Author: நலன் விரும்பி
லண்டன் Kingsbury பார்க்கில் இரு பெண்கள் சடலம் மீட்பு- நடந்தது என்ன ..?
லண்டன் Kingsbury பார்க்கில் இரு பெண்கள் சடலம் மீட்பு- நடந்தது என்ன ..?
இன்று மதியம் ஒன்று முப்பது மணியளவில் பிரிட்டன் லண்டன் Fryent
Country Park in Kingsbury பகுதியில் இரு பெண்கள் உயிர் அற்ற சடலங்களாக மீட்க பட்டனர்
இவர்கள் மரணம் எவ்விதம் நிகழ்ந்தது என்பது தொடர்பில் விசாரணைகள்
முன்னெடுக்க பட்டு வருகின்றன
தற்போது அந்த பார்க் மக்கள் பாவனைக்கு தடை செய்ய பட்டுள்ளது
இந்த மரணம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை .
குறித்த மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற
வண்ணம் உள்ளது,இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை

பிரிட்டனில் ஆயுதங்கள் கண்டு பிடிப்பு – கொலைகள் அம்பலம்
பிரிட்டனில் ஆயுதங்கள் கண்டு பிடிப்பு – கொலைகள் அம்பலம்
பிரிட்டனில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் குற்ற தடுப்பு போலீசார் மற்றும் குண்டு செயல் இழக்க வைக்கும் பிரிவினர்
இணைந்து நடத்திய தேடுதலில் Londonderry பகுதியில் நாட்டு துப்பாக்கிகள் ,மற்றும் கைக்குண்டுகள் ,தோட்டாக்கள் என்பன மீட்க பட்டுள்ளன
இவை புதிய ஐ ஆர் ஏ அமைப்பின் செயல் திட்டம் வாய்ந்த ஒன்றாக சந்தேகிக்க படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது
கடந்த ஆண்டு இதே பகுதிக்கு அருகில் , ஊடக நபர் ஒருவர் படுகொலை செய்ய பட்டார் ,
அவரது படு கொலைகளுக்கு இதே ஒத்த ஆயுதங்கள் பயன் படுத்த பட்டுள்ளது தற்போது கண்டு பிடிக்க பட்டுள்ளது
அதனால் இந்த ஆயுதங்களுடன் பின்புல தொடர்பில் குறித்த புதிய அமைப்பு இயங்கி வருவதான சந்தேகம் எழுந்துள்ளது
மேற்படி இடம் தொடர் தேடுதலுக்கு உள்ளாக்க பட்டுள்ளதுடன் ,குறித்த குழுவை கண்டு பிடிக்கு உளவுத்துறை நகர்வுகள் முடுக்கி விட பட்டுள்ளன .
இது அரசியல் பின்புல திசை திருப்பும் சதியா ..? அல்லது உண்மையில் இவ்விதமான குழு ஒன்று இயங்குகிறத என்பதே இப்பொது எழுந்துள்ள கேள்வியாகும்
பிரிட்டனில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் – பிரான்ஸ் எல்லையில் சிக்கல்
பிரிட்டனில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் – பிரான்ஸ் எல்லையில் சிக்கல்
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலத்த கட்டு பாடுகள் இடம்பெற்று வருகிறது .
பிரிட்டனுக்கும் நுழையும் வெளிநாட்டவர்கள் கடும் சோதனைக்கு உள்ளாக்க பட்டு வருவதுடன் ,உணவு விநியோகத்தில் ஈடுபடும்
லாரிகளும் பலத்த சோதனைக்கு உள்ளாக்க படுவதுடன் ,குடிவரவு குடியகல்வு அமைச்சின் கெடுபிடிகளும் அதிகரித்து காணப்படுகின்றன
பிரான்ஸ் கலை எல்லையில் பிரதான வேக சாலைகள் வரைக்கும் லொறிகள் காத்திருக்கின்றன
உரிய பயணிகள் அனுமதி ,நுழைவு கெடுபிடியின் காரணமாக உணவு விநியோகத்தில் பலத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும்
தொடர்ந்து இவ்விதமான நெருக்கடி நீடித்தால் பிரிட்டனில் பொருட்களின் விலைகள் திடீரென அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
மேலும் இந்த நெருக்கடிக்கு உடனை தீர்வை காணும் படி , சுரங்கவழி போக்குவரத்து தலைவர் அவசர வேண்டுதல் விடுத்துள்ளார்
ஆனால் ஆளும் அரசு அதனை தட்டி கழித்து வருவதாக குற்ற சட்டு முன்வைக்க படுகிறது

கனடா Montreal நீரேரியில் இராட்சத திமிங்கலம் – வீடியோ
கனடா Montreal நீரேரியில் இராட்சத திமிங்கலம் – வீடியோ
கனடாவின் Montreal நீர் நிலையில் இராட்சத திமிங்கலம் ஒன்று நீந்தி செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது
இந்த திமிங்கலம் பயணிக்கும் காட்சியை அங்கு கூடி இருந்த மக்கள் கண்டு இரசித்துள்ளனர்

கோயிலுக்குள் உடுப்பு காய போட்ட ஐயர் – கொதிக்கும் மக்கள்
கோயிலுக்குள் உடுப்பு காய போட்ட ஐயர் – கொதிக்கும் மக்கள்
இந்த இறம்பொடை சின்மயா மிஷன் வளாகத்தில் ஸ்ரீ பக்த அனுமந்த கோவிலும் பூஜைக்குரிய ஸ்ரீ சுவாமி சின்மயானந்தரின்
வணக்கஸ்தலமும் இருக்கின்றது இந்த வணக்கஸ்லதத்திலேயே உடைகள் கழுவி காய போடப்பட்டுள்ளன. இது மூடி வைக்கும்
ஓதுக்கப்பட்ட மண்டபம் கிடையாது பூஜைக்குறிய இடமாகும். உடைகள் கழுவி காய போடும் இடமல்ல. ஸ்ரீ பக்த அனுமந்த
ஆலயத்தில் எந்தவிதமான பிரச்சனைகளும் தற்போதைக்கு இல்லை என்பது குறிப்பிடதக்கது.
பணம் படைத்தவர்களின் சர்வாதிகார செயற்பாடுகள் மூலம் இலங்கையில் முன்னெடுக்கபட்டு வரும் சின்மயா மிஷன் ஆன்மீகம்
என்ற போர்வையில் மலையகத்தில் சீரழிவான செயற்பாடுகளில் செயற்பட்டு வருகின்றது.
பூஜைக்குரிய ஸ்ரீ சுவாமி சின்மயானந்தரால் ஆன்மீக நிறுவனமான சின்மயா மிஷன் உயர்ந்த ஆன்மீக நோக்கங்களுடன் உலகம்
முழுவதும் இயங்கி வருகின்றது. இந்த நிறுவனம் வேதாந்தத்தின் ஊடாக மக்களிடம் அமைதியையும் சந்தோஷத்தையும் சேவையின் ஊடாக பரப்புதலை கொள்கையாக கொண்ட நிறுவனமாகும்
இருந்தும் இலங்கை மத்திய மலைநாட்டில் இறம்பொடையில் அமைந்துள்ள இந்த சின்மயா மிஷன் நிர்வாக தலைவர் உட்பட
உறுப்பினர்கள் கொள்கைகளை மறந்து புறம்பான வியாபார நோக்கில் செய்பட்டு வருகின்றனர்.ஆரம்பத்தில் சின்மயா மிஷன்
மலையக மக்களின் நிலை கண்டு சேவை செய்யவே வந்தது. தற்போது முற்றிலும் வேறுபட்ட விதத்தில் செயற்படுகின்றது.
மலையக மக்களுக்காக பூஜைக்குரிய ஸ்ரீ சுவாமி சின்மயானந்தரால் உறுவாக்கபட்ட இந்த ஆச்சிரமம் மலையக
பெருந்தோட்ட மக்களுக்கு செய்ய வேண்டிய சமய கலாசார விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல் ஆகும். இந்த விடயம் இங்கு நடைபெறுவதில்லை.
இந்த மிஷனில் சேவை செய்வதற்கும் நிர்வகிப்பதற்கும் மலையகத்தை சேர்ந்த இரண்டு பிரமசாரிகளும் ஒரு
பிரம்மசாரினியும் இந்தியா சென்று கற்று பயிற்சி பெற்று இலங்கை வந்துள்ளனர். இவர்களையும் இங்கு சேவை செய்ய விடுவதில்லை.
ஒருவர் கண்டியிலும் ஒருவர் ஹட்டனிலும் வீட்டில் இருக்கின்றனர். நிர்வாகம் முழுவதும் ஒரு கம்பனி நிர்வாகம் போல் வியாபாரத்தை
நோக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றது. இந்த பயிற்றப்பட்ட பிரமசாரிகள் மலையக மக்களுக்கு சேவை செய்ய எத்தனித்த போதும் அதற்கான எந்தவிதமான ஒத்துழைப்பும் மிஷனில் இல்லை.
தற்போது உள்ள நிர்வாகம் தமிழ் மக்களிடையே ஒரு பிரதேசவாத்துடனயே அன்மை காலமாக செயற்பட்டு வருகின்றது.
மிஷனிலும் மிஷன் வளாகத்தில் காணப்படும் ஸ்ரீ பக்த அனுமந்த ஆலயத்திலும் வேலை செய்வதற்கு மாத்திரமே மலையகத்தில் இருந்து எடுத்துள்ளனர்.
மலையகத்தின் பிரமசாரியானவர்களையும் மிஷனின் மலையக ஆயுட்கால உறுப்பினர்களையும் ஒதுக்கி வைத்துள்ளனர்.
இவர்களை எந்தவிதமான நிர்வாக செயற்பாடுகளுக்கோ சமூக நலன் சார்ந்த செயற்பாடுகளுக்கோ இணைத்துக் கொள்வதில்லை.
இது பிரதேசவாதம் என்பதை பறைசாட்டுகின்றது. இந்த விடயம் குறித்து உலக சின்மயா மிஷன் தலைவர் இலங்கை வந்திருந்த போது முறையிடப்பட்டாலும் இது வரை எந்த முடிவும் இல்லை.
குறிப்பாக இங்கு அமைந்திருக்கும் ஸ்ரீ பக்த அனுமந்த ஆலயம் அமைப்பதற்கு அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின்
பங்கும் மலைய பெருந்தோட்ட மக்களின் பங்கும் அதிகமாகவே இருந்துள்ளது. இது குறித்து சின்மயா மிஷன் நிர்வாகத்திற்கு தெரியாது போலாகும். இது மலையத்தின் சொத்து.
இவ்வாறான நிலையில் இறம்பொடையில் அமைந்துள்ள இந்த சின்மயா மிஷனில்; தற்போது வியாபாரமே நடந்து வருகின்றது.
ஹோட்டல் இருக்கின்றது அறைகள் இருக்கின்றது. வருகின்றனவர்கள் நன்கு உண்டுவிட்டு தங்கிவிட்டு செல்லலாம்.
அதுமட்டுமல்ல இங்கு பல சமூக சீர்கேடுகளும் பிரதேசவாத செயற்பாடுகளும் இந்த வளாகத்தில் நாளாந்தம் செயற்பட்டு
வருகின்றது. இது ஒரு சமய அமைப்பு என்பதால் எதனையும் கூற முடியாது. இருந்தும் எல்லையை மீறியதினால் சுட்டிக்காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளோம். மன்னிக்கவும்
இங்கு பஜன் செய்வதற்கு என அமைக்கபட்ட பிரதான மண்டபத்தில் தற்போது ஊழியர்கள் உடுப்பு காயப்போடும் இடமாக மாறியுள்ளது. இந்த இடத்திற்கு செல்பவர்கள் மிகவும் பயபக்தியுடனே செல்லுவர்.
இந்த இடத்திலேயே பூஜைக்குரிய ஸ்ரீ சுவாமி சின்மயானந்தர் குருஜியின் அவர்களின் படங்கள் இருகின்றன. இவருக்கே மறியாதை இல்லை என்றால் மலையக மக்களுக்கு எங்கே இருக்க
போகின்றது. இந்த விடயம் தொடர்பில் நிர்வாகத்துடன் வினாவுவதற்கு முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை. அவர்கள் தொலைபேசியை நிறுத்தி வைத்துள்ளனர்.
இந் நிலையில் இந்த விடயம் குறித்தும் மலையகத்தில் ஆன்மீகம் என்ற போர்வையில் சீரழிக்கபட்டு வரும் செயற்பாட்டு குறித்தும்
ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வர மலையகத்தின் சமூக அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன. இந்த விடயம் குறித்த
இந்தியாவில் அமைந்துள்ள சின்மயா மிஷனின் தலைமைய அலுவலகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையத்தின் இந்து சைவ 



கொழும்பு யாழ் ரயில் சேவைகள் ஆரம்பம்
கொழும்பு யாழ் ரயில் சேவைகள் ஆரம்பம்
சில ரயில்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து ரயில்களும் நேர அட்டவணைக்கு அமைவாக இன்று தொடக்கம் சேவையில்
ஈடுபடுத்தப்படம் என்று ரயில்வே திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் வி , ஏ.சி பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமையன்று பொலநறுவை ரயில் நிலையத்திற்கும் கொழம்பு கோட்டைக்குமிடையில் சேவையில் ஈடுபடும் புளத்திசி
ரயிலும் யாழ்பானத்திற்கும் கோட்டைக்கும் இடையிலான நகரங்களுக்கிடையிலான ரயிலும் சேவையில் இடம்பெறாது.
இதேபோன்று தேநுவர மெனிக்கே என்ற ரயிலும் காலை 7.00 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து கண்டிக்கும் பிற்பகல்
3.30 மணிக்கு கோட்டைக்குமாக சேவையில் ஈடுபடும் ரயில் மாத்திரம் எதிர்வரும் திங்கட்கிழமை சேவையில் ஈடுபடமாட்டா.
திங்கட்கிழமை தொடக்கம் பெலியத்த ரயில் நிலையத்திலிருந்து காலை 4.30க்கு சேவையில் ஈடுபடும் தெற்கு அதிவேக
நகரங்களுக்கிடையிலான ரயிலும் இந்த ரயில் நியைத்தில் இருந்து காலை 4.40க்கு மருதானை ரயில் நிலையத்திற்கிடையில்
சேவையில் ஈடுபடும். மாத்தறை ரயில் நிலையத்தில் அதிகாலை 3.15 மணிக்கும் காலி ரயில் நிலையத்தில் காலை 5.20மணிக்கும்
ஹிக்கடுவ ரயில் நிலையம் வரையிலும் 5.20 மணிக்கு மருதானை வரையிலும் ரயில் சேவையில் ஈடுபடும்.
ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 25 ஆயிரத்து 942 பேருக்கு எதிராக வழக்கு
ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 25 ஆயிரத்து 942 பேருக்கு எதிராக வழக்கு
ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 25 ஆயிரத்து
942 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் தனிமைப்படுத்தல்
சட்டத்திற்கமைய நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி மாலை 6 மணிமுதல் நாடளாவிய ரீதியில்
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வந்ததுடன் கடந்த மே மாதம் 11ஆம் திகதிமுதல்
ஊரடங்கு தளர்த்தப்பட்டு குறிப்பிட்ட காலப் பகுதிக்கு மாத்திரம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில்
70 ஆயிரத்து 272 பேர் கைது செய்யப்பட்டதுடன் இவர்களிடமிருந்து 19 ஆயிரத்து
952 வாயனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை இராணுவத்தில் 98 பேர் -திடீர் பதவி உயர்வு
இலங்கை இராணுவத்தில் 98 பேர் -திடீர் பதவி உயர்வு
இலங்கை இராணுவத்தில் 92 பேர் திடீரென பதவி உயர்ரத்த பட்டுள்ளனர்
.கோட்டபாய ஆட்சியில் அமர்ந்ததன் பின்னர் திடீரென இராணுவத்தினர்
பதவி உயர்வுகள் அதிகரிக்க பட்டு இராணுவம் புதிய நகர்வுக்கு தயார் படுத்த பட்டு வருகிறது
61 கப்டன் தர அதிகாரிகள் மேயர்களாகவும் .19 மேயர், லெப்டினன் கேணலாகவும் 14 லெப்டினன் கேணல் ,கேணல்களாகவும் 4 லெப்டினன் கேணல் brevet Colonel ளாகவும் பதவி உயர்ரத்த பட்டுள்ளனர்
கவிழ்ந்த பேரூந்து – தப்பிய பயணிகள்
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் ரொசல்ல சந்தியில் தனியார்
பயணிகள் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
டெம்பஸ்டோ ஹைட்றியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த
சிட்டிரைடர் ரக பஸ் இன்று (06) பிற்பகல் 2.15 மணியளவில் விபத்துக்குள்ளனது.
டெம்பஸ்டோவிலிருந்து பயணிகளை ஏற்றிவந்த பஸ் ரொசல்ல சந்தியில் ஹட்டன் பிரதான வீதிக்குள்ள நுழைய முற்பட்ட போது
சாரதியின் கட்டுப்பாட்டை மீறி பின்நோக்கி சென்று குடைசாந்துள்ளது.

லண்டனில் சிக்கிய 278 இலங்கையர் நாடு திரும்பினார்
பிரித்தானியாவில் சிக்கியிருந்த மேலும் 278 இலங்கையர்கள் இன்று (07) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்கள் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.504 இலக்க
விசேட விமானத்தில் அதிகாலை 2.51 க்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் லண்டனின் இத்ரோ விமான நிலையத்திலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.
விமானத்தில் வருகைத்தந்தவர்கள், விமான பணியாளர் உள்ளிட்ட அனைவருக்கும்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்தே பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் கிடைக்கும்
வரை அவர்கள் அனைவரும் விமான நிலைய வளாகத்தில் உள்ள 4 விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையை 1814 பேர் கொரனோவால் பாதிப்பு
இலங்கையை 1814 பேர் கொரனோவால் பாதிப்பு
COVID 19 (கொரோனா) தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 1814 ஆக அதிகரித்துள்ளது.
COVID 19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான இலங்கையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இதுதொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
பரம்பலின் தரவுகள் புதுப்பிக்கப்பட்டது 2020-06-07 07:54:58
1814
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்,912
சிகிச்சை பெறும் நோயாளிகள்,0
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்
891
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை,11
இறப்பு எண்ணிக்கை
தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகை இன்று இடம்பெறவுள்ளது.
2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகை இன்று இடம்பெறவுள்ளது.
காலி மாவட்டத்தில் அம்பலாங்கொடை பிரதேச செயலகப்பிரிவில் தெரிவு
செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவில் இன்று (07) இந்த ஒத்திகை வாக்களிப்பு நடைபெறுகிறது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர நாயகத்தால் வழங்கப்பட்டுள்ள சுகாதார
வழிகாட்டுதல்களுக்கு அமைவாக புதிய வழிகாட்டலுக்கு அமைவாக
வாக்களிப்பு நிலைமை தொடர்பில் தெளிவை பெற்றுக் கொள்வதே இதன் நோக்கமாகும்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தேர்தல்கள் திணைக்கள ஆணையாளர்
நாயகம் சமன் ஸ்ரீ ரட்நாயக்க, புதிய வழி முறையில் ஒரு வாக்காளர் ஒருவருக்கு
வாக்களிப்பதற்கான காலத்தை மதிப்பீடு செய்வது தொடர்பில் தெளிவை பெற்றுக்கொள்வதே இதன் நோக்கம் என்று தெரிவித்தார்
.
கறுப்பினத்தவர் இனவெறி கொலைக்கு ரசியா,வடகொரியா ,ஈரான் கடும் எச்சரிக்கை
கறுப்பினத்தவர் இனவெறி கொலைக்கு ரசியா,வடகொரியா ,ஈரான் கடும் எச்சரிக்கை
அமெரிக்காவில் இடம்பெற்ற கறுப்பினத்தவர் படுகொலைக்கு
ரசியா,வடகொரியா,ஈரான் என்பன கடும் கணடனத்தை தெரிவித்துள்ளனர்
இரட்டை நிலையினை எடுத்துள்ள அமெரிக்காவின் செயல்
பாட்டுக்கு இவர்கள் கண்டனம் வெளியிட பட்டுள்ளது
இனவெறி அடக்குமுறைக்கு எதிராக தமது கடும் கண்டிப்பை வெளியிட்டுள்ள
குறித்த நாடுகள் ,ஜனநாயகத்தின் பாதைக்கு அமெரிக்கா திரும்ப வேண்டும்
என கூறியுளளது அமெரிக்காவுக்கு பெரும் சீற்றத்தை ஏற்படுதியுள்ளது
ஆனால் இதில் சொல்ல பட்டுள்ள விடயம் என்னவெனில் நாங்கள் இணைத்துள்ளோம்
இனி உங்களுக்கு அழிவு என்பதே அந்த மறைமுக செய்தியாக பொதிந்து கிடக்கிறது
வீழுந்து நொறுங்கிய விமானம் – தீயில் எரிந்து ஐவர் பலி
வீழுந்து நொறுங்கிய விமானம் – தீயில் எரிந்து ஐவர் பலி
அமெரிக்கா ஜோர்ஜியா பகுதியில் இலகு ரக விமானம் ஒன்று ஐவரை
காவிய படி பறந்து சென்றது ,சிறு காட்டு பகுதி ஒன்றுக்கு மேலாக
பறந்த பொழுது அந்த விமானம் விபத்தில் சிக்கி சிதறி வீழ்ந்தது
விமானத்தில் பற்றி பிடித்த தீயின் காரணமாக அதில் பயணித்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட ஐவர் பலியாகினர்
இண்டியானாவில் உள்ள மரண வீடொன்றுக்கு சென்று கொண்டிருந்த பொழுதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இந்தியா சீனாவுக்கு இடையில் 4 மணி நேரம் பேச்சு
இந்தியா சீனாவுக்கு இடையில் 4 மணி நேரம் பேச்சு
இந்தியா ,சீனா எல்லையில் இராணுவத்தினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது
இந்த மோதலானது நாடுகளுக்கு இடையில் மோதலை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் நிலவி வந்தது
இவ்வாறான நிலையில் தற்போது இரு நாடுகளுக்கு இடையில் நான்கு மணித்தியாலம் முக்கிய இராய தந்திர பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன
இதனால் தற்போது நிலவிய பதட்டம் தனிய பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
மக்களின் கேள்விகளுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதில் அளிக்கின்றார் !
மக்களின் கேள்விகளுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதில் அளிக்கின்றார் !
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் இணையவழி
நேரலை ‘மக்கள் அரங்கம்’ நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு அறிவித்துள்ளது.
June 6 , 2020 சனிக்கிழமை நேரம் ( time : USA NY : 12h pm / UK 5h pm / EU 6h pm) நா.தமிழீழ அரசாங்கத்தின் சமூகவலைத்தளத்தில்
https://www.facebook.com/tgteofficial நேரலையாக வர இருப்பதோடு, Facebook நேரலையில் இணைந்து கொண்டுள்ள மட்டுமல்ல,
முன்னராகவே கேள்விகளை பதிவிட்டுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நேரலை நிகழ்ச்சியினை நாடுகடந்த
தமிழீழ அரசாங்கத்தின் http://tgte.tv/ வலைக்காட்சி மூலமும் சமநேரத்தில் காணலாம்.
நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான செயல்வழிப்பாதை, சமகால அரசியல், உலக அரசியல் என்று ஆரோக்கியமான கேள்விகளை நோக்கி நேரலை காத்திருக்கின்றது.
இலங்கையின் மலையகத்தில் சின்மாய மிஷன் ஆன்மீகத்தை சீரழிக்கின்றது
இலங்கையின் மலையகத்தில்
சின்மாய மிஷன் ஆன்மீகத்தை சீரழிக்கின்றது
பணம் படைத்தவர்களின் சர்வாதிகார செயற்பாடுகள் மூலம் இலங்கையில் முன்னெடுக்கபட்டு வரும் சின்மயா மிஷன் ஆன்மீகம்
என்ற போர்வையில் மலையகத்தில் சீரழிவான செயற்பாடுகளில் செயற்பட்டு வருகின்றது.
பூஜைக்குரிய ஸ்ரீ சுவாமி சின்மயானந்தரால் ஆன்மீக நிறுவனமான சின்மயா மிஷன் உயர்ந்த ஆன்மீக நோக்கங்களுடன் உலகம் முழுவதும் இயங்கி வருகின்றது. இந்த நிறுவனம் வேதாந்தத்தின்
ஊடாக மக்களிடம் அமைதியையும் சந்தோஷத்தையும் சேவையின் ஊடாக பரப்புதலை கொள்கையாக கொண்ட நிறுவனமாகும்
இருந்தும் இலங்கை மத்திய மலைநாட்டில் இறம்பொடையில்
அமைந்துள்ள இந்த சின்மயா மிஷன் நிர்வாக தலைவர் உட்பட உறுப்பினர்கள் கொள்கைகளை மறந்து புறம்பான வியாபார
நோக்கில் செய்பட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் சின்மயா மிஷன் மலையக மக்களின் நிலை கண்டு சேவை செய்யவே வந்தது. தற்போது முற்றிலும் வேறுபட்ட விதத்தில் செயற்படுகின்றது.
மலையக மக்களுக்காக பூஜைக்குரிய ஸ்ரீ சுவாமி சின்மயானந்தரால் உறுவாக்கபட்ட இந்த ஆச்சிரமம் மலையக
பெருந்தோட்ட மக்களுக்கு செய்ய வேண்டிய சமய கலாசார விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல் ஆகும். இந்த விடயம் இங்கு நடைபெறுவதில்லை.
இந்த மிஷனில் சேவை செய்வதற்கும் நிர்வகிப்பதற்கும் மலையகத்தை சேர்ந்த இரண்டு பிரமசாரிகளும் ஒரு பிரம்மசாரினியும் இந்தியா சென்று கற்று பயிற்சி பெற்று இலங்கை
வந்துள்ளனர். இவர்களையும் இங்கு சேவை செய்ய விடுவதில்லை. ஒருவர் கண்டியிலும் ஒருவர் ஹட்டனிலும் வீட்டில் இருக்கின்றனர்.
நிர்வாகம் முழுவதும் ஒரு கம்பனி நிர்வாகம் போல் வியாபாரத்தை நோக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றது. இந்த பயிற்றப்பட்ட
பிரமசாரிகள் மலையக மக்களுக்கு சேவை செய்ய எத்தனித்த போதும் அதற்கான எந்தவிதமான ஒத்துழைப்பும் மிஷனில் இல்லை.
தற்போது உள்ள நிர்வாகம் தமிழ் மக்களிடையே ஒரு பிரதேசவாத்துடனயே அன்மை காலமாக செயற்பட்டு வருகின்றது.
மிஷனிலும் மிஷன் வளாகத்தில் காணப்படும் ஸ்ரீ பக்த அனுமந்த ஆலயத்திலும் வேலை செய்வதற்கு மாத்திரமே மலையகத்தில் இருந்து எடுத்துள்ளனர்.
மலையகத்தின் பிரமசாரியானவர்களையும் மிஷனின் மலையக ஆயுட்கால உறுப்பினர்களையும் ஒதுக்கி வைத்துள்ளனர்.
இவர்களை எந்தவிதமான நிர்வாக செயற்பாடுகளுக்கோ சமூக நலன் சார்ந்த செயற்பாடுகளுக்கோ இணைத்துக் கொள்வதில்லை. இது பிரதேசவாதம் என்பதை பறைசாட்டுகின்றது. இந்த விடயம்
குறித்து உலக சின்மயா மிஷன் தலைவர் இலங்கை வந்திருந்த போது முறையிடப்பட்டாலும் இது வரை எந்த முடிவும் இல்லை.
குறிப்பாக இங்கு அமைந்திருக்கும் ஸ்ரீ பக்த அனுமந்த ஆலயம் அமைப்பதற்கு அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் பங்கும் மலைய பெருந்தோட்ட மக்களின் பங்கும் அதிகமாகவே
இருந்துள்ளது. இது குறித்து சின்மயா மிஷன் நிர்வாகத்திற்கு தெரியாது போலாகும். இது மலையத்தின் சொத்து.
இவ்வாறான நிலையில் இறம்பொடையில் அமைந்துள்ள இந்த சின்மயா மிஷனில்; தற்போது வியாபாரமே நடந்து வருகின்றது. ஹோட்டல் இருக்கின்றது அறைகள் இருக்கின்றது.
வருகின்றனவர்கள் நன்கு உண்டுவிட்டு தங்கிவிட்டு செல்லலாம். அதுமட்டுமல்ல இங்கு பல சமூக சீர்கேடுகளும் பிரதேசவாத செயற்பாடுகளும் இந்த வளாகத்தில் நாளாந்தம் செயற்பட்டு
வருகின்றது. இது ஒரு சமய அமைப்பு என்பதால் எதனையும் கூற முடியாது. இருந்தும் எல்லையை மீறியதினால் சுட்டிக்காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளோம். மன்னிக்கவும்
இங்கு பஜன் செய்வதற்கு என அமைக்கபட்ட பிரதான மண்டபத்தில் தற்போது ஊழியர்கள் உடுப்பு காயப்போடும் இடமாக மாறியுள்ளது. இந்த இடத்திற்கு செல்பவர்கள் மிகவும் பயபக்தியுடனே செல்லுவர்.
இந்த இடத்திலேயே பூஜைக்குரிய ஸ்ரீ சுவாமி சின்மயானந்தர் குருஜியின் அவர்களின் படங்கள் இருகின்றன. இவருக்கே
மறியாதை இல்லை என்றால் மலையக மக்களுக்கு எங்கே இருக்க போகின்றது. இந்த விடயம் தொடர்பில் நிர்வாகத்துடன்
வினாவுவதற்கு முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை. அவர்கள் தொலைபேசியை நிறுத்தி வைத்துள்ளனர்.
இந் நிலையில் இந்த விடயம் குறித்தும் மலையகத்தில் ஆன்மீகம் என்ற போர்வையில் சீரழிக்கபட்டு வரும் செயற்பாட்டு குறித்தும்
ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வர மலையகத்தின் சமூக அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன. இந்த விடயம் குறித்த
இந்தியாவில் அமைந்துள்ள சின்மயா மிஷனின் தலைமைய அலுவலகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரானாவின் தாக்குதலில் இருந்து 443 கடற்படையினர் குணமடைந்தனர்
கொரானாவின் தாக்குதலில் இருந்து 443 கடற்படையினர் குணமடைந்தனர்
கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 17 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட
பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 04 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
கொவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக இந்த கடற்படை வீரர்கள் அனைவரும் ஹோமகம, ஐ.டி.எச், வெலிகந்த மற்றும்
மினுவங்கொடை ஆகிய வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். சிகிச்சையின் போது அவர்கள் மீது
நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் அவர்களின் உடலில் குறித்த வைரஸ் இல்லை என்பது தெரியவந்ததுடன் அவர்கள் 2020 ஜூன் 04 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
அதன்படி, இந்த 17 நபர்களும் உட்பட 443 கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து
வெளியேறினர். வெளியேறிய கடற்படை வீர்ர்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் உலர் உணவு பொருட்கள்
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் உலர் உணவு பொருட்கள்
இராணுவ அதிரடிப் படை சேவை வனிதையர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் மாத்தளை இராணுவ அதிரடிப் படை
தலைமையகத்தின் படையினர் எல்கடுவை தோட்டத்தின் 29 வது பிரிவின் 23 ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள், உலர்
உணவு பொருட்கள் மற்றும் மரக்கறிகளை நன்கொடையாக வழங்கும் செயற்றிட்டம் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.
இராணுவ அதிரடிப் படை மற்றும் இராணுவ சேவை வனிதையர் சங்க தலைவி திருமதி சுஜீவா நெல்சன் அவர்களின்
முன்மொழிதலுக்கு அமைவாக இராணுவ சேவை வனிதையர் சங்கம் இச் சமூகத் திட்டத்திற்கு குறுகிய அறிவித்தலுக்கு
அமைவாக இராணுவ அதிரடிப் படைத் தலைமையகத்திற்கு தேவையான வளங்களை பெற்றுக் கொடுத்தது.
நன்கொடையில் குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கு போதுமானதான பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த சமூக நலத்திட்டத்தில் இராணுவ
அதிரடிப் படையின் நிலையத் தளபதி, அதிகாரிகள் மற்றும் கலந்து கொண்டனர்.

மர்மமாக இறந்த நிலையில் இளம் பெண் சடலமாகே மீட்பு
மர்மமாக இறந்த நிலையில் இளம் பெண் சடலமாகே மீட்பு
இலங்கை மெதகம திவியாபொல பகுதியில் மர்மமாக இறந்த
நிலையில் இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார்
வீடு ஒன்றுக்குள் இறந்த நிலையில் மீட்க பட்ட சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது









