Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் அதிகாரிக்கு லஞ்சம் வழங்கிய நபர் கைது – பதவி பறிப்பு

பொலிஸ் அதிகாரிக்கு லஞ்சம் வழங்கிய நபர் கைது – பதவி பறிப்பு

இலங்கையில் ஆளும் கோட்டபாய ஆட்சியில் லஞ்சம் ஒழிக்க படும்

என்ற கொட்டு முரசு முன் வைக்க பட்டது

லஞ்சம் வாங்கும் அனைவரையும் 2500 சிறப்பு இரகசிய புலனாய்வாளர்கள் கண்காணிப்பார்கள் என அறிவிக்க பட்டது

அதன் அடிப்படையில் தொம்பே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு

இரண்டு லட்சம் லஞ்சம் வழங்கியவர் கைது செய்ய பட்டுள்ளதுடன்

.காவல்துறை அதிகாரியும் கைது செய்யப்பட்டுளளார்

இவரது பதவி பறிக்க பட்டு வீட்டுக்கு துரத்த படுவார் என எதிர் பார்க்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் புதிதாக கொண்டுவரப் படும் சட்டம்

இலங்கையில் புதிதாக கொண்டுவரப் படும் சட்டம்

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை ஐக்கிய மக்கள் சக்தி மிகுந்த பலத்துடன்

எதிர்கொள்ளும் என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

தெரண 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தத்தின் ஊடாக மைத்திரிபால சிறிசேனவிற்கு பதவியும்

பசில் ராஜபக்ஷவிற்கு பாராளுமன்றத்திற்கு நுழையும் வாய்ப்பும் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் நலனை கருத்திற் கொண்டு திருத்தைத்தை கொண்டுவருவதாயின்

தாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை எனவும் அவ்வாறு இல்லாவிடின்

தாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

போரில் காயமடைந்து -காணமல் போனவர்கள் வீடுகளுக்கு சென்று மருந்து வழங்கும் இராணுவம்

நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று இலங்கை கடற்படை மருந்து விநியோகம்

யுத்தத்தின் போது உயிரிழந்த, காயமடைந்த மற்றும் காணாமல் போன கடற்படை வீரர்களின் குடும்பங்கள் அத்துடன் ஓய்வு பெற்ற

மற்றும் சேவையிலிருக்கும் கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் மாதாந்தம் மருந்துகள்

விநியோகிக்கும் புதிய முறை ஒன்றினை இலங்கை கடற்படை இன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், கொழும்பு கடற்படை வைத்தியசாலைக்கு வருகை தந்து சிகிச்சை பெற்றுவருவோர் அவர்களின்

மருந்துப்பொதிகளை தமது வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளும் வகையில் அவர்களது வீடுகளுக்கு சென்று

விநியோகிக்கப்படுகிறது. கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்னவின் ஆலோசனைகளுக்கு அமைய குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, கடற்படை வைத்தியசாலை நாட்பட்ட நோய்களான நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய், ஆஸ்துமா, சிறுநீரக

நோய், கர்ப்ப நோய் மற்றும் கண், தோல், நரம்பியல் நோய் மற்றும் மன நோயாளிகள் ஆகியோருக்கு மருத்துவ ஆலோசனைகளுக்கு ஏற்ப பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி

இவ்வாறான திட்டமொன்றை இலங்கை கடற்படையினரால் முன்னேடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பலர் பயனடந்தனர்.

Posted in இலங்கை செய்திகள்

மக்கள் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேலைத்திட்டம் ஆரம்பம்- கூவும் அரசு

மக்கள் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேலைத்திட்டம் ஆரம்பம்- கூவும் அரசு

பொருளாதாரத்தின் உரிமையை மக்கள் அடைந்துகொள்ளும் மக்கள் மைய பொருளாதார பொறிமுறை ஒன்றுக்காக இம்முறை இராஜாங்க அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பட்டார்.

இராஜாங்க அமைச்சுக்களின் விடயதானங்கள் குறித்து மீளாய்வை ஆரம்பிக்கும் வகையில் நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

பத்திக், கைத்தரி, ஆடைகள் மற்றும் உள்நாட்டு ஆடைக் கைத்தொழிலுக்காக இராஜாங்க அமைச்சொன்றை உருவாக்குவதற்கான காரணங்களை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொவிட் 19 காரணமாக பாரிய சிக்களுக்கு ஆளாகியுள்ள ஏனைய நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்தாது முன்னோக்கி செல்ல முடியாது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஆடைக் கைத்தொழில் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 43 வீதத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றது. இதன் மூலம் ஏற்றுமதி வருமானத்துக்கு வருடாந்தம் 05 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெறுகின்றது. தொழில் வழங்கும்போதும் மற்றும் பிரதேச அபிவிருத்தியின் போதும் ஆடைக் கைத்தொழில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றது. அதனை வலுப்படுத்தும் முகமாக பத்திக் மற்றும் கைத்தறி உட்பட உள்நாட்டு ஆடை உற்பத்தியை மேம்படுத்துவது அரசின் பிரதான நோக்கம் என்று ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

பத்திக் மற்றும் கைத்தறி கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் செயற்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

அதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் ஆடை உற்பத்தியாளர்களுக்கு ஒரு ஸ்திரமான நிலையை ஏற்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

‘சலுசல’ போன்ற நிறுவனங்கள் மூலம் பத்திக் மற்றும் கைத்தறி ஆடை உற்பத்தியாளர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் பி. பீ.ஜயசுந்தர, திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். ஆடிகல ஆகியோர் உள்ளிட்ட பத்திக், கைத்தறி ஆடை, உள்நாட்டு ஆடைக் கைத்தொழில் சார்ந்த நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Posted in இலங்கை செய்திகள்

இறுதி போர் இடம்பெற்ற – நந்திக்கடல் புனரமைப்பு ஆரம்பம்

இறுதி போர் இடம்பெற்ற – நந்திக்கடல் புனரமைப்பு ஆரம்பம்

நந்திக்கடல் புனரமைப்பின் முதற் கட்டப் பணிகளை அடுத்த வாரம் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதுடன் அதற்கான பூர்வாங்க வேலைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் விசேட கரிசனையின் அடிப்படையில் கடந்த பல மாதங்களாக

முன்னெடுக்கப்பட்டு வந்த நந்திக்கடல் புனரமைப்பு தொடர்பான முன்னேற்பாடுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிக் கட்ட கள ஆய்வுப் பணிகள் நேற்று முன்தினம் (16.08.2020) இடம்பெற்றன.

கடற்றொழில் திணைக்களம், மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம், நாரா எனப்படும் தேசிய நீர்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி நிறுவனம், வன வளத் திணைக்களம் ஆகியவற்றின்

அதிகாரிகளும் கடற்றொழிலாளர் சமூகப் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இறுதிக் கட்ட கள ஆய்வுகளின் அடிப்படையில்

வட்டுவாகல் பாலத்தை அண்மித்துள்ள நந்திக் கடல் முகத்துவாரப் பகுதியில் குவிந்து கிடக்கின்ற கழிவுகளை உடனடியாக அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், குறித்த முதற்கட்டப் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது. யுத்தம் மற்றும் தமிழ் தலைமைகளின்

அக்கறையீனம் காரணமாக கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக தூர்வாரி புனரமைக்கப்படாத நிலையில் சுனாமி போன்ற இயற்கை

அனர்த்தங்களினாலும் யுத்தத்தினாலும் நந்திக்கடலில் குவிந்து கிடக்கும் கழிவுப் பொருட்களும் சேற்று படுக்கைகளும்

நந்திக்கடலின் இயற்கை சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மீன், இறால் போன்ற கடலுணவுகளின் உற்பத்தி குறைவடைந்தமையினால், குறித்த நீர்நிலையை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்ற ஆயிரக்கணக்கான குடும்பங்கள்

பாதிப்பினை எதிர்கொண்டன. குறித்த விடயம், கடந்த வருட இறுதியில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர்

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு பாதிக்கப்பட்ட மக்களினால் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், குறித்த விடயத்தில் தொடர்ச்சியாக கவனம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்

சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கிய அறிவுறுத்தல்களின் பலனாக நந்திக்கடல் புனரமைப்பு பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

மின்சார தடை – நடந்தது என்ன..? – விசாரணையில் விசேட குழு

நேற்று இடம்பெற்ற மின்விநியோக சீர்குலைவு பற்றி ஆராய்வதற்காக

நியமிக்கப்பட்ட குழு இன்று காலை கூடவுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நேற்று நண்பகல் 12.30 அளவில் நாடு முழுவதிலும் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது.

கெரவலப்பிட்டி உப மின் நிலையத்தின் விநியோக வலைப்பின்னலில்

ஏற்பட்ட கோளாறு இதற்குக் காரணம் எனக் கருதப்படுகின்ற நிலையில்

குழுவொன்றை நியமித்து உண்மையைக் கண்டறியுமாறு மின்வலு அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் நேற்று ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்தச் சீர்குலைவு காரணமாக வீதிப் போக்குவரத்துச் சமிக்ஞைகள் இயங்காமல்

போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனினும் ரெயில் சேவைக்குப் பாதிப்பு

ஏற்படவில்லை எனவும் ரெயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாடு முழுவதிலும் மின்விநியோக வலைப்பின்னல் சீர்குலைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

Posted in இலங்கை செய்திகள்

தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் இணையத்தளத்தில் வெளியீடு- உங்கள் பெயர் உள்ளதா பாருங்க

தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் இணையத்தளத்தில் வெளியீடு- உங்கள் பெயர் உள்ளதா பாருங்க

தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் அரச சேவைகள், மாகாண

சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்கள் எதிர்வரும் நாட்களில்

குறித்த அமைச்சினால் உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என

ஜனாதிபதி ஊடகப்பிரிவு ஏற்கனவே அறித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் கீழ் நியமனம் பெறுபவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 02 ஆம் திகதி

அருகிலுள்ள பிரதேச செயலகத்திற்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட ஒரு இலட்சம் பேரை தொழில்களில் அமர்த்தும் பணிகள், அதற்காக

ஸ்தாபிக்கப்பட்டுள்ள செயலணியின் மூலம் எதிர்வரும் செப்டெம்பர் 02 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

Jaffna District
Selected List

Delft : https://drive.google.com/file/d/1Vq8QiJbJGCA3QCl7EVDNBTEUE-yOpDLM/view?usp=sharing

Island_North_Velanai : https://drive.google.com/file/d/1BedGYaHXZrTHuVsUqafaK4CYb1h6nXNq/view?usp=sharing

Island_South_kytes : https://drive.google.com/file/d/1uVgv3avcnEQrUTvfhh8nNDIuycORJ0_7/view?usp=sharing

Jaffna : https://drive.google.com/file/d/1FnQWPLZs1Nnn2JZqTN5WZGwPnBhb5UyY/view?usp=sharing

Karainagar : https://drive.google.com/file/d/1iEXbMVdr2TK6VoMOZR5VhlxBpNE7iqyN/view?usp=sharing

Nallur : https://drive.google.com/file/d/1BauwJFNPX9s-z15PxyWKaeegZizX0Njm/view?usp=sharing

Thenmarachchi_Chavakachcheri : https://drive.google.com/file/d/1q9NetpkS5v8rNHLqcFWz4ISM0L2h3Xlh/view?usp=sharing

Wadamarachchi_East : https://drive.google.com/file/d/1J9JJIHr80H_FDQr8IrGPY_gA17MWoPLG/view?usp=sharing

Wadamarachchi_North : https://drive.google.com/file/d/12DDERx_CUKDx69g68oRy5BLOuyjZXxSU/view?usp=sharing

Wadamarachchi_South : https://drive.google.com/file/d/1sHN1gvom1QEEfxl49TI9FURC7QsoEOlj/view?usp=sharing

Walikamam East : https://drive.google.com/file/d/1B71pt0SkAI-NnMSA8PTyAE1u1m_T9jtW/view?usp=sharing

Walikamam North : https://drive.google.com/file/d/1WCn_K54P9eTP4373bM5ovgUWpivKKyjD/view?usp=sharing

Walikamam West : https://drive.google.com/file/d/1o8slAceFrNRdFeumPFO0I3lJ0pUHjN0o/view?usp=sharing

Walikamam South : https://drive.google.com/file/d/1f5J5WhU7EY8r56hnfg0YBI1RRDROUDZd/view?usp=sharing

Walikamam West : https://drive.google.com/file/d/1wAwVvJCfz3qChk10x1xRA345iYC6ILu_/view?usp=sharing

Pending List : https://drive.google.com/file/d/1WDSSg1ljxgzgewbK2jtjUmfctJrlVWV0/view?usp=sharing

Rejected List : https://drive.google.com/file/d/1_CJ-cAAoFVB1JGfZHecQmTXL1pAvQA2M/view?usp=sharing

Kilinochchi District
Selected List

Kandavalai : https://drive.google.com/file/d/1bsslYpRbGKj4SfAnWbFcszQko76uz-FQ/view?usp=sharing

Karachchi : https://drive.google.com/file/d/1vblcf1sT3V3gcFMoud9oHCbv-x-WFfJe/view?usp=sharing

Pachchileippali : https://drive.google.com/file/d/1hMao8iZbuMoxvFxMQUzP7rSEsnrIn6Ju/view?usp=sharing

Punakari : https://drive.google.com/file/d/18M2hA9b4omuDccNixiv5PwVq0idvXKK7/view?usp=sharing

Pending List : https://drive.google.com/file/d/1fnmh3f9dNdk9hIKAlofvhbXzGwYGK0BA/view?usp=sharing

Rejected List : https://drive.google.com/file/d/17bzRvoPUuatwscSdjOM_pBxEIex_d61m/view?usp=sharing

Mulathivu District
Selected List

Manthei East : https://drive.google.com/file/d/189-33RNtmatdSyJ4turI7i_j8WaedLan/view?usp=sharing

Maritime Pattu : https://drive.google.com/file/d/1k0FgzTMzCwZpYb-sP6408YAm1c6jl6uA/view?usp=sharing

Oddusudan : https://drive.google.com/file/d/1g3dN8oemzSrt70AK9fnUSytZFkPu7Fff/view?usp=sharing

Puthukkudiyiruppu : https://drive.google.com/file/d/1TptYynG1juTistrWC0KeKLDleCmswPXf/view?usp=sharing

Thunukkai : https://drive.google.com/file/d/1-9TeCVQ23Nv7b4tbZSuwIW0Wpt417_Gh/view?usp=sharing

Welioya : https://drive.google.com/file/d/1FogUMcVkKJdBAp8XDRdGhwjigZAxC2vP/view?usp=sharing

Pending List : https://drive.google.com/file/d/18O74vkwC9lUdf7lThbOPvzAWgdRDCb9D/view?usp=sharing
Rejected List : https://drive.google.com/file/d/1uP52py2YLBJq3uPecj8s_EUgTbfNMaI8/view?usp=sharing

Gampaha District
Selected List

Attanagalla : https://drive.google.com/file/d/1_qr0NtO19fAFhU7T7kTwV9okyl7QbJds/view?usp=sharing

Biyagama : https://drive.google.com/file/d/1xJ_h6P5r8qnJfbtlFYlH9UWVHteZgSva/view?usp=sharing

