Posted in இலங்கை செய்திகள்

மனைவி தாலிக்கொடியை அறுத்தா திருடனை துரத்தி பிடித்த கணவன்

தாலிக்கொடியை அறுத்தெடுத்து தப்பிக்க முயற்சித்த நபரைப் பிடிப்பதற்கான முயற்சியில் இறங்கிய கணவன், மனைவி, பிள்ளை, தாலியை அபகரித்த நபர் மற்றும் வீதியில் பயணித்த ஆசிரியர் #

ஒருவர் உட்பட ஐவர் விபத்துக்குள்ளாகி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இவர்களில் இருவர், மேலதிக சிகிச்சைக்காக கல்முனை மற்றும் அம்பாறை வைத்தியசாலைகளுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் பிரதான வீதியில், நேற்றிரவு (02) இடம்பெற்றுள்ளதுடன்,

சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் மூன்றும் காரொன்றும் சேதமடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பனங்காடு பிரதேசத்தில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கி, மோட்டார் சைக்கிளில் மேற்படி குடும்பம் சென்று கொண்டிருக்கையில், மனைவியின் தாலியை, பிறிதொரு மோட்டார்

சைக்கிளில் வந்த நபரொருவர் அறுத்தெடுத்து தப்பித்துச் செல்கையில், அந்நபரைக் கணவன் பின்தொடர்ந்துள்ளார்.

இதனையடுத்து, சாகாமம் பிரதான வீதி, பல்நோக்குக் கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக அந்நபரை இடைமறிக்க கணவன் முற்பட்ட வேளை, அங்கு நிறுத்தி

வைக்கப்பட்டிருந்த காரொன்றில் மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதாக, விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு, வீதியில் பயணித்துக்கொண்டிருந்த ஆசிரியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளும் இவ்விபத்தில் சிக்கியுள்ளது.

இதனால் ஐவரும் காயமடைந்து, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மயக்க

நிலையடைந்த கணவன், சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தாலியை அபகரித்த நபர், அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்தில் பெண்ணின் வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கான சிகிச்சையும் பிள்ளை மற்றும்

ஆசிரியருக்கான சிகிச்சையும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் விபத்து இடம்பெற்ற இடத்துக்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிஸார், பறிக்கப்பட்ட தாலியை மீட்டு, விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் கருவாட்டு தொழிற்சாலையை இயக்குவதற்கு கடற்றொழில் அமைச்சர் நடவடிக்கை

முல்லைத்தீவில் கருவாட்டு தொழிற்சாலையை இயக்குவதற்கு கடற்றொழில் அமைச்சர் நடவடிக்கை

முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சமாசத்தின் கருவாட்டு தொழிற்சாலையின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

கொவிட் – 19 காரணமாக கருவாடு உற்பத்தி செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்று (02.11.2020) சம்பந்தப்பட்ட

அதிகாரிகளுடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, தொழிற்சாலை கொறோனா தொற்று நீக்கப்பட்டு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. குறித்த

தொழிற்சாலையில் பயன்படுத்தப்படுகின்ற இயந்திரத்தின் ஊடாக ஐந்து மணித்தியாலங்களில் சுமார் 400 கிலோ கிராம் கருவாடு உற்பத்தி செய்ய முடியும்.

இந்நிலையில் உற்பத்தி செய்யப்படுகின்ற கருவாடுகளை இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் ஊடாக கொள்வனவு செய்து

சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக சந்தைப்படுத்துவதற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

10 பெட்டி டிஜிட்டல் வெப்பமானிகள் வன்னி பாதுகாப்பு படையினருக்கு அன்பளிப்பு

10 பெட்டி டிஜிட்டல் வெப்பமானிகள் வன்னி பாதுகாப்பு படையினருக்கு அன்பளிப்பு

வன்னியில் உள்ள படையினரால் வைரசுக்கு எதிராக ஆற்றிய பங்கை பாராட்டிய ஒரு பிரபலமான நன்கொடையாளர் திரு சரத் களுஆராச்சி வன்னி பாதுகாப்பு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல்

பிரியந்த பெரேராவிடம் வியாழக்கிழமை (29) மிரிசவெத்திய ரஜமகா விகாரையில்வைத்து பத்து பெட்டி டிஜிட்டல் வெப்பமானிகளை நன்கொடையாக வழங்கினார்.

குறித்த நன்கொடையானது மிரிசவெத்திய ரஜமகா விகாரையின் தலைமை தேரர் வென் ஈதல்வெட்டுநுவெவ ஞானதிலக தேரர் மூலம் வன்னி பாதுகாப்பு கட்டளைத் தளபதியிடம் வழங்கப்பட்டது.

அந்த டிஜிட்டல் வெப்பமானிகள் கொவிட்-19 வைரஸ் பரவுவதற்கு எதிராகப் பயன்படுத்தப்படுத்துவதற்காக வன்னி பாதுகாப்புப்

படைத் தலைமையக கட்டளையின் கீழ் உள்ள அனைத்து பிரிவுகளிலும் விநியோகிக்கப்பட உள்ளன.

இந்த நிகழ்வின் போது (வட மத்திய), முன்னரங்கு பாதுகாப்பு பகுதி படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் பிரேமலால், 21 வது படைப்

பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Posted in இலங்கை செய்திகள்

சுற்றுலா விடுதிகள், சுற்றுலா முகாம்களை தற்காலிகமாக மூட உத்தரவு

சுற்றுலா விடுதிகள், சுற்றுலா முகாம்களை தற்காலிகமாக மூட உத்தரவு

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் மூலம் நிர்வகிக்கப்படும்

சுற்றுலா விடுதி முகாம் பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுதப்பட்டுள்ளது.

கொவிட் – 19 தொற்று நிலைமை மீண்டும் நாட்டில் பரவியதன் காரணமாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் அனைத்து சுற்றுலா விடுதிகள் மற்றும் முகாம்

நிலப்பரப்புக்களில் அருகில் உள்ள பகுதிகளை 2020.11.02 ஆம் திகதி தொடக்கம் தற்காலிகமாக மூடிவிடுவதற்கு தீர்மானித்துள்ளது.

இதன் காரணமாக இங்கு வசதிகளை ஒதுக்கீடு செய்துக்கொண்ட சுற்றுலா

பயணிகளுக்காக வேறு தினமொன்றை ஒதுக்கீடு செய்வது தொடர்பில் அறிவிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த அறிவிப்பை சம்பந்தப்பட்ட சுற்றுலா வசதிகளை ஒதுக்கி கொண்டுள்ள சுற்றுலா குழுவினருக்கு தனித்தனியாக

அறிவிப்பதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று வனஜீவராசிகள் பாதுகாப்பு

திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in உலக செய்திகள்

புரட்டி போட்ட புயல் 20 பேர் பலி – 13.000 வீடுகள் சேதம்

புரட்டி போட்ட புயல் 20 பேர் பலி – 13.000 வீடுகள் சேதம்

பிலிப்பைனில் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலின் கோர

தாண்டவத்தில் சிக்கி இதுவரை இருபது பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பதின் மூன்றாயிரம் வீடுகள் சேதமாகியுள்ளன

பயன் தரும் மரங்கள் மற்றும் விவசாய நிலங்கள் என்பன

அழிந்துள்ளன ,இதன் இழப்பு பல கோடி வரும் என மதிப்பிட பட்டுள்ளது

பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன

புரட்டி போட்ட புயல் 20
புரட்டி போட்ட புயல் 20
Posted in உலக செய்திகள்

பல் கலைக் கழகம் மீது ஐஸ் தாக்குதல் 22 மாணவர்கள் பலி – 24 பேர் காயம்

பல் கலைக் கழகம் மீது ஐஸ் தாக்குதல் 22 மாணவர்கள் பலி – 24 பேர் காயம்

ஆப்கான் தலைநகர் உள்ள பல் கலைக் கழகம் ஒன்றை இலக்கு வைத்து

உலக மகா கொடிய பயங்கரவாத அமைப்பான ஐ எஸ் அமைப்பு நடத்திய

தாக்குதலில் இருபத்தி இரண்டு மாணவர்கள் பலியாகினர் ,மேலும்

இருபத்தி நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்

இறந்தவர்களில் வெளிநாட்டு மாணவர்களும் உள்ளடங்கும் என தெரிவிக்க

பட்டுள்ளது ,மேற்படி தாக்குதலை தாம் நடத்தியதாக ஐ எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரனோ எதிரொலி -லண்டனில் பாடசாலைகளை மூடும் படி அபாய எச்சரிக்கை

கொரனோ எதிரொலி -லண்டனில் பாடசாலைகளை மூடும் படி அபாய எச்சரிக்கை

பிரிட்டனில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் இரண்டாவது

பரவலை அடுத்து லண்டனில் பாடசலைகளை அடித்து பூட்டும் படி முக்கிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

அதனை செய்திட அரசு மறுத்தால் கடுமையாக மக்கள் பாதிப்பை சந்திக்க நேரும் என கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

மக்களை வெளியில் நடமாட வேண்டாம் என கூறிய அரசு பாடசாலைகளை

நடத்துகிறது ,அவர் தம் பிள்ளைகள் இருவேளை பாடசாலைக்கு பெற்றவர்களே அழைத்து செல்ல வேண்டும்

இவ்வாறான நெருக்கடி நிறைந்த ,கண்துடைப்பு அடித்து பூட்டும் நிகழ்வு

நாடகத்தை ஆளும் அரசு நடத்தி வருகிறது என மக்கள் மன்றம் கருத்துரைத்து

வரும் வேளையில் இந்த எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் பாட்டி வைத்த 9 பேருக்கு 10.000 மற்றும் 20 பேருக்கு தலா 200 தண்டம்

பிரிட்டனில் பாட்டி வைத்த 9 பேருக்கு 10.000 மற்றும் 20 பேருக்கு தலா 200 தண்டம்

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ பரவலை கட்டு படுத்த

அரசு புதிய சட்ட விதிகளை அறிவித்துக்ள்ளது ,அதன் படி மக்கள் ஒன்று கூட நிகழ்வுகள் நடத்த தடை விதிக்க பட்டுள்ளது

அரசின் இந்த தடைகளை மீறி ஒன்றுகூடிய முன்னூறு பேர் Halloween நிகழ்வை

நடத்தினர் ,அதனை முன்னின்று நடத்தியவர்களுக்கும் ,அந்த கட்டடத்தை

வழங்கிய நபர்கள் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு தலா பத்து ஆயிரம் விகிதம் தண்டம் அறிவிட பட்டுள்ளது

மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இதனை பரப்பிய இருபது பேருக்கு

200 பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது ,இந்த செயல் கிரிமினல் குற்றமாக பதிவு செய்ய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிப்பு

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிப்பு

கேகாலை மாவட்டத்தில் ஹெம்மாதகம, மாவனெல்லை, புளத்கொஹூபிடிய ஆகிய பொலிஸ் வலயங்கள் மற்றும் கலிகமுவ

பிரதேச சபை எல்லைப்பகுதிக்கு உட்பட்ட பகுதியும் குருணாகல் மாவட்டத்தில் கிரிஉல்ல பொலிஸ் வலயமும் தற்போதிருந்து

தனிமைப்படுத்தல் பிரதேசங்கள் என்ற ரீதியில் பெயரிடப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரையின்

அடிப்படையில் ஊழுஏஐனு 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

சுட்டியலினால் வாலிபனின் மண்டை உடைப்பு – லண்டனில் நடந்த பயங்கரம்

சுட்டியலினால் வாலிபனின் மண்டை உடைப்பு – லண்டனில் நடந்த பயங்கரம்

கடந்த இருபத்தி ஒன்பதாம் திகதி பிரிட்டன் West Bromwich பகுதியில்

முப்பது வயதுடைய வாலிபர் ஒருவர் மீது மர்ம நபர்கள் திடீர் சுட்டியல் தாக்குதலை நடத்தினர்

இதில் குறித்த வாலிபனின் தலைக்குள் சுத்தியல் புகுந்த நிலையில்

மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு தற்போது காப்பற்ற பட்டுளளார்

எனினும் தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளார்

இந்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார் குறித்த பகுதியில் நீல பட்டியல் கொண்டு அடைத்து

முற்றாக மக்கள் பாவனைக்கு தடை செய்தனர்
இதனால் பல மணிநேரம் அங்கு பதட்டம் ஏற்பட்டது பின்னர் அவை நீக்க பட்டது

தொடர்ந்து மேற்படி அகோர தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in உலக செய்திகள்

தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்த இளம்பெண்

தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்த இளம்பெண்

மஞ்சூர் அருகே நடந்த திருமண விழாவில் எனது காதலரை தான் கரம் பிடிப்பேன் என்று கூறி தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்த இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மட்டக்கண்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், கோத்தகிரி அருகே உள்ள தூனேரி

கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு மிகவும் எளிமையாக திருமணம் நடத்த பெற்றோர் முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த 29-ந் தேதி மட்டக்கண்டி கிராமத்தில் திருமண விழா நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட மண மேடையில் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்ததுடன் கழுத்தில்

மாலையுடனும், மணமகள் பட்டுச்சேலை அணிந்து கொண்டு மாலையுடன் மணமேடையில் அமர்ந்து இருந்தனர். திருமண

விழாவில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

மணமக்களின் குல வழக்கப்படி மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவதற்கு முன்பு, என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா?

என்று மணமகன் மணப்பெண்ணிடம் 3 முறை கேட்க வேண்டும். 3 முறையும் சம்மதம் என்று சொன்ன பிறகே மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்ட வேண்டும்.

அதன்படி மணமகளிடம் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று மணமகன் கேட்டார். அவர் 2 முறை கேட்டபோதும் மணமகளிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. அப்போது

சரியாக கேட்கவில்லை என்று நினைத்த மணமகன், 3-வது முறையாக கொஞ்சம் சத்தமாக என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று கேட்டபடி மணமகளின் கழுத்தில் தாலி கட்ட முயன்றார்.

உடனே மணமகள் உங்களை திருமணம் செய்து கொள்ள எனக்கு சம்மதம் இல்லை என்று கூறினார். அத்துடன் தாலி கட்ட விடாமல்

மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் ஏன் திருமணம் வேண்டாம் என்று கேட்டனர்.

அப்போது பேசிய மணமகள், நான் சென்னையை சேர்ந்த ஒருவரை காதலித்து வருகிறேன். ஏற்கனவே அவர் திருமணமானவர். அவருக்கு குழந்தை உள்ளது. எனக்காக அவர் திருமண பந்தத்தை

முறித்துக்கொண்டார். அவருடைய குழந்தைக்கு நான்தான் தாயாக இருந்து பராமரிப்பேன் என்று வாக்கு கொடுத்துவிட்டேன். அவர் எனக்காக காத்து இருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் இங்கே வந்துவிடுவார் என்று கூறி மணமேடையை விட்டு இறங்கினார்.

உடனே அந்த மணப்பெண்ணின் உறவினர்கள் அவரை தாக்க முயன்றனர். அத்துடன் அந்த பெண்ணின் பெற்றோர், மணமேடையில் அமர்ந்து மணமகனை திருமணம் செய்து

கொள்ளும்படி கூறினார். அதற்கு அவர், எனது காதலரை தான் நான் கரம் பிடிப்பேன் என்று கூறினார். அதற்கு அங்கிருந்த உறவினர்கள் மணமகனை பிடிக்கவில்லை என்றால் ஆரம்பத்திலேயே கூறி இருக்கலாமே என்று கேட்டனர்.

அதற்கு அந்த பெண், எனக்கு பேசுவதற்கு யாரும் அனுமதி கொடுக்கவில்லை. ஒருவரை மனதில் வைத்துக்கொண்டு, பிடிக்காத ஒருவரை திருமணம் செய்து கொண்டு, அவருக்கு துரோகம் செய்ய

எனக்கு மனமில்லை. எனவே நான் சென்னையை சேர்ந்த எனது காதலரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

இந்த காட்சியை திருமண விழாவுக்கு வந்திருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பரவ விட்டார்.

தற்போது அந்த காட்சி வைரலாக பரவி வருகிறது. மஞ்சூர் அருகே தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றுக்கூறி

மணமகள் மணமேடையில் இருந்து எழும்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாலி கட்டும் நேரத்தில் மணமகனின்
தாலி கட்டும் நேரத்தில் மணமகனின்
Posted in இலங்கை செய்திகள்

பாலத்தில் வெள்ளம் – பயணிகள் அவதி – படம் உள்ளே

பாலத்தில் வெள்ளம் – பயணிகள் அவதி – படம் உள்ளே

பொதுவாக பாலங்கள் அமைப்பது நீர் உள்ள இடங்களில்; நீர் ஆற்றின்

கீழே செல்ல  வாகனங்கள் மேலே செல்வதற்கே. இதற்கு மாறாக நீர் பாலத்தின் மேலே செல்வதற்கு பாலம் ஒன்று கண்டி

மாவட்டம் உடபளாத்த பிரதேசத்திற்கு உட்பட்ட இரட்டைப்பாதை தொரகல நீவ்பீககொக் பிரதான பாதையில் அமைக்கப்பட்டுள்ளது.


“சங்கிலி” பாலம் என அழைக்கப்படும் இப்பாலத்தின் ஊடாக நாளாந்தம்

ஆயிரகணக்கான பொது மக்கள் பயணித்து வருகின்றன. தொhரகல கிராமத்திற்கும் நயாபான

தோட்டத்திற்குமாக இரண்டு அரச போக்குவரத்து சேவைகளும் தனியார்

பஸ்களும் முச்சக்கர வண்டிகளும் தொரகல பிரதேசத்தில் 15.000 ஏக்கரில் விவசாயம் செய்யும் விவசாயிகளும் நீவ்பீகொக்

தோட்டம் ஓல்ட்பீகொக் தோட்டம் நயாப்பன தோட்டம் தொரகல கிராமத்தை சேர்ந்ந மக்களும்; நாளாந்தம் இந்த பாihயை பாவித்து  வருகின்றனர். 


இவ்வாறான நிலையில்  அன்மை காலங்களில் புதிதாக அமைக்கப்பட்ட இந்த பாலத்தின் நிர்மாண பனிகள் சீர் இன்மை

காரணமாக பாலம் பழுதடைந்து குற்றும் குழியுமாக நீர் தேங்கி போக்குவரத்திற்கு பொருத்தமற்று காணப்படுகின்றது.

இதனால் பயணிகளும் பயணிக்கும் வாகனங்களும் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

இந் நிலையில் இந்த பாலத்தினை சீர் செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பாலத்தில் வெள்ளம்
பாலத்தில் வெள்ளம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டன் Ilford டில் ஒருவர் சுட்டுக்கொலை

லண்டன் Ilford டில் ஒருவர் சுட்டுக்கொலை

கடந்த தினம் இரவு ,
Balfour Road, Ilford, at 10.14மணியளவில் மரம் நபர் நடத்திய

துப்பாக்கி சூட்டில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார் ,


மேற்படி கொலை தொடர்பில் ஸ்கொட்லந் யார்ட் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது

இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

Posted in உலக செய்திகள்

வடக்கு லண்டனில் பஸ்ஸில் பயணித்த பெண்ணின் முடியை எரித்த காப்பிலி

வடக்கு லண்டனில் பஸ்ஸில் பயணித்த பெண்ணின் முடியை எரித்த காப்பிலி

பிரிட்டன் வடக்கு லண்டன் பகுதியில் பயணிகள் போக்குவரத்து சேவையாக

விளங்கும் 328 பேரூந்தில் பயணித்த இளம் பெண் ஒருவரின் முடியை அதில் பயணித்த நபர் ஒருவ எரித்துள்ளார்

மேற்படி சம்பவம் தொடர்பில் குறித்த புகைப்படத்தினை போலீசார் வெளியிட்டுள்ளனர்


மேலும் பாதிக்க பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார் ,எனினும் ஆபத்து இல்லை என தெரிவிக்க பட்டுள்ளது

வடக்கு லண்டனில் பஸ்ஸில் பயணித்த
வடக்கு லண்டனில் பஸ்ஸில் பயணித்த
Posted in இலங்கை செய்திகள்

மாமியை அடித்து கொன்ற மருமகள்

மாமியை அடித்து கொன்ற மருமகள்

குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை காரணமாக, மருமகளால் தாக்கப்பட்ட மாமியார் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தின்போது

தாக்குதலுக்கு இலக்கான மாமனார், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

இச்சம்பவம், நேற்று (01) காலை, நானு-ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெஸ்போட் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மாரிமுத்து கோவிந்தம்மா (வயது 80) என்ற 4 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார் என்றும் இவரது கணவர்

அங்கமுத்து மாரிமுத்து (வயது 85 ), வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், மூன்று பிள்ளைகளின் தாயான மருமகள், சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு பின்னர் கைக்கலப்பாக மாறியதாகவும் இதன்போது,

மாமியாரையும் மாமனாரையும், மருமகள சரமாறியாகத் தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பிரதான வீதியில் பலத்த காயங்களுடன் வீழ்ந்து கிடந்த தாயையும் மலசலக்கூடத்தில் காயங்களுடன் காணப்பட்ட

மாமனாரையும் பிரதேசவாசிகள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு, 1990 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றுள்ளனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி, மாமியார் உயிரிழந்துள்ளார் எனத் தெரியவருகின்றது.

எனினும் கைது செய்யப்பட்ட மருமகள், தனது மாமி, மாமனாரை, இனந்தெரியாதோர் தாக்கியதாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

9 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிப்பு

9 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிப்பு

தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதால், மேல் மாகாணத்தில்

பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு

எதிர்வரும் 9ஆம் திகதி காலை 5 மணிவரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாளை காலை 5 மணி தொடக்கம் எதிர்வரும் 9ஆம் திகதி வரை,

இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட

பிரதேசங்களிலும் குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களிலும்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதென, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள்

கிளிநொச்சியில் கொரோனா சூழ்நிலையில் கடமைகளை

இலகுபடுத்துவதற்காக பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.

தற்போதைய கொரோனா வைரஸ் பரவும் இக்கட்டான நிலையில் கடமைகளை

இலகு படுத்துவதற்காக சுகாதார அமைச்சினால் உலக வங்கியின்

நிதியில் Covid 19 Emergency response and Health systems preparedness project மூலம் வழங்கப்பட்டது.

நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 12 பொதுச் சுகாதார

பரிசோதகர்களுக்கு கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் பொதுச் சுகாதார
கிளிநொச்சியில் பொதுச் சுகாதார
Posted in இலங்கை செய்திகள்

வெளி மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு சுய தனிமைப்படுத்தல்

வெளி மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு சுய தனிமைப்படுத்தல்

எந்த ஒரு மாவட்டத்திலிருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் வருபவர்கள் அனைவரும் தம்மை சுய தனிமைப்படுத்தலிற்கு

உட்படுத்த வேண்டுமென மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே. கருணாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இம்மாவட்டத்திலிருந்து பிறமாவட்டங்களுக்கு தொழில் நிமித்தம் சென்று வருபவர்கள் அல்லது அங்கு தங்கி தொழில் புரிபவர்கள் அல்லது வெளிமாவட்டங்களைச் சேர்ந்த அரச, தனியார் மற்றும்

சுயதொழில் புரிபவர்கள், அல்லது பிற மாவட்டத்தில் வசிக்கும் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்திருந்தால் எவராக

இருந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு இம்மாவட்டத்திற்குள் வருகைதந்தவர்கள் தமது விபரங்களை பொதுச் சுகாதார பரிசோதகர் அல்லது பொலிஸ், பிரதேச செயலாளர் அல்லது தமது கிராம சேவை

உத்தியோகத்தர்களிடம் தெரிவித்து இரண்டு வாரங்கள் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்குமாறும், இக்காலப்பகுதிக்குள் தமக்கு ஏதாவது நோய்த் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவ

உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அதசாங்க அதிபர் கருணாகரன் தெரிவித்தார்.

பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புடையவர்கள் தவிர்ந்த வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்தவர்களில் 5 பேர்

கொரோனா நோயாளர்களாக இனங்காணப்பட்டதையடுத்தே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் கடமை நிமிர்த்தம் வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் அரச உத்தியோகத்தர்களும், அவ்வாகனங்கள் பற்றிய விபரங்களை

குறித்த திணைக்களங்கள் மாவட்ட செயலகத்திற்கு அறிவித்துவிட்டுச் செல்ல வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதுதவிர கொரோனா நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ள வெல்லாவெளி, பட்டிப்பளை, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் உட்பட வாழைச்சேனைப் பொலிஸ்

பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் சிகைஅலங்கார நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்படுவதுடன், சகல சுகாதார விதிமுறைகளைப்

பேணுவதுடன் வரும் வாடிக்கையாளர்களது விபரங்களை பதிவேடொன்றில் பதிந்து கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் கருணாகரன் கேட்டுக்கெண்டுள்ளார்.

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனா மேலும் ஒருவர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா மேலும் ஒருவர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா நோய் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் நேற்று உயிரிழந்தள்ளார்.

இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

ஊடக அறிக்கை

பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த 31ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்த நோயாளியின் பிரேத

பரிசோதனையில் அவர் கொவிட் நோய் தொற்றுக்குள்ளானவர் என்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக தொற்று நோயியல் பிரிவு சற்று முன்னர் அறிவித்தது.

உயிரிழந்த நபர் 27 வயது ஆண் ஆவதுடன் பாணந்துறை பிரதேசத்தைச்

சேர்ந்தவர். அத்துடன் இந்த மரணம் தற்கொலை முயற்சியினால் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

இது 22ஆவது கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவரின்; மரணமாக தொற்று நோயியல் பிரிவு உறுதிசெய்துள்ளது.

Posted in உலக செய்திகள்

நாளை ஜனாதிபதி தேர்தல் : அமெரிக்காவில் டிரம்ப் – ஜோ பைடன் இறுதிகட்ட பிரசாரம்

நாளை ஜனாதிபதி தேர்தல் : அமெரிக்காவில் டிரம்ப் – ஜோ பைடன் இறுதிகட்ட பிரசாரம்

அமெரிக்காவில் நாளை ஜனாதிபதி தேர்தல் நடக்கும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளரான டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நாளை ஜனாதிபதி தேர்தல் : அமெரிக்காவில் டிரம்ப் – ஜோ பைடன் இறுதிகட்ட பிரசாரம்


ஜோ பைடனும், முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் தங்களின் ஆதரவாளர்களை நோக்கி கையசைத்த காட்சி.
வாஷிங்டன்:

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாக விளங்கும் அமெரிக்காவில் நாளை (செவ்வாய்க்கிழமை)ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நடைபெறும் இந்த

தேர்தல் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில்

தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிட, அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் களம் காண்கிறார்.

கொரோனா வைரஸ், இனப்பாகுபாடு ஆகிய விவகாரங்கள் இந்த தேர்தலில் முக்கிய பிரச்சினைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தேர்தல் நடந்தாலும் கடந்த காலங்களை ஒப்பிடுகையில் அமெரிக்க மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்கு மிகுந்தஆர்வம் காட்டிவருகின்றனர்.

அந்தவகையில் 8 கோடியே 50 லட்சம் பேர் முன்கூட்டியே தங்கள் வாக்கை செலுத்தினர். அதைப்போல் தேர்தல் நாளன்று இதுவரை

இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக

ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய மாகாணமாக விளங்கும் பென்சில்வேனியாவில் 4 பிரசார பேரணிகளில் ஜனாதிபதி டிரம்ப்

கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதேபோல் மற்றொரு முக்கிய மாகாணமான மிச்சிகனில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 2 பிரசார பேரணிகளில் பங்கேற்றார்.

இந்தப் பேரணிகளில் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் கலந்து கொண்டு ஜோ பைடனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

ஜோ பைடனின் பிரசார பேரணிகள் மிக சிறிய அளவிலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்பட்டும் நடந்தன. ஆனால்

ஜனாதிபதி டிரம்பின் பிரசார பேரணிகள் மிக பிரமாண்டமாகவும், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இன்றியும் நடைபெற்றன.

இதனிடையே பென்சில்வேனியாவில் ஒரு பேரணியில் பேசிய டிரம்ப், நடக்க இருக்கும் இந்த தேர்தலில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிக அளவிலான வாக்குகளை கைப்பற்றி குடியரசு கட்சி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “இது மிகவும் சுவாரஸ்யமான செவ்வாய்க்கிழமையாக இருக்கப்போகிறது. நம்மிடம் ஒரு பெரிய சிவப்பு அலை உருவாகியுள்ளது. இது போன்ற எதையும் யாரும் பார்த்ததில்லை” என கூறினார்.

மேலும் அவர் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் தான் பெற்ற வாக்குகளை விட இம்முறை அதிக அளவு வாக்குகளை பெறுவேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதேபோல் மிச்சிகனில் நடந்த பிரசார பேரணியில் பேசிய ஜோ பைடன் ஜனாதிபதி டிரம்ப் கடந்த 4 ஆண்டுகளில் நாட்டை பிளவுபடுத்தியதாவும், எனவே அவரை வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்ற மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் எனவும் கூறினார்.

பிரசாரத்தில் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா பேசுகையில், ஜனாதிபதி டிரம்ப் கொரோனா வைரஸ் தொற்றின் குறிப்பிடத்தக்க சிக்கலை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் தனது தற்பெருமைக்கு தீனி போடுவதை தவிர மற்ற விஷயங்களைப் பற்றி கவலைப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.