Author: நலன் விரும்பி
கொரோனா வைரஸ் இதயத்தை தாக்கும் – அமெரிக்க நிபுணர் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் இதயத்தை தாக்கும் – அமெரிக்க நிபுணர் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் சுவாச வைரஸ் என்று அறியப்பட்டு வருகிறது. ஆனாலும் கூட இது இதய தசையை நேரடியாக தாக்கும் என தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் இதயத்தை தாக்கும் – அமெரிக்க நிபுணர் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் சுவாச வைரஸ் என்று அறியப்பட்டு வருகிறது. ஆனாலும் கூட இது இதய தசையை நேரடியாக தாக்கும் என தெரிய வந்துள்ளது.
இது குறித்து அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர் டாக்டர் சீன் பின்னி கூறும்போது, “இதய நோயால்
பாதிக்கப்பட்டவர் களின் இதயம், வைரசால் சேதம் அடையும் ஆபத்து உள்ளது. மேலும், முந்தைய நோய்கள் இல்லாத கொரோனா
நோயாளிகளுக்கும் இதய சிக்கல்கள் கண்டறியப்பட்டுள்ளன” என குறிப்பிட்டார்.
அமெரிக்க இதய மருத்துவ கல்லூரி பத்திரிகை நடத்திய ஆய்விலும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிற கொரோனா நோயாளிகளுக்கு 25-
30 சதவீதம் பேருக்கு இதயத்தில் பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லண்டனில் – பொலிஸாருக்கு தண்ணி காட்டி ஒன்று கூடிய 300 பேர்
லண்டனில் – பொலிஸாருக்கு தண்ணி காட்டி ஒன்று கூடிய 300 பேர்
பிரிட்டனில் கடந்த தினம் Halloween நிகழ்வு இடம் பெற்றது ,இதன் பொழுது
சுமார் முன்னூறு பேர் கலந்து கொண்டனர் ,மேற்படி நிகழ்வில் கலந்து
கொண்டவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது
மக்கள் ஒன்று கூடவா ,இரண்டு மீட்டர் அருகில் நின்று பேசவோ கூடாது
என புதிய சட்டம் அறிமுக படுத்த பட்டு நடை முறையில் உள்ள
பொழுது இவ்விதம் பெரும் நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது

பீதியில் பொருட்களை வாங்கி குவிக்கும் மக்கள் – காலியான கடைகள்
பீதியில் பொருட்களை வாங்கி குவிக்கும் மக்கள் – காலியான கடைகள்
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்
தாக்குதலில் சிக்கி
பலநூறு பேர் பலியாகி வருகின்றனர்
இதனால் எதிர் வரும் வியாக்கிழமை பிரிட்டனில் பல பாகங்கள்
முழு லொக்கடவுன் அடித்து பூட்டும்
நிலைக்கு செல்கிறது
இதன் காரணமாகி பீதியடைந்த மக்கள் பொருட்களை வாங்கி குவித்து
வருகின்றனர் ,இதனால் பிரபல அங்காடிகளில் பொருட்கள் இன்றி வெறிச்சு
போயுள்ள காட்சிகள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தாமதம் என அறிவிப்பு
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தாமதமடையலாமெனக் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தாமதமடையலாமெனக் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்துதெரிவிக்கையில் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறை முடிந்து மீண்டும் எதிர்வரும் 9ஆம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பிக்க
திட்டமிட்டிருப்பினும் தற்போது பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக உரிய திகதியில் பாடசாலைகளை மீள திறக்க முடியாது போகும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக சுகாதார அதிகாரிகளிடம் பரிந்துரைகளை கேட்டுள்ளதாகவும் சுகாதார
பரிந்துரைகளின் அடிப்படையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தாமதடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த பேரூந்தில் பயணித்தவர்களுக்கு கொரனோ
அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த பேரூந்தில் பயணித்தவர்களுக்கு கொரனோ
ஓக்டோபர் மாதம் 26ஆம் திகதியன்று, கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த WP NF 7666 என்ற இலக்கத்தையுடைய தனியார் பஸ்ஸில் பயணித்தவர்கள்
உடனடியாக தமக்கு அருகிலுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களைத் தொடர்புகொள்ளுமாறு, கல்முனை பிராந்திய
தொற்று நோய் தடுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் என்.ஆர்.ஆரிப் கேட்டுக்கொண்டுள்ளார்.
பயணித்த அனைவரும் தாங்களாகவே தங்கள் குடும்பத்துடன் இம்மாதம் 09ஆம் திகதி வரை சுய தனிமைப்படுத்தலுக்கு
உள்ளாகுமாறும் கேட்டுக்கொண்டுள்ள வைத்திய அதிகாரி, மேற்படி தனியார் பஸ்ஸில் பயணித்தோர் குறித்த விவரங்களைத் தத்தமது
பொதுச் சுகாதார பரிசோதகருக்குத் தெரியப்படுத்தத் தவறும் பட்சத்தில் 0777258376 என்ற அலைபேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறும் கேட்டுள்ளார்.
இதேவேளை, மேற்படி பஸ்ஸில் பயணித்த 35 பேரில் 16 பேரே, பொதுச் சுகாதார பரிசோதகர்களைத் தொடர்புகொண்டு
தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் ஏனையோரை, பொலிஸாரின் உதவியுடன் கைது செய்வதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ்
இலங்கையில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ்
இலங்கையில் தற்போது கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவும் வகையைச் சேர்ந்தது என
சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் டொக்டர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்தார்.
இந்த நுண்ணுயிர் முன்னர் பரவியதைவிட வித்தியாசமான வைரசாக உள்ளது. இது ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக செயலாளர் கூறினார்.
இந்த வைரஸ் கந்தக்காட்டில் பரவிய வைரஸ் வகை அல்ல என்பதை பல்கலைக்கழக ஆய்வு அறிக்கையின் மூலம் அறிந்துகொள்ள முடிந்ததாக செயலாளர் நேற்று தெரிவித்தார்.
இந்த வைரஸ் வீரியத்தைக் கொண்டது. இது தீவிரமாக மற்றவர்களுக்கு பரவக்கூடிய ஆற்றலைக் கொண்டது. இதனால்தான் குறுகிய கால்திற்குள் பெரும் எண்ணிக்கையிலானோர் வைரஸ் தொற்றுக்குள்ளாகினர் என்றும் அவர் தெரிவித்தார்.
நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவம் மற்றும் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் கல உயிரியல் (Department of Immunology and Molecular Medicine and Allergy> Immunology and Cell Biology Unit of
University) பிரிவைச் சேர்ந்த, பேராசிரியர் நீலிகா மலவிகே தலைமையில், வைத்தியர் சந்திம ஜீவந்தர, வைத்தியர் டெஸ்னி
ஜயதிலக, வைத்தியர் தினுக ஆரியரத்ன, லக்சிறி கோமஸ், தியனாத் ரணசிங்க ஆகியோரினால் இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஸ்ரீ ஜயவர்தனபுர பலலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மருத்துவம் தொடர்பான ஆய்வு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சந்தீம ஜிவன்தர இது தொடர்பாக தெரிவிக்கையில், மினுவங்கொடை
மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் பெறப்பட்ட 16 வைரசு மாதிரிகளில் 13 வைரஸ் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
அவை அனைத்தும் வெவ் வேறு இடங்களில் பெறப்பட்டாலும் இவை அனைத்தும் ஒரே மாதிரியானவை. B1 42 சார்ஸ் வகைக்கு உட்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவை. B 1, 6 1 4 G வைரஸ் இனத்தைச் சேர்ந்தவை என எண்ணுகின்றோம். இந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் என நம்புகின்றோம்.
B 1, B 2, B 4 ஆகியவற்றில் B 1 னே ( பீ ஒன்றே) ஆரம்பத்தில் ஜரோப்பிய நாடுகளில் அதிகாமாக பரவியுள்ளது. இந்த வைரஸ் தற்பொழுது டென்மார்க்கிலும் சுவிடனிலும் காணப்படுகின்றது. மற்றவர்களுக்கு தொற்றக்கூடிய வாயப்புகள் அதிகம். இது தொடர்பில் எமக்கு சரியான தெளிவு இன்னும் இல்லை.
பல்வேறு மட்டத்தில் இது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த தொற்று ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும் என்று கூறமுடியாது இருப்பினும் விசேடமாக வேறு நோய் உள்ளவர்களை இந்த வைரஸ் வெகுவாக பாதிக்கக்கூடியது என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் மார்ச் மாதம் தொடக்கம் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வைரஸ்கள் காணப்பட்டன. இவை அனைத்திலும் பார்க்க இது வேறுபட்டது. இதற்கு முன்னர் இலங்கையில் இந்த புதிய வைரஸ் காணப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பில் 1592 குடும்பங்களைச் சேர்ந்த 3,959 பேர் தனிமைப்படுத்தலில்
மட்டக்களப்பில் 1592 குடும்பங்களைச் சேர்ந்த 3,959 பேர் தனிமைப்படுத்தலில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1592 குடும்பங்களைச் சேர்ந்த 3,959 பேரிற்கு விடுகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.
அதற்கு மேலதிகமாக கொரோனா தொற்று என மருத்துவ பரிசோதனைகள் மூலம் உறுதியானவர்கள் மாவட்டத்தில் 35 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதில் கொறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் மாத்திரம் 31பேரும் வெல்லாவெளி பட்டிப்பளை களுவாஞ்சிக்குடி ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலக பிரிவில் தலா ஒருவர் என அடையாளம் கானப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
கொரோனா நோய் தொற்றுகாரனமாக தொழில் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு தேவையான 5000.00 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொருட்களை
வழங்குவதற்கான நிதியினை அரசாங்க அதிபரின் துரித நடவடிக்கையினால் திறைசேரியின் செயலாளர்
எஸ்.ஆர்.ஆட்டிக்கலவினால் உடனடியாக நிதி விடுவிக்கப்பட்டு பிரதேச செயலாளர்களுக்கு நேற்று முதல் உலர் உணவுப்பொதிகளை வழங்குவதற்கு அரசாங்க அதிபர் உத்தரவிட்டார்.
உலர் உணவு பொருட்களை வழங்கும் நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது எதிர்காலத்தில் தொழில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் அனைவரும் வெளிமாவட்டங்களில் தொழில் நிமிர்த்தம் சென்று வந்தவர்களாகவே உள்ளனர்.
இவர்களுக்கான மருத்துவ உதவிகளை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளின் கண்காணிப்பில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து செயற்படுத்தி வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
நோய் அறிகுறிகள் காணப்படும் கர்ப்பிணி தாய்மார்கள் தாமதமின்றி சிகிச்சைக்காக வைத்தியசாலையை நாடுமாறு ஆலோசனை
நோய் அறிகுறிகள் காணப்படும் கர்ப்பிணி தாய்மார்கள் தாமதமின்றி சிகிச்சைக்காக வைத்தியசாலையை நாடுமாறு ஆலோசனை
கர்ப்பிணி மற்றும் பிரசவத்திற்குப் பின்னரான தாய்மார்கள் நோய் நிலைமையின் போது சிகிச்சைக்காக சமூகமளிக்காமையினால் துர்பாக்கிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவலகள்; வெளியாகியுள்ளன.
இந்த தாய்மார்களுக்கு காச்சல், இருமல், மூச்சு எடுப்பதில் சிரமம், கர்ப்ப பை வாய் குழாய் ஊடான இரத்தபோக்கு, திரவ போக்கு, குழந்தை துள்ளுதல் தொடர்பான உணரும் ஆற்றல் குறைவு,
மயக்கம், உணர்விழந்த தன்மை, தலைச்சுற்றுதல், உடல் குலுக்கம், உடம்பு வீக்கமடைதல், அதிக இரத்த அழுத்தம் போன்ற நோய்
அறிகுறிகள் காணப்படுமாயின், உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு செல்லுமாறு குடும்ப சுகாதார பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான அறிகுறிகள் காணப்படும் சந்தர்ப்பத்தில் அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்படுவதுடன் எந்த காரணத்தை கொண்டும்
இதில் தாமதம் ஏற்படகூடாது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நோய்வாய்க்கு உட்படும் தாய்மார்களுக்கு தேவையான சிகிச்சையை 24 மணித்தியாலயமும் வழங்குவதற்கு அனைத்து அரச வைத்தியசாலைகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்டுள்ள குறிப்பு புத்தகம் அவசரகால அனுமதி பத்திரமாக கருதப்படும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எத்தகைய சந்தர்ப்பத்திலும் அல்லது பிரச்சினையை எதிர்நோக்கப்படும்; பொழுதும் பிரதேச குடும்ப சுகாதார சேவை
அதிகாரி, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அல்லது சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தின் 1999 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ள முடியும்.
எத்தகைய நோய் சந்தர்ப்பதிலும் 1990 என்ற தொலைபேசி இலக்க சுவசெரிய அம்புலன்ஸ் சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என்று
இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார அலுவலகத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தபாற் கந்தோரில் சிக்கிய 46 வாக்கு பெட்டிகள்
அமெரிக்காவில் தபாற் கந்தோரில் சிக்கிய 46 வாக்கு பெட்டிகள் –
அமெரிக்காவில் இடம் பெற்று வரும் தேர்தல் போட்டியில் ஆளும் ஜனாதிபதி
டிரம்ப் பலத்த தோல்வியை தழுவி பைடன் வெல்வார் என எதிர்பார்க்க படுகிறது
இதில் தமது வெற்றிகளை உறுதி செய்து கொள்ள கள்ள வாக்கு
அளிக்கும் நகர்வுகளில் இரு தரப்பும் தீவிரம் காட்டி வருவதான குற்ற சட்டு முன் வைக்க படுகிறது
புளோரிடா தபால் அலுவலகம் ஒன்றில் 46 வாக்கு பெட்டிகள் விநியோகிக்காத நிலையில்
இருந்தமை கண்டு பிடிக்க பட்டுள்ளது,இதுவே தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது
பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 21,915 பேர் பாதிப்பு -326 பேர் பலி
பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 21,915 பேர் பாதிப்பு -326 பேர் பலி
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த
இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 326 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 21,915 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இதுவே வரும் வாரம் முதல் நாள் ஒன்றுக்கு நாற்பது ஆயிரம் முதல் என்பது
ஆயிரம் பேர் வரை பாதிக்க படுவார்கள் எனவும் நாள் ஒன்றுக்கு
மூவாயிரத்துக்கு மேற்பட்ட மரணங்கள் நிகழ கூடும் என தெரிவிக்க படுகிறது
துருக்கி நில நடுக்கத்தில் சிக்கி 80 பேர் பலி -800 பேர் காயம்
துருக்கி நில நடுக்கத்தில் சிக்கி 80 பேர் பலி -800 பேர் காயம்
கடந்த தினம் துருக்கி மற்றும் கிரேக்க நாடுகளை தாக்கிய பெரும் நில
நடுக்கத்தில் சிக்கி இதுவரை 80 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் எண்ணூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் அனைவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று
வருகின்றனர் ,வரும் மணித்தியாலங்களில் உயிர்பலிகள் அதிகரிக்கும் என தெரிவிக்க படுகிறது

துருக்கிய அதிபராது முக்கிய அமைச்சர்களுக்கு கொரனோ
துருக்கிய அதிபராது முக்கிய அமைச்சர்களுக்கு கொரனோ
துருக்கியின் ஆளும் அதிபர் எடகோனின் முக்கிய நெருங்கிய இரு
சாகாக்களுக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இதில் அவரது பேச்சாளருக்கு இந்த நோயானது உள்ளதால்
,துருக்கிய அதிபருக்கும் நோயானது தொற்றி இருக்கும் என நம்ப படுகிறது
மக்காவில் உள்ள மாசூதிக்குள் உடைத்து புகுந்த கார்
மக்காவில் உள்ள மாசூதிக்குள் உடைத்து புகுந்த கார்
உலக முஸ்லீம்களின் புனித தளமாக பார்க்க படுவது ,சவுதியில் உள்ள
மக்காவாகும் ,இங்கு அதன் புனித தளத்தின் நுழைவாயிலை உடைத்
தெறிந்து கார் ஒன்று புகுந்துள்ளது
சாரதி
ஒருவர் மிகவேகமாக காரை செலுத்தி வந்து குறித்த நுழைவாயிலுடன் மோதியது தெரிய வந்துள்ளது
இது விபத்தா அல்லது சதியா என்பதும் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன

பிரான்சில் தேவலாய பாதர் மீது துப்பாக்கி சூடு – பொலிசார் குவிப்பு
பிரான்சில் தேவலாய பாதர் மீது துப்பாக்கி சூடு – பொலிசார் குவிப்பு
பிரான்ஸ் நாட்டின் French city of Lyon பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குள்
நுழைந்த ஆயுத தாரி அங்கு ஆராதனையை நடத்தி விட்டு தேவலாயத்தை
மூடும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பாதிரியார் மீது திடீரென துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினார் .
இதில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்
இரண்டு நாள் இடை வெளியில் நடந்த இரண்டாவது தீவிரவாத
தாக்குதல் இதுவென்பதும் குறிப்பிட தக்கது
ஏழாயிரத்திற்கு மேற்பட்ட இராணுவம் வீதிகளில் குவிக்க பட்டுள்ள பொழுதும்
அவர்களுக்கு தண்ணி காட்டி விட்டு இந்த கொலை வெறி தாக்குதல் நடத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது

கொரனோவால் முடங்கிய பிரிட்டன் – குழப்பான அறிவிப்பை வெளியிட்ட பிரதமர்
கொரனோவால் முடங்கிய பிரிட்டன் – குழப்பான அறிவிப்பை வெளியிட்ட பிரதமர்
பிரிட்டன் நாடளாவிய ரீதியில் பரவி வரும் கொரனோ நோயின் பரவலை
அடுத்து
தற்போது புதிய லொக்கடவுன் அறிவிப்பு வெளியாகியுள்ளது
அதில் கீழ் வரும்மாறு தெரிவிக்க பட்டுள்ளது ,எதிர்வரும் வியாழன் முதல்
டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி வரை ,அதாவது ஒருமாத காலம் நீடிப்பு ,இந்த கால எல்லை மீள சூழ்நிலைகளுக்கு ஏற்ப அறிவிக்க படும் என்பதாகும்
England’s latest lockdown
Comes into effect on November 5, with plans to ease on December 2
The lockdown is for England, not all of Great Britain
English people are to stay home except for education, work, exercise, medical reasons, essential shopping or to provide care
Pubs, clubs, cafes and restaurants closed, but takeaway available
Essential shops, like grocery stores, remain open
Schools and universities remain open, with parents urged to send their kids
Gyms will close, but outdoor exercise is allowed
ஐரோப்ப்பா முடக்க பட்ட நிலையில் இந்த முடக்கம் அறிவிக்க பட்டுள்ள பொழுதும் ,இது வெறும் வார்த்தையில் ஒன்றாக பார்க்க படுகிறது
பாடசாலைகள் நடத்த படும் எனவும் பிள்ளைகளை அனுப்ப வேண்டும்
என அறிவிக்க பட்டுள்ளது ,நோயானது பரவுகிறது மக்கள் வீட்டுக்குள்
இருங்கள் என கூறிய இதே ஜோன்சன் மறுபு றத்தே பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புங்கள் என்கிறார்
உணவகங்கள் டேக்கவே மட்டும் என்கிறார் ,பலசரக்கு கடைகள் ,மருந்தகங்கள்
திறக்க படும் என்கிறார் ,அப்படி என்றால் பிரிட்டன் முழு லொக்கடவுன் என எவ்விதம் சொல்வது
மக்கள் அதிக நட மாட்டங்கள் கட்டு படுத்த படுகின்றன என்பதே சிறந்த
ஒன்றாகும் ,இம்முறையும் பிரிட்டனில் ஆசியா நாட்டவர்கள் ,கறுப்பினத்தவர்களே
அதிகம் கொரனோ என்ற போர்வையில் கொலை செய்ய பட போகின்றனர் என்பதே நடப்பாகும்
கம்பஹா தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் – 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதி
கம்பஹா தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் – 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதி
கொவிட்-19 தொற்று பரம்பலை அடுத்து கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்காக உலர் உணவு
நிவாணரப் பொதிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாகிறது.
ஒவ்வொரு பொதியும் பத்தாயிரம் ரூபா பெறுமதியானவை. இவற்றில் 14 நாட்களுக்கு தேவையான உலர் உணவும், பழ
வகைகளும் உள்ளடங்கி இருக்கின்றன. இதற்காக 68 இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது.
நிவாரண பொதிகளை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம் பிரதேச செயலாளர் பிரிவுகள் மட்டத்தில் முன்னெடுக்கப்படும். இங்கு 13
பிரதேச செயலாளர் பிரிவுகளில் 6,800 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, முடக்க நிலை காரணமாக ஒரு மாத காலத்திற்கு மேலாக வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களுக்கு 5,000 ரூபா
கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டம் திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.
இலங்கையில் மேலும் ஒரு கொரோனா தொற்று நோயாளி மரணம்
இலங்கையில் மேலும் ஒரு கொரோனா தொற்று நோயாளி மரணம்
இலங்கையில் நேற்று மேலும் ஒரு கொரோனா தொற்று நோயாளி மரணமாகியுள்ளார்.
இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்றைய தினம் (30) உயிரிழந்த நோயாளியின் PCR பரிசோதனை அறிக்கைக்கு
அமைவாக கொவிட் 19 தொற்று நோயாளி என்பது சற்று முன்னர் தொற்று நோயியல் பிரிவினால் உறுதி செய்யப்பட்டுள்ளது..
உயிரிழந்த இவர் 54 வயது பெண் ஆவார்.
கடந்த 29 ஆம் திகதி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் நாட்பட்ட நோய்களினால் அவதிப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
இது இலங்கையில் பதிவான 20ஆவது கொவிட் 19 தொற்று நோயாளியின் மரணமாக தொற்று நோயியல் பிரிவு உறுதி செய்துள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வலி.கிழக்கு விவசாயிகள் கோரிக்கை!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வலி.கிழக்கு விவசாயிகள் கோரிக்கை!
வலிகாமம் கிழக்கு பிரதேசத்தின் விவசாயிகள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள்
தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் தெரியப்படுத்தியதுடன் அதற்கான தீர்வுகளை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு இன்றையதினம் வலிகாமம் கிழக்கு விவசாயிகள்
கலந்துரையாடியிருந்தனர். இதன்போதே இவ்வாறு கோரிக்கைவிடுத்துள்ளனர்.
குறித்த சந்திப்பின்போது உருளைக்கிழங்கு விதைகளை மானிய அடிப்படையில் பெற்றுத் தருமாறும் கோரியதுடன் நீர் இறைக்கும்
இயந்திரங்களையும் மானிய அடிப்படையில் பெற்றுத்தருமாறு கேட்டிருந்தனர்.
அத்துடன் யூரியா மற்றும் அமோனிய உள்ளிட் உரங்களை விவசாயிகளுக்கு தேவையான அளவு பெற்றுத் தருமாறும் கோரியதுடன் அம்பன் புயலினால் சேதமடைந்த வாழைப் பயிற்
செய்கைக்கான இழப்பிடுகளை வழங்குவதற்கு விரைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்திருந்தனர்.
மேலும் யாழ்மாவட்ட சந்தைகளில் விவசாய உற்பத்திகளுக்கு 10Kg இற்கு 1Kg என்ற கழிவு என்ற நடைமுறை காணப்படுவதனால்
விவசாயிகளிடையே பெரும் இடர்பாடுகள் ஏற்படுகின்றது. எனவே அது தொடர்பிலும் அவதானம் செலுத்துமாறு கோரிக்கைவிடுத்திருந்தனர்.
குறித்த விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கெட்டறிந்துகொண்ட அமைச்சர் அவை தொடர்பில் உரிய தரப்பினருடன் கதைத்து விரைவில் தீர்வகளை பெற்றுத்தர
நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்திருந்ததுடன் அம்பான் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடுகளை வழங்கவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில்
அது தொடர்பில் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சந்திப்பின்போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் வடமாகாண விவசாய பணிப்பாளர்
சிவகுமார் மற்றும் கட்சியின் வலி கிழக்கு நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன் அகியோர் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வரும் சட்ட நடவடிக்கை
புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வரும் சட்ட நடவடிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வரும் சட்ட
நடவடிக்கையினை மையப்படுத்தி, சமகாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இணையவழி கையெழுத்து
போராட்டத்துக்குமம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதோடு, இதனோடு
தொடர்புடையதாக காணப்படுகின்ற நிதிசேகரிப்பு தொடர்பிலும் விழிப்பாக இருக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக்கொள்கின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேல்முறையீட்டின் முதல்களம் வெற்றியினைக் கண்டுள்ளது. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இரு தரப்பு கருத்துகளை இரண்டு வாரங்களில்
சமர்பிக்கும்படி மேன்முறையீட்டு ஆணையம் கூறியுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் பிரித்தானிய உள்துறைச் செயலர் தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட அமைப்புகளின்
பட்டியலிலிருந்து அகற்ற வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாதிடவுள்ளதோடு, அடுத்த களம் நோக்கிய சட்ட
முன்னெடுப்புக்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளது.
இச்சட்டப்போராட்டத்தினை அரசியல் தளத்தில் கூர்மைப்படுத்தும் செயல்முனைப்பு தொடர்பிலான அறிவித்தலை நாடுகடந்த தமிழீழ
அரசாங்கம் அடுத்த வாரம் வெளியிடவுள்ளது. இந்த சட்டப்போராட்டத்துக்கு பங்களிப்பு செய்ய விரும்பும் உறவுகள்,
பிரித்தானிய நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்களையோ அல்லது UK அலுவலக தொடர்பிலக்கம் : 02071936655 மின்னஞ்சல் adminuk@tgte. org வழி தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து வைத்துக் கொள்வது என்று பிரித்தானியாவின் உள்துறைச் செயலர் முடிவெடுத்த போது, தடை
மீளாய்வுக் குழு தன்னுடைய முடிவுகளை உள்துறை செயலருக்கு வழங்கிய போது, அந்த முடிவுகளை தவறாக கூறியிருப்பதாக
மேன்முறையீட்டு ஆணையம் தன்னுடைய வெளிப்படையான தீர்ப்பில் கூறியுள்ளது.
கூட்டுப் பயங்கரவாதப் பகுப்பாய்வு மையம் தெரிவித்த கருத்துகளைத் இந்தக்குழு துல்லியமாக தொகுத்துச் கூறவில்லை என தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு
ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகவே அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்ந்து பட்டியலில் வைத்திருக்க
எடுக்கப்பட்ட முடிவும் சட்டத்துக்கு முரணானது என ஆணையம் தீர்ப்பளித்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.
விகாரைக்குள் புகுந்து ஆளை அடித்து கொன்ற யானை
விகாரைக்குள் புகுந்து ஆளை அடித்து கொன்ற யானை
கருவலகஸ்வெவ, ரஜவிகம விகாரையில், இன்று (30) மாலை இடம்பெற்ற விசேட பூசை வழிபாடொன்றின் போது காட்டு
யானையொன்று புகுந்து அட்டகாசம் புரிந்ததால், குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
சம்பவத்தில், நான்கு வயதான ஆண் குழந்தையொன்றே உயிரிழந்துள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர்.
பௌர்ணமி தினமான இன்றைய தினம், குறித்த விகாரையில் இடம்பெற்ற விசேட வழிபாட்டில், குறித்த குழந்தை, தனது தாயுடன்
அதில் கலந்துகொண்டுள்ளது. இதன்போது, காட்டு யானையொன்று விகாரைக்குள் புகுந்து அட்டகாசம் புரியத் தொடங்கியுள்ளது.
இதன்போது, குறித்த குழந்தை, அதனது தாயால் கைவிடப்பட்டிருந்த நிலையில், யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்துள்ள குழந்தை, ஆனமடுவ வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட போதிலும், அதற்கு முன்னரே குழந்தை உயிரிழந்துள்ளது.