Divulapitiya : https://drive.google.com/file/d/1A-yVv3wd1I9AI91ZFdjUpI53D3LvGEeb/view?usp=sharing

Dompe : https://drive.google.com/file/d/11AV4XEsFU-L8l7YTBKOh-mkuAbrEJ3E5/view?usp=sharing

Gampaha : https://drive.google.com/file/d/17fa3dOlYJ10IhVP1LthDuB5O9QAsTBev/view?usp=sharing

Ja-Ela : https://drive.google.com/file/d/1BWg-54_8eaAxtTwc5E25mYD2qkCJwVOd/view?usp=sharing

Katana : https://drive.google.com/file/d/16CZlku_Y7rUKn76kCxbftrSz-Lblreij/view?usp=sharing

Kelaniya : https://drive.google.com/file/d/1Tymi664jEq2Vh9lQCD_muTfE_G_kecnN/view?usp=sharing

Mahara-Kadawatha : https://drive.google.com/file/d/18HclSWEfeXgA82TvN22gos9SswNGXo42/view?usp=sharing

Meerigiama : https://drive.google.com/file/d/1_Z4ktyf4973-CnmJrxTEblxUmkRJWlzy/view?usp=sharing

Negambo : https://drive.google.com/file/d/1rOq4s5cf0ggLZ349Fgg8DSQZpBPPOIm1/view?usp=sharing

Wattala : https://drive.google.com/file/d/1gDDPmlbHG3yH13e_aUOHubDJA-dqvCzi/view?usp=sharing

Minuwangoda : https://drive.google.com/file/d/1n0sXopIuhu_pj0kpH-Zh0B1Q5F4KzthA/view?usp=sharing

Pending List : HTTPS://drive.google.com/file/d/1nALvC0rfJiyQkqpbwLwPB8ew3jPKt77j/view?usp=sharing
Rejected List : https://drive.google.com/file/d/1_nlWKbp8R25oxckonCYOmc5vIIaDYBkk/view?usp=sharing

    Posted in இலங்கை செய்திகள்

    யாழில் காவல்துறை மீது அகோர தாக்குதல்- 2 போலீசார் காயம்

    யாழில் காவல்துறை மீது அகோர தாக்குதல்- 2 போலீசார் காயம்

    யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் குற்றவியல் சட்டத்தின் கீழ்

    கைது செய்ய சென்ற போலீசார் மீது போலீசார் திடீர் தாக்குதலை நடாத்தியுள்ளனர்

    இதனால் காயமடைந்த இரு காவல்துறை ஊழியர் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுளளார்

    மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது

        Posted in உலக செய்திகள்

        சோமாலியாவில் குண்டு தாக்குதல் 17 பேர் பலி – 30 பேர் காயம்

        சோமாலியாவில் குண்டு தாக்குதல் 17 பேர் பலி – 30 பேர் காயம்

        சோமாலியாவில் கொட்டல் ஒன்றை இலக்கு வைத்து al-Shabab அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலில் அங்கிருந்த 17 பேர்

        பலியாகினர் மேலும் முப்பதுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்

        துப்பாக்கி சூடு மற்றும் குண்டு தாக்குதலை நடத்தியதால் இவ்வாறு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது

        இராணுவத்தினர் குவிக்க பட்டு தற்போது அப்பகுதி பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது

        சோமாலியாவில் குண்டு
        சோமாலியாவில் குண்டு
            Posted in உலக செய்திகள்

            அமெரிக்காவில் துப்பாக்கி சண்டை 4 பேர் பலி – 14 பேர் காயம்

            அமெரிக்காவில் துப்பாக்கி சண்டை 4 பேர் பலி – 14 பேர் காயம்

            அமெரிக்காவில் பரவாலாக இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி நால்வர் பலியாகினர்


            மேலும் பதின்நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்

            காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையி பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்


            குறித்த சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                Posted in இலங்கை செய்திகள்

                நல்லூர் தேரின் பொழுது மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு = வேண்டுதல்

                நல்லூர் தேரின் பொழுது மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு = வேண்டுதல்

                தற்போதைய Covid 19 தொற்று சூழ்நிலையை கருத்திற்கொண்டு நல்லூர் தேர் உற்சவத்தில் பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில்

                ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் பக்கத்தர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

                நாளை நல்லூர் ஆலய தேர் உற்சவம் மிகவும் விமரிசையாக இடம்பெறவுள்ள நிலையில் தற்போது உள்ள கொரோனா

                நிலைமையினை கருத்தில் கொண்டு மக்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது யாழ் மாவட்ட

                அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா மிக விமரிசையாக

                நடைபெற்று வருகின்றது. தேரோட்டம் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. தீர்த்தோற்சவம் மறுநாள் 18ம் திகதி இடம்பெறவிருக்கின்றது.

                இந்த நிலையில் தற்பொழுது பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் நல்லூர் கந்தனை தரிசிப்பதற்கு வருகை தருவதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. ஏற்கனவே சுகாதாரப் பகுதியினர், பொலிசார்

                மற்றும் பாதுகாப்பு பிரிவினரும் ஆலய நிர்வாகத்தினரும் சுகாதார ஆலோசனைகளை பக்தர்களுக்கு தெரிவித்துவருகின்றனர்.

                அதனடிப்படையிலே சுகாதார நடைமுறைகளை பேணி சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் சகல உற்சவங்களில் கலந்து கொள்வதற்கு ஏற்றவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

                எனவே இந்த கொரோனா தொற்றுநோய் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பக்தர்கள் இந்த சூழ்நிலையை அனுசரித்து செயற்பட

                வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது. பக்தர்கள் ஆலயத் தேர் உற்சவத்தினை உலகளாவிய ரீதியில் தொலைக்காட்சி வழியாக வீடுகளில் இருந்தவாறே பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

                எனவே சமூகத்தில் ஒவ்வொருவருடைய தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு பக்தர்கள் இந்த தடவை நல்லூர் ஆலய தேர்

                உற்சவத்திற்கு ஒன்றுகூடி ஆலய உற்சவத்தில் கலந்து கொள்ளாது, சுகாதார ஏற்பாடுகளுக்கு ஏற்ப அனுசரித்து தங்களுடைய

                பிரசன்னத்தை குறைத்து, ஒவ்வொரு தனி மனிதனின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் முகமாக செயற்பட வேண்டியது

                ஒவ்வொருவருடையதும் கடமையாகும் என்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன். மேலும் தெரிவித்துள்ளார்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    துபாயிலிருந்து 420 இலங்கையர்கள் தாயகம் வருகை

                    துபாயிலிருந்து 420 இலங்கையர்கள் தாயகம் வருகை

                    துபாயிலிருந்து 420 இலங்கையர்கள் நேற்றையதினம் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் எமிரேட்ஸ் விமான சேவைக்கு

                    சொந்தமான EK 2528 விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

                    விமான நிலையத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் முதற்கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளபட்ட பின்னர்

                    தனிமைப்படுத்தலுக்காக முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        அனைத்து பல்கலைக்கழகங்களும் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

                        அனைத்து பல்கலைக்கழகங்களும் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

                        நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் இன்று முதல் மீளத் திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக

                        மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்துள்ளார்.

                        மருத்துவ பீடங்களின் இறுதி வருட பரீட்சை வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது. கடந்த காலங்களில் இணையத் தளத்தைப்

                        பயன்படுத்தி மாணவர்களுக்கு போதிக்கப்பட்டது. தடைகளுக்கு மத்தியிலும் மாணவர்கள் இணையத் தள கற்கைகளில்

                        பங்கேற்றதாக அவர் குறிப்பிட்டார். விடுதிகளில் இதுவரை ஓர் அறையில் ஒருவர் தங்குவதற்கான வசதி செய்து கொடுக்கப்பட்டது.

                        இதன் பின்னர் அந்த வரையறையில்லாமல் வழமைபோன்று பல்கலைக்கழக நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்படும்.

                        இதனிடையே, களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் நாளை மறுதினம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என, களனி

                        பல்கலைக்கழகத்தின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைய, விடுதி வசதியை பெற்றுக்கொண்டுள்ள மாணவர்கள் நாளை

                        மாலை 5 மணிக்கு முன்னராக விடுதிக்கு வருகை தர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

                            Posted in உலக செய்திகள்

                            சிறுமி கற்பழித்துக் கொலை – 3 பேர் கைது

                            சிறுமி கற்பழித்துக் கொலை – 3 பேர் கைது

                            உத்தர பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கற்பழித்துக் கொல்லப்பட்டார். இதில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

                            உ.பி.யில் சிறுமி கற்பழித்துக் கொலை – 3 பேர் கைது
                            சிறுமி கற்பழித்து கொலை
                            லக்னோ:

                            உத்தர பிரதேசம் மாநிலத்தின் லக்கிம் கெரி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் வயலுக்குச்

                            சென்றார். நீண்ட நேரமாகியும் அவள் திரும்பி வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவளது பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.

                            அப்போது அங்குள்ள கரும்பு தோட்டத்தில் சிறுமி இறந்து கிடந்தாள். அவளை 2 பேர் கற்பழித்து, கழுத்தை நெரித்து கொலை

                            செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர்.

                            இதற்கிடையே சிறுமியின் தொண்டை மற்றும் கண்ணில் காயம் இருந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். ஆனால், அவர்

                            கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியாகி உள்ளதாகவும், அவளது தொண்டை,

                            கண்களில் காயம் எதுவும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

                            உ.பி.யில் ஆளும் பா.ஜ.க. அரசின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு சிறுமியின் கொலை சான்றாக உள்ளது என காங்கிரஸ், சமாஜ்வாடி

                            மற்றும் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

                                Posted in உலக செய்திகள்

                                உமிழ்நீர் மூலம் கொரோனாவை கண்டறியும் எளிய சோதனை

                                உமிழ்நீர் மூலம் கொரோனாவை கண்டறியும் எளிய சோதனை

                                உமிழ்நீர் மூலம் கொரோனாவை கண்டறியும் எளிய சோதனை

                                உமிழ்நீர் மூலம் கொரோனா வைரசை கண்டறியும் எளிய சோதனை, அமெரிக்காவில் அறிமுகம் ஆகிறது.

                                உமிழ்நீர் மூலம் கொரோனாவை கண்டறியும் எளிய சோதனை
                                உமிழ்நீர் பரிசோதனை
                                ஹூஸ்டன்:

                                உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றின் ஆதிக்கத்துக்கு மிக மோசமாக ஆளாகியுள்ள நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அங்கு

                                இதுவரை 53.61 லட்சம்பேர் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். 1.69 லட்சம் பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

                                கொரோனாவை கண்டறியும் சோதனை, பிற நாடுகளை விட அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் நடத்தப்படுகிறது.

                                உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மாதிரிகள் அங்குதான் பரிசோதிக்கப்படுகின்றன. இதனால் அங்கு பரிசோதனை கருவிகளுக்கு அவ்வப்போது தட்டுப்பாடு நிலவி வருகிறது.

                                இந்த நிலையில், கொரோனா பரிசோதனைகளை அமெரிக்காவில் விரைவாக விரிவாக்குவதற்காக எளிதாக உமிழ்நீர் மூலம்

                                கண்டறிகிற ‘சலிவா டைரக்ட்’ என்ற சோதனை முறையை உருவாக்கி உள்ளனர்.

                                இந்த பரிசோதனை முறை, யேல் பல்கலைக்கழகத்தின் மருத்துவக்கல்லூரி விஞ்ஞானிகளான நாதன் குருபாக் மற்றும் அன்னே வில்லி ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது.

                                இந்த சோதனை முறையை அங்கு அறிமுகம் செய்வதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அனுமதித்து விட்டது.

                                இதுபற்றி உணவு மற்றும் மருந்துகள் நிர்வாக ஆணையர் ஸ்டீபன் ஹான் கூறும்போது, “இந்த பரிசோதனை முறை கொரோனா

                                பரிசோதனை செயல்திறனை அதிகரிக்கும். பரிசோதனை கருவிகளின் உதிரி பாகங்கள் பற்றாக்குறையை இது தவிர்க்கும்” என குறிப்பிட்டார்.

                                இதற்கு முன்பும் கொரோனாவை கண்டறிவதற்கு உமிழ்நீர் மாதிரியை எடுத்து சோதிக்கும் 4 சோதனைகளுக்கு அமெரிக்க

                                உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அனுமதி அளித்து இருந்தது என்பது நினைவுகூரத்தக்கது. ஆனால் அந்த சோதனை முடிவுகள் மாறுபட்டதாக அமைந்து விட்டன.

                                இப்போது அறிமுகம் ஆகிற ‘சலிவா டைரக்ட்’ என்ற சோதனை முறை, அமெரிக்க தேசிய கூடைப்பந்து சங்கத்தின் வீரர்கள்,

                                ஊழியர்களை சோதிக்கும் திட்டத்தின் கீழ் அறிகுறியற்ற நபர்களுக்கான சோதனையாக அமையும்.

                                இந்த புதிய சோதனையின் சிறப்பம்சம், சோதனை எளிமையானது, செலவு குறைவானது, வழக்கமான கொரோனா பரிசோதனை முறைகளை விட சிறந்ததாகும். இதன்மூலம் கிடைக்கிற முடிவுகள்

                                துல்லியமானதாகவும் இருக்கிறதாம். அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்தின் அவசர கால பயன்பாட்டு

                                அங்கீகாரத்துடன் புதிய சோதனையை பயன்படுத்த விரும்பும் பிற பரிசோதனைக்கூடங்களுக்கு இந்த சோதனை முறை உடனடியாக

                                கிடைக்கிறது. இது அமெரிக்கா முழுவதும் வரும் வாரங்களில் பயன்பாட்டுக்கு வரும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

                                இந்த பரிசோதனை முறை குறித்து விஞ்ஞானி அன்னே வில்லி கூறுகையில், “உமிழ் நீர் விரைவாகவும், எளிதாகவும் சேகரிக்கப்படுவதால் இது கொரோனா வைரஸ் தொற்றினை

                                கண்டறியும் போக்கிலேயே மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் உணர்ந்துள்ளோம்” என குறிப்பிட்டார்.

                                இந்த சோதனையை பரவலாக்க ஏற்ற வகையில் நேரத்தையும், செலவையும் மேலும் குறைக்க தயார் என்று கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள் குழு கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

                                உமிழ்நீர் மூலம் கொரோனாவை கண்டறியும் எளிய சோதனை
                                உமிழ்நீர் பரிசோதனை
                                ஹூஸ்டன்:

                                உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றின் ஆதிக்கத்துக்கு மிக மோசமாக ஆளாகியுள்ள நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அங்கு

                                இதுவரை 53.61 லட்சம்பேர் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். 1.69 லட்சம் பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

                                கொரோனாவை கண்டறியும் சோதனை, பிற நாடுகளை விட அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் நடத்தப்படுகிறது.

                                உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மாதிரிகள் அங்குதான் பரிசோதிக்கப்படுகின்றன. இதனால் அங்கு பரிசோதனை கருவிகளுக்கு அவ்வப்போது தட்டுப்பாடு நிலவி வருகிறது.

                                இந்த நிலையில், கொரோனா பரிசோதனைகளை அமெரிக்காவில் விரைவாக விரிவாக்குவதற்காக எளிதாக உமிழ்நீர் மூலம் கண்டறிகிற ‘சலிவா டைரக்ட்’ என்ற சோதனை முறையை உருவாக்கி உள்ளனர்.

                                இந்த பரிசோதனை முறை, யேல் பல்கலைக்கழகத்தின் மருத்துவக்கல்லூரி விஞ்ஞானிகளான நாதன் குருபாக் மற்றும் அன்னே வில்லி ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது.

                                இந்த சோதனை முறையை அங்கு அறிமுகம் செய்வதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அனுமதித்து விட்டது.

                                இதுபற்றி உணவு மற்றும் மருந்துகள் நிர்வாக ஆணையர் ஸ்டீபன் ஹான் கூறும்போது, “இந்த பரிசோதனை முறை கொரோனா

                                பரிசோதனை செயல்திறனை அதிகரிக்கும். பரிசோதனை கருவிகளின் உதிரி பாகங்கள் பற்றாக்குறையை இது தவிர்க்கும்” என குறிப்பிட்டார்.

                                இதற்கு முன்பும் கொரோனாவை கண்டறிவதற்கு உமிழ்நீர் மாதிரியை எடுத்து சோதிக்கும் 4 சோதனைகளுக்கு அமெரிக்க

                                உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அனுமதி அளித்து இருந்தது என்பது நினைவுகூரத்தக்கது. ஆனால் அந்த சோதனை முடிவுகள் மாறுபட்டதாக அமைந்து விட்டன.

                                இப்போது அறிமுகம் ஆகிற ‘சலிவா டைரக்ட்’ என்ற சோதனை முறை, அமெரிக்க தேசிய கூடைப்பந்து சங்கத்தின் வீரர்கள், ஊழியர்களை சோதிக்கும் திட்டத்தின் கீழ் அறிகுறியற்ற நபர்களுக்கான சோதனையாக அமையும்.

                                இந்த புதிய சோதனையின் சிறப்பம்சம், சோதனை எளிமையானது, செலவு குறைவானது, வழக்கமான கொரோனா பரிசோதனை முறைகளை விட சிறந்ததாகும். இதன்மூலம் கிடைக்கிற முடிவுகள்

                                துல்லியமானதாகவும் இருக்கிறதாம். அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்தின் அவசர கால பயன்பாட்டு அங்கீகாரத்துடன் புதிய சோதனையை பயன்படுத்த விரும்பும் பிற

                                பரிசோதனைக்கூடங்களுக்கு இந்த சோதனை முறை உடனடியாக கிடைக்கிறது. இது அமெரிக்கா முழுவதும் வரும் வாரங்களில் பயன்பாட்டுக்கு வரும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

                                இந்த பரிசோதனை முறை குறித்து விஞ்ஞானி அன்னே வில்லி கூறுகையில், “உமிழ் நீர் விரைவாகவும், எளிதாகவும்

                                சேகரிக்கப்படுவதால் இது கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறியும் போக்கிலேயே மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் உணர்ந்துள்ளோம்” என குறிப்பிட்டார்.

                                இந்த சோதனையை பரவலாக்க ஏற்ற வகையில் நேரத்தையும், செலவையும் மேலும் குறைக்க தயார் என்று கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள் குழு கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    யாழில் கூட்டமைப்புக்கு எதிராக வெற்றி பெற்றவர்களை – பல படுத்துவதில் கோட்டா தீவிரம்

                                    யாழில் கூட்டமைப்புக்கு எதிராக வெற்றி பெற்றவர்களை – பல படுத்துவதில் கோட்டா தீவிரம்

                                    இலங்கையில் நடந்து முடிந்த ஒன்பதவது பாராளுமன்ற தேர்தல் பெரும் சல சலப்புக்களை தற்பொழுது ஏற்படுத்தியுள்ளது

                                    தமிழர்களின் ஏக பிரதிநிதிகளான தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க

                                    பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தாம் எதை செய்தாலும் தமிழ் மக்கள்

                                    தம்மை ஏற்று கொள்வார்கள் என கருத்தியது ,ஆனால் இம்முறை அவர்களது எண்ண கருவில் பலத்த அடி வீழ்ந்துள்ளது

                                    இதுவே கூட்டமைப்பு தோற்று போனதும் ,அதற்கு அதன் தலைவர் சம்பந்தர்

                                    மற்றும் சுமந்திரன் தேசிய இழிவு பேச்சுக்கள் முக்கிய காரணமாக அமைந்தன

                                    இதனாலேயே யாழில் ஐந்து ஆசனங்களை பறிகொடுக்கும் நிலைக்கு

                                    கூட்டமைப்பு சென்றது ,மேலும் புலிகளினால் உருவாக்க பட்ட கட்சியை இல்லாது அழிக்கும் நகர்வில் சுமந்திரன் ஈடுபட ,

                                    அதற்கு ஒப்புதல் வாக்கு மூலாம் அளிப்பது போன்று இம்முறை புதிதாக

                                    வென்ற அணிகளை பலம்பெற செய்து வெல்ல வைக்கும் அனைத்து நகர்வுகளில் ஆளும் கோட்டா ,மகிந்த அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது

                                    இவர்கள் மூலாம் அபிவிருத்தி பணிகளை அவர்கள் முன்னெடுத்து செல்ல

                                    தயராகி வருகின்றனர் ,இது ஒரு முறையில் சரியான நகர்வும் என கூறலாம் ,மக்கள் அதனை வரவேற்கின்றனர்

                                        Posted in இலங்கை செய்திகள்

                                        வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்த 494 பேரில் சிலருக்கு கொரனோ

                                        வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்த 494 பேரில் சிலருக்கு கொரனோ

                                        இலங்கையை விட்டு வெளிநாடுகளில் வேலை பார்த்த சுமார் 496 பேர் இலங்கை வந்தடைந்தனர்

                                        இலங்கை எயார்லைங்க நிறுவனத்தின் விமானம் ஊடாக ஓமான் ,கட்டர் ஐக்கிய அரபு ராச்சியத்தில் பணி புரிந்தவர்களே இவ்விதம் இலங்கை வந்தனர்

                                        இவ்வாறு வந்தவர்கள் 14 நாட்களுக்கு தனிமை படுத்த பட்டுள்ளனர்

                                        இதில் மூவர் கொரனோ நோயினால் பாதிக்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                                            Posted in இலங்கை செய்திகள்

                                            இலங்கையில் இரகசியாமாக கொலை செய்ய படும் முக்கிய புள்ளிகள்

                                            இலங்கையில் இரகசியாமாக கொலை செய்ய படும் முக்கிய புள்ளிகள்

                                            இலங்கையில் சகோதர்கள் ஆட்சியில் தமிழர்கள் சத்தமின்றி படுகொலை செய்ய படும் நிகழ்வுகள் அதிகரித்து செல்கின்றன

                                            ஆளும் அரச ஆட்சியை சேர்ந்த விசேட நிழல் டிவிஷன் ஒன்றினால் இவர்கள் அனைவரும் விபத்து மற்றும் ,தற்கொலை என்ற

                                            போர்வையில் மிக இரகசிமான முறையில் படுகொலை செய்ய பட்டு வருகின்றனர்

                                            தூக்கில் தொங்குதல் ,நீர் அருவிகளில் சடலங்கள் மிதத்தல் ,மற்றும் விபத்து என்பனவற்றின் ஊடாக இந்த படுகொலைகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                            கடந்த 12 வாரங்களில் மட்டும் சுமார் நாற்பதுக்கு மேற்பட்ட நபர்கள் படுகொலை செய்ய பட்டுள்ளனர்


                                            இவர்கள் அனைவரும் ஏதோ ஒருவித்தடத்தில் ஆளும் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவராக உள்ளதும் ,அவர்கள்

                                            முக்கிய நபர்களுக்கு எதிராக செயல் படுவதில் இருந்தவர்கள் என்பதாக உள்ளது

                                            அவ்வாறனவர்கள் இவ்விதம் ஓசை படாமல் படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,இந்த விடையத்தை மருத்துவ மனைக்குள் இருக்கும்

                                            முக்கிய பிரதே பரிசோதனை செய்யும் சிலர் ஊடாக தகவல் வெளியாகியுள்ளது

                                            எனினும் இதனைவழமை போன்று சிங்கள அரசு மறுத்தாலும் ஆச்சர்ய படுவதற்கு ஏதும் இல்லை

                                            Posted in இலங்கை செய்திகள்

                                            அரசியலமைப்பு சீர்த்திருத்தம் செப்டெம்பர் மாதத்தில்

                                            அரசியலமைப்பு சீர்த்திருத்தம் செப்டெம்பர் மாதத்தில்

                                            நாட்டிற்கு நேயமுள்ள அரசியலமைப்பு சீர்திருத்தம் எதிர்வரும் செப்டெம்பர்

                                            மாதம் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

                                            உத்தேச அரசியலமைப்பை செப்டெம்பர் மாதமளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக

                                            அவர் கூறினார். அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர்

                                            ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

                                            இதேவேளை அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்திலுள்ள பொருத்தமற்ற

                                            விடயங்களை திருத்தியமைத்து 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவருவது

                                            தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நீதியமைச்சர் ஜனாதிபதி

                                            சட்டத்தரணி அலி சப்ரி அண்மையில் தெரிவித்திருந்தார்.

                                                Posted in இலங்கை செய்திகள்

                                                ஆடை ஏற்றுமதியை மீண்டும் வழமைக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை.

                                                ஆடை ஏற்றுமதியை மீண்டும் வழமைக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை.

                                                கொரோனா வைரஸ் காரணமாக தடைப்பட்டிருந்த சுற்றுலா ஏற்றுமதி மற்றும் நிர்மாண நிலையங்களை முறையாக

                                                முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சுற்றுலா தொழிற்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

                                                இலங்கை முதலீட்டு சபையின் கட்டுநாயக்க வலய அலுவலகத்தை பார்வையிட்ட பொழுதே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

                                                தடைப்பட்டுள்ள ஆடை ஏற்றுமதியை முறையாக முன்னெடுப்பது தொடர்பில் வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.