காணிப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்
Posted in இலங்கை செய்திகள்

காணிப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

காணிப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

காணிப் பிரச்சினைகள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் தலைமையிலான கலந்துரையாடல், முல்லைத்தீவு – உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில், நேற்று (02) மாலை நடைபெற்றது.

மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் காணி விடயங்கள் தொடர்பாகவும், ஏனைய காணி விடையங்களுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பாகவும் இதில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

காணிப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

இந்த கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராசா மற்றும் காணி அமைச்சின் செயலாளரும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருமான ம.பற்றிக்டிறஞ்சன், மாகாண காணி ஆணையாளர்

ஆ.சோதிநாதன்,உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் மாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.

மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு
மாவட்டங்களின் பிரதேச செயலாளர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

No posts found.
யாழில் வாலிபன் மீது இராணுவம் தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் இராணுவத்தினருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள்

யாழில் இராணுவத்தினருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள்

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியில், துவிச்சக்கர வண்டியில் ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்த வேளை, மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், இராணுவத்தினரை

அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி, இராணுவத்தினரை தகாத வார்த்தைகளால் பேசி அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.

அது தொடர்பில் இராணுவத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ,

கோப்பாய் மற்றும் நீர்வேலி பகுதிகளை சேர்ந்த இரு இளைஞர்களையும் கைது
செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No posts found.
தமிழர் பிரச்சனையை தீர்க்க அனைத்து காட்சிகளை அழைக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துங்கள் வீதிகளில் இறங்காதீர்கள் ரணில்

தேர்தல் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துங்கள் வீதிகளில் இறங்காதீர்கள் ரணில்

பாராளும்னற தேர்தல் மூலம் நாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்த முடியும் எனவும் ,வீதிகளில் இறங்கி ஆர்பாட்டம் நடத்துவதால் ஏதும் ஏற்படாது என .ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார் .

No posts found.
ஜெர்மனியில் வசித்த தமிழர் யாழில் பிச்சை எடுக்கும் பரிதாபம்| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

ஜெர்மனியில் வசித்த தமிழர் யாழில் பிச்சை எடுக்கும் பரிதாபம்| இலங்கை செய்திகள்

ஜெர்மனியில் வசித்த தமிழர் யாழில் பிச்சை எடுக்கும் பரிதாபம்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |ஜெர்மன் நாட்டில் 12 வருடங்கள் வசித்த தமிழர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் ,ஆலயத்தின் முன்பாக பிச்சை எடுக்கும் பரிதாபம் .

நான்கு ஆண் பிள்ளைகளினால் கைவிட பட்ட நிலையில்,
உணவுக்கு வழியின்றி பிச்சை எடுத்து, வாழ்வை கழிக்கும் கண்ணீர் கோலம் .

இருப்பதற்கு வீடுகள் ஏதும் இல்லை .மனைவி இறந்து விட்டார் ,அன்பு செலுத்தவும் ,ஆறுதல் கூறவும் யாருமின்றி, கண்ணீரில் வாடும் இந்த பெரியவருக்கு உதவிகள் கிட்டுமா ..?

உங்கள் வீட்டில் ஒருவராக வெளிநாட்டு உறவுகளே அனைத்து அன்பு செலுத்துவீர்களா ..?
அப்படி என்றால் இதோ அழையுங்கள்.Whatsapp number – 0094 76 160 5288

Error: View 71ba60925p may not exist
வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஆணின் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்

ஆணின் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவில் மாவில்மடு பிரதேசத்தில் மகாவலி கங்கையில் இருந்து ஆணின் சடலம் நேற்று (01) மீட்கப்பட்டுள்ளது.

கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

45 – 55 வயதுக்கு இடைப்பட்ட நபரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,
மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No posts found.
ஓட்டோ சாரதியை கடத்திய தொகுதி அமைப்பாளர்| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

ஓட்டோ சாரதியை கடத்திய தொகுதி அமைப்பாளர்| இலங்கை செய்திகள்

ஓட்டோ சாரதியை கடத்திய தொகுதி அமைப்பாளர்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |முச்சக்கர வண்டி சாரதி ஒருவரைக் கடத்தி, தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக பொலன்னறுவை மாவட்டத்தில் பலம் வாய்ந்த அரசியல் கட்சியின் அமைப்பாளர் என கூறப்படும் நபர் ஒருவர்

பொரளை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கடவத்த ரன்முத்துகல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதியைக் கடத்த பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஜீப் ஒன்றும் சந்தேகநபருடன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஓட்டோ சாரதியை கடத்திய தொகுதி அமைப்பாளர்| இலங்கை செய்திகள்

பொரளையில் வசிக்கும் முச்சக்கரவண்டி சாரதி, கடந்த மாதம் 13ஆம் திகதி கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்களாகக் காட்டிக் கொண்டு வந்தவர்களால் , அவரது வீட்டிலிருந்து கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கடவத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலன்னறுவை மாவட்டத்தின் தொகுதி அமைப்பாளர் என பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது

No posts found.
பெண் யாசகரின் கைக்குழந்தையை அபகரித்து பறந்த ஜோடி| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

பெண் யாசகரின் கைக்குழந்தையை அபகரித்து பறந்த ஜோடி| இலங்கை செய்திகள்

பெண் யாசகரின் கைக்குழந்தையை அபகரித்து பறந்த ஜோடி| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |பெண் யாசகரிடம் இருந்து சுமார் ஒன்றரை வயது அடங்கிய கைக்குழந்தையை மூவரடங்கிய குழுவொன்று அபகரித்துச் சென்றுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

பெண்ணொருவரும் ஆண்கள் இருவருமே அந்த யாசகரிடமிருந்த கைக்குழந்தையை பலவந்தமாக பிடுங்கி, ஓட்டோவொன்றில் ஏற்றிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம், கடந்த 28 ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் அந்த பெண் யாசகர் பம்பலப்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பெண் யாசகரின் கைக்குழந்தையை அபகரித்து பறந்த ஜோடி| இலங்கை செய்திகள்

பம்பலப்பிட்டியவில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு முன்பாக பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பெண்ணிடம் இருந்த கைக்குழந்தையே இவ்வாறு அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டியவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த போது ஓட்டோவில் வந்திறங்கிய மூவரடங்கிய குழுவினர், அந்தக் குழந்தைக்கு ஆடைகளை வாங்கி தருவதாகக் கூறி, அப்பெண்ணையும் ஓட்டோவில் ஏற்றிக்கொண்டு தெமட்டகொடை பிரதேசத்துள்ள ஆடை விற்பனை நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.

அங்கு ஓட்டோவுக்கான வாடகை கட்டணத்தை செலுத்தி ஓட்டோவை அனுப்பி வைத்துள்ளனர்.

பு​டவை கடைக்குச் சென்றவர்கள் சுமார் 1,900 ரூபாய்க்கு ஆடைகளை குழந்தைக்காக கொள்வனவு செய்துள்ளனர். அதனை குழந்தைக்கு உடுத்திவிட்டதன் பின்னர். அங்கிருந்து மற்றுமொரு ஓட்டோவில் ஏறி, கொம்பனி வீதிக்கு வந்துள்ளனர்.

அங்குள்ள ஹோட்டல் ஒன்றுக்கு முன்பாகவிருக்கும் வாகன தரிப்பிடத்துக்கு ஓட்டோவை செலுத்திச் சென்றுள்ளனர். ஆட்டோவில் இருந்த பெண், கைக்குழந்தை தன்னிடம் தாருமாறும் தான் தூக்கிக்கொண்டு வருவமாகவும் யாசகரிடம் (பெண்) கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும், அதற்கு அந்த பெண் யாசகர் ஒப்புக்கொள்ளவில்லை. அப்போது அப்பெண்ணுடன் வந்திருந்த ஆண், யாசகரை தாக்கி ஓட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்டு, கைக்குழந்தையுடன் தப்பியோடிவிட்டனர்.

இதுதொடர்பில் பெண் யாசகரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தார்.

தன்னுடைய குழந்தை இல்லாது அந்த பெண் யாசகர் கதறி அழுதுகொண்டிருக்கின்றார் என்றும்​ தெரிவித்த பொலிஸார், குழந்தையை கடத்தியவர்கள் தொடர்பில் எவ்விதமான தகவல்களும் கிடைக்கவில்லை. எனினும், குழந்தை பாக்கியம் இல்லாத
ஜோடியே இந்தக் குழந்தையை கடத்தியிருக்கவேண்டும் என்றும் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

No posts found.
இலங்கையில் குண்டாகுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் குண்டாகுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு| இலங்கை செய்திகள்

இலங்கையில் குண்டாகுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |இலங்கையில் அதிக எடை மற்றும் பருமனானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எடை அதிகரிப்பால் பிற்காலத்தில் தொற்றா நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் சாந்தி குணவர்தன கூறுகிறார்.

