Author: நலன் விரும்பி
சீனா வெளிநாட்டு அமைச்சர் மகிந்தாவுடன் பேச்சு
சீனா வெளிநாட்டு அமைச்சர் மகிந்தாவுடன் பேச்சு
இலங்கை வந்தடைந்த சீன வெளிநாட்டது அமைச்சர் பிரதமர் மகிந்தவுடன் பேச்சில் ஈடுபட்டுள்ளார்
இரு நாடுகளின் பாதுகாப்பபு மாற்று பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் இந்த பேச்சு
இடம்பெற்றுள்ளது என தெரிவிக்க படுகிறது
லொறியை துரத்தி சென்ற எம்பி
லொறியை துரத்தி சென்ற எம்பி
இலங்கையில் ஆளும் கோட்டபாய ஆட்சியில் மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்து
வ்ருகின்றனர் ,எரிவாயு ,மின்சார வெட்டு ,அத்தியாவசிய பொருட்களை விலை என தொடர்ந்த இன்னல்களை சநதித வண்ணம் உள்ளனர்
இவ்வேளை எம்பி ஒருவர் டயனா கமகே தமது வீட்டில் எரிவாயு தீர்ந்துள்ள நிலையில் எரிவாயு ஏற்றி சென்ற லொறி ஒன்றை துரத்தி சென்றுள்ளார்
அந்த லொறி எரிவாயுவை இறக்கிய நிலையத்தில் வைத்து அதனை கொள்வனவு சையதுசென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தடம்புரண்ட ரயில் – பயண சேவைகள் பாதிப்பு
தடம்புரண்ட ரயில் – பயண சேவைகள் பாதிப்பு
பதுளையில் இருந்து கண்டி நோக்கி புறப்பட்ட பயணிகள் தொடரூந்து ஒன்று தடம் புராணத்தில்
அவ்வழி போக்குவரத்து தடை பட்டுள்ளது
மீட்பு பணிகள் தொடர்நது இடம்பெற்ற வண்ணம் உள்ளது
பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?
பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் ஒவ்வொரு வார இறுதியில் வெளியேற்றுப் படலம் நடக்கும்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?
கமல்
நடிகர் கமல் தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் இசைவாணி, ராஜு, மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய், சின்ன
பொண்ணு, பாவ்னி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா,
தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அமீர் மற்றும் சஞ்சீவ் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டனர்.
தாமரை
தாமரை
இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் நடைபெற்று குறைந்த வாக்குகள் பெற்றவர் வெளியேறுவார். அதன்படி இதுவரை 13 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். சென்ற வாரம் 12
லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு சிபி வெளியே சென்று விட்டார். தற்போது 6 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், இந்த வாரம் தாமரை வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வைரலாகும் பீஸ்ட் நடிகையின் உடற்பயிற்சி
வைரலாகும் பீஸ்ட் நடிகையின் உடற்பயிற்சி
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் பூஜா ஹெக்டேவின் வீடியோ வைரலாகி வருகிறது.
வைரலாகும் பீஸ்ட் நடிகையின் உடற்பயிற்சி வீடியோ
பூஜா ஹெக்டே
நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். பூஜா ஹெக்டே தமிழில் 2012-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில்
நடிப்பில் வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து தெலுங்கு மற்றும் இந்தியில் பிரபலமானார்.
தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி
வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பூஜா ஹெக்டே தனது சமூக
வலைத்தள பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது
இலங்கையில் கொரானாவுக்கு 13 பேர் மரணம்
இலங்கையில் கொரானாவுக்கு 13 பேர் மரணம்
இலங்கையில் கடந்த தினம் ஏற்பட்ட கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 13 பேர்
பலியாகியுள்ளதக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
எனினும் இவர்கள் வெளியிடும் இழப்புக்களை விட அதிக மரண சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக
சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன
இலங்கையில் நாள் தோறும் விபத்தில் 35 பேர் மரணம்
இலங்கையில் நாள் தோறும் விபத்தில் 35 பேர் மரணம்
இலங்கையில் நாள்தோறும் இடம் பெறுகின்ற பல்வேறு பட்ட விபத்துக்களில் சிக்கி முப்பத்தி ஐந்து
பேர் பலியாகிய வண்ணம் உள்ளதுடன் ,35 ஆயிரம் பேர் படுகாயமடைந்து வைத்யசாலைகளில்
அனுமதிக்க பட்டு வருகின்றனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
மேற்படி விடயம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
சீனா வெளிநாட்டு அமைச்சர் இலங்கை வருகிறார்
சீனா வெளிநாட்டு அமைச்சர் இலங்கை வருகிறார்
இலங்கையில் இடம்பெறவுள்ள சுதந்திர தினத்தை அடுத்து சீனாவின் வெளிநாட்டு அமைச்சர்
Wang Yi began இலங்கை வரவுள்ளதுடன் ,
இவர் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதுடன் ,இலங்கையின் பொருளாதார
அபிவிருத்தி தொடர்பாகவும் பேச உள்ளார் என தெரிவிக்க படுகிறது
மாலைதீவு கடலில் மூழ்கிய இலங்கை படகு – 5 பேர் மாயம்
மாலைதீவு கடலில் மூழ்கிய இலங்கை படகு – 5 பேர் மாயம்
இலங்கை மீனவர்கள் சென்ற படகு ஒன்று மாலைதீவு கடல் பகுதியில் மூழ்கியதில் ஐவர் காணாமல் போயுள்ளனர்
இவ்வாறு காணாமல் போன மீனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணிகளை முடக்கிவிட பட்டுள்ளன
பள்ளத்தில் பாய்ந்த பேருந்து
பள்ளத்தில் பாய்ந்த பேருந்து
ஹட்டன், சலங்கந்தை பகுதியில் தனியார் பஸ்ஸொன்று வீதியைவிட்டு 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும், நடத்துனரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இன்று (08) காலை 8.30 மணியளவில், சலங்கந்தை பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு அருகாமையில் வைத்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
சலங்கந்தை பஸ் தரிப்பிடத்துக்கு பயணிகளை ஏற்றிச்செல்ல பயணித்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இயந்திரகோளாறு காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இவ்விபத்து தொடர்பில் அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை 65 வரை நீடிப்பு
அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை 65 வரை நீடிப்பு
அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65ஆக அதிகரித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்ற சமர்ப்பிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான
வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக
அதிகரிப்பதற்கான முன்மொழிவு பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
12 முதல் 15 வயது வரையான சிறுவர்களுக்கு தடுப்பூசி
12 முதல் 15 வயது வரையான சிறுவர்களுக்கு தடுப்பூசி
12 முதல் 15 வயது வரையான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது.
15 முதல்19 வயது வரையான சிறுவர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. 12 முதல் 15 வயது வரையான பல்வேறு சிக்கல்கள் காணப்பட்ட சிறுவர்களுக்கும் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதன் கீழ் சுமார் 30- ஆயிரம் சிறுவர்கள் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஒரு தடுப்பூசியை மாத்திரம் செலுத்த சுகாதாரப் பிரிவு பரிந்துரை செய்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைக்கு இணைவாக இதுவரை 3 ஆவது தடுப்பூசி செலுத்தப்படாத மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலில் இருந்து பாடசாலை மாணவர்களைப் பாதுகாப்பதற்கு உயர்ந்த பட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைகளை வழமைக்குக் கொண்டு வந்து அனைத்து மாணவர்களும் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கும் வகையில் வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெண்களை துரத்தி குற்றிய குளவிகள்
பெண்களை துரத்தி குற்றிய குளவிகள்
குளவிக் கொட்டியதில் பாதிப்புக்கு உள்ளான பெண்கள் அறுவரும் டிக்கோயா கிளங்கன் மாவட்ட
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிக்கோயா ஒட்டரி தோட்டத்தை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் கொழுந்து பறித்துகொண்டிருந்த போதே குளவிக் கூடு களைந்து கட்டியுள்ளது
30 அமைச்சர்களாக்கும் கோட்டா – குழப்பத்தில் அரசியல்வாதிகள்
30 அமைச்சர்களாக்கும் கோட்டா – குழப்பத்தில் அரசியல்வாதிகள்
அமைச்சரவை இப்படிதான் மாற்றப்படும்
அரசியலமைப்பின் பிரகாரம் தனது அமைச்சரவையை 30 அமைச்சர்களாக மட்டுப்படுத்துவேன் எனவும், அமைச்சரவையில் கூடுதல் உறுப்பினர்களை இணைத்து வாக்குறுதியை மீறப் போவதில்லை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றும் வேலைத்திட்டத்தை
ஆரம்பித்து வைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மொனராகலை சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தும் வேலைத்திட்டம், இன்று (07) முன்னெடுக்கப்பட்டது. இதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஒரே குழுவாக இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அனைத்து பின்னடைவுகளையும் குழுவாக நிவர்த்தி செய்வது கூட்டுப் பொறுப்பாகும்.
குறைபாடுகளை மாத்திரம் விமர்சித்தால் அது குறித்த நபரின் திறமையின்மையையே வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மக்கள் சார்பாக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பது எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்
வயலுக்குள் இராணுவத்தை இறக்கும் கோட்டா
வயலுக்குள் இராணுவத்தை இறக்கும் கோட்டா
சேதன பசளை பயன்பாடு தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில் இராணுவத்தை
பெரும் போக பயிர்ச்செய்கை நடவடிக்கையில் ஈடுபடுத்த போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
சியம்பலாண்வையில் விவசாயிகளை சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
பள்ளிக்கு சென்ற தனுஷ்… வைரலாகும் புகைப்படம்.
பள்ளிக்கு சென்ற தனுஷ்… வைரலாகும் புகைப்படம்.
3 படத்தில் பள்ளி மாணவராக நடித்த தனுஷ், தற்போது மீண்டும் அதுபோன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மீண்டும் பள்ளிக்கு சென்ற தனுஷ்… வைரலாகும் புகைப்படம்
தனுஷ்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் தனுஷ்,
வாத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர்
வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம்,
நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
தனுஷ்
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தனுஷ்
வாத்தியாராக நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், பள்ளி மாணவராக தனுஷ் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது
நடிகை திரிஷாவிற்கு கொரோனா தொற்று
நடிகை திரிஷாவிற்கு கொரோனா தொற்று
பிரபல நடிகர் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன் ஆகியோரை தொடர்ந்து நடிகை
திரிஷாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது சினிமா துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை திரிஷாவிற்கு கொரோனா தொற்று
திரிஷா
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தற்போது 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில், தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையான திரிஷாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுதொடர்பாக திரிஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், புத்தாண்டுக்கு சற்று முன்பு எனக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. எனக்கு அறிகுறிகள் இருந்தன.
தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் பெரிதாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. நான் குணமடைந்து நன்றாக இருப்பதாக உணர்கிறேன். அதற்காக தடுப்பூசிக்கு நன்றி கூறுகிறேன்.
தயவுசெய்து அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்.
விரைவில் நலம்பெற்று வீடு திரும்புவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நான் நலம்பெற வேண்டும் என
பிரார்த்தனை செய்யும் நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி என பதிவிட்டுள்ளார்
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் தலைமை நீதியரசரினால் வழங்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டதுடன்,
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டிருந்த மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவருக்கு நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள், சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்களால் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொரோனாத் தொற்று ஏற்பட்டாலும் பணிக்குச் செல்ல வேண்டும்
கொரோனாத் தொற்று ஏற்பட்டாலும் பணிக்குச் செல்ல வேண்டும்
கொரோனாத் தொற்று ஏற்பட்ட மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்கள், தொடர்ந்து பணிக்குச் செல்ல வேண்டும் என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ” பிரான்ஸில் ஒவ்வொரு நாளும் கொரோனோ பாதிப்பு
அதிகரித்து கொண்டிருக்கிறது. எனவே, மருத்துவமனைகளில் அதிக நோயாளிகள் அனுமதிக்கப்படும் நிலை ஏற்படலாம்.
எனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சுகாதார ஊழியர்கள் சிறிய அறிகுறிகள் ஏற்பட்டால்
அவர்கள் வேலைக்கு செல்லலாம். அவர்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொண்டிருக்க
தேவையில்லை. மருத்துவமனையில் ஊழியர்கள் தட்டுப்பாட்டை சரி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இந்த நடவடிக்கையால் பிறருக்கு தொற்று பரவக்கூடிய அபாயம் இருக்கிறது. எனினும்
அத்தியாவசிய மருந்து தேவைகள் தொடர்ந்து நடைபெற இந்த நடவடிக்கை
மேற்கொள்ளப்படவுள்ளது”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
142 கோழிகள், வெள்ள அனர்தத்தினால் இறந்துள்ளன.
மட்டக்களப்பு, காத்தான்குடியில் கோழிப்பண்ணையில் வளர்க்கப்பட்ட 142 கோழிகள், வெள்ள அனர்தத்தினால் இறந்துள்ளன.
கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த அடைமழையை அடுத்து ஏற்பட்ட
வௌ்ளத்தில், காத்தான்குடி முதலாம் குறிச்சி பகுதியிலுள்ள கோழிப்பண்ணையில் வளர்க்கப்பட்ட
142 கோழிகள் வியாழக்கிழமை (06) இறந்துள்ளன.






















