Posted in Uncategorized

தாயின் மூன்றாவது கணவரால் கற்பழிக்க பட்ட இரண்டு மக்கள் – முல்லையில் பயங்கரம்

தாயின் மூன்றாவது கணவரால் கற்பழிக்க பட்ட இரண்டு மக்கள் – முல்லையில் பயங்கரம்

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் உள்ள குடும்பம் ஒன்றில் தாயின் மூன்றாவது கணவரால் இரண்டு சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இச்சம்பவம் பற்றி தெரியவருகையில்,

வட்டுவாகல் கிராமத்தில் தாயின் மூன்றாவது கணவரால் மகள்கள் தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளமை தொடர்பில் கிராமத்தவர்களால் சிறுவர் துஸ்பிரயோக தடுப்பு பிரிவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொலிசார் தாயினையும் தாயின் மூன்றாவது கணவரையும் கைது செய்துள்ளார்கள்.

ஏற்கனவே இரண்டு கணவர்களுக்கு பிறந்த இரண்டு பதின்ம அகவை சிறுமிகள் தாயின் மூன்றாவது கணவரால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளகிவந்துள்ளனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்காக யாழ் போதனா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

தாயின் கணவரையும் சிறுமிகளின் தாயினையும் கைதுசெய்த முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளுக்கு உட்படுத்தியபோது

தனது பிள்ளைகள் மூன்றாவது கணவரால் தொடர்ச்சியாக துஸ்பிரயோக்திற்கு உள்ளாகி வருகின்றமை தாய்க்கு தெரிந்தும் அதற்கு உடந்தையாக இருந்ததாக தாய் மீது குற்றம் சமத்தப்பட்டுள்ளது.

இவர்களை கடந்த 13ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

    Posted in சினிமா

    எல்லா ஜாதியிலும் பெரிய பெரிய திருடர்கள் இருக்கிறார்கள் – சூர்யா

    எல்லா ஜாதியிலும் பெரிய பெரிய திருடர்கள் இருக்கிறார்கள் – சூர்யா

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவின் நடிப்பில் தற்போது ‘ஜெய் பீம்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

    எல்லா ஜாதியிலும் பெரிய பெரிய திருடர்கள் இருக்கிறார்கள் – சூர்யா
    ஜெய் பீம் படத்தில் சூர்யா


    நடிகர் சூர்யாவின் 39-வது படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

    இப்படத்தில் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வருகிற நவம்பர் மாதம் 2-ந் தேதி வெளியாக இருக்கிறது.

    ஜெய் பீம்

    இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் சூர்யா, எல்லா ஜாதியிலும் பெரிய பெரிய திருடர்கள் இருக்கிறார்கள் என்று பேசும் வசனம் ரசிகர்களிடையே கவனம் பெற்று, இணையத்தில் வைரலாகி வருகிறது.

      Posted in சினிமா

      கொலையில் ஒன்று சேரும் விஜய் ஆண்டனி

      கொலையில் ஒன்று சேரும் விஜய் ஆண்டனி

      தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் ஆண்டனியுடன், ரித்திகா சிங் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார்.

      கொலையில் ஒன்று சேரும் விஜய் ஆண்டனி – ரித்திகா சிங்
      விஜய் ஆண்டனி – ரித்திகா சிங்


      சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். இப்படத்தை அடுத்து, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே ஆகிய

      படங்களில் நடித்தார். மேலும் அருண் விஜய்யுடன் பாக்சர், அரவிந்த் சாமியுடன் வணங்காமுடி போன்ற படங்களில் ரித்திகா சிங் நடித்துள்ளார்.

      கொலை

      இதைத்தவிர, பாலாஜி குமார் இயக்கும் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரித்திகாசிங் நடித்துள்ளார். தற்போது இப்படத்திற்கு ‘கொலை’ என்று தலைப்பு வைத்து போஸ்டரையும்

      படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தை இன்பினிட்டி பிலிம்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

        Posted in Uncategorized

        ஆற்றில் மிதந்தபெண்ணின் சடலம் – நடந்தது என்ன ..?

        ஆற்றில் மிதந்தபெண்ணின் சடலம் – நடந்தது என்ன ..?

