Author: நலன் விரும்பி
toilet தண்ணி சமையலறைக்குள் லீக் – சிறுமி மருத்துவ மனையில் – ஓனருக்கு ஆப்பு
toilet தண்ணி சமையலறைக்குள் லீக் – சிறுமி மருத்துவ மனையில் – ஓனருக்கு ஆப்பு
லண்டன் கரோ பகுதியில் வாடகை வீடொன்றில் குடியிருந்த தம்பதிகள்
வீட்டு சமையலறைக்குள் ,வீட்டின் மேலே இருந்த toilet தண்ணீர் கசிந்து சமையலறைக்குள் ஊற்றியுள்ளது
மேற்படி மலசல கழிவு நீர் தொற்றின் காரணமாக நன்கு வயது அழகிய
சிறுமி நோயினால் பாதிக்க பட்ட நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
இந்த சம்பவத்தை அடுத்து விரைந்து வந்த விசாரணை குழு அகாரிகள்
நடத்திய விசாரணையில் வீடு பழுதடைந்த நிலையில் ,பராமரிப்பு இன்று கிடந்துள்ளது காணப்பட்டுள்ளது
குறித்த வீட்டை வாடகைக்கு வழங்கிய வீட்டு உரிமையாளர் தீவிர விசாரணைகளுக்கு
உட்படுத்த பட்டுள்ளதுடன் ,இவருக்கு பல்லாயிரம் பவுண்டுகள்
தண்டம் மற்றும் சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
வீட்டை வாடகைக்கு வழங்கி பணத்தை பறிக்கும் இவர்கள்
,அங்குள்ளவர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது
இந்த சம்பவம் தமிழர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்

கொரானோவால் உடல் மெலிந்த மருத்துவ தாதி
கொரானோவால் உடல் மெலிந்த மருத்துவ தாதி
இங்கிலாந்து புறநகர் பகுதி மருத்துவமனையில் தாதியாக பணிபுரிந்த இருபத்தி மூன்று
வயது தாதி ஒருவர் கொரனோ தொற்று பகுதியில் பணிபுரிந்து வந்துள்ளார்
அதிக நேரம் பணி புரிந்த நிலையில் இவர் தனது உடலில் பாதியை
இழந்து அழகு தேவதையாக வலம் வருவதாக மகிழ்ச்சி பட தெரிவித்துள்ளார்
கொரனோ பரவியதால் இவருக்கே அதிக நன்மை கிடைத்துள்ளதாக
நெட்டிசன்கள் கிண்டல் செய்திடவும் தவறவில்லை
சமூக வலைத் தளத்தில் இந்த பெண்மணி சூப்பர் கீரோனியாகி விட்டார்
வீதியில் நடந்த சோகம் – தந்தை ,மகன் மரணம் – கண்ணீரில் குடும்பம்
வீதியில் நடந்த சோகம் – தந்தை ,மகன் மரணம் – கண்ணீரில் குடும்பம்
இலங்கை எம்பிலிப்பிட்டிய பகுதியில் சாலையில் பயணித்து
கொண்டிருந்த தந்தையும் அவரது 11 வயது மகனும் பிக்கப் ரக
வாகனம் ஒன்று மோதியதில் சம்பவ இடத்தில பலியாகினர்
நாள் தோறும் இலங்கையில் வீதி விபத்துக்களில் நால்வர் பலியாகி
வருகின்றனர் என்ற புள்ளி விபரம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
காவல்துறையின் அலட்சிய போக்கே இந்த சம்பவங்கள் நிகழ காரணம் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்
நாளை தனிமை படுத்தலில் இருந்து பல பகுதிகள் விடுதலை – இராணுவ தளபதி அறிவிப்பு
நாளை தனிமை படுத்தலில் இருந்து பல பகுதிகள் விடுதலை –
இராணுவ தளபதி அறிவிப்பு
இலங்கையில் பரவி வரும் நோயின் காரணமாக மக்கள் நடமாட
தடை செய்ய பட்டுள்ள பகுதிகள் சில நாளை காலை முதல் மக்கள்
பாவனைக்கு விடுவிக்க படவுள்ளதாக இலங்கை இராணுவ தளபதி
சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
18 பேருக்கு கொரனோ – சந்தைக்கு பூட்டு
18 பேருக்கு கொரனோ – சந்தைக்கு பூட்டு
இலங்கை கம்பாக பகுதியில் உள்ள பொது சந்தை ஒன்றில் பணி
புரிந்த பதினெட்டு பேருக்கு கொரனோ நோயுள்ளது கண்டு பிடிக்க
பட்ட நிலையில் மேற்படி சந்தை மறு தேதி வரை அடித்து பூட்ட
பட்டுள்ளது
தற்போது பொது சந்தைக்கு கிருமி நாசினி தெளிக்கும் நகர்வில்
சுகாதர பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்
11,000 கைதிகளை விடுவித்த கோட்டா – எதற்கு இந்த அவசரம் ..?
11,000 கைதிகளை விடுவித்த கோட்டா – எதற்கு இந்த அவசரம் ..?
இலங்கை சிறைகளில் பல்வேறு பட்ட குற்ற செயல்களுடன் தொடர்பு
பட்டு அடைத்து வைக்க பட்டிருந்த சுமார்
11,000 கைதிகள் ஆளும் கோட்டா அரசினால் விடுதலை செய்ய
பட்டுள்ளனர் ,
மேலும் எதிர்வரும், வெசாக் தினத்தை முன்னிட்டும் நூற்றுக்கு
மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்ய படவுள்ளனர் என
சிறைச்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது
இலங்கையில் அரச இணையதளங்களை முடக்கிய கைக்கர்கள்
இலங்கையில் அரச இணையதளங்களை முடக்கிய கைக்கர்கள்
இலங்கையில் இயங்கி வரும், மிக முக்கிய அரச மற்றும் அதன்
முகவர் இணைய தளங்கள் மர்ம கைக்கிங் நபர்களினால் முடக்க
பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது
இவ்வாறு முடக்க பட்ட இணையங்கள் மீள செயல் பாட்டுக்குக்
கொண்டு வரும் நடவடிக்ககையில் தொழில் நுட்ப பிரிவினர் இயங்கி வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது
தமிழர்களோடு இணைந்திருப்பதே முஸ்லீம்களுக்கு பாதுகாப்பானது- கண்டு பிடித்த காவிய தலைமைகள்
தமிழர்களோடு இணைந்திருப்பதே முஸ்லீம்களுக்கு பாதுகாப்பானது- கண்டு பிடித்த காவிய தலைமைகள்
சிங்கள அரச ஒடுக்கு முறைகளுக்கு எதிராக தமிழர்களோடு முஸ்லீம்கள் இணைந்திருப்பது மட்டுமல்ல, முஸ்லீம் மக்களது
அரசியல், இணைந்த வாழ்வு ஆகியதான் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பானது என யாழ் முஸ்லீம் இளைஞர் கழகப்பிரதிநிதி அப்துல்லா தெரிவித்துள்ளார்.
தமிழர் தாயகத்தில் எழுச்சி கொண்டுள்ள ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை’ எனும் அறவழிப்போராட்டதுக்கு, புலம்பெயர்
தமிழர்களின் உறுதுணையினை வெளிப்படுத்தும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த தோழமைக்
கூட்டத்தில் கருத்துரைக்கும் போதே இதனை அவர் தெரிவித்திருந்தார்.
சிங்கள பேரினவாதிகளாலும், கடும்போக்குவாதிகளாலும் தமிழர்கள் மீது நடத்தப்படுகின்ற செயற்பாடுகளை வன்மையாக
கண்டிப்பதாக தெரிவித்த அப்துல்லா, சிங்கள குடியேற்றங்கள், நில அபகரிப்புக்களுக்கு எதிராக முஸ்லீம்கள் தமிழர்களோடு
இணைந்து போராடவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த இணைந்த செயற்பாடு சக்திவாய்ந்தது மட்டுமல்லாது பலமானது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த தமிழினவழிப்பு நினைவுத்தூபி இடிப்புக்கு எதிராகவும் தமது
கண்டனத்தினை தெரிவித்திருந்தாக குறிப்பிட்டிருந்த அப்துல்லா, ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை’ பேரணி யாழ்
மண்ணில் கால் வைக்கும் போது தமது சமூகம் அதற்கு ஆதரவாக பங்கெடுக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இடம்பெயர்ந்த முஸ்லீம்களது மீளகுடியேற்றம் என்பது தமிழ்மக்களது அங்கீகாரத்துடனேயே சாத்தியம் என்பதனை
வலியுறுத்திய அப்துல்லா, வடக்கு கிழக்கில் முஸ்லீம் மக்களது அரசியல், இணைந்த வாழ்வு ஆகியதான சிங்கள
அடக்குமுறையாளர்களிடம் இருந்து முஸ்லீம்களுடைய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் எனவும் அவர் இடித்துரைந்திருந்தார்.
முன்னராக யாழ் முஸ்லீம் இளைஞர் கழகம், ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை’யிலான அறவழிப்போராட்டத்துக்கு
தமது ஆதரவினைத் தெரிவித்திருந்ததோடு, முஸ்லீம்களை ‘தமிழர்களாக’ அணிதிரளுமாறு அழைப்பும் விடுத்திருந்தது.
இதேவேளை, அப்துல்லாவின் தோழமையினை கூட்டத்தில் பங்கெடுத்திருந்த பலரும் வரவேற்றிருந்ததோடு, இரு
சமூகங்களுக்கு இடையிலான இணைந்த செயற்பாட்டுக்கு நல்லதொரு தொடக்கமாக தற்போதைய நிகழ்வுகள் அமைந்துள்ளதென குறிப்பிட்டிருந்தனர்.
சமதான காலத்தில் விடுதலைப்புலிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மானுடத்துக்கான ஒன்றுகூடல் நிகழ்வானது, மானிடத்தின் குரலாக தமிழர்களது உரிமைகளுக்கான
ஒலித்திருந்தனை நினைவூட்டிய நீதிக்கான கனேடிய தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு பிரதிநிதி திருமுருகவேந்தன்,
தியாகி திலீபன் காலத்தில் யாழ் பொம்வெளி, புதிய சோனகதெரு, ஒஸ்மேனியே கல்லூரி உட்பட ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட கூட்டங்களையும் ஞாபகப்படுத்தினார்.
1957ம் ஆண்டு சிறிலங்கா சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழரசுகட்சியினால் மேற்கொள்ளப்பட்ட
கதவடைப்பு போராட்டத்தினை வெற்றிகரமாக நடாத்துவதற்கு முஸ்லீம்கள் துணைபுரிந்த சம்பவத்தினை குறித்துரைத்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்
, தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்கலா தன்னாட்சி அதிகார சபை வரைவில், முஸ்லீம் மக்களது தனித்துவம் அதில் அங்கீகரிக்கப்பட்டு, சிறிலங்காவின் யாப்பினையும் விட,
அதிகளவான உரிமைகள், அதிகாரங்கள் அந்த வரைவில் உள்ளடக்கப்பட்டிருந்ததனையும் குறித்துரைந்தார்.
இவ்வாறு யாழ் முஸ்லீம் இளைஞர் கழகப் பிரதிநிதி அப்துல்லா அவர்களது தோழமையினை பலரும் உற்சாகத்தோடு
வரவேற்றிருந்ததோடு, தாயக மக்களது எழுச்சிப் போராட்டத்துக்கான தமது உறுதுணையினை வெளிப்படுத்தியிருந்தனர்.
2009 இற்கு பின்னர் பொங்கிய எழுந்த தமிழர்கள்
2009 இற்கு பின்னர் பொங்கிய எழுந்த தமிழர்கள்
தமிழீழத்தில் சமகாலத்தில் கடுகதியாக திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டுவரும்
தமிழின அழிப்பிற்கு எதிராக தமிழீழத்தின் வடக்கும் கிழக்கும் ஓரணியில் திரண்டு,
இலட்சிய வேட்கை மேலோங்க, பேதங்கள் புதையுற தன்னெழுச்சிகொண்டு முன்னெடுக்கும் போராட்டத்தை தமிழர் இயக்கம் வரவேற்கின்றது.
