Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
என்னை சங்கடப்படுத்தாதீர்கள்; பொன்சேகா
என்னை சங்கடப்படுத்தாதீர்கள்; பொன்சேகா
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவீர்களா என்று என்னிடம் தொடர்ந்து கேட்டு என்னை அசௌகரியத்திற்கு உள்ளாக்காதீர்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
என்னை சங்கடப்படுத்தாதீர்கள்; பொன்சேகா
”இங்கிருக்கும் யாரைக் கேட்டாலும் அவர்கள் வேட்பாளராக போட்டியிட விரும்புவதாக தான் கூறுவார்கள்.
அதனால் மீண்டும் அதே கேள்வியை என்னிடம் கேட்டு என்னை சங்கடத்திற்கு ஆளாக்காதீர்கள்” என அவர் ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் தம்மீது நம்பிக்கை வைத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி வாக்காளர்களுக்கு கட்சியில் இருந்து பிரிந்து சென்று துரோகம் செய்ய மாட்டேன் என பொன்சேகா வலியுறுத்தினா
மகளுக்கு ஏன் இந்த அநீதி நீதிக் கேட்டு தாய் மன்றாட்டம்
மகளுக்கு ஏன் இந்த அநீதி நீதிக் கேட்டு தாய் மன்றாட்டம்
எனது பிள்ளையை பாடசாலையில் இணைத்தால் தங்களது பிள்ளையை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என அந்த பாடசாலையில் உள்ள மாணவர்களின் தாய்மார்கள் கூறுகிறார்கள், ஆகையால் என் மகளை சிறிய
பாடசாலையில் சேர்த்துக்கொள்ளுமாறு தாயொருவர், தனது பிள்ளையை தோளில் சுமந்தவாறு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
அங்கு வந்த பொலிஸார், அப்பெண்ணை அங்கிருந்து செல்லுமாறு வலியுறுத்தினர். எனினும், தாய் தனது வயிற்றில் பிள்ளையை சுமக்க முடியும்
என்றால், தாயால் ஏன்? தோளில் சுமக்க முடியாது என்றும் அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த காணொளி, சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்தது.
எனது பிள்ளையை பெரிய பாடசாலைகளில் இணைத்துகொள்ள வேண்டாம் ஒரு சிறிய பாடசாலையிலாவது சேர்த்துக்கொண்டால் போதும் என்றும் மன்றாடினார்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த தாய் நாட்டில் இயற்றப்பட்ட சட்டமொன்றைக் காரணங்காட்டி எனது பிள்ளையை பெரிய பாடசாலைகளில் இணைத்துக்கொள்ள மறுக்கிறார்கள் என்றார்.
புலிகளின் முக்கிய தலைவருக்கு விளக்கமறியல்
புலிகளின் முக்கிய தலைவருக்கு விளக்கமறியல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான செல்வபாக்கியம் சுதாகரன், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் தலைமறைவாகி இருந்தபோது, இலங்கையால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிவித்தலின் பிரகாரம், சர்வதேச பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நாடுக்கு அனுப்பிவைக்கப்பட்ட செல்வபாக்கியம் சுதாகரன் தொடர்பில் சட்டமா அதிபர் விடுத்திருந்த ஆலோசனைக்கு அமையவே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டதன் பின்னர், தங்களுடைய பிரிவில் 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தியதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
புலிகளின் முக்கிய தலைவருக்கு விளக்கமறியல்
எல்.ரி.ரி.ஈ அமைப்பு தொடர்பில் இந்நாட்டு படையினருக்கு தகவல்களை வழங்கிய நபர்களை படுகொலைச் செய்தல் உள்ளிட்டவை இந்த சந்தேகநபர் உள்ளிட்ட குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.
அதற்கான திட்டங்களை இக்குழுவினர் தீட்டி வந்ததாக விசாரணைகளின் ஊடாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
மூதூர் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மேற்படி நபர், 2019 ஆம் ஆண்டு நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண பிரபல தலைவரான “இலங்கீத் மாஸ்டர்” என்பவருடனேயே இவர் தப்பியோடியுள்ளார் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
இவ்விருவம் இந்நாட்டுக்குள் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நிதி சேகரித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்துள்ளனர் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
லண்டன் மலையாள பாலியல் சாமியாரால் ஓடும் பக்தர்கள்
லண்டன் மலையாள பாலியல் சாமியாரால் ஓடும் பக்தர்கள்
பிரிட்டன் லண்டன் புறநகர் பகுதியில் முருகனின் பெயரால் ஆலயம் ஒன்றை அமைத்து ,தன்னை தெய்வ புனிதன் என காண்பித்த காம சாமியாரை காப்பாற்றும் நகர்வில்,சில கூலிகளை செயல்பட்டு வருகின்றன .
பெண்களுடன் ஆபாசமாக பேசி நித்தியானந்தா பாணியில் ,சித்து விளையாட்டு ஆடிய, ஓம் ஓம் சர சவண பாலியல் சாமியார் ,தன்னை மனித புனிதாக்க ,பலத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் .
லண்டன் மலையாள பாலியல் சாமியாரால் ஓடும் பக்தர்கள்
அதற்காக பல ஆயிரம் பவுண்டுகளை வாரி இறைத்து ,கூலிகள் ஊடக தன்னை புனிதனாக காண்பிக்க முயல்கிறார் என முன்னால் பக்த கோடிகள் தெரிவிக்கின்றன .
காணொளியில் பெண்ணுக்கு நாக்கை காட்டுவதும் ,மேலும் அந்தரங்க லீலையில் ஈடுபட்ட்தும் ,பல மக்களிடம் மிரட்டி பணம் பறித்தார் என ,பல பிரதான குற்ற சாட்டுக்கள் முன் வைக்க பட்டதாக ,
கருத்துக்கள் ,காணொளிகளாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன .
இவ்வாறான நிலையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு ,
விசாரணைகளை எதிர்கொண்டு வரும் சாமியார் செயலினால் ,குறித்த ஆலயத்தின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது .
மேலும் சாட்சிகளை மிரட்டி அதில் இருந்து பின்வாங்க வைக்கும் நடவடிக்கையில் ,விஷமிகள் ஈடுபட்டு வருகின்றனர் ..
மேலும் வழக்கை நடத்தி வரும் நபர்களின் பேருக்கு களங்கத்தை ஏற்படுத்தி ,மனசோர்வை உண்டாக்கும் நடவடிக்கையை திட்டம் இட்டு செய்து வருகின்றனர் .
மேலும் பக்த கோடிகள் வரவு வீழ்ச்சியடைந்து விட்டது .அதனால் அந்த ஆலயத்தின் வியாபாரம் தெட்ஷனை வீழ்ச்சியடைந்து விட்டது .
மேலும் தனது வழக்கை திசை திருப்பவுவதில் இருந்து தப்பபிக்கும் நடவடிக்கையில் ஒன்றாக இது பார்க்க படுகிறது .
அதனால் இந்த புனித புதிய கவர்ச்சி விளம்பரத்தில் ,லண்டன் ஓம் ஓம் புடி நித்தியானந்தா சாமியார் ஈடுபட்டுள்ளார் என மக்கள் பேசி கொள்கின்றனர்
வடக்கில் பிறப்பு வீதம் குறைவடைந்து விட்டதால் புலம்பெயர் உறவுகளுக்கு வடக்கு ஆளுனர் விட்ட கோரிக்கை
வடக்கில் பிறப்பு வீதம் குறைவடைந்து விட்டதால் புலம்பெயர் உறவுகளுக்கு வடக்கு ஆளுனர் விட்ட கோரிக்கை
வடக்கில் பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளதாக வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.
இன்று (21.06) கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவிலே பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
வெற்றிடம் என்ற விடயம் கனகராயன்குளம் மகாவித்தியாலத்திற்கு மட்டுமான பிரச்சனை இல்லை. வடக்கு, கிழக்கில் பல இடங்களிலும் காணப்படுகின்ற ஒரு பிரச்சனையாகும்.
வடக்கில் பிறப்பு வீதம் குறைவடைந்து விட்டதால் புலம்பெயர் உறவுகளுக்கு வடக்கு ஆளுனர் விட்ட கோரிக்கை
வடக்கை பொறுத்தவரை சுமார் 194 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையினால் மூடப்பட்டிருக்கின்றது. இதற்கு காரணம் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களை நோக்கி மாணவர்கள் நகரத் தொடங்கியிருக்கின்றமையும், பிறப்பு வீதம் குறைந்து செல்வதுமே ஆகும்.
இதே நிலை மட்டக்களப்பில் 07 வருடங்கள் அரச அதிபராக கடைமையாற்றும் போதும் ஏற்பட்டது. இதற்கும் காரணமாக பிறப்பு வீதம் குறைவடைந்து வருகின்றமை மற்றும் 01ம் வகுப்பிலே மாணவர்களை அனுமதிப்பதில் சில பாடசாலைகளில் பூச்சிய மட்டத்தில் காணப்படுகின்றதாகவும் பிரதேச செயலாளர்களால் அப்போது தெரிவித்தனர்.
எனவே இந்த விடயங்கள் புலம்பெயர்ந்த சமூகத்தினாலும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமூகத்தினாலும் கருத்தில் எடுக்கப்பட வேண்டும். நாங்கள் வாழ வைக்க வேண்டும் என எண்ணுகின்ற எங்களது சமூகம், இந்த பிரதேசம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும் என்பதுடன் இச்சமூகத்தை வாழவைக்கின்ற வழிவகைகளை செய்கின்றவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்.
இதேவேளை, சில விடயங்களின் புள்ளிவிபரங்கள் இச்சமூகத்திலே அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக இச்சமூகத்திலே விவாகரத்து அதிகரித்தல், குழந்தை பேறு குறைவடைந்தமை, வயது சென்ற திருமணங்கள் அதிகரித்து காணப்படுதல் மற்றும் குடிபோதை, போதைவஸ்து, தற்கொலை போன்ற பல்வேறு சமூக பிரச்சனைகள் அதிகரித்து காணப்படுகின்றன.
எனவே இவற்றை எல்லாம் கடந்து இச் சமூகம் வாழ வேண்டும் என்றால் புலம்பெயர்ந்த சமூகம் ஆற்ற வேண்டிய பணி நிறைய இருக்கின்றது. அதேபோன்று சிறிய பணிகளோடு மட்டும் நின்று விடாது இச்சமூகத்திலே புரையோடிப்போயிருக்கின்ற பல்வேறு உளநல பிரச்சினைகளிற்கும் தீர்வு தேட வேண்டிய காலம் தற்போது நிலவுகிறது.
வெறுமனே உரிமை பிரச்சனையோ, அரசியல் பிரச்சனையோ அல்லாமல் எங்களது பிரச்சனைகள் எது என உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இளைய சமூகத்திடமும், மாணவர்களிடையேயும், சிறுவர்களிடையேயும், குடும்பங்களிடையேயும் புரையோடிப்போயிருக்கின்ற சமூக உளநல பிரச்சினைகளிற்கு தீர்வு காண வேண்டிய தேவையும் அவசரமும் இன்று எங்களிடம் காணப்படுகின்றது.
அதை இங்கே கூடியிருக்கின்ற புலம்பெயர் சமூகங்களும், உள்ளூர் சமூகங்களும் இணைந்து செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் பண்டாரவன்னியன் ஆகியோரும் சிலைகள் வவுனியாவில் திறந்து வைப்பு
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் பண்டாரவன்னியன் ஆகியோரும் சிலைகள் வவுனியாவில் திறந்து வைப்பு
வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் வன்னி மன்னன் பண்டாரவன்னியன் ஆகியோரின் சிலைகளும் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம். சாள்ஸ் கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட பாடசாலையின் பிரதான நூழைவாயிலினை திறந்து வைத்ததுடன், கௌரவ விருந்தினர்களான வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர் லெனின் அறிவழகன், மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் த.இராசரத்தினம் ஆகியோரால் திருவள்ளுவர், பண்டாரவன்னியன் மற்றும் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி மறைந்த கலாநிதி அப்துல்கலாம் ஆகியோரின் சிலைகளும் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் பண்டாரவன்னியன் ஆகியோரும் சிலைகள் வவுனியாவில் திறந்து வைப்பு

இதன்போது சாதாரண தரம், உயர்தரம் மற்றும் விளையாட்டுக்களில் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்களிற்கான கௌரவிப்புகளும் இடம்பெற்றிருந்தது.

பாடசாலை அதிபர் கோ.குலேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பாடாசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாண வீதியில் 2 வைத்தியர்கள் வீடுகளின் மீது குண்டுத்தாக்குதல்
யாழ்ப்பாண வீதியில் 2 வைத்தியர்கள் வீடுகளின் மீது குண்டுத்தாக்குதல்
யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் இரு மருத்துவர் வீடுகள் மீது குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட காணிப்பிணக்கு காரணமாக இந்த பெட்ரோல் குண்டு தாக்குதல் இடம் ம்பெற்றுள்ளது .
குறித்த சம்பவத்தை அடுத்து போலீசாரை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் ,
கிழக்கு மாகாண ஆளுநர் ஜப்பானுக்கு விஜயம்
கிழக்கு மாகாண ஆளுநர் ஜப்பானுக்கு விஜயம்
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், மியாசாகி பாராளுமன்ற உறுப்பினர் ஷிம்பே
மட்ஷிதாவை சந்தித்து கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பது குறித்து கலந்துரையாடினார்.
இலங்கையின் நீண்டகால நண்பரான மியாசாகியின் பாராளுமன்ற உறுப்பினர் ஷிம்பே மட்ஷிதாவின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஜப்பான் பாராளுமன்றத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
ஜப்பான் பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தல் மற்றும் இரு தரப்பு சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல் குறித்தும் கலந்துரையாடினார்.
கிழக்கு மாகாண ஆளுநர் ஜப்பானுக்கு விஜயம்
ஜப்பானில் உள்ள மியாசாகி கடற்கரைக்கு வருகை தரும் உலாவர்கள் (sufers) ஊடாக இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள உலகத் தரம் வாய்ந்த உலாவல் இடங்களில் (surf-spot) ஒன்றாக அருகம்பே கடற்கரையை ஊக்குவிக்க கடற்கரை அதிகாரிகள் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.
அத்துடன், அருகம்பே போன்ற உலாவல் இடங்களில் (surf-spot) சமமான ஆற்றலைக் கொண்ட ஜப்பானின் மியாசாகி கடற்கரையை ஊக்குவிப்பது போல், அருகம்பே கடற்கரையை உள்ளூர் அதிகாரிகளால் சர்வதேச உலாவர்களுக்காக (Surfers) ஊக்குவிக்கப்படும் எனவும் ஷிம்பேய் மட்ஷிதாவிடம் கூறினார்.
அருகம்பே கடற்கரையை சர்வதேச உலாவர்களுக்கு (Surfers) ஊக்குவிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஷிம்பேய் மட்ஷிதா ஆளுநரிடம் உறுதியளித்தார்.
மேலும் ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளுக்காக கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தின் சுற்றுலாத் தளங்களை மேம்படுத்துவது குறித்தும் ஆளுநர் கலந்துரையாடினார். அதற்கும் ஷிம்பேய் மட்ஷிதா தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.
ஒருவர் சுட்டு கொலை
கொட்டாவை தர்மபால கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூடடில் ஒருவர் படுகொலை செய்ய பட்டுள்ளார் .
பலியானவர் 33 வயதுடைய இளம் வாலிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது ,இந்த துப்பாக்கி சூட்டு படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவாவில்லை .
போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
மலையக மக்களின் வாக்குகளை ஏலம் போட இடமளியேன்
மலையக மக்களின் வாக்குகளை ஏலம் போட இடமளியேன்
இந்த நாட்டில் ஒட்டு மொத்தமாக மலையக மக்களின் 17 இலட்சம் வாக்குகள் இருப்பதாகவும்இந்த வாக்குகள் இல்லாமல் எதிர்காலத்தில் யாரும் ஆட்சியமைக்கவோ அல்லது ஜனாதிபதி
ஆகவோ முடியாது என்றும் தெரிவித்த பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல்சுரேஷ் இந்த வாக்குகளை எதிர்காலத்தில் எவரும் ஏலம் போட இடமளிக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.
மத்துரட்ட பெருந்தோட்ட நிர்வாகத்தை பொறுப்பேற்று முகாமைத்துவம் செய்யும் ஹைபொரஸ்ட் தோட்ட நிர்வாகம் அத் தோட்ட தொழிலாளர்களுக்கு
இழைத்து வரும் பல்வேறு அநீதிகளுக்கு தீர்வு காணும் வகையில் நுவரெலியா மாவட்ட தொழில் திணைக்களத்தில் திங்கட்கிழமை (19) காலை பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.
மலையக மக்களின் வாக்குகளை ஏலம் போட இடமளியேன்
இதையடுத்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இன்று இந்த நாட்டில் வாழும் எமது ஒட்டு மொத்த மலையக மக்கள் பொருளாதார சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ள அதேநேரத்தில் கல்வியில் சிறந்தவர்களாக, சிந்தித்து செயலாற்றக்கூடிய சக்தியுள்ளவர்களாகவும் இருக்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த காலங்களைப் போல எமது மலையக மக்களின் வாக்குகளை யாரும் விலை பேசிட முடியாது. குறிப்பாக மலையக மக்களின் வாக்குகளை விலை பேசிட இடம் கொடுக்க மாட்டேன்.
ஆகவே மலையக மக்களுடைய இந்த 17 இலட்சம் வாக்குகள் இல்லாமல் யாரும் இந்த நாட்டில் அரசாங்கத்தை அமைக்கவோ அல்லது ஜனாதிபதி ஆகவோ முடியாது என்று நாம் ஒரு தீர்க்கமான முடிவு ஒன்றை எடுப்போம்.
அதேநேரத்தில் எம்மிடத்திலும் சில குறை நிறைகள் உள்ளது. அவற்றை நிவர்த்தி செய்து கொண்டு எமது பிரதநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும்.
அத்துடன் எமது மலையக மக்களுக்கும், மலையகம் சார்ந்த ஏனைய மக்களுக்கும் வாழ்வாதாரம் உட்பட பொருளாதார பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ள இந்த நிலையில் தேர்தல் ஒன்று பற்றி சிந்திக்க முடியாதுள்ளது.
மலையக மக்களின் வாக்குகளை ஏலம் போட இடமளியேன்
அதேநேரத்தில் பெருந்தோட்ட மலையக மக்களுக்கும் மலையகத்தை சார்ந்த ஏனைய மக்களுக்கும் சமுர்த்தி உதவிகள், உலக வங்கியால் வழங்கப்படும் விசேட கொடுப்பனவுகள், வருமானம் குறைந்தவர்களாக வழங்கப்படும் சலுகைகள் எமது மக்களுக்கு வழங்குவது அரிதாக உள்ளது.
ஆகவே மலையக மக்கள் யாவரும் வறுமை காட்டுக்கு கீழ் உள்ளவர்களாக காணப்படுவதால் நாட்டில் ஏனைய மக்களுக்கு வழங்கப்படும் உதவு பட்டியலில் இவர்களும் உள்ளாக்கப்பட்ட வேண்டும் என ஜனாதிபதியிடம் வேண்டுகோள் முன் வைத்துள்ளேன்.
அதேநேரம் ஜனாதிபதி இவ்விடயம் தொடர்பாக அதிகாரிகளை நியமித்துள்ளார்.
எனவே எதிர்காலத்தில் மலையகத்தை சார்ந்த மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி அதிகாரிகள் மற்றும் கிராம உத்தியோகஸ்தர்கள் பொறுப்புடன் செயலாற்றுவார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு நியமிக்கப்படுவோர் தமது பொறுப்புகளை மீறும் பட்சத்தில் அது ஒரு பாரிய பாதிப்பை இந்த நாட்டில் ஏற்படுத்தும். அது தேர்தலிலும் இருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் விடயங்களில் இருக்கலாம்.
எனவே எமது மக்களின் வாழ்வாதார பிரச்சினை பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி பிரச்சின்களுக்கு சிறந்த தீர்வு காணப்படாமல் தேர்தல் ஒன்றுக்கு சிந்திக்க முடியாது” என்றார்
நாடெங்கும் மழை மக்களுக்கு எச்சரிக்கை
நாடெங்கும் மழை மக்களுக்கு எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு
மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடெங்கும் மழை மக்களுக்கு எச்சரிக்கை
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பிரித்தானிய தமிழர்களுக்கு பெருமை சேர்த்த சிறுமி
பிரித்தானிய தமிழர்களுக்கு பெருமை சேர்த்த சிறுமி
ஜோர்ஜியாவில் நடைபெற்ற 8 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான பிரிவில் வாகையாளராக பிரித்தானியா வாழ் தமிழ் சிறுமி முதலாவது இடம் பிடித்துள்ளார்.
லண்டன் கரோ பகுதியை சேர்ந்த போதனா சிவானந்தன் பெண்களுக்கான பிரிவில் வாகையாளராக முதலாவது இடம் பிடித்துள்ளார்.
உலகளவில் நடைபெற்ற இத் தொடரின் Rapid chess மற்றும் Blitz chess ஆகிய இரு வகையான போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
போதனா கலந்து கொண்ட அனைத்துப் போட்டிகளிலுமே வென்றுள்ளார்.தமிழ்நாட்டை சேர்ந்த சிவானந்தன் தம்பதியின் மகளான
போதனா பல அபார திறமைகளை வெளிக்காட்டி வருவதாக பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
நன்றி ஈழம் ரஞ்சன்
வங்கிகள் ஓடாது பணத்தை வைப்பு செய்யுங்கள் அரசு
வங்கிகள் ஓடாது பணத்தை வைப்பு செய்யுங்கள் அரசு
இலங்கையில் உள்ள வங்கிகள் நிதி சீராக உள்ளது ,அவற்ற்றுக்கு பாதிப்பு ஏற்பாடாது எனவும் ,வங்கிகள் நாட்டை விட்டு ஓடாது என,ஆளும் அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர் முழங்கியுளளார் .
இவரது இந்த உத்தரவாத கருத்தின் மூலம் ,இலங்கையில் வாங்கி ஒன்று மிக மோசமான நிதி நெருக்கடிக்கு ,உள்ளாகி போவதாக மறைபொருளில் கூறியுள்ளார் .
வங்கிகள் ஓடாது பணத்தை வைப்பு செய்யுங்கள் அரசு
மக்கள் வங்கிகளில் இருந்து பணத்தை மீள பெற்று வருவதால் ,வங்கிகள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன .
வட்டி வீதங்கள் அதிகமாக வழங்க படுகின்ற பொழுதும் ,மக்கள் அச்ச நிலை காரணமாக பணத்தினை மீள பெற்று வருகின்றமை ,நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது .
மருத்துவர்கள் அடிதடி உடைந்த மண்டை
மருத்துவர்கள் அடிதடி உடைந்த மண்டை
இலங்கை அனுராதபுரம் மருத்துவ மனையில் மூத்த மருத்துவர்கள் இவருக்கு இடையில் , ஏற்பட்ட மோதல் சம்பவம் கை கலப்பில் முடிந்துள்ளது .
இரு மருத்துவர்களுக்கு இடையில் நீண்டகாலமாக உள்ளக பனிப்போர் இடம்பெற்ற வண்ணம் இருந்துள்ளது ,அதுவே ஒருநாள் வெடித்து கிளம்பி அடிதடியில் முடிந்துள்ளது,.
மருத்துவர்கள் அடிதடி உடைந்த மண்டை
பொறுப்பதிகரியாக விளங்கும் மருத்துவர் , நேரம் ,மற்றும் மேலதிக வேலை நேரம் என்பனவற்றை எல்லாமே வெட்டியுளளார் ,மேலும் பல நெருக்கடிகளை வழங்கியுள்ளார் .
இதனால் ஆத்திரம் உற்ற அவர் தாக்குதலை நடாத்தியுள்ளார் ,தற்போது இருவரும் விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர் .
ஒருவருக்கு சுகாதார அமைச்சர் நெருக்கமாக உள்ளதால் ,மற்றவர் பழிவாங்க படலாம் என எதிர் பார்க்க பாடுகிறது .
பலாலி விமான நிலையம் விஸ்தரிப்பு புதிய ஓடுபாதை
பலாலி விமான நிலையம் விஸ்தரிப்பு புதிய ஓடுபாதை
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதைகள் ,புனரமைக்க பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது .
அதற்கு ஏற்ப புதிய ஓடுபாதை மற்றும் ,900 ஈட்டர் ஓடுபாதை புனரமைப்பு என்பன இடம்பெற் உள்ளதாக அறிவித்துள்ளது .
உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பும் ,அதனால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் நோக்குடன் இந்த விஸ்தரிப்பு இடம்பெறுகிறது .
இந்த புதிய அபிவிருத்திக்கு என 168 மில்லியன் ஒதுக்க பட்டுள்ளது .இதில் பல மில்லியன் பொறுப்புள்ளவர்களினாலே ஒதுக்க படும் என எதிர் பார்க்க படுகிறது .
12 வயது சிறுமியுடன் ஓடிய 28 வயது காதலன்
12 வயது சிறுமியுடன் ஓடிய 28 வயது காதலன்
12 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியை கட்டுப்படுத்த முடியவில்லை என அவரது பெற்றோர் வெலிமடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளாா்.
விசாரணைகளின் பின்னர் குறித்த சிறுமி, சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
இருந்த போதிலும், நன்னடத்தை அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட உத்தரவின் அடிப்படையில் சிறுமியின் தந்தை மீண்டும் ஒருமுறை அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தாா்.
12 வயது சிறுமியுடன் ஓடிய 28 வயது காதலன்
இருந்த போதிலும், கடந்த ஜூன் மாதம் 11 ஆம் திகதி சிறுமி வெலிமடை நகரில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சிறுமியை அழைத்துச் சென்று பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில், பொலிஸாரின் சந்தேகத்தின் அடிப்படையில் சிறுமியை மருத்துவரிடம் ஆஜர்படுத்தியபோது, சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டது.
இதையும் மீறி, ஜூன் மாதம் 18ம் திகதி, சிறுமி மீண்டும் நகாில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அதிகாரிகள் அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னா் இது குறித்து பெற்றோருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு வந்த தாயும், தந்தையும் பொலிஸ் நிலையத்தினுள் உள்ள பொது மலசலகூடத்தில் விஷத்தினை குடித்துள்ளனா்.
இதனையடுத்து அவா்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
12 வயது சிறுமியுடன் ஓடிய 28 வயது காதலன்
எனினும் சிகிச்சை பெற்று வந்த சிறுமியின் தந்தை சிகிச்சை முடியும் முன்னரே வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், தாய் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் வைக்கப்பட்ட சிறுமியை பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்ற போதும் உரிய முறையில் பராமரிக்க முடியாத நிலையில் உள்ளதாக தொிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பாலியல் துஷ்பிரயோகம் தொடா்பில் சந்தேகத்தில் 28 வயதான நபரை வெலிமடை பொலிஸார் கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளாா்.
குறித்த நபர் எதிா்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை குறித்து கவலை
மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை குறித்து கவலை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் தொடர்பான சில முன்மொழிவுகளை இலங்கை அரசாங்கம் வருத்தத்திற்குாிய வகையில் நிராகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரேரணைகள் நிராகரிக்கப்பட்ட போதிலும், தமது பேரவையின் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு விஜயம் செய்து தொடர்புகளை பேணி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த தசாப்தத்தில் பேரவையின் பல பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்து அவர்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அதிகாரிகளை ஊக்குவித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை குறித்து கவலை
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடரை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஜெனீவாவில் நேற்று (19) ஆரம்பமான இந்த அமர்வு எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இலங்கை தொடர்பான உலகளாவிய காலமுறை மீளாய்வு தொடர்பான செயற்குழுவின் அறிக்கையும் இங்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.
கண்டி வீதியில் இடம்பெற்ற கோர விபத்து
கண்டி வீதியில் இடம்பெற்ற கோர விபத்து
கொழும்பு – கண்டி வீதியில் நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (20) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து கண்டி திசை நோக்கி இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று எதிர்திசையில் வந்த பௌசருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கண்டி வீதியில் இடம்பெற்ற கோர விபத்து
விபத்தின் போது, வேனில் 6 இராணுவ அதிகாரிகள் இருந்ததாகவும், அவர்களில் 5 பேர் காயமடைந்து வத்துப்பிட்டியல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
பின்னா், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.
பொல்ஹேன்கொடை இராணுவ முகாம் அதிகாரிகள் குழுவொன்று கிரிதலே முகாமிற்கு கடமைகளுக்காக சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடா்பில் பௌசரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி மாணவி சாதனை
கிளிநொச்சி மாணவி சாதனை
கிளிநொச்சி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி டி சனுஜா, இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய ஓபன் சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் -2023 போட்டியில் 3வது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இந்தப் போட்டி, ஜூன் 17/18 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
சீமெந்து விலை அதிகரிப்பு
சீமெந்து விலை அதிகரிப்பு
சீமெந்து மீதான இறக்குமதி வரியை அரசாங்கம் திருத்தியமைத்துள்ள நிலையில், ஜூன் 17ஆம் திகதி முதல் சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கூற்றுப்படி, 1 கிலோ கிராம் செயற்கை வண்ணமூட்டப்பட்ட மற்றும் நிறமற்ற சீமெந்துக்கு விதிக்கப்பட்ட CESS வரியானது 3 ரூபாயிலிருந்து ரூ. 5.00 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சீமெந்து விலை அதிகரிப்பு
50 கிலோ மற்றும் அதற்கும் குறைவான பொதிகளில் இறக்குமதி செய்யப்படும் மற்ற போர்ட்லேண்ட் சீமெந்துக்கான செஸ் வரி ரூ. 5 இலிருந்து ரூ. 8.00 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேவேளை 50 கிலோவுக்கு மேலான சீமெந்துக்கான செஸ் வரி ரூ. 3.00 முதல் ரூ. 5 வரை உயர்த்தப்பட்டுள்ளது


























