Posted in இலங்கை செய்திகள்

அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிப்பதற்கு மகிந்தா உத்தரவு

கடந்த அரசாங்க காலப்பகுதியில் கைவிடப்பட்ட நகர அபிவிருத்தி திட்டங்கள் பலவற்றை மீள ஆரம்பிப்பதற்கு நிதி மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில் கௌரவ

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (2021.03.01) முற்பகல் அறிவுறுத்தியுள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் திட்டங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து நிதி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதன்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படவிருந்த மற்றும் இதுவரை ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கௌரவ பிரதமர் மதிப்பாய்வு செய்தார்.

பல அபிவிருத்தி திட்டங்கள் கடந்த அரசாங்கத்தின் ஐந்து ஆண்டு காலப்பகுதியில் கைவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கௌரவ பிரதமருக்கு சுட்டிக்காட்டினர்.

அவ்வாறு செயற்படுத்தப்படாது கைவிடப்பட்டுள்ள திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறு கௌரவ பிரதமர் அறிவுறுத்தினார்.

நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப் பொருள் அகற்றுகை மற்றும் சமூக தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அனைத்து திட்டங்களுக்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈட்டும் வருமானத்திற்கு மேலதிகமாக பொது திரைசேறியிலிருந்து தேவையான நிதியை ஒதுக்குமாறும் கௌரவ பிரதமர் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி திரு.யோஷித

ராஜபக்ஷ, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர்

யூ.டீ.ஹர்ஷான் த சில்வா, இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் எம்.ஆர்.சொய்சா

மற்றும் கொழும்பு மாநகர சபை ஆணையாளர் ரொஷானி திசாநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

Posted in இலங்கை செய்திகள்

சிவாஜிலிங்கத்திடம் பொலிஸ் விசாரணை- தொடரும் மிரட்டல்

சிவாஜிலிங்கத்திடம் பொலிஸ் விசாரணை- தொடரும் மிரட்டல்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் ஒட்டு சுட்டான் காவல்துறையினர் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்

அவரது வீட்டுக்கு சென்ற காவல்துறையினர் பொதுவில் முதல் பொலிகண்டி வரையிலான கூட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் விசாரணைகளை நடத்தியுள்ளனர்

ஜனநாயக நாடு என இலங்கை கூறி கொள்கின்ற பொழுதும் ,அறவழியில் நடத்த பட்ட பேரணியில் கலந்து கொண்ட மக்கள்

,மற்றும் பிரமுகர்களை சிங்கள ஆளும் இரத்த காட்டேறி அரசு அடக்குமுறைகளை பிரோயோகித்து மிரட்டி அடக்கி வருகின்றமை

மேற்படி செயல் ஊடாக மீண்டும் வெளிப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

சிகப்பு நட்சத்திரம் உதிர்ந்தது.- மனோ கணேசன்

சிகப்பு நட்சத்திரம் உதிர்ந்தது.- மனோ கணேசன்

சர்வதேசியத்தையும், இந்திய தேசியத்தையும், இலங்கை தேசியத்தையும் ஆதரிப்பது என்பது உள்ளூர் தமிழ் தேசியத்தை போட்டு மிதிப்பது என்ற சில உள்ளூர் வறட்டுவாத “கம்யூனிஸ்ட்”

சமரசவாத சிந்தனைகளிலிருந்து மாறுபட்ட சிந்தனையாளராக திகழ்ந்தார், தோழர் தா. பாண்டியன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் தா. பாண்டியன் மறைவு தொடர்பில் விடுத்துள்ள அனுதாப செய்தியில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

இந்திய தமிழ் மாநில, தேசிய அரசியல் பரப்பின், நடப்பு சமூக ஜனநாயக அமைப்புக்கு உள்ளே, நான் மதிக்கும் அரசியல் தலைவராக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா. பாண்டியன் திகழ்ந்தார்.

விசேடமாக, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கையின் பேரினவாத கட்சிகளுடனான அரசியல் கூட்டுக்கு விலையாக, இலங்கையின் தமிழ் மக்களின் போராட்டத்தை பயங்கரவாதமாக வர்ணித்தது.

இலங்கை கம்யூனிஸ்ட்களின் இந்த வறட்டுவாதத்தை ஏற்கும் மனநிலையில் இந்திய கம்யூனிஸ்டுகள் ஆரம்பத்தில் இருந்தார்கள்.

இதை நிராகரித்து, இலங்கை தமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலை போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன்.

சர்வதேசியத்தையும், இந்திய தேசியத்தையும், இலங்கை தேசியத்தையும் ஆதரிப்பது என்பது உள்ளூர் தமிழ் தேசியத்தை

போட்டு மிதிப்பது என்ற சில உள்ளூர் வறட்டுவாத “கம்யூனிஸ்ட்” சமரசவாத சிந்தனைகளிலிருந்து மாறுபட்ட சிந்தனையாளராக திகழ்ந்தார், தோழர் தா. பாண்டியன் திகழ்ந்தார்.

அவரது மறைவு, இந்திய, இலங்கை முற்போக்கு சக்திகளுக்கு, தமிழ் தேசிய சக்திகளுக்கு பாரிய இழப்பாகும்

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோவால் 471 பேர் மாரணம்

இலங்கையில் கொரனோவால் 471 பேர் மாரணம்

இலங்கையில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி

இதுவரை 471 பேர் மரணித்துள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

நாள் தோறும் இதன் பாதிப்பு அதிகரித்து செல்வதால் உயிரிழப்பு

மேலும் திகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக அஞ்ச படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் சிறுவன் வெட்டி கொலை

கிளிநொச்சியில் சிறுவன் வெட்டி கொலை

கிளிநொச்சியில் பகுதியில் சிறுவன் ஒருவன் அவனது உறவினர் ஒருவரினால் மிக கோரமாக தாக்க பட்ட நிலையில்
மரணமடைந்துள்ளான் ,

கூறிய ஆயுதம் ஒன்றினால் தாக்க பட்ட ,இவன் வீதியில் வீழ்ந்து கிடந்த நிலையில் ,அப்பகுதி மக்கள் அவனை கண்டு பொலிசாருக்கு

தெரிவித்த நிலையில் ,அவர் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டான் ,ஆயினும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளான்

,மேற்படி மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in இலங்கை செய்திகள்

வைரலாகும் சீமான் – விவசாயி புதிய பாடல் – வீடியோ

வைரலாகும் சீமான் – விவசாயி புதிய பாடல் – வீடியோ

நாம் தமிழர் கட்சியின் வெற்றியை இலக்கு வைத்து அவர்கள் விவசாயி சின்னத்தை மைய படுத்தி பல புதிய பாடல்கள் தயாரிக்க பட்டு வெளியாகிய வண்ணம் உள்ளன ,

அவ்வாறான பாடல் ஒன்று இப்பொழுது இளங்கோ செல்லப்பா

இசையிலும், மறத்தமிழ் வேந்தன வரிகளில் , மதுர குரலோன் பாவேந்தன் ஒலியில் முழங்கியுள்ளது

தமிழா ஒன்றிணைந்து வடமிழு ,இந்த பாடல்களை பரப்பிடு

வாழ்த்துக்கள் ,தொடரட்டும் உங்கள் பணிகள்

click here video

Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் ஜீப் ஆட்டோ மோதல் – ஒரேகுடும்பத்த சேர்ந்த இருவர் மரணம்

பொலிஸ் ஜீப் ஆட்டோ மோதல் – ஒரேகுடும்பத்த சேர்ந்த இருவர் மரணம்

இன்று Katupotha வீதியில் காவல்துறை ஜீப் வான் ஒன்று ஆட்டோ

ஒன்றுடன் மோதி விபத்தில் சிக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மகன் பலியாகியுள்ளனர்

இறந்தவருடைய மனைவி மற்றும் இரு பிள்ளைகள் மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

குறித்த ஜீப் வண்டியை செலுத்தி சென்ற கான்ஸ்டபிள் ரக அதிகாரி

காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார்

சந்தேக நபர் ஒருவரை துரத்தி சென்ற ஜீப் வண்டியே இவ்வாறு விபத்தில்சிக்கியதாக தெரிவிக்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

சிறிலங்காவுக்கு எதிரான ஓய்வூதிய வாய்ப்புக்கள் ! கோபத்தை வெளிப்படுத்திய செய்தி !!

சிறிலங்காவுக்கு எதிரான ஓய்வூதிய வாய்ப்புக்கள் ! கோபத்தை வெளிப்படுத்திய செய்தி !!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் காணப்படும் சர்வதேச பிரதிநிதிகள், தமது ஓய்வூதிய காலத்தில் வாய்ப்புக்களை பெற்றுக் கொண்டு சிறிலங்காவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தனது கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் சட்டமாஅதிபர் ரம்சி கிளாக், போர் குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஸ்ரீபன் ராப், ஐ.நா மனித உரிமைச்சபையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, ஐ.நாவின் முன்னாள் வல்லுனர் ஜஸ்மின் ஆகியோரை இலக்குவைத்து தனது கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டுமென ஐ.நாவின் முன்னாள் ஆணையாளர்கள், சிறப்பு அறிக்கையாளர்கள், வல்லுனர்கள் என பலரது கூட்டுஅறிக்கைக்கு பின்னராக இவ்வாறான கோபம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் இவர்களது உறவுகளுக்கான ஆதாரங்களை ஊடகப்பதிவுகளை குறிப்பிட்டு, சிறிலங்கா மீதான இவர்களது குற்றச்சாட்டுக்கள் போலியானவை என்றும், இவர்களின் நிலைப்பாடு ஒரு பக்கசார்பானது எனவும் இந்த ஊடகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

http://tgte.org/?p=6847
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை அதிபருக்கு தர்ம அடி

பாடசாலை அதிபருக்கு தர்ம அடி

இலங்கை பொகவந்தலாவ, டின்சின் தமிழ் மகா வித்தியாலய அதிபர் மீது மர்ம நபர்கள் குழு ஒன்று இடீர் தாக்குதலை நடத்தியது

இதில் பலத்த காயமடைந்த நிலையில் அவர் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

இந்த தாக்குதலுக்குரிய காரணம் தெரியவரவில்லை போலீசார் தொடர்ந்து புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Posted in இலங்கை செய்திகள்

யாழில் 52 கைதிகளுக்கு கொரனோ

யாழில் 52 கைதிகளுக்கு கொரனோ

யாழ்ப்பாணத்தில் உள்ள சிறை சாலை ஒன்றில் கைதிகளாக உள்ள

ஐம்பத்தி இரண்டு பேருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் தனிமை படுத்த பட்டு

சிகிச்சை பெற்றுவருவதாக சிறைச்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

பத்தாயிரம் மீனவர்களுடன் இந்தியா செல்வேன் – டக்கிளஸ் கூவல்

இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் இங்கிருந்து கதைப்பதை விட, பத்தாயிரம் வடமாகாண கடற்தொழிலாளர்களுடன் இந்தியாவுக்குப் படகில் சென்று, அந்த

பிரச்சனையை தீர்ப்பதற்கு யோசித்துக்கொண்டிருக்கின்றேன் என கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு நிறுத்தப்படுமெனவும், இந்திய மீனவர்களின் பேச்சு

வார்த்தை வருவது போவதாக உள்ளது. தீர்வு என்று எதுவும் இல்லாவிட்டாலும் இந்திய மீனவர்களின் வருகை நிதந்தரமாக

காணப்படுவதாக கடற்தொழிலாளர்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் என்றார்.

இதனை தீர்த்து தராவிட்டால் ஆர்ப்பாட்டம், தொழில்முடக்கம், அமைச்சரின் வடமாகாண நடமாட்டத்தினை முடக்குவோம் என்று

சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். நான் பொறுமை பொறுமை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றேன் இருந்தாலும் அது

நியாயமான கோரிக்கை இதனை நான் விரைவில் தீர்க்க முயற்சிப்பேன் எனவும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

1.5 மில்லியன் ரூபா பெறுமதியான போதைவஸ்துடன் ஆண் ,பெண் கைது

1.5 மில்லியன் ரூபா பெறுமதியான போதைவஸ்துடன் ஆண் ,பெண் கைது

இலங்கையில் போலீசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் பொழுது அதி

உயர் ரக போதைவஸ்துடன் ஆண் ,பெண் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

கைதானவர்களிடம் இருந்து மீட்க பட போதைவஸ்து இலங்கை ரூபா பெறுமதியில் சுமார் ஒன்றரை மில்லியன் என தெரிவிக்க பட்டுள்ளது

இலங்கை போதைவஸ்து பாவனையில் கொலம்பியாவை மிஞ்சி

விடும் அளவுக்கு அதன் பாவனை அதிகரிப்பு செறிந்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

ஜப்பான் போர் கப்பல் இலங்கை வருகை

ஜப்பான் போர் கப்பல் இலங்கை வருகை

இலங்கை கம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஜப்பான் நாட்டின் போர் கப்பல் ஒன்று தரித்துள்ளது ,இரு நாடுகளுக்கு இடையிலான போர் பயிற்சி மற்றும் ,பாதுகாப்பு தொடர்பில்

கலந்துகொள்வதற்காக அந்த கப்பல் வருகை தந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது

குறித்த கப்பல் பகுதி சீனாவுக்கு இலங்கையால் வழங்க பட்ட

நிலையில் அதே துறைமுகத்தில் ஜப்பான் கப்பல் வருகை தந்துள்ளமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

கட்சிக்கு தலைவர் ஆனார் மைத்திரி

கட்சிக்கு தலைவர் ஆனார் மைத்திரி

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு

தலைவராகியுள்ளார் ,பரம்பரையாக ஆண்டு வந்த பண்டாரநாயக்காவின் கட்சி இப்பொழுது பறிபோயுள்ளது

மைத்திரி தெரிவான நிலையில் மீளவும் சந்திரிக்கா மற்றும் ,மைத்திரிக்கு இடையில் மோதல் நிலை நீடித்து செல்கிறது

மேற்படி கட்சியினுள் முக்கிய பதவி நிலைகளில் உள்ளவர்கள்

பெரும்பாலானவர்கள் சிங்கள பபவுத்த இனவாத கொள்கை கொண்டவர்கள் என்பது குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்ட -61,500 பேர் கைது

போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்ட -61,500 பேர் கைது

இலங்கையில் ஆளும் சகோதரர்கள் ஆட்சியில் போதைவஸ்து

வியாபாரம் பல்கி பெருகியுள்ளது ,இளைய சமுதாயம் தவறான வழியில் வழி நடத்த படுகிறது

கடந்த வருடம் மட்டும் இந்த வியாபாரத்தில் ஈடு பட்ட சுமார் 61,500

பேரினை தாம் கைது செய்துள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர்

தொடந்து இவ்விதமான முக்கிய நபர்கள் கைது செய்ய பட்டு

வருகின்ற பொழுதும் ,மேற்படி போதைவஸ்து பாவனையை ஒழிக்க முடியவில்லை

Posted in இலங்கை செய்திகள்

45 கிலோ போதைவஸ்துடன் இராணுவ சிப்பாய் கைது

45 கிலோ போதைவஸ்துடன் இராணுவ சிப்பாய் கைது

இலங்கை கொரனோ பகுதியில் வான் ஒன்றில் நாற்பத்தி ஐந்து கிலோ எடையுள்ள போதைவஸ்த்தை எடுத்து சென்று கொண்டிருந்த

இலங்கை இராணுவத்தை சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவரை போலீசார் வழிமறித்து கைது செய்தனர்

இவரது வாகனத்தை சோதனை செய்த பொழுது அதற்குள் மேற்படி போதைவஸ்து இருப்பது

கண்டு பிடிக்க பட்ட நிலையில் அவர் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

தமிழ் இன அழிப்பை மறைக்க -இந்திய உதவியை கோரும் இலங்கை

தமிழ் இன அழிப்பை மறைக்க -இந்திய உதவியை கோரும் இலங்கை

இலங்கையில் ,தமிழ் மக்கள் ஆளும் சகோதர ஆட்சி காலத்தில் அழிக்க பட்டனர்,அவர்களின் இந்த அழித்தொழிப்புக்கு எதிராக

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன

இலங்கையில் சர்வாதிகார ஆட்சி நிலவி வருகிறது ,இதற்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியாவின் உதவிய இலங்கை

கோரியுள்ளது ,தமிழர்களை அழித்தொழிக்க இந்தியா

போராயுதங்கள்,மற்றும் இராணுவத்தை வலங்கை பேர் உதவி புரிந்தமை இங்கே குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

ஐநா பிரேரணையை நிராகரித்த இலங்கை – தயராகும் பெரும் ஆப்பு

ஐநா பிரேரணையை நிராகரித்த இலங்கை – தயராகும் பெரும் ஆப்பு

இன்று முன்வைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் அறிக்கையில் உள்ள

முடிவுகளையும் பரிந்துரைகளையும் இலங்கை திட்டவட்டமாக நிராகரிப்பதாக வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு இந்த சபையின் 43வது அமர்வில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக அறிவித்த தீர்மானம் 30/1 மற்றும் 40/1 ஆகியவற்றிலிருந்து வெளிவருகின்றது.

எந்தவொரு சுயமரியாதை, இறையாண்மை கொண்ட நாட்டிற்கும், முக்கியமாக ஆட்சி தொடர்பான பல பிரச்சினைகள் மற்றும் உள்நாட்டு விடயங்களை உள்ளடக்கி, நியாயமற்ற முறையில் தனது நோக்கத்தை விரிவுபடுத்தி மேலும் ஆணையிட்டுள்ள உயர்

ஸ்தானிகரின் அறிக்கையை இலங்கை நிராகரிக்கின்றது. இது ஐ.நா. சாசனத்தின் 2 (7) வது பிரிவான ´தற்போதைய சாசனத்தில் உள்ள எதுவும் ஐக்கிய நாடுகள் சபைக்கு எந்தவொரு அரசினதும்

உள்நாட்டு அதிகார எல்லைக்கு உட்பட்ட விடயங்களில் தலையீடு செய்வதற்கு அங்கீகாரம் அளிக்காது…´ ஐ முழுமையாக மீறும் செயலாகும்.

பரிந்துரைகள் மற்றும் முடிவுகள் தொடர்பாக வெளிவந்த பாதையானது, இலங்கைக்கு எதிராக இடைவிடாமல் தொடர்ந்த முன்கூட்டிய, அரசியல்மயப்படுத்தப்பட்ட மற்றும் பாரபட்சமற்ற சில

கூறுகளின் நிகழ்ச்சி நிரலைப் பிரதிபலிக்கின்றது. இந்தப் பரிந்துரைகள் தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமைந்தவை.

உயர் ஸ்தானிகரின் அறிக்கையில் உள்ள முடிவுகளையும் பரிந்துரைகளையும் இலங்கை திட்டவட்டமாக நிராகரிக்கின்றது.

முப்பது ஆண்டுகளாக வெளியிடப்படாத மற்றும் அவற்றுள் சில உயர் ஸ்தானிகர் அலுவலகத்தினால் தக்கவைக்கப்பட்டு, அணுகுவதற்கு மறுக்கப்பட்டிருந்த ஆதாரங்களின் அடிப்படையில், குறிப்பாக ஐ.நா மற்றும் அதன் பொறிமுறைகளுடன்

தொடர்ச்சியாகவும் ஆக்கபூர்வமாகவும் ஈடுபட்டு வரும் இலங்கை போன்ற ஒரு நாடு தொடர்பாக, சொத்து முடக்கம், பயணத் தடைகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைப் பற்றிய குறிப்புக்கள் மற்றும் தனிப்பட்ட அரசுகள் உலகளாவிய அதிகார

வரம்பைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கான அழைப்பானது, சர்வதேச சமூகம் ஒட்டுமொத்தமாகக் கவனிக்க வேண்டிய ஒரு தனித்துவமான மற்றும் சிறந்த ஆபத்தை சுட்டிக்காட்டுகின்றது. சில

நாடுகளின் இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவையும், மற்றும் இயற்கை நீதியின் கொள்கைகளை மீறுவதுமாகும்.

கடந்த மார்ச் மாதத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றத்திற்கும் மேலதிகமாக, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தவறான தகவல்கள், தவறான கருத்துக்கள் மற்றும் தன்னிச்சையான மதிப்பீடுகள் குறித்து இலங்கை எழுத்துபூர்வ கருத்துக்களை வழங்கியுள்ளது. உயர் ஸ்தானிகர்

அலுவலகம் தனது அறிக்கையை முன்னெப்போதும் இல்லாத பிரச்சாரத்துடன் இணைந்து வெளியிட்டமை மற்றும் குறித்த அறிக்கை தொடர்பான எமது கருத்துக்களை ஒரு துணை நிரலாக

வெளியிட மறுத்தமை ஆகியன வருத்தமளிக்கின்றது. இது இலங்கையையும், அறிக்கை குறித்த இலங்கையின் கருத்துக்களை சமமாகக் காணும் உறுப்பினர்களையும் இழந்துள்ளது.

இந்த சபைக்கு முன்னர் விளக்கப்பட்ட காரணங்களுக்காக இலங்கையால் நிராகரிக்கப்பட்டுள்ள பொறுப்புக்கூறல் தொடர்பான நிபுணர் குழுவின் மிகவும் சர்ச்சைக்குரிய அறிக்கை மற்றும் இலங்கை தொடர்பான உயர் ஸ்தானிகர் அலுவலக

விசாரணை அறிக்கை ஆகியவற்றிலிருந்தான உயர் ஸ்தானிகரின் அறிக்கையில் மீளுருவாக்கம் செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்களை இலங்கை மறுக்கின்றது. கூறப்பட்ட சர்ச்சைக்குரிய

அறிக்கைகளிலிருந்து பெறப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கங்கள், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் எமது மக்களின் வாழ்க்கை உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நியாயமான நடவடிக்கைகளுடன், சர்வதேச அளவில்

தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய அட்டூழியங்களை சமன் செய்வதாகத் தோன்றும் உண்மைத் தவறுகளால் நிறைந்திருக்கின்றன.

தலைவி அவர்களே, இந்த சபை மற்றும் அனைத்து ஐ.நா. அமைப்புக்களுடனான எமது தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாடுகள் இருந்தபோதிலும், வெளிப்புறமாக இயக்கப்படும்

சக்திகளை தொடர்ந்தும் வலியுறுத்துவதானது பல சவால்களை ஏற்படுத்துவதாக அமைவதுடன், இதுபோன்ற செயன்முறைகள்

ஐ.நா. வின் அனைத்து உறுப்பு நாடுகளையும் பாதிக்கும் ஆபத்தான முன்னுதாரணத்தையும் அமைக்கும்.

அரசியல் உந்துதல்களால் உந்தப்பட்டு, இந்த சபையால் இலங்கை மீது செலுத்தப்பட்டுள்ள கவனத்திற்காக நாங்கள் வருந்துகின்றோம். இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு

தீர்மானமும் சபையால் நிராகரிக்கப்பட்டு மூடப்பட வேண்டும் என இலங்கை இந்த சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.

முடிவில், இந்த சபை உட்பட ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகத்துடன் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட பகுதிகளில், அரசியலமைப்பிற்கு

இணங்க, உள்நாட்டு முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப ஆக்கபூர்வமாக ஈடுபடுவதற்காக நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

Posted in இலங்கை செய்திகள்

நுவரெலியாவில் ஒருபகுதி முடக்கம் – போலீஸ் குவிப்பு

நுவரெலியாவில் ஒருபகுதி முடக்கம் – போலீஸ் குவிப்பு

பரவி வரும் நோய்ந் தாக்குதல் பரவலை அடுத்து நுவரெலியாவில் ஒரு பகுதி முடக்க பட்டுள்ளது


மேற்படி முடக்க நிலையை அடுத்து தற்போது அங்கு காவல்துறையினர் குவிக்க பட்டு கண்காணிப்பு தீவிர அபடுத்த பிட்டுள்ளது

மறு அறிவித்தல் வரை மேற்படி பகுதி முடக்க நிலை தொடரும் என தெரிவிக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

கோட்டாவுடன் பேசிய பின்னர் நாடு பறந்தார் பாகிஸ்தான் அதிபர்

கோட்டாவுடன் பேசிய பின்னர் நாடு பறந்தார் பாகிஸ்தான் அதிபர்

பாகிஸ்தான் நாட்டின் அதிபர் இம்ரான் கான் இலங்கைக்கு இரு நாள் அரசமுறை பயணத்தை மேற்கொண்டு வந்தார் ,

இவரது பயணம் முடிவடைந்து தற்போது பாகிஸ்தானுக்கு புறப்பட்டு சென்றார்

இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் ,பாதுகாப்பு மற்றும் ,அபிவிருத்தி தொடர்பில் பேச பட்டுள்ளது

இவ்வேளை யுத்தத்தின் பொழுது பாகிஸ்தான் அரசு வழங்கிய உதவிக்கு நன்றியை தெரிவித்து கொண்டார் கோத்தபாயா