கொழும்பைச் சேர்ந்த பலருக்கு கொரனோ

Spread the love

கொழும்பைச் சேர்ந்த பலருக்கு கொரனோ

இன்று 17 காலை வரையில் Covid -19 வைரசு தொற்றுக்குள்ளான 382 நபர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக COVID-19 வைரஸ் பரவலை

தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் உள்நாட்டில் இருந்து 374 பேரும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஐந்து இலங்கை கடலோர பாதகாப்பு வீரர்களும் மூன்று வெளிநாட்டு கடலோர பாதுகாப்பு வீரர்களும்

பதிவாகியுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்டவர்களுள் பெரும்பாலானவர்கள் கொழும்பு பிரதேசத்திற்கு உட்பட்டவர்கள்.

இவர்களின் எண்ணிக்கை 231, கம்பஹா பிரதேசத்தில் 42 தொற்றுக்குள்ளானவர்களும் , களுத்துறை பிரதேசத்தில் 20 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்று (17) காலை வரை மினுவங்கொடை ஆடை தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணிகளுடன் தொடர்பு பட்டிருந்த உழஎனை-19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த

எண்ணிக்கை 14,154 ஆகும். இவர்களுள் 8,381 பேர் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி – 3106
பேலியகொடை மீன் சந்தை கொத்தணி -11,048

நேற்றைய (16) தினம் இலங்கையில் உழஎனை-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 17,668

என்பதுடன் இவர்கள் 11,805 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்றைய (16) தினம் வரையில் வைத்தியசாலைகளிளும் COVID -19 பராமரிப்பு நிலையங்களிளும் 5,802 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று (17) காலை 6 மணி வரையிலான கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வைத்தியசாலைகள் மற்றும் வைரஸ் தொற்று பராமரிப்பு நிலையங்களில் இருந்து 311 பேர் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர்..

இதன் அடிப்படையில் இன்று (17) காலை வரையிலும் இலங்கையில் COVID -19 தொற்றினால் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

இன்று (17) காலை வரைக்கும் COVID-19 தொற்றுக்குள்ளானவர்கடளுடன் (முதலாவது மற்றும் இரண்டாவது)

தொடர்புபட்ட 30,000 பேர் சுய தனிமைப்படுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை EY 264 என்ற பயணிகள் விமானத்தின் மூலம் துபாயிலிருந்து 26 பேரும் Ul 668 மற்றும் ருடு 218 என்ற பயணிகள்

விமானத்தின் மூலம் கட்டாலிருந்தும் முறையே, 37 மற்றும் 22 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த அனைவரும் முப்படையினர் மூலம் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில்

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (17) வரைக்கும் படையினரால் நடத்தப்பட்டுவரும் 33 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலும் 3,281 பேர்

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய (16) தினம் வரை 10, 713 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *