Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை – 5தாவது கொரனோ பரவும் அபாயம்
இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை – 5தாவது கொரனோ பரவும் அபாயம்
இலங்கையில் ஐந்தாவது கொரனோ அலை உருவாகும் அபாயம் உள்ளதாக அரச அதிகாரிகள்
எச்சரித்துள்ளனர்
மேலும் இந்த நோயின் பரவலை தடுக்க மக்கள் சுகாதர விதிமுறைகளை பின்பற்றி செயல் பட வேண்டும் என வேண்ட பட்டுள்ளது
மக்கள் நடைமுறை விதிகளை மீறி அலட்சியமாக செயல் படுவதால் இம்முறை உயிரிழப்பு
அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் திட்டமிட்ட படி இன்று சுகவீன விடுப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்
சம்பள உயர்வு கோரி வந்த போராட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்க படுகிறது
நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்து செல்லும் நிலையில் இவ்வாறான
போராட்டங்களும் தொடராக
இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
லொறி மோட்டசைக்கிள் மோதல் – தாய் ,மகன் பலி
லொறி மோட்டசைக்கிள் மோதல் – தாய் ,மகன் பலி
எல்பிட்டி பகுதியில் பயணித்து கொண்டிருந்த லொறி ஒன்று மோட்டர் சைக்கிள் ஒன்றுடன்
மோதியதில் அந்த வண்டியை ஒட்டி சென்ற 21 வயது மகனும் ,47 வயது தாயும் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர்
விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதி தப்பி ஓடிய நிலையில் தற்போது கைது செய்ய பட்டு நீதி
மன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்
மகிந்தவுடன் ஆளும் கட்சி எம்பிக்கள் திடீர் சந்திப்பு
மகிந்தவுடன் ஆளும் கட்சி எம்பிக்கள் திடீர் சந்திப்பு
இன்று இலங்கை பாராளுமன்றில் பிரதமர் மகிந்தவுடன் ஆளும்கட்சி எம்பிக்கள் விசேட சந்திப்பு
ஒன்றை நடத்துகின்றனர்
இந்த சந்திப்பில் முக்கிய விடயங்கள் விவாதிக்க படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இலங்கையில் கொட்டல் அறைகள் வாடகை திடீர் அதிகரிப்பு
இலங்கையில் கொட்டல் அறைகள் வாடகை திடீர் அதிகரிப்பு
இலங்கையில் கொட்டல் அறைகளின் விலையில் திடீர் அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது
மூன்றாம் கொரனோ அலையின் பின்னர் இலங்கைக்கு நாள் தோறும் மூவாயிரம் உல்லாச
பயணிகள் வந்தடைகின்றனர் ,இதனால் இந்த கொட்டல் அறைகள் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது
கொலண்டில் இருந்து பொதியில் வந்த 4000 பரவச மாத்திரைகள்
கொலண்டில் இருந்து பொதியில் வந்த 4000 பரவச மாத்திரைகள்
நெதர்லாந்து நாட்டில் இருந்து பொதி ஒன்றினுள் அடைத்தவாறு சுமார் 4000 பரவச மாத்திரைகள் இலங்கை வந்தடைந்துள்ளது
இலங்கை சுங்க பிரிவினர் நடத்திய சோதனையில் மேற்படி மாத்திரைகள் சிக்கின ,இதன் மொத்த விலை சுமார் 26 மில்லியன் ரூபாய்கள் என தெரிவிக்க பட்டுள்ளது
யாழில் உள்ள முகவரி ஒன்றுக்கு இந்த பொதி வந்தடைந்துள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது
வெள்ளவத்தையில் இருந்து சுங்க பிரிவிற்கு வருகை தந்த நபர் ஒருவர் குறித்த பொதியை பெற்றபோது அவர் கைது செய்ய பட்டுள்ளார்
இலங்கையில் 44 மில்லியன் மின்சார பணம் செலுத்தாத மக்கள்
இலங்கையில் 44 மில்லியன் மின்சார பணம் செலுத்தாத மக்கள்
இலங்கையில் தொடரும் மின்வெட்டுக்கு இடையில் அந்த மின்சாரத்தை பயன்படுத்தி வந்த மக்கள்
,பயனாளர்கள்,தமது பயன்பாட்டு மின்சார பணத்தை செலுத்தாமை உள்ளதாக மின்சார வாரியம்
தெரிவித்துள்ளது
இவ்விதம் 44 மில்லியன் ரூபாய்கள் செலுத்த படாது உள்ளதாகவும் விரைவில் இவற்றை பெற்றுவிட நடவடிக்கை முன்னெடுக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
புதிய அதிவேக சாலை திறப்பு – குஷியில் மக்கள்
புதிய அதவேக சாலை திறப்பு – குஷியில் மக்கள்
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயில் இருந்து குருணாகல் வரையான பகுதி பொதுப் போக்குவரத்திற்காக எதிர்வரும் 20ம் திகதி திறக்கப்படும்.
முதல் கட்டத்தில் கண்டி – கொழும்பு மற்றும் கொழும்பு – குருநாகல் பஸ் வண்டிகளுக்கு பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும்
. இதேவேளை, நேற்று முன்தினம் நள்ளிரவிலிருந்து நேற்று நண்பகல் வரை குறித்த வீதியில் பயணித்த வாகனங்களுக்கு எந்தவொரு கட்டணமும் அறவிடப்படவில்லை.
திருமண வீட்டில் கழுத்து நெரித்து ஒருவர் கொலை
திருமண வீட்டில் கழுத்து நெரித்து ஒருவர் மரணம்
திருமண வைபவம் ஒன்றில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
திஸ்ஸமஹாராம, விரஹெல பிரதேசத்தில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று (16) இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட தகராறில்
உயிரிழந்தவரின் மூத்த மகளின் கணவரினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் லுனுகம்வெஹெர, படவிகம பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் திஸ்ஸமஹாராம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்னையில் இருந்து தலைகீழாக இறங்கும் ஆடு video
தென்னையில் இருந்து தலைகீழாக இறங்கும் ஆடு video
ஆடு ஒன்று தென்னையில் இருந்து தலைகீழாக இறங்கும் காணொளி ஒன்று
வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது
மேற்படி சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது
வீதியில் மிதந்த மனித சடலம்
வீதியில் மிதந்த மனித சடலம்
ஹட்டன் நகருக்கு குடிநீரை விநியோகிக்கும் ஹட்டன்- சிங்கமலை குளத்திலிருந்து இன்று (17)
காலை ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வனப்பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காகச் சென்ற நபர் ஒருவர், இந்த சடலத்தைக் கண்டு,
ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
எனினும் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் உறுதிப்படுத்தப்படவில்லை ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மணிக்கூடு ஆடர் செய்தவருக்கு வந்த ஆணுறை
மணிக்கூடு ஆடர் செய்தவருக்கு வந்த ஆணுறை
இணையத்தள நிறுவனத்தில் கைக்கடிகாரம் ஒன்றையை பதிவு செய்த நபருக்கு ஆணுறைகள் இரண்டு வந்துள்ளது. இதனையால் அதிர்ச்சியடைந்த நபர், இதுதொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார் இந்த சம்பவம் கேரளாவில் இடம்பெற்றுள்ளது.
இன்றைய நவீன உலகில் எல்லாமே நமது விரல் நுனியில் உள்ளது. முன்பெல்லாம் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமலான் போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் மக்கள் குடும்பத்துடன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவார்கள்.
இதற்காக தனியாக ஒரு நாளையே ஒதுக்குவார்கள். இந்த காலமெல்லாம் மலையேறி போய் விட்டது. இப்போது நாம் விரும்பிய பொருளை இருக்கும் இடத்திலேயே பெற்றுக் கொள்ளும் வசதி வந்து விட்டது.
எங்கு இருந்து என்ன பொருள் பதிவுசெய்தாலும், அந்த பொருள் நம்மை தேடி வந்து விடுகின்றன. இதற்காக எக்கச்சக்கமான இணையத்தள நிறுவனங்கள் கொட்டி கிடக்கின்றன. ஆனால் இப்படி
பொருட்களை முன்கூட்டியே செய்யும்போது ஏகப்பட்ட தவறுகள் நிகழ்ந்து வருகின்றன. சில சமயங்களில் பொதிகளில் பொருட்களே இருக்காது. சில நேரம் நாம் பதிவு செய்யப்பட்ட பொருளுக்கு பதிலாக வேறு பொருள் வரும்.
இந்த நிலையில் கேரளாவில் இணையளத்தளத்தில் கைக்கடிகாரத்தை கொள்வனவு செய்யவிருந்த நபருக்கு வந்த பொதியில், ஆணுறைகள் இரண்டு இருந்துள்ளன.
கேரள மாநிலம் எர்ணாகுளம் தட்டாங்குளத்தை சேர்ந்தவர் அனில்குமார்(32). இவர் இணையளத்தளத்தில் கைக்கடிகாரம் ஒன்றை பதிவு செய்துவிட்டு, அதற்காக ரூ.2,400-ஐ
முன்கூட்டியே செலுத்தினார். 15 ஆம் திகதி அவரது கைக்கு கைக்கடிகாரம் வந்து சேருமென இணையளத்தள நிறுவனம் கூறி இருந்தது.
குறிப்பிட்ட நாளில் அந்த இணையத்தள நிறுவனத்தில் இருந்து ஒரு பொதி வந்துள்ளது. நமது புதிய கைக்கடிகாரம் எப்படி இருக்கிறது? என்பதை அறிவதற்காக அனில்குமார் அந்த பொதியை ஆர்வமுடன் பார்த்தார். அப்போது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் பொதியில் இருந்து சிறிய அட்டை பெட்டியில் 2 ஆணுறைகள்(கொண்டம்) இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தண்ணீர் நிரப்பப்பட்ட நிலையில் ஒரு ஆணுறையும், மற்றொரு சாதாராண ஆணுறையாகவும் இருந்தது. அவற்றைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தே போனார். ”நான் கைக்கடிகாரம் தானே,
முன்பதிவு செய்தேன். எப்படி இது வந்தது?” என்று அவர் பொதியைக் கொண்டு வந்த நபரிடம் கேட்டார்.
அதற்கு அந்த நபர் ” இதில் எப்படி ஆணுறை (கொண்டம்) வந்தது என்று எனக்குத் தெரியாது. பொதியைக் கொண்டு சேர்ப்பது மட்டும்தான் எனது வேலை” என்று கூறினார்.
இதனை தொடர்ந்து அனில்குமார், கைக்கடிகாரத்தை பதிவு செய்த அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அவர்கள் உரிய பதிலை
அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் இதுபற்றி ஆலுவா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பொலிஸார், வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாரிய விபத்து மூவர் மரணம்
பாரிய விபத்து மூவர் மரணம்
இலங்கை அம்பாறை பகுதியில் காரும் லொறியும் மோதி விபத்தில் சிக்கியதில்
சம்பவ இடத்தில மூவர் பலியாகியுள்ளனர்
மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்
குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ?
இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ?
இலங்கையில் அடையாளங்காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரம இதுதொடர்பாக தெரிவிக்கையில் ,ஒமிக்ரோன் தொற்றாளர்களை அடையாளங்காண்பதற்காக நடத்தப்பட்ட
ஆய்வில் 85 விதமானவை ஓமிக்ரோன் தொற்றாளர்கள் என்பது உறுதி செய்யப்ட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதேவேளை கொழும்பு, காலி, மாத்தறை, கம்பஹா, கண்டி, திருகோணமலை மாவட்டங்களில் அதிகளவான ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ‘கொரோனா
ஒமிக்ரோன் பிறழ்வு வைரஸ்’ தொற்றாளர்கள் இருக்கலாமென்று ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார்.