அனைத்துலக அரங்கில் தொடர்ச்சியாக உறுதி தளராது போராடுவதற்கான உத்வேகத்தையும் இப்போராட்டம்
வழங்கியுள்ளது. தமிழீழத்தில் இடம்பெற்றது, இடம்பெற்றுக்கொண்டிருப்பது திட்டமிட்ட தமிழின அழிப்பு என்ற
கருத்தியலை சமரசமற்று முன்னெடுத்துவரும் தமிழர் இயக்கம் எமது எதிரிகளால் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. பல
சந்தர்ப்பங்களில் எமது நிலைப்பாடு தாயக மக்களின் நிலைப்பாடு அல்ல என்று
பெரும்பாண்மை அனைத்துலக சமூகத்தாலும், ஏன் சில தமிழ் தரப்புக்களினாலும் ஓரம்கட்டபட்ட வரலாறும் இடம்பெற்றது.
ஆனால் அவற்றை எல்லாம் பொய்ப்பித்து இடம்பெற்றது தமிழின அழிப்பு என்று தாயகம் வானதிர இடித்துரைக்கும் பிரகடனமாக
இப்போராட்டம் திகழ்வதுடன், தாயக மக்களின் ஆழ்மன விருப்புடன், அவர்களும் நாமும் ஓர் கோரிக்கையில் ஓர் தாய்
பிள்ளைகளாக பயணிக்கின்றோம் என்ற ஒரு செய்தியை இப்போராட்டம் உலகிற்கு கட்டியம் கூறி நிற்கின்றது. வெடித்த
நிலத்தில், அழித்த நிலத்தில் இனி ஏதும் முளைக்காது என பகல்கனவு கண்ட பலரின் எண்ணங்களில் “ போராட்டம் நீள்கிறது” என்ற வரலாற்றுச் செய்தியை பறைசாற்றியுள்ளது.
இப்போராட்டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகளை தமிழர் இயக்கம் பன்மொழிகளில் அனைத்துலக சமூகத்திற்கு அனுப்பிவைத்துள்ளதுடன் போராட்டத்தினை நிறுத்தும், அடக்கும்
வகையில் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தினால் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பாகவும் ஐ.நா வின்
பிரதிநிதிகள், உறுப்பு நாடுகள் உற்பட பன்னாட்டு இராசதந்திர மட்டங்களிற்கும் தொடர்ச்சியாக அறிக்கைகளை அனுப்புவதன் ஊடாக தெரியப்படுத்தியவாறே இருக்கின்றோம்.
ஓர் திருப்புமுனையாக அமையும் இப்போராட்டத்தில் தாயக உறவுகள் பெருந்திரட்சிகொள்ளுமாறு வேண்டுவதுடன்
உலகத்தமிழர்களும் தமது தார்மீக ஆதரவை வழங்குமாறு அன்புரிமையுடன் வேண்டுகின்றோம்.
வெல்வது உறுதி
தமிழர் இயக்கம்
கிளிநொச்சியைச் சென்றடைந்த பேரணி
கிளிநொச்சியைச் சென்றடைந்த பேரணி
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி மன்னாரிலிருந்து
வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நகர் வந்தடைந்து மாங்குளம்
ஊடாக முறிகண்டி வந்தடைந்து இன்று மாலை கிளிநொச்சியை வந்தடைந்தது.
இப்பேரணியானது இரவு கிளிநொச்சியில் தங்கி நாளை காலை 8.00 மணியளவில்
கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணம்
சென்றடையவுள்ளது.
லண்டனில் துப்பாக்கி சூடு இருவர் படுகாயம்
லண்டனில் துப்பாக்கி சூடு இருவர் படுகாயம்
இங்கிலாந்து Rinmore Drive area of Derry பகுதியில் நேற்று சனிக்கிழமை
துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது ,இதில் இருவர் பலத்த காயமடைந்த
நிலையில் மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
இந்த சம்பவம் ஏன் இடம்பெற்றது என்பது தொடர்பில் போலீசார் எதனையும்
தெரிவிக்கவில்லை ,தொடர்ந்து புலன் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
குறித்த தாக்குதல் தொடர்பாக அந்த பகுதி பாராளுமன்ற
உறுப்பினர் கடும் கண்டம் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது
சினோவில் மிதக்கும் பிரிட்டனின் ஒரு பகுதி – மஞ்சள் எச்சரிக்கை
சினோவில் மிதக்கும் பிரிட்டனின் ஒரு பகுதி – மஞ்சள் எச்சரிக்கை
பிரிட்டனின் ஒரு பகுதியான மத்திய Scotland’s பகுதியில் 20 cm அளவுக்கு
பனிமழை கொட்டியுள்ளது ,
தொடர்ந்து பனிமழை பொழிவு நாடு தழுவிய ரீதியில் அதிகம்
பாதிப்பு இருக்கும் எனவும் ,இதனால் தற்போது மஞ்சள் எச்சரிக்கை
விடுக்க பட்டுள்ளது
பனிமழை பொழிவுடன் கடும் மழையும் இடம் பெறும் எனவும் தெரிவிக்க படுகிறது
நச்சுக் குண்டில் கருகிய 18 மாத சிசு – தொடரும் இன அழிப்பு -படுகொலை
நச்சுக் குண்டில் கருகிய 18 மாத சிசு – தொடரும் இன அழிப்பு -படுகொலை
சிரியாவின் வடக்கு இட்லிப் பகுதியில் எதிரி இராணுவம் நடத்திய நச்சு
குண்டு தாக்குதலில் சிக்கி 18 மத சிசு ஒன்று பலத்த
எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளது
இதே தினத்தில் இது போல பலநூறு மக்கள் படுகாயமடைந்து இறந்துள்ளனர்
இதுவரை சிரியாவில் இடம்பெற்று வரும் பல் நாட்டு படைகளின் ஒருங்கிணைத்த
தாக்குதல் காரணமாக சுமார் பாத்து மில்லியனுக்கு மேற்பட்டாட்ட மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்
தொடரும் இனப் படு கொலைகள் ,அகதிகள் அவலம் என்பனவற்றுக்கும்
என்று முற்று புள்ளி வைக்க படும் என்பதே மக்களின் ஏக்கமாக உளள்து ,
ஆனால் சிரியாவோ சர்வதேச இராணுவ போர்க்களமாக மாற்றம் பெற்றுய் வருகின்றமை குறிப்பிட தக்கது
லண்டன் குறைடன் பகுதியில் கத்தி வெட்டு ஒருவர் பலி -10 பேர் காயம்
லண்டன் குறைடன் பகுதியில் கத்தி வெட்டு ஒருவர் பலி -10 பேர் காயம்
தெற்கு லண்டன் குறைடன் பகுதியில் நடந்த பரவலான பல்வேறு பட்ட
கத்தி வெட்டு தாக்குதலில் சிக்கி ஒருவர் பலியாகியும் பாத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்
இதில் இருவர் மிக ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம்
உள்ளனர் ,மேற்படி குற்ற சம்பவத்தை புரிந்த எவரும் இதுவரை கைது
செய்யப்படவில்லை ,என்னும் தீவிர விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது
இந்த தொடர் வெட்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களை விரைவில்
போலீசார் கைது செய்து விடுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது
சாப்பாட்டை குப்பை வாளிக்குள் வீசிய டிலிவரி டிரைவர்-காட்டி கொடுத்த கமரா
சாப்பாட்டை குப்பை வாளிக்குள் வீசிய டிலிவரி டிரைவர்-காட்டி கொடுத்த கமரா
Gousto customer பெண் ஒருவர் ஐம்பது பவுண்டுகள் பெறுமதியான உணவை
ஆதார் செய்துள்ளார் ,குறிப்பிட்ட நிமிடங்கள் கழித்து அவரது கைபேசிக்கு
உணவு வினியோகிக்க பட்டுள்ளது என குறும் செய்தி சென்றுள்ளது ,
அதனை பார்த்து அதிர்ந்து போன பெண் , அவர் வாசலை பார்த்துள்ளார் ,
அங்கு உணவை காணவில்லை ,வீட்டு வாசலுக்கு வந்த சாரதி தமது வீட்டு
கதவையே அன்றி அயல் வீட்டு கதவை அல்லது அயல் வீட்டு வாசலிலோ உணவை வைக்கவில்லை .
இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண்மணி அயலவர் வீட்டில்
உள்ள கமராவை சோதனை செய்து பார்க்கும் படி தெரிவித்துள்ளார்
அப்பொழுது அதிர்ச்சி காத்திருந்தது ,சாரதியாக வந்த டிலிவரி பெண்மணி
ஐம்பது பவுண்டுகள் பெறுமதியான உணவை அங்குள்ள குப்பை தொட்டில் வீசும் நிலையை கண்டுள்ளனர்
குறித்த விடயத்தை குறித்த உணவு வினியோக நிறுவனத்திற்கு தெறிவித்துள்ளனர் ,
அவர்கள் வாடிக்கையாள பெண்மணி பொய் கூறுவது என எண்ணியுள்ளனர் .
காணொளி ஆதார விடயம் மற்றும் அதனை வழங்கிய நிலையில்; குறித்த
நிறுவனம் விசாரணையில் இறங்கியுள்ளது ,மேற்படி விடயம்
முக்கிய ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்த குற்ற செயலை புரிந்த சாரதி பெண்மணி நீதிமன்றில் நிறுத்த படும் நிலை
உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,இப்படியும் டிலிவரி சாரதிகள் இருக்கத்தான் செய்கின்றனர்
லண்டனில் இரகசிய பாட்டி – மடக்கிய போலிஸ் – 34 ஆயிரம் தண்டம்
லண்டனில் இரகசிய பாட்டி – மடக்கிய போலிஸ் – 34 ஆயிரம் தண்டம்
லண்டனில் நிகழ்கால நோயின் பரவலை அடுத்து மக்கள் ஒன்று கூடுதலுக்கு
பலத்த தடை விதிக்க பட்டுள்ளது ,ஆனால் லண்டன் புறநகர் பகுதியான
யோர்க்ஷிரே yorkshireபகுதியில் , இரகசிய இடம் ஒன்றில் ,ஒன்று
கூடிய நூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் இணைந்து பட்டி ஒன்றை வைத்துள்ளனர்
இதனை முகர்ந்து பிடித்த போலீசார் திடீரென சுற்றிவளைத்தனர்
அதில் அங்கு கலந்து கொண்ட அணைவருக்கும் தண்டம் அறவிட பட்டது ,.
இதன் மொத்த தொகை முப்பத்தி நான்காயிரம் பவுண்டுகளுக்கு
மேல் என தெரிவிக்க படுகிறது
முல்லைத்தீவில் துறைமுகம் அமைக்க சீனா முஸ்தீபு
முல்லைத்தீவில் துறைமுகம் அமைக்க சீனா முஸ்தீபு
முல்லைதீவு பகுதியில் பெரும் கோட்டை துறைமுகம் ஒன்றை இஸ்தாபிக்க
சீனாவுடன் இலங்கை இரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளது .திருமலை
,காங்கேசன்துறையை போன்று இந்த துறைமுகத்தை வரலாற்று கேந்திர
முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைக்க திட்டம் இடப்பட்டு வருகிறது
மேற்படி சீனாவின் இந்த திட்டத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவிக்கும்
என எதிர்பார்க்கலாம் , ,அதையும் மீறி சீனாவுடன் இலங்கை
இணைந்து இதனை உருவாக்கும் என்றே உட் கசிவுகள் தெரிவிக்கின்றன
இந்தியா எங்கள் நண்பன் – மகிந்தா குத்துக்கரணம்
இந்தியா எங்கள் நண்பன் – மகிந்தா குத்துக்கரணம்
இந்தியா எங்கள் உற்ற நண்பன் என ஆளும் இலங்கை பிரதமர் மகிந்த
தெரிவித்துள்ளார் ,சீனாவுடன் மிக நெருக்கமாக உலாவி வரும் இலங்கையின்
இந்த அரசியல் பந்து வீச்சில் சிக்கி இந்தியா மண்டையை பிய்த்து கொண்டுள்ள
நிலையில் ,தற்போது மோடியின் நெஞ்சுக்கு பால்வாக்கும் நிலைக்கு மகிந்த
சென்றுள்ளது மிக பெரும் ஆப்பு இந்தியாவுக்கு வைக்க இவர்கள் திட்டமிட்டுள்ளதாக குசும்பர்கள் பேசி வருகின்றனர்
இலங்கையில் கொரனோவால் 343 பேர் மரணம்
இலங்கையில் கொரனோவால் 343 பேர் மரணம்
இலங்கையில் அதிகரித்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி இதுவரை 343 பேர் பலியாகியுள்ளனர்
அதே தினம் மேலும் பாதிக்க பட்ட நிலையில் நானூருக்கு
மேற்பட்டவர்கள் அடையாளம் காண பட்டுள்ளனர்
இலங்கையில் இடம் பெறும் இந்த நோயின் மரணங்களை ஆளும்
கோட்டா அரசு மூடி மறைத்து வருவதான குற்ற சட்டு வலுத்து
வருகின்றமை குறிப்பிட தக்கது
அடக்குமுறை அரசு, போராட்டத்தை நோக்கி தமிழ் பேசும் மக்களை தள்ளுகிறது-மனோ கணேசன்
அடக்குமுறை அரசு, போராட்டத்தை நோக்கி தமிழ் பேசும் மக்களை தள்ளுகிறது
பொத்துவில்-பொலிகண்டி போராட்டம் தொடர்பில் மனோ கணேசன்
தமிழ் பேசும் இலங்கையர்களின் தேசிய இருப்பை அழித்தொழிக்கும், ஒடுக்குமுறை ராஜபக்ச அரசு, தமிழ் மொழியை
பேசுகின்ற, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மதங்களை கடைபிடிக்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களை ஜனநாயக
போராட்டங்களை நோக்கி தள்ளி விட்டுள்ளது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி
தலைவரும், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள்,
சமூக மேம்பாடு, இந்து கலாச்சார அமைச்சருமான மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,
நடப்பு ராஜபக்ச அரசின் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற என்ற கூச்சல் நடைமுறையில், “ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம்”
என்பதில் வந்து நிற்கிறது. இதை நாம் இன்று தெளிவாக புரிந்துக்கொண்டுள்ளோம். இந்த ஏகபோக கொள்கையை நாம்
ஒருபோதும் ஏற்க முடியாது. இதை இந்நாட்டு அரசும், உலகமும் புரிந்துக்கொள்ள வேண்டும்.
உண்மையில் ஒளிவு மறைவு இல்லாமல் இதை இந்த அரசு செய்வதை எண்ணி நாம் மகிழத்தான் வேண்டும். உள்ளொன்று
வைத்து புறமொன்று செய்யவில்லையே, இவர்கள்..! இந்நிலையில் அனைத்து ஜனநாயக சக்திகளையும் அணிதிரட்டி இந்த
அடக்குமுறைகளுக்கு எதிராக, இந்நாட்டில் எமது இருப்பை உறுதி செய்துக்கொள்ள நாம் போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
நீண்டகாலமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய ஜனநாயக போராட்டம் இப்போது ஆரம்பித்திருப்பதை எண்ணி மகிழ்கிறேன்.
இந்த இலங்கை திருநாடு, “பன்மொழி, பன்மத, பல்லின” அடிப்படையை கொண்ட பன்மைத்துவ நாடு என்ற இலக்கு அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும் வரை இந்த போராட்டம் தொடர வேண்டும்.
இந்நாட்டின் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற பங்கும், இன்றைய இலங்கை நாட்டின் ஆட்சியுரிமை, இறைமை
ஆகியவற்றில் தமிழ் பேசும் மக்களுக்கு இருக்கின்ற மறுக்கப்பட முடியாத உரிமையும் உறுதிப்படுத்தப்படும்வரை இப்போராட்டம் தொடர வேண்டும்.
தமிழ் பேசும் மக்களையும் உள்ளடக்கியதே இலங்கை நாடு என்ற அடிப்படை உண்மையை சிங்கள முற்போக்கு சிந்தனையாளர்கள் ஏற்றுக்கொண்டு கண் திறக்கும்வரை இப்போராட்டம் தொடர வேண்டும்.
இதுவே ராஜபக்ச ஆட்சியின் “ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே இனம், ஒரே மதம், ஒரே மொழி” என்ற கொள்கைக்கு உரிய தர்க்கரீதியான அரசியல் பதிலாகும்.
இந்த ஜனநாயக போராட்டத்துக்கு எமது ஆதரவை நல்குகிறோம். ஜனநாயக போராட்ட களத்தில் நிச்சயமாக நாம் கரம் கோர்ப்போம்
.







