கெமராவில் பதிவான கோர விபத்து
Posted in இலங்கை செய்திகள்

கெமராவில் பதிவான கோர விபத்து

கெமராவில் பதிவான கோர விபத்து

பாணந்துறை நல்லுருவ பிரதேசத்தில் கெப் வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (04) நள்ளிரவு 12 மணியளவில் காலி – கொழும்பு பிரதான வீதியில் நல்லுருவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து கெப் வண்டியின் முன்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த கெமராவில் பதிவாகியுள்ளது.

களுத்துறையில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த கெப் வண்டி, முன்னால் பயணித்த டிப்பர் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது, ​​கெப் வண்டியின் அதிவேகத்தினால் வீதியை விட்டு விலகி மோட்டார் சைக்கிள் சேவை நிலையம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

கெமராவில் பதிவான கோர விபத்து

இந்த விபத்தில் மின்கம்பம் மற்றும் மின் கம்பிகள் பலத்த சேதமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள் சேவை நிலையத்திற்கும் பாரிய சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கெப் வண்டியின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

பிரான்ஸல் 14 தமிழருக்கு சிறை
Posted in இலங்கை செய்திகள்

சிறைச்சாலை அதிகாரி மீது தாக்குதல் ஐவர் கைது

சிறைச்சாலை அதிகாரி மீது தாக்குதல் ஐவர் கைது

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம பேருந்து நிலையத்திற்கு அருகில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

நேற்று (05) மாலை குறித்த அதிகாரி தனது கடமையை முடித்துக்கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதிகாரி வீடு நோக்கி பேருந்தில் பயணித்த போது அதில் ஏறிய 05 பேர் கொண்ட கும்பல் அவரைத் தாக்கியுள்ளது.

சிறைச்சாலை அதிகாரி மீது தாக்குதல் ஐவர் கைது

தாக்குதலினால் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி, மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரி நேற்று முன்தினம் (04) மாத்தறை சிறைச்சாலையிலிருந்து இடமாற்றம் பெற்று காலி சிறைச்சாலைக்கு கடமைக்காக நேற்றைய தினமே (5) சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மகிந்தா விமான நிலையத்தில் 4281 கோடி ரூபாய் நட்டம்
Posted in இலங்கை செய்திகள்

மகிந்தா விமான நிலையத்தில் 4281 கோடி ரூபாய் நட்டம்

மகிந்தா விமான நிலையத்தில் 4281 கோடி ரூபாய் நட்டம்

2017 முதல் 2022 வரையிலான 5 ஆண்டுகளில் மத்தள சர்வதேச விமான நிலையம் 4 ஆயிரத்து 281 கோடி ரூபாய் நட்டமடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தள ராஜபக்ச விமான நிலையத்திற்கு கடந்த வருடம் மாத்திரம் 2 ஆயிரத்து 221 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனத்தின் கணக்காய்வுகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்தா விமான நிலையத்தில் 4281 கோடி ரூபாய் நட்டம்

2022 ஆம் ஆண்டில் விமான நிலையத்தின் செயல்பாட்டுச் செலவு 203 கோடி ரூபா என்றும், இது அதன் இயக்க வருமானத்தை விட 26 மடங்கு அதிகம் என்றும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்தள விமான நிலையத்தின் 2022ஆம் ஆண்டுக்கான வரிக்குப் பிந்திய நட்டம் 2,221 கோடி ரூபாவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது

சொக்லேட்டில் கட்டைவிரல்
Posted in இலங்கை செய்திகள்

சொக்லேட்டில் கட்டைவிரல்

சொக்லேட்டில் கட்டைவிரல்

கொள்வனவு செய்யப்பட்ட சொக்லேட்டில் “கட்டைவிரல்” பகுதி காணப்பட்டதையடுத்து, மஹியங்கனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அறிவித்ததையடுத்து, மஹியங்கனை பொது சுகாதார பரிசோதகர் விசேட பரிசோதனையை மேற்கொண்டார்.

மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர், வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் இருந்து சொக்லேட்டை கொள்வனவு செய்துள்ளார்.

உணவகத்தை பரிசோதித்த பொது சுகாதார பரிசோதகர்கள் ஏனைய சொக்லேட் பொருட்களையும் கைப்பற்றினர், பின்னர் மஹியங்கனையில் உள்ள பல்பொருள் அங்காடியின் அலுமாரிகளை சோதனையிட்டதுடன் தொடர்புடைய வகையைச் சேர்ந்த சொக்லேட்டுகளையும் கைப்பற்றினர்.

விமான எதிர்ப்பு தோட்டாக்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

விமான எதிர்ப்பு தோட்டாக்கள் மீட்பு

விமான எதிர்ப்பு தோட்டாக்கள் மீட்பு

விமான எதிர்ப்பு தோட்டாக்கள், கைக்குண்டுகள், வெடிபொருட்கள் மற்றும் ஆயுத பாகங்கள் என்பனவற்றை களனிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் குழு சோதனை செய்து கண்டெடுத்துள்ளது.

சீதுவ லியனகெமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள 8 ஏக்கர் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை மீட்கப்பட்டுள்ளன.

விமான எதிர்ப்பு வெடிமருந்துகள் இரண்டு, ஒரு கைக்குண்டு, ஒரு எல்எம்ஜி தோட்டாக்கள், இரண்டு வகையான வெடிபொருட்கள், ஒரு சிறிய துப்பாக்கியின் 17 பாகங்கள், ஒரு டெட்டனேட்டர், இரண்டு வாட்டர் ஜெல் குச்சிகள் மற்றும் பத்து தோட்டாக்கள் அடங்கிய சரம் ஒன்றையும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விமான எதிர்ப்பு தோட்டாக்கள் மீட்பு

அனுலியனகேமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள இத்தோட்டத்தின் நிறைவின் போது மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் இவற்றை கண்டுபிடிக்க முடிந்துள்ளது.

இவற்றை எடுத்துச் சென்று இந்தத் தோட்டத்தில் மறைத்து வைத்திருந்தவர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவற்றை மறைத்து வைத்தவர்கள் பற்றிய தகவல்களை வெளிக்கொண்டு வந்து அவர்களைக் கைது செய்ய களனிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

தொலைபேசி கம்பித் திருடர்கள் கைது

தொலைபேசி கம்பித் திருடர்கள் கைது

கிரிஉல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதுகல சந்தியிலிருந்து பிஹல்பொல நோக்கி செல்லும் பிரதான வீதியில் உள்ள தொலைபேசி கம்பிகளை அறுத்துத் திருடிய இருவரை நேற்று (05) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 மற்றும் 59 வயதுடைய நாரம்மல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று (06) குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கிரிஉல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

வியப்பூட்டும் வகை புழு கண்டுப்பிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வியப்பூட்டும் வகை புழு கண்டுப்பிடிப்பு

வியப்பூட்டும் வகை புழு கண்டுப்பிடிப்பு

வியப்பூட்டும் வகை புழுவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 46,000 ஆண்டுகள் பழமையான இந்த புழு இனத்தை விஞ்ஞானிகள் சைபீரியாவில் பனி மூடிய வனப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வின் போது கண்டுபிடித்தனர்.

இந்த உறங்கும் புழுக்களுக்கு விஞ்ஞானிகளால் தண்ணீர் மற்றும் உணவு வழங்கப்பட்டது, அதன் பிறகு அவை உறக்கநிலையிலிருந்து வெளியே வந்து விழித்திருந்தன

வியப்பூட்டும் வகை புழு கண்டுப்பிடிப்பு

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த புழு ப்ளீஸ்டோசீன் Pleistocene சகாப்தத்தின் கடைசி பாதியில் இருந்து ஒரு விலங்கு இனமாகும்.யானைகளைப் போன்ற கம்பளி மாமத்கள் இந்தக் காலத்தில் வாழ்ந்தன.

இந்த புழுக்களுக்கு விஞ்ஞானிகள் காலத்தை கடந்து செல்லக்கூடிய அற்புதமான புழுக்கள் என்று பெயரிட்டுள்ளனர்.

ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

மர்ம காய்ச்சலால் பலர் மரணம்

மர்ம காய்ச்சலால் பலர் மரணம்

காய்ச்சல் காரணமாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது ஒரே மகன் ஞாயிற்றுக்கிழமை (06) காலை உயிரிழந்துள்ளதாக மேற்படி மாணவனின் தந்தை எம்.என்.இஸ்திகார் தெரிவித்தார்.

அப்துல் அஸீஸ் என்ற பதின்மூன்று வயது சிறுவனே உயிரிழந்துள்ளார். இவர் நீர்கொழும்பு, நீர்கொழும்பு அல்-ஹிலால் தேசிய பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயின்று வந்தார்.

மரணம் குறித்து தந்தை கருத்து தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, அவனுக்கு தலைவலியுடன் காய்ச்சல் ஏற்பட்டது. அவ்வப்போது காய்ச்சல் குறைந்து கொண்டே வந்தது. பின்னர் சனிக்கிழமை (05) இரவு எனது மகன் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்துள்ளார்.

மர்ம காய்ச்சலால் பலர் மரணம்

இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக இரவு 10.30 மணியளவில் எமது மகனை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதித்தோம்.

அங்கு மகன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.டாக்டர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டனர். என் மகன் இரவு உணவைக் கூட எடுத்துக்

கொண்டான். ஆனால் மகனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. எனது மகன் ஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை 12.20 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

மாணவனின் சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

புகையிரதத்தில் மோதி பெண் பலி

புகையிரதத்தில் மோதி பெண் பலி

யாழ்ப்பாணம், புங்கன்குளம் புகையிரத நிலையத்துக்கு அருகில், புகையிரதத்தில் மோதுண்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று மதியம் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற
புகையிரதத்தில் மோதியே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

பிரான்சில் லட்சம் யூரோ வியாபாரமாகும் தமிழ் கடை video
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பிரான்சில் லட்சம் யூரோ வியாபாரமாகும் தமிழ் கடை video

பிரான்சில் லட்சம் யூரோ வியாபாரமாகும் தமிழ் கடை video

லட்சம் யூரோ வருமானமானமாக ஈட்டி கொள்ளும் தமிழர் பல் பொருள் மொத்த கொள்வனவு மையம்,
மலிந்த விலையில் தரமான உணவுகள் இன்றே நாடுங்கள்

Sas Roi Import Export
Distribution
5place henri moissan
94460 Valenton

Telphone 0033 98063 8942
mobile 0033 758 196129

மன்னாரில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மன்னாரில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு

மன்னாரில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு

மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடிக்கு சற்று தொலைவில் உள்ள கடற்கரை பகுதியில் கடந்த 2 ஆம் திகதி மாலை கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண மன்னார் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

உயிரிழந்தவர் சுமார் 30 தொடக்கம் 50 வயது மதிக்கத்தக்க 4.8 அடி உயரம் கொண்ட ஆண் எனவும், கருப்பு நிற நீள கை சேட், கருப்பு நிற அரைக்காற்சட்டை மட்டும் நீல நிற பெட்டி சாரம் அணிந்திருந்ததாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு

மேலும் அவர் அணிந்துள்ள கருப்பு நிற அரைக் காற்சட்டையில் (SRI LANKA CRICKET ) என எழுதப்பட்டுள்ளது.

மேலும் அவருடைய கருப்பு நிற நீள கை சேட் பொக்கட்டில் 120 ரூபாய் பணம் காணப்பட்டுள்ளதோட, குறித்த பொக்கட் குண்டுப்பின்னினால் குத்தப்பட்டுள்ளது.

குறித்த சடலத்தின் முன் பக்கம் தட்டையாகவும் பின் பக்கம் முடியும் காணப்படுகின்றது.

எனவே குறித்த சடலம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் அல்லது அடையாளம் காண விரும்புபவர்கள் மன்னார் பொலிஸ் நிலையம் அல்லது மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையுடன் தொடர்பை ஏற்படுத்துமாறு மன்னார் பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

வெலிவேரிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

வெலிவேரிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

இன்று (05) காலை வெலிவேரிய, அம்பறலுவ வீதி, ஜூபிலி மாவத்தை பகுதியில் காரில் பயணித்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் மோட்டார் சைக்கிளை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு சிறிய லொறியில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிவேரிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

காயமடைந்தவர் உடுகம்பொல, மாதல்கமுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

அவர் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில், தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெலிவேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் ரூபா நிதி
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் ரூபா நிதி

இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் ரூபா நிதி

இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் இந்திய ரூபா நிதி மானியமாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த பணத்தொகையை கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றின் போது, இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கைக்கான நிதி மானியத்தை வழங்கியுள்ளார்

கவிழ்ந்த பயணிகள் பேரூந்து
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இன்று (04) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தம்புத்தேகம, ஏரியகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 8 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருநாகலில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியோரத்தில் நிற்கும் போது, ​​அதே திசையில் பயணித்த வேன் லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியாவில் இனி இவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது
Posted in இலங்கை செய்திகள்

நுவரெலியாவில் இனி இவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது

நுவரெலியாவில் இனி இவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது

நேற்று (04) முதல் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள வனவிலங்குகள் மற்றும் வன பாதுகாப்பு வலயங்களுக்குள் பிரவேசிப்பது அல்லது மலைகளில் முகாமிடுவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் திணைக்களம், வன பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் செயலாளர் தலைமையில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பட்டம் பறக்கவிட தடை
Posted in இலங்கை செய்திகள்

பட்டம் பறக்கவிட தடை

பட்டம் பறக்கவிட தடை

நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் பட்டங்களை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தை சுற்றி 5 கிலோமீற்றர் எல்லைக்குள் 300 அடிக்கு அப்பால் காற்றில் பட்டம் பறக்கவிடுவது அல்லது விமானத்தின் செயல்பாடுகளுக்கு இடையூறாக பட்டம் பறக்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை பொருட்படுத்தாமல் யாரேனும் ஒருவர் செயல்பட்டால், அவ்வாறானவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது

70 பயணிகளுடன் பயணித்த பஸ் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

சாவகச்சேரியில் பஸ் விபத்து; சாரதி படுகாயம்

சாவகச்சேரியில் பஸ் விபத்து; சாரதி படுகாயம்

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் நேற்று(03) இரவு 7 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் பஸ் சாரதி படுகாயம் அடைந்துள்ளார்.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று புத்தூர் சந்தி பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது.

சாவகச்சேரியில் பஸ் விபத்து; சாரதி படுகாயம்

இவ்விபத்தினால் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில், பஸ் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

விபத்து இடம்பெறுவதற்கு சற்றுமுன்னர் திடீரென பஸ்ஸின் பிரேக் மற்றும் ஸ்ரேறிங் இயங்கவில்லை என சாரதி தெரிவித்த சில விநாடிகளில் விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கி சூடு

வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கி சூடு

பன்றி இறைச்சி விநியோகத்தில் ஈடுபட்டிருந்த பணக்கார வர்த்தகரின் வீட்டின் மீது இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் நேற்று(03) இரவு 7.00 மணியளவில் வந்த இருவரே துப்பாக்கிப்பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது வர்த்தகர் மற்றும் அவரது குடும்பத்தினர் உடனிருந்ததாகவும், ஆனால் அவர்களில் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை எனவும் அப்பகுதியின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கி சூடு

இரண்டு மாடிகளைக் கொண்ட இந்த வீட்டின் வாயில் மற்றும் சுவர்களில் துப்பாக்கி குண்டுகள் பதிந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் இந்த வர்த்தகரிடம் கப்பமாக பல இலட்சம் ரூபாவை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோரப்பட்ட கப்பம் செலுத்தாததால் அவரது கையாட்கள் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தனக்கு தகவல் கிடைத்ததாக மூத்த பொலிஸ் அதிகாரி கூறினார்.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் 57 வயதான நபர் கைது

இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் 57 வயதான நபர் கைது

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 மற்றும் 10 வயதுடைய சகோதரிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை (taJ 57) மொனராகலை பொலிஸாரால் வியாழக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளார்..

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரகெட்டிய பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் மொனராகலை மதுரெகெட்டிய இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தில் கள அதிகாரியாக கடமையாற்றுகின்றார்.

அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த இவர், மதுருகெட்டிய பிரதேசத்தில் உள்ள வீட்டில் சில காலமாக அறையில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.

இரண்டு சிறுமிகளின் தாயும் தந்தையும் கூலித்தொழிலாளர்களாக வாழ்ந்து வருவதுடன், வீட்டில் இருந்து வெளியில் சென்ற போது சந்தேகநபரால் இரண்டு சிறுமிகளும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் 57 வயதான நபர் கைது

சிறுமிகள் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரை மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மொனராகலை தலைமையக பொலிஸ் பரிசோதகர் பி.எஸ்.சர்மிந்த சஞ்சீவ விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

கொத்துக் கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்
Posted in இலங்கை செய்திகள்

கொத்துக் கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்

கொத்துக் கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்

மல்லாவி குளத்தில் விவசாயத்துக்கு நீர் விநியோகிக்கும் கால்வாயில் இலட்சக்கணக்கான மீன் இறந்து மிதக்கின்றன.

தற்போது நிலவுகின்ற கடுமையான வெயில் காரணமாக குறித்த குளத்தின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ள நிலையில் மீன் இறந்திருக்கலாம் என்று பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த மீன் குஞ்சுகள் சில மாதங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்டு குளத்தில் விடப்பட்டவை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.