Author: நலன் விரும்பி
வெளிநாடு பறக்கும் மகிந்தா
வெளிநாடு பறக்கும் மகிந்தா
இலங்கை ஆளும் பிரதமர் மகிந்த ராஜபக்சே பங்களாதேஸ் நாட்டுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டு செல்கிறார்
இவரது பயணத்தின் பொழுதுஇரு நாடுகளுக்கு இடையில் அபிவிருத்தி ,மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான ஒப்பந்தங்கள் கைச்சாத்திட படும் என எதிர் பார்க்க படுகிறது
புதிதாக நியமனம் பெற்றுவந்த வைத்தியர்களுக்கு கடிதம் வழங்கி வைப்பு
புதிதாக நியமனம் பெற்றுவந்த வைத்தியர்களுக்கு கடிதம் வழங்கி வைப்பு
கிழக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த ஆயர்வேத வைத்தியர்கள் தங்களின் பயிற்சிகளை
பெற்றுக்கொள்வதற்கான கடிதங்களை கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் வைத்திய காலநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர் நேற்று (16) வழங்கி வைத்தார்.
இந்தக் கடிதங்களைப் பெற்றுக்கொண்ட வைத்தியர்கள் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள மருந்து உற்பத்திப் பிரிவுகளுக்கு
நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வைத்தியர்கள் தங்களுக்கான பயிற்சிக் காலங்களில் மருந்து உற்பத்தி நடைமுறை, நிர்வாகம், மற்றும் பதிவேடுகள் தொடர்பான பயிற்சிகளை
பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலேயே திருகோணமலை மாவட்ட கப்பல்துறை மருந்து உற்பத்திப் பிரிவுக்கு 04 பேரும், மட்டக்களப்பு மாவட்ட சத்திரகொண்டான் மருந்து உற்பத்திப்
பிரிவுக்கு 03 பேரும், அம்பாறை மாவட்ட மருந்து உற்பத்திப் பிரிவவுக்கு ஒருவர் என்ற வீதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

இலங்கையில் கொரனோவால் 532 பேர் மரணம் – பரவும் நோய்
இலங்கையில் கொரனோவால் 532 பேர் மரணம் – பரவும் நோய்
இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 532 பேர் மரணமாகியுள்ளனர்
இந்த மரண எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என அஞ்ச படுகிறது
இன்று மட்டும் ஐநூறுக்கு மேற்பட்ட புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
சீனி விற்பனையில் கோட்டா – பல மில்லியன் கொள்ளை -மேகா திருட்டு அம்பலம்
சீனி விற்பனையில் கோட்டா – பல மில்லியன் கொள்ளை -மேகா திருட்டு அம்பலம்
இலங்கையில் ஆளும் ஜனாதிபாதியாக விளங்கும் கோட்டபாயா அத்தியாவசிய பொருட்களாக விளங்கும் சீனி விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்
இறக்குமதி செய்யப்படும் இந்த சீனிக்கு வரி அறவீடு இல்லாது விற்பனை செய்ய படுகின்றன ,82 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டு வரியின்றி 122 ரூபாவுக்கு விற்பனை செய்ய படுகிறது
.இதில் கோட்டா மற்றும் அவரது சகாக்கள் இணைந்து பல ஆயிரம் மில்லியன் ரூபாய்களை ஏப்பம் இட்டுள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது
சீனி பார்த்து ,சீனி விற்கும் சீனியர் கோட்டா ,சீக்கிரம் நடத்தி விற்றிடுங்க சார்
எமது நிலம் எமக்கு வேண்டும் – வெடித்த தமிழர் போர் – வீடியோ
இலங்கை ஆளும் பவுத்த பேரினவாத அரச அடக்குமுறையின் உச்சம் ,தமிழர் இன அழிப்புக்கு நீ
தி கோரி தமிழர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் ,அதன் ஒரு அங்கமாக இங்கு இடம்பெற்றுள்ள இந்த எழுச்சி காட்சிகள்
சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்த கோரி பிரிட்டன் பாராளுமன்றில் விவாதம்
சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்த கோரி பிரிட்டன் பாராளுமன்றில் விவாதம்
இலங்கை சிங்கள பவுத்த பேரினவாத அரசாங்கம் மேற்கொண்ட தமிழ் இன அழிப்புக்கு நீதி கோரி லண்டனில் உண்ணவிரத போராட்டம் இடம்பெற்றது ,உண்ணாவிரதியின் கோரிக்கையை
ஏற்றுக்கொண்ட அதிகார மட்டம் ,நாளை பாராளுமன்றில் இது தொடர்பான விவாதம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது
இந்த வாக்கெடுப்பில் அணைத்து எம்பிகளும் கலந்து ஒண்டு வாக்களிப்பின் பிரேரணையை நிறைவேற்ற பட்டு விடும் ,அதன் பின்னர் ஐநாவில் இலங்கையை குறித்த நாடுகள் நெருக்கடி தருவித்து சர்வதேச நீதிமன்றில் நிறுத்த படும்
எனவே இவ்வேளை தமிழர்களே உங்கள் பகுதி எம்பிகளுக்கு இந்த அஞ்சலை அனுப்பி இதில் காலத்து கொண்டு எமக்கு ஆதரவை தரும் படி வலியுறுத்தி கொள்ளுங்கள் ,
இது தொடர்பான விரிவான பகிர்வுகள் விரைவில்
குறட்டை விடும் வடக்கு ஆளுநர் – கொதிக்கும் மாணவர்கள் – நித்திரையால் எழும்புங்க அம்மணி
குறட்டை விடும் வடக்கு ஆளுநர் – கொதிக்கும் மாணவர்கள் – நித்திரையால் எழும்புங்க அம்மணி
வடக்குமாகாண ஆளுநராக கோட்டாவின் கொத்தடிமையாக செயல் படும் ஒருவர் நியமிக்க பட்டார்
மக்கள் வாழ்விற்கு ஒளியேற்ற வருவதாக வந்து குந்தியை அம்மணி தனது குடும்பத்தை வளர்த்து கொண்டாரே தவிர பாதிக்க பட்டமக்களின் வாழ்வியலில் எவ்வித நடவடிக்கையையும்
மேற்கொள்ளவில்லை ,மேலும் முன் நடவடிக்கை மேற்கொண்டு மக்கள் பிரசனைகளை தீர்க்க முயன்ற எம்பிகளையும் அடக்கி ஒடுக்கும் நகர்வில் இவர் ஈடுபட்டுள்ளார்
கோட்டா போட்டு கொடுக்கும் நிகழ்ச்சி நிரலில் செயல் படும் இவர் ,மாணவர்கள் ,மக்கள் வாழ்வியலில் ஒளியேற்றி அவர்களையும் இணைந்து தம்மோடு அழைத்து செல்லும் நகர்வில் அவர் ஈடுபடவில்லை .இவ்வாறானவர்களை இனம் கண்டு மக்களே தேர்தலில் உங்கள் முன்பாக வந்தால் விரட்டி அடியுங்கள் ,
தமிழர் என்று பேசியவாறு ஆளுநர் பதவியில் குந்தி இருக்கும் இவர் ,தமிழர்களுக்கு உதவிட மறுத்தலும் ,இவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்து இவ்விதம் செயல்படும் நேரத்தை விட்டு ,நஞ்சை குடித்துசெத்து பொங்கல்
இவ்வாறு சமூக வலைத்தளங்களில் வடக்கு ஆளுநரை மக்கள் வறுத்தெடுத்து வருகின்றனர் ,.சூடு சொரணை இருந்தால் தானே இவர் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்பதும் அந்த மக்கள் கருத்துக்களாக உள்ளது
லண்டன் உண்ணாவிரதிக்கு எதிராக கோட்டா அடிமைகள் கொக்கரிப்பு
லண்டன் உண்ணாவிரதிக்கு எதிராக கோட்டா அடிமைகள் கொக்கரிப்பு
லண்டனில் அம்பிகை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை நடத்தி வந்தார் ,அந்த போராட்டம் பிரிட்டன் அரசதரப்பு வழங்கிய உறுதி மொழியின் அடிப்படையில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது
இதன் பொழுது ,அந்த உண்ணாவிரதம் இருந்த தமிழிச்சியை அனைத்துலக கும்பலின் லஞ்ச பணத்தில் கட்சி நடத்தி பிழைப்பு நடத்தி வரும் கயேந்திர குமார் அணியும் ,புலிகள்
உறுப்பினர்கள் என கூறியவாறு சிங்களத்துக்கு விலைபோன கும்பலும் இணைந்து கொச்சை படுத்தும் நகர்வில் ஈடுபட்டுள்ளன
புலிகளின் அமைப்புக்கள் உறங்கும் நிலைக்கு சென்று குறட்டை விட்டு வரும் நிலையில் தன்னெழுச்சியாக இவர் புரிந்த இந்த உண்ணா நோன்பின் ஊடாக மக்கள் செல்வாக்கு பெற்றுவிட்டார் என்பதால் இந்த கொதிப்பில் குறித்த கோட்டா கொத்தடிமைகள் இழிசெயலில் ஈடுபட்டுள்ளன
அவர் சாகாது அந்த உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் என்பதே இவர்கள் ,கவலை , தமிழ் தேசிய அக்கறையில் பேசும் புத்தியீவிகள்,மற்றும் இந்த கட்சியின் தலைவர்கள் ஏன் உண்ணாவிரதம் இருக்கவிலை என்பதே நமது கேள்வியாகும்
இவர் முடிவுக்கு கொண்டு வந்தார் சரி,எங்கே நீங்கள் ஆரம்பியுங்கள் பார்க்கலாம் ,ஏன் அதனை செய்திட மறுக்கின்றீர்கள்..?
அவரை பாராட்டி மேலும் ஊக்கப்படுத்துவதை விட்டு இவ்வாறான கேவல படுத்தும் நிகழ்வில் கோட்டா கொத்தடிமைகள் ஈடுபட்டுள்ளது தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுளளது
உண்ணாவிரத எதிரொலி -இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்திட பிரிட்டன் இந்தியாவுடன் பேச்சு
உண்ணாவிரத எதிரொலி -இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்திட பிரிட்டன் இந்தியாவுடன் பேச்சு
பிரிட்டனில் உண்ணாவிரதம் இருந்த தமிழிச்சி அம்பிகை அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று அதனை நிறைவுவேற்றிட பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் இந்திய வெளியுறவு அமைச்சருடன் இது தொடர்பான பேச்க்களை நடத்தியுள்ளார்
ஐக்கியநாடுகள் மனித உரிமை அவையில் இலங்கை தொடர்பான விடயத்தை இறுக்கமாக்கும் நோக்குடனும் ,பாதிக்க பட்ட தமிழர்களுக்கு தீர்வினை பெற்று கொடுக்கும் முகமாகவும் இந்த பேச்சு இடம்பெற்றுள்ளது
இதற்கு இந்தியா இணங்கியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,இது உண்ணாவிரதிக்கு வழங்க பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளதாக நம்ப படுகிறது
35 காவல்துறை அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்
35 காவல்துறை அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்
இலங்கையில் உயர்தர அதிகாரிகள் உள்ளிட்ட முப்பத்தி ஐந்து பேருக்கு உடனடி நடைமுறைக்கு வரும் வகையில் திடீர் பணியிடை இடமாற்றம் இடம்பெற்றுள்ளது
காவல்துறை தலைமையகத்தால் மேற்கொள்ள பட்டுள்ள இந்த நடவடிக்கையில் காவல்துறையினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
குற்ற தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான முக்கிய உயர் அதிகாரியும் இவ்வாறு மாற்றம் செய்ய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்துக – யாழில் போராட்டம்
சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்துக – யாழில் போராட்டம்
இலங்கை அரசபயங்கரவாதம் புரிந்த தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழில் தமிழர்கள் போராட்டம் ஒன்றை நடத்துகின்றனர்
அரச பயங்கரவாதம் புரிந்த இனப்படுகொலைக்கு இதுவரை தீர்வு கிட்டவில்லை
இதனை அடுத்து தொடர்ந்து இடம்பெற்று வரும் இந்த போராட்டங்கள் மூலம் தமிழர்களுக்கு ஒரு தீர்வினை பெற்றுவிட தமிழர் தேசம் துடித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
புத்தாண்டை முன்னிட்டு புதிய பயண தடைகள் – இராணுவம் அறிவிப்பு
புத்தாண்டை முன்னிட்டு புதிய பயண தடைகள் – இராணுவம் அறிவிப்பு
இலங்கையில் எதிர் வரும் தமிழ் ,சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாட்டில் பயண தடையில் ,புதிய தடைகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்
பரவி வரும் நோயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வரும் முகமாக இந்த இடைக்கால பயன தடைகள் குறிப்பிட்ட பட்ட பகுதியில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
மீன் தொட்டியில் விழுந்து குழந்தை மரணம்
மீன் தொட்டியில் விழுந்து குழந்தை மரணம்
வீட்டில் இருந்த மீன் தொட்டியில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று பிற்பகல் 2.35 மணியளவில் இந்த சம்பவம் இடமபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிரியாகம, கஹல்ல, ஆதியாகல பிரதேசத்தை சேந்த ஒரு வயதுடைய குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கல்கிரியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வடக்கச்சியில் கத்தியால் குத்தியவரின் வீட்டுக்குத் தீ
கிளிநொச்சி, வடக்கச்சியில் கத்தியால் குத்தியவரின் வீட்டுக்குத் தீவைக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று (15) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனால், அப்பிரதேசத்தில் சற்று பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது.
எனினும், ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார்இ கத்திக் குத்துக்கு இலக்காகி இறந்தவரின் மனைவி மற்றும் சகோதரிகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அப்பகுதியில், கடந்த 10 ஆம் திகதியன்று இடம்பெற்ற கத்திக்குத்தில்,
அருளம்பலம் துஷ்யந்தன் பலியானார். இந்நிலையிலேயே, கத்தியால் குத்தியவரின் வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரின் வீட்டிலிருந்து சில பொருள்களை எடுத்துச்செல்வதற்காக, பொலிஸாரின் பாதுகாப்புடன் உறவினர்கள் சிலர், அங்கு சென்றுள்ளனர்.
இதையறிந்த, கத்திக்குத்துக்கு இலக்காகி மரணித்தவரின் மனைவியும் சகோதரிகளும் ஒருசில கிராம மக்களும் ஒன்றுதிரண்டு, இறந்தவருக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் போதுமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்து, பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்நிலையிலேயே, சந்தேகநபரின் வீட்டைத் தீவைத்து சிலர் கொளுத்தியுள்ளனர். இதையடுத்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்தனர். காயங்களுக்கு உள்ளானவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
போலி பொலிஸ் அதிகாரி- மடக்கிய ரியல் பொலிஸ்
போலி பொலிஸ் அதிகாரி- மடக்கிய ரியல் பொலிஸ்
தன்னை உப பொலிஸ் பரிசோதகர் என அடையாளப்படுத்தி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பன்னிபிட்டி, பொல்வத்தை பகுதியில் பொலிஸாரால் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய மேற்படி சந்தேக நபர் பொலிஸ் சீருடை அணிந்த தனது புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.
அது குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணை நடவடிக்கையின்போதே குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
6 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா
6 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா
அம்பாறை பக்மிடியாவ பகுதியில் 6 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செய்கை கிழக்கு பாதுகாப்பு
படை தலைமையகத்தின் கீழ் உள்ள இலங்கை இராணுவத்தின் 1வது கொமாண்டோ படைப்பிரிவு வீரர்களினால் நேற்று முன்தினம் (மார்ச் 14) சோதனையிடப்பட்டது.
கஞ்சா செய்கை குறித்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸாருடன் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொத்துவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு புதிய சலுகை
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் மற்றும் கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக வங்கிக் கடன்களை செலுத்தாத தொழில்முனைவோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு பதிலாக சலுகை காலம் வழங்குவது குறித்து கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (15) வங்கி பிரதானிகளுக்கு தெரிவித்தார்.
வங்கி கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத தொழில்முனைவோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது தொடர்பாக நிதி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, தொழில்முனைவோரின் நிதிப் பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் நிதி அமைச்சு, மத்திய வங்கி மற்றும் தொடர்புடைய வங்கிகளுடன் இணைந்து இறுதி முடிவை எட்டுமாறு பிரதமர் அறிவுறுத்தினார்.
இது போன்ற பிரச்சினைகள் நீண்ட காலமாக இருந்து வருவதாகவும், எந்தவொரு தரப்பும் பாதிக்கப்படாத வகையில் அவற்றைத் தீர்ப்பது முக்கியம் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
வங்கி கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத எந்தவொரு தரப்பினருக்கும், வங்கி தரப்பிற்கும் இடையில் நியாயமான முறையில் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கத்தின் தலையீடு தேவை என்று தெரிவித்த பிரதமர், இது தொடர்பாக சட்டப்பூர்வ அதிகாரங்களைக் கொண்ட அரசு நிறுவனம் அல்லது அதிகாரியை நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அதன் மூலம் லீசிங் உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் பொருந்தும் கடன் வழங்குநர்களுக்கு நிவாரணம் வழங்க வாய்ப்பு உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.
மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வெற்றி கண்டது அன்னை அம்பிகையின் அறப்போர்!
மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வெற்றி கண்டது அன்னை அம்பிகையின் அறப்போர்!
உண்ணாவிரதத்தை முடிக்குமாறு ஒட்டுமொத்த தமிழினமும் ஏகோபித்த கோரிக்கை!!
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி கோரி பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமார் முன்னெடுத்த அகிம்சைவழி உண்ணாவிரதப்போராட்டம் மாபெரும் வெற்றி கண்டுள்ளது.
ஒன்றுக்கு மேற்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றபட்டுள்ள நிலையில் பிரித்தானியாவில் நேற்று கிளர்ந்தெழுந்த புலம்பெயர் தமிழர்களின் வேண்டுதலாகவும் உலகெமெங்குமுள்ள ஒட்டுமொத்த தமிழினத்தினதும் அமைப்புக்கள் கட்சிகளினதும் வேண்டு கோளை யும் ஏற்று அம்பிகையின் உண்ணாவிரதப்போராட்டம் இன்றுடன் (15.03.2021) முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளது.
பிரித்தானிய அரசிடம் 4 அம்சக்கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி அவற்றில் ஒன்றையேனும் நிறைவேற்றினால் போராட்டத்தை கைவிடுவேன் என இன்றுடன் 17 நாட்கள் பசித்திருந்த அம்பிகை கோரிக்கைகளில் ஒன்று முழுமையாவும் இன்னொன்று அண்ணளவாகவும்
நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலேயே வெற்றியுடன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு பிரித்தானிய அரசாலும், பாராளுமன்ற உறுப்பினர்களாலும் அனைத்து தமிழ் மக்களாலும் கேட்கப்பட்டுள்ளார்.
அம்பிகை முன்வைத்த அனைத்துலக சுயாதீன விசாரணை பொறிமுறையை உருவாக்குதல்(IIIM), அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) விசாரித்தல், சிறிலங்காவுக்கான தனியான அறிக்கையாளரை நியமித்தல் மற்றும் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் கருத்து கணிப்பு வாக்கெடுப்புக்கான ஐ.நா வின் பரிந்துரைத்தல் ஆகிய நான்கு அம்சக்கோரிக்கைகளில்
பிரித்தானியாவின் ஐ.நா.வுக்கான இறுதி வரைபில் ஒரு புதிய விதமான அனைத்துலக சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்று (IIM இன் முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய) உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிரந்த ஐநா கண்காணிப்பளருக்கு பதிலாக, தொடர்ச்சியாண கண்காணிப்பு நடைமுறை ஓன்றும் உருவாக்கப்படவுள்ளது.
இந்நிலையிலேயே, திருமதி அம்பிகை செல்வக்குமார் மாபெரும் வெற்றியுடன் இன்று பிரித்தானிய நேரம் பி.ப. 3.00 -5.00 மணியளவில் தனது உண்ணாவிரதத்தை, மத தலைவர்கள் மற்றும் அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் முடித்துக்கொள்ள உள்ளார். இது நீண்டதொரு தமிழின போராட்ட வரலாற்றி அகிம்சைவழி மாபெரும் வெற்றியாகும்.
ஓட்டுமொத்த தமிழினத்தின் ஒற்றைக்குரலாய் அம்பிகை முன்னெடுத்த அறப்போராட்டத்திற்கு கிடைத்துள்ள வெற்றியாகும். அம்பிகையின் கோரிக்கையை நிறைவேற்றி அவரை காப்பாற்றுமாறு நேற்று பிரித்தானியாவில் மாபெரும் பேரணியை நிகழ்த்திய புலம்பெயர் தமிழர்களுக்கும் உலகெங்கும் அவருக்காக குரல் கொடுத்த தமிழினத்தின் ஒற்றுமைக்கும்
கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதப்படுகின்றது.
நிகழ்வினை இயன்ற மாலை இலண்டன் நேரம் 3.00 -5.00 மணிவரை நேரலையாக பின்வரும் இணைப்பில் மெய்நிகர் வழியாக உலெகெங்கும் உள்ள அனைவரும் பார்வையிட்டு அம்பிகைக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கமுடியும். https://us02web.zoom.us/j/86153063444?pwd=U1ZiY1lIVjRtZmNwZUFWNGNzV1k1UT09மும்மத தலைவர்களின் ஆசியுரைகளுடன்
ஆரம்பமாகவுள்ள குறித்த மெய்நிகர் நிகழ்வில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பன்னாட்டு அரசியல் பிரமுகர்களின் சிறப்புரைகளும் அம்பிகை செல்வக்குமாரின் வெற்றியுரையம் இடம்பெறவுள்ளது.
இதனிடையே, நேற்று அம்பிகைசெல்வக்குமாரின் கோரிக்கையை நிறைவேற்றி அவரை காப்பாற்றக்கோரி அவரது போராட்டத்தளத்தின் முன் ஒன்றுதிரண்ட புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் வழமைபோல் நடைபெறும் அம்பிகையின் ஆதரவு
மெய்நிகர் நிகழ்ச்சியிலும் அம்பிகையின் போராட்டம் வெற்றிப்பாதையை அடைந்துள்ளது எனவே போராட்டத்தை நிறைவு செய்யுங்கள் என்ற கோரிக்கைகளுமே வலுப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் நேற்று பி.ப. 3 மணிக்கு ஆரம்பமான மெய்நிகர் நிகழ்வில் Earling ஸ்ரீ கனக துர்க்கையம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு பூஜை ஒளிபரப்பப்பட்டதுடன் Enfield நாகபூசணி அம்மன் ஆலய குருக்கள் கமலநாதன் அமெரிக்காவிலிருந்து அருட்தந்தை றொகான் டொமினிக் மற்றும் தமிழகத்திலிருந்து ஷாகுல் ஹமிதத்தின் புதல்வி பாத்திமா பஹானா ஆகியோரின் ஆசியுரைகள் இடம்பெற்றன.
தொடர்ந்து பிரித்தானிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாம் டெரி அவர்களின் ஆதரவு அறிகை தொடர்பான கண்ணோட்டமும் தாயகத்திலிருந்து தமிழர் மரபுரிமை பேரவையின் தலைவர் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங், அனைத்துலக மக்களவை சார்பில் திரு. கோபாலபிள்ளை ஜெயசங்கர், ஜேர்மனிலிருந்து வழக்கறிஞர் மாற்றி தேவதாஸ், திருமதி வாசுகி
சுதாகர்-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – மகளிரணிப் பொறுப்பாளர், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர், தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் தலைவர் திரு. சென் கந்தையா ஆகியோரின் சிறப்புரைகளும் இடம்பெற்றன.
அத்துடன் ஈழ பாரதி எனும் ஈழக்கவிஞர் யூட் நிக்சன் எட்வேட்டின் கவிதையும் சிறப்புப் பாடல்களும்இ கனடாவிலிருந்து சிறப்பு நடனம் இடம்பெற்றிருந்தன
17 ஆவதும் இறுதி நாளுமாகிய இன்றைய மெய்நிகர் நிகழ்வு வழமை போல் பிரித்தானிய நேரம்
மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்வில் நீங்களும் இணைந்து அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்க பின்வரும் இணைப்பில் இணைந்துகொள்ளலாம். https://us02web.zoom.us/j/86153063444?pwd=U1ZiY1lIVjRtZmNwZUFWNGNzV1k1UT09
சிறிலங்காவில் ஓர் ஆட்சி மாற்றத்தினை நோக்காக கொண்டதேயன்றி, தமிழர்களின் நீதிக்கானதல்ல உருத்திரகுமாரன் !
சிறிலங்காவில் ஓர் ஆட்சி மாற்றத்தினை நோக்காக கொண்டதேயன்றி, தமிழர்களின் நீதிக்கானதல்ல தீர்மான வரைவு : பிரதமர் விஉருத்திரகுமாரன் !
சிறிலங்காவில் ஓர் ஆட்சி மாற்றத்தினை நோக்காக கொண்டே பிரித்தானியா தலைமையிலான கூட்டு நாடுகளால், ஐ.நா மனித உரிமைச்சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு அமைந்துள்ளதென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், இது தமிழர்களது நீதிக்கானதல்ல எனவ அவர் தெரிவித்துள்ளார்.
தீர்மான வரைவின் 9வது சரத்தினை சுட்டிக்காட்டி (Calls upon the Government of Sri Lanka to ensure the prompt, thorough and impartial investigation and, if warranted, prosecution of all allegations of gross human rights violations and serious violations of international humanitarian law, including for long- standing emblematic cases ) , ,இது நீதிவிசாரணையும் பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறையினை சிறிலங்காவிடமே கையளிப்பதாக அமைகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2014ம் ஆண்டு தீர்மானம் வழங்கிய ஆணைக்கமைய, ஐ.நா ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணைகள், சாட்சியங்கள், ஆதாரத் திரட்டல்கள் ஊடாக அமைந்த OISL அறிக்கை, பின்னராக முன்வைக்கப்பட்ட கலப்பு நீதிமன்றம் யாவற்றையும் கடந்து, புதிய தீர்மான வரைவானது நிலைமைகளை மேலும் பின்னோக்கி கொண்டு செல்வதாக அமைந்துள்ளதெனவும் அவர் தெரவித்துள்ளார்.
ஏற்கனவே ஐ.நாவின் நிறையவே ஆதாரங்கள், சாட்சிகள் உள்ள நிலையில், புதிதாக சாட்சியங்கள், ஆதாரங்களை திரட்டுவதற்கான பொறிமுறையினை மீளவும் ஐ.நா ஆணையாளர் அவலுவலகத்திடம் கொடுத்து காலத்தை இழுத்தடிக்கின்ற செயலாக இது தீர்மான வரை அமைவதோடு, நீதித்துறையினை நோக்கிய செயல்முறை தெளிவாக முன்வைக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டு தீர்மானத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை கோரியிருந்தது. ஆனால் இந்த தீர்மான வரைவானது , சர்வதேச நியமங்களின் அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை மீளாய்வு செய்யுங்கள் சிறிலங்கா அரசிடம் கோருகின்றது.
தமிழ் அமைப்புக்களால் முன்வைக்கப்பட்ட சிற்சில விடயங்கள் மேலோட்டமாக பூச்சுவேலைகள் போல் உள்ளடக்கப்பட்டுள்ளதன்றி, பாதிக்கப்பட்ட மக்களது அடிப்படைக் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டுள்ளதாக தீர்மான வரைவு அமையவில்லை எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா, தொடர்பில் தமிழர்களின் நிலைப்பாடு என்ன என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இணையவழி பொதுக்கூட்டத்தில் உரையாற்றுப் போதே இக்கருத்தினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்திருந்தார்.
மாணவிக்கு கொரனோ -பாடசாலைக்கு பூட்டு
மாணவிக்கு கொரனோ -பாடசாலைக்கு பூட்டு
இலங்கை கண்டி நோர்வுட் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு கொரனோ நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையில் அந்த பாடசாலை அடித்து பூட்ட பட்டுள்ளது
மறு அறிவித்தல் வரை குறித்த பாடசாலை திறக்கப்பட மாட்டாது என தெரிவிக்க பட்டுள்ளது
தற்போது கிருமி நாசினிகளைக் கொண்டு கழுவும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது







