Posted in இலங்கை செய்திகள்

பெரும் கடத்தல் முறியடிப்பு – சுற்றிவளைத்து மடக்கிய கடற்படை

பெரும் கடத்தல் முறியடிப்பு – சுற்றிவளைத்து மடக்கிய கடற்படை

இந்தியாவில் இருந்து படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட ஐந்தாயிரம் கிலோவுக்கு அதிக எடையுள்ள

மஞ்சள் இலங்கை கடல் படையினர் மேற் கொண்ட திடீர் சுற்றிவளைபின் பொழுது பறி முதல் செய்ய பட்டுள்ளது

மேற்படி கடத்தலுடன் தொடர்புடைய ஐந்துக்கு மேற்பட்ட நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் ,இலங்கையில்

மஞ்சளின் விலை அதிகரித்துள்ளதை அடுத்தே மேற்படி கடத்தல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்க படுகிறது

கடற்படை

கடற்படை
கடற்படை
    Posted in இலங்கை செய்திகள்

    நாடுகடந்த அரசின் சபாநாயகர் மரணம் – அதிர்ச்சியில் தமிழர் தேசம்

    நாடுகடந்த அரசின் சபாநாயகர் மரணம் – அதிர்ச்சியில் தமிழர் தேசம்

    நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தற்போதைய அவை தலைவர் திருமதி சர்வேஸ்வரி தேவராஜா அவர்கள் 21 ஆம் திகதி இயற்கை எய்தியுள்ளார்

    இவரது இந்த துயர் செய்தி கேட்டு நாம் மிகவும் மன துயர் அடைகின்றோம்,தமிழ் கூறும் நல்லுலகம் இன்று 2010 இல் உருவாக்க பட்டதன் பின்பு அதன் அவை தலைவராக தற்போது

    பணியாற்றி கொண்டிருந்த இவர் காலமான செய்தி தமிழீழ மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது

    புலம்பெயர் நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் தமிழ் தேசியத்திற்காகவும் ,தமிழ் மகளிற்காகவும் குரல் கொடுத்து ,தமிழீழ நாடு கடந்த அரசாங்கத்தில் அங்கத்தவராக இனைத்து

    ,அவைத் தலைவராகி பெரும் சாதனைகளை நிகழ்த்தி ,தன் அறப்பணியை நிலைநாட்டி அறம் வெல்ல துணை நின்ற இவரை இழந்து தமிழர் தேசமும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் வேதனையில் துடிக்கிறது

    இவரது ஆறா துயரில் நாமும் பங்கெடுத்து கொள்கிறோம்
    தகவல் – சமூக போராளி – நாகலிங்கம் -பாலச்சந்திரன் ( பிரான்ஸ் )

    நாடுகடந்த அரசின் சபாநாயகர் மரணம்
    நாடுகடந்த அரசின் சபாநாயகர் மரணம்
      Posted in இலங்கை செய்திகள்

      கொரனோ தாண்டவம் – பொது நிகழ்வுகளிற்கு கட்டுப்பாடு

      கொரனோ தாண்டவம் – பொது நிகழ்வுகளிற்கு கட்டுப்பாடு

      இலங்கையில் மிக வேகமாக பரவி வரு கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பல மக்கள் நாள்

      தோறும் பாதிக்க பட்டு வரும் நிலையில் தற்போது பொது நிகழ்வுகளுக்கு புதிய கட்டுப் பாடுகள் விதிக்க பட்டுள்ளன

      திருமணம் ,ஆலயங்கள்,மற்றும் பாடசாலைகள் என்பனவற்றில் செயல்பாடுகளுக்கு புதிய
      கட்டு பாடுகள் விதிக்க பட்டுள்ளன

      மேலும் நிகழ்கால கொரனோ விதிகளை மீறுவோர் கைது செய்ய படுவர் என எச்சரிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        மாட்டை கொன்றவரை குத்தி கொன்ற நபர் – அரங்கேறிய பழிவாங்கல் படுகொலை

        மாட்டை கொன்றவரை குத்தி கொன்ற நபர் – அரங்கேறிய பழிவாங்கல் படுகொலை

        இலங்கை கலுவலகொட பகுதியில் பால் கறக்கும் பசு மாடு ஒன்றினை மின்சார வேலியில் சிக்க வைத்து கொலை

        செய்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர் ,அவரோ பிணையில் விடுதலையாகி வீடு வந்த வேளை

        இரவு அவர் நடமாடிய பொழுது ,அவரை பின்தொடர்ந்து சென்ற மமாட்டின் உரிமையாளரின் மகன் அவரை சரமாரியாக கத்தியால் குத்தி கொன்றுள்ளார்

        பல்லாயிரம் ரூபா பெருத்தியான மாடு படுகொலை செய்ய பட்ட வேதனையின் துடிப்பில் இந்த

        பழிவாங்கல் படுகொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

          Posted in இலங்கை செய்திகள்

          பிரித்தானியாவில் தொடங்கியுள்ள W2W மக்கள் விழிப்பூட்டல் நடைப்பயணம் ! photo

          பிரித்தானியாவில் தொடங்கியுள்ள W2W மக்கள் விழிப்பூட்டல் நடைப்பயணம் ! photo

          தடை நீக்கத்திற்கான நடைப்பயணம் ” WALK FOR LIFT THE BAN” எனும் முழக்கத்துடன் வேல்ஸ் நாடாளுமன்ற தொகுதியல் இருந்து பிரித்தானிய பிரதமர் அலுவலக வரையிலான W2W ( wales to

          westminster ) மக்கள் விழிப்பூட்டல் நடைப்பயணம் இன்று வெள்ளிக்கிழமை (23-04-2021) தொடங்கியுள்ளது.

          பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்த சட்டப்போராட்டத்தில், தடையினை மறுபரிசீலனை செய்ய

          உள்துறை அமைச்சுக்கு 90 நாட்களை சிறப்பு தீர்ப்பாயம் 90 நாட்கள் வழங்கியிருந்தது. இக்காலக்கெடு நெருங்கி வருகின்ற நிலையில் பிரித்தானியா வாழ் தமிழர்கள்

          தடைநீக்கத்திற்கான தமது விருப்பினை அரசாங்கத்தினை நோக்கி வெளிப்படுத்தும் வகையில் lifttheban.uk எனும் இணையத்தளம் செயற்பட்டு வருகின்றது.

          நாடாளுமன்றத்தின் ஊடாகவே இத்தடை கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், அந்நாடாளுமன்றத்தின் ஊடாகவே தடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ

          அரசாங்கம் தனது வாதுரையில் தெரிவித்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்விடயத்தினை கவனத்தில் கொண்டு செல்லும் வகையில் இந்த இணையத்தளம் செயற்படுகின்றது.

          பிரித்தானிய வாழ் தமிழர்கள் தமது பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலகுவாக தடைநீக்கத்துக்கான தமது விருப்பினை இந்த இணையத்தளத்தின் மூலம் வெளிப்படுத்த முடியும்

          என்ற நிலையில், பொதுமக்களுக்கு இது தொடர்பில் அரசியல் விழிப்பினை ஏற்படுத்தும் நோக்கில் எனும் இந்த நடைபயணம் தொடங்கியுள்ளது.

          நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களான திரு தேவராஜா நீதிராஜா, திரு இராஐதுரை பார்த்தீபன் இவர்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்கள்,

          செயற்பாட்டாளர்கள், மக்கள், ஆதரவாளர்கள் என பலர் தங்களையும் இன்றைய நாளில் நடைப்பயணத்தல் இணைந்து கொண்டு பயணிக்கின்றார்கள் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

          W2W மக்கள் விழிப்பூட்டல் நடைப்பயணம்
          W2W மக்கள் விழிப்பூட்டல் நடைப்பயணம்
          https://youtu.be/D7f8bz07x_M
          Posted in இலங்கை செய்திகள்

          ஐந்து மில்லியன் பைசர் ஊசிகளை வாங்கும் இலங்கை – குஷியில் மக்கள்

          ஐந்து மில்லியன் பைசர் ஊசிகளை வாங்கும் இலங்கை – குஷியில் மக்கள்

          இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயில் இருந்து மக்களை காப்பற்றி கொள்ளும் நோக்கில்


          உருவாக்க பட்டுள்ள தடுப்பூசிகளில் பைசர் நிறுவனத்தின் ஊசியானது திறம்பட செயல் ஆற்றி வருகிறது

          இதன் செயல் திறனை அடுத்து மேற்படி தடுப்பூசியினை இலங்கை பெற்றுக் கொள்ள குறித்த

          நிறுவனத்திடம், விண்ணப்பம் செய்து இருந்தது ,இதற்கு அமைய ஐந்து மில்லியன் டோசுக்களை

          வழங்கிட தீர்மானிக்க பட்டுள்ளது ,இவை விரைவில் இலங்கையை வந்தடையும் என தெரிவிக்க படுகிறது

