Posted in Uncategorized

யாழில் தொடரும் உண்ணாவிரத போராட்டம்

யாழில் தொடரும் உண்ணாவிரத போராட்டம்

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் நீதி வேண்டிய உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில், அம்பாறை மாவட்ட இளைஞர்கள் சிலரும் இணைந்துகொண்டு தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தனர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் 15 ஆவது நாளாக நேற்றும் (14) தொடர்ந்தது.

நீதி வேண்டிய இந்தப் போராட்டம், நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

அதில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மதத் தலைவர்களெனப் பலரும் தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

போராட்டத்தை முன்னெடுப்போர் “ஸ்ரீ லங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் ஊடாக, ஸ்ரீ லங்கா அரசால் புரியப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் மனித

நேயத்துக்கு எதிரான குற்றங்கள், தமிழ் இனத்துக்கு எதிராக இனவழிப்பு என்பவற்றுக்கு சர்வதேச நீதி வேண்டும். தமிழ் இனத்தின் மீதானா இனவழிப்பு தொடராது இருப்பதற்கு, தமிழ் மக்களின்

நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசியம் என்பன அங்கிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளையே முன்வைத்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

மரண வீட்டுக்கு சென்று வீடு திரும்பிய இருவர் மரணம்

மரண வீட்டுக்கு சென்று வீடு திரும்பிய இருவர் மரணம்

மதவாச்சி பிரதான வீதி ஊடாக ஊந்துருளியில் பயணித்து கொண்டிருந்த இருவர் வண்டியின் வேக கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதி சிதறியதில் அதனை செலுத்தி சென்றவர் சம்பவ

இடத்தில பலியானார் ,மற்றவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பலியாகியுள்ளார்

இவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது

Posted in Uncategorized

தீயில் எரிந்த 50 வீடுகள் – கண்ணீரில் குடும்பங்கள்

தீயில் எரிந்த 50 வீடுகள் – கண்ணீரில் குடும்பங்கள்

இலங்கை கஜிமா வத்த பகுதியில் உள்ள குடியிருப்பு திட்டத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணாமாக ஐம்பது வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின


இந்த தீப்பரவலை படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்ட பொழுதும் அவை தீயில் எரிந்து அழிந்துள்ளன

பாதிக்க பட்ட குடும்பங்கள் கண்ணீரில் தத்தளித்து வருகின்றன

இந்த தீ விபத்து தொடர்பான விசாரணைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான சட்டப்போராட்டம் குறித்து டெய்லி மெயில் செய்தி

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான சட்டப்போராட்டம் குறித்து டெய்லி மெயில் செய்தி

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வரும் சட்டப் போராட்டம் குறித்து,

செய்திக்குறிப்பொன்றினை வெளியிட்டுள்ள டெய்லி மெயில் பத்திரிகை, தடையினை மீளாய்வு செய்யுமாறு உள்துறை அமைச்சர் ப்ரீதி பட்டேலிற்கு விசேட தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது தெரிவித்துள்ளது.

2000ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன அமைப்பான தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இந்த உத்தரவை வழங்கியுள்ளதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

மேலும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் 1978 இல் உருவாகிய இந்த பிரிவினைவாத அமைப்பு தற்கொலை அங்கியை உருவாக்கியது என சர்வதேச அளவில் கருதப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இந்த அமைப்பை 2001 இல் பிரிட்டன் தடை செய்தது.

எனினும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற இந்த அமைப்பு தடைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது.

விடுதலைப்புலிகள் தற்போது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் பிரிட்டனில் பயங்கரவாதம் குறித்து ஆய்வு செய்துவரும் கூட்டு பயங்கரவாத ஆய்வு நிலையம் விடுதலைப்புலிகள் பயங்கரவாதத்தினை இன்னமும் கைவிடவில்லை என்பதால் தடை தொடரவேண்டும் என தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளிற்கு எதிரான தடையை நீடிப்பதற்கான காரணங்களில் குறைபாடுகள் உள்ளதால் உள்துறை அமைச்சர் தடை குறித்து மீளாய்வு செய்யவேண்டும் என சுயாதீன அமைப்பான தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

தடையை நீக்குவதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

நாங்கள் சுயாதீன அமைப்பான தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ள அவர் அதுவரை விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாகவே விளங்கும் எனவும் டெய்லி மெயில் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

காணாமல் போன இளைஞன்-காயங்களுடன் மீட்பு

சிவனொளிபாதமலைக்கு வந்து காணாமல் போன இளைஞன் ஒருவரரை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மீட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

அனுராதபுரத்தை சேர்ந்த 32 வயதுடைய இளைஞனே இன்று காலை 10 .30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், அனுராதபுரத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கு சென்று திரும்பிய 07 இளைஞர்கள் நேற்று கொத்மலை ரம்பொடை ஆற்றுப்பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கி இரவு மதுபானம் அருந்தியுள்ளனர்.