உலக உடல் பருமன் தடுப்பு தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் “விழிப்புடன் இருப்போம், பருமனில் இருந்து விடுபடுவோம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு விசேட வைத்திய நிபுணர் டாக்டர் சாந்தி குணவர்தன இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

இலங்கையில் குண்டாகுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு| இலங்கை செய்திகள்

“2015 ஆம் ஆண்டில், ஆண்களில் 22.5% பேர் அதிக எடை மற்றும் பருமனானவர்களாக இருந்தனர்.

2021 கணக்கெடுப்பின்படி, இந்த எண்ணிக்கை 30% ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில், 2015 இல், 34% பெண்கள் அதிக எடை மற்றும் பருமனான பிரிவில் இருந்தனர்.

2021 கணக்கெடுப்பின்படி, இந்த எண்ணிக்கை 48% ஆக அதிகரித்துள்ளது

அதிகமாக உட்கொண்டால் அதிகப்படியான அளவு எண்ணெயாக நம் உடலில் தேங்குகிறது.எடை அதிகரிப்பை பாதிக்கிறது.இது பிற்காலத்தில் தொற்றா நோய்கள் ஏற்படும் அபாயத்தை உருவாக்குகிறது என்றார்.

No posts found.
சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

10 வயது சிறுமி துஷ்பிரயோகம் 46 வயதான ஆசிரியர் கைது | இலங்கை செய்திகள்

10 வயது சிறுமி துஷ்பிரயோகம் 46 வயதான ஆசிரியர் கைது | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |பாடசாலை மாணவியான பத்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அந்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எஹலியகொட பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த ​எஹலியகொட பொலிஸார், அந்த ஆசிரியருக்கு 46 வயதாகும் என்றனர்.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே சந்தேகத்தின் பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாக கூறப்படும் அந்த சிறுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர், ​வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அச்சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

No posts found.
புற்றுநோயுடன் வாழும் போராளி குடும்பம் | பசியில் வாடும் 3 பிள்ளைகள் | JT VIEW
Posted in இலங்கை செய்திகள்

புற்றுநோயுடன் வாழும் போராளி குடும்பம் | பசியில் வாடும் 3 பிள்ளைகள் | JT VIEW

புற்றுநோயுடன் வாழும் போராளி குடும்பம் | பசியில் வாடும் 3 பிள்ளைகள் | JT VIEW


முல்லைத்தீவு பகுதியில் உள்ள போராளி குடும்பம் ஒன்றை சந்தித்தபோது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 3 பிள்ளைகளின் தாயொருவர் தனது கணவர் 4 மாதங்களாக யாழ் வைத்தியசாலையில் நடக்க முடியாது உள்ள நிலையையும் கூறினார்.

இறுதிப்போரில் தமது உறவுகளை இழந்தும் இன்றும் பல தடைகளை எதிர்கொண்டு வரும் இந்த கௌடம்பத்தின் கண்ணீர் கதை .

நடத்துக்காக போராடி சோற்றுக்குவாளோயிலலாமல் உயிருக்கு போராடும் போராளி குடும்பத்தின் அவல நிலை .

இரக்கம் இருந்தால் இதை கொஞ்சம் பார்த்து செல் .

Whatsapp number – 009476 160 5288

Error: View 71ba60925p may not exist
சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

பெண் கான்ஸ்டபிளை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது|இலங்கை செய்திகள்

பெண் கான்ஸ்டபிளை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது|இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் களனி பொலிஸ் அலுவலகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற இசைக் கச்சேரி ஒன்றின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பெண் கான்ஸ்டபிள் ஒருவர் தாக்கப்பட்டதாகவும், தாக்குதலை மேற்கொண்ட கான்ஸ்டபிள் அவரின் கைத்தொலைபேசியையும் திருடிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னர் சந்தேகத்திற்குரிய கான்ஸ்டபிளும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண் கான்ஸ்டபிளை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது|இலங்கை செய்திகள்

இந்த கான்ஸ்டபிள் கடந்த 25 ஆம் திகதி இரவு கடமைக்கு வருகை தந்ததுடன், கடவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற இசைக் கச்சேரியை காண சாதாரண உடையில் யாரிடமும் கூறாமல் சென்றுள்ளார்.

அங்கு இசை நிகழ்ச்சியின் பாதுகாப்புக்காக சீருடையில் இருந்த பியகம பொலிஸ் பயிலுனர் கான்ஸ்டபிளிடம் வாக்குவாதம் செய்து அவரை தாக்கி காயப்படுத்திவிட்டு கைத்தொலைபேசியை திருடிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பெண் கான்ஸ்டபிள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் களனி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த கான்ஸ்டபிள் நேற்று (27) கைது செய்யப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

No posts found.
இரண்டு வாகனங்களை பந்தாடிய லேண்ட் ரோவர்| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்களை பந்தாடிய லேண்ட் ரோவர்| இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்களை பந்தாடிய லேண்ட் ரோவர்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |அதிக வேகத்தில் பயணித்த லேண்ட் ரோவர் வாகனமொன்று, வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறி மற்றும் முச்சக்கரவண்டியை பந்தாடி பதம் பார்த்துவிட்டு பஸ்தரிப்பிடத்தில் முட்டிமோதி நின்றுள்ளது.

ஹட்டன்-டிக்கோயாவில் இருந்து நோர்வூட் வரையிலும் அதிவேகத்தில் பயணித்த லேண்ட் ரோவர் வாகனமே டிக்கோயா- வனராஜா பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மேலே குறிப்பிட்ட இரண்டு வாகனங்கள் மீது மோதிவிட்டு, பஸ்தரப்பிடத்தையும் பதம் பார்த்துள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த லேண்ட் ரோவரின் சாரதியும் மற்றுமொருவரும் ​டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (01) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், லேண்ட் ரோவரின் சுக்கான் திடீரென செயற்பட மறுத்தமையை அடுத்தே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

No posts found.
தலைவர் பிரபாகரன் 68 வது பிறந்தா நாள் இன்று
Posted in இலங்கை செய்திகள்

பிரபாகரன் வருகை அறிவிப்பு நிதி சேகரிக்க மட்டுமே| இலங்கை செய்திங்கள்

பிரபாகரன் வருகை அறிவிப்பு நிதி சேகரிக்க மட்டுமே| இலங்கை செய்திங்கள்

இலங்கை செய்திங்கள் |பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து அவருடைய கருத்து அல்ல என்பதை அவரே குறிப்பிட்டிருந்ததாக தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.

தனது குடும்பதையே ஒரு இனத்திற்காக அர்ப்பணித்த தம்பி பிரபாகரன் தொடர்பில் இவ்வாறு பொது வெளியில் பொய்யான கருத்துகளை வெளியிடுவது ஒரு போராட்டத்தை மலினப்படுத்தும் செயல் என்றும் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வெறுமனே நிதி கேரிப்புக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாக சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.

No posts found.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் மைத்திரிபால சிறிசேன
Posted in இலங்கை செய்திகள்

மைத்திரியின் மனு நிராகரிக்கப்பட்டது | இலங்கை செய்திகள்

மைத்திரியின் மனு நிராகரிக்கப்பட்டது | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளில் இருந்து தன்னை விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை 21,000 ரூபாயட கட்டணத்துக்கு உட்பட்டு நிராகரிக்குமாறு மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க போதிய புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்காததற்காக முன்னாள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 108 வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No posts found.
கிழக்கு மாகாணத்தில் 75வது சுதந்திரதின விழா 2 ஆம் திகதி திருமலை அனுராதபுர சந்தி ஜூம்ஆப் பள்ளிவாயலில் நடாத்த சகல ஏற்பாடு
Posted in இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் 75வது சுதந்திரதின விழா 2 ஆம் திகதி திருமலை அனுராதபுர சந்தி ஜூம்ஆப் பள்ளிவாயலில் நடாத்த சகல ஏற்பாடு

கிழக்கு மாகாணத்தில் 75வது சுதந்திரதின விழா 2 ஆம் திகதி திருமலை அனுராதபுர சந்தி ஜூம்ஆப் பள்ளிவாயலில் நடாத்த சகல ஏற்பாடு

இலங்கை செய்திகள் |பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் பணிப்புரைக்கமைவாக, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்காவின் அறிவுருத்தல்களுக்கிணங்க

75வது தேசிய சுதந்திரதின விழா எதிர்வரும் 02 ஆம் திகதி அஸர் தொழுகையின் பின்னர் (மாலை 3.30 மணி) திருகோணமலை – அனுராதபுர

சந்தியில் அமைந்துள்ள ஜூம்ஆப் பள்ளிவாயலில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) ஆ.மன்சூர் தெரிவித்தார்.

75வது தேசிய சுதந்திரதின விழா நடாத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (26) கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) கேட்போர்

கூடத்தில் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) ஆ.மன்சூர் தலைமையில் இடம்பெற்றபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அன்றைய தினம் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 75வது சுதந்திரதின விழாவுக்கு கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்கா பிரதம அதிதியாக கலந்துகொண்டு

சுதந்திரதின விஷேட உரையினை நிகழ்த்தவுள்ளார். இவ்விழாவில், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் வி.எச்.என்.ஜெயவிக்ரம, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண திணைக்களத்

தலைவர்கள், அனைத்து பள்ளிவாயல் சம்மேளன தலைவர், செயலாளர், உலமாக்கள், மத்ரசா மாணவர்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இவ்விழாவில் பங்கேட்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அபு அலா –

No posts found.
எகிப்துக்கு பறந்தார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி பொலிஸ் விளக்கம்| இலங்கை செய்திகள்

ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி பொலிஸ் விளக்கம்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி: குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது எனும் தலைப்பில், தனியார் ஊடகமொன்றின் இணையத்தளத்தில் வெளியான செய்தி தொடர்பில் ​பொலிஸ் தலைமையகம் விளக்கமளித்துள்ளது.

அந்த இணையளத்தள செய்தியில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை படுகொலைச் செய்வதற்கான சூழ்ச்சி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது,

இந்த நாட்டின் அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர்கள் வெளிநாடொன்றில் இன்றைக்கு சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியை படுகொலைச் செய்வதற்கான சூழ்ச்சிகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர் என்றும் இணையத்தள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது என பொலிஸ் தலைமையக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி பொலிஸ் விளக்கம்| இலங்கை செய்திகள்

அத்துடன், இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியை படுகொலைச் செய்வதற்காக அந்த குழு சூழ்ச்சிகளை செய்துள்ளது என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு தகவல் கிடைத்துள்ளது என்றும் ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதைப் ​போல, படுகொலைச் செய்வதற்கான சூழ்ச்சி தொடர்பில் எந்தவொரு தகவலும் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கவில்லை. அதேபோல, செய்தியில் கூறப்பட்டுள்ளதைப் போல விசாரணைகளும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் ஆரம்பிக்கப்படவில்லை.

ஆகையால் அந்த இணையளத்தள செய்தியானது முழுமையாக பொய்யாக சித்திரிக்கப்பட்ட செய்தியாகும்
என்று பொலிஸ் தலைமையக ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No posts found.
பிரான்சிய தூதுவர் பிரான்கொயிசுடன் மனோ கணேசன் எம்பி உதயகுமாருடன் சந்திப்பு |இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

எம்மை இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டு போன இங்கிலாந்துக்கு, மலையக தமிழர் தொடர்பில் தார்மீக கடமை இருக்கின்றது

எம்மை இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டு போன இங்கிலாந்துக்கு, மலையக தமிழர் தொடர்பில் தார்மீக கடமை இருக்கின்றது

  • பிரித்தானிய வெளிவிவகார துணை பணிப்பாளரிடம் மனோ கணேசன் அழுத்தமாக தெரிவிப்பு

“மலையக தமிழரின் பிரதான எதிர்பார்ப்பு இந்நாட்டின் தேசிய நீரோட்ட அரசியல் வரைபுக்கு உள்ளே முழுமையான பிரஜைகளாக வேண்டும் என்பதாகும். சட்டப்படி நாடற்றோர் இன்று இல்லை.

எல்லோருமே பிரஜைகள். ஆனால், நமது மக்கள் முழுமையான பிரஜைகள் இல்லை. எமது பாதை உள்நோக்கிய பாதை. பிரிட்டன் இலங்கை அரசுடனான தமது நல்லுறவுகளை பயன்படுத்தி எமது இந்த இலங்கை கனவை நனவாக்க உதவ வேண்டும்.”

என நேற்று கொழும்பில், வெஸ்ட்மின்ஸ்டர் இல்லத்தில் நிகழ்ந்த சந்திப்பின் போது, பிரித்தானிய வெளிவிவகார துணை பணிப்பாளர் மாயா சிவஞானம், பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன், அரசியல் அலுவலர் ஜோவிடா

அருளானாந்தம் மற்றும் தமுகூ தலைவர் மனோ கணேசன், இதொகா பொதுசெயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்ட சந்திப்பின் போது, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

எம்மை இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டு போன இங்கிலாந்துக்கு, மலையக தமிழர் தொடர்பில் தார்மீக கடமை இருக்கின்றது

பிரித்தானிய தரப்பினரிடம், மனோ எம்பி மேலும் கூறியதாவது,

“பிரித்தானியாவின் தார்மீக பொறுப்பு, பிரிட்டீஷ் அரசாட்சி, இம்மக்களை இருநூறு வருடங்களுக்கு முன்னர் தொடக்கம் தென்னிந்திய தமிழகத்திலிருந்து கொண்டு வர ஆரம்பித்ததுடன் ஆரம்பமாகிறது. அன்று முதல் எமது மக்கள்,

உலகம் கண்டிராத கடுமையான உழைப்பின் மூலம், இன்றுவரை மிகப்பெரிய ஏற்றுமதி தொழில் துறையாக இருக்கின்ற பெருந்தோட்டங்களையும், பெரும்

நெடுஞ்சாலைகளையும், பாரிய ரயில் பாதைகளையும், கொழும்பு துறைமுகத்தையும் அமைத்து, அன்று சிலோன், இன்று ஸ்ரீலங்கா என்ற இலங்கையை உருவாக்கியுள்ளார்கள்.”

“இதற்கு பிரதியுபகாரமாக, நன்றிகெட்டத்தனமாக 1948ல் எமது மக்களின் குடியுரிமைதான் பறிக்கப்பட்டது. வாக்குரிமைதான் பறிக்கப்பட்டது. நமது மக்கள் பலவந்தமாக 1964ல் சிறிமா-சாஸ்திரி இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் நாடு கடத்தப்பட்டார்கள்.

இது நடக்கும் போது, சிலோன் என்ற இலங்கை ஒரு பிரிட்டீஷ் ஆதிக்க நாடாக இருந்தது. 1972ல் குடியரசு ஆகும்வரை, இலங்கையில் பிரித்தானிய அரசாட்சிக்கு பதில் சொல்லும் மகாதேசாதிபதியே ஆட்சியில் இருந்தார்.

1948ன் சோல்பரி அரசமைப்பின் 29ம் பிரிவும் எம்மை காப்பாற்றவில்லை. ஆகவே இன்றைய பிரிட்டீஷ் அரசரின் அரசாங்கம் இலங்கை மலையக தமிழரின் மீது பாரிய தார்மீக பொறுப்பையும், கடமையும் கொண்டுள்ளது.”

“இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் எமது பிரச்சினைகளை கையாளும் பொறுப்பை முழுமையாக விட்டு விட வேண்டாம். அது சரி வராது.

இந்தியா ஏற்கனவே, இலங்கையுடனான தமது நட்புறவை எமது விஷயத்திலும் அவ்வப்போது பயன்படுத்துகிறது. ஆனால், அது எமக்கு போதாது. அவர்களுக்கு அவர்களது சொந்த தேசிய கரிசனைகள் அநேகம் உள்ளன.

அவை எமது விஷயங்களை விட முன்னுரிமை கொண்டவை. எமக்கு அவை தெரியும்.”

“தேசிய நீரோட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படாத காரணத்தால், நாம் ஒதுக்கப்படுகிறோம்.எமக்கு பிரிட்டீஷ் உதவியும் தேவை. பிரிபடாத ஒரே இலங்கைக்குள் எமது சமூக-அரசியல் அபிலாஷைகளை அடையவும், கடந்த காலங்களில் இழந்த உரிமைகளை பெறவும் நாம் பாடுபடுகிறோம்.

எமது மக்கள் ஜனதொகையில் மூன்றிலொன்றுக்கு குறைவில்லாத பிரிவினர் இன்னமும் பெருந்தோட்டங்களில் வாழ்கின்றனர். ஒட்டுமொத்த இலங்கையில் மிகவும் பின்தங்கிய நலிந்த பிரிவினராக அவர்கள் இருக்கின்றார்கள்.

ஐநா மனித உரிமை ஆணையகத்தின் நவீன கொத்தடிமை தொடர்பிலான விசேட அறிக்கையாளர், ஐநா நிறுவனங்கள், உலக வங்கி, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியவை முன்வைத்துள்ள கணிப்பீடுகளின்படி, இந்த

துன்பகரமான உண்மைகள் உலகறிய செய்யப்பட்டுள்ளன. ஆகவே பிரிட்டீஷ் அரசு, விசேட ஒதுக்கீட்டு திட்டங்களின் அடிப்படையில் பெருந்தோட்ட மக்களுக்கு உதவிட வேண்டும்.”

“நாங்கள் இந்நாட்டில் முழுமையான பிரசைகள் ஆக உதவுங்கள். நம் நாட்டிற்கு நீங்கள் வாழ்வாதார உதவிகள் வழங்கும் போது,
இலங்கையில் மிகவும் பின்தங்கிய நலிந்த பிரிவினரான, பெருந்தோட்ட பாமரமக்களுக்கு அவை கிடைகின்றனவா என கேள்வி எழுப்புங்கள்.


தேடுங்கள். எமக்காக இலங்கை அரசுடன் பேசுங்கள். நாம் இல்லாமல் இலங்கை முழுமையடையாது என்பது இனிமேல் மனதில் கொள்ளுங்கள்.”

No posts found.
ஜட்டி விற்பனை சரிவு பொருளாதாரத்துக்கு முதல் எச்சரிக்கை|இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

ஜட்டி விற்பனை சரிவு பொருளாதாரத்துக்கு முதல் எச்சரிக்கை|இலங்கை செய்திகள்

ஜட்டி விற்பனை சரிவு பொருளாதாரத்துக்கு முதல் எச்சரிக்கை|இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |ஒரு நாட்டின் பொருளாதாரத்தைக் கணிக்கவும், ஆய்வு செய்யவும் பல காரணிகள், பல அளவுகோல்கள் உள்ளன.

சின்னச் சின்ன விஷயங்கள் கூடப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணியாக உள்ளது, இதற்கு முக்கியமான காரணம் அனைத்து பொருட்களின் விற்பனையும் மக்களின் வருமானத்தின் அடிப்படையில் உள்ளது.

இந்த வர்த்தகத்தின் அடிப்படையில் தான் ஒரு நாட்டின் பொருளாதாரம் அமையும். அந்த வகையில் அமெரிக்க மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான ஆலன் கிரீன்ஸ்பான் ஆண்களின் உள்ளாடை அதிலும் குறிப்பாக ஜட்டி விற்பனை பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோல் எனக் கூறுகிறார்.

இந்த நிலையில் இந்தியாவில் ஆண்கள் பிரிவு உள்ளாடைகள் நிறுவனங்கள் நிஃப்டி சந்தையில் மிகவும் மோசமாகச் செயல்படுகிறது, இதனால் இதை இந்திய பொருளாதாரம் குறித்த அச்சமாகவும் பார்க்கப்படுகிறது.

ஜட்டி விற்பனை சரிவு பொருளாதாரத்துக்கு முதல் எச்சரிக்கை|இலங்கை செய்திகள்

நிஃப்டி 50-யில் கடந்த ஒரு வருடத்தில் உள்ளாடை நிறுவனங்கள் மோசமாகச் செயல்பட்டு வருகிறது. ரூபாய் அண்ட் கோ 51 சதவீதம் சரிவு, லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 50 சதவீதம் சரிவு, பேஜ் இண்டஸ்ட்ரீஸ் 7 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இது தத்தம் நிறுவனங்களின் உள்ளாடை விற்பனையிலும் எதிர்ரொலிக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் பொருளாதாரத்தில் ஏதோ சரியாக இல்லை என்பதற்கான சிக்னலாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்க மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான ஆலன் கிரீன்ஸ்பான் ஏன் உள்ளாடை விற்பனை பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய அளவுகோலாக உள்ளது எனக் கூறுகிறார் என்றால் இது அனைத்து ஆண்களுக்கும் மிகவும் முக்கியமான ஒன்று,

அதேபோல் இதை விலைக்கு ஏற்றார் போல் சரிய சைஸ் போன்றவற்றைப் பயன்படுத்த முடியாது, எனவே இது கட்டாயம் மக்கள் வாங்கும் விஷயமாக உள்ளது என நம்புகிறார்.

ஆண்கள் உள்ளாடை விற்பனை குறைகிறது என்றால் பொருளாதாரம் ரெசிஷன் அல்லது சரிவை நோக்கி செல்கிறது என்று பொருள்.

இந்த நிலையில் இந்தியாவில் உள்ளாடை விற்பனை அல்லது பயன்பாடு 55 சதவீதமாகச் சரிந்துள்ளது, இது பெரும் தலைவலியாக மாறியள்ளது.

அமெரிக்க மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான ஆலன் கிரீன்ஸ்பான் அன்றைய வேலைவாய்ப்பு சந்தை மற்றும் பணம் ஈட்டும் சமுகத்தை வைத்து இது கணக்கிட்டு உள்ளார். ஆனால் இன்று வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புச் சமூகத்தில் பெரிய மாற்றம் எற்பட்டு உள்ளது.

இன்றைய வேலைவாய்ப்பு சந்தையிலும், பணம் ஈட்டும் சமூகத்தில் இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் பெண்களின் பங்கீடு மிகவும் அதிகமாக இல்லை.

இதனால் ஆலன் கிரீன்ஸ்பான் கணக்கீட்டு முறையில் மாற்றம் செய்து ஆண்கள் உள்ளாடை விற்பனை மட்டும் கணக்கெடுக்காமல் பெண்கள் உள்ளாடை விற்பணையில்
கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது பொருளாதார வளர்ச்சி அளவுகோளில் கட்டாயம் மாற்றத்தை ஏற்படுத்தும்.

No posts found.
யானை தாக்கி ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

ரஷ்ய குடும்பத்தை விரட்டியடித்த காட்டுயானை| இலங்கை செய்திகள்

ரஷ்ய குடும்பத்தை விரட்டியடித்த காட்டுயானை| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற வாகனம் ஒன்று காட்டுயானையால் தாக்கப்பட்ட சம்பவம் பொலன்னறுவை மின்னேரியா தேசிய பூங்காவில் பதிவாகியுள்ளது.

8 வயது பிள்ளை மற்றும் 10 மாத குழந்தையை உள்ளடக்கிய ஒரு ரஷ்ய குடும்பம் காட்டு யானையின் அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயன்ற

போது அவர்களை யானை துரத்தியுள்ளது, அவர்கள் ஓடத் தொடங்கி வாகனத்தில் ஏறிய போதும் யானை வாகனத்தைத் தாக்கி சேதப்படுத்தியது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனத்துடன் பொலன்னறுவைக்கு சுற்றுலா சென்ற குடும்பம்,
திரும்பி வரும் வழியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்தனர்.

No posts found.
தமிழக பொலிஸ் அடாவடி செருப்பால அடிக்கணும் இவரை
Posted in இலங்கை செய்திகள்

சாரதிகளுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்| இலங்கை செய்திகள்

சாரதிகளுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |கொஹுவல சந்தியில் நிர்மாணிக்கப்படவுள்ள மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் பெப்ரவரி 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு மே 31ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளும் காலத்தில் பயணிகள் பஸ்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் கொஹுவல சந்தி ஊடாக பயணிக்க முடியும்.

ஆனால், மேம்பாலம் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதால், போக்குவரத்து நெரிசலை குறைக்க, மாற்று வழிகளை பயன்படுத்துமாறு, போலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை, பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக மாற்று வழிகளைக் குறிக்கும் பெயர்ப் பலகைகளை, வில்லியம் வீதி – காலி வீதி, நுகேகொட சந்தி, கிருலப்பன சந்தி, பொரலஸ்கமுவ சந்தி, பிபிலியான சந்தி, பாமன்கட சந்தி மற்றும் அதிவேக வீதி – கஹதுடுவ வீதி ஆகிய இடங்களில் அமைத்துள்ளது.

அந்த இடங்களில் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருக்கும் பொலிஸாரின்
வழிகாட்டலின்படி செயல்படுமாறு வாகன சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

No posts found.