மக்கள் முன்பாக பட்டப் பகலில் வாலிபர் வெட்டி கொலை
Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

மக்கள் முன்பாக பட்டப் பகலில் வாலிபர் வெட்டி கொலை

மக்கள் முன்பாக பட்டப் பகலில் வாலிபர் வெட்டி கொலை

இந்தியா டில்லி பகுதியில், அதிக மக்கள் கூடிய பகுதியில் ,வாலிபர் ஒருவர் கோரமாக வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்.

இருபத்தி ஐந்து வயதுடைய வாலிபரை ,துரத்தி வந்த நான்கு பேர் கொண்ட ரவுடி கும்பல்கள், அந்த வாலிபரை சரமாரியாக கத்தியால் குத்தி, படு கொலை செய்தனர்.

இந்த ரவுடிகளின் கண்மூடித்தனமான கத்தி குத்து தாக்குதலினால் , சம்பவ இடத்தில வாலிபர் துடி துடித்து இறந்து போனார் .

இரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபர், சடலம் மீட்கப்பட்டு, உடல் கூற்று பரிசோதனைக்கு எடுத்து செல்ல பட்டுள்ளது .

அதிக மக்கள் பார்க்க ,பட்ட பகலில் நடந்த இந்த வாலிபர் வெட்டி படு கொலை சம்பவம், மக்கள் மத்தியில் ,அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

காவல்துறையினர், வாலிபர் வெட்டி கொலை தொடர்பான ,விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நாள் தோறும் அதிகரித்து செல்லும் ,இவ்விதமான வன்முறைகளை தடுக்க ,காவல்துறையினர் நடவடிக்கை ,மேற்கொள்ள வேண்டும் என ,மக்கள் வேண்டிநிற்கின்றனர் .

மக்கள் முன்பாக பட்டப் பகலில் வாலிபர் வெட்டி கொலை

இந்தியாவில் மக்கள் பார்த்திட இவ்வாறு கத்தி வெட்டு தாக்குதல் நடத்த படுவது ,இயல்பான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது .

தமது கண் முன்பே ஒருவர் வெட்டி கொலை செய்திடும் பொழுது, அதனை தடுத்திட முடியாது, மக்கள் ஓட்டம் பிடிப்பதே ,இவ்வாறான சமூக விரோதிகள் அதிகரிக்க காரணமாக உள்ளது என்கின்றனர் சமூக நலவாதிகள் .

பெண்கள் மீது அசிட் தாக்குதல் ,மற்றும் இது போன்ற வாள்வெட்டு கத்தி வெட்டு தாக்குதல்கள் , அதிகரித்து செல்வதை தடுக்க, மக்கள் ஒத்துழைப்பு மிக முக்கியம் என்கிறது காவல்த்துறை .

ஆனால் காவல்துறை மக்களுக்கு விடுக்கும் எவ்வித விழுப்புணர்வு பரப்புரைகள், புறக்கணிக்க பட்டு ,மக்கள் தப்பித்து செல்லும் நிலையால் ,இவ்வாறான தெரு ரவுடிகள் மக்களை அச்சுறுத்ததும் துன்பியல் நிலை தொடர்கிறது .

பட்ட பகலில் வாலிபனை வெட்டி வீழ்த்தி விட்டு, இரத்த கறையுடன் இயல்பாக தப்பி சென்ற ரவுடிகளின் கொலை வெறியாட்டம் ,சமூக ஊடகங்களில் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளன .

    Posted in இலங்கை செய்திகள்

    கிளிநொச்சியில் வாலிபர் வெட்டி கொலை

    கிளிநொச்சியில் வாலிபர் வெட்டி கொலை

    கிளிநொச்சி பூநகாி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கௌதாாிமுனைக்கு சுற்றுலா சென்றிருந்த இரு

    குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் யாழ்.ஆனைக்கோட்டையை சோ்ந்த இளைஞா் ஒருவா் கூாிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளாா்.

    குறித்த சம்பவம் நேற்று மாலை 3.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

    சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, பூநகாி கௌதாாி முனைக்கு ஆனைக்கோட்டையிலிருந்து 17 போ் கொண்ட குழு சுற்றுலா சென்றுள்ளது.

    இதேபோல் குருநகாில் இருந்து படகு மூலம் மற்றொரு குழு அங்கு சுற்றுலா வந்திருந்த நிலையில் இரு குழுக்களுக்கிடையிலும் உருவான வாய்த்தா்க்கம் பின்னா் மோதலாக மாறிய நிலையில்

    ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியை சோ்ந்த ரஞ்சன் நிரோசன் (வயது22) என்ற இளைஞன்

    கூாிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அம்புலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் உயிாிழந்துள்ளாா்.

    சம்பவத்தையடுத்து குருநகாிலிருந்து படகு மூலம் அங்கு வந்திருந்த குழு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.