        இலங்கை நாவலப்பிட்டி காவல்துறை பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார்
        இவரது சடலத்தை மீட்ட காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

        இவரது மரணம் தற்கொலையா அல்லது விபத்த என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

          Posted in Uncategorized இலங்கை செய்திகள்

          கிளிநொச்சியில் கவிழ்ந்த லொறி – போக்குவரத்து பாதிப்பு

          கிளிநொச்சியில் கவிழ்ந்த லொறி – போக்குவரத்து பாதிப்பு

          கிளிநொச்சி டிப்போ சந்தியில் வேகமாக பயணித்த கனரக வாகனம் ஒன்று திடீரென கவிழ்ந்தது

          இதனால் அவ்வழி போக்குவரத்து பாதிக்க பட்டுள்ளது

          மேலும் வண்டி பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது

            Posted in Uncategorized

            மாணவர்களுக்கு கொரனோ ஊசி செலுத்துதல் ஆரம்பம்

            மாணவர்களுக்கு கொரனோ ஊசி செலுத்துதல் ஆரம்பம்

            இலங்கையில் உயர்தர மாணவர்களுக்கு கொரனோ தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு ஆரம்பிக்க பட்டுள்ளது

            அனைத்து மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு இந்த ஊசி செல்யுதும் நிகழ்வு தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது

              Posted in Uncategorized

              கட்டுப்பட்டது தளர்வு குசியில் மக்கள்

              கட்டுப்பட்டது தளர்வு குசியில் மக்கள்

              இன்று முதல் பயண கட்டுப்பாடுகள் மற்றும் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் மட்டுப்படுத்த நிலையில் அகற்ற தளர்வு பட்டுள்ளது

              திருமண ,ஒன்று கூடல்களில் அந்த மக்கள் கொள்ளளவிற்கு ஏற்பட்ட 25 வீதம் ,மாற்று ஐம்பது வீதமானவர்கள் கூடலாம் என்ற நடைமுதுறை தளரத்த பட்டுள்ளது

              அனைத்தும் சுகாதர வழிகாட்டல்கள் மூலம் அமைய வேண்டும் என தெரிவிக்க படுகிறது

                Posted in சினிமா

                எங்களுக்குள் தவறான தொடர்பு இல்லை – சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பேட்டி

                எங்களுக்குள் தவறான தொடர்பு இல்லை – சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பேட்டி

                நாகசைதன்யா ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் பிரீதம் ஜுகல்கர் தெரிவித்துள்ளார்.

                எங்களுக்குள் தவறான தொடர்பு இல்லை – சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பேட்டி
                சமந்தா, பிரீதம் ஜுகல்கர்


                காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அண்மையில் அறிவித்தனர். இது தென்னிந்திய திரையுலகினரிடையே பெரும்

                அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் பிரிவுக்கு முக்கிய காரணம் சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பிரீதம் ஜுகல்கர் என்று டோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியானது.

                இதையடுத்து பிரீதம் ஜுகல்கருடன் நடிகை சமந்தா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து பிரீதம் ஜுகல்கரை அவதூறாக திட்டியும், மிரட்டல் விடுத்தும் நாகசைதன்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

                இதுகுறித்து பிரீதம் ஜுகல்கர் அளித்துள்ள பேட்டியில். ‘‘எனக்கும், சமந்தாவுக்கும் தவறான தொடர்பு உள்ளது என்றும், இதனாலேயே சமந்தாவுக்கும், நாகசைதன்யாவுக்கும் பிரிவு ஏற்பட்டு

                உள்ளது என்றும் தகறான தகவல் பரப்பி உள்ளனர். இதன் மூலம் சமந்தாவை அவதூறு செய்துள்ளனர். சமந்தாவை நான் சகோதரியாகவே பார்க்கிறேன்.

                அவரை சகோதரி என்றே அழைக்கிறேன். எங்களுக்குள் தவறான தொடர்பு இல்லை என்பது நாகசைதன்யாவுக்கு தெரியும். ஆனாலும் அவர் அமைதியாக இருப்பது வருத்தம் அளிக்கிறது.

                எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. நாகசைதன்யா ரசிகர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளேன்” என்றார்

                  Posted in சினிமா

                  மாஸ் காட்டும் அண்ணாத்த டீசர்- ஹிட்டாகும் இந்த வசனம்


                  மாஸ் காட்டும் அண்ணாத்த டீசர்- ஹிட்டாகும் இந்த வசனம்

                  ஆயுத பூஜையை முன்னிட்டு ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

                  ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கி இருக்கும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என

                  மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

                  இப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளது. இதனால் படத்தின் அப்டேட்டுகள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் 2 பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில், ஆயுத பூஜையை முன்னிட்டு அண்ணாத்த டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

                  அண்ணாத்த

                  இதில் கிராமத்தான குணமாதானே பார்த்துருக்க… கோபப்பட்டு பார்த்ததில்லயே… என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் இந்த டீசர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                    Posted in சினிமா

                    ஜோதிகாவின் 50வது படம் – மணல் சிற்ப வடிவில் வாழ்த்து

                    ஜோதிகாவின் 50வது படம் – மணல் சிற்ப வடிவில் வாழ்த்து

                    சசிகுமார், சமுத்திரகனியுடன் ஜோதிகா நடித்துள்ள உடன்பிறப்பே திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

                    ஜோதிகாவின் 50வது படம் – மணல் சிற்ப வடிவில் வாழ்த்து
                    ஜோதிகா


                    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. அஜித்தின் ‘வாலி’ படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் தோன்றிய அவர், சூர்யாவின் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின்

                    மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

                    தன்னுடன் பல படங்களில் நடித்த முன்னணி நடிகரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த

                    ஜோதிகா, ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். கடந்த சில ஆண்டுகளாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

                    இந்நிலையில் ஜோதிகாவின் 50வது படமான ‘உடன்பிறப்பே’ திரைப்படம் இன்று அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதையொட்டி மெரீனா கடற்கரையில் ஜோதிகாவின் மணல் சிற்பம்

                    ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் ஜோதிகாவின் புகைப்படத்துடன் ‘உடன்பிறப்பே’ படத்தின் வெளியிட்டு தகவல் இடம்பெற்றுள்ளது. அதோடு வாழ்த்துக்கள் ‘ஜோதிகா 50’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

                      Posted in Uncategorized

                      வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல தமிழர்கள் முனைப்பு – கனடாவுக்கு இடித்துரைத்து சிறி எம்பி video

                      வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல தமிழர்கள் முனைப்பு – கனடாவுக்கு இடித்துரைத்து சிறி எம்பி video

                      தமிழ் இளைஞர்கள் புலனாய்வு அச்சுறுத்தலால்
                      நாட்டைவிட்டு வெளியேற எத்தனிக்கின்றார்கள் கனேடியத் தூதுவருக்கு சிறீதரன் எம். பி எடுத்துரைப்பு

                      click here full video

                        Posted in Uncategorized

                        விபச்சார நிலையம் முற்றுகை – இளம் பெண்கள் கைது

                        விபச்சார நிலையம் முற்றுகை – இளம் பெண்கள் கைது

                        நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் குடாபாடுவ பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்திச் செல்லப்பட்ட விபசார விடுதி, சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

                        நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு நேற்று (13) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

                        இதன்போது, அந்த விடுதியை முகாமைத்துவம் செய்த ஆண் மற்றும் விபசாரத்துக்கு உதவிய மற்றும் அதில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையம் குறிப்பிட்டுள்ளது.

                        46, 40 மற்றும் 21 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் நீர்கொழும்பு நீதிமன்றில் இன்று(14) முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

                          Posted in Uncategorized

                          இந்திய இராணுவ தளபதி- கோட்டா சந்திப்பு

                          இந்திய இராணுவ தளபதி- கோட்டா சந்திப்பு

                          இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய இராணுவத்தின் பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை , ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (13) சந்தித்துக் கலந்துரையாடினார்.

                          பிராந்தியப் பாதுகாப்பு விடயத்தில் அயல் நாடுகளின் ஸ்திரத்தன்மையை, தமது நாடு அதிகளவில் எதிர்பார்க்கிறது என்று தெரிவித்தவாறு, ஜெனரல் தனது கலந்துரையாடலை ஆரம்பித்தார்.

                          தான் இராணுவச் சேவையில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில், இந்தியாவில் பெற்ற இராணுவப் பயிற்சிகள் மற்றும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இந்திய இராணுவப் பயிற்சிகளின் மூலம் நம் நாட்டு இராணுவ
                          அதிகாரிகளுக்குக் கிடைக்கும் தலைமைத்துவப் பண்புகள் குறித்து
                          தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டார்.

                          பல தேச எல்லைகளால் சூழ்ந்துள்ள இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், மலைசார்ந்த கடினமான பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினருக்கான நலத்திட்டங்கள் மற்றும் தலைமைப் பயிற்சிபெறும் அதிகாரிகளுக்காக இந்திய இராணுவ
                          அதிகாரிகள் பரிந்துரைக்கும் தரநிலைகள் போன்ற விடயங்களை, ஜெனரல் மனோஜ் முகுந்த், ஜனாதிபதியிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

                          படைப் பிரிவொன்றின் தளபதியாக நியமனம் பெற்ற பின்னரே,தலைமைத்துவப் பயிற்சிகளுக்காக இந்திய இராணுவ அதிகாரிகள் அனுப்பப்படுவர் என்றும் தெரிவித்த ஜெனரல், அந்தந்தத் தரநிலையினர் ஓய்வுபெறும் வயதெல்லைகள் குறித்தும் விவரித்தார்.

                          இலங்கை இராணுவ அதிகாரிகளில் சுமார் ஆயிரம் பேர், ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் பயிற்சிகளைப் பெறுகின்றனர். பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வேண்டுகோளுக்கமைய, மேற்படி இராணுவ
                          அதிகாரிகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக மேலும் 50 இராணுவ அதிகாரிகளுக்கு, எதிர்காலத்தில் விசேட பயிற்சிப் பாடநெறிகளை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், ஜெனரல் மனோஜ் முகுந்த் தெரிவித்தார்.

                          இந்திய அமைதிப் படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, திருகோணமலை – 4ஆம் மைல்கல் பிரதேசத்தில் தான் பணியாற்றிய காலப்பகுதியில் பெற்றுக்கொண்ட அனுபவத்தின் நினைவுகள், தற்போதைய இந்த விஜயத்தின் மூலம் புதுப்பிக்கப்பட்டுள்ளன என்றும், ஜெனரல் மனோஜ் முகுந்த் தெரிவித்தார்.

                          முன்னாள் இராணுவ அதிகாரி என்ற வகையில், அந்த நினைவுகள் பற்றிக் கலந்துரையாடக் கிடைத்தமை தொடர்பில், ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்துக்கொண்டார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                          இந்தக் கலந்துரையாடலில் இந்திய இராணுவத் தலைமையகத்தின் பயிற்சிகளுக்கான கட்டளையிடும் அதிகாரி மேஜர் ஜெனரல் ரஜீவ் தாபர், இராணுவ ஆலோசகர் ஜெனரல் விக்ராந்த் விளாஸ் நாயக், வெளிவிவகாரப் பிரிவின் உறுப்பினர் கேர்ணல் மந்தீப் சிங் தில்லன், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, பாதுகாப்புப் படைகளின்
                          பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா
                          ஆகியோரும், கலந்துகொண்டிருந்தனர்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          கைக்குண்டுடன் பெண் ஒருவர் கைது

                          கைக்குண்டுடன் பெண் ஒருவர் கைது

                          மீகஹவத்த, தெல்கொட பகுதியில் உள்ள வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

                          மீகஹவத்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (13) காலை குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

                          குண்டசாலை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

                          சம்பவம் தொடர்பில் மீகஹவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            வட்டி விகிதங்கள் இலங்கை மத்திய வங்கியின் புதிய அறிவிப்பு

                            வட்டி விகிதங்கள் இலங்கை மத்திய வங்கியின் புதிய அறிவிப்பு

                            இலங்கை மத்திய வங்கியின் நாணய வாரியம் நேற்று (13) நடைபெற்ற கூட்டத்தில், மத்திய வங்கியின் நிலைப்பு வைப்பு வசதி விகிதம் (SDFR) மற்றும் நிலைப்பு கடன் வசதி விகிதத்தை (SLFR) தற்போதைய நிலைகளில் முறையே 5 சதவீதம் மற்றும் 6 சதவீதமாக பராமரிக்க முடிவு செய்தது.

