தபால் வாக்காளர்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கவும்
Posted in இலங்கை செய்திகள்

தபால் வாக்காளர்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கவும்

தபால் வாக்காளர்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கவும்

தபால் வாக்காளர்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கவும் ,தமிழரசு கட்சியின் சஜித்தை ஆதரிக்கும் அறிவிப்பானது எமது பொது வேட்பாளர் விடயத்தை பாதிப்படையச் செய்யும். வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் (தபால்)

வாக்காளர்கள் எமது சங்கு சின்ன வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வாரம் இடம்பெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிக்கும் வாரமாக இருப்பதனால் வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் உறுதியாக தபால் மூலம் வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் எமது சங்கு சின்ன வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த பொது வேட்பாளர் விடயத்தில் சிவில் சமூக அமைப்பினர் நமக்கு ஒரு உத்தரவாதத்தினை வழங்கியிருந்தனர். தமிழரசு கட்சியையும் இந்தக் கட்டமைப்புக்குள் கொண்டு வந்து எமது பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்ற விடயத்தில் தெரிவித்திருந்தனர்.

ஆனால் தமிழரசு கட்சிக்குள்ளேயே இவ்விடயம் சம்பந்தமாக இரு வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் நேற்று இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு தமது ஆதரவை தெரிவிப்பதாக அறிவித்திருந்தனர.;

இந்த அறிவிப்பானது எமது பொது வேட்பாளர் விடயத்தை பாதிப்படையச் செய்யும் இதற்குரிய முடிவை மக்கள் உரிய காலத்தில் வழங்குவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இன்று அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

தமிழரசு கட்சியின் சஜித்தை ஆதரிக்கும் அறிவிப்பானது எமது பொது வேட்பாளர் விடயத்தை பாதிப்படையச் செய்யும். வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் (தபால்) வாக்காளர்கள் எமது சங்கு சின்ன வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வாரம் இடம்பெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிக்கும் வாரமாக இருப்பதனால் வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் உறுதியாக தபால் மூலம் வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் எமது சங்கு சின்ன வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த பொது வேட்பாளர் விடயத்தில் சிவில் சமூக அமைப்பினர் நமக்கு ஒரு உத்தரவாதத்தினை வழங்கியிருந்தனர். தமிழரசு கட்சியையும் இந்தக் கட்டமைப்புக்குள் கொண்டு வந்து எமது பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்ற விடயத்தில் தெரிவித்திருந்தனர். ஆனால் தமிழரசு கட்சிக்குள்ளேயே இவ்விடயம் சம்பந்தமாக இரு வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் நேற்று இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு தமது ஆதரவை தெரிவிப்பதாக அறிவித்திருந்தனர்.

இந்த அறிவிப்பானது எமது பொது வேட்பாளர் விடயத்தை பாதிப்படையச் செய்யும் இதற்குரிய முடிவை மக்கள் உரிய காலத்தில் வழங்குவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இன்று அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊட சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் ,சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி பகுதியில் கடந்த முதலாம் திகதி (1) இரவு இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாவடி தெற்கு பத்திரகாளி கோவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இரவு 9:30 மணி அளவில் உள் நுழைந்த மர்ம நபர்கள், இளைஞன் மீது வாள் வெட்டினை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 22 வயதான இளைஞன் கையில் வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .

நான்கு பேர் கொண்ட குழுவே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட இளைஞன் சுண்ணாகம் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் கடந்த வருடம் குறித்த இளைஞன் மீதும் தாயார் மீதும், தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த வாள்வெட்டு தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தெரியவராத நிலையில், மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் குற்றத் தடுப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

அர்ச்சுனாவுக்கு நடந்தது என்ன மக்கள் அழுகை
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவுக்கு நடந்தது என்ன மக்கள் அழுகை

அர்ச்சுனாவுக்கு நடந்தது என்ன மக்கள் அழுகை

அர்ச்சுனாவுக்கு நடந்தது என்ன மக்கள் அழுகை ,மருத்துவர் அர்ச்சுனாவுக்கு என்ன நடந்தது அறை திறக்க படவில்லை .

கைது செய்யப்பட்டாரா அல்லது அவர் ஏதும் செய்து கொண்டாரா என்பது தொடர்பாக தெரியவில்லை .

மக்கள் தற்போது பெரும் ; பதட்டத்தில் உறைந்து கொண்டுள்ளனர்

வீடியோ live

பாடல் பொதுவேட்பாளருக்கு வெளியீடு
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

பாடல் பொதுவேட்பாளருக்கு வெளியீடு

பாடல் பொதுவேட்பாளருக்கு வெளியீடு

பாடல் பொதுவேட்பாளருக்கு வெளியீடு செய்யப்பட்டுள்ளது ,சங்கு சின்னத்திற்கு வாக்கினை அளிக்குமாறுஇ கோரி இந்த புதிய பாடல் ஒன்று வெளியிட பட்டுள்ளது .

பிரான்சை சேர்ந்த ஈழத்து பாடகராக விளங்கும் மயிலையூர் இந்திரன் அவர்களினால் எழுத பட்டு ,பாட பட்டுள்ளது .இதற்க்கு 13 வயது சிறுவன் இசை அமைத்து வெளியிட பட்டுள்ளது .

பொது வேட்பாளர் மிக முக்கியமாக கருதப்படுவதால் இந்த பாடல் அவருக்காக விரைந்து உருவாக்கம் பெற்று வெளியிட பட்டுள்ளது .

இந்த பாடல் உருவகத்தில் ஈடுபட்ட இந்திரன் மற்றும் இசை அமைப்பாளருக்கும் இவ்வேளை எதிரி இணையம் பாராட்டையும் வாழ்த்தினையும் தெரிவித்து கொள்கிறது .

இதில் அழுத்தி பாடல் பார்க்கலாம்

காய்ச்சல் பறந்ததது மாவை கொண்டாட்டம்
Posted in இலங்கை செய்திகள்

காய்ச்சல் பறந்ததது மாவை கொண்டாட்டம்

காய்ச்சல் பறந்ததது மாவை கொண்டாட்டம்

காய்ச்சல் பறந்ததது மாவை கொண்டாட்டம் ,தமிழரசு கட்சியின் கூட்டத்தில் கலந்து கொள்ள காய்ச்சல் காரணமாக தவறிய மாவை சேனாதிராசா தோழர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் .

யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள தர்மலிங்கம் நினைவு தூபியில் ,அவரது நினைவு நாளில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் .

இதில் தர்மலிங்கத்தின் மகனான சித்தார்த்தன் ,அவருடன் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஆகியோர் கலந்து கொண்டு தமது நினைவு அஞ்சலியை செலுத்தி .கொண்டனர்

இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாக ,தமிழரசு கட்சி செயலாற்ற போவதாக அறிவிக்க பட்ட நிலையில் ,மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியது .

அதனை அடுத்து தற்பொழுது தமிழரசு கட்சி பொதுவேட்பாளருக்கு ஆதரவு தரமறுத்து சஜித்துக்கு ஆதரவை வழங்கிட முன் வந்த நிலையில் ,அந்த கட்சியின் கூட்டத்தில் வக்கெடுப்பில் கலந்து கொள்ள தனக்கு காய்ச்சல் சுகவீனம் என கூறி தப்பித்து கொண்ட மாவை தற்போது தோழர் நினைவிடத்தில் கொட்டாவி விட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார் .

பெட்டிகளுக்கு இவர்கள் பேரம் போயுள்ளது இந்த கட்சி படத்தை பார்க்கின்ற பொழுது தெளிவாகிறது .

அரசியல் வியாபாரிகள் இவர்கள் என மக்கள் கோரியது உண்மை தான் போலும் .

உள்வீட்டில் வெடித்த சண்டை சுமந்திரனை தோற்கடியுங்கள்
Posted in இலங்கை செய்திகள்

உள்வீட்டில் வெடித்த சண்டை சுமந்திரனை தோற்கடியுங்கள்

உள்வீட்டில் வெடித்த சண்டை சுமந்திரனை தோற்கடியுங்கள்

உள்வீட்டில் வெடித்த சண்டை சுமந்திரனை தோற்கடியுங்கள்,தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் ,உள்ளே வெடித்த உச்ச சண்டைகள் .

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் கட்சிக்கு உள்ளேயே பாரிய நெருக்கடியை கொடுத்து அந்த கட்சியின் வளர்ச்சியை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்த பட்டுள்ளது .

சங்கிற்கு மக்கள் ஆதரவு அளித்து வரும் நிலையில் தற்போது திடீரென சஜித்துக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக சுமந்திரன் ஆதரவாளர்கள் நடத்திய வாக்கெடுப்பு நடவடிக்கையும் ,உள்வீட்டு சதிகளும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

பெட்டியை வாங்கிவிட்டு சுமந்திரன் இவ்விதம் செய்துள்ளதாக மக்கள் மன்றம் கருத்து தெரிவித்துள்ளது .

சுமந்திரன் திட்டமிட்டு கட்சியை உடைத்து ,தமிழ் தேசிய கனவை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவே மக்கள் மன்றம் குற்றம் சுமத்துகிறது .

3 சிறுவர்களின் உயிரை காப்பாற்றிய சம்பவம்
Posted in இலங்கை செய்திகள்

3 சிறுவர்களின் உயிரை காப்பாற்றிய சம்பவம்

3 சிறுவர்களின் உயிரை காப்பாற்றிய சம்பவம்

கல்கிஸ்ஸ கடலில் நீராடிக்கொண்டிருக்கையில் அடித்துச் செல்லப்பட்ட 3 சிறுவர்களை குறித்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த கல்கிஸ்ஸ பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் காப்பாற்றியுள்ளனர்.

3 சிறுவர்களும் கடலில் நேற்று (01) பிற்பகல் நீராடிக்கொண்டிருந்த வேளையில் இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர்கள் உடனடியாக விரைந்து 3 சிறுவர்களையும் மீட்டு, அடிப்படை முதலுதவி அளித்த பின், களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

கொழும்பு 9 இல் வசிக்கும் 16 வயதுடைய 3 சிறுவர்களே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு ,கொஸ்கொட கடற்கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மனித சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கொஸ்கொட பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவ்வாறு ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளமையால் குறித்த நபர் பல நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலம், பிரேத பரிசோதனைக்காக பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குத்துகாரணம் அடித்த மாவை
Posted in இலங்கை செய்திகள்

குத்துகரணம் அடித்த மாவை

குத்துகரணம் அடித்த மாவை

குத்துகரணம் அடித்த மாவை ,பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அறிவிப்பு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சி, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கியமை குறித்த செய்தி ஊடகங்கள் வாயிலாகவே தாம் அறிந்து கொண்டதாக எமது செய்தி சேவை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் தெரிவித்தார்.

எனினும் தமிழரசுக் கட்சி மத்திய குழுத் தீர்மானம் என்பது கூட்டு தீர்மானே என கட்சியின் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர், சஜித் பிரேமதாசவிற்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர், கூட்டத்தின் பின் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்து இருந்தார்.

அதனை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா மறுப்பு தெரிவித்து அது கட்சியின் தீர்மானம் இல்லை என தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் மாவை சேனாதிராஜா கலந்து கொள்ளவில்லை. மத்திய குழுத் தீர்மானம் என்பது ஒரு கூட்டுத் தீர்மானம். மத்திய குழுவில் 30 பேர் கலந்து கொண்டார்கள்.

மாவை சேனாதிராஜாவிற்கு அறிவித்து அவரும் வருவதாக இருந்தார்.

உடல் நிலை சரியில்லை என்று தெரிவித்து அவர் கலந்து கொள்ளவில்லை.

மூத்த துணைத் தலைவர் தலைமையில் தான் கூட்டம் நடைபெற்றது.

மத்திய குழுவின் தீர்மானம் தான் சஜித் பிரேமதாசவிற்கு அதரவு வழங்குவது என்பது.

அதனையே அறிவித்தோம். எதிர்வரும் 4ஆம் திகதி தபால் மூல வாக்களிப்பு. அதனால் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அவருடன் ஏற்கனவே நான் கதைத்துள்ளேன். இது தொடர்பாக நான் கதைக்கிறேன்.

மூத்த துணைத்தலைவர் யாழ்ப்பாணத்தில் நேரில் சந்தித்து மாவை சேனாதிராஜாவுடன் கதைப்பார் என்றார்.

லண்டனில் ஸ்ரீதரன் எம் பி மக்களோடு பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் ஸ்ரீதரன் எம் பி மக்களோடு பேச்சு

லண்டனில் ஸ்ரீதரன் எம் பி மக்களோடு பேச்சு, தமிழ் டெஹஸ்ய கூட்டமைப்பின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினராக விளங்கி வரும் சிறிதரன் அவர்கள் லண்டனில் மக்களை சந்தித்து பேச்சுக்களில் .

வட்டக்கச்சி மக்களை சந்தித்த அவர் ,தனது மக்கள் நலன் சம்பந்தமாக பல விடயங்கள் தொடர்பாக பேசினார் .

அப்பொழுது பொது வேட்பாளர் ஏன் நிறுத்த [பட்டுள்ளார் ,அதன் அவசியம் என்ன என்பதை மிக தெளிவாக எடுத்து ,விளக்கியத்துடன் ஐந்து லட்சம் வாக்குகள் கிடைக்க பெறும் என்றால் ,

அது தமிழருக்கு கிடைக்க பெட்ரா மிக பெரும் வெற்றியாக இருக்கும் என்கின்ற விடயத்தை தெரிவித்துள்ளார் .

தனிப்பட்ட ரீதியில் பொது வேட்பாளராக களம் இறங்கியுள்ள அரியேந்திரன் அவர்களை தாங்கள் வரவேற்றுள்ளது தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் .

வட்டக்கச்சி மக்கள் ,அதன் சார்ந்த செயல்பாடுகள் தொடர்பாக அதிகம்பேச பட்டுள்ளதாக வெளியான காணொளிகள் வாயிலாக தெரிந்து கொள்ள முடிவதுடன் ,அதில் மக்கள் அரசியலும் பேச பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது .

பொறி தட்டும் சொற்கள் பொங்கி வெடித்து எழுச்சியை அங்கு காண்பித்தார் .

உடைத்து பேசிய Mp ஸ்ரீநேசன் ஞான­முத்து
Posted in இலங்கை செய்திகள்

உடைத்து பேசிய Mp ஸ்ரீநேசன் ஞான­முத்து

உடைத்து பேசிய Mp ஸ்ரீநேசன் ஞான­முத்து

உடைத்து பேசிய Mp ஸ்ரீநேசன் ஞான­முத்து ,கடந்த தினம் வன்னி மைந்தன் எனும் டிக் டாக் நேரலையில் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் ஐயா ஸ்ரீநேசன் ஞான­முத்து சிறப்பித்தார் .

இதன் பொழுது பொது வேட்பாளர் ஏன் வரவேண்டும் அதனால் எமக்கு கிடைக்க பெறும் நன்மைகள் என்ன என்பதை அவரே மிக தெளிவாக எடுத்து விளக்கினார் .

தமிழன் ஒற்றுமையாக ஒரு குடையின் கீழ் நின்று பயணிக்கின்றார் என்பதை இந்த விடயம் எடுத்து காட்டுகிறது என்கின்ற விடயத்தை எடுத்து விளம்பினார் .

தற்காலத்தில் தமிழன் இருப்பை தக்க வைத்துக்கொள்ளவும் ,தமிழன் பலத்தையும் காண்பிக்கின்ற நேரம் இது என்பதை அவர் எடுத்து விளக்கியதுடன் ,பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கிய வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதனுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார் .

அர்ச்சுனா அரியேந்திரன் நேரடி சந்திப்பு
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அர்ச்சுனா அரியேந்திரன் நேரடி சந்திப்பு

அர்ச்சுனா அரியேந்திரன் நேரடி சந்திப்பு

அர்ச்சுனா அரியேந்திரன் நேரடி சந்திப்பு, வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் மற்றும் பொது வேட்பாளர் பா ,அரியேந்திரன் ஆகியோர் எமது டிக் டாக் நேரலையில் கடந்த தினம் இரவு சந்தித்து பேசினர் .

இதன் பொழுது எதிர்கால நடவடிக்கை ,மற்றும் அர்ச்சுனா ஆதரவு தொடர்பாக பேச பட்டது .

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எவ்விதம் தாங்கள் பணியாற்ற போகிறோம் என்பது தொடர்பாக பொது கட்டமைப்பு அதனை வழிகாட்டும் எனவும் அதன் அடிப்படையில் எமது பரப்புரைகள் ,மக்கள் சநதிப்புக்கள் நாடு தழுவிய ரீதியில் இடம்பெறும் என தெரிவிக்க பட்டுள்ளது .

முதன் முதலாக பொது வேட்பாளர் பா, அரியேந்திரன் மற்றும் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் ,பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஞானமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

முதன் முதலாக மக்கள் நேரலையில் இவர்கள் சநதிப்பு இடம்பெற்றுள்ளது கண்டு மக்கள் பெரும் மகிழ்வடைந்தனர் .

வன்னி மைந்தன் அழைப்பை ஏற்று கொண்டு வன்னி மைந்தன் tiktok நேரலையில் கலந்து கொண்டு சிறப்பித்த உங்களுக்கு, எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .

இவ்வேளை இவர்களை இணைய பேருதவி புரிந்த ஏற்பாட்டு குழுவிற்கும் இவ்வேளை எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .

ரணில் தோல்வியடைந்தால் முழு நாடும் தோல்வியடையும்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் தோல்வியடைந்தால் முழு நாடும் தோல்வியடையும்

ரணில் தோல்வியடைந்தால் முழு நாடும் தோல்வியடையும்

ரணில் தோல்வியடைந்தால் முழு நாடும் தோல்வியடையும் ,ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும்.

சிலவேளை ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் முழு நாடும் தோல்வியடையும்.

மீண்டும் வரிசை யுகம் உருவாகும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

எனவே, மலையக மக்கள் உட்பட ஒட்டு மொத்த நாட்டு மக்களும், நாட்டின் நலன்கருதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெற வைக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து நேற்று (31) கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரனின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கொட்டகலை பிரதேச சபையின் முன்னளா் தவிசாளர் ராஜமணி பிரசாத்,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் அனுஷா சிவராஜா உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

“எமது மக்களின் அமோக ஆதரவுடன் நானும், எமது பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமானும் நாடாளுமன்றத்துக்கு தெரிவானோம். அவ்வாறு தெரிவானதன்மூலம் நெருக்கடியான காலகட்டத்தில்கூட எமது மக்களுக்கு சேவையாற்ற முடிந்தது.

எமது பொதுச்செயலாளர் அமைச்சரான பின்னர் குறுகிய காலப்பகுதிக்குள் மலையகத்துக்கும், முழு நாட்டுக்கும் பல சேவைகளை செய்யக்கூடியதாக இருந்தது.கொட்டகலை உட்பட பல பகுதிகளில் வீதிகள் புனரமைக்கப்பட்டன.

உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. கடந்தகாலங்களில் முழுமைப்படுத்தப்படாதிருந்த வீட்டுத் திட்டங்கள் முழுமைப்படுத்தப்பட்டுன. புதிய வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பமாகின.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவான பிறகு வரிசை யுகத்துக்கு முடிவுகட்டினார். பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டங்களை வகுத்தார்.

இன்று ரூபாவின் பெறுமதி வலுவடைந்துவருகின்றது. பொருட்களின் விலைகளும் குறைந்துள்ளன.

சுற்றுலாப்பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.எமது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வும் வழங்கப்பட்டுள்ளது .

எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்நாட்டை ஆள வேண்டியது கட்டாய தேவையாகும். இன்னும் ஐந்தாண்டுகளுக்கு அவரின் தலைமைத்துவம்

இருந்தால் இந்நாடு நிச்சயம் முன்னேறும். சிலவேளை ரணில் விக்கிரமசிங்க தோற்றால் அது தனிமனிதனுக்குரிய தோல்வி அல்ல, நாட்டின் தோல்வியாகும். அதுமட்டுமல்ல மீண்டும் வரிசை யுகம் உருவாகும்.

இது தேர்தல் காலம் என்பதால் சில ஜனாதிபதி வேட்பாளர்கள் அதை வழங்குவேன், இதை வழங்குவேன் என உறுதிமொழி வழங்கலாம். ஆனால் எதுவும் நடக்கப்போவதில்லை . நடைமுறைக்கு சாத்தியமான

உறுதிமொழிகளை ஜனாதிபதி வழங்கியுள்ளார். எனவே, அவர் எமது மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார்.” என்றார்.

இனவாதம் இல்லாத சுபிட்சமான வாழ்க்கையை உருவாக்குவோம்
Posted in இலங்கை செய்திகள்

இனவாதம் இல்லாத சுபிட்சமான வாழ்க்கையை உருவாக்குவோம்

இனவாதம் இல்லாத சுபிட்சமான வாழ்க்கையை உருவாக்குவோம்

இனவாதம் இல்லாத சுபிட்சமான வாழ்க்கையை உருவாக்குவோம் ,கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் எரிப்பதா நல்லடக்கம் செய்வதா என்கின்ற பிரச்சினை எழுந்த போது மக்களுடைய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய மத கலாச்சார,

மக்களுடைய பண்பாட்டு விடயங்களை மறந்து தனிப்பட்ட இலாபத்திற்காகவும், வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்வதற்காகவும் மதத்தையும், அறத்தையும், சுய கௌரவத்தையும் காட்டிக் கொடுத்து, இனவாதத்தை தூண்டியதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இனவாதத்தினால் முழு நாடும் சீரழிந்து போனது. இனவாதத்தையும் மதவாதத்தையும், இனமத பேதங்களையும் ஊக்குவிக்கின்ற யுகத்தை இல்லாமல் செய்வோம்.

அனைத்து இன மக்களும் இந்த மோசமான அரசாங்கத்தினால் துன்பப்பட்டுக்கொண்டிருக்கின்ற, வேதனையான நிலைக்கு தள்ளப்பட்டு

இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் துன்பத்தைத் துறந்து கண்ணீரைத் துடைத்து சுபிட்சமான வாழ்க்கையை உருவாக்குகின்ற பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு 29 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அநுராதபுரம் நாச்சியாதீவு நகரில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

செப்டம்பர் 21 ஆம் திகதி உருவாக்கப்படுகின்ற ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக ஒரு பக்கத்திலிருந்து இன்னும் ஒரு பக்கத்திற்கு கட்சி மாறுகின்ற இந்த முறையை தடை செய்வோம்.

அதற்கான சட்டங்கள் கொண்டுவரப்பட்டு, இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு முடிவெடுக்கக் கூடிய வகையில் சட்டங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வரப்பிரசாதங்களை வழங்கி நிபந்தனைகளுக்காக உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதில்லை. கொள்கையின் அடிப்படையிலே இணைத்துக் கொள்வோம்.

கிராமத்தையும் பின்னர் நகரத்தையும் பின்னர் நாட்டையும் அபிவிருத்தி அடையச் செய்யும் கொள்கை திட்டத்துடனே நாம் செல்கின்றோம்.

காணியில்லாத வீடில்லாத மக்களுக்கு காணிகளை வழங்கி, வீடுகளை அமைத்துக் கொடுத்து கம்உதாவ திட்டத்தை நடைமுறைப்படுத்துவதோடு மலைநாட்டு தோட்டங்கள், கீழ்நாட்டு தோட்டங்கள், கிராமிய, நகர, நடுத்தர

வகுப்பு மக்கள், மற்றும் அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டங்களையும் உள்ளடக்கி, தேசிய வீடமைப்புக் கொள்கை ஒன்றை

உருவாக்கி, தமது சொந்த வீடுகளிலே வாழ்கின்ற உரிமையை மக்களுக்கு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

வறுமையை ஒழிப்பதற்கான புதிய வேலை திட்டத்தை முன்னெடுப்பதோடு, 24 மாதங்களுக்கு ரூபா 20 ஆயிரம் விதம் வழங்கி 24 மாதங்களுக்குள் வறுமையை ஒழிக்கின்ற வேலை திட்டத்தை முன்னெடுக்கின்றோம். தொடர்ந்தும்

நிவாரணங்களைப் பெற்று அதிலேயே தங்கி வாழாத ஒரு பரம்பரையை உருவாக்க நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

50 கிலோ கிராம் உரமூடை ஒன்றை ஐயாயிரம் ரூபாக்கு வழங்குவதோடு, விவசாய கடனையும் இரத்து செய்வது மாத்திரம் அல்லாமல் QR முறையில் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும், முச்சக்கர வண்டி மற்றும் பாடசாலை

போக்குவரத்து பஸ் உரிமையாளர்களுக்கும், சக்தி அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் நிவாரண அடிப்படையில் எரிபொருள்களை

வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிவாரணத் திட்டங்களையும் முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

நல்லூர் தேர்த்திருவிழா
Posted in இலங்கை செய்திகள்

நல்லூர் தேர்த்திருவிழா

நல்லூர் தேர்த்திருவிழா

நல்லூர் தேர்த்திருவிழா ,இலங்கையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் வரலாற்று சிறப்பு வாய்ந்த நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவானது இன்று (01) மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதன்படி கடந்த 09 ஆம் திகதி நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

நாளை (02) தீர்த்தோற்சவம் மற்றும் கொடியிறக்கத்துடன் திருவிழா இனிதே நிறைவு பெறும்.

பல இடங்களில் வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வீடியோ

மனைவியை கொலை செய்த கணவன்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் ,அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு அருகில் உள்ள சென்டிஹர்ஸ்ட் என்ற இடத்தில் தனது விவாகரத்து பெற்ற மனைவியை வெட்டிக் கொன்ற இலங்கையர் ஒருவர் அந்நாட்டு நீதிமன்றத்தினால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

47 வயதான தினேஷ் குரேரா தனது பாதுகாப்பிற்காகவே இவ்வாறு செயற்பட்டதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

ஆனால் அந்த கோரிக்கையை நடுவர் மன்றம் ஏற்கவில்லை.

விக்டோரியாவின் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (30) இந்த உத்தரவை பிறப்பித்தது.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி, நிலோமி பெரேரா, வீட்டிற்குள் தாக்கப்பட்டதுடன், குரேரா அந்த கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

ஆனால் அவர் தனது உயிரைப் பாதுகாப்பதற்காக இதைச் செய்ததாகக் கூறினார்.

விவாகரத்து பெற்ற மனைவி தன்னை கத்தியைக் காட்டி மிரட்டி விரலை வெட்டிவிட்டதாக விசாரணையில் அவர் கூறியுள்ளார்.

அவர் தன்னைத் தாக்கிவிடுவாரோ என்று பயந்ததால், கோடரியால் பலமுறை தாக்கியதாக குரேரா நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அந்த பெண்ணின் உடலில் 35 காயங்கள் இருந்ததாக அரச சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

எனினும் தாயும் தந்தையும் சண்டையிடுவதை மகளும் மகனும் பார்த்ததாகவும், மகன் உதவி கேட்டு அலறிய போது, ​​குரேரா அவரையும் தாக்க முயன்றதாகவும் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

16 வயது மகளும் 17 வயது மகனும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்து, அப்பா, அம்மாவை தாக்கிய விதத்தை விவரித்திருந்தார்கள்.

அசிங்கப்படுத்துகிறார் கஜேந்திரன் பொது வேட்பாளரை அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

அசிங்கப்படுத்துகிறார் கஜேந்திரன் பொது வேட்பாளரை அர்ச்சுனா

அசிங்கப்படுத்துகிறார் கஜேந்திரன் பொது வேட்பாளரை அர்ச்சுனா


அசிங்கப்படுத்துகிறார் கஜேந்திரன் பொது வேட்பாளரை அர்ச்சுனா ,கஜேந்திரன் பொது வேட்பாளரை அசிங்கப்படுத்துகிறார் அர்ச்சுனா ,எமது இலங்கையின் வரலாற்றை 2024 ஆம் ஆண்டு தேர்தல் புரட்டிப்போட போகிறது.


தமிழரின் ஆதரவு இல்லாமல் முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் தனி சிங்கள வேட்பாளராக அனுரகுமார திசாநாயக்க வெல்லப் போவது நிச்சயம்.
அனுரா சிறைபிடிக்கப்படுவார் கொல்லப்படுவர் என்பது முட்டாள்தனமான எதிர்கூறல் அல்ல.


இந்த வேளையிலே தமிழர் நாம் பேரின வாத கட்சிகளுக்கு அடிபணிந்து போகாமல் வாக்கு பலத்தை ஒற்றுமையை எப்போது பொது வேட்பாளருக்காக காட்டுகிறோமோ அப்போதுதான் சர்வதேச தலையீடின் போது தமிழருக்கான நியாயம் கிடைக்கும்.


இதைப் புரிந்து கொள்ளாமல் தயவு செய்து எந்த ஒரு சிங்கள ஜனாதிபதிக்கும் விலை போக வேண்டாம்.

எனக்கு நம்பிக்கை இருக்கிறது அரியனேந்திரன் அவர்கள் காசுக்கு விலை போய் சஜித்துடன் நிக்க மாட்டார் என்று.


ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவர் தனது வாய் மூலம் சஜித்துக்கு ஆதரவு தெரிவிப்பாராக இருந்தால் தமிழனாக அடையாளப்படுத்தி அவரை நாங்கள் வைத்திருக்கும் போது விலை போவாராக இருந்தால் எந்த தமிழனும் செல்லுபடியாக கூடிய வாக்குகளை இடுவதில் அர்த்தமில்லை.


அரியனேந்திரன் அவர்களை தெரிவது செய்தவர்களில் எனக்கு முற்றிலும் நம்பிக்கை இருக்கிறது.


குதிரை கஜேந்திரன் இப்போது பொது வேட்பாளரை அசிங்கப்படுத்த அங்கேயும் இங்கேயும் ஓடுகிறது.


பொது வேட்பாளருடன் நிற்பவர்கள் குதிரை கஜேந்திரனை அவதானித்து வைத்திருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


அரசியல் எதிர்கூறல் பிழையாக இருக்கும் என்றால் தங்களின் மதிப்பிற்குரிய கருத்தினை கீழே பதிவிடலாம்.

கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு.
தயவுசெய்து பகிருங்கள். என அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .

அங்கஜனின் பார் லைசன்ஸ் கிளிநொச்சி
Posted in இலங்கை செய்திகள்

அங்கஜனின் பார் லைசன்ஸ் கிளிநொச்சி

அங்கஜனின் பார் லைசன்ஸ் கிளிநொச்சி

அங்கஜனின் பார் லைசன்ஸ் கிளிநொச்சி நிறுவப்பட்ட விடயம் வெளியாகியுள்ளது .

தமிழ் அரசியல்வாதிகளின் முக்கிய எம்பியாக யாழ்பாணத்தில் விளங்கி வரும் அங்கயன் அவர்களினால் கிளிநொச்சியில் திறந்து நடத்த பட்டு வரும் விடயம் வெளியாகியுள்ளது .

கிளிநொச்சியில் இதுவரை 15 பார்கள் நடத்த பட்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இவை யாவும் தமிழ் அரசியல் வாதிகளின் பெயரில் இயங்கி வருவதாக குற்றம் சுமத்த பட்டுளள்து .

இவ்வாறு சாட்ட பட்டுள்ள குற்றங்கள் இந்த கடிதம் மூலம் தெரிய வந்துள்ளதக மக்கள் மன்றம் தெரிவிக்கிறது .

இதற்கு பாராளுமன்ற அங்கயன் என்ன தெரிவிக்க போகிறார் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .

துண்டுபிரசுரங்களை வீடு வீடாக விநியோகிக்கத் தடை
Posted in இலங்கை செய்திகள்

துண்டுபிரசுரங்களை வீடு வீடாக விநியோகிக்கத் தடை

துண்டுபிரசுரங்களை வீடு வீடாக விநியோகிக்கத் தடை

துண்டுபிரசுரங்களை வீடு வீடாக விநியோகிக்கத் தடை ,தேர்தல் துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாக விநியோகிப்பதற்காக ஊர்வலங்கள் அல்லது ஊர்வலங்களில் மக்கள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் போது இசைக்கருவிகள் மற்றும் காட்சிப் பலகைகளை பயன்படுத்தக் கூடாது எனவும் தேர்தல் காலத்தில் அரசியல் செய்திகள் மற்றும் கட்டுரைகள், விளம்பரங்கள் போன்றவற்றை

அரசு அல்லது அரசு நிறுவனங்களின் செலவில் வெளியிடக்கூடாது எனவும் அனைத்துக் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் பிரசாரங்களுக்கு அரசு அதிகாரிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் போன்ற எந்த ஒரு

நிறுவனத்திலும் வாக்கு கேட்கவோ, துண்டு பிரசுரங்களை விநியோகிக்கவோ, விளம்பர பலகைகளையோ அல்லது விளம்பரங்களையோ காட்டவோ கூடாது என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குண்டு வீட்டிலிருந்து மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

குண்டு வீட்டிலிருந்து மீட்பு

குண்டு வீட்டிலிருந்து மீட்பு

குண்டு வீட்டிலிருந்து மீட்பு ,குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்றினால் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள

உலகக்குழு உறுப்பினரின் வீட்டிற்குப் பின்னால் புதைக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு மற்றும் 310 கிராம் போதைப்பொருள் என்பவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கடந்த 29ஆம் திகதி டுபாயில் இருந்து இந்த சந்தேக நபரை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர்.

இந்த சந்தேக நபர் மத்துகம பிரதேசத்தில் பெண் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் மற்றும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.