, Chair, Bulgarian Association for the Promotion of Citizens Initiative; vice-president Democracy International / Paul Jacob, President, Citizens in Charge and Citizens in Charge Foundation / Bruno Kaufmann, Co-president, Global Forum on Modern Direct Democracy;
president of the Initiative and Referendum Institute Europe; board member Democracy International / Joe Mathews, Co-president, Global Forum on Modern Direct Democracy; California journalist; Professor of practice,
Arizona State University; board member Democracy International / John Matsusaka, Charles F. Sexton Chair in American Enterprise ,University of Southern California (USC); Professor of Finance and Business Economics,
USC; Executive Director of Initiative and Referendum Institute, USC / Matt Qvortrup, Professor of Political Science, Coventry University / Dane Waters, Founder and Chair, Initiative and Referendum Institute, USC; board
member Citizens in Charge Foundation; board member Democracy International / Dr. Yanina Welp, Research Fellow at the Albert Hirschman Centre on Democracy
ORGANIZATIONS
Bulgarian Association for the Promotion of Citizens Initiative, a non-governmental, non-profit organization, having 16 years of experience nationally and internationally in the area of democracy, democratic citizenship and human rights.
Citizens in Charge Foundation, a non-partisan organization that works to protect, defend, and expand initiative and referendum rights.
Initiative and Referendum Institute Europe, a European think-tank dedicated to research and education on procedures and practices of modern Direct Democracy.
Initiative and Referendum Institute at the University of Southern California, a non-partisan educational organization dedicated to the study of the initiative and referendum process.
உலகளவில் கொள்கை வகுப்பாளர்கள், இராஜதந்திரிகள் மட்டத்தில் காத்திரமான தாக்கத்தினை ஏற்படுத்தி வரும் (Citizens in Charge Foundation) இவ்வமைப்பு , இப்பிரச்சாரம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
” சண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக” என்ற பரப்புரை இயக்கம் நெடுங்காலமாகத் தீராமலிருக்கும் பிணக்குகளுக்கு அமைதிவழியில் தீர்வு காண்பதற்குதவும் முக்கியக் கருவியாக பொதுவாக்கெடுப்பினை வலியுறுத்தி
தொடங்கப்பெற்றது. ஹொங்காங், கட்டலோனியா, தைவான் குறித்தும், சிறிலங்காவில் தமிழர்கள் குறித்தும் நீடித்து வருவன போன்ற பிணக்குகளுக்கு இவ்வழியில் தீர்வு கானலாம்’ என்று Citizens in Charge Foundation யின் தலைவர் பால் ஜேக்கப் கூறுகின்றார்.
சண்டையிடுவதை நிறுத்துக வாக்களிக்கத் தொடங்குக எனும் இயக்கம் உலகெங்குமிருந்து பொதுவாக்கெடுப்பு பொறிமுறைக்கான வல்லுநர்களும் அமைப்புகளும் –
ஆராய்ச்சியாளர்கள், சட்டத்தரணிகள், அரசுசாரா அமைப்புகள், கல்வியாளர்கள் – அளித்த ஆதரவுடன், இலாபநோக்கற்ற பொறுப்புக் குடிமக்கள் அறக்கட்டளையால் தொடங்கப்பெற்றது. இந்தப்
பரப்புரை இயக்கமானது பிணக்குகளில் உள்ளோடும் சிக்கல்களில் ஆதரவு அல்லது எதிர்ப்பை எடுத்துரைப்பதில்லை. ஆனால் – முன்முயற்சிகள், பொது வாக்கெடுப்பு ஆகிய வடிவில் – நேரடி ஜனநாயகத்தைப் பயன்படுத்தி இந்தப் பிணக்குகளுக்கு அமைதித் தீர்வு காண முடியும் என்ற கருத்தை முன்வைக்கிறது. ஏற்புடைத்த பன்னாட்டு நெறிகள், நடைமுறைகளின்படி நேரடி ஜனநாயகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
‘நேரடி ஜனநாயகத்தின் பயன்பாட்டைப் பன்னாட்டளவில் அறிந்தேற்கப்பட்ட சட்ட வரையறைகளுக்குள் நடைமுறைப்படுத்தினால்தான் தேசங்களின் குழாம் அதனை மக்கள் விருப்பத்தின் முறையான வெளிப்பாடாக ஏற்றுக் கொள்ளும்’ என
Bulgarian Association for the Promotion of Citizens Initiative இன் தலைவர் டேனியல் பொழினோவா குறிப்பிடுகின்றார்.
சண்டையிடுவதை நிறுத்துக வாக்களிக்கத் தொடங்குக பரப்புரை இயக்கத்தைத் தொடங்கி வைக்கும் முகத்தான் 60 நொடி விளம்பரம் இன்று உலகெங்கும் சமூக மின்னியல் மேடைகளில்
வெளியிடப்பட்டது. ஹொங்காங்கில் தீராதுள்ள சிக்கல், சிறிலங்காவில் தனியாகத் தமிழர் தாயகம் அமைத்தல் தொடர்பான சிக்கல் ஆகியவை பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் இது செய்யப்பட்டது. பொது வாக்கெடுப்பின்
துணைக்கொண்டு அமைதிவழியில் தீர்வு காண முடியும் என்னும் படியாக உலகெங்கும் நீடிக்கும் பிணக்குகளை அனைவரும் அறியச் செய்வதற்கான காணொலிகளையும் இவ்வியக்கம் தொடர்ந்து ஆக்கம் செய்து வெளியிடும்.
‘பிணக்கும் பூசலும் உலகில் நிறைந்துள்ளன. குருதி சிந்தச் செய்யும் சண்டை மட்டுமன்று, பிரிவினையைக் கூடுதலாக்கும் சொற்களாலும் செயல்களாலும் சண்டையிடுவதும் கூட இந்தப் பிணக்குகளின் தீர்வுக்கு வாய்ப்பில்லாமற் செய்து விடும்.
சண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக என்னும் இந்தப் பரப்புரை இயக்கத்தில் பொதுவாக்கெடுப்பு பொறிமுறைக்கான வல்லுநர்கள் ஒன்றுபட்டு, இந்தப்
பிணக்குகளைத் தீர்ப்பதற்கு நெறிமுறைசார்ந்த அமைதிப் பாதை பற்றிய விழிப்புணர்வை வளர்க்கத் தங்களால் இயன்றதைச் செய்கிறார்கள் – பொதுவாக்கெடுப்பினை பயன்படுத்தி வாக்களிப்பதே அந்த வழி’ என்றார் தென் கலிபோர்னியா
பல்கலைக் கழகத்தில் முன்முயற்சி மற்றும் பொதுவாக்கெடுப்புக் கழகத்தின் தலைவராக இருக்கும் (Founder and Chair, Initiative and Referendum Institute, USC; board member Citizens in Charge Foundation; board member Democracy International) டேன் வாட்டர்ஸ் கூறுகின்றார்.
நேரடி ஜனநாயகத்தை மேம்படுத்துவது
நேரடி ஜனநாயகத்தின் கருவிகளை மேம்படுத்துவதற்கோ கட்டுப்படுத்துவதற்கோ அல்லது பன்னாட்டளவில் ஏற்புடைய நெறிமுறைகளுக்கும் நடைமுறைகளுக்கும் முரண்பாடான
விதத்தில் அவற்றைப் பயன்படுத்துவதற்கோ உலகெங்கும் நடக்கும் முயற்சிகள் குறித்தும் விழிப்புணர்வைக் கூடுதலாக்க இந்தப் பரப்புரை இயக்கம் பாடுபடும்.
இன்று ருமேனியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளிலும் பொதுவாக்கெடுப்பு முன்மொழியப்படுகிறது. ஆனால் அதற்கான விதிகளும் நெறிமுறைகளும் அதன் பயனுடைமைக்குப் பெரும்பாலும் வாய்ப்பில்லாமற்செய்யும் வகையில் உள்ளன. இந்தப் பிணக்குகளுக்குத் தீர்வு காண்பதில் அது யாருக்குப் பெரிதும்
தேவைப்படுகிறதோ அந்தக் குடிமக்களின் கைக்கு எட்டாத படி செய்து விடுகின்றன. மேலும், இப்போது சில பொதுவாக்கெடுப்புகளுக்கு எடுத்துக்காட்டாக றஸ்யாவில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது; ஆனால் பொதுவாக்கெடுப்பின் முடிவுகளை முறையானவை ஆக்கும்படியான வரன்முறைகளுக்குள் அது நடத்தப்பட அதிக வாய்ப்பில்லை.
‘இந்தச் சிக்கல்கள் மீது வெளிச்சம் படர நாம் உதவ வேண்டும் இவ்வழியில் பொதுவாக்கெடுப்பின் அந்தக் குறிப்பான வடிவம் அல்லது அதன் பயன்பாடு பன்னாட்டளவில் ஏற்புடைத்த நெறிமுறைகள், நடைமுறைகளின் அடிப்படையில்
முறையானதுதானா என்று தீர்மானிக்கும் போது என்ன தேடுவது என்பது ஊடகங்களுக்கும் கருத்து வழிகாட்டிகளுக்கும் மக்களுக்கும் தெரிந்திருக்கும்’ என்றார் கொவெண்ட்ரி பல்கலைக்கழக அரசியல் அறிவியல் பேராசிரியர் மட் க்வோர்ட்ரப்.
சண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக எனும் இந்த இயக்கம் உலகெங்கிலுமிருந்து பொதுவாக்கெடுப்புக்கான வல்லுநர்களும் அமைப்புகளும் அடங்கிய ஓர் அறிவுரைக் குழுவை அமைத்துள்ளது. இந்த இயக்கம் குறித்தும் நேரடி ஜனநாயகத்தின் முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகளில் சில:
‘ஜனநாயகம் என்பது தொடர்சியான உரையாடல் ஆகும். இவ்வாறான உரையாடல்களுக்கு வாய்ப்பளிக்கும் அரசியலமைப்புகளைக் கொண்ட நாடுகள் நிரந்தரமாக மோதல் வளர்க்கும் நாடுகளைக் காட்டிலும் சிறந்து விளங்குகின்றன. ஆகவே, குடிமக்களின் முன்முயற்சிகள், மக்கள்சார் பொதுவாக்கெடுப்புகள் போன்ற நவீன கால பொதுவாக்கெடுப்பு வடிவங்கள் எப்படி வார்க்கப்பட வேண்டும் என்றால், அவை பிறர் தலையில் ஓங்கியடிக்கும் முரட்டுச் சம்மட்டிகளாக இல்லாமல் சிக்கல்களைப் பொருத்திக் காட்டும் திறமான திருப்புளிகளாக வார்க்கப்பட வேண்டும். உரையாடல்கள் பெருகுவதும் மோதல்கள் அருகுவதும் இன்றைய உலகின் தேவை. சண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக’ என்றார் நவீன கால நேரடி ஜனநாயகம் பற்றிய உலக மன்றத்தின் இணைத் தலைவர் புருனோ காஃப்மன்.
‘ஜனநாயகம் என்பது தமது வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் பொது முடிவுகளை எடுப்பதில் மக்களுக்குப் பங்கிருக்க வேண்டும் என்ற எளிய கருத்தாகும். பிணக்குகளுக்கு அமைதியாகவும் நியாயமாகவும் தீர்வு காண்பதற்கு இது வரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் ஆகச் சிறந்த ஏற்பாடு ஜனநாயகமே ஆகும். ஜனநாயகத்தின் திறமிகு கருவிகளில் இரண்டாகிய முன்முயற்சி பற்றியும் பொதுவாக்கெடுப்பு பற்றியும், முகன்மையான முடிவுகளில் மக்கள் குரலுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்பது பற்றியும் செய்தி பரப்புவதே இந்த இயக்கத்தின் நோக்கம்’ என்றார் தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அமெரிக்க முனைவின் தலைவரும், தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் முன்முயற்சி மற்றும் பொதுவாக்கெடுப்புக் கழகத்தின் செயல் இயக்குநருமாகிய சார்லஸ் எஃப். செக்ஸ்டன்.
‘அரசியலின் மாற்றியமைக்கும் வல்லமை குறித்து நம்பிக்கையின்மை வளர்ந்து வரும் சூழலில், பிரதிநிதிகளின் அதிகாரத்துக்கு வரம்பிடவும் மக்களுக்குதவாத முடிவுகளை இழுத்துப் பிடிக்கவும் கொள்கை வகுப்பின் செயல்நிரலைத் திறக்கவும் பொதுவாக்கெடுப்பு கருவிகள் உதவ முடியும். ஆனால் நேரடிப் பங்கேற்புக் கருவிகளின் ஒழுங்காறும் நடைமுறையும் பன்னாட்டளவில் ஏற்புடைத்த நெறிமுறைகளுக்கும் நடைமுறைகளுக்கும் உடன்பட்டிருக்க வேண்டும். சண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக எனும் இந்த இயக்கம் இத்துணை முகன்மையாவதன் காரணம் இதுவே’ என்றார் ஆல்பர்ட் ஹிர்ஷ்மன் மையத்தைச் சேர்ந்த யனினா வெல்ப்.
மருத்துவ மனையில் மோதல் – இரு மருத்துவர்கள் காயம்
மருத்துவ மனையில் மோதல் – இரு மருத்துவர்கள் காயம்
இரு வைத்தியர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலினால் வைத்தியசாலை சொத்துக்கள் சேதமடைந்த சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இம்மோதலினால் பாதிக்கப்பட்ட இவ்விரு வைத்தியர்களும் ஏட்டிக்கு போட்டியாக இரு வேறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த சம்பவம் நேற்று (7) காலை 9.30 மணியளவில் நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இரு வைத்தியர்களுக்கும் இடையே இருந்த நீண்ட கால முறுகல் நிலையே இம்மோதலுக்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ தினமன்று பணி நிமிர்த்தம் இரு வைத்தியர்களும் வைத்தியசாலைக்கு சமூகமளித்த நிலையில் கடமை
அறிக்கையிடும் புத்தகம் தொடர்பில் ஏற்பட்ட முறுகலில் ஆரம்பித்து கைகலப்பில் முடிவடைந்துள்ளது.
இதன் போது இரு வைத்தியர்களின் மோதலினால் வைத்தியசாலையின் மருத்துவ சாதனங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் கதிரைகளும் உடைந்துள்ளன.
இச்சம்பவத்தினை அடுத்து அங்கு சென்ற சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன்
காயமடைந்த நிலையில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை விடுதி இல 5 இல் வைத்தியர் ஒருவரும் அட்டாளைச்சேனை பிரதேச
வைத்தியசாலையில் மற்றுமொரு வைத்தியரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
யாழில் நபரை ஓடஓட வெட்டிய கும்பல்
யாழில் நபரை ஓடஓட வெட்டிய கும்பல்
யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று காலை (08) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவத்தில் காயமடைந்த உத்தியோகத்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இன்று காலை தேசிய கீதம் இசைப்பதற்கு சற்று முன்னர் அலுவலகத்திற்கு வந்த உத்தியோகத்தர் மாவட்ட செயலக
நுழைவாயில் நின்றிருந்த போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேரில் இருவர் உத்தியோகத்தரை வாளால் வெட்டியுள்ளனர்.
பின்னர், உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் என நினைத்து வேறு ஒரு நபரின் மோட்டார் சைக்கிளை வெட்டி சேதப்படுத்தியுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, சந்தேகநபர்களில் ஒருவர் அவரது பணப்பையை சம்பவ இடத்தில் தவறவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பளை குண்டு வெடிப்பில் காயமடைந்த நபர் பலி
பளை குண்டு வெடிப்பில் காயமடைந்த நபர் பலி
பளை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த சந்தேகநபர் இன்று (08) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
கடந்த ஜுலை மாதம் 03 திகதி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்புச்
சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த சந்தேகநபர் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான 44 வயதுடையவர் என கிளிநொச்சி பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் பயங்கரவாத விசாரணை
பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டுகள் 3, கரும்புலி நாளை குறிக்கும் பதாகை ஒன்றும், வெடிப் பொருட்கள்
சிலவும், முன்னாள் போராளி ஒருவரின் புகைப்படமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
உயிரிழந்த நபரின் மனைவி 43 வயதானவர் எனவும் அவர் இயக்கச்சி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பணிப் புரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இருவரும் எந்த நோக்கத்திற்காக இவ்வாறு வெடிப் பொருட்களை தயாரித்தார்கள் என்பது தொடர்பில் கண்டறிய பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தமிழ் மக்களின் வாழ்வு கேள்வி குறியாக்க பட்டுள்ளது – சிறிதரன்
தமிழ் மக்களின் வாழ்வு கேள்வி குறியாக்க பட்டுள்ளது – சிறிதரன்
எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்ப்படுத்தப்படுகிறது எனத் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (07) கிளிநொச்சி செல்வாநகர் பிரதேசத்தில் மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எம் இனத்தின் வாழ்க்கை என்பது அழிக்கப்பட்டுக்கொண்டு செல்கிறது. எங்களை நோக்கி புத்த கோவில்கள் வருகிறது. எங்கள்
இடங்கள் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டுக்கொண்டு உள்ளது. காலையில் இருந்து மாலை வரை எத்தனையோ காவலரண்களை பார்கின்றோம்.
நாளாந்தம் புதிய புதிய காவலரண்கள் வருகிறன. இந்த சூழ்நிலைகள் எல்லாம் எங்களைப் பொறுத்த வரை ஒரு ஆபத்தான சூழ்நிலைக்குள் போய்கொண்டிருக்கின்றோம்.
முழுமையாக ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட இராணுவ பிரசன்னத்திற்குள் வாழுகின்ற சூழல் எங்களை நோக்கி
நகர்ந்துகொண்டுள்ளது. இந்த சூழலில் தான் எங்கள் பணிகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.
இப்போது தமிழர்கள் அனைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு ஒன்றாக பயணிக்க வேண்டிய நேரம். அவ்வாறு ஒன்றாக
பயணித்தால் வடக்கு கிழக்கில் இந்த பாராளுமன்ற தேர்தலில் இருபது ஆசனங்களை நாம் பெற முடியும்.
225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே நாம் எதிர்வரும் காலங்களில் இந்த மண்ணில் ஏதாவது பேசக்கூடிய அறுத்துறுத்து சொல்லக் கூடிய அல்லது எங்கள்
உரிமைக்காக உரத்துக் குரல் கொடுக்கக்கூடிய வல்லமை எங்களுக்கு கிடைக்கும் இல்லை என்றால் யாரோ அபிவிருத்தி
என்கின்ற மாய வலையை விரித்து வாக்குக் கேட்பவர்களுக்கும், அரச முகவர்களுக்கும்,ஒட்டுக்குழுக்களுக்கும் வாக்களித்துக் கொண்டிருக்க போகின்றோம் என்றார்
பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தூதுவர் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இடையில் – பேச்சு
பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தூதுவர் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இடையில் – பேச்சு
பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தூதுவர் நெஜில் கவனாக் மற்றும் அரசியல் செயலாளர் சிவோன் லெதம் ஆகியோர் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசனை சந்தித்து கலந்துரையாடினர்.
வடக்கில் சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், அரசு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும்
அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
கொரோனா இடர் நிலைமையின் போது யாழ்ப்பாணத்தில் எவ்வாறான நிலைமை காணப்பட்டது மற்றும் தற்போதைய
யாழ்ப்பாண நிலவரம் தொடர்பாகவும் துணைத்தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.
யாழ்ப்பாணத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக கேட்டறிந்த பிரித்தானிய
தூதரகத்தின் துணைத் தூதுவர், எதிர்காலத்தில் வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திதிட்டங்களுக்கு தங்களாலான ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்
.

வெலிகடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா
வெலிகடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா
வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலை கைதியொருவர்
கொவிட் 19 வைரசு தொற்று நோயாளி என்ற ரீதியில் அடையாளங்
காணப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த கைதி கந்தகாடுவில் அமைந்துள்ள போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் மத்திய நிலையத்தில்
இருந்து ஜூன் மாதம் 27 ஆம் திகதியன்று வெலிக்கடை விளக்க மறியல் சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டார்.
இந்த அடையாளங்காணப்பட்ட நோயாளி மற்றும் இவருடன் தொடர்புபட்டவர்கள் தொடர்பில் பிசிஆர் பரிசோதனை மற்றும்
தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதுடன் இந்த பரிசேதனைகளுக்காக
விளக்கமறியல் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர்
இலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு
இலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு
வெளிநாடுகளில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டிற்குள் வரும் நபர்களை கைது செய்தல் மற்றும் கடல் எல்லைகளை பாதுகாத்தல்
தொடர்பிலான விஷேட வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
விஷேடமாக இந்தியாவில் இருந்து கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள்
கடல் மார்க்கமாக வடக்கு பிரதேசங்களுக்கு வரும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
6 பேருக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு
6 பேருக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு
2016 ஆம் ஆண்டு மத்திய வங்கி முறிகள் ஏலங்களில் 52 பில்லியனுக்கும் அதிகமான அரசு நிதியை முறைகேடாகப்
பயன்படுத்தியதாகக் கூறப்படும் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணநாயக்க மற்றும் ஏனைய 5 பேரையும் கைது செய்வதற்கு
கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நடைமுறைப்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஏ.எச்.எம் நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் சோஹித ராஜகருணா ஆகியோரினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு மீதான விசாரணைகள் முடிவடையும் வரையில் இவ்வாறு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவின் அடிப்படையில் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு
எவ்வித இடையூறும் இல்லை என மூவரடங்கிய நீதிபதிகள் குழுவின் தலைவர் நீதிபதி நவாஸ் தெரிவித்துள்ளார்.
