தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம்

Spread the love

தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம்

நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ளவர்கள் அத்தியாவசிய தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என லிந்துலை பிரதேச

பொது வைத்திய அதிகாரியும், அரச மருத்துவ அதிகாரியின் சங்கத்தின் நுவரெலியா கிளையின் தலைவருமான ஆறுமுகன் ஜெயராஜன் தெரிவித்தார்.

நாளைத் தளர்த்தப்படவுள்ள பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பாக இன்று (20) கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணங்ககளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்த தொற்று பரவலினை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. ஆகவே நாளை பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின் வழமை போல் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்தால் தொற்று பரவலினை கட்டுப்படுத்த முடியாது

போய்விடும். இதனால் பாரிய பின் விளைவுகள் ஏற்படும். ஆகவே அத்தியாவசிய தேவைகளுக்காக நகரங்களுக்கு வருகை தருவதாக இருந்தால் வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரம் வர வேண்டும்.

அதுவும் முகக்கவசம் அணிந்து சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வர வேண்டும். இதன்போது தமது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு நகருக்கோ, பயணமோ செல்லக்கூடாது. ஆபத்து

இன்னமும் எம்மை விட்டு நீங்கவில்லை. ஆகவே நீங்கள் வெளியில் போய் வந்த பின் நன்றாக குளித்து விட்டு உரிய சுகாதார பொறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என இவர் மேலும் தெரிவித்தார்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *