Tag: அனுராதபுர
அனுராதபுர பெண் வைத்தியர் வன்புணர்வு
அனுராதபுர பெண் வைத்தியர் வன்புணர்வு
அனுராதபுர பெண் வைத்தியர் வன்புணர்வு ,அனுராதபுரம் மருத்துவமனையில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபருக்கு உதவிய மற்றும் உடந்தையாக
இருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அனுராதபுரம் பொலிஸ் நிலையம் அறிவித்துள்ளது.
அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் மருத்துவ விடுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, நபர் மருத்துவரை கத்தியால் மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்து, கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அவரது
மொபைல் போனை திருடி தப்பிச் சென்ற குற்றத்திற்காக அனுராதபுரம் தலைமையகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி சந்தேக நபரைக் கைது செய்தனர்.
இது தொடர்பாக 10.03.2025 அன்று அனுராதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தக் குற்றங்கள் தொடர்பாக சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்தக் குற்றத்திற்குப் பிறகு சந்தேக நபரை தலைமறைவாக வைத்திருக்க உதவியதற்காகவும், திருடப்பட்ட
தொலைபேசியை வைத்திருந்ததற்காகவும், அனுராதபுரம் காவல் நிலையத்தில் 12.03.2025 அன்று இரவு ஒரு பெண் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் எலா வீதி, கல் நெவா பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரின் 37 வயதுடைய சகோதரி ஆவார்.
அனுராதபுரம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் 75வது சுதந்திரதின விழா 2 ஆம் திகதி திருமலை அனுராதபுர சந்தி ஜூம்ஆப் பள்ளிவாயலில் நடாத்த சகல ஏற்பாடு
கிழக்கு மாகாணத்தில் 75வது சுதந்திரதின விழா 2 ஆம் திகதி திருமலை அனுராதபுர சந்தி ஜூம்ஆப் பள்ளிவாயலில் நடாத்த சகல ஏற்பாடு
இலங்கை செய்திகள் |பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் பணிப்புரைக்கமைவாக, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்காவின் அறிவுருத்தல்களுக்கிணங்க
75வது தேசிய சுதந்திரதின விழா எதிர்வரும் 02 ஆம் திகதி அஸர் தொழுகையின் பின்னர் (மாலை 3.30 மணி) திருகோணமலை – அனுராதபுர
சந்தியில் அமைந்துள்ள ஜூம்ஆப் பள்ளிவாயலில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) ஆ.மன்சூர் தெரிவித்தார்.
75வது தேசிய சுதந்திரதின விழா நடாத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (26) கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) கேட்போர்
கூடத்தில் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) ஆ.மன்சூர் தலைமையில் இடம்பெற்றபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அன்றைய தினம் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 75வது சுதந்திரதின விழாவுக்கு கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்கா பிரதம அதிதியாக கலந்துகொண்டு
சுதந்திரதின விஷேட உரையினை நிகழ்த்தவுள்ளார். இவ்விழாவில், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் வி.எச்.என்.ஜெயவிக்ரம, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண திணைக்களத்
தலைவர்கள், அனைத்து பள்ளிவாயல் சம்மேளன தலைவர், செயலாளர், உலமாக்கள், மத்ரசா மாணவர்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இவ்விழாவில் பங்கேட்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அபு அலா –








