Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
200 மில்லியன் பணத்தை திருப்பி தாருங்கள் கெஞ்சும் பங்களாதேஸ்
200 மில்லியன் பணத்தை திருப்பி தாருங்கள் கெஞ்சும் பங்களாதேஸ்
பங்களாதேஷிடம் இருந்து இலங்கை 200 மில்லியன் டொலர் பணத்தை கடனாக பெற்றது .
இவ்வாறு பெற்று கொண்ட பணத்தினை மீள செலுத்திட முடியா நிலையில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது .
எதிர் வரும் செப்டம்பர் மாதம் 200 மில்லியன் டொலர் பணத்தினை இலங்கை தமக்கு திருப்பி செலுத்திவிடும் என பங்களாதேஸ் தெரிவித்துள்ளது .
கொடுத்த கடன் பணத்தை மீள வாங்கிட முடியா நிலையில் பங்களாதேஸ் பெரும் பொறியில் சிக்கி கெஞ்சும் பரிதாப நிலைக்கு சென்றுள்ளது .
இலங்கை வந்துள்ள பாங்கி-மூன், மகிந்தவை சந்தித்து 2009 மே கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த வேண்டும்
மனோ கணேசன்
இலங்கை வந்துள்ள பாங்கி-மூன், மகிந்தவை சந்தித்து 2009 மே கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த வேண்டும்
மனோ கணேசன்
இலங்கை வந்துள்ள முன்னாள் ஐநா செயலாளர் பாங்கி-மூன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கட்டாயம் சந்தித்து, தான் கடைசியாக போர் முடிந்த சில நாட்களில் இலங்கை வந்து, தமிழினம் எதிர்கொண்ட
போரழிவுகளை பார்த்து விட்டு, ஊர் திரும்பும் போது அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுகள் நடத்தி, இருவரும் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த கோருகிறேன்.
மே 24, 2009 அன்று வெளியிடப்பட்ட அந்த கூட்டறிக்கையில் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தான் தமிழ் கட்சிகளுடன் பேச்சு நடத்தி 13ஐ அமுல் செய்து, அதை மென்மேலும் மேம்படுத்த (13+) உடன்படுவதாகவும்,
அதேபோல் சர்வதேச மனித உரிமை நியமங்களை ஏற்று இலங்கையில் கடை பிடிப்பதாகவும் உலக மன்றமான ஐநாவுக்கு, அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியான ஐநா செயலாளர் பாங்கி-மூன், என்ற தனக்கு உறுதி
இலங்கை வந்துள்ள பாங்கி-மூன், மகிந்தவை சந்தித்து 2009 மே கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த வேண்டும் மனோ கணேசன்
அளித்ததை, இன்றைய அரசின் பிரதான கட்சியான பொதுஜன முன்னணியின் அதிகாரபூர்வ தலைவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், அவரது
எம்பிகளுக்கும், இவர்களின் பின்னால் இன்னமும் நிற்கும் சில பெளத்த பிக்குகளுக்கும் ஞாபகப்படுத்த வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,
இன்று, பொறுப்பை நிறைவேற்றாத தவறுகை செய்து, குற்றவாளி கூண்டில் நிற்பது அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மட்டுமல்ல. ஒட்டு மொத்த ஐநா அமைப்பும் என நான் நம்புகிறேன். இவர்கள் அனைவரும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.
பாங்கி-மூன் – மகிந்த கூட்டறிக்கையில், கையெழுத்து இட்ட ஒரு தரப்பு வார்த்தை தவறுமானால், அடுத்த தரப்பு அதை தட்டிக்கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதன் பெயர்தான் கூட்டறிக்கை. ஆனால், அதை ஐநா செய்யவில்லை. அது மட்டுமல்ல, போர் நிகழ்ந்த போது, வன்னியில் இருந்த ஐநா அலுவலகத்தை இலங்கை அரசு சொன்னது, என்பதற்காக மூடி விட்டு நாட்டை விட்டு
வெளியேறிய அன்றைய ஐநாவின் முடிவுக்கு முன்னாள் ஐநா செயலாளர் இந்த பாங்கி-மூன் பொறுப்பேற்க வேண்டும்.
அதனால்தான், இலங்கையின் இறுதி யுத்தம், சாட்சியமில்லா யுத்தமாக நிகழ்ந்தது. இன்று போர் முடிந்து ஏறக்குறைய 14ம் ஆண்டுகள் ஓடுகின்றன. முன்னாள் ஐநா செயலாளர் இலங்கை போர் தொடர்பில் அன்று உலக
மாமன்றமான ஐநா சபை விட்ட தவறை இன்றாவது ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று அவர் அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் கூட அவர் அதை பற்றி பேச வேண்டும். அது உலக அளவில் எடுபடும். அன்று இலங்கை யுத்தம் தொடர்பாக
ஐநா விட்ட தவறு தொடர்பில் அன்றே ஐநா சபைக்குள் ஒரு உள்ளக அறிக்கை தயார் செய்யப்பட்டதை நான் அறிவேன். அது பற்றி, முன்னாள் ஐநா
செயலாளர் பாங்கி-மூன் இனியாவது பகிரங்கமாக பேச வேண்டும். இலங்கையின் ஊடகவியலார்கள் பாங்கி-மூனை கண்டு இது பற்றி கேள்வி எழுப்ப வேண்டும்.
இலங்கை வந்துள்ள முன்னாள் ஐநா செயலாளர் பாங்கி-மூன்,
சந்திக்கும் நபர்களின் நிகழ்ச்சி நிரலில் நான் இல்லை. நான் அவரை கண்டால் இதை அவர் முகத்துக்கே சொல்லி கேட்க விரும்புகிறேன்.
பிள்ளைகளை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை
பிள்ளைகளை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை
இலங்கை அரநாயக்க ப்குதியில் 6 வயது மற்றும் 9 வயது பிள்ளைகளை கொன்று விட்டு தந்தை தானும் தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளார் .
தூக்கிட்டு தற்கொலை செய்தவர் 33 வயதுடைய தந்தை என தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது.
பங்கிமூன் இலங்கை வந்தடைந்தார்
பங்கிமூன் இலங்கை வந்தடைந்தார்
இலங்கைக்கு முன்னாள் ஐநா செயலர் பங்கிமூன்
இலங்கை வந்தடைந்துள்ளார் .
இவர் இலங்கை பசுமை அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக கலந்துரையாட வந்துள்ளார் என தெரிவிக்க பட்டுள்ளது .
புலிகளையும் தமிழர்களையும் அழிக்கும் பொழுது இதே பங் கீமூன் வேடிக்கை பார்த்தவர் என்பது குறிப்பிட தக்கது.
ரணிலுக்கு நான் செலியூட் அடிப்பேன்
ரணிலுக்கு நான் செலியூட் அடிப்பேன்
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு “செலியூட்” அடிப்பதில், தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பீல்ட் மார்ஷல், ஒரு ஜனாதிபதிக்கு மட்டுமே “செலியூட்” அடிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து அர்ப்பணிப்புகளை முன்னெடுப்பேன் என தெரிவித்த பொன்சேகா,
தான் நாட்டை நேசிக்கும் நபர் எனவும் குறிப்பிட்டார்.
சீமான் சொன்னதை சட்டமாகும் உக்கிரைன் ஆமி
சீமான் சொன்னதை சட்டமாகும் உக்கிரைன் ஆமி
உக்கிரைன் இராணுவத்தின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் ,இராணுவத்தினருக்கு
வழங்கும் உணவில் பணத்தை கொள்ளையடித்த
நிலையில் தற்போது புதிய விடயங்கள் அறிமுக படுத்த படுகின்றன .
அதாவது சீமானை சொன்னதை போன்ற ,
கொள்முதல் செய்யப்படும் பொருட்களை,
திறந்த வெளியில் யாவரும் பார்வையிடும் படியான ,
வகையில் உக்கிரைன் பாதுகாப்பு அமைச்சு அமூல் படுத்த உள்ளது .
அவர்கள் முகவரிகள் மற்றும் சில தரவுகள் மறைக்க
பட்டு ,கொள்முதல் செய்யப்பட்ட விடயங்களை ,
பகிரங்கமாக யாவரும் பார்க்க அனுமதிக்கும்
விடயத்தை அமூல் படுத்துகிறது .
இதனால் உக்கிரைன் இராணுவம் உணவு உண்டு மகிழ்வதை
நேர்மை தண்மையுடன் காண்பிப்பது ,
மற்றும் இராணுவத்தில் இணைவோரை
அதிக படுத்த இந்த விடயம் அறிமுக படுத்த படுகிறது .
சீமான் பேச்சை உக்கிரைன் இராணுவம் கேட்டிருக்கும் போல் உள்ளது .
பிறந்த சிசுவை வீதியில் வீசி விட்டு தாய் ஓட்டம்
பிறந்த சிசுவை வீதியில் வீசி விட்டு தாய் ஓட்டம்
இலங்கை திருகோணமலை சர்தாபுர வீதியில் பிறந்த இரண்டு நாளேயான சிசு ஒன்று மக்களினால் மீட்க பட்டுள்ளது .
சிசுவை பெற்ற தயார் வீதியில் வீசிவிட்டு ஓடியுள்ளார் .
இவ்வாறு வீதியில் மீட்க பட்ட சிசு ,
சிறார் நலக் காப்பகத்திடம் ஒப்படைக்க பட்டுள்ளது .
குறித்த சிசுவின் தயை தேடி போலீசார் தேடுதலை நடத்தி வருகின்றனர் .
இலங்கை கோடீஸ்வரர் இந்தோனேசியாவில் சடலமாக மீட்பு
இலங்கை கோடீஸ்வரர் இந்தோனேசியாவில் சடலமாக மீட்பு
இலங்கையின் OPEX ஹோல்டிங்ஸின் நிர்வாக இயக்குநரும்,
செல்வந்த தொழிலதிபருமான ஒனேஷ் சுபசிங்க இந்தோனேசியாவின்,
ஜகார்த்தாவில் அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் தனது குடும்பத்தினர் சகிதம் ஜகார்த்தாவில் சுற்றுலா
சென்றவேளை இவ்வாறு சடலமாக மீட்க பட்டுள்ளார் .
45 வயதான தொழிலதிபரே இவ்வாறு பலியாகியுள்ளார் .
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
இது ஒருதிட்டமிடப்பட்ட படுகொலையாக இருக்கலாம் என அஞ்ச படுகிறது .
ஆற்றில் மிதந்த மனித சடலம் தொடரும் மர்ம கொலைகள்
ஆற்றில் மிதந்த மனித சடலம் தொடரும் மர்ம கொலைகள்
இலங்கை புத்தளம் பகுதியில் ஆறு
ஒன்றுக்குள் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார்
இறந்தவர் ஐந்து பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார் .
இவரை இறைச்சி கடை ஒன்றில் பணிபுரிந்து வருபவர் எனவும் ,
அவ்வாறான நபரே இவ்வாறு நீரில் இருந்து சடலமாக மீட்க பட்டுளளார் .
இவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீச பட்டு இருக்கலாம் ,
என சந்தேகிக்க படுகிறது .
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
இந்தியாவினால் இலங்கைக்கு பேரூந்துகள் வழங்கி வைப்பு
இந்தியாவினால் இலங்கைக்கு பேரூந்துகள் வழங்கி வைப்பு
இந்தியாவினால் இலங்கைக்கு 500 பேரூந்துகள் .
அவ்விதமே மேற்கொள்ளல் பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டாவது பேரூந்து தொகுதி இலங்கைக்கு வழங்க பட்டுள்ளது .
இந்த பேருந்துகளை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பெற்று கொண்டு ,பேருந்துகளை பார்வை இட்டார் .
பொது போக்குவரத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் இந்த பேரூந்துகள் இலங்கைக்கு பயன் படுத்த பட உள்ளமை குறிப்பிட தக்கது .
கள்ளத்தொடர்பில் மகன் தாய் கடத்தி கொலை
கள்ளத்தொடர்பில் மகன் தாய் கடத்தி கொலை
எம்பிலிப்பிட்டிய ஆயுர்வேத வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் நேற்று (04) கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணை காரில் வந்த மூவர் கடத்திச் சென்றதாக குறித்த பெண்ணின் மகள் சூரியவெவ பொலிஸில் கடந்த 3ஆம் திகதி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, கிடைத்த தகவலின் அடிப்படையில் எம்பிலிபிட்டிய பொலிஸார் எம்பிலிபிட்டிய ஆயுர்வேத வீதி பகுதியில் பெண்ணின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.
கள்ளத்தொடர்பில் மகன் தாய் கடத்தி கொலை
சூரியவெவ வீரியகம பிரதேசத்தில் வசித்து வந்த 58 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் மகன் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வருவதோடு, உரிமையாளரின் மனைவியுடன் தொடர்பை ஏற்படுத்தி பின்னர் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர், அவர்களை தேடி ஹோட்டலின் உரிமையாளர் மேலும் இருவருடன் காரில் வந்து குறித்த பெண்ணைக் கடத்திச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய
மற்றும் சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஒத்துழைப்பு வழங்கத் தயார் பொதுநலவாய அமைப்பு
ஒத்துழைப்பு வழங்கத் தயார் பொதுநலவாய அமைப்பு
இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமான அனைத்துவித ஒத்துழைப்புக்களையும் வழங்கத்தயாராக இருப்பதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் உறுதியளித்துள்ளார்.
அரசாங்கத்தின் அழைப்பையேற்று சுதந்திரதின நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகைதந்துள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர்
நாயகம் பற்றீஸியா ஸ்கொட்லன்ட், கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒத்துழைப்பு வழங்கத் தயார் பொதுநலவாய அமைப்பு
நீங்கள் தனியாக அல்ல. நீங்கள் இந்த சிறப்பு வாய்ந்த பொதுநலவாயக் குடும்பத்தின் ஒரு பகுதி என்பதற்காகவே தாம் இலங்கைக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை குடும்பம் என்ற ரீதியில் நாம் ஒருவருக்கொருவர் பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் உலகளாவிய அமைப்புகளை விரிவுபடுத்தும் நெருக்கடிகளின்
சிக்கலான இடத்தில் அனைவரும் பிணைக்கப்பட்டுள்ளதாக பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் தெரிவித்துள்ளார்.
