Author: நலன் விரும்பி
கொரனோ வெறியாட்டம் -அமெரிக்காவில் 3,914 மற்றும் பிரிட்டனில் 1,325 பேர் பலி
கொரனோ வெறியாட்டம் -அமெரிக்காவில் 3,914 மற்றும் பிரிட்டனில் 1,325 பேர் பலி
பரவி வரும் கொரனோ நோய் பரவளில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் அமெரிக்காவில் 3,914 பேர்
பலியாகியுள்ளனர் ,மேலும் இதே நாளில் 301,655 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அதே போல பிரிட்டனில் 1,325 பேர் பலியாகியும் இதே சம நாளில் 68,053 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து சிவகுப்பு எச்சரிக்கை விடுக்க பட்டு முழு லொக்கடவுன் தொடர்கிறது
வரும் நாட்களில் மேலும் இதன் பாதிப்பு அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது ,முகக் கவசம் அணியாது வீதிகளில்
செல்வோருக்கு போலீசார் தண்டம் அறவிட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
இராணுவம் வேட்டை – 70 தாலிபான்கள் சுட்டு கொலை
இராணுவம் வேட்டை – 70 தலிபான்கள் சுட்டு கொலை
ஆப்கானிஸ்தான் கந்தகார் பகுதியில் குவிக்க பட்டிருந்த தாலிபான்கள்
நிலைகளை இலக்கு வைத்து அரச இராணுவம் நடத்திய திடீர் முற்றுகை தாக்குதலில் சிக்கி 70 தாலிபான்கள்படுகொலை செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு இறந்தவர்களில் ஏழு வெளிநாட்டை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்க பட்டுள்ளது
அரசுக்கு எதிராக முழுவீச்சில் பெரும் தாக்குதல்களை நடத்தி வரும் தாலிபான்களை
அடக்க இவ்வாறான இராணுவ நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
தீயில் எரிந்த 50 வீடுகள் – கதறும் மக்கள்
தீயில் எரிந்த 50 வீடுகள் – கதறும் மக்கள்
பங்களாதேசில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் திடீரென பற்றிய
தீயினால் அப் பகுதியில் அமைக்க பட்டிருந்த சுமார் ஐம்பது வீடுகள் முற்றாக எரிந்து அழிந்தன
மேற்படி தீ சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
வீடுகளுக்குள் இருந்த உடைமைகள் அனைத்தும் தீயில் கருகியுள்ளதால மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
தீயில் கருகி 10 சிசுக்கள் பலி – அதிர்ச்சியில் குடும்பம்
தீயில் கருகி 10 சிசுக்கள் பலி – அதிர்ச்சியில் குடும்பம்
இந்தியா மகாராஸ்திர பகுதியில் உள்ள மருத்துவமனையின்
மகாப்பேறு பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி பிறந்த ஏழு
சிசுக்கள் தீயில் கருகி பலியாகியுள்ளனர்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,மேலும் ஆத்திரமுற்ற
மக்கள் மருத்துவமனை முன்பாக மாறியலிலுள் ஈடுபட்டுள்ளனர் ,இதனை அடுத்து போலீசார் குவிக்க பட்டுள்ளனர்
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றம்; முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றம்; முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வளாகத்துக்குள் உள்ள நினைவுத் தூபி இன்று (08) இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக் கழக வாயில் மூடப்பட்டு எவரும் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
நினைவுத் தூபிகள் இடித்து அழிக்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து மாணவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பல்கலை முன்றலில் கூடியுள்ளனர்.
யாழ்பல்கலைகழக வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழிக்கும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.
முகங்களை முழுமையாக மூடியபடி இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னிணைப்பு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் மின்குமிழ்கள் அணைக்கப்பட்டு ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இடித்தழிக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பராமரிப்பு பகுதியே இந்த இடித்து அழிக்கும் பணியை இரவோடு இரவாக முன்னெடுத்தது.
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக,
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக
மானியங்கள் ஆணைக்குழுவும், 2018ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் நினைவு தூபி இடித்தடிக்கப்பட்டது.
இதேவேளை நள்ளிரவை தாண்டியும் பல்கலை மாணவர்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பல்கலை முன்றலில் அமர்ந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்நிலையில் பெருமளவான பொலிஸ் விசேட அதிரடி படையினர் , பொலிஸார் , இராணுவத்தினர் குவிக்கப்ட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் மக்களுக்கு உணவு வழங்கும் இராணுவம்
கிளிநொச்சியில் மக்களுக்கு உணவு வழங்கும் இராணுவம்
சிங்கப்பூரில் உள்ள பௌத்த விகாரையின் தலைமை தேரர் காலே உதித்த தேரர், வணக்கத்திற்குரிய பலங்கொட புத்தகோஷா தேரர் மற்றும் சிங்கப்பூர் புத்த சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோரின்
அனுசரணையில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் கொவிட்-19 தொற்று நோயின்
காரணமாக பாதிப்புக்குள்ளான கிளிநொச்சி பகுதியில் உள்ள வறிய குடும்பங்களுக்கு 07 ஆம் திகதி 1000 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இதற்கான ஒருங்கிணைப்பானது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொடவினால் மேற்கொள்ளப்பட்டது.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் மற்றும் வாழ்வாதார வழிமுறைகள் இழப்பு காரணமாக கஷ்டங்களுக்கு உள்ளான குடும்பங்களை
அடிப்படையாக கொண்டு வரவிருக்கும் இந்து நம்பிக்கையின் தைப் பொங்கல் திருவிழாவை நடத்துவதற்கான ஊக்கமாகவும் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
கிளநொச்சி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட , 57வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ சேனரத் யாப்பா, 571 மற்றும் 662 வது பிரிகேட்
தளபதிகள், 9வது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 20 வது பட்டாலியன் இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் கட்டளை அதிகாரிகள் குறித்த பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று
சுகாதார வழிகாட்டுதல்களையும் தடுப்பு நடவடிக்கைகளையும் கடைபிடித்து குறித்த உலர் உணவு பொதிகளை வழங்கினர்.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேணல் பொது பதவி நிலை கேணல் அனில் சோமவீர மற்றும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தலைமை
ஒருங்கிணைப்பாளர் சிவில் விவகாரங்கள் லெப்டினன்ட் கேணல் எல்.கித்சிறி ஆகியோர் குறித்த திட்டத்தினை வெற்றிகரமாக
நிறைவு செய்ய நன்கொடையாளர்களுடன் ஒருங்கிணைப்பினை மேற்கொண்டு தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.
மூவாயிரம் வீடுகளை அமைக்கும் கோட்டா அரசு
மூவாயிரம் வீடுகளை அமைக்கும் கோட்டா அரசு
கொட்டாவை – மாகும்புர பிரதேசத்தில் 314 வீடுகளைக் கொண்ட மாடிவீட்டுத் தொகுதி நடுத்தர வர்க்கத்தினருக்காக ஐயாயிரம் மாடிவீட்டுத் தொகுதிகளை அமைக்கும் அரசாங்கத்தின்
வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் முதல் கட்டமாக மூவாயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
இதற்காக 40 பில்லியன் ரூபா செலவிடப்படும். மாக்கும்புர பலநோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தின் அதிவேக
நுழைவுப் பகுதிக்கும் ஹைலெவல் பாதைக்கும் அருகில் இந்த வீடுகள் அமைக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.
கொழும்பு ஒன்று முதல் 15 வரையான கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் 68 ஆயிரத்து 894 குடிசைகள் அமைந்துள்ளன.
இவற்றில் சுமார் 20 ஆயிரம் குடும்பங்களை புதிய வீடுகளில் குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2022ஆம்
ஆண்டு ஜனவரி ஏழாம் திகதிக்குள் மூவாயிரம் வீடுகளை அமைக்க அமைச்சு எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு முடக்கம்
டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு முடக்கம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும்
வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசிய வீடியோக்களை டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார்.
இந்த டிரம்பின் பேச்சு பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது. இதனால் வன்முறையை
தூண்டும் வகையில் இருந்த அந்த வீடியோக்களை டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து அதிரடியாக நீக்கினர்.
மேலும் இதுபோன்றதொரு வன்முறை சம்பவம் பரவாமல் தடுக்கும் வகையில் டிரம்பின் டுவிட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்து வருவதில் முறைக்கேடுகள் நடந்தால் அதற்கெதிராக நடவடிக்கை
வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்து வருவதில் முறைக்கேடுகள் நடந்தால் அதற்கெதிராக நடவடிக்கை
வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் விமான சேவைகளின் எண்ணிக்கையை அடுத்த வாரத்தில் இருந்து
அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வருவதில் எந்தவகையான முறைக்கேடுகள் நடைப்பெற்றாலும்
அதற்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை
ஒத்திவைப்பு வேளையில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.
ஜனாதிபதியுடன் பேச்சு வார்த்தை நடத்தி அடுத்த வாரம் முதல் இவர்களை அழைத்து வருவதற்கான விமான சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளது.
Pay தனிமைப்படுத்தல் அதாவது பணம் செலுத்தி தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்படவில்லை. 45,000 க்கும்
மேற்பட்டோர் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு இலவசமாக தனிமைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களை நாட்டுக்கு வரவழைத்து இலவசமாக தனிமைப்படுத்தல் மேற்கொள்ளப்படும்.
இந்த நடவடிக்கைகள் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக முன்னெடுக்கப்படுகின்றன.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் பொது மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக
பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க சுட்டிக்காட்டியபோதே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
பொலிஸ் திடீர் சோதனை -26 பேர் கைது
பொலிஸ் திடீர் சோதனை -26 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியை பேணாத
குற்றங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ்
ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஒக்டோபர் 30ஆம் திகதியிலிருந்து இதுவரையில் 2361
பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆற்றில் மிதந்த மனித சடலம் – நடந்தது என்ன ..?
ஆற்றில் மிதந்த மனித சடலம் – நடந்தது என்ன ..?
மட்டக்களப்பு தேற்றாத்தீவு கடற்கரையை அண்டிய வாவிபகுதியில் ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில்
இன்று (08) கரையொதுங்கியுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் சுமார் 60 வயதுமதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலத்தின் அடையாளம் இதுவரை கணப்படாத நிலையில் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலைக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதக பொலிசார் தெரிவித்தனர்.
யாழில் வீடு புகுந்து ரவுடிகள் அட்டகாசம்
யாழில் வீடு புகுந்து ரவுடிகள் அட்டகாசம்
உடுவில் அம்பலவாணர் வீதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்துள்ளது.
வயோதிபப் பெண்ணும் அவருடைய மகனும் வசிக்கும் வீட்டிலேயே இந்தத் தாக்குதலை வன்முறைக் கும்பல் நேற்று (07) இரவு 9.30 மணி அளவில் மேற்கொண்டுள்ளது.
5 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட குழு முகத்தை மூடிக் கட்டியவாறு வீட்டுக்குள் புகுந்து பெறுமதியான
இலத்திரனியல் சாதனங்கள் உள்ளிட்ட உடமைகளைத் தாக்கிச் சேதப்படுத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்துள்ளது.
கொழும்பில் இருந்து வருகை தந்து வாடகை வீடு எடுத்து நீண்டகாலமாக வசிக்கும் தாயும் மகனும் எந்தவொரு பிரச்சினைக்கும் செல்வதில்லை என்று அயலவர்கள் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்திய கும்பலும் தாய் மற்றும் மகன் மீது தாக்குதல் நடத்தாமல் அச்சுறுத்தும் வகையில் உடமைகளைச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அமைச்சருக்கு கொரனோ
இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா
வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்த, ஹிக்கடுவ பகுதியில் உள்ள ஹோட்டலொன்றில் அமைக்கப்பட்டுள்ள
தனிமைப்படுத்தல் நிலையத்தில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்காக மோதல்; பெண் படுகொலை
சொத்துக்காக மோதல்; பெண் படுகொலை
மத்துகம வெலிமானாவ பகுதியில் இன்று(08) அதிகாலை 1 மணியளவில் 62 வயது பெண் சொகுசு வாகனத்தில் மோதி கொலைசெய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, கொலையை செய்த உறவினர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணின் 37 வயது மகன் உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தை வீட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அவரது சொத்துகளை பிரித்து கொள்வது தொடர்பில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
cbi-6295 என்ன வெள்ளை நிற வெகனார் வாகனத்தில் குறித்த சந்தேக நபர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவித்த அவர், தகவல் அறிந்தவர்கள் 0718591701 என்ற மத்துகம பிரதான பொலிஸ் பரிசோதகரின் தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
முகக்கவசம் இன்றி நடமாடிய 377 பேரில் 3 பேருக்கு கொரோனா
முகக்கவசம் இன்றி நடமாடிய 377 பேரில் 3 பேருக்கு கொரோனா
முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்து ரபிட் ஆன்டிஜன் அல்லது பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்துகின்ற திட்டத்தின்
மூலம் நேற்றைய தினம் (07) கைது செய்யப்பட்டவர்களில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியாது பொது இடங்களில் நடமாடிக் கொண்டிருந்த 377 பேர் நேற்றைய தினம் கைது
செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 220 பேர் ஆன்டிஜன் பரிசோதனைக்கும், 157 பேர் பி.சீ.ஆர் பரிசோதனைக்கும்
உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை மீன் கடைகள், மரக்கறிக் கடைகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களில் கொரோனா
தொற்றாளர்களை இனங்காண்பதற்கான பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் பேஸ்புக் கணக்கு முடக்கம் – கொதிக்கும் டிரம்ப்
டிரம்ப் பேஸ்புக் கணக்கு முடக்கம் – கொதிக்கும் டிரம்ப்
அமெரிக்காவின் ஆளும் அதிபர் டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸகிராம்
கணக்குகள் பதிவுகள் பதிவு செய்ய முடியாதபடி பேஸ்புக் நிறுவனம் தடை செய்துள்ளது
இவரது தடை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இந்த தடை
நீடிக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது
தானே அடுத்த ஜனாதிபதி என தெரிவித்து பதிவு பகிரப்பட்ட
நிலையில் இந்த தடை ஏற்படுத்த பட்டுள்ளது
கொரனோ காரணம் காட்டி 4000 நிறுவனங்கள் போலியாக பணம் பெற்றது அம்பலம் – பறந்தது தண்டம்
கொரனோ காரணம் காட்டி 4000 நிறுவனங்கள் போலியாக பணம் பெற்றது அம்பலம் – பறந்தது தண்டம்
பிரிட்டனில் நான்காயிரம் solo-regulated firms நிறுவனங்கள் தமது
நிறுவனம் நட்டத்தில் செல்வதாக கூறி பணம் பெற்றது கண்டு பிடிக்க பட்டது
குறித்த நிறுவனங்கள் மீது நடத்த பட்ட விசாரணைகளில் இந்த
விடயம் கண்டு பிடிக்க்க பட்ட நிலையில் அவர்களுக்கு எதிராக FC A கடும் தண்ட பணம் அறவிட பட்டுள்ளது
தொடர்ந்து மேலும் சில நிறுவனங்கள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டு வருகின்றன
பிரிட்டனில் வீட்டுக்குள் இறந்த நிலையில் ஆண் சடலமாக மீட்பு
பிரிட்டனில் வீட்டுக்குள் இறந்த நிலையில் ஆண் சடலமாக மீட்பு
பிரிட்டன் Salford. பகுதியில் ஆன் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக
மீட்க பட்டுள்ளார் .
மீட்க பட்ட சடலம் மரண பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட
வண்ணம் உள்ளனர்
இதுவரை இவரது மரணத்திற்குரிய காரணம் தெரியவில்லை
லண்டனுக்குள் போதைவஸ்து கடத்த முயன்ற 3 பெண்கள் கைது
லண்டனுக்குள் போதைவஸ்து கடத்த முயன்ற 3 பெண்கள் கைது
ஜாமெக்காவில் இருந்து லண்டனுக்குள் போதைவஸ்து கடந்த
முயன்ற மூன்று கறுப்பின பெண்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
லண்டன் காட்வீக் விமான நிலையத்தில் வந்திறங்கிய இவர்கள் போதிக்குள்
மறைத்து வைத்து எடுத்து வரப்பட்ட சுமார் ஒரு கிலோ நிறையுடைய போதைவஸ்து கண்டு பிடிக்க பட்டது
சுங்க திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் பொழுதே மேற்படி விடயம் கண்டு பிடிக்க பட்டது
தற்போது மூவரும் சிறையில் அடைக்க பட்டுள்ளனர்

சீனாவை மிரட்டும் அமெரிக்கா – அடங்குமா சீனா ..? தடை விதிக்க படும் என எச்சரிக்கை
சீனாவை மிரட்டும் அமெரிக்கா – அடங்குமா சீனா ..? தடை விதிக்க படும் என எச்சரிக்கை
ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜனநாயக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சீனா மீது
கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
சீனா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் கீரியும், பாம்புமாக மோதி வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவில் தொடங்கியது இந்த பிரச்சினை.
அதன் பின்னர் தென் சீன கடல் விவகாரம், உய்கூர் இன முஸ்லிம்கள் மீது சீன அரசின் அடக்குமுறை என ஒவ்வொன்றாக இரு நாடுகளின் உறவை பலவீனமாக்கியது.
இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று கொரோனா வைரஸ் இரு நாடுகளுக்கு தீரா பகையை உருவாக்கியுள்ளது. இதனால்
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.
இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையில் ஹாங்காங் விவகாரமும் முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது.
சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் ஜனநாயகத்தை பறிக்கும் செயல்பாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேலும் ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா சீனாவுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த சூழலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீனா சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியது.
இந்த சட்டம் ஹாங்காங்கின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் என அமெரிக்கா முதல் நாடாக எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட ஜனநாயக ஆர்வலர்களை ஹாங்காங் போலீசார் கைது செய்தனர். இவர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வக்கீலும் அடங்குவார்.
இந்த கைது நடவடிக்கைக்கு உலக நாடுகள் பலவும் கவலை தெரிவித்துள்ளன. இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஹாங்காங் மற்றும் சீன அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
இந்தநிலையில் ஹாங்காங் ஜனநாயக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சீன அரசு மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி பாம்பியோ கூறுகையில் ‘‘இந்த அடக்குமுறை சீன கம்யூனிஸ்டு கட்சி தனது சொந்த மக்கள் மற்றும் சட்டத்தை அவமதிப்பு செய்வதை நினைவூட்டுகிறது. ஹாங்காங் மக்கள் மீது இந்த தாக்குதல் நடத்துவதில் ஈடுபட்டுள்ள சீன அரசு, தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான பொருளாதார தடைகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளை அமெரிக்கா பரிசீலிக்கும்” என்றார்.
மேலும் அவர் ‘‘அரசியல் அடக்குமுறை பிரசாரத்தின் ஒரு பகுதியாக ஒரு அமெரிக்க குடிமகன் கைது செய்யப்பட்ட செய்தியால் நான் அதிர்ச்சி அடைந்தேன். நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன் அமெரிக்க குடிமக்கள் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்படுவதையோ அல்லது துன்புறுத்துவதையோ அமெரிக்கா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது’’ எனவும் கூறினார்.
இதேபோல் கைது செய்யப்பட்டுள்ள ஜனநாயக ஆர்வலர்களை விடுவிக்காவிட்டால் சீனா மீது கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என ஐரோப்பிய கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.








