செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் 5ஆவது மாடியில் இருந்து குதித்து பெண்

மாடியில் இருந்து குதித்த பெண்

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் 5ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

46 வயதுடைய பெண் ஒருவரே இன்று(11) அதிகாலை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

60 மில்லியன் ரூபாய் நிதி மோசடி குற்றச்சாட்டில் குறித்த பெண் கைது செய்யப்பட்டு

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

    சீனா வெளிநாட்டு அமைச்சர்
    Posted in Uncategorized

    கறுப்பு பட்டியலில் மக்கள் வங்கியை நீக்கியது சீனா

    கறுப்பு பட்டியலில் மக்கள் வங்கியை நீக்கியது சீனா

    இலங்கையின் அரச வங்கியான மக்கள் வங்கி, கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின்

    பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகத்தின் கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த ஒக்டோபரில், கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக

    அலுவலகத்தால் மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டது.

    சீன நிறுவனமொன்று இறக்குமதி செய்யத் தீர்மானித்த சேதன உரத் தொகைக்கு பணம் செலுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையே இதற்குக் காரணமாகும்.

    இந்த நிலையில், அண்மையில் குறித்த நிறுவனத்துக்கு இலங்கை 6.9 மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

      Posted in இலங்கை செய்திகள்

      அரசியல்வாதிகளுக்கு பொலிஸ் எச்சரிக்கை

      அரசியல்வாதிகளுக்கு பொலிஸ் எச்சரிக்கை

      அரசியல்வாதிகள் பங்கேற்கும் கூட்டங்கள், நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் மக்களுக்கு

      கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக இலங்கை பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

      முக்கிய அரசியல்வாதிகள் சிலர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் இந்த

      அபாயம் காணப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கூறியுள்ளார்.

      எனவே, அரசியல்வாதிகள் மக்களை ஒன்று கூட்டுவரை தவிர்த்து பொறுப்புடன் செயற்படுமாறு அரசியல்வாதிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

      அத்துடன், அநாவசியமான அரசியல் நிகழ்வுகள், கூட்டங்கள் மற்றும் பொருளாதாரத்துக்கு

      பாதிப்பு ஏற்படுத்தாக ஒன்று கூடல்களில் பங்கேற்பதை தவிர்க்குமாறு பொதுமக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

        Posted in இலங்கை செய்திகள்

        ஊடகவியலாளர்களுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி

        .ஊடகவியலாளர்களுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி

        ஊடகவியலாளர்களுக்கான மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

        ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கான தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது.

        ஊடகவியலாளர்களுக்கான மூன்றாம் கட்ட செயலூக்கி தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நான்கு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டுள்ளன..

        இதன்படி, எதிர்வரும் 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளிலும் காலை 8.30 முதல் மாலை 3.30 வரை ஜயவர்தனபுர வைத்தியசாலையில் ஊடகவியலாளர்களுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

        Posted in இலங்கை செய்திகள்

        அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்

        அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்

        அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானித்திருப்பதாக அமைச்சரவை இணைப்பேச்சாளரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

        சந்தையில் போதுமான அரிசியின் தேவையை உறுதி செய்யும் வகையில் அரிசி இறக்குமதி

        செய்யப்படுகின்றது என்று தெரிவித்த அமைச்சர், இதனால் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

        அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

        இதுதொடர்பான அமைச்சரவையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பினவருமாறு: வருமாறு:

        1. நியாயமான விலையில் அரிசியை விநியோகிப்பதற்காக அரிசி இறக்குமதி செய்தல்

        திறந்த சந்தையில் போதுமானளவு அரிசித் தொகை பேணுவதை உறுதி செய்வதற்காக 200,000 மெட்ரிக்தொன் நாட்டரிசி மற்றும் சம்பா அரிசிகளுக்கு பதிலீடாக புசு GR Short Grain Rice வகை

        அரிசி 100,000 மெட்ரிக் தொன்களை இறக்குமதி செய்வதற்காக வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

        அவுஸ்திரேலிய உயரிஸ்தானிகர்
        Posted in இலங்கை செய்திகள்

        அவுஸ்திரேலிய உயரிஸ்தானிகர் மட்டக்களப்பிற்கு விஜயம்

        அவுஸ்திரேலிய உயரிஸ்தானிகர் மட்டக்களப்பிற்கு விஜயம்

        அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹெலி மட்டக்களப்பின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி

        தொடர்பான விடயங்களை பார்வையிடுவதற்காக இன்று (10) மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

        இதன்போது அவுஸ்திரேலிய உயரிஸ்தானிகருக்கும் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

        உயர்ஸ்தானிகர் மாவட்டத்தின் சுற்றுலாத்துறை தொடர்பான அபிவிருத்தி விடயங்களை அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்ததுடன் புராதன சுற்றுலாத் தளமாகிய டச்சுக் கோட்டையினையும் பார்வையிட்டார்.