இந்திய அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
இந்திய அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வீ. முரளிதரன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (04) இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
13 ஆவது திருத்தச் சட்டத்தின் அமுலாக்கம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு,
இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் பாராட்டு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது .
770 மில்லியன் ரூபாய் தருமாறு தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை
770 மில்லியன் ரூபாய் தருமாறு தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகளுக்காக 770 மில்லியன் ரூபாவை பெப்ரவரி மாதத்தில் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா, நிதி அமைச்சின் செயலாளரிடம் எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உரிய தொகையை முழுமையாகவோ அல்லது தவணையாகவோ வழங்க நடவடிக்கை எடுக்குமாறு
நிதி அமைச்சின் செயலாளரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை இராணுவத்தில் 7790 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
இலங்கை இராணுவத்தில் 7790 அதிகாரிகளுக்கு பதவி உயர்வுபதவி உயர்வு
இலங்கை நாட்டின் 75 தாவது சுதந்திர தினத்தில் 7,790 இராணுவ கீழ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க பட்டுள்ளது ,மேலும் 208 அதிகாரிகளுக்கும் பதவி உயர்த்த பட்டுள்ளனர் .
போர் முடிவடைந்த பின்னர் இலங்கை முப்படைகளை சேர்ந்தவர்களுக்கும் ,பதவி உயர்வு வழங்க பட்ட வண்ணம் உள்ளன .
இலங்கையை விட்டு பசில் ஓடுவர் விமல் வீரவன்சா முழக்கம்
இலங்கையை விட்டு பசில் ஓடுவர் விமல் வீரவன்சா முழக்கம்
இலங்கையில் இடம் பெறும் தேர்தல் முடிவுற்றதும் ,அதில் பலத்த தோல்வியை தழுவி ,பசில் ராஜபக்ச நாட்டை விட்டு தப்பி ஓடுவார் என விமல் வீசிவன்சா அறிவித்துள்ளார் .
மக்களினால் ஊழல் அரசு என தெரிவித்து ராஜபக்ச ஆட்சியை விரட்டியடித்தனர் .
அவ்வாறான நிலையில் இப்பொழுது இடம்பெறும் தேர்தல் ,
ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வரலாற்றுக்கு சாவு மணி அடிக்கும் ஒன்றாக உருமாற்றம் பெற்றுள்ளது .
அதனை கருத்தில் வைத்தே விமல் வீரவன்சா இவ்வாறு தெரிவித்துள்ளார் .
யாழில் கரிநாள் போராட்டம்
யாழில் கரிநாள் போராட்டம்
யாழ்பாண்டத்தில் இலங்கை சுதந்திர நாளினை ,
கரிநாளாக அறிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள்
போராட்டம் நடத்தியுள்ளனர் .
இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்திட காவல்துறை முயன்ற பொழுதும் ,மக்கள் அலையாக கிளர்ந்து எழுந்த நிலையில் விலகினர் .
வடக்கு கிழக்கு மற்றும் ஐரோப்பா ரீதியில் இலங்கை ,
சுதந்திர தினத்தை கரிநாளாக மக்கள்
அறிவித்து தமது எதிர்ப்பை காட்டினார்கள்.
பலாலி காணி விடுவிப்பு உள்ளே வீடியோ
பேஸ்புக் விருந்தில் இளம் பெண்கள் கைது
பேஸ்புக் விருந்தில் இளம் பெண்கள் கைது
பாணந்துறை, ஹோரதுடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் விருந்தொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் 34 பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 9 பெண்களும் உள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சோதனையின் போது சந்தேகநபர்கள் வசம் இருந்த கஞ்சா போதைப்பொருள் மற்றும் மதுபானங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் குழுவை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் ஏனைய சந்தேக நபர்களை பெற்றோரை
அழைத்து வந்து பொலிஸ் பிணையில் விடுவிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
வாலிபன் கடத்தி வதை செய்து கொலை
வாலிபன் கடத்தி வதை செய்து கொலை
மாளிகாவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 24 வயதுடைய நபர் ஒருவரை வெள்ளை வேனில் கடத்திச் சென்ற குழு, அவரை கடுமையாகத் தாக்கி கொலை செய்துள்ளார் என தெமட்டகொட பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
தெமட்டகொட லக் ஹிரு செவன அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இந்த இளைஞனை ஒரு குழுவினர் விசாரணை செய்யவிருப்பதாக கூறி கடத்தியதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட இளைஞன் கடுமையாகத் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு, அன்றைய தினம் ஏழு மணியளவில் அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக விடப்பட்டுள்ளார்.
பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


