            Posted in இலங்கை செய்திகள்

            யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீள் திறப்பு

            யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீள் திறப்பு

            யாழ்ப்பாண பல் கலைக் கழகத்தில் அமைக்க பட்டு இருந்த முள்ளி வாய்க்கால் நினைவு தூபி

            விஷமிகளினால் இடித்து அழிக்க பட்டது

            அவ்விதமான அந்த தூபி முற்றாக அழிக்க பட்டு புதிதாக அமைக்க பட்டுள்ளது

            சிங்கள ஆளும் பவுத்த இனவாதிகளின் தூண்டுதலின் பேரிலேயே இந்த சிலை உடைப்பு

            இடம்பெற்று இருந்தமை குறிப்பிட தக்கது

              Posted in இலங்கை செய்திகள்

              மனித வெடி குண்டு தாரி உறவினர்கள் இராணுவத்தால் கைது

              மனித வெடி குண்டு தாரி உறவினர்கள் இராணுவத்தால் கைது

              இலங்கையில் தேவாலயங்கள் மீது தொடர் குண்டு தாக்குதலை நடத்திய சகரான் உறவினர்கள்

              இருவர் பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

              கைதானவர்கள் தொடர்ந்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,

              மேலும் புலிகள் பெயரை பாவித்து வெளிநாடு செல்ல முற்பட்ட நபர் ஒருவரும் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                Posted in இலங்கை செய்திகள்

                கொரனோ தாண்டவம் – பல் கலைக் கழகங்கள் திறப்பு ஒத்தி வைப்பு

                கொரனோ தாண்டவம் – பல் கலைக் கழகங்கள் திறப்பு ஒத்தி வைப்பு

                இலங்கையில் வேகமாக உருவெடுத்து பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலநூறு

                பேர் நாள் தோறும் பாதிக்க பட்டு வருவதனால் பல் கலைக் கழகங்கள் மீள் திறப்பது ஒத்தி வைக்க பட்டுள்ளது

                இது போலவே பயண கட்டுப் பாடுகளும் ஆங்காங்கே விதிக்க பட்டுள்ளதால் ,மீள் இலங்கை முடக்க

                நிலைக்கு செல்லும் அபாயம் எழுந்துள்ளது

                  Posted in இலங்கை செய்திகள்

                  விடுதலைப்புலிகள் விவகாரத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகரிக்கும் அழுத்தம் ! photo

                  விடுதலைப்புலிகள் விவகாரத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகரிக்கும் அழுத்தம் !

                  பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை என்பது நாடாளுமன்றத்தின் ஊடாகவே கொண்டு வரப்பட்டிருந்த நிலையில்,

                  அத்தடையினை நாடாளுமன்றத்தின் ஊடாக நீக்கக் கோரும் அழுத்தம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

                  தடையினை நீக்க கோரி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற

                  சட்டப்போராட்டத்தின் வாதுரையில் நாடாளுமன்றத்தின் ஊடாகவே இத்தடை நீக்கப்பட வேண்டும் கோரப்படுகின்றது.

                  இந்நிலையில் பிரித்தானிய வாழ் தமிழர்கள் தாம் வசிக்கின்ற தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்த்தினை இந்த lifttheban.uk இணையவழி மூலமாக முன்னெடுத்து வருகின்றனர்.

                  தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானிய அரசாங்கத்தின் தடை என்பது, பிரித்தானிய வாழ் தமிழர்களின்

                  இயல்பு வாழ்க்கையினை பாதிப்பதோடு, தமது சுதந்திரமான அரசியல் செயற்பாடுகளுக்கும் தடையாக இருக்கின்றதென குறிப்பிடுகின்றனர்.

                  தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையம் தனது இரண்டாம் கட்டத்தீர்ப்பில்,

                  பிரித்தானிய அரசாங்கத்துக்கு 90 நாட்கள் காலஅவகாசம் வழங்கியுள்ள நிலையில், தமிழ்மக்கள் தடையினை நீக்க கோரும்

                  தமது விருப்பினை இணையத்தளம் மூலம் வெளிப்படுத்த ஊக்குவிக்கும் பொருட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது பிரச்சாரத்தினை தீவிரப்படுத்தியுள்ளது.

                  பயங்கரவாத தடைப்பட்டியலில் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய உள்துறையமைச்சரின்

                  செயல் சட்டமுறைமைக்கு முரணானது என ஆணையம் தனது முதல் தீர்ப்பில் (ஒக்ரோபர் 21-2020) முன்னராக தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

                  இலங்கை
                  இலங்கை
                  Posted in இலங்கை செய்திகள்

                  விபத்தில் சிக்கிய இலங்கை விமானம் – தப்பிய பயணிகள்

                  விபத்தில் சிக்கிய இலங்கை விமானம் – தப்பிய பயணிகள்

                  இலங்கை அரசுக்கு சொந்தமான ஏயர்லங்கா பயணிகள் விமானம் ஒன்று மாலைதீவு விமான நிலையத்தில்

                  விபத்தில் சிக்கியுள்ளது ,பயணிகளை காவி பறக்கும் முயற்சியில் ஈடுபட்ட பொழுது அந்த விமான நிறுவனத்தில் உள்ள

                  வாகனம் ஒன்று விமானத்தின் பின் பகுதியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும்

                  ,குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது

                  இது திட்டமிடப்பட்ட சதியா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கை இந்தியா விமான பயணங்கள் இடை நிறுத்தம்

                    இலங்கை இந்தியா விமான பயணங்கள் இடை நிறுத்தம்

                    இலங்கை இந்தியாவுக்கு இடையில் மீள ஆரம்பிக்கப் படவிருந்த விமான பயணங்கள் தபோது இடைநிறுத்தம் செய்ய பட்டுள்ளது

                    இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து இந்த இடைக்கால தடை விதிக்க பட்டுள்ளது

                    மேற்படி இந்த தடை உத்தரவினால் இரு நாடுகளுக்கு இடையிலான பயண போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது

                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கையில் கொரனோ – மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

                      இலங்கையில் கொரனோ – மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

                      இலங்கையில் தீவிரமாக கொரனோ நோயானது பரவி வரும் நிலையில்
                      தற்போது சிவப்பு

                      எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
                      கொழும்பு பகுதியில் 294 பேருக்கு மேலாக பாதிக்க பட்டுள்ளனர்

                      தொடர்ந்து தமிழர் பகுதி யாழிலும் இந்த நோயானது வேகமாக பரவி வருவதாக இராணுவம் தொடர்ந்து தெரிவித்து வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது

                        Posted in இலங்கை செய்திகள்

                        சிறை சாலைகளிற்கு கமரா பொருத்தும் கோட்டா அரசு – ஏன் இந்த அவசரம் ..?

                        சிறை சாலைகளிற்கு கமரா பொருத்தும் கோட்டா அரசு – ஏன் இந்த அவசரம் ..?

                        ஆளும் கோட்டா அரசு சிறைச்சாலைகளிற்கு புதிதாக கமரா பொருத்தும் நகர்வை தீவிர படுத்தியுள்ளது ,.


                        மகசீன் மற்றும் வெலிக்கடை சிறை சாலைகளிற்கே இந்த கமராக்கள் பொருத்த படுகிகின்றன

                        போதைவஸ்து விநியோகம் தீவிரமாக ஈடுபடுகிறது என கூறியே இந்த கண் காணிப்பு வலயம் இறுக்க படுகிறது

                        எனினும் விடயம் வேறு பக்க சமாச்சாரம் உள்ளதாக கசிவுகள் தெரிவிக்கின்றன

                          Posted in இலங்கை செய்திகள்

                          வீதி விபத்துக்களில் 75 பேர் மரணம் – அதிகரிக்கு விபத்துக்கள்

                          வீதி விபத்துக்களில் 75 பேர் மரணம் – அதிகரிக்கு விபத்துக்கள்

                          இலங்கையில் கடந்த ஒரு வார காலத்தில் வீதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி சுமார் 75 பேர் மரணமாகியுள்ளனர்

                          மேலும் பல நூறு பேர் காயமடைந்துள்ளனர் ,சாலை விதிகளை கடைபிடிக்காது சாரதிகள்

                          செல்வதே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

                            Posted in இலங்கை செய்திகள்

                            உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி

                            உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி

                            உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் விதமாக இன்று (21) காலை 8.45

                            மணியளவில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலத்தப்பட்டது.

                            கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பங்களிப்புடன் கொச்சிக்கடை தேவலாயத்தில் இந்த நிகழ்வு ஆரம்பித்து கைப்பட்டிருந்து.

                            உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டு இன்றுடன் இரண்டு வருங்களை நிறைவை பல்வேறு விஷேட ஆராதனைகளும் இடம்பெற்று வருகின்றது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              ஆகஸ்ட் மாத பாடசாலை விடுமுறை ஒருவாரம்

                              ஆகஸ்ட் மாத பாடசாலை விடுமுறை ஒருவாரம்

                              இம்முறை ஆகஸ்ட் மாத பாடசாலை விடுமுறை ஒரு வாரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

                              இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வருடத்திற்கான பாடசாலைகளின் இரண்டாவது வாரம் சுகாதார பரிந்துரைகளுக்கமைவாக இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி 15 மாணவர்கள் உள்ள வகுப்பொன்று வாரத்தின் எல்லா நாட்களும் நடைபெறவேண்டும்.

                              அத்துடன், 16 க்கும் 30 க்கும் இடைப்பட்ட மாணவர்களைக் கொண்ட வகுப்பொன்று 2 குழுக்களாகப் பிரித்து ஒரு வாரத்திற்கு ஒருமுறை என்றவாறு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

                              முப்பது மாணவர்களைவிட கூடிய வகுப்புக்கள் மூன்று குழுக்களாகப் பிரித்து சமனான எண்ணிக்கையிலான நாட்களில் வகுப்புக்களை நடத்த வேண்டும்.

                              மேலும் நேற்றைய தினம் அதிகளவிலான பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை உயர் மட்டத்தில் காணப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

                              இதேவேளை நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் ஏப்ரல் மாதம் 27ம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

                                Posted in இலங்கை செய்திகள்

                                தொழில் முனைவோர்களுக்கு சந்தை வாய்பை ஏற்படுத்தும் விற்பனை நிலையம்

                                தொழில் முனைவோர்களுக்கு சந்தை வாய்பை ஏற்படுத்தும் விற்பனை நிலையம்

                                சுய தொழில் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு சந்தை வாய்பை ஏற்படுத்தும் நோக்கில் இராஜாங்க

                                அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நுவரெலியா பருவகால கொள்வனவு தொகுதியில் பிரஜா ஷொப்பிங் விற்பனை குடில் இன்று (20.04.2021) ஆரம்பிக்கப்பட்டது.

                                பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பளார் பாரத் அருள்சாமியின் ஏற்பாட்டின் மூலம் பல

                                உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் மற்றும் முதலீட்டாளர்களை கவருவதை இலக்காக கொண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

                                விற்பனை
                                விற்பனை
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  சர்வதேச தொழிற்சந்தையை இலக்காகக் கொண்டு புதிய வேலைத்திட்டங்கள்- நாமல் அறிவிப்பு

                                  சர்வதேச தொழிற்சந்தையை இலக்காகக் கொண்டு புதிய வேலைத்திட்டங்கள்- நாமல் அறிவிப்பு

                                  சர்வதேச தொழிற்சந்தையை இலக்காகக் கொண்டு புதிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

                                  எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவது இலக்காகும்.

                                  நாட்டில் தெரிவு செய்யப்பட்ட 59 விளையாட்டு வீரர்கள் தொழில் ரீதியில் ஒப்பந்தங்களில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

                                  பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

                                  மஹேல ஜெயவர்தன தலைமையிலான தேசிய விளையாட்டு பேரவையின் மூலம் தேசிய விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கான திட்டம் சமர்பிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

                                  முதல் முறையாக தொழில் ரீதியில் விளையாட்டு வீரர்களுக்கான உடன்படிக்கையை மேற்கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    10 மில்லியன் ரூபா தேயிலை கொண்டனர் மடக்கி பிடிப்பு

                                    10 மில்லியன் ரூபா தேயிலை கொண்டனர் மடக்கி பிடிப்பு

                                    இலங்கை கொழும்பு துறைமுகத்தில் நீண்ட கொண்டனர் ஒன்றுக்குள் இருந்து தேயிலை தூள்

                                    கண்டு பிடிக்க பட்டுள்ளது

                                    ஏற்றுமதிக்கு உகந்த முறையற்ற தேயிலை தூள்களை ஏற்றுமதி செய்ய முற்பட்ட வேளையே இந்த
                                    முற்றுகை இடம்பெற்றுள்ளது

                                    மேற்படி கொள்கலன் தொடர்பில் சுங்க பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்