Posted in சினிமா

ரஜினியுடன் செல்பி எடுத்த பிரபல நடிகரின் மகள்

ரஜினியுடன் செல்பி எடுத்த பிரபல நடிகரின் மகள்

ரஜினி நடிப்பில் தற்போது அண்ணாத்த படம் உருவாகி வருகிறது. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா,

கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

நேற்றுடன் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகளை நிறைவு செய்த நடிகர் ரஜினி இன்று சென்னை திரும்பினார்.

ரஜினி – லட்சுமி மஞ்சு

இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற போது ரஜினியுடன் தெலுங்கு நடிகர் மோகன்

பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு செல்பி எடுத்துக் கொண்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை

லட்சுமி மஞ்சு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

    Posted in Uncategorized

    மருத்துவமனை அலட்சியம் -காய்ச்சலினால் இறந்த 7 வயது சிறுமி photo

    மருத்துவமனை அலட்சியம் -காய்ச்சலினால் இறந்த 7 வயது சிறுமி

    அவுஸ்ரேலியாவில் ஏழுவயது Aishwarya Aswath என்ற சிறுமி கொடிய காய்ச்சல் காரணமாக பலியானார் ,

    இவருக்கு உரிய மருத்துவ கண்காணிப்பு இல்லாமையினால் இந்த சிறுமி பலியாகியுள்ளதாக மருத்துவமனை மீது குற்றம் சுமத்த பட்டுள்ளது

    சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டி அவர்கள் பெற்றவர்கள் பட்டினி போராட்டத்தில்

    குதித்துள்ளனர் ,மேற்படி சம்பவம் உலக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

    அவுஸ்ரேலிய சுகாதார அமைச்சு குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகிறது

    மேற்படி சிறுமி மரணம் தமிழர்கள் ,இந்தியர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

      Posted in சினிமா

      கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய சிவகுமார் குடும்பத்தினர்

      கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய சிவகுமார் குடும்பத்தினர்

      தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல்

      தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

      கார்த்தி சூர்யா

      இந்நிலையில் நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சூர்யா, கார்த்தி ஆகியோர் முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில்

      சந்தித்து கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி நிதியுதவி வழங்கி இருக்கிறார்கள்.

      மேலும், தமிழகத்தில் தமிழ் படித்தவருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று நடிகர் சிவக்குமார் முதல் அமைச்சர் சந்திப்பிற்கு பின் பேட்டி அளித்துள்ளார்..

        Posted in இலங்கை செய்திகள்

        காணாமல் போனவர் சடலமாக மீட்பு

        காணாமல் போனவர் சடலமாக மீட்பு

        இலங்கை ஹட்டன்எபோட்சிலி தோட்டப் பகுதியில் வசித்து வந்த 46 வயதுடைய நபர் ஒருவர் காணமல் போனார்

        இவ்வாறு காணாமல் போனவர் தற்போது சடலமாக மீட்க பட்டுள்ளார் .


        இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர் படுகொலை செய்ய பட்டாரா அல்லது ,தற்கொலை செய்து

        கொண்டாரா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

          Posted in இலங்கை செய்திகள்

          இந்தியா இலங்கை தூதரக பணியாளர்கள் 6 பேருக்கு கொரனோ

          இந்தியா இலங்கை தூதரக பணியாளர்கள் 6 பேருக்கு கொரனோ

          இந்தியா இலங்கை தூதராலயத்தில் பணிபுரியும் எட்டு இலங்கையர்கள் கொரனோவால் பாதிக்க

          பட்ட நிலையில் தனிமை படுத்த பட்டுள்ளனர்

          பணியாளர்கள் பாதிக்க பட்டதினால் தூதரகம் மறு அறிவித்தல் வரை அடித்து பூட்ட படலாம் என

          எதிப்பார்க்க படுகிறது

            Posted in இலங்கை செய்திகள்

            தனிமை படுத்தல் விதிகளை மீறிய 435 பேர் கைது

            தனிமை படுத்தல் விதிகளை மீறிய 435 பேர் கைது

            இலங்கையில் நிகழ்கால கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் காவல்

            துறையினரால் 436 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

            முகக்கவசம் அணியாது தொடர்ந்து வெளியில் நடமாடிய நபர்களே இவ்விதம் கைது செய்ய

            பட்டுள்ளனர் என போலீசார் தெரிவிக்கின்றனர்

              Posted in Uncategorized

              வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்கள் 14 நாட்கள் தனிமை படுத்தல்

              வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்கள் 14 நாட்கள் தனிமை படுத்தல்

              வெளி நாடுகளில் இருந்து இலங்கை வரும் அனைவரும் 14 நாட்கள் தனிமை படுத்த பட்டு

              கொரனோ சோதனைகளின்பின்னரே வெளியில் செல்ல அனுமதிக்க படுவார்கள் என்ற புதிய அறிவித்தல் வெளியாகியுள்ளது

              இதனால் பயணிகள் மிக பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்

                Posted in இலங்கை செய்திகள்

                இந்தியாவில் 8 இலங்கையர்கள் கொரனோவுக்கு பலி

                இந்தியாவில் 8 இலங்கையர்கள் கொரனோவுக்கு பலி

                இந்தியாவில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் சிக்கி எட்டு இலங்கையர்கள்

                பலியாகியுள்ளதாக இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்

                இந்தியாவில் அதி வேகமாக பரவி வருவதுடன் நாள் தோறும் பலர் பலியாகிய வண்ணம் உள்ளனர்

                என்பது குறிப்பிட தக்கது

                  Posted in Uncategorized

                  கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் 23 பேர் மரணம்

                  கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் 23 பேர் மரணம்

                  இலங்கையால் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோய் தாக்குதலில் சிக்கி கடந்த

                  தினம் மட்டும் 23 பேர் பலியாகியுள்ளனர்

                  இதுவே இதுவரை இடம் பெற்ற மரணங்களில் அதிக எண்ணிக்கை என பதிவாகியுள்ளது

                    Posted in Uncategorized

                    இலங்கையில் உருவான புதிய கடல் பொலிஸ் – கண்காணிப்பு தீவிரம்

                    இலங்கையில் உருவான புதிய கடல் பொலிஸ் – கண்காணிப்பு தீவிரம்

                    இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படை “நீர்நிலைகளின் விசேட சுற்றிவளைப்பு” என்ற பெயரில் புதியதொரு பிரிவை ஆரம்பித்துள்ளது.

                    பல்வேறு பிரதேசங்களில் நீர் நிலைகளில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளைத்

                    தடுப்பதே இதன் நோக்கமாகும். இந்த புதிய பிரிவு 16 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளைக் கொண்டது.

                    மேலும் நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல், கடத்தல் வியாபாரம்

                    மற்றும் காடழிப்பு போன்ற நடவடிக்கைகளை தடுப்பதே இதன் முக்கிய நோக்கங்களில் சிலவாகும்.

                    இந்த புதிய பிரிவுக்கு படகுப் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளதுடன், இதற்கு ஐக்கிய நாடுகளின்

                    போதைப் பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான நிறுவனம் மற்றும் இலங்கை மோட்டார் படகு சங்கத்தின் ஆதரவும் கிடைத்துள்ளது.

                    அத்துடன் இந்த புதிய பிரிவை அமைச்சர் சரத் வீரசேகர திறந்துவைத்தார்.

                      Posted in சினிமா

                      நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் மரணம்


                      நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் மரணம்

                      தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் முக்கிய கதாபாத்திரத்திலும்

                      நடித்தவர் நெல்லை சிவா. இவர் வடிவேலுடன் இணைந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

                      நெல்லை சிவா

                      இந்நிலையில் நெல்லை சிவா மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 60. இன்று மாலை 6 மணி

                      அளவில் அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் பணகுடியில் மரணமடைந்துள்ளார். இவரது மறைவிற்கு பிரபலங்கள்

                      பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இவரது இறுதி சடங்கு நாளை நண்பகல் நடக்க இருக்கிறது.

                        Posted in சினிமா

                        நடிகையை திட்டிய அஜித்


                        நடிகையை திட்டிய அஜித்

                        பிரபல நடிகையை படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித் திட்டியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை கூறியுள்ளார்.

                        அஜித்திடம் திட்டு வாங்கிய பிரபல நடிகை
                        அஜித்


                        அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் உன்னை தேடி. இந்த படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடித்திருந்தார்.

                        இந்த படத்தின் படப்பிடிப்பின்போது அஜித் மாளவிகாவை திட்டி விட்டாராம். மாளவிகா மற்றும் அஜித் இருவரும்

                        நடனமாடும் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது மாளவிகாவுக்கு சரியாக நடனம் ஆட வரவில்லை.

                        இந்நிலையில் மாஸ்டர் சொல்லிக் கொடுத்தபடி ஆடாமல் மாளவிகா இஷ்டத்திற்கு ஆடியதால் அஜித் கடுப்பாகி விட்டாராம்.

                        அஜித் மாளவிகா

                        ஒழுங்காக மாஸ்டர் சொல்வதை கவனித்துப் பார்த்து தெளிவாக ஆடுங்கள் என மாளவிகாவை திட்டி விட்டதாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் மாளவிகா இதைப்பற்றி தெரிவித்துள்ளார்

                          .

                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கையர்கள் குவைத்துக்கு செல்ல தடை

                          இலங்கையர்கள் குவைத்துக்கு செல்ல தடை

                          இலங்கை மக்கள் குவைத் நாட்டுக்கு செல்ல குவைத் அரசு தடை விதித்துள்ளது .இலங்கையில்

                          பரவி வரும் கொரனோ தாக்குதலை அடுத்து இந்த இடைக்கால பயண தடை விதிக்க பட்டுள்ளது

                          Posted in Uncategorized

                          போலீசார் விடுமுறைகள் இரத்து – திணறும் இலங்கை

                          போலீசார் விடுமுறைகள் இரத்து – திணறும் இலங்கை

                          இலங்கையில் தனிமை படுத்த பட்ட பகுதிகளை காவல் காக்க அனைத்து போலீசார்

                          விடுமுறைகளை இரத்து செய்ய பட்டுள்ளன

                          பல்வேறு பட்ட தேவைகள் நிமித்தம் ஓய்வில் செல்ல இருந்த போலீசார் இதனால் விரக்தி அடைந்துள்ளனர்

                            Posted in இலங்கை செய்திகள்

                            சாராய கடைகள் 6 மணியுடன் பூட்ட உத்தரவு – கொதிக்கும் குடிமகன்கள்

                            சாராய கடைகள் 6 மணியுடன் பூட்ட உத்தரவு – கொதிக்கும் குடிமகன்கள்

                            இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ அலையின் தாக்குதல் காரணமாக சாராய கடைகள்

                            ,தவறணைகள் உள்ளிட்டவை மாலை ஆறுமணியுடன் அடித்து பூட்டு மாறு இராணுவ தளபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்

                            இந்த உத்தரவை அடுத்து குடிமகன்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்

                              Posted in இலங்கை செய்திகள்

                              துரத்தும் கொரனோ – ஆறு கிராமங்கள் மேலும் தனிமை படுத்தல்

                              துரத்தும் கொரனோ – ஆறு கிராமங்கள் மேலும் தனிமை படுத்தல்

                              இலங்கையில் பரவி வரும் கொரனோ தாக்குதலை அடுத்து தற்போது ஆறு கிராமங்கள் தனிமை

                              படுத்த பட்டுள்ளன


                              இவ்வாறு தனிமை படுத்த பட்ட பகுதிகளில் போலீசார் இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது

                                Posted in இலங்கை செய்திகள்

                                காவல்துறை வேட்டை -548 பேர் கைது

                                காவல்துறை வேட்டை -548 பேர் கைது

                                இலங்கையில் தனிமை படுத்திகள் சட்டத்தை மீறிய 548 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்


                                கைதானவர்களுக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன் பலர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

                                அனைவரும் முகக்கவசம் அணியாது வெளியில் உலாவிய நிலையில் இந்த கைது

                                இடம்பெற்றுள்ளது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  நாட்டை மூன்று வாரம் மூடி, குறை வருமான குடும்பங்களுக்கு ரூ. 20,000 வழங்குங்கள்

                                  நாட்டை மூன்று வாரம் மூடி, குறை வருமான குடும்பங்களுக்கு ரூ. 20,000 வழங்குங்கள்

                                  அரசாங்கத்துக்கு மனோ கணேசன்


                                  நாட்டை மூன்று வாரம் மூடி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 20,000 வழங்குங்கள். இதுவரை, ஆறு நாடுகளில் உள்ள கொரோனா கிருமிகள் இங்கே வந்து சேர்ந்துள்ளன. ஆகவே இன்று கர்ப்பிணி

                                  தாய்மார்களும், பச்சை பாலகர்களும் சாகிறார்கள். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஐஎச்எம்ஈ நிறுவனத்தின் இலங்கை பற்றிய ஆய்வில், இப்படியே போனால், இலங்கையில் செப்டம்பர்

                                  மாதமளவில் 20,000 பேர் வரை மரணிக்கவும், தினசரி மரணம் 200 ஐ கடக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆகவே துறைமுக நகருக்கு தரும் முன்னுரிமையை கொரோனா அழிப்புக்கு

                                  கொடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் தேரர் முருத்தெடுகல ஆனந்த பிக்கு சொல்வதை போன்று,

                                  நாட்டில் மக்கள் தெருக்களில் செத்து மடியும் நிலைமை ஏற்படலாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

                                  எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

                                  அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்த முன்னணி பிக்கு முருத்தெடுகல ஆனந்த தேரர், “நாட்டில் வீதியில் விழுந்து மரணிக்க மட்டுமே மக்களுக்கு இன்று உரிமை உள்ளது” என கூறுகிறார். இந்த

                                  அரசை ஆட்சிக்கு கொண்டு வந்ததால் இவரும் இந்நிலைமைக்கு பொறுப்பு கூற வேண்டும். எனினும், இதைவிட இந்த ஆட்சியின் இலட்சணத்துக்கு சான்றிதழ் வேண்டுமா?

                                  ஆரம்பத்தில் கொரோனாவால், வயதானவர்கள் மட்டுமே சாவார்கள் என கூறப்பட்டது. இன்று

                                  கர்ப்பிணிகள் சாகிறார்கள். குழந்தைகள் சாகிறார்கள். ஏனென்றால், இன்று நாட்டில் உள்ள கொரோனா கிருமியின் வீரியம் அதிகரித்து விட்டது.

                                  இன்று எம் நாட்டில் சீனா, தென்னாபிரிக்கா, நைஜீரியா, டென்மார்க், இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வளர்ச்சியடைந்த கொரோனா கிருமிகள் உள்ளன. இவை எப்படி இலங்கைக்கு வந்தன

                                  ? அரசின் கையாள் உதயாங்க வீரதுங்க கூட்டி வந்த உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகள்தான்

                                  தம்முடன் இங்கிலாந்து கிருமிகளையும் கொண்டு வந்தார்கள். இப்படிதான் எல்லாம் வந்தன. நீங்கள் உரிய வேளையில் விமான நிலையங்களை மூட மறுக்கிறீர்கள்.

                                  இன்று நாட்டில் ஒரு நாளைக்கு 2600 நோயாளிகள். நேற்று 22 பேர் செத்தார்கள். இவை கணக்கில் எடுக்கப்பட்டவை மட்டுமே. இவற்றை தவிர இன்னமும் உள்ளனவா என் தேடிப்பார்க்க வேண்டும்.

                                  நாட்டை மூட நீங்கள் மறுப்பது ஏன்? இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, துறைமுக நகர சட்டமூலத்தை சபையில் “பாஸ்” செய்துக்கொள்ள பார்க்கிறீர்கள். அதுதான் தேவை என்றால், நாட்டை மூடி, பாராளுமன்றத்தை மாத்திரம் திறந்து வையுங்கள்.

                                  அடுத்தது, உங்களால், நாட்டை மூடி விட்டு, மக்களுக்கு நிவாரணம் தொகை வழங்க முடியவில்லை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 20,000 வழங்க வேண்டும். பணம் இல்லை. ஆனால், சீனி வரி

                                  குறைப்பால் திறைசேரிக்கு வராத நிதி உண்மையில் எங்கே போனது? அந்த தொகை ரூ. 1600கோடி. அதில் எத்தனை குடும்பங்களுக்கு ரூ. 20,000 வழங்கலாம்?

                                  நாட்டை மூடினால், நாளாந்த சம்பளம் பெறுவோர், சுய தொழில் செய்வோர் என எத்தனை குடும்பங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என கணக்கெடுங்கள். எப்படியோ எல்லா

                                  அபிவிருத்தி திட்டங்கள், புதிய வீதிகள், புதிய உடற்பயிற்சி ஜிம்கள் ஆகியவற்றை இடை நிறுத்தி வைத்து விட்டு, ஒரு குடும்பத்துக்கு ரூ. 20,000 வழங்குங்கள்.

                                  கோதாபய ராஜபக்ச, ஜனாதிபதி பதவிக்கு வந்த உடன், அவர் இந்திய பிரதமர் மோடியின் வழியில் போகிறார் என்று சொல்லப்பட்டது. இப்போது பார்த்தால் அது சரிபோல் தெரிகிறது. பிரதமர் மோ

                                  டி, அவரது குஜராத் ஊரில் ஸ்டேடியம் கட்டி, அங்கே 125,000 பேரை கூட்டி, இந்திய-இங்கிலாந்து கிரிகட் மேளா நடத்தினார். பின், உத்தரகாண்டில் 90 இலட்சம் பேரை கூட்டி கும்பமேளா என்ற

                                  மதவிழாவை நடத்தினார். பின் ஐந்து மாநிலங்களில் தேர்தல் மேளா நடத்தினார். அப்போது ஒரு நாளைக்கு இந்தியாவில், 20,000 பேர்தான் கொரோனா நோயாளிகளாக இருந்தார்கள். இவருக்கு

                                  பிறகு இப்போது அது ஒரு நாளைக்கு நான்கு இலட்சத்தை தாண்டி விட்டது. இறப்பும் கூடி விட்டது.

                                  அதுபோல் நம்ம ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச, இப்போது குட்டி மோடி ஆகி விட்டார். கோதாபய

                                  ராஜபக்ச, நரேந்திர மோடியின் பெரிய தம்பி என்றால், கோதாவின் சிஷ்ய பிள்ளை கெஸ்பாவையின் காமினி லொகுகே, சின்ன தம்பி ஆகியுள்ளார்.

                                    Posted in Uncategorized

                                    ட்ரோன் மூலம் வாகனப் போக்குவரத்து கண்காணிக்க நடவடிக்கை

                                    ட்ரோன் மூலம் வாகனப் போக்குவரத்து கண்காணிக்க நடவடிக்கை

                                    இலங்கையில் வாகன போக்குவரத்து ட்ரான் கமரமூலம் கண்காணிக்க நடவடிக்கை ஆரம்பிக்க படவுள்ளது

                                    இவை வரும் நாள் முதல் ஆரம்பிக்க படவுள்ளது

                                    இதில் போலீசார் உள்ளிட்டவர்கள் லஞ்சம் வாங்குவதும் தெரியவரும் என எதிர்பார்க்க படுகிறது

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      இலங்கையில் ஒரேநாளில் 2,573. கொரனோவால் பாதிப்பு

                                      இலங்கையில் ஒரேநாளில் 2,573. கொரனோவால் பாதிப்பு

                                      நடந்து முடிந்த நாளில் இலங்கையில் சுமார் 2,573. பேர் கொரனோ நோயினால் பாதிக்க

                                      பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

                                      தொடர்ந்து அதிகரித்து வரும் நோயின் தாக்குதல் ; இவ்விதம் செல்லும் எனின் உயிர்பலிகள் பல

                                      ஆயிரமாக அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது