பளை குண்டு வெடிப்பில் காயமடைந்த நபர் பலி

Spread the love

பளை குண்டு வெடிப்பில் காயமடைந்த நபர் பலி

பளை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த சந்தேகநபர் இன்று (08) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

கடந்த ஜுலை மாதம் 03 திகதி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்புச்

சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த சந்தேகநபர் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான 44 வயதுடையவர் என கிளிநொச்சி பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் பயங்கரவாத விசாரணை

பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டுகள் 3, கரும்புலி நாளை குறிக்கும் பதாகை ஒன்றும், வெடிப் பொருட்கள்

சிலவும், முன்னாள் போராளி ஒருவரின் புகைப்படமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

உயிரிழந்த நபரின் மனைவி 43 வயதானவர் எனவும் அவர் இயக்கச்சி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பணிப் புரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இருவரும் எந்த நோக்கத்திற்காக இவ்வாறு வெடிப் பொருட்களை தயாரித்தார்கள் என்பது தொடர்பில் கண்டறிய பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

      Leave a Reply