Tag: தப்பிச் சென்ற பொலிஸ்
தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளின் தாய் மற்றும் மச்சானுக்கு நேர்ந்த கதி
தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளின் தாய் மற்றும் மச்சானுக்கு நேர்ந்த கதி
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிடியில் இருந்து ஹரக் கட்டா தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படும் தற்போது தலைமறைவாகியுள்ள பொலிஸ் கான்ஸ்டபிளின் தாயாரையும், மற்றுமொரு நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளின் தாய் மற்றும் மச்சானுக்கு நேர்ந்த கதி
இதேவேளை, சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிளின் காரும் மாத்தறை பிரதேசத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள மற்றைய நபர் கான்ஸ்டபிளின் சகோதரியின் கணவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்திற்காக இவர்கள் உதவியுள்ளமை தெரியவந்துள்ளதை
தொடர்ந்து பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்by நிருபர் காவலன்
- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்by நிருபர் காவலன்
- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்கby நிருபர் காவலன்
- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டுby நிருபர் காவலன்
- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவுby நிருபர் காவலன்












