9 இந்திய மீனவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

9 இந்திய மீனவர்கள் கைது

9 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு அருகே நேற்று (24) இரவு இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய கடல் பகுதிக்குள் இலங்கை கடற்படை
Posted in இலங்கை செய்திகள்

74 இந்திய மீனவர்கள் கைது: 12 படகுகள் சிக்கின

74 இந்திய மீனவர்கள் கைது: 12 படகுகள் சிக்கின

நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய பல நாள் மீன்பிடி படகுகள் 02 வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இந்திய மீன்பிடி படகுகளை விரட்டும் வகையில், இலங்கை கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களம் இணைந்து ஜூலை 08 ஆம் திகதி இரவு விசேட நடவடிக்கையை மேற்கொண்டது.

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்தி இந்திய மீன்பிடி படகுகள் இரண்டும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

74 இந்திய மீனவர்கள் கைது: 12 படகுகள் சிக்கின

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினர் இலங்கை கடற்பரப்பில் வழமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

2023ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் இலங்கை

கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீன்பிடி படகுகளுடன் 74 இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சட்ட நடவடிக்கைகள் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கடற்படை மற்றும் கடலோர காவல் துறையினர் தொடர்ந்து

இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று இலங்கை கடற்படை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 இந்திய மீனவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

16 இந்திய மீனவர்கள் கைது

16 இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் புதுக்கோட்டை மற்றும் நாகை பட்டனத்தைச் சேர்ந்த இரு படகுகளில் எல்லை தாண்டிய மீனவர்களே இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் காரைநகர் கடற்பரப்பில் நான்கு மீனவர்ளும் பருத்தித் துறை கடற்பரப்பில் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்களுடைய இரு படகும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைவரும் மயிலிட்டித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வளத்துறை திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 12 மீனவர்கள் பருத்தித்துறை நீதிமன்றிலும் 4 மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றிலும் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.

No posts found.