மூவரடங்கிய நீதிபதிகள் குழு உறுப்பினர்கள் மூவரும் இனக்கப்பட்டதான் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தப்பி ஓடிய போலீஸ் அதிகாரி சரண்
தப்பி ஓடிய போலீஸ் அதிகாரி சரண்
போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பில் இருப்பதாக
குற்றம் சுமத்தப்படும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின்
பொலிஸ் பரிசோதகர் வசந்த குமார இன்று (07) கடவத்த பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்கத்திற்கு ஆஜர்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
84 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரிடமிருந்து கொவிட் ஒழிப்புக்கு இரண்டு இலட்ச ரூபாய்கள்
84 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரிடமிருந்து கொவிட் ஒழிப்புக்கு இரண்டு இலட்ச ரூபாய்கள்
புத்தளம், காக்கா பள்ளி, மனங்குளத்தில் வசிக்கும் 84 வயதான திருமதி எம்.ஏ.எச்.பி.மாரசிங்க ஓய்வுபெற்ற ஆசிரியை இரண்டு
இலட்சம் ரூபாய்களை கொவிட் நிதியத்திற்கு ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.
பொதுஜன முன்னணியில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று
(06) புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் செய்து, மாதம்பை தனிவெல்லே பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்
கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் இந்த அன்பளிப்பு கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி அவர்களே,
சட்டம், நீதி, தர்மத்தை பாதுகாக்கின்ற அரசாங்கம் – தன்னிறைவடைந்த நாடொன்றை எமக்கு கையளியுங்கள்’
அவர் ஐயாயிரம் ரூபாய் தாள் காசுகளை ஒன்று சேர்த்து வழங்கிய இரண்டு இலட்சம் ரூபாவை சுற்றிய கடதாசியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது..

திருமண நிகழ்வுகளுக்கு படை எடுக்கும் மக்கள்
திருமண நிகழ்வுகளுக்கு படை எடுக்கும் மக்கள்
திருமண வைபவங்களில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்களினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை பின்வருமாறு:
வைபவ மண்டபங்களில் உள்ள ஆசன எண்ணிக்கையில் 50 சதவீதமானோர் அல்லது ஆகக்கூடிய வகையில் 300 பேருக்கு (
மணமகன் உள்ளிட்ட குழு, மணமகள் உள்ளிட்ட குழு , இசைக்குழு மற்றும் ஏனைய கலைஞர்கள் அடங்கலாக) குறைந்த
எண்ணிக்கையில் திருமண வைபவத்தில் கலந்து கொள்வதற்கு 2020 ஜுலை 6ஆம் திகதி தொடக்கம் அனுமதி வழங்கப்படுகின்றது. இதே
போன்று திருமண வைபவத்தில் கலந்து கொள்வவோருக்கு இடையில் 1 மீற்றர் இடைவெளியை கடைபிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
வைபவ மண்டபங்களில் கலந்துகொள்வதற்காக இதற்கு முன்னர் வழங்கிய
ஆலோசனைகள் இதற்கும் ஏற்புடையதாகும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்-மாணவர் வரவு அதிகரிப்பு
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்-மாணவர் வரவு அதிகரிப்பு
கொவிட் 19 தொற்றின் காரணமாக 3 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த அரசாங்க பாடசாலைகள் இன்று (06) ஆரம்பிக்கப்பட்டன.
இதற்கு அமைவாக நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள்
சமூகமளித்திருந்தனர். இவர்கள் சுகாதார பாதுகாப்பு நடமுறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கியிருந்தனர்.
பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இன்று இடம்பெற்றன. இதன் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினர்.
அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்த இடமளிக்க வேண்டாமென கோட்டாவிடம் மக்கள் கோரிக்கை
அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்த இடமளிக்க வேண்டாமென கோட்டாவிடம் மக்கள் கோரிக்கை
அரிச தட்டுப்பாடை ஏற்படுத்த இடைத்தரகர்களுக்கு இடமளிக்க வேண்டாமென பொலன்னறுவை விவசாயிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர். கடந்த போகங்களின்போது அதிக
அறுவடை கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு இடமளிக்கக்கூடாதென விவசாயிகள் தெரிவித்தனர்.
பொதுஜன முன்னணியில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை
உறுதிப்படுத்துவதற்காக நேற்று(05) முற்பகல் பொலன்னறுவை சிறிபுர பிரதேச சபை விளையாட்டரங்கில் இடம்பெற்ற மக்கள்
சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் விவசாயிகள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.
அழிவுக்குள்ளாகியிருந்த அரிசி களஞ்சியங்களை இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புனர்நிர்மாணம் செய்வதற்கும் நெல்லை முறையாக கொள்வனவு செய்வதற்கும்
முறைமையொன்றை தயாரித்ததாகவும் ஜனாதிபதி அவர்கள் விவசாயிகளிடம் தெரிவித்தார். எதிர்வரும் காலங்களில் நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை பாதுகாத்து
பிரச்சினைகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
மத்திய வங்கி மோசடிக்கு வகைக்கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் பொலன்னறுவை பிரதேசவாசிகள் ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர். தொழில்
பிரச்சினை, காட்டு யானைகளின் அச்சுறுத்தல் என்பன பொலன்னறுவை மாவட்டத்தில் அநேக பிரதேசங்களில் மக்கள்
முகங்கொடுக்கும் பிரச்சினைகளாகும். அதற்கு தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் பிரதேசவாசிகள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர்.
பொதுஜன முன்னணியில் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க, முன்னாள் பிரதி
அமைச்சர் சிறிபால கம்லத் மற்றும் வேட்பாளர் ஜகத் சமர விக்கிரம ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். பொதுஜன
முன்னணியின் அபேட்சகர் ஜயசிங்க பண்டா மஹியங்கனை பொலன்னறுவை வீதியில் கலுகெலே பிரதேசத்தில் ஏற்பாடு
செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார்.
மன்னம்பிட்டிய பிரதிபா மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்களுக்கு பிரதேசத்தின் மகாசங்கத்தினர் முன்மொழிவொன்றை சமர்ப்பித்தனர்.
ஜனாதிபதி அவர்களுக்கு ஆசிவேண்டி பிரித் பாராயணம் இடம்பெற்றது. பிரதிபா மண்டபத்தின் முன்னால் ஒன்றுகூடியிருந்த சில ஆசிரியர்கள் ஜனாதிபதி அவர்களைச் சந்தித்து
முன்மொழிவொன்றை சமர்ப்பித்தனர். முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.
முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரட்ன, கதுருவல பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றினார். பிரதேசத்தில் உள்ள குளங்களை புனரமைத்து
தருமாறு அங்கு கூடியிருந்த மக்கள் ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர். விதை நெல் மற்றும் உரப்
பிரச்சினை குறித்தும் அவர்கள் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
தம்பாலை கல்வல சந்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட மக்களுடனும் ஜனாதிபதி அவர்கள் சுமூகமாக கலந்துரையாடினார். முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன அவர்கள் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பொன்று பொலன்னறுவை தீப உயனவுக்கு முன்னால் இன்று இடம்பெற்றது.
அந்நிகழ்விலும் ஜனாதிபதி அவர்கள் வருகை தந்திருந்த மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடி விபரங்களை கேட்டறிந்தார்.
அரசாங்க பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களுக்கு மாடி வீட்டு கட்டிட தொகுதி
அரசாங்க பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களுக்கு மாடி வீட்டு கட்டிட தொகுதி
அரசாங்க பல்கலைக்கழகங்களில் கற்பிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்காக சொந்தமாக வீடுகளை கொள்வனவு
செய்வதற்கு வசதியாக மாடி வீட்டு கட்டிட தொகுதி ஒன்று கொழும்பில்; அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
என்று உயர்கல்வி அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்கள் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் மற்றும் தொடர்பாடல்
தொழில்நுட்பம் , உயர்கல்வி புத்தாக்க அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
பெரும்பாலான பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நீண்ட தூரங்களில் இருந்தே கடமைகளுக்கு வருகின்றனர்.
இவ்வாறு வருவோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இதனை கருத்தில் கொண்டு உத்தேச மாடி வீட்டு கட்டிட
தொகுதியை கொழும்பு ஒருகொடவத்தையில் அமைப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்தார்.






