Posted in இலங்கை செய்திகள்

பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தூதுவர் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இடையில் – பேச்சு

பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தூதுவர் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இடையில் – பேச்சு

பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தூதுவர் நெஜில் கவனாக் மற்றும் அரசியல் செயலாளர் சிவோன் லெதம் ஆகியோர் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசனை சந்தித்து கலந்துரையாடினர்.

வடக்கில் சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், அரசு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும்

அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கொரோனா இடர் நிலைமையின் போது யாழ்ப்பாணத்தில் எவ்வாறான நிலைமை காணப்பட்டது மற்றும் தற்போதைய

யாழ்ப்பாண நிலவரம் தொடர்பாகவும் துணைத்தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக கேட்டறிந்த பிரித்தானிய

தூதரகத்தின் துணைத் தூதுவர், எதிர்காலத்தில் வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திதிட்டங்களுக்கு தங்களாலான ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்

.

பிரித்தானிய தூதரகத்தின்
பிரித்தானிய தூதரகத்தின்