இந் நிலையில் மதுபோதையிலிருந்த குறித்த இளைஞன் இன்று அதிகாலை 01 மணியளவில் விடுதியின் மேல்மாடி ஜன்னல் வழியாக வெளியில் குதித்து காட்டுப்பகுதிக்குள் ஓடியுள்ளார்.

இவ்வாறு சென்ற இளைஞனை கண்டு பிடிக்க கொத்தமலை பொலிஸாரும் அதிரடிபடையினரும் காட்டுப்பகுதிக்குள் தேடுதலில் ஈடுட்ட நிலையிலே ரம்பொடை ஆற்றுப்பகுதியின் கற்பாறையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

காயங்களுடன் சுயநினைவற்ற நிலையில் மீட்ட இளைஞன் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

Posted in Uncategorized

சிங்கள அரசிற்கு ஐநாவில் ஆப்படிக்க வேண்டுமாம் – சிங்கள பால்குடி சுமந்திரன் கூவல்

சிங்கள அரசிற்கு ஐநாவில் ஆப்படிக்க வேண்டுமாம் – சிங்கள பால்குடி சுமந்திரன் கூவல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வில் இடம்பெற்று வரும் கூட்ட தொடரில் இலங்கை தொடர்பான பிரேரணை நிரைவேற்ற பட வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார்

சிங்கள பால் குடித்து வசித்து அதே சிங்களத்திற்கு சேவகம் புரிந்து வரும் சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளது தமிழ் மக்கள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது

ஐநாவுக்கு சென்று இலங்கையை காப்பாற்றும் நகர்வில் ஈடுபட்ட இவர் உள்ளே மாப்பிள்ளையாகவும் ,வெளியே மக்கள் மத்தியில் கீரோ வேஷம் போடுவதை மேற்படி சம்பவங்கள் அப்பட்டமாக தோல் உரித்து காட்டுகின்றன

சிங்கள பால்குடி சுமந்திரன் என்று திருந்துவீர்கள் …?

Posted in Uncategorized

பொலிஸ் வேட்டையில் -சங்கிலி திருடன் சிக்கினார்

பொலிஸ் வேட்டையில் -சங்கிலி திருடன் சிக்கினார்

இலங்கை வரகாபொல பகுதியில் வைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வந்த நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்

பெண்களை இலக்கு வைத்து அவர்களின் தங்க சங்கிலிகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து வந்த வழிப்பறி கொள்ளையனே இவ்வாறு சிக்கியுள்ளார்

கைதானவரிடம் தொடந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

மேற்படி பகுதியில் மக்கள் நட மாற்றத்துக்கு பெரும் அச்சுறுத்தல் விடுத்தது வந்த நபரே இவ்விதம் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

ஜெனீவா, அத்தனை சந்தேகங்கள், கேள்விகள், கருத்துக்கள் ! யாவற்றுக்கும் தெளிவுரை கூறவருகின்றார் பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

ஜெனீவா, அத்தனை சந்தேகங்கள், கேள்விகள், கருத்துக்கள் ! யாவற்றுக்கும் தெளிவுரை கூறவருகின்றார் பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் சிறிலங்காவை பாரப்படுத்துவதன் ஊடாகவே பொறுப்புக்கூற வைக்க முடியும் என்பதோடு, இனப்படுகொலைக்கான பரிகாரநீதி நீதிக்காக தமிழர் தேசம்

போராடிவரும் இவ்வேளையில், ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பிலான தீர்மான வரைவு வாக்கெடுப்பினை நோக்கி முன்வைக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தின் நிலை என்ன ? சர்வதே குற்றவியல் நீதிமன்றுக்கான ஆதரவு இல்லையா ? அடுத்த கட்டம் என்ன ? இப்படி ‘ஜெனீவா’ தொடர்பில் உள்ள ஆயிரம் ஆயிரம் கேள்விகள்,

கருத்துக்கள், சந்தேகங்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெளிவுரை வழங்க இருக்கின்றார்.

இணையவழியே இடம்பெற இருக்கின்ற இக்கூட்டமான ZOOM செயலிமூலம் இடம்பெறுவதோடு, www.tgte.tv வலைக்காட்சி உட்பட பல்வேறு உலகத்தமிழ் ஊடகங்கள், சமூகவலைத்தளங்கள் ஊடாக நேரஞ்சலாக ஒளிபரப்பாக இருக்கின்றது.

ஞாயிறு 14-03-2021, US and Canada time:3.30 pm (Eastern Time) ,UK time: 7.30 pm, EU time: 8.30 pm மணிக்கு இடம்பெறுகின்ற இக்கூட்டத்தில் நேரடியாக https://us02web.zoom.us/j/81061037948?pwd=ZzduWWE0MFNLY2NYckxBNElpWDRUZz09 இந்த இணைப்பின் மூலம் பங்கெடுத்துக் கொள்ள முடியும்.

Posted in இலங்கை செய்திகள்

பூசாரி போல வேடமிட்டு போதைவஸ்து விற்ற நபர்கள் கைது

பூசாரி போல வேடமிட்டு ஹெரோயின் போதை பொருள் விற்பனை செய்த இருவரை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாவலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய போதைப்பொருள் வாங்குபவர் போல வேடமிட்டு பொலிஸ் அதிகாரி ஒரு குறித்த இடத்திற்கு சென்றே மேற்படி இருவரையும் இன்று

(13) பிற்பகல் கைது செய்துள்ளதுடன் குறித்த பெண்ணிடமிருந்த 140 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கம்பளை அட்டபாகை பகுதியை சேர்ந்த 67 வயதுடைய ஆணும் நாவலப்பிட்டி இங்குருஓயா சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு பூசாரி போல் நடித்து நாவலப்பிட்டி நகரிலுள்ள

கடையொன்றில் சூட்சமமாக நீண்ட காலம் ஈ.சி.கேஷின் ஊடாக பணம் பெற்று ஹெரோயின் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபரையும் நாவலபிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதாக நாலவப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்

Posted in Uncategorized

ஓமானில் விபச்சாரம் புரிந்த இலங்கை பெண் கைது

ஓமானில் விபச்சாரம் புரிந்த இலங்கை பெண் கைது

ஓமானில் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட பல பெண்களை பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடுத்தியதாக
மஹியாங்கனாவைச்

சேர்ந்த ஒரு பெண் வெளிநாட்டு வேலைவாய்ப்பு
பணியகத்தின் சிறப்பு விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டார்.

கைதான பெண் தொடர் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்

Posted in Uncategorized

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இலங்கை விவகாரம்

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் அர்ப்பணிப்பு குறித்த
பொது விவாதத்தை நடத்துவார்கள் என்று இங்கிலாந்து நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.

போர்முடிவடைந்து 12 வருடங்கள் கழிந்த நிலையிலும் இதுவரை பாதிக்க பட்ட தமிழர்களுக்கு எதுவித தீர்வும் எட்டப்படவிவில்லை என்பது குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

கூட்டமைப்பு இந்தியாவுக்கு இடையில் இன்று அவசர பேச்சு

கூட்டமைப்பு இந்தியாவுக்கு இடையில் இன்று அவசர பேச்சு

இந்தியாவுக்கும் ,தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் இன்று அவசர சந்திப்பு ஒன்று இடம் பெறுகிறது

இந்த சந்திப்பில் இலங்கையின் சமகால அரசியல் நிலை தொடர்பாக பேச படும் என எதிர்பார்க்க படுவதுடன் ,ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வில் இந்தியாவின் காத்திரமான செயல்பாடுகள் தொடர்பாகவும் பேச படும் என எதிர்பார்க்க படுகிறது

கோட்டாவின் நேரடி உளவாளி சுமந்திரன் இந்த பேச்சில் ஈடுபடவுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in Uncategorized

இலங்கையில் முஸ்லீம்கள் முக்காடு போட வருகிறது தடை

இலங்கையில் முஸ்லீம்கள் முக்காடு போட வருகிறது தடை

இலங்கையில் ஆளும் சிங்கள பவுத்தமத வாதிகளின் கடும்போக்கு நிலை காரணமாக இலங்கையில் வாழும் முஸ்லீம்கள் முக்காடு போட தடை வருகிறது

இது தொடர்பான புதிய பிரேரணை ஒன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்க படவுள்ள நிலையில்

,பிரான்ஸ்,சுவிசை போன்று இலங்கையிலும் இந்த தடை ஏற்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள பட்டு வருகின்றன

Posted in இலங்கை செய்திகள்

10 மில்லியன் போதைவஸ்துடன் பெண் கைது

10 மில்லியன் போதைவஸ்துடன் பெண் கைது

இலங்கை Thalagala in Homagama பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்க பட்டிருந்த நிலையில் பத்து மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைவஸ்து மீட்க பட்டுள்ளது

விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் பொழுது இந்த போதைவஸ்து மீட்க பட்டுள்ளது ,கைதான பெண் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

Posted in Uncategorized

மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று (13) முதல் கொவிட் தடுப்பூசி வழங்கப்படுவத்றகான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு மாநகர சபையின் தலைமை சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண முதியோர் இல்லங்களில் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

நாடு திரும்பும் இலங்கையர் கட்டாய 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்-மனோ

தாம் வாழ்ந்த நாட்டில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று, நாடு திரும்பும் இலங்கையர்களை 14 நாள் கட்டாய தனிமைக்காக, அரசு நடத்தும் நிலையங்களுக்கோ அல்லது சொந்த நிதியை

செலுத்த சொல்லி ஐந்து, மூன்று நட்சத்திர விடுதிகளுக்கோ அனுப்பப்படக்கூடாது. இந்த நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவர்களது சொந்த வீடுகளில் சுயதனிமைக்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

இந்த யோசனைபற்றி கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபிள்ளைஇடம் வினவிய போது, இன்னமும் இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என நேற்று பாராளுமன்றத்தில் அவர் என்னிடம் தெரிவித்தார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியதாவது,

தொழில் காரணமாகவோ அல்லது விடுமுறை நோக்கிலோ வெளிநாடு சென்றுள்ள இலங்கையர், தாம் இன்று வாழும் நாட்டில் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்று இருப்பார்கள் எனில், அவர்கள் இன்று தாய் நாடு திரும்பும் போது, அவர்களை தமது சொந்த வீடுகளிலேயே சுய தனிமைக்கு உள்ளாக்க வேண்டும்.

ஐந்து, மூன்று நட்சத்திர விடுதிகளில் தங்க வைப்பது, அதற்கான கட்டண நிர்ணயம், வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் விமான பயணசீட்டு கட்டணம் ஆகியவவை தொடர்பில் பெரும் திட்டமிட்ட முறைகேடுகள் நடைபெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதுபோல், அரசு நடத்தும் நிலையங்களில் நாட்கள் தங்க வைக்கப்படும் நாடு திரும்பும் இலங்கையர்களும், அங்கே முறையாக கவனிக்கப்படுவதில்லை. எல்லா இடங்களிலும் முறைகேடுகள் இடம்பெறுகின்றன.

இவற்றால், வெளிநாடுகள் சென்று உழைத்து அதன்மூலம் இந்நாட்டுக்கு அந்நிய செலவாணியை பெற்று தந்து, இன்று தொழில் இழந்து, பெரும் பொருளாதார சிக்கல்களில் மாட்டி இருக்கும் நம் நாட்டு மக்கள் பெரும் அவதியில் தள்ளப்பட்டுள்ளனர்.

நோயுற்றவர்கள் உடனடியாக வைத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். ஏனையோர் சொந்த வீடுகளில், கண்காணிப்பின் கீழ் சுய தனிமைக்கு உள்ளாகப்பட வேண்டும். உலகின்பல நாடுகளில் இந்த முறை இப்போது அமுலுக்கு வந்துள்ளது.

எனது இந்த யோசனைபற்றி கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபிள்ளைஇடம் வினவிய போது, இதுபற்றி, இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அவர் நேற்று பாராளுமன்றத்தில் என்னிடம் தெரிவித்தார்

எது எப்படி இருந்தாலும், நம் நாட்டு அப்பாவி மக்களின் நிர்க்கதி நிலைமையை பயன்படுத்தி பணம் பண்ணும் கோஷ்டிகளுக்கு இடம் அளிக்கும் முறையில் அரசின் சட்ட திட்ட விதி முறைகள் ஒருபோதும் அமைய கூடாது.

Posted in Uncategorized

கடல் வழியாக வெளிநாடு செல்ல முற்பட்ட 24 நபர்கள் கைது

கடல் வழியாக வெளிநாடு செல்ல முற்பட்ட 24 நபர்கள் கைது

கல்பிட்டி குரக்கன்ஹேன பகுதியில் நேற்று ( 11) நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டிற்கு குடியேறத் தயாரான 24 பேரை கடற்படை கைது செய்தது.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மேற்கொண்ட இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, கல்பிட்டி குரக்கன்ஹேன பகுதியில் கல்பிட்டி களப்புக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரி வண்டியொன்று சோதனை செய்யப்பட்டதுடன் லாரி வண்டிக்குள் இருந்

த சந்தேக நபர்களிடம் கடற்படையினர் விசாரணை மேற்கொண்டனர் அப்போது குறித்த லாரி வண்டி சாரதியுடன் 24 நபர்கள் இலங்கையிலிருந்து வேறொரு நாட்டிற்கு குடிபெயரத் தயாராகி கல்பிட்டி களப்பு பகுதியில் இருந்து ஒரு படகு வரும் வரை காத்திருப்பது தெரியவந்ததால், அந்தக் குழுவும் லாரி வண்டியும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடற்படையால் கைது செய்யப்பட்ட 24 நபர்களின் 20 ஆண்கள், ஒரு பெண் (01), இரண்டு பெண் குழந்தைகள் (02) மற்றும் ஒரு சிறுவன் (01) உள்ளனர். இவர்களில் 09 பேர் மட்டக்களப்பு பகுதியிலும்

, 6 பேர் யாழ்ப்பாணம் பகுதியிலும், 05 பேர் முல்லைதீவு பகுதியிலும், 03 பேர் திருகோணமலை பகுதியிலும், லாரியின் சாரதி புத்தலம் பகுதியிலும் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த கடத்தலைத் திட்டமிட்ட நபரும் இந்தக் குழுவில் இருப்பதாக கடற்படை சந்தேகப்படுகிறது.

இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் அவர்களது லாரி வண்டியும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதற்கிடையில், கடலில் இதுபோன்ற சட்டவிரோத இடம்பெயர்வு முயற்சிகளைத் தடுக்க கடற்படை தொடர்ந்து தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

Posted in Uncategorized

நீராடச் சென்ற மாணவன் மாயம்- தேடும் பொலிஸ்

நீராடச் சென்ற மாணவன் மாயம்- தேடும் பொலிஸ்

மஹவெல பொலிஸ் பிரிவில் அங்கந்த மின் உற்பத்தி நிலையத்துக்கு அருகில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

நேற்று (11) முற்பகல் 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் உயிர்பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் பிரதேசவாசிகளுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

16 வயதுடைய மாணவன் மற்றும் 26 வயது இளைஞன் ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளதுடன், அவர்கள் தலுபோத்தகம பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Posted in இலங்கை செய்திகள்

யாழ் – சென்னை விமான சேவைகள் மீள ஆரம்பம்

யாழ் – சென்னை விமான சேவைகள் மீள ஆரம்பம்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் மற்றம் சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் விரைவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை கூறியுள்ளார்.

அத்துடன், இரத்மலானை – யாழ்ப்பாணம் – மட்டக்களப்பு இடையிலான உள்ளக விமான சேவையை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை

16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை

இராகலை தோட்டம் 2ஆம் பிரிவில் 16 வீடுகளைக்கொண்ட தொழிலாளர் குடியிருப்பில் இன்று (12) அதிகாலை 3.45 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

இந்த தீ விபத்தால் அந்த வீடுகளில் குடியிருந்த 14 குடும்பங்களை சேர்ந்த 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆண்கள் 26 பேரும், பெண்கள் 32 பேரும், 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 3 பேரும் அடங்குகின்றனர்.

தீ விபத்தையடுத்து, பொலிஸாருக்கும், தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த நுவரெலியா மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர், மக்களுடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

அப்பகுதியில் மக்கள் குவிந்ததால், சமூக இடைவெளியை பின்பற்றுமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது.

இத்தீவிபத்தால் பெருமளவில் பொருட் தேசங்கள் ஏற்பட்டுள்ளன. வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தோட்ட ஆலயத்தில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவித்த இராகலை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறினர்.