வெலிகடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா
வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலை கைதியொருவர்
கொவிட் 19 வைரசு தொற்று நோயாளி என்ற ரீதியில் அடையாளங்
காணப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த கைதி கந்தகாடுவில் அமைந்துள்ள போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் மத்திய நிலையத்தில்
இருந்து ஜூன் மாதம் 27 ஆம் திகதியன்று வெலிக்கடை விளக்க மறியல் சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டார்.
இந்த அடையாளங்காணப்பட்ட நோயாளி மற்றும் இவருடன் தொடர்புபட்டவர்கள் தொடர்பில் பிசிஆர் பரிசோதனை மற்றும்
தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதுடன் இந்த பரிசேதனைகளுக்காக
விளக்கமறியல் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர்