Posted in இலங்கை செய்திகள்

சமூக இடைவெளியைப் பேணாவிடின் கைது

சமூக இடைவெளியைப் பேணாவிடின் கைது

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், வியாபார நிலையங்கள் உட்பட பொது

இடங்களில் சமூக இடைவெளியைப் பேணாதவர்கள் இன்று முதல் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய (21) தினம் பல இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பேணாது செயற்பட்டதைக்

கண்காணித்ததைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பதில் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை

பொதுமக்கள் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காகவே இன்று முதல் நாடு பூராகவும் விசேட பொலிஸ் குழுக்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதற்காக கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

கொலையாளி பிள்ளையான் – போட்டு தாக்கும் சாணக்கியன்

கொலையாளி பிள்ளையான் – போட்டு தாக்கும் சாணக்கியன்

பழைய வழக்குகளை விசாரிப்பதற்கு ஒரு பொறிமுறையை உருவாக்கவேண்டும் அதில் மாற்றுக் கருத்துகளுக்கு இ​டமில்லை எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற

உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியம், கடந்த ஒரு மாதத்துக்குள் 100க்கு மேற்பட்டவர்கள் புதிதாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்கவேண்டும்.

பாராளுமன்றத்தில் இன்று (22) நடைபெற்ற வாதவிவாதத்தில் கலந்து​கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான், பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு​ சொத்துக்கள் இருக்கின்றன. அரசாங்கத்துக்கு ஆதரவானவர்,

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கின்றார். ஆனால், பேஸ்புக்கில் ஏதாவது எழுத்தியதற்காக, கடந்த ஒரு வருடத்தில் 100க்கும் மேற்பட்ட பிள்ளைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஏதாவது நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். பிள்ளையானுக்கு பிணை வழங்கியதைப் போல, பிள்ளைகளுக்கும் பிணை வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவும் என்றும் கோரிநின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் ஐந்து வருடங்களுக்கும் மேலாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ்

மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துரை சந்திரக்காந்தன், பிணையில் விடுக்கப்பட்டார். அத்துடன், அவருக்கு எதிரான வழக்கும் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Posted in இலங்கை செய்திகள்

வயலுக்குள்ள இருந்து ஆணின் சடலம் மீட்பு

வயலுக்குள்ள இருந்து ஆணின் சடலம் மீட்பு

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிந்தவூர் பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் இருந்து இன்று (21) மாலை இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் நிந்தவூர் பிரதேச சபை கட்டிடத்திற்கு பின்னால் அமைந்துள்ள வயல் காணியில் மீட்கப்பட்டுள்ளதுடன் இறைச்சி கடை சார்ந்த கூலித் தொழிலில் ஈடுபட்டு வரும் 60 வயதான உபாலி என அறியப்படும் ஜாபீர் என்பவரே உயிரிழந்தவராவார்.

சடலமாக மீட்கப்பட்டவர் போதைப்பொருள் பாவனை பழக்கம் உள்ள இவர் கடந்த காலங்களிலும் இவ்வாறு போதைப்பொருள் மூலம் நிதானமிழந்து வீதிகளில் விழுந்து கிடந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

    Posted in இலங்கை செய்திகள்

    காவல்துறை வேட்டை 396 பேர் கைது

    காவல்துறை வேட்டை 396 பேர் கைது

    இலங்கையில் தொடர்ந்து பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து பலத்த சட்டங்கள் அறிமுமுக படுத்த பட்டுள்ளன

    இதில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் சுமார் 396 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்


    கைதானவர்கள் முக கவசம் மற்றும் மாகாண எல்லைகளை தாண்டிய குற்ற சாட்டில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

      Posted in Uncategorized இலங்கை செய்திகள்

      அவுஸ்ரேலியாவில் புயலில் சிக்கி ஈழ தமிழர் மரணம் – கண்ணீரில் குடும்பம்

      அவுஸ்ரேலியாவில் புயலில் சிக்கி ஈழ தமிழர் மரணம் – கண்ணீரில் குடும்பம்

      அவுஸ்ரேலியா நாட்டில் வசித்து வந்த ஜானேஷ் பிரசாத் என்பவர் கடந்த சனிக்கிழமை பணிக்கு சென்ற பொழுது சீரற்ற கால நிலை காரணமாக மரணம் அடைந்துள்ளார்

      டீசல் மெக்கானிக்கராக பணி பிரிந்து வந்த அவர் அன்று பணியில் ,இயந்திரங்களை திருத்தம் செய்து கொண்டிருந்த பொழுது மரணமடைந்துள்ளார்

      தனது கணவர் இன்று சீரற்ற காலநிலையால் வேலைக்கு சென்றதன் விளைவால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளது என அவரது மனைவி கண்ணீர் மல்க கூறியுள்ளார்

      15 வருடகால திருமண வாழ்வு இந்த திடீர் கணவர் மரணத்தால் பறிபோயுள்ளது ,கலகலப்பாக

      பேசும் இவர் ,கடின உழைப்பாளி அவ்வாறான ஒருவரை இழந்து தாம் வேதனையில் தவிப்பதாக பாரியார் தெரிவித்துளளார்

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் சிக்கிய வாங்கி அட்டை கொள்ளையர்கள்

        இலங்கையில் சிக்கிய வாங்கி அட்டை கொள்ளையர்கள்

        கடன் அட்டைகள் தொடர்பான பண மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய சீனப் பிரஜை ஒருவரும் இலங்கையர்கள் மூவரும் கல்கிசையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

        இந்த சந்தேக நபர்களினால் போலி கடன் அட்டைகள் தயாரிக்கப்பட்டு அவற்றை பயன்படுத்தி ஒன்லைன் ஊடாக

        பல்வேறு பொருட்கள் கொள்வனவு செய்திருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

        ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் சுமார் ரூ.7 இலட்சத்து 87 ஆயிரம் நிதி மோசடி இடம்பெற்றமை

        தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்தே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

          நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள் அகல்யா
          Posted in இலங்கை செய்திகள் நிலா தமிழ்

          நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள் அகல்யா

          நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள் அகல்யா

          நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள் அகல்யா ,நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள்’ நூல் பற்றிய ஓர் ஆய்வு.


          நூலின் தலைப்பும் அட்டைப் படமும் மாவீரர்களின் நினைவுகளை அழிக்க முடியாது என்றும், அவர்கள் விதைக்கப்பட்டவர்களே!

          வித்துடல்களிலிருந்து புதிய தளிர்கள் முளைவிடுகின்றன என்றும் கூறுகின்றது. நூலின் தலைப்புப் போன்றே நீண்ட போராட்ட வரலாற்றைக் கொண்ட மாவீரர்களின் நினைவுகளை நூறு பக்கங்களில் அடக்கிவிட முடியாது.

          இங்கு இவர் பன்னிரு மாவீரர்களின் போராட்ட வாழ்வை, வரலாற்றை கற்பனைகளோ, பசப்பு வார்த்தைகளோ, பொய்களோ இன்றி கலப்படமற்ற உண்மைகளை உணர்ச்சிபூர்வமாக எழுதியுள்ளார்.

          இது ஒரு ஆவணம் என்பதால் காலம், இடங்கள் நிகழ்வுகளை மிகவும் துல்லியமாகச் சேகரித்துப் பதிவிட்டிருக்கின்றார்.

          மாவீரர்களின் வரலாற்றை நினைவில் இருத்தி தமிழ்

          பல்வேறு சிரமங்களின் மத்தியில் மாவீரர்களின் வரலாற்றை நினைவில் இருத்தி, நூலுருவில் தந்திருப்பது மிகச் சிறப்பே. வீர காவியங்களை சாயம் பூசாது உண்மைத் தன்மையுடன் எழுதுவது என்பது கடினமானதே.

          நிலாதமிழ் பல இடங்களில் பழமொழிகளைக் கையாண்ட விதமும், தூய தமிழ் வார்த்தைகளை பிரயோகித்த விதமும் தமிழின் மீது இவர் கொண்ட பற்றையும், அறிவையும் காட்டி நிற்கிறது. கவித்திறன் வாய்ந்தவர் என்பதை தமிழேந்தியப்பாவின் கவிதை மூலம் உணர முடிகின்றது.

          இந்நூலானது மாவீரர்களின் வாழ்க்கை வரலாற்றை கூறுவது மட்டுமன்றி, தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், அமைப்பையும், அமைப்பிற்கும் மக்களுக்குமிடையே உள்ள உறவை, மக்களுடன் இரண்டறக் கலந்ததே விடுதலைப் போராட்டம் என்று உணர்த்துகின்றது.

          விடுதலை அமைப்பின் கட்டமைப்பை, கட்டுக்கோப்பை, பண்பை, பாசத்தை, அறிவை ஆற்றலை அறிய முடிகின்றது.

          போராட்டக் காலத்தில்

          போராட்டக் காலத்தில் காலத்துக்குக்காலம் ஏற்பட்ட வளர்ச்சியும், வடிவங்களும் போராட்டக் களங்களின் காலப்பகுதிகளும் இந்நூலில் குறிப்பிடப்பட்டமை சிறப்பாக அமைந்திருக்கிறது.

          இலக்கு மின்னிதழ் 150 அக்டோபர் 03 2021 | Weekly Epaper
          இந்நூலில் போராளிகளின் வாழ்விடங்களையும், தாயகத்தின் பல

          பகுதிகளையும் வர்ணனையுடன் அழகாகக் குறிப்பிட்டுள்ளமை புலம்பெயர் தேசங்களில் வாழும் எம் போன்றவர்களின் ஊர்,தேசம் என்ற ஏக்கத்தை வலியுடன் ஏற்பட வைத்துள்ளது.

          நிலா தமிழின் எழுத்தினூடாக ஒவ்வொரு போராளியும் உள்ளத்தால் மென்மை யானவராகவே காணப்படுகின்றனர். பின்பு அடக்குமுறைகளையும் அநீதிகளையும் கண்டு கொதித்தெழுந்தே போராளிகளாகின்றனர்.

          வசதியான குடும்பங்களில் பிறந்தவர், செல்லப் பிள்ளைகளாக வளர்ந்தவர்கள், கல்வியில் சிறந்தவர்களாகவே விளங்கி, விடுதலையுணர்வினால் உந்தப்பட்டுப் போராளியாகி மாவீரர்களாகி உன்னதமடைந்தவர்களே.

          கல்வியை தொடராமல் போராட்டத்தில் இணைந்ததாலும் அமைப்பானது இவர்களை அப்படியே விடாது அவரவரின் திறமை, வயதிற்கேற்ப உயர் கல்வி கற்கும் வசதிகளை ஏற்படுத்தி இவர்களை கல்விமான்களாக உருவாக்கியிருப்பதை இந்நூல் மூலம் அறிந்து நெகிழ முடிகிறது.

          ஏற்ற துறைகளில் அறிவைப் பெருக்கி

          அவர்களுக்கு ஏற்ற துறைகளில் அறிவைப் பெருக்கிக் கொள்வதற்காக பல வசதிகள் வாய்ப்புகளை வழங்கி, அவர்களின் திறமைகளுக்கு ஏற்ப பொறுப்புக்கள் வழங்கப்படுவதும் தெரிகின்றது.

          இந்த மாவீரர்களின் அறிவுத்திறன் கண்டு மெய்சிலிர்த்து நிற்கிறேன். எல்லாத் துறைகளிலும் அபரிமிதமான வளர்ச்சிகள், உயர்வுகள், தோல்விக்காக

          துவண்டு போகாமல் வெற்றியை நோக்கியே வீறு கொண்ட பயணங்கள், குடும்பத்தைப் பிரிந்து போராட்டத்தில் இணைந்தவர்கள் விட்டுக் கொடுத்தல்,

          பகிர்ந்துண்ணல், பாதுகாத்தல், சகபோராளிகளின் குடும்பங்களையும் தன் குடும்பமாக நேசிக்கும் பண்பு, அன்பையும் வீரத்தையும் பண்பையுமு் வளர்த்து அறிவுடன் கூடிய கட்டுக்கோப்பானவர்களாக மிளிர்ந்து நிற்கின்றனர்.

          இந்த வாழ்வை நாம் அனுபவிக்கத் தவறி விட்டோமே என்ற ஏக்கத்தையும் தருகிறது.

          ஒன்றுக்கு மேற்பட்ட மாவீரர்களைக் கொண்ட தியாகக் குடும்பங்கள், தொடர்ந்தும் போராட்டத்திற்கும், அமைப்புக்கும் ஆதரவு கொடுக்கும் உறவுகள் என்ற உயர்ந்த நிலை.

          போராளியின் குண இயல்பு

          இங்கு நிலா தமிழ் ஒவ்வொரு போராளியின் குண இயல்புகளையுமு், ஆற்றலையுமு் ஆளுமையையும் அழகாக அனுபவித்து எழுதியுள்ளார்.

          அவர்களிடையே காணப்பட்ட நகைச்சுவை உணர்வுகளையுமு் பட்டப் பெயர்களையும் குறிப்பிடத் தவறவில்லை. பேணி, பொக்கான், அரியத்தார்

          போன்ற செல்லப் பெயர்களும், “துவைக்கிற கல்லில் தவளை“ என்ற நகைச்சுவை வரிகள், “குமார் குமார் லைட்டடி“ என்ற வரிகள் போராட்டத்தின்

          மத்தியிலும் போராளிகள் திடமானவர்களாக, நகைச்சுவை உணர்வுள்ளவர்களாக, பல்திறன் மிக்கவர்களாக விளங்கினார்கள் என்றுணர முடிகிறது.

          இங்கு ஆண் போராளிகள் பெண் போராளிகள் மீது காட்டும் பாசமும், மதிப்பும், அக்கறையும் சேரலாதன் சேரன், விமல் போன்ற மாவீரர்களின் செயல்களைக் கூறி நிலாத்தமிழ் உணர்த்தியுள்ளார்.

          போராளிகள் தமக்கென சுயநலமாக வாழாது போராளிகளை மணந்து தமக்கென குடும்பங்கள், உறவுகள், பிள்ளைகள் இருந்தும் இறுதிவரை விடுதலைக்காய் பணி செய்து வீரச்சாவடையும் வேதனையை அனுபவித்து

          வேதனையுடனும் பெருமையுடனும் எழுதியிருக்கின்றார் நிலா தமிழ்

          வேதனையுடனும், பெருமையுடனும் எழுதியிருக்கின்றார். ஆதி என்ற போராளி அரவம் தீண்டி இறப்பதும், மேஜர் சேரலாதன் ஈரல் புற்றுநோயினால் உயிரை விடுவதும்வேதனைக்குரியவை.

          இந்நூலின் மூலம் மாவீரர்களினதும் அமைப்பினதும் ஆளுமைகளை ஆக்கங்களை வெற்றிகளை வேதனைகளை உள்வாங்க முடிகின்றது

          என்றாலும், தாயகத் தாகத்தை தீர்க்க முயன்றவர்களின் முழு அர்ப்பணிப்புக்களும் விதைக்கப்பட்டிருக்கின்றனவா? முளைவிட்டு, மீண்டும்

          வளர்ந்து, மரமாகி, கிளை பரப்பி, மீண்டும் வளர்ந்து மரமாகி கிளை பரப்பி வேரூன்றுமா? என்ற எண்ணமும் என்னுள்ளே எழுகின்றது.

          நிலாதமிழ் நிதித்துறையைச் சார்ந்தவர் என்பதால், நிதித்துறையைச் சேர்ந்த மாவீரர்களை மட்டுமே இங்கு அதிகளவில் குறிப்பிட்டிருக்கின்றார்.

          நிதித் துறையிலேயே இவ்வளவு ஆளுமை, திறமை மிகுந்தவர்கள் இருக்கும் போது மற்றத் துறைகளில் எவ்வளவு இருக்கும்? அவற்றையும் அறிய வேண்டும் என்ற அவா ஏற்படுகின்றது.

          இந்நூலினை ஒரு ஆவண ஏடாகத்தான் பார்க்க முடிகின்றது. அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களில் பன்னிருவரே இங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளனர்.

          இது போன்ற நூல்கள் எழுதப்பட வேண்டும்

          மற்றைய துறைகளிலும் இது போன்ற நூல்கள் எழுதப்பட வேண்டும். காவியமாகி விட்ட மாவீரர்களின் நினைவுகள் களங்கப்படாது, நிலைத்து

          நீங்காது நிற்கவும், எதிர்கால சந்ததியினர் புலம்பெயர் தேசங்களில் வாழ்பவர்கள் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் கள் என்ற அனைவரும்

          பேணிப் பாதுகாத்து நிற்பதற்காகவும் இதுபோன்ற நூல்கள் எழுதப்பட வேண்டும். இந்நூலை அடிப்படை ஆவணமாகக் கருதித் தொடர வேண்டும்.

          நிலாத்தமிழ் போராளியாக, மாவீரனின் வாழ்க்கைத் துணையாக, தலைவரையும், அமைப்பையும் நினைவில் நிறுத்தி “நினைவழியா நினைவுகள்

          என் நினைவில் மாவீரர்கள்” என்ற உன்னதமாக ஆவண நூலைத் தந்து தன் வரலாற்றுக் கடமையைச் சரிவரச் செய்துள்ளார்.

          Posted in இலங்கை செய்திகள்

          சாராய கடைகள் திறக்க அனுமதி – மகிழ்ச்சியில் குடி மகன்கள்

          சாராய கடைகள் திறக்க அனுமதி – மகிழ்ச்சியில் குடி மகன்கள்

          இலங்கையில் விதிக்க பட்ட தடைகள் சற்று தளர்த்த பட்டுள்ளன ,இவ்வேளை மதுபான கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது

          விதிகளை கடைபிடித்து மதுபானத்தை கொள்வனவு செய்திட முடியும் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

          மேற்படி செய்தியால் குடி மகன்கள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்

            Posted in இலங்கை செய்திகள்

            உங்கள் பகுதிகளில் இது நடக்கலாம் – எச்சரிக்கை

            உங்கள் பகுதிகளில் இது நடக்கலாம் – எச்சரிக்கை

            =மழை நிலைமை:

            கொழும்பிலிருந்து காலி ஊடாகமாத்தறை வரையானகடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

            காற்று :
            நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு அல்லது மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன், காலியிலிருந்து

            ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாககாங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது

            அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

            கடல் நிலை:
            காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் புத்தளத்திலிருந்து மன்னார் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக்

            காணப்படும். நாட்டைச் சூழவுள்ளஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

              Posted in இலங்கை செய்திகள்

              தனிமை படுத்தல் விதிகளை மீறிய 844 பேர் கைது

              தனிமை படுத்தல்விதிகளை மீறிய 844 பேர் கைது

              இலங்கையில் நிகழ்கால கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் 844 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

              இவர்கள் யாவரும் முககவசம் மற்றும் மாகாண எல்லைகளை தாண்டிய குற்ற சாட்டுக்களில் கைது செய்ய பட்டுள்ளனர்


              நோயானது வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் அலட்சியத்துடன் செயல்படுவதை காணமுடிகிறது

                Posted in இலங்கை செய்திகள்

                தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம்

                தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம்

                நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ளவர்கள் அத்தியாவசிய தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என லிந்துலை பிரதேச

                பொது வைத்திய அதிகாரியும், அரச மருத்துவ அதிகாரியின் சங்கத்தின் நுவரெலியா கிளையின் தலைவருமான ஆறுமுகன் ஜெயராஜன் தெரிவித்தார்.

                நாளைத் தளர்த்தப்படவுள்ள பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பாக இன்று (20) கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

                அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணங்ககளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

                இந்த தொற்று பரவலினை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. ஆகவே நாளை பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின் வழமை போல் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்தால் தொற்று பரவலினை கட்டுப்படுத்த முடியாது

                போய்விடும். இதனால் பாரிய பின் விளைவுகள் ஏற்படும். ஆகவே அத்தியாவசிய தேவைகளுக்காக நகரங்களுக்கு வருகை தருவதாக இருந்தால் வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரம் வர வேண்டும்.

                அதுவும் முகக்கவசம் அணிந்து சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வர வேண்டும். இதன்போது தமது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு நகருக்கோ, பயணமோ செல்லக்கூடாது. ஆபத்து

                இன்னமும் எம்மை விட்டு நீங்கவில்லை. ஆகவே நீங்கள் வெளியில் போய் வந்த பின் நன்றாக குளித்து விட்டு உரிய சுகாதார பொறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என இவர் மேலும் தெரிவித்தார்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  உயிரிழந்த கடல் ஆமைகள் டொல்பின் நடந்தது என்ன

                  உயிரிழந்த கடல் ஆமைகள் டொல்பின் நடந்தது என்ன

                  மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் உயிரிழந்த இரண்டு கடல் ஆமைகள் மற்றும் ஒரு டொல்பினும் நேற்று (19) கரையொதிங்கியுள்ள.

                  கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள், கடல் சுழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள்,

                  மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டதுடன், இறந்த நிலையில் பலத்த காயங்களுடன் கரையொதங்கிய டொல்பின்

                  கடலாமைகளை மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தின் பிராந்திய சுற்றுவட்ட

                  உத்தியோகத்தர் நாகராசா சுரேஸ்குமார் பார்வையிட்டதுடன், பகுப்பாய்விற்காக எடுத்துச் சென்றுள்ளார்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    மருதானை பகுதிகளில் ட்ரோன் கமராக்கள்

                    மருதானை பகுதிகளில் ட்ரோன் கமராக்கள்

                    நாட்டில் நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய ஆயிரத்து 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                    இவர்களில் பலர் கண்டி மாத்தளை மற்றும் குளியாப்பிட்டி பிரதேசங்களிலேயே கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜத் ரோஹண தெரிவித்தார்.

                    கொழும்பு – வாழைத்தோட்டம் மற்றும் மருதானை பகுதிகளில் ட்ரோன் கமராக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 12

                    பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த ட்ரோன் கமராக்களின் மூலம் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளில், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 143 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்

                    Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                    திருமலையில் சிசுவை வெட்டி கொன்ற கொடூரம்

                    திருமலையில் சிசுவை வெட்டி கொன்ற கொடூரம்

                    திருகோணமலை கப்பல் துறை பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட மூவரில் 6 மாத குழந்தை நேற்றிரவு (19) உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

                    சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக மாமா, மாமி மற்றும் வாளால்

                    வெட்டியவரின் 6 மாத குழந்தை ஆகியோர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று(19) பிற்பகல் 2.30 மணி அளவில் அனுமதிக்கப்பட்டனர்.

                    இந்நிலையில் குறித்த சம்பவத்தில் வெட்டிய சந்தேக நபரின் மாமா, மாமி சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட இருந்த நிலையில் மாமியாரின் கை துண்டிக்கப்பட்ட நிலையில் சீனக்குடா

                    பொலிஸார் துண்டிக்கப்பட்ட கையை திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

                    எனினும், 43 வயதுடைய குறித்த பெண்ணுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் துண்டிக்கப்பட்ட கையை பொருத்த முடியாமல் போயுள்ளதாகவும் தெரியவருகின்றது.

                    இதேவேளை குறித்த சம்பவத்தில் 6 மாத குழந்தை வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தது.

                    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. குறித்த ஆறு மாத குழந்தையின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

                    இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை தேடி வருவதாகவும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      சிசுவை கொன்ற கொரனோ – பீதியில் கிராம மக்கள்

                      சிசுவை கொன்ற கொரனோ – பீதியில் கிராம மக்கள்

                      பிறந்து 18 நாள்களேயான சிசுவொன்று, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்துள்ளது. இந்த சம்பவம்

                      மினுவங்கொட பீல்லவத்த பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது என மினுவங்கொட சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம் தெரிவித்துள்ளது.

                      பிறக்கும் போதே அங்கவீனமுற்றிருந்த அந்த சிசு, நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளது.

                      அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட ரேபிட் அன்டிஜன் பரிசோதனையில், அச்சிசுவுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

                      மரணமடைந்த சிசுவின் தாய், தந்தை ஆகிய இருவருக்கும் ரேபிட் அன்டிஜன் பரிசோதனைகள்

                      முன்னெடுக்கப்பட்டன. அவ்விருவருக்கும் எவ்விதமான அறிகுறிகளும் காண்பிக்கவில்லை என்றும் சுகாதார தரப்பினர் தெரிவித்தனர்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        வாகன தண்டப் பணத்தை கடன் அட்டை மூலம் செலுத்தலாம்

                        வாகன தண்டப் பணத்தை கடன் அட்டை மூலம் செலுத்தலாம்

                        எதிர்காலத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறும் தவறுகளுக்கான தண்ட பணத்தை தம்மிடம் உள்ள கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) மூலம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

                        சம்பந்தப்பட்ட இடத்தில் கடமையில் இருக்கும் பொலிசாரினால் இந்த தண்டப்பணத்தை கடன் அட்டை மூலம் வசூலிப்பதற்கான தரவை பெற்றுக்கொள்வதற்கான முறை அறிமுகப்படுத்தப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

                        அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

                        பொலிஸ் தலைமையகத்தில் இதுதொடர்பான இணையதள பணக் கொடுக்கல் வாங்கல் முறை உருவாக்கப்பட்டவுள்ளது. வாகனம் சார்ந்த தவறுகளுக்காக சாரதிகளுக்கு புள்ளி வழங்கும் முறை

                        அறிமுகப்படுத்தப்படும். அந்த புள்ளி குறையும் போது சில மாதங்களுக்கு அல்லது பல வருடங்களுக்கு வாகன அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்..

                          Posted in இலங்கை செய்திகள்

                          உலகில் சீனா பலம் பொருந்திய நாடு – ரணில் அந்தர் பெல்ட்டி

                          உலகில் சீனா பலம் பொருந்திய நாடு – ரணில் அந்தர் பெல்ட்டி

                          உலகில் சீன சக்தி வாய்ந்த பொருளாதார பலமிக்க நாடக மாற்றம் பெற்றுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார்

                          இவரது ஆட்சி காலத்தில் சீனாவுக்கு எதிரான நகர்வுகள் முடுக்கி விட பட்டன

                          இவ்வாறான நிலையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது பலத்த சந்தேகங்களை கிளப்பியுள்ளது

                            Posted in இலங்கை செய்திகள்

                            அபாய பகுதியாக யாழ்ப்பாணம் – விடுக்க பட்டுள்ள வேண்டுதல்

                            அபாய பகுதியாக யாழ்ப்பாணம் – விடுக்க பட்டுள்ள வேண்டுதல்

                            யாழ். மாவட்டத்தை அவதானிக்கும் போது இன்னும் அபாயமான கட்டம் நீங்கவில்லை .எனவே பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

                            நேற்றைய தினம் (18) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அரச அதிபர் இதனைத் தெரிவித்தார்.

                            அவர் மேலும் தெரிவிக்கையில்,

                            “அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவு முதற்கட்டமாக 71,712 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
                            இதன் பிரகாரம் முதற்கட்டமாக சமுர்த்தி பெறுவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ,சிறுநீரக கொடுப்பனவு பெறுவோர்,முதியோர் கொடுப்பனவுகள் பெறுவோருக்கே வழங்கப்பட்டுள்ளன.ஏனையோருக்கும் விரைவில் வழங்குவதற்கு எதிர்பார்க்கிறோம்.

                            சமுர்த்தி பெறாதவர்களுக்கான 5,000 ரூபாய் கொடுப்பனவுக்கான நிதி வந்தடைந்ததும் ஏனையோருக்கும் வழங்கப்படும்.

                            கொரோனா நிலைமையை அவதானிக்கும்போது தினம் மாத்திரம் 83 கொரோனா தொற்றாளர்கள் யாழில் கண்டறியப்பட்டுள்ளனர். 1,754 குடும்பங்களைச் சேர்ந்த 5,613 நபர்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

                            யாழில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,668 ஆக அதிகரித்துள்ளது.அதேநேரம் 63 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

                            கோப்பாய் இடைநிலை பராமரிப்பு நிலையத்தில் 321 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களும் வட்டுக்கோட்டை இடைநிலை பராமரிப்பு நிலையத்தில் 159 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களும்
                            அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

                            சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட இரண்டு கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை நல்லூர் அரசடி பகுதி தனிமைபடுத்தலில் இருந்து விடுவிப்பதற்கு சிபாரிசு செய்யப்பட்டிருக்கின்றது.

                            இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 மணிக்கு நீக்கப்படுகிறது.

                            மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை காணப்படும் என்ற நிபந்தனையுடன் தான் பயணத்தடை தளர்த்தப்படவுள்ளது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            வீசியடிக்கும் புயல் மக்களுக்கு எச்சரிக்கை

                            வீசியடிக்கும் புயல் மக்களுக்கு எச்சரிக்கை

                            இலங்கையில் தற்போது வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை

                            மாவட்டங்களிலும் காற்றின் வேகம் மணிக்கு முப்பது முதல் ஐம்பது கிலோமீற்றர் வரை அதிகரித்துள்ளது

                            இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது


                            பொதுவில் முதல் மன்னார் வரையான பகுதிகள் பாதிக்க படும் வலையங்களாக அறிவிக்க பட்டுள்ளது

                              Posted in இலங்கை செய்திகள்

                              போதை பொருள் வியாபாரம் புரிந்த காவல்துறை அதிகாரி கைது

                              போதை பொருள் வியாபாரம் புரிந்த காவல்துறை அதிகாரி கைது

                              இலங்கை களுத்துறை தெற்கு உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் ஐம்பது கிலோ போதைவஸ்துடன் கைது செய்ய பட்டுள்ளார்


                              இவர் நீண்ட காலமாக இந்த கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது


                              போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது