Tag: ஆசிரியர் கைது
மாணவர்களை தாக்கிய ஆசிரியர் கைது
மாணவர்களை தாக்கிய ஆசிரியர் கைது
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் உள்ள பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் மூன்று மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்த ஆசிரியர் தெல்லிப்பழை பொலிஸாரால் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்
Featured
10 வயது சிறுமி துஷ்பிரயோகம் 46 வயதான ஆசிரியர் கைது | இலங்கை செய்திகள்
10 வயது சிறுமி துஷ்பிரயோகம் 46 வயதான ஆசிரியர் கைது | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |பாடசாலை மாணவியான பத்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அந்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எஹலியகொட பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த எஹலியகொட பொலிஸார், அந்த ஆசிரியருக்கு 46 வயதாகும் என்றனர்.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே சந்தேகத்தின் பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாக கூறப்படும் அந்த சிறுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர், வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அச்சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழில் மணவனை தாக்கிய ஆசிரியர் கைது
யாழில் மணவனை தாக்கிய ஆசிரியர் கைது
யாழில் தரம் பத்து வகுப்பில் கல்வி கற்ற மாணவன் ஒருவரை ,ஆசிரியர் ஒருவர் தாக்கிய நிலையில் ,அவர் கைது செயயப்பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது .
யாழில் பிரபல பாடசலை ஒன்றில் குறித்த ஆசிரியர் நடத்திய இந்த தாக்குதல் சம்பவம் ,மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை பாடசாலையில் ஆசிரியர்கள் இவ்வாறு முட்டாள் தனமான செயல்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இவ்வாறு நீதிமன்றினால் மாணவர்கள் தண்டிக்க படுதல் கூடாது என நீதிபதி இளஞ்செழியன்தீர்ப்பு வழங்கியுள்ள நிலையிலும் ,இந்த கோர சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.
Featured
மாணவனை போட்டு தாக்கிய ஆசிரியர் கைது
மாணவனை போட்டு தாக்கிய ஆசிரியர் கைது
வெயாங்கொடையில் உள்ள பிரபல பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் உயர்தர மாணவரை
பிளாஸ்டிக் குழாயால் தாக்கிய சம்வத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியரை கைது செய்த வெயாங்கொடை பொலிஸார், அத்தனகல்ல நீதவான் முன்னிலையில்
ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று காலை சட்டத்தரணி ஊடாக வெயாங்கொடை பொலிஸில் முன்னிலையாகியதன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலையில் நேர வகுப்புக்கு மாணவன் வராததால் குறித்த தொழில்நுட்ப ஆசிரியர், பிளாஸ்டிக் குழாயைக் கொண்டு வந்து மாணவனின் கை மற்றம் கால்களில் கொடூரமாக தாக்கியுள்ளார்.
இதனால் கை, கால்களில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மாணவன்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் வெயாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள தொழில்நுட்ப மாணவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.