                            உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைமைகள் மற்றும் எதிர்பார்த்த முன்னேற்றங்களை கவனமாக பரிசீலித்த பிறகு வாரியம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.

                            வரவிருக்கும் காலத்தில் பொருளாதாரம் அதன் திறனை அடைய உதவுவதோடு, தகுந்த நடவடிக்கைகளுடன் நடுத்தர காலப்பகுதியில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மட்டத்தில் பணவீக்கத்தை பராமரிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை வாரியம் மீண்டும் வலியுறுத்தியது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              பறக்கும் படை வேட்டை – 81 பேர் கைது

                              பறக்கும் படை வேட்டை – 81 பேர் கைது

                              தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 81 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

                              அத்துடன், கடந்த வருடம் ஒக்டோபர் 30 முதல் இதுவரை  80,790  பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                                Posted in Uncategorized

                                இலங்கையில் பரவும் புதிய நோய்

                                இலங்கையில் பரவும் புதிய நோய்

                                மலேரியா ஒழிக்கப்படாத நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களின் இரத்த மாதிரிகள் கடந்த ஆண்டு முதல் சோதிக்கப்படாததால், இலங்கையில் மலேரியா பரவும் அபாயம் இருப்பதாக, தேசிய மலேரியா ஒழிப்பு பிரசார இயக்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

                                இந்த ஆண்டின் 9 மாதங்களில் 15 மலேரியா நோயாளிகள் கண்டறியப்பட்டதாகவும், கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட 30 நோயாளிகளில், 10 பேர் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.

                                மலேரியா நோய் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் இரத்தப் பரிசோதனை இல்லாமல் சமூகமயமாக்கப்பட்டால், தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

                                காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு, அவர்களின் இரத்த மாதிரிகளை எடுக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என்றும், அவர் கேட்டுக்கொண்டார்

                                  Posted in சினிமா

                                  நயன்தாரா, திரிஷா பாணியில் லட்சுமி மேனன்

                                  நயன்தாரா, திரிஷா பாணியில் லட்சுமி மேனன்

                                  தமிழில் விஷால், ஜெயம் ரவி, அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான லட்சுமி மேனன், தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

                                  விக்ரம் பிரபுவுடன் கும்கி படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் லட்சுமி மேனன். சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன்

                                  உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். 2016-ல் விஜய் சேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்து விட்டு கல்லூரி படிப்பை தொடர்ந்தார். அதன்பிறகு சில வருடங்கள் படங்களில் நடிக்கவில்லை.

                                  பின்னர் புலிக்குத்தி பாண்டி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த அவர், தற்போது ‘ஏஜிபி‘ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இது திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது.

                                  இதுவரை கமர்ஷியல் படங்களில் நடித்த லட்சுமி மேனன், தற்போது முதல் தடவையாக இந்த படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் சவாலான மனநோயாளி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இந்த படத்தை ரமேஷ் சுப்பிரமணியன் இயக்க உள்ளார்.

                                  நயன்தாரா, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து முன்னணி நடிகைகளாக உயர்ந்துள்ளதால், தற்போது லட்சுமி மேனனும் அந்த ரூட்டுக்கு மாறி உள்ளார்.

                                    Posted in சினிமா

                                    பீஸ்ட் நடிகைக்கு பிரபாஸ் படக்குழுவினர் கொடுத்த சிறப்பு பரிசு

                                    பீஸ்ட் நடிகைக்கு பிரபாஸ் படக்குழுவினர் கொடுத்த சிறப்பு பரிசு

                                    பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் பூஜா ஹெக்டேவிற்கு பிரபாஸ் படக்குழுவினர் சிறப்பு பரிசு ஒன்றை கொடுத்து இருக்கிறார்கள்.

                                    பீஸ்ட் நடிகைக்கு பிரபாஸ் படக்குழுவினர் கொடுத்த சிறப்பு பரிசு
                                    பூஜா ஹெக்டே


                                    தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது தமிழில் விஜய்க்கு ஜோடியாக ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு

                                    விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பூஜே ஹெக்டே தெலுங்கில் பிரபாசுடன் இணைந்து ‘ராதே ஷ்யாம்’ என்னும் படத்தில் நடித்துள்ளார்.

                                    பூஜா ஹெக்டே

                                    350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. ராதா கிருஷ்ணகுமார்

                                    இயக்கி இருக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இன்று இப்படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

                                    இவருக்கு ‘ராதே ஷ்யாம்’ படக்குழுவினர் சிறப்பு பரிசு கொடுக்கும் விதமாக புதிய போஸ்டர் ஒன்றை உருவாக்கி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                                      Posted in சினிமா

                                      நாகேஷ், வாலிக்கு சோறு போட்டவர் ஸ்ரீகாந்த்

                                      நாகேஷ், வாலிக்கு சோறு போட்டவர் ஸ்ரீகாந்த்

                                      ழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்தின் மறைவுக்கு பிரபல நடிகர் ஒருவர் அறிக்கை வெளியிட்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருக்கிறார்.

                                      நாகேஷ், வாலிக்கு சோறு போட்டவர் ஸ்ரீகாந்த்… பிரபல நடிகர் உருக்கம்
                                      ஸ்ரீகாந்த்
                                      வெண்ணிற ஆடை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். 50-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். வில்லனாகவும் சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருடன் இணைந்தும் நடித்துள்ளார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார்.

                                      உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தனர். தற்போது நடிகர் சிவகுமார், ஸ்ரீகாந்த்தின் நினைவுக்குறிப்புகளை பகிர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

                                      அதில், எனது அருமை நண்பர் ஶ்ரீகாந்த் 1965 ஏப்ரலில் ஜெயலலிதாவின் முதல் ஜோடியாக ஶ்ரீதரின் வெண்ணிற ஆடை படத்தின் கதாநாயகனாக அறிமுகமானார். ஈரோட்டில் பிறந்து, அமெரிக்க தூதரகத்தில் பணி புரிந்து, கே.பாலசந்தரால் மேடை நடிகராக பிரபலமடைந்த வெங்கி என்கின்ற ஶ்ரீதர், மேஜர் சந்திரகாந்த் என்ற கதையின் நாடகத்தில் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் தான் ஶ்ரீகாந்த். திரைப்படத்தில் அறிமுகமாகும் போது அதே பெயரையே ஒப்புக் கொண்டு நடித்தார்.

                                      சிவகுமார்
                                      ஸ்ரீகாந்துடன் சிவகுமார்

                                      நாகேஷ் நகைச்சுவையில் விஸ்வரூபம் எடுத்தார், வாலி கவிதையால் கரை கண்டார், வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் துவக்க நாட்களில் சாப்பாட்டுக்கே திண்டாட்டம் போட்ட போது, தன் கையால் சமைத்து போட்டு, மாம்பலம் கிளப் ஹவுசில் இருவரையும் காப்பாற்றியவர் ஶ்ரீகாந்த். கதாநாயகனாக நிற்க முடியவில்லை என்றாலும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள், ராஜநாகம்’ போன்ற முக்கிய படங்களில் முத்திரை பதித்தார்.

                                      என்னோடு இணைந்து, ‘மதன மாளிகை, சிட்டுக் குருவி, இப்படியும் ஒரு பெண், அன்னக்கிளி, யாருக்கும் வெக்கமில்லை, நவக்கிரகம்’ என பல படங்களில் நடித்தவர். சமீபத்தில் 80 வயது பூர்த்தி அடைந்த விழா கொண்டாடினார். இன்று அவரது ஒரே மகள் மீரா வீட்டில் ஶ்ரீகாந்த், லீலாவதி, மீரா கணவர் ஷக் அலெக்சாண்டர், பேத்தி காவேரி ஆகியோரையும் சந்தித்து ஓவியம், சினிமா என்று இரண்டு காபி டேபிள் புக்ஸை கொடுத்து வாழ்த்தி வந்தேன். இன்று அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது