Tag: மில்லியன் ரூபா
இலங்கைக்கு 450 மில்லியன் ரூபா வழங்கிய இந்தியா
இலங்கைக்கு 450 மில்லியன் ரூபா வழங்கிய இந்தியா
நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலின் அடிப்படை அடித்தளமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை (Sri Lanka Unique Digital Identity SL-UDI) துரிதமாக நடைமுறைப்படுத்த இந்திய – இலங்கை திட்டக் கண்காணிப்பு குழு தீர்மானித்துள்ளது.
தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே,
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் எம். எல்டோஸ் மெதிவ், தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் பேராசிரியர் எம்.டி. குணவர்தன, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க,
ஜனாதிபதி செயலக மேலதிக செயலாளர் கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய இந்த மேற்பார்வைக் குழு ஜனாதிபதி அலுவலகத்தில் கூடி இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடியது.
இலங்கைக்கு 450 மில்லியன் ரூபா வழங்கிய இந்தியா
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கேள்விப்பத்திரம் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், உரிய கால வரையறையின் படி அவை பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.
இதன்படி, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக முற்பணமாக இத்திட்டத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட தொகையில் 15% சதவீதமான,
அதாவது 450 மில்லியன் இந்திய ரூபா பெறுமதியான காசோலையை, இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்திடம் கையளித்தார்.
உரிய கால வரையறைக்கமைய இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும், வாரத்திற்கு ஒருமுறை கூடி அதன் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யுமாறும் சாகல ரத்நாயக்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
இந்திய – இலங்கை ஒத்துழைப்பின் கீழ் செயற்படுத்தப்படும் இத்திட்டம், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்த சாகல ரத்நாயக்க, இதற்காக இந்திய அரசாங்கம் வழங்கும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியதுby நிருபர் காவலன்
- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கைby நிருபர் காவலன்
- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்துby நிருபர் காவலன்
- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுby நிருபர் காவலன்
- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்by நிருபர் காவலன்
இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் ரூபா நிதி
இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் ரூபா நிதி
இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் இந்திய ரூபா நிதி மானியமாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த பணத்தொகையை கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றின் போது, இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கைக்கான நிதி மானியத்தை வழங்கியுள்ளார்
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது
by நிருபர் காவலன் - கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை
by நிருபர் காவலன் - ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து
by நிருபர் காவலன் - கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
by நிருபர் காவலன் - யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்
by நிருபர் காவலன்
இலங்கை இராணுவத்தால் 335 மில்லியன் ரூபா போதைவஸ்து மீட்பு
இலங்கை இராணுவத்தால் 335 மில்லியன் ரூபா போதைவஸ்து மீட்பு
இலங்கை இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற உளவு தகவலை அடுத்து ,நடத்த பட சுற்றிவளைப்பில் 12 கிலோ எடையுள்ள கொரோயின் போதைவஸ்து மீட்க பட்டுள்ளது .
ஆட்டோ ஒன்றின் மூலமாக மேற்கொள்ள படவிருந்த கடத்தல் ,இவ்விதம் முறியடிக்க பட்டுள்ளது .
சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பில் ,இந்த பெரும் கடத்தல் முறியடிக்க பட்டுள்ளது .
கைதான இருவரும் தீவிரவிசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர் .
மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கபட்ட பாதை திறப்பு
நுவரெலியா மாவட்டம் உடபுஸ்ஸல்லாவ பிரதேசத்திற்கு உட்பட்ட பெரிக் தோட்டத்திற்கு 01 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கபட்ட கொங்ரீட் பாதை .
பாவனையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு முன்னால் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் மலையக.
மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதாகிஸ்ணன் அவர்களின் தலைமையில் மில்லியன் ரூபா நடைபெற்றது.
இந் நிகழ்வில் தோட்ட பொது மக்கள் உட்பட கட்சியின் உயர் அங்கத்தினர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
மில்லியன் ரூபா செலவு மக்களை குசியில் அமர்த்தியுள்ளது .











