Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
வங்கி வட்டி வீதம் அதிகரிப்பு – மக்களை குஷிப்படுத்த நடவடிக்கை
வங்கி வட்டி வீதம் அதிகரிப்பு – மக்களை குஷிப்படுத்த நடவடிக்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து தற்போது வங்கியில்
பணம் நீண்ட நாள்கணக்கில் வைப்பு புரிந்தால் அதற்கு 13,50 வீதம் வட்டி வழங்க படுகிறது
அதே போல அரசு வழங்கும் வட்டிக்கு வீதம் 14.50 ஆக அதிகரித்துள்ளது ,இதன்
மூலம் வீழ்ந்த பொருளாதாரத்தை நிலை நிமிர்த்த அரசு முயன்று வருகின்றமை குறிப்பிட தக்கது
நாடு தழுவிய நிலையில் மக்கள் போரராட்டம் – திணறும் கோட்டா அரசு
நாடு தழுவிய நிலையில் மக்கள் போரராட்டம் – திணறும் கோட்டா அரசு
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் நாடளாவிய ரீதியில் பலத்த எதிர்ப்பு போராட்டங்களை தொடராக நடத்திய வண்ணம் உள்ளனர்
கோட்டாவே வீட்டுக்கு போ என்ற வாசகங்கள் தொடர்ந்து ஒலித்த வண்ணம் உள்ளது
எனினும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது கோட்டா அதிகாரத்தை விட்டு செல்ல மறுத்து வருகிறார்
சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் காலி ,கொழும்பு,அம்பன்தோட்டை என விரிந்து
கொழும்பின் பல பகுதிகளும் இந்த போராட்டம் முன்னெடுத்து செல்ல படுகிறது
மக்களின் தொடர் போராட்டங்கள் அதிகாரித்து செல்லும் நிலையில் பலத்த நெருக்கடியில் ஆளும் அரசு சிக்கியுள்ளது
பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை பீதியில் கிராமம்
பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை பீதியில் கிராமம்
இலங்கை தலவாக்கலை பகுதியில் தனிமையில் வசித்து வந்த 84 வயது மூதாட்டி
கழுத்தை நெரித்து கொன்று அவரது காதணியை திருடர்கள் திருடி சென்றுள்ளனர்
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தனிமையில் உள்ளதை அறிந்த திருடர்கள் அவரது வீட்டுக்கு சென்று இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்
குறித்த கொலையினை புரிந்த திருடர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
தமிழ்நாட்டில் ‘ஈழத்தமிழர்க்கு விடியல்’ மாநாடு
தமிழ்நாட்டில் ‘ஈழத்தமிழர்க்கு விடியல்’ மாநாடு : பேராளர்கள் பங்கெடுப்பு ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்து !!
தமிழ்நாட்டில் ஈழத்தமிழ்களுக்கான அரசியல் சக்தியை திரட்டுவதன் ஊடாக, இந்திய அரசின் அயலுறவுக் கொள்கையில் காத்திரமான மாற்றத்தினை கொண்டு வரமுடியும் என திடமாக நம்புகின்றோம் என தெரிவித்துள்ள
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழ்நாட்டில் இடம்பெறவுள்ள ஈழத்தமிழர்க்கு விடியல் மாநாடு இதற்கான செயல்முனைப்பினை முன்னெடுக்க கோரியுள்ளது.
ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைத்திருக்கும் ‘ஈழத்தமிழர்க்கு விடியல்’ தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு, ஏப்ரல் 9ம் நாள் சனிக்கிழமை சென்னையில் இடம்பெறவுள்ளது.
ஈழத்தமிழர் தோழமைக் கட்சிகள், அமைப்புக்களைச் சேர்ந்த திரு.பழ.நெடுமாறன், திரு.வைகோ, திரு.தொல் திருமாவளவன், திரு.பொன்னையன், திரு.கே.எஸ்.இராதகிருஸ்ணன், தோழர் அ.சா.உமர் பாருக்
தமிழ்நாட்டில் ‘ஈழத்தமிழர்க்கு விடியல்’ மாநாடு
, தோழர் திருமுருகன் காந்தி, திரு.தி.வேல்முருகன், தோழர் கொளத்தூர் மணி, திரு.உ.தனியரசு, தோழர் கி.வெங்கட்ராமன், தோழர் சுப.உதயகுமார், தோழர்
மீ.த.பாண்டியன், போராசிரியர் ராமு மணிவண்ணன், தோழர் சிங்கராயர், தோழர் செந்தில், திரு.இலயோலா மணி, தோழர் கு.இராமகிருட்ணன், தோழர்
தியாகு, திரு.பாரிமைந்தன், திரு.அய்யாத்துரை தமிழினியன், திரு.அரவிந்த ஆகியோர் இம்மாநாட்டில் பங்கெடுக்கின்றனர்.
இலங்கைத்தீவினை மையப்படுத்திய இந்தியப் பெருங்கடல் புவிசார் அரசியல் போட்டிக்களம் கூர்மையாகி வரும் இவேளையில், நடைபெறும் இம்மாநாடு
முக்கியமானதொன்றாக உள்ளது எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழ்நாட்டினை மையப்படுத்தி ஐந்து முக்கிய கோரிக்கைகளையும் மாநாட்டு பேராளர்களை நோக்கி முன்வைத்துள்ளது.
⦁ தமிழ்நாடு, ஈழத்தமிழ் தாயகம், புலம் என மூன்று புள்ளிகளுக்கும் அமைப்புக்களுக்கும் இடையில் ஓர் உறவினை உருவாக்கி, ஈழவிடுதலை
சார்ந்த்து முத்தரப்பும் இணைந்து செயற்படுவதற்கான ஒர் தளத்தினை உருவாக்க வேண்டுகின்றோம்.
⦁ சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு இந்தியா வழங்குகின்ற உதவிகள், தொடர்பில் தமிழ்நாட்டு அரசினை ஓர் தரப்பாக ஏற்றுக் கொண்டு
அவர்களது கருத்துக்களையும் உள்வாங்கி, ஈழத்தமிழ் நலன்சார்ந்த முன்உத்தரவாதத்துடன் நிதியுதவினை இந்திய ஒன்றிய அரசு வழங்க அழுத்தம் கொடுக்க வேண்டுகிறோம்.
⦁ ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் தமிழ்மக்கள் அமைதிவழியில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், போரின்
தமிழ்நாட்டில் ‘ஈழத்தமிழர்க்கு விடியல்’ மாநாடு
ஓய்வுக்கு பின்னரும் தனது இராணுவத்துக்கு கட்டுக்கடங்காத வகையில் சிறிலங்கா செலவிட்டு வருகின்றமை இந்தியாவை நோக்கியதாகவே கருதவேண்டியுள்ளது.
பொருளதார நெருக்கடியில் இலங்கை மக்கள் சந்தித்து வருகின்ற வாழ்வாதார நெருக்கடிகளுக்கு தோழமையுடன் உதவிசெய்யும் நோக்கில் சிறிங்காவுக்கு
மனித நேய உதவிகளை வழங்கி வரும் இந்தியா, சிறிலங்காவின் இந்த இராணுவ செலவீனங்கள் எதற்காக என்ற கேள்வியினை எழுப்ப வேண்டும்.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தேசத்தில் இருந்து இராணுவத்தினை முற்றாக விலக்குவதற்கான அழுத்தத்தினை இந்தியா கொடுப்பதற்கான தூண்டுதலை
தமிழக மக்களும், தமிழக அரசும், கட்சிகள், அமைப்புக்கள் முன்வைக்க வேண்டுகிறோம்.
⦁ அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு, சர்வதேச விசாரணை ஆகிய விடயங்கள் தொடர்பில் தமிழ்நாட்டு சட்டமன்றில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்களுக்கு செயலாக்கம் கொடுக்கும் வகையில், தமிழ்நாட்டு அரசுக்கு உந்துதலைக் கொடுத்து, அதற்கான உயர்மட்ட குழுவொன்றினை நியமிக்க கோர வேண்டுகிறோம்.
⦁ எதிர்வரும் செப்ரெம்பர் மாதம், தமிழினப்படுகொலைக்கான சிறிலங்காவின் பொறுப்புக்கூறலுக்கு, சர்வதேச நீதிப்பொறிமுறையினை நோக்கியதான ஓர்
தீர்மான வரைவொன்றினை தமிழ்நாட்டு அரசு சார்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் முன்வைப்பதற்கான தூண்டுதலை ஏற்படுத்த வேண்டுகின்றோம்.
என கோரிக்கைகள் அமைந்துள்ளதோடு, மேலும் தனது வாழ்தறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஈழவிடுதலைப் போராட்ட தடத்தில், தமிழ்நாட்டின் பங்களிப்பு என்பது மிக மிக முக்கியமானது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் என விரிந்து பரந்த இத்தோழமையும் உறுதுணையும் ஈழவிடுதலைப்
போராட்டத்துக்கான உந்துசக்திகளில் ஒன்றாக இருந்துள்ளது.
2009ம் ஆண்டு பெரும் இனவழிப்பொன்றின் ஊடாக தமிழர் தேசம் சிங்கள அரசினால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஈழத்தமிழர் தேசத்தின்
நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான போராட்டத்துக்கு உலகத்தமிழர்களின் உறுதுணை என்பது முக்கியமானதாக காணப்படுகின்றது.
ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் தமிழர்களுக்கான அரசியல்வெளி முழுமையாக இல்லாது போயுள்ள நிலையில், தாயகம், தேசியம், அரசியல் இறைமை என்ற ஈழத்தமிழ் மக்களின் அரசியல்
பெருவிருப்பின் வடிவமாக இருந்த நடைமுறைத் தமிழீழ அரசு அழிக்கப்பட்ட நிலையில், அதன் தொடர்சியாக தோற்றம் பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை வலுப்படுத்தி, அதன்வழி சுதந்திரமும் இறைமையும்
கொண்டு தமிழீழத்தினை வென்றைடைய, உலகத்தமிழ் மக்களின் பலமே பெரும் சக்தியாக காணப்படுகின்றது. குறிப்பாக இப்பலத்தில் தமிழ்நாட்டின் வகிபாகம் என்பது முக்கியமானது.
தமிழ்நாட்டில் ஈழத்தமிழ்களுக்கான அரசியல் சக்தியை திரட்டுவதன் ஊடாக, இந்திய ஒன்றிய அரசின் அயலுறவு கொள்கை நிலைப்பாட்டில் காத்திரமான
மாற்றத்தினை கொண்டு வரமுடியும் என திடமாக நாம் நம்புகின்றோம் எனத் தெரிவித்துள்ளது.
இருவர் குத்திக் கொலை – எகிறும் படுகொலைகள்
இருவர் குத்திக் கொலை – எகிறும் படுகொலைகள்
இலங்கை செவனகலை ,மற்றும் கதிர்காம பகுதியில் இருவர் குத்தி
கொலை செய்ய பட்டுள்ளனர்
இருவேறு சம்பவங்களும் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறை அடுத்தே
இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இலங்கையில் அமெரிக்கா டொலர் ஒன்றின் விலை 321.49 ஆக அதிகரிப்பு
இலங்கையில் அமெரிக்கா டொலர் ஒன்றின் விலை 321.49 ஆக அதிகரிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ற்போது
நாட்டில் ஒரு அமெரிக்கா டாலரின் விற்பனை விலை 321.49 ஆக அதிகரித்துள்ளது
மேலும் இது ஐநூறு ரூபாவை எட்டி பிடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது
நிதி அமைச்சராக சாணக்கியன் வருகிறார் – தொங்கும் பதாகை
நிதி அமைச்சராக சாணக்கியன் வருகிறார் – தொங்கும் பதாகை
இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கமாக விளங்கும் சாணக்கியன் இலங்கையின்
புதிய நிதி அமைச்சராக பதவி ஏற்கிறார் என கல்லடி பாலத்தின் அருகே பதாகை ஒன்று தொங்குகிறது
வருகிறது நம்பிக்கியில்லா பிரேரணை -தள்ளாடும் கோட்டா அரசு
வருகிறது நம்பிக்கியில்லா பிரேரணை -தள்ளாடும் கோட்டா அரசு
இலங்கையில் ஆளும் கோட்டா ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள்
போராட்டம் நாடதி வருகின்றனர்
இவ்வேளை மக்களின் உணர்வூகளுக்கு மதிப்பளித்து நாட்டில் நிலவும்
நிலைகளுக்கு தீர்வு காணவேண்டும் தவறின் ஆளும் அரசுக்கு எதிராக
நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரவேண்டும் என எதிர்க்கட்சிகள்
வேண்டுதல் விடுத்துள்ளனர்
முன்னாள் மதியவங்கி ஆளுநர் நாட்டை விட்டு செல்ல நீதிமன்றம் தடை -சிக்கலில் கோட்டா
முன்னாள் மதியவங்கி ஆளுநர் நாட்டை விட்டு செல்ல நீதிமன்றம் தடை -சிக்கலில் கோட்டா
முன்னாள்
மத்திய வாங்கி ஆளுநர் Ajith Nivard நாதரை விட்டு செல்ல எதிர்வரும்
பதினெட்டாம் திகதிவரை தடை விதிக்க பட்டுள்ளது
நாடு பெரும் பொருளாதாரா சீரழிவை சந்திக்க இவரே காரணமாக இருந்தார்
என தெரிவித்து நீதிமன்றில் வழக்கு தொடர பட்டுள்ளது
இவ்வேளையே இந்த இடைக்கால தடை விதிக்க பட்டுள்ளது ,இவர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டால் ஆளும் மகிந்தா
,கோட்டா சகோதர்கள் பெரும் நெருக்கடியில் சிக்குவார்கள் என தெரிவிக்க படுகிறது
வீதி விபத்தில் – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மரணம்
வீதி விபத்தில் – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மரணம்
இலங்கை Thanamalwila பகுதியில் ஆட்டோ மற்றும் டபிள் கப்
இரண்டு மோதியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்
மேற்படி விபத்து தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இலங்கையில் நாள் தோறும் வீதி விபத்தில் சிக்கி ஆறுக்கு மேற்பட்டவர்கள்
பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் – 2022 – மெல்பேர்ண் (அறிவித்தல்)
தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் – 2022 – மெல்பேர்ண் (அறிவித்தல்)
தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் – 2022 – மெல்பேர்ண் (அறிவித்தல்)
பாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகரில் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் 19-03-1988 முதல் 19-04-1988 வரையான
முப்பதுநாட்கள் உண்ணாநோன்பிருந்து ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 34வதுஆண்டு நினைவுநாளும் தாயக
விடுதலைப் போராட்டத்தில் பின்புலமாக உழைத்து சாவைத் தழுவிக்கொண்ட நாட்டுப்பற்றாளர்களையும் நினைவு கூருகின்ற நாட்டுப்பற்றாளர்
நினைவுநாள் இவ்வாண்டும் விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேர்ணில் மிகவும்
உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
குடும்பவாழ்வியலில் ஈடுபட்டிருந்தபோதும் இடர்மிகுந்த நெடிய தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் உறுதுணையாக உழைத்து உயிர்நீத்த
நாட்டுப்பற்றாளர்களை நினைவுகூருவது ஒவ்வொரு ஈழத்தமிழனதும் தலையாய கடமையாகும்.
அவுஸ்திரேலியாவில் தமிழ்த் தேசிய விடுதலைப்பயணத்தில் முன்னோடிகளாகத் திகழ்ந்து உயிர்நீத்து தமிழீழத் தேசியத்தலைவர்
அவர்களால் அதிஉயர்விருதான மாமனிதர் விருது வழங்கிக்கெளரவிக்கப்பட்ட மாமனிதர்களான தில்லை ஜெயக்குமார் மற்றும் பேராசிரியர் எலியேசர்
நாட்டுப்பற்றாளர் மகேஸ்வரன் ஆகியோர்களையும் இந்நாளில் நினைவுகூருவது இந்நினைவுநாளின் சிறப்பம்சமாகும்.
மேலும் ஆண்டு தோறும் பள்ளிமாணவர்களுக்கிடையில் நடாத்தப்படும் அன்னை பூபதி நினைவுதின பொதுஅறிவுப் போட்டி இவ்வாண்டும்
நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுஅறிவுப் போட்டியில் பங்குகொள்ள விரும்புபவர்கள் குழுவாகவோ தனிநபர்களாகவோ இணைந்துகொள்ள
இருப்பின் 20 / 04 / 2022 இற்கு முன்னர் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது சுதந்திரமான வாழ்வுக்காக முப்பதுநாட்கள் தியாகவேள்வியில் தன்னை உருக்கி தன்னுயிர் ஈந்த தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களையும்
நாட்டுப்பற்றாளர்களையும் மாமனிதர்களையும் நினைவுகூருகின்ற இப்புனிதமான நிகழ்வில் தமிழ்த் தேசியச்செயற்பாட்டாளர்கள்,
பள்ளிமாணவர்கள், பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொள்ளு-மாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இடம்: St John’s Catholic Church, 52 Yarra St, Heidelberg VIC 3084.
காலம்: 24-04-2022. ஞாயிற்றுக்கிழமை.
நேரம்: மாலை 6.00 மணிமுதல் 8.00மணிவரை.
மேலதிக தொடர்புகளுக்கு: 0433 002 619 & 0406 429 107.
சிட்னி நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் – 2022 அறிவித்தல்
காலம்: 10-04-2022 Sunday 4pm
நிகழ்விடம்: Reg Byrne Community Centre, Fyall Ave, Wentworthville, NSW 2145
தொடர்புகளுக்கு: 0424 757 814, 0401 842 780
இவ்வண்ணம்,
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – சிட்னி
மகிந்தா அலுவலகம் முற்றுகை – உக்கிரமாகும் மக்கள் போராட்டம்
மகிந்தா அலுவலகம் முற்றுகை – உக்கிரமாகும் மக்கள் போராட்டம்
மகிந்தா அலுவகம் தற்போது போராட்ட காரர்களினால் சுற்றிவளைக்க பட்டு
,உடனே பதவி விலகும் படி மக்கள் கோரிக்கை விடுத்தது கோசம் எழுப்பி வருகின்றனர்
எங்களை வாழ விடுங்கள் சுடு காட்டுக்கு அனுப்பாதீர்கள் என்ற கோசமும் அங்கே முழங்க படுகிறது
அழகான இலங்கையை சுரண்டி கொள்ளையடித்து ஏப்பம் விட்ட மகிந்தா
குடும்பத்தினால் இன்று இலங்கை இந்த சீரழிவை சந்தித்துள்ளது என்பது மக்கள் பேச்சாக உள்ளது
மக்கள் போராட்டங்களுக்கு தலை வணங்கி பதவி திறப்பதை ஆளும் இனவாத கொலைகாரர்கள் மறுத்து வருகின்றதால் ,
மக்கள் ஆத்திரம் உற்ற நிலையில், இந்த போர் உக்கிரம் பெற்றுள்ளது
இலங்கையில் வங்கிகள் பூட்டு – பீதியில் மக்கள்
இலங்கையில் வங்கிகள் பூட்டு – பீதியில் மக்கள்
இலங்கையில் எரிபொருள் காரணமாக மின்சார பாவனை தடை பட்டுள்ளது
இதன் காரணாமாக முக்கிய சில வங்கிகள் திறப்பு குறைக்க பட்டுள்ளது
மின்சார பாவனையை காரணம் காண்பித்து குறித்த வங்கிகள் பயன்பாட்டு
நேரத்தை குறித்துள்ளது மக்கள் மத்தியில் அசத்தை ஏற்படுத்தியுளளது
தனியார் வங்கிகள் நஷ்டம் என தெரிவித்து மூடி விடும் நிலை ஏற்படலாம்
என்பதால் மக்கள் வங்கிகள் நோக்கி படையெடுத்து வருகின்றனர்
மத்திய வங்கியின் ஆளுநராக புதியவர் தெரிவு
மத்திய வங்கியின் ஆளுநராக புதியவர் தெரிவு
இலங்கையின் நிகழ்கால பொருளாதார நெருக்கடி வேளையில் புதிய ஆளுநர்
ஒருவர் தெரிவு
செய்ய படவுள்ளார்
இவ்விதம் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவு செய்ய படுவார் என தெரிவிக்க படுகிறது
பிரபாகரன் இவர்களை கொன்றே இயக்கத்தை வளர்த்தாராம்
பிரபாகரன் இவர்களை கொன்றே இயக்கத்தை வளர்த்தாராம்
இந்த போராட்டங்கள் உண்மையானவை, ஆனால், அந்தப்
போராட்டங்களுக்குப் பின்பாக யாரும் இல்லையென நினைக்கவேண்டாம்.
சில சக்திகள் இருக்கின்றன என ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்தார்.
ஜே.வி.பியின் புரட்சியில் முதலில் கொல்லப்பட்டவர்கள், நந்தசேன ஆவார்.
ஜே.வி.பியின் முக்கியஸ்தரான அவர், அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கொல்லப்பட்டார்.
இந்நிலையில், பிரபாகரன் பலமடைந்து கொண்டு வந்தபோது,
அமிர்தலிங்கத்தை கொன்றார். தங்களுடைய அணிக்குள் வளர்ந்துவருவோரே முதலில் கொல்லப்பட்டனர்.
பிள்ளைகள் வெளியேறினர் கோபம், அம்மாமார்கள் வீதிக்கு இறங்கினர் கோபம்,
அதனை ஆயுத போராட்டமாக மாற்றிவிடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றம் நுழைந்து விட்டு ஓடிய கோட்டா
பாராளுமன்றம் நுழைந்து விட்டு ஓடிய கோட்டா
இலங்கை பாராளுமன்றம் இன்று கூடிய பொழுது சற்று நேரம் தங்கி இருந்த
கோட்டா அங்கிருந்து வெளியேறினார்
இவருக்கு ஆதரவாகவும் ,எதிராகவும் அங்கு கோஷங்கள் எழுப்ப பட்டண
இதனால் பாராளுமன்றம் குழப்பதில் காணப்பட்டது ,ஆட்சியில் இருந்து விலக
கோட்டா தொடர்ந்து மறுத்து
வருகின்றமை குறிப்பிட தக்கது
கமராக்கள் நிறுத்தி வைக்கவில்லை – விமான நிலையம் அறிக்கை
கமராக்கள் நிறுத்தி வைக்கவில்லை – விமான நிலையம் அறிக்கை
இலங்கை கட்டு நாயக்க விமான நிலையத்தில் உள்ள கமாராக்கள் நிறுத்தி
வைக்க பட்ட பின்னரே அங்கிருந்து அவன்கார்ட் தலைவர் மற்றும் முக்கிய
மகிந்த குடும்பத்தினர் தப்பித்தனர் ர் என தெரிவிக்க பட்ட நிலையில் அவை
வெறும் போலி பரப்புரைகள் எனவும் அவ்விதமான செயல் பாடுகளில் விமான நிலையம் ஈடுபடவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது
சமுக வலைத்தளங்களில் போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக
சொல்வதெல்லாம் உண்மை பாணியில் விமான நிலையம் தெரிவித்துள்ளது
இலங்கை செல்லும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
இலங்கை பயணம் செய்யும் பயணிகளுக்கான தமது பிரஜைகளுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஆலோசனை விடுத்துள்ளது.
இதன்படி, இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்க பிரஜைகள், நாட்டில் நடைபெற்று வரும் சிவில் போராட்டங்கள் மற்றும் வன்முறைச் செயல்கள்
குறித்து முழுமையாக அறிந்து கொள்ளுமாறும், முடிந்தவரை அவ்வாறான இடங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
COVID-19 , எரிபொருள் மற்றும் மருந்து தட்டுப்பாடு காரணமாக
இலங்கைக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தமது
பிரஜைகளுக்கும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஆலோசனை விடுத்துள்ளது.
கோட்டாவை பதவி விலகும்படி பவுத்த பீட முக்கியஸ்தர் கோரிக்கை
கோட்டாவை பதவி விலகும்படி பவுத்த பீட முக்கியஸ்தர் கோரிக்கை
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்து பறக்கும்
நிலையில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனே மகிந்தா ,கோட்டா பதவி விலக வேண்டும் என
பவுத்த பீடாதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பதவி விலக மறுத்து மகிந்த கோட்டா அடம் பிடித்து வரும் நிலையில்
வரும் நாட்களில் மக்களின் போராட்டம் அதிகமாக இடம் பெறுமென
ஏதிர்பார்க்க படுவதுடன் ,மகிந்த குடும்பத்தினர் வீடுகள் சுற்றிவளைக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது
இலங்கைக்கு பெட்ரோல் ,டீசல் வழங்கி அதிரடி காட்டிய இந்தியா
இலங்கைக்கு பெட்ரோல் ,டீசல் வழங்கி அதிரடி காட்டிய இந்தியா
இந்திய கடந்த 24 மணித்தியாலத்தில் 2,70,000 மர்டிக் தொன் டீசல் மற்றும் பெட்ரோலை
வழங்கியுள்ளது
சீனாவுடன் ஒட்டி உறவாடி இந்தியாவை பகைத்து கொண்டு ஆணவத்தில்
ஆடிய இலங்கை தற்போது இந்தியாவுக்கு நல்ல பிள்ளையாக தன்னை காட்டி கொள்கிறது
முதுகில் குத்திய கோட்டா ,மகிந்த அரசுகளை மீளவும் மோடி அரசு
நம்புகின்றமை கோமாளித்தனம் என்பது குறிப்பிட தக்கது











