கொரோனா உயிரிழந்தோரின் எண்ணிக்கை 66
இலங்கையில் கொரோனா உயிரிழந்தோரின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக அரசாங்க தகவல்திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
சற்று முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கீழ் குறிப்பிட்ட விபரங்களைக்கொண்ட கொவிட் 19 தொற்றக்குள்ளான நோயாளர் ஐவரின் மரணத்தை உறுதி
செய்துள்ளதுடன் இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றக்குள்ளான நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 66 ஆகும் என தெரிவித்துள்ளார்.
- கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆண் நபர். கொவிட் 19 தொற்றக்குள்ளானவர் என்ற ரீதியில் அடையாளங் காணப்பட்டவர் புனானி(புனானை) சிகிச்சை மத்திய நிலையம்
- மற்றும் அதனைத் தொடர்ந்து வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தோடு அந்த வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான
- காரணம் அதியுயர் இரத்த அழுத்தத்துடன் கொவிட் 19 தொற்றக்குள்ளானமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 69 வயது பெண் ஆவார்.
- வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீரிழிவு நோயில் ஏற்பட்ட சிக்கலான நிலை மற்றும் அதியுயர் இரத்த அழுத்தத்துடன் கொவிட் 19 தொற்றக்குள்ளானமை என
- தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கிருலப்பனை பகுதியைச் சேர்ந்த 71 வயதான பெண் வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் அதியுயர் இரத்த அழுத்தம் நீரிழிவு நோய் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதினால்
- அதிகரித்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த 81 வயதான பெண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான
- காரணம் கொவிட் 19 தொற்றக்குள்ளானதுடன் நிமோனியா ஏற்பட்டமை ஆகும்.
- தொமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய ஆண் நபர். வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீரிழிவு
- நோயில் சிக்கலான நிலையுடன் கொவிட் 19 தொற்றுக்குள்ளானமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.