        டச்சுக் கோட்டையின் 400 ஆண்டு நிறைவினை முன்னிட்டு, திறன் உள்ளடங்கிய அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளும் ளு4ஐபு நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட விசேட நூல் மற்றும்

        மட்டக்களப்பு டச்சுக் கோட்டையின் அபிவிருத்தி எனும் நூலும் அவுஸ்திரேலிய உயரிஸ்தானிகர் டேவிட் ஹெலியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.

        மட்டக்களப்பில் அமைக்கப்பட்டு வரும் பொது நூலகத்தின் மேல் தளத்தில் இலத்திரனியல்

        வாசிகசாலை ஒன்றை அமைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தித்தருமாறு அரசாங்க அதிபர் உயரிஸ்தானிகரிடம் இதன்போது கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

          அஜித்
          Posted in சினிமா

          ஏமாற்றிய அஜித், போஸ்டர் அடித்து ஒட்டிய ரசிகர்கள்.

          ஏமாற்றிய அஜித், போஸ்டர் அடித்து ஒட்டிய ரசிகர்கள்.

          ஏமாற்றம்., ஏமாற்றம்., ஏமாற்றம்., மனசு ரொம்ப வலி(மை)க்குது என்று அஜித் ரசிகர்கள் அவர்களுடைய ஆதங்கத்தை போஸ்டர் ஒட்டி தெரிவித்துள்ளனர்.

          ஏமாற்றிய அஜித், போஸ்டர் அடித்து ஒட்டிய ரசிகர்கள்
          அஜித்


          அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வலிமை. இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருந்தது. இந்நிலையில் படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்த நிலையில் ஓமிக்ரான் பரவல் தீவிரம்

          காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது என அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.

          பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படம் வெளியாகவில்லை என்ற வேதனையில் அதனை

          வெளிப்படுத்தும் விதமாக அஜித் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் அதிவேகமாக பரவிவருகிறது.

          கோவை ரயில் நிலையம் அருகே அஜித் புகைப்படங்களுடன் ஒட்டப்பட்ட அந்த போஸ்டரில்

          குறிப்பிட்டிருப்பது, “ஏமாற்றம்! ஏமாற்றம்!! ஏமாற்றம்!!! மனசு ரொம்ப வலி(மை)க்குது it’s ok” என்று அச்சிட்டு அவர்களின் மனக்குமுறல்களை போஸ்டரின் வாயிலாக தெரிவித்துள்ளனர்.

            Posted in சினிமா

            என்னைக் காப்பாற்றியது அவர்கள்தான் – சமந்தா

            என்னைக் காப்பாற்றியது அவர்கள்தான் – சமந்தா

            சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற பாடல் மூலம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நடிகை சமந்தா, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசியிருக்கிறார்.

            என்னைக் காப்பாற்றியது அவர்கள்தான் – சமந்தா
            சமந்தா


            தமிழ், தெலுங்கு மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய பாடல் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமந்தா பேசும்போது,

            உங்கள் வீட்டில் யாராவது மன அழுத்தத்திலிருந்தால் அவர்களோடு உரையாடுங்கள். அப்போதுதான் அவர்கள் அதிலிருந்து விடுபட்டு இயல்பாக வாழ முடியும். எனக்கு இப்போது

            ஏற்பட்டிருக்கும் நிலையிலிருந்து என்னை மீட்டுக்கொண்டு வந்தது என்னுடைய நண்பர்கள்தான். அவர்கள் துணையில்தான் நான் அடுத்த கட்ட வெற்றியை அடைய இருக்கிறேன் என்று பேசியிருக்கிறார்

              கள்ள காதலி
              Posted in இலங்கை செய்திகள்

              கள்ள காதலியை கொன்று கிணற்றில் வீசிய காதலன் – முல்லையில் பயங்கரம்

              கள்ள காதலியை கொன்று கிணற்றில் வீசிய காதலன் – முல்லையில் பயங்கரம்

              முள்ளியவளை பூதன் வயல் கிராமத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்ப பெண்

              கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

              கடந்த 08 ஆம் திகதியன்று முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் தென்னந்தோட்ட கிணறு ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் 36 அகவையுடைய குடும்ப பெண் ஒருவர் உடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

              இந்த சம்பவத்தின் போது குறித்த பெண்ணின் கள்ளக்காதலனாக வாழ்ந்து வந்த நபரை விசாரணைக்கு அழைத்து சென்ற முள்ளியவளை பொலிசார் பின்னர் நேற்று (09) அவரை கைது செய்துள்ளனர்.

              பொலிசாரால் கைது செய்யப்பட்ட 33 அகவையுடைய கிளிநொச்சி ஜெயபுரத்தினை சேர்ந்த ஆணினை இன்று (10) முள்ளியவளை பொலிசார் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள்.

              முல்லைத்தீவு நீதிமன்றின் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

              இதன்போது கொலைக் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரை எதிர்வரும் 20.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

                சீனா வெளிநாட்டு அமைச்சர்
                Posted in இலங்கை செய்திகள்

                தமிழர் பகுதிகளில் அகல கால் பதிக்கும் சீன நிறுவனம் – வேலை வாய்ப்பாம்

                தமிழர் பகுதிகளில் அகல கால் பதிக்கும் சீன நிறுவனம் – வேலை வாய்ப்பாம்

                தமிழர் தாயாக பகுதிகளை இலக்கு வைத்து சீன நிறுவனம் நிறுவ படுகிறது ,இந்த நிறுவனம்

                தமிழர்கள் வாழ் வாதாரத்தை பெருக்குவதாக கூறி கொண்டு அங்கு தனது அகல கால் பாதிப்பை நிலை நாட்டை முயல்கிறது

                இதற்கு ,கோட்டா ,மகிந்தாவுக்கு பல கோடி லஞ்சமாக வழங்க பட்டுள்ளதாக செய்திகளும் கசிகிறது

                நாட்டில் விலைவாசிகளை உயர்த்தியும் பொருட்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதன் ஊடக

                இந்த நிறுவனங்களை அங்கு அகல கால் ஊன்ற வைக்கும் நகர்வு முன்னெடுக்க பட்டுள்ளது

                  Posted in இலங்கை செய்திகள்

                  கணவனை அசிட் ஊற்றிக் கொன்ற மனைவி , மாமி கைது

                  கணவனை அசிட் ஊற்றிக் கொன்ற மனைவி , மாமி கைது

                  தினமும் மதுபோதையில் வந்து தகராறை ஏற்படுத்தும் இரண்டு பிள்ளைகளின் தந்தை மீது அசிட் வீச்சு தாக்குதலை நடத்தி, கோடரியால் வெட்டிக்​ கொன்ற சந்தேகநபர்கள் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

                  உயிரிழந்தவரின் மனைவியும் மாமியாருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

                  இந்த மாதம் 20ஆம் திகதி வரை சந்தேகநப​ர்களை விளக்கமறியலில் வைக்குமாறு, இரத்தினபுரி பதில் நீதவான் பிரியங்க குணவர்ணசூரிய நேற்று உத்தரவிட்டுள்ளார்.

                  35 வயதுடைய நபரே இவ்வாறு அசிட் வீச்சுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதுடன், 31 வயதுடைய அவருடைய மனைவியும் 52 வயதுடைய மாமியாரு​மே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

                  இந்த மாதம் 8ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் உயிரிழந்த நபர் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளதுடன், கையில் கத்தியை வைத்தக்கொண்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

                  இதன்போது தனது தம்பியின் வீட்டுக்கு உயிரிழந்தவரின் மனைவி சென்ற நிலையில், அவர் அங்கேயும் சென்று தகராறு செய்துள்ளார்.

                  இதன்போதே, ஆத்திரமடைந்த மனைவி தனது கணவன் மீது அசிட்டை ஊற்றியுள்ளதுடன், தம்பியின் வீட்டிலிருந்த கோடரியால் தாக்கியுள்ளார்.

                  இதன்போது காயமடைந்த நபர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

                  இதனையடுத்து, சந்தேகநபர்களான தாயும் மகளும் குருவிட்ட பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டு நேற்று (9) இரத்தினபுரி பதில் நீதவான் பிரியங்க குணவர்ணசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்

                    Posted in Uncategorized

                    குடும்பத்தை கடத்தி 75 லட்சம் கொள்ளையடித்த கொள்ளையர்கள் மடக்கி பிடிப்பு

                    குடும்பத்தை கடத்தி 75 லட்சம் கொள்ளையடித்த கொள்ளையர்கள் மடக்கி பிடிப்பு

                    இலங்கை குடா ஓயா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பூசகர் மற்றும் அவரது மனைவி

                    பிள்ளைகளை வானில் கடத்தி சென்று எழுபத்தி ஐந்து லட்சம் கொள்ளையடித்த நல்லவர் அடங்கிய குழு ஒன்று காவல்துறையின் விசேட வேட்டையில் சிக்கினார்

                    இந்த கடத்தல் காரர்கள் பயன்படுத்திய வான் உள்ளிட்டவை மீட்க பட்ட நிலையில் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                      பேரூந்து டிப்பர் மோதல்
                      Posted in இலங்கை செய்திகள்

                      பேரூந்து டிப்பர் மோதல் – 26 பேர் காயம்

                      பேரூந்து டிப்பர் மோதல் – 26 பேர் காயம்

                      அம்பாறையில் இருந்து திருகோணமலை போக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேரூந்து

                      ஒன்றுடன் டிப்பர் ரக வாகனம் மோதியதில் அதில் பயணித்த 26 பேர் படுகாயமாடைந்தனர்

                      காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,மேற்படி

                      விபத்து தொடர்பில் மூதூர் போலீசாரை விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

                        விக்ரம் வேதா
                        Posted in சினிமா

                        வைரலாகும் விக்ரம் வேதா படத்தின் இந்தி பர்ஸ்ட் லுக் போஸ்டர்

                        வைரலாகும் விக்ரம் வேதா படத்தின் இந்தி பர்ஸ்ட் லுக் போஸ்டர்

                        சைப் அலி கான், ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் விக்ரம் வேதா இந்தி ரீமேக் படத்தின் வேதா கதாப்பாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

                        வைரலாகும் விக்ரம் வேதா படத்தின் இந்தி பர்ஸ்ட் லுக் போஸ்டர்
                        விக்ரம் வேதா


                        புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர்

                        உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

                        இப்படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர். தமிழில் விக்ரம் வேதா

                        இயக்கிய புஷ்கர் – காயத்ரி இப்படத்தை இந்தியிலும் இயக்கி வருகின்றனர். ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இப்படம் குறித்து அறிவிப்புகள் வெளியாகி வந்தன. அதனை தொடர்ந்து

                        இப்படத்தின் வேதாவுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

                        வேதாவின் பர்ஸ்ட் லுக்
                        வேதாவின் பர்ஸ்ட் லுக்

                        இதனை தொடர்ந்து வேதாவுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

                          நடிகை ஷோபனா
                          Posted in சினிமா

                          நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான்

                          நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான்

                          முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் தமக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நடிகை ஷோபனா தெரிவித்துள்ளார்.

                          நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் பாதிப்பு
                          நடிகை ஷோபனா

                          இது நம்ம ஆளு, எனக்குள் ஒருவன், பொன்மனச் செல்வன், பாட்டுக்கு ஒரு தலைவன், தளபதி, சிவா உள்பட பல படங்களில் நடித்துள்ளார் நடிகை ஷோபனா. தெலுங்கு, மலையாளத்திலும் அதிக

                          படங்களில் நடித்துள்ளார். தற்போது நடன பள்ளி நடத்தி வருகிறார். இந்நிலையில், நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

                          இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போதும் எனக்கு ஒமைக்ரான் பாதிப்பு

                          உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல் வலி, குளிர் நடுக்கம், தொண்டை கரகரப்பு ஆகியவை எனக்கு

                          அறிகுறிகளாக இருந்தன. முதல் நாளில் இத்தனை அறிகுறிகள் இருந்தன. பின்னர் படிபடியாக அந்த அற்குறிகள் குறையத்தொடங்கியது.

                          தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக்கொண்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அது

                          வைரசில் இருந்து 85 சதவிகிதம் பாதுகாப்பு அளிக்கிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள

                          வேண்டும். வைரஸ் பெருந்தொற்று இந்த ஒமைக்ரானுடன் முடிவுக்கு வர வேண்டும் என பிரார்த்திக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

                            சீனா வெளிநாட்டு
                            Posted in இலங்கை செய்திகள்

                            சீனா வெளிநாட்டு அமைச்சருடன் கோட்டா சந்திப்பு

                            சீனா வெளிநாட்டு அமைச்சருடன் கோட்டா சந்திப்பு

                            இலங்கை வந்தடைந்துள்ள சீனாவின் வெளிநாட்டு அமைச்சருடன் இலங்கை அதிபர்

                            கோட்டாபாயாவும் சந்தித்து பேசியுள்ளார்

                            இந்த சந்திப்பின் பொழுது இரு நாட்டு வர்த்தகம் மற்றும் பாதுகாப்பபு அபிவிருத்தி தொட்ரபில்

                            கலந்துரையாட பட்டுள்ளது என தெரிவிக்க படுகிறது

                              பொலிஸாரின் வலையில்
                              Posted in Uncategorized

                              பொலிஸாரின் வலையில் சிக்கிய 33 அழகிகள்

                              பொலிஸாரின் வலையில் சிக்கிய 33 அழகிகள்

                              தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கடவத்தையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற விருந்தொன்றை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

                              களனி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் இன்று (09) அதிகாலை 3.00 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                              சோதனையின் போது, ​​ஹோட்டலில் 33 பெண்கள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

                              பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட பெண்கள் அனைவரும் இன்று மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

                              கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                                Posted in Uncategorized

                                கொழும்பு கடலில் முதலை – மக்களுக்கு எச்சரிக்கை

                                கொழும்பு கடலில் முதலை – மக்களுக்கு எச்சரிக்கை

                                இலங்கை கொழும்பு கடல் பகுதியிகள் முதலைகள் உலவி வருவதால் மீனவர்கள் மற்றும்

                                மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க ப்ட்டுள்ளது


                                குறித்த கடல் பகுதியில் மக்கள் குளித்து வருகின்ற நிலையில் இந்த அவசர அறிவிப்பு விடுக்க பட்டுள்ளது

                                  கடலில் மிதக்கும்
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  முல்லை கடலில் மிதக்கும் புதைக்க பட்ட வாகனங்கள்

                                  முல்லை கடலில் மிதக்கும் புதைக்க பட்ட வாகனங்கள்

                                  முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் கடற்கரை பகுதியில் மண்ணுள் புதையுண்ட உழவு இயந்திரத்தின் பாகங்கள் சில மீனவர்களால் இனங்காணப்பட்டுள்ளது.

                                  தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் நிலையில்

                                  கடற்கரையில் அலையின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.

                                  இந் நிலையில், நேற்று (08) காலை புதுமாத்தளன் கடற்கரைப்பகுதியில் கடந்த காலத்தில்

                                  புதைக்கப்பட்ட அல்லது கடலில் அள்ளுண்டு போன உழவு இயந்திரத்தின் பாங்கள் சில கரையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

                                  உழவு இயந்திரத்தின் பெரிய ரயர்கள் உள்ளிட்ட பாகங்கள் கடற் கரையில் தென்பட்டுள்ளதுடன் இரும்பு துண்டுகளும் இனங்காணப்பட்டுள்ளது.

                                  2009 ஆம் ஆண்டு போரின் இறுதி நாட்களில் மக்களால் கைவிடப்பட்ட உழவு இயந்திரத்தின் பாகங்களாக இருக்கலாம் என மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

                                  சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து

                                  முல்லைத்தீவு பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன், உழவு

                                  இயந்திரத்தின் பாகங்களை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டிப்பார்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    இலங்கையில் அரிசி விலை ஏற்றம் – மக்கள் அவதி

                                    இலங்கையில் அரிசி விலை ஏற்றம் – மக்கள் அவதி

                                    இலங்கை ஒரு கிலோ அசிசி தற்போது 160 முதல் 180 ரூபா வரை விற்க படுகிறது ,இதனால் மக்கள்

                                    மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

                                    அன்றாட அத்தியாவசிய பொருட்களின் விலை திடீரென அதிஅக்ரித நிலையில் ஆளும்

                                    ஆட்சியாளர்கள் மீது மக்கள் கடு கோபத்தில் உறைந்துள்ளனர்