182 பேருக்கு எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது அதில் 162 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டது. சுகாதார வழிமுறைகளை முறையாகப்
கடைப்பிடிக்குமிடத்து இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். கொழும்பு, காலி, மாத்தறை,
கம்பஹா, கண்டி, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்
மாடியிலிருந்து பாய்ந்தார் முதியவர்
மாடியிலிருந்து பாய்ந்தார் முதியவர்
வௌ்ளவத்தை பிரதேசத்திலுள்ள தொடர்மாடியொன்றின் 7ஆம் மாடியிலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் 7ஆம் மாடியிலிருந்து கீழ் நோக்கி பாய்ந்துள்ளதாகவும் இதன்போது பலத்த காயமடைந்த நிலையில், களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்துள்ளதாக வௌ்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் வௌ்ளவத்தையைச் சேர்ந்த 87 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை வௌ்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், குறித்த முதியவர் உளநல பாதிப்பால் இவ்வாறு தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
வீதியால் சென்றவரை தாக்கிய யானை
வீதியால் சென்றவரை தாக்கிய யானை
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை ஆற்றங்கரை பிரதான வீதியில் இன்று (16)
யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார் என வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.
கொண்டயன்கேணியில் இருந்து இன்று அதிகாலை இருவர் காயான்கேணி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற போது, மீராவோடை ஆற்றங்கரை பிரதான வீதியில் வைத்து யானை தாக்கியுள்ளது.
இதன்போது ஒருவர் தாக்கப்பட்டுள்ளதுடன், மற்றவர் தப்பியோடியுள்ளார். அவர்கள் பயணித்த சைக்கிளையும் யானை சேதப்படுத்தியுள்ளது.
வாழைச்சேனை, கொண்டயன்கேணியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கே.தஸீஸ்கரன் (வயது 25) என்பவரே யானையால் தாக்கப்பட்டு, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்துக் காணப்படும் இப்பிரதேசத்தில் யானை வேலி அமைக்காவிட்டாலும் வீதி மின் விளக்குகளைப் பொருத்தியாவது தமது பாதுகாப்பை
உறுதிப்படுத்துமாறு, வாழைச்சேனை பிரதேச சபையிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்கள் கண்டுபிடிப்பு
இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்கள் கண்டுபிடிப்பு
இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்களை அடையாளம் காண்பதற்கு நவீன
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தைத புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம ஆரம்பித்துள்ளது.
இந்தத் திட்டத்திற்குத் தேவையான உபகரணங்களை 35 இலட்சம் ரூபா செலவில் பிரான்சிலிருந்து
கொள்வனவுசெய்ய புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிவர்த்தி
சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிவர்த்தி
காஸ் சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக லிற்றோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் தற்போது விநியோகத்திற்கு தேவையான காஸ் சிலிண்டர்கள் உள்ளன. இதன் காரணமாக மக்கள் வரிசைகளில் காத்திருக்கத் தேவையில்லை. இதேவேளை, சிறிய அளவிலான
வர்த்தக நிலையங்களுக்கும் அடுத்த வாரத்தில் இருந்து தட்டுப்பாடின்றி காஸ் விநியோகிக்கப்படும் என்று நிறுவனம் அறிவித்திருக்கின்றது. கடந்த காலங்களில் நாளாந்த காஸ்
சிலிண்டர்களுக்கான கேள்வி சுமார் இரண்டு லட்சமாகக் காணப்பட்டது.
எனினும், தற்போது அந்த எண்ணிக்கை 90 ஆயிரமாக காணப்படுகின்றது. இதன்படி, நிறுவனம் தற்போது நாளாந்தம் 90 ஆயிரம் காஸ் சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கின்றது.
எனினும், இரண்டரைக் கிலோ எடைகொண்ட காஸ் சிலிண்டர்களைப் பகிர்ந்தளிப்பதில் சிறு தாமதம் நிலவுதாகவும் லிற்றோ காஸ் நிறுவனம் அறிவித்திருக்கின்றது.
வாக்குறுதிகளை 3 வருடத்தில் நிறைவேற்றுவோம் கோட்டா உறுதி
வாக்குறுதிகளை 3 வருடத்தில் நிறைவேற்றுவோம் கோட்டா உறுதி
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயில் இருந்து குருணாகல் வரையான பகுதி மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.
இது தொடர்பான நிகழ்வு நேற்று (15) ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரின் தலைமையில் குருணாகல் – யக்கபிட்டியவில் நடைபெற்றது.
சமய அனுஷ்டானங்களுடன் நிகழ்வு ஆரம்பமானது. மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயில் இருந்து குருணாகல் வரையான பகுதி 41 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். இது ஐந்து இடைமாறல் பகுதிகளைக் கொண்டது. மீரிகம, நாக்கலாகமுவ. தம்பொக்க, குருணாகல், யக்கபிட்டிய ஆகிய இடங்களில் இடைமாறல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நான்கு ஒழுங்கைகளைக் கொண்டதாக இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்து 5 வருட காலப்பகுதிக்குள் நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்த சகல விடயங்களையும் எதிர்வரும் 3 வருட காலப்பகுதிக்குள் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இந்நிகழ்வின் போது உறுதியளித்தார். இதற்கு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பும் தேவை. மக்களுக்காக சேவையாற்றுவதற்கே தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்ததாகவும் ஜனாதிபதி கூறினார்.
நாட்டின் அபிவிருத்திக்கு முறையான போக்குவரத்துக் கட்டமைப்பு அவசியமாகும். இதன்படி அதிவேக நெடுஞ்சாலைகளையும் கிராமிய வீதிகளையும் தற்போதைய அரசாங்கம் அபிவிருத்தி செய்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இந்த நிகழ்வின் போது கூறினார்.
அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிக்கும் போது விமர்சனங்களை எதிர்கொண்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தடைப்பட்டன. எனினும்இ தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அதிவேக நெடுஞ்சாலைகளின் அபிவிருத்திப் பணிகளை மீண்டும் ஆரம்பித்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார். மக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கு உரிய தீர்வு வழங்குவதற்கு ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் பொறுப்புடன் பணியாற்றுவதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஆற்றில் மிதந்து வந்த மனித தலை – அதிர்ச்சியில் பொலிஸ்
ஆற்றில் மிதந்து வந்த மனித தலை – அதிர்ச்சியில் பொலிஸ்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்தின் கீழுள்ள ஆற்றில் இன்று 3 மணியளவில் சடலமொன்றில் தலை மிதந்ததாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய
தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.
ஓட்டமாவடிப் பாலத்தினால் நபரொருவர் சென்று கொண்டிருந்த போது ஆற்றில் சடலமொன்றின் தலை மிதந்த நிலையில் காணப்படுவதை கண்டுள்ள நிலையில், கிரான் பகுதியில் ஆற்றில்
காணாமல் போன மாணவர்ளின் சடலமோ என்ற சந்தேகத்தில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த நபரின் தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸாரின் உதவியுடன், கல்குடா சுழியோடிகள் இரண்டு படகுகளில் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆற்றில் மிதந்தது சடலமா, அல்லது ஏதும் கழிவுப் பொருட்களா என பொலிஸார் மற்றும்
சுழியோடிகள் சந்தேகத்தோடு ஆற்றில் பல்வேறு பகுதிகளிலும் தேடிக் கொண்டிருப்பதை காண
முடிவதுடன், இதனை கேள்வியுற்ற மக்கள் ஓட்டமாவடி பாலத்தில் குவிந்து காணப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.






















