போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த 3 பேர் கைது

Spread the love

போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த 3 பேர் கைது

போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த கொழும்பு முல்லேரியா, கல்வான பிரதேசத்தை சேர்ந்த மூவர் பொலிஸ் விசேட

அதிரடிப்படையினரால் நேற்று முன்தினம்(17) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாணயத்தாள் போன்று ஒருபக்கத்தில் மாத்திரம் அச்சிடப்பட்ட போலி 5,000 ரூபாய் நோட்டுக்கள் இருபக்கமும் வைக்கப்பட்ட 128

கட்டுக்கள் பொதி செய்யப்பட்டுள்ள நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஜாஎல, அங்கொட மற்றும் முல்லேரியா பகுதிகளில் வசிக்கும் 34, 36 மற்றும் 42 வயதுகள் உடைய குறித்த சந்தேக நபர்கள் மேலதிக

விசாரணைகளுக்காக முல்லேரியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதுடன், போலி நாணயத்தாள்களை

எடுத்துச் செலவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபர்கள் நேற்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போலி

நாணயத்தாள்கள் அச்சிட்டமை தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *