இளங்குமரன் எம்.பியை பார்வையிட்டார் பிரதமர்
Posted in இலங்கை செய்திகள்

இளங்குமரன் எம்.பியை பார்வையிட்டார் பிரதமர்

இளங்குமரன் எம்.பியை பார்வையிட்டார் பிரதமர்

இளங்குமரன் எம்.பியை பார்வையிட்டார் பிரதமர் ,விபத்தில் சிக்கிக் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட

பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (15) நேரில் சென்று பார்வையிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனின் உடல் நிலை தொடர்பிலும் வைத்தியர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் பயணித்த வாகனம் சாவகச்சேரி தளங்கிளப்பு பகுதியில் நேற்று மாலை விபத்துக்குள்ளானதில் அவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்தனர்

இலங்கை வரும் சீனா அதிகாரிகள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வரும் சீனா அதிகாரிகள்

இலங்கை வரும் சீனா அதிகாரிகள்

இலங்கை வரும் சீனா அதிகாரிகள் ,ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நல்லிணக்கம் மற்றும் இன விவகாரங்களுக்கான சீன

அமைச்சர் பான் யூ தலைமையிலான உயர் மட்ட குழுவினர் எதிர்வரும் 19ஆம் திகதி புதன்கிழமை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்டவர்களை சந்திக்க உள்ளதுடன், கண்டி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சீன அமைச்சர் பான் யூ, இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இன நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

Imf குழு இன்று எரிசக்தி அமைச்சகம் மற்றும் CEB அதிகாரிகளை சந்திக்க உள்ளது
Posted in இலங்கை செய்திகள்

IMF வுடன் நாளை பேச்சு

IMF வுடன் நாளை பேச்சு

IMF வுடன் நாளை பேச்சு ,இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும் விடயத்தை மாற்றியமைக்க சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியுள்ள அரசாங்கம்,

அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் திங்கட்கிழமை (17) சமர்பிக்கவுள்ளது

இதன் பின்னர் மேற்குறிப்பிட்ட கோரிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம், இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 17 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளதுடன், மார்ச் மாதம் 21ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

குறித்த வரவு – செலவுத் திட்டமானது மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வகையில் முன்வைக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மறுபுறம் இந்த வரவு – செலவுத் திட்டமானது சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும் என நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் திகதி இலங்கையில், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வு குறித்து பணியாளர் மட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.

இதன் பிரகாரம், நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 333 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டுகின்றது.

இந்த நிதியுதவிக்கான மேலதிக உறுதிப்பாடல்களுக்கான கலந்துரையாடல்கள் எதிர்வரும் வாரங்களில் நடைபெற உள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டின் நான்காவது – மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.5 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதுடன், அதே ஆண்டின் நான்காவது காலாண்டில் சராசரி பணவீக்கம் இலக்கை விட மிகவும் குறைவாகவே உள்ளது.

அத்துடன், 2024ஆம் ஆண்டின் இறுதியில் சர்வதேச இருப்புக்கள் 6.1 பில்லியனாக அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தை கருத்தில் கொள்ளும் போது, கடந்த நவம்பரில் எட்டப்பட்ட பணியாளர் நிலை ஒப்பந்துடன் தொடர்புப்படுகிறது.

அடுத்த வரும் வாரங்களில் இடம்பெற கூடிய கலந்துரையாடல்களின் போது நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக நாணய நிதியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் சிக்கிய எம்.பி வைத்தியசாலையில்
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கிய எம்.பி வைத்தியசாலையில்

விபத்தில் சிக்கிய எம்.பி வைத்தியசாலையில்

விபத்தில் சிக்கிய எம்.பி வைத்தியசாலையில் ,யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த எம்.பி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாவகச்சேரி – தனக்கிளப்பு பகுதியில் இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்துக்ககுள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது

சீமான் விக்கிரவாண்டி விற்பனைக்கு
Posted in இலங்கை செய்திகள்

பிரபாகரனின் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை கோரி வழக்கு

பிரபாகரனின் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை கோரி வழக்கு

பிரபாகரனின் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை கோரி வழக்கு ,தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரன் படத்தை பொதுவெளியில் பயன்படுத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை

ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த சட்டத்தரணி எல்.கே.சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார்.

கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையிலான சண்டையின் போது, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை, சீமான் போர் முனையில் சந்தி்த்து பேசியதாகவும், அதன் பிறகு ஏ.கே.47 ரக துப்பாக்கியால் போர் பயிற்சி எடுத்ததாகவும் சீமான் தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டபிறகு, விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் இலங்கை போர் தொடர்பான மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு சீமான் வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவரான பிரபாகரனின் படத்தை தனது அரசியல் ஆதாயங்களுக்காக தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தி வருகிறார்.

அவர் மார்பிங் செய்யப்பட்ட படங்களை பொது வெளியில் பயன்படுத்தி வருவதாக சங்ககிரி ராஜ்குமார் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின்போது ராஜீவ் காந்தியை நாங்கள் தான் கொலை செய்தோம் என சீமான் பகிரங்கமாக பேசியுள்ளார்.

எனவே, தடை செய்யப்பட்ட பிரபாகரன் படத்தை பொது வெளியில் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது

மியன்மாரில் சிக்கியிருந்த இலங்கையர்களின் தற்போதைய நிலை
Posted in இலங்கை செய்திகள்

மியன்மாரில் சிக்கியிருந்த இலங்கையர்களின் தற்போதைய நிலை

மியன்மாரில் சிக்கியிருந்த இலங்கையர்களின் தற்போதைய நிலை

மியன்மாரில் சிக்கியிருந்த இலங்கையர்களின் தற்போதைய நிலை ,மியன்மாரில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 13 இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் 20 முதல் 30 வயதுக்குற்பட்ட 11 ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்கியுள்ளனர்.

அவர்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் தாய்லாந்து எல்லையிலிருந்து பாங்கொக்கில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

பின்னர் அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

இதற்கிடையில், ஏனைய நால்வரும் மின்மாரில் தனித்தனி சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களை விரைவில் மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன

பேருந்து விபத்து பலர் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து விபத்து பலர் படுகாயம்

பேருந்து விபத்து பலர் படுகாயம்

பேருந்து விபத்து பலர் படுகாயம் ,பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் இன்று (15) அதிகாலை 4 மணியளவில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லுணுகம்வெஹெரவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்த போது பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பேருந்தின் சக்கரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

அர்ச்சுனா தாக்கிய சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா தாக்கிய சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி

அர்ச்சுனா தாக்கிய சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி

அர்ச்சுனா தாக்கிய சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து இரு தரப்பினரதும் சம்மதத்துடன் சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு (12) பாராளுமன்ற உறுப்பினரும் , சட்டத்தரணி கௌசல்யாவும் உணவருத்திக்கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு வந்த இருவர், அவர்களுடன் கதைக்க முற்பட்ட நிலையில், தர்க்கமாக மாறி கைக்கலப்பில் முடிந்தது.

கைக்கலப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நபர் ஒருவரின் தலையில் பீங்கானால் அடித்தமையால், அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது உயிருக்கு ஆபத்து என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

அதேவேளை, காயமடைந்த நபரும் தன் மீதான தாக்குதலுக்கு முறைப்பாட்டை வழங்கி இருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் (14) இரவு இரு தரப்பினரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து, யாழ்ப்பாண உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது, இரு தரப்பினரும் சமாதானமாக செல்வதாகவும், முறைப்பாடுகளை மீள பெற்றுக்கொள்வதாகவும் கூறி சமரசமாக செல்வதற்கு உடன்பட்டதை அடுத்து, இரு தரப்பினருக்கும் இடையிலான பிரச்சினை பொலிஸ் நிலையத்தில் வைத்து தீர்த்து வைக்கப்பட்டது

லஞ்சம் பெற்ற PHI கைது
Posted in இலங்கை செய்திகள்

லஞ்சம் பெற்ற PHI கைது

லஞ்சம் பெற்ற PHI கைது

லஞ்சம் பெற்ற PHI கைது ,ஹோட்டல் உரிமத்தைப் புதுப்பிக்க 200,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற ​​பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலேவெல பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

ஐ ம சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்கள்
Posted in இலங்கை செய்திகள்

ஐ ம சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்கள்

ஐ ம சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்கள்

ஐ ம சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்கள் ,2025ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு, பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இந்நியமன கடிதங்களை வழங்கி வைத்தார்.

இதன் பிரகாரம், மாத்தளை மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ரோஹினி குமாரி விஜயரத்ன கவிரத்ன, அநுராதபுர மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார, புத்தளம் மாவட்டத் தலைவராக

பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, காலி மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, கம்பஹா மாவட்டத் தலைவராக

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, குருநாகல் மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, களுத்தறை மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா நியமிக்கப்பட்டனர்.

ஏனைய மாவட்டங்களுக்கான அடுத்த தொகுதி நியமனங்கள் கிட்டிய நாட்களில் வழங்கி வைக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார பிரசன்னமாகி இருந்தார்.

பாதி எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

பாதி எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

பாதி எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

பாதி எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு ,கடவத்தை – கணேமுல்ல அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் இன்று (15) காலை அடையாளம் தெரியாத பாதி எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்த இடத்தில் நேற்று (14) இரவு 8 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், குறித்த நபரின் சடலம் அங்கு கொண்டு வந்து போட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கடவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

அரச காணிகளுக்கு இலவச பத்திரம் வழங்கும் முறை தற்காலிகமாக நிறுத்தம்
Posted in இலங்கை செய்திகள்

அரச காணிகளுக்கு இலவச பத்திரம் வழங்கும் முறை தற்காலிகமாக நிறுத்தம்

அரச காணிகளுக்கு இலவச பத்திரம் வழங்கும் முறை தற்காலிகமாக நிறுத்தம்

அரச காணிகளுக்கு இலவச பத்திரம் வழங்கும் முறை தற்காலிகமாக நிறுத்தம் ,அரச காணிகளுக்கு இலவச பத்திரம் வழங்கும் முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

அமைப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமூகப் பாதுகாப்பு, குடும்பங்களின் பாதுகாப்பு மற்றும் உயிர்வாழ்வைக் கருத்தில் கொண்டு புதிய முறையின் மூலம் பத்திரம் வழங்கும் திட்டம் செயற்படுத்தப்படும் என்று, அவர் மேலும் கூறியுள்ளார்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தீர்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தீர்ப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தீர்ப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தீர்ப்பு ,உள்ளூராட்சி சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தின் பிரிவு 12 (பி), அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பை பாராளுமன்றத்தில் முன்வைத்த சபாநாயகர், எஞ்சிய சரத்துகள் அரசியலமைப்புக்கு அமைவாக உள்ளதாக, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சற்று நேரத்திற்கு முன்னர், பாராளுமன்றதலதில் தெரிவித்தார்

தலை துண்டிப்பு
Posted in இலங்கை செய்திகள்

எம் பியின் வாகனம் மோதியதில் மோட்டார் ஓட்டி பலி

எம் பியின் வாகனம் மோதியதில் மோட்டார் ஓட்டி பலி

எம் பியின் வாகனம் மோதியதில் மோட்டார் ஓட்டி பலி ,பாராளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக, மாதம்பே பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசல் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​

மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்ததாக கொஸ்வத்த பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதம்பேயிலிருந்து தோப்புவ நோக்கி பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த கார், எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில், பாராளுமன்ற உறுப்பினரின் ஓட்டுநர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது பாராளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக, மாதம்பே பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசல் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​

மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்ததாக கொஸ்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதம்பேயிலிருந்து தோப்புவ நோக்கி பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த கார், எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது

மோதியதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில், பாராளுமன்ற உறுப்பினரின் ஓட்டுநர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது

காதலி மறுத்ததால் தவறான முடிவெடுத்த காதலன்
Posted in இலங்கை செய்திகள்

காதலி மறுத்ததால் தவறான முடிவெடுத்த காதலன்

காதலி மறுத்ததால் தவறான முடிவெடுத்த காதலன்

காதலி மறுத்ததால் தவறான முடிவெடுத்த காதலன் ,29 வயது நபர் ஒருவர், காதலர் தினத்தன்று யாழ்ப்பாணம் வருவதற்கான தனது விருப்பத்தை தனது காதலி மறுத்ததாகக் கூறப்பட்டதால், தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

இந்த சம்பவம் கிளிநொச்சியில் உள்ள புளியம்பொக்கணையில் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த இவர் , தோட்டத்தில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டார்.

நிராகரிப்பால் ஏற்பட்ட மன உளைச்சலால் அந்த இளைஞன் தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தங்கள் மகன் ஒரு உறவில் இருந்ததாகவும், காதலர் தினத் திட்டங்களை காதலி மறுத்தது மட்டுமல்லாமல், அவரைத் திட்டியதால் மனம் உடைந்ததாகவும் பெற்றோர் பொலிஸாருக்குத் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் நடத்தி வருகின்றனர்.

கொழும்பின் பல பகுதிகளுக்கு 10 மணித்தியால நீர் வெட்டு
Posted in இலங்கை செய்திகள்

நீர் விநியோகம் துண்டிப்பு செய்தி பொய்யானா செய்தி

நீர் விநியோகம் துண்டிப்பு செய்தி பொய்யானா செய்தி

நீர் விநியோகம் துண்டிப்பு செய்தி பொய்யானா செய்தி ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில்

வெளியாகியுள்ள செய்தி பொய்யானது என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தி தொடர்பிலான விசாரணையின் போது, ​​முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகாமையில் உள்ள

மற்றுமொரு இடத்தில் நிலுவைத்தொகை செலுத்தப்படாததன் காரணமாக நேற்று (13) நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்ததாக சபை கூறியுள்ளது.

ஆனால் அந்த இடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் அல்ல என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி ஒருவரிடம் நீர் வழங்கல் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் மேற்கொண்ட

விசாரணையின் போது, ​​முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் அந்த இடத்தில் தங்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த ஆண்டு ஒக்டோபரில் அந்த இடத்தை விட்டு வெளியேறினர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உத்தியோகத்தரோ அல்லது முன்னாள் ஜனாதிபதியோ அந்த இடத்தில் உள்ள நீர் விநியோகத்தில்

உள்ள தண்ணீரை பயன்படுத்தமாட்டார்கள் என பாதுகாப்பு அதிகாரி கூறியதாகவும், நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த இடத்தில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டமையால் முன்னாள் ஜனாதிபதிக்கோ அல்லது அவரது பாதுகாப்பு

உத்தியோகத்தர்களுக்கோ எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

92 லட்சம் ரூபாய் மோசடி இளைஞன் கைது
Posted in இலங்கை செய்திகள்

எம் பியின் தம்பி விபத்தில் கைது

எம் பியின் தம்பி விபத்தில் கைது

எம் பியின் தம்பி விபத்தில் கைது ,தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசலின் சகோதரர், விபத்து தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (14) காலை, கொஸ்வத்த – ஹல்ததுவன பிரதேசத்தில், பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசல், பாராளுமன்றத்திற்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, பாராளுமன்ற உறுப்பினரின் கார் வீதியை விட்டு விலகி எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்தார்.

வாகனத்தின் சாரதியான பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர் கொஸ்வத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

நாமலின் சட்ட பரீட்சை சிஐடி விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

நாமலின் சட்ட பரீட்சை சிஐடி விசாரணை

நாமலின் சட்ட பரீட்சை சிஐடி விசாரணை

நாமலின் சட்ட பரீட்சை சிஐடி விசாரணை ,பாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சட்டக் கல்லூரிப் பரீட்சைக்கு சட்டவிரோதமாகத் தோன்றியமை குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

பாஸ்டன்லங்கா சமூக ஊடக வலையமைப்பில் ஒளிபரப்பான நேர்காணலில் கூறப்பட்ட உண்மைகளின் அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இரண்டு வழக்கறிஞர்களின் உதவியுடன் சட்டக் கல்லூரியில்

நடைபெற்ற தேர்வுக்கு ஆஜராகி சட்டவிரோதமாக சட்டப் பட்டம் பெற்றதாகக் கூறி, ”லஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான சிட்டிசன் பவர்” என்ற அமைப்பு குற்றப் புலனாய்வுத் துறையில் (சிஐடி) புககர் அளித்துள்ளது.

மேற்கண்ட சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளின்படி இது தொடர்பாக முழுமையான விசாரணையை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் துறை பணிப்பாளருக்கு பதில் பொலிஸ் மா அதிபர் (ஐஜிபி )அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது

துப்பாக்கியுடன் காணாமல் போன கான்ஸ்டபிளின் பெற்றோர் கைது
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவில் மறைந்திருந்த சந்தேக நபர் கைது

இந்தியாவில் மறைந்திருந்த சந்தேக நபர் கைது

இந்தியாவில் மறைந்திருந்த சந்தேக நபர் கைது ,சட்டவிரோதமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற நபர் ஒருவர், குற்றப் புலனாய்வுத் துறையினரால் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் நேற்று (12) இரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

குறித்த நபர், கப்பம் பெறுதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக தேடப்படும் சந்தேக நபர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் ஆதரவின்றி பாராளுமன்றம் செல்லும் நாமல்
Posted in இலங்கை செய்திகள்

நாமல் விவகாரம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை

நாமல் விவகாரம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை

நாமல் விவகாரம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை .இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட சந்தேக நபர்கள் குழுவிற்கு எதிராக பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்ட

நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) இன்று வியாழக்கிழமை (13) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.

நாமல் ராஜபக்‌ஷ பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியபோது, சட்டவிரோதமான முறையில் சம்பாதித்ததாகக் கூறப்படும் 15 மில்லியன் ரூபாய் தொகையை என்.ஆர் கன்சல்டன்சி (பிரைவேட்) லிமிடெட்

நிறுவனத்தின் (NR Consultancy (Pvt) Ltd) நிறுவனத்தில் முதலீடு செய்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, நாமல் ராஜபக்‌ஷ மற்றும் பிற சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் முடிந்து விட்டதாகவும், வழக்குன் குற்றச்சாற்றை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் சி.டி.ஐ. அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், வழக்கு தொடர்பான சட்டமா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்கவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதன்படி, வழக்கை ஆகஸ்ட் 07ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் சட்டமா அதிபரின் ஆலோசனையை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு முதலில் ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் போது, நித்ய சேனானி சமரநாயக்க, சுஜானி போகல்லாகம மற்றும் என்.ஆர் கன்சல்டன்சி (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களாகப் பணியாற்றிய சுதர்ஷன கணேகொட ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மூத்த மகனான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ , பாராளுமன்ற உறுப்பினராகப்

பணியாற்றியபோது சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் 15 மில்லியனை ரூபாய் நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும் இந்த வழக்கு குற்றம் சாட்டியுள்ளது