Posted in சினிமா

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் சிம்பு

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் சிம்பு

தனுஷின் பிரிவிற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவிருக்கும் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் சிம்பு?
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்


சமீபத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா இவர்களின் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்திருந்தனர். பலர் இவர்களுக்கு ஆறுதலும் மனதைரியமும் அளித்து வந்தனர். இந்த பிரிவு அவருடைய ரசிகர்களையும் திரைதுறையினரையும்

அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை வைத்து 3 என்ற திரைப்படத்தையும், கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற

திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். சினிமா சண்டைக் கலைஞர்கள் குறித்த ஆவணப்படம் ஒன்றையும் அவர் எடுத்துள்ளார்.

ஐஸ்வர்யா-தனுஷ் திருமணம் உறவு முறிந்த பிறகு, ஐஸ்வர்யா தனது இயக்குனர் வேலையில் ஆர்வம் காட்டுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. அதன்படி

ஐஸ்வர்யா தனது முசாபிர் மியூஸிக் ஆல்பம் வீடியோ வேளைகளை ஆரம்பித்து அது குறித்த அறிவிப்புகளை தொடர்ச்சியாக அறிவித்து வந்தார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்க தயாராகி வருவதாகவும், அதில் நடிகர் சிம்பு நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. சினிமா

துறையில் தனுஷுக்கு நேர்எதிர் போட்டியாளராக கருதப்படும் சிம்புவை வைத்து ஐஸ்வர்யா படம் இயக்கப்போவதாக வரும் தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

    Posted in Uncategorized

    புலிகள் ஆவணங்கள் மீட்பு

    புலிகள் ஆவணங்கள் மீட்பு

    திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகிதத்துக்கிடமான

    ஆவணங்கள் சில, நேற்று (09) மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

    இப்புத்தகங்கள், விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

    இதில் விடுதலைப் புலிகளால் பாவிக்கப்பட்ட பற்றுச்சீட்டுக்கள், நிர்வாகம்

    செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் புத்தகங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

    காணி உரிமையாளர், நிலக்கடலை பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்காக நிலத்தை பன்படுத்திக் கொண்டிருந்தபோது இந்த ஆவணங்கள் காணப்பட்டுள்ளன.

    இதனையடுத்து, ஈச்சிலம்பற்று பொலிஸாருக்கு காணி உரிமையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இவை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

      Posted in இலங்கை செய்திகள்

      பணம் இன்றி தவிக்கும் இலங்கை – மக்கள் தலையில் ஏற்ற பட்ட சுமைகள்

      பணம் இன்றி தவிக்கும் இலங்கை – மக்கள் தலையில் ஏற்ற பட்ட சுமைகள்

      அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம்

      மாதாந்தம் சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர் சேமிக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி கணித்துள்ளது.

      எவ்வாறாயினும், 600 க்கும் மேற்பட்ட பொருட்களின் வரிகளை அதிகரிக்க மத்திய வங்கி முன்மொழிந்திருந்தது.

      ஆனால், நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதியை

      கட்டுப்படுத்தும் வகையில் 367 அத்தியாவசியமற்ற பொருட்கள் மட்டுமே உரிமத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

      இறக்குமதிக் கட்டுப்பாட்டிற்காக மத்திய வங்கி முன்மொழிந்த பொருட்களின்

      பட்டியலின்படி, ஒவ்வொரு மாதமும் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாடுகளுக்குச் செல்லும் என்று மதிப்பிடப்பட்டது.

      இதை கட்டுப்படுத்தவே 600 க்கும் மேற்பட்ட பொருட்களின் வரிகளை அதிகரிக்க மத்திய வங்கி முன்மொழிந்திருந்தது

        Posted in சினிமா

        விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை


        பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் தளபதி 66 படத்தில் பிரபல நடிகை நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


        விஜய் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார்

        இயக்கிவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விறுவிறுப்பாக

        இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

        இப்படத்தை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். ‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ள

        இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இதில் நடிக்கவுள்ள நடிகை குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது.

        விஜய், ராஷ்மிகா மந்தனா
        ராஷ்மிகா மந்தனா

        இந்நிலையில் ‘தளபதி 66’ படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா ‘தளபதி 66’

        படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இவர் நடித்த புஷ்பா திரைப்படம் அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        யாழில் இளம் பெண் கைது

        யாழில் இளம் பெண் கைது

        யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன் தங்கியிருந்த யுவதியொருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

        குறித்த யுவதி யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட போலி அடையாள அட்டையை காண்பித்து திருநெல்வேலி பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்துள்ளார்.

        அவரது நடவடிக்கைகளில் வீட்டு உரிமையாளர் சந்தேகம் கொண்டமையால் இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

        இத்தகவலின் பிரகாரம் வீட்டுக்கு சென்ற பொலிஸார் வாடகை அறையில் தங்கியிருந்த யுவதியிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

        அதன்போது யுவதி மருத்துவ பீட மாணவி அல்ல என்பதனையும் அது போலியான அடையாள அட்டை என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

        இதனையடுத்து யுவதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

          Posted in Uncategorized

          மாட்டு வண்டியில் பயணிக்கும் அரசியல்வாதிகள்

          நாட்டில் அதிகரித்துள்ள விலைவாசி, பொருட்கள் தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட

          பல்வேறு காரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கரைதுறைப்பற்று பிரதேச

          சபை உறுப்பினர்கள் இன்று மாட்டு வண்டியில் பிரதேச சபைக்கு சென்றுள்ளனர்.

          நாட்டின் இந்த நிலைமைகளுக்கு அரசு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் எனக் கோரி கவனயீர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

          முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மாட்டு வண்டியில்

          கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளர்,
          உப தவிசாளர் உறுப்பினர்கள் பிரதேசசபையை நோக்கி இன்று நகர்ந்து செல்கின்றனர்

            Posted in Uncategorized

            பயத்தில் பாராளுமன்றுக்கு வராது தப்பி ஓடிய பசில்

            பயத்தில் பாராளுமன்றுக்கு வராது தப்பி ஓடிய பசில்

            நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச சபைக்கு வருவது இல்லை. அவர்தான் நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். ஆனால், அவருக்குப் பதிலாக வேறு

            உறுப்பினர்கள் பதில் கூறி வருகின்றனர். நிதி அமைச்சரைச் சபைக்கு வரச் சொல்லுங்கள். இல்லையென்றால் சபாநாயகர் நிதி அமைச்சருக்குக் கட்டளை அனுப்புங்கள்.

            -இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம், எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்தார்.

            நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணியளவில் கூடியது. இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய லக்‌ஷ்மன் கிரியெல்ல எம்.பி.,

            நிதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே இருக்கின்றது. டிசம்பர் 10ஆம் திகதியே நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச சபையில் உரையாற்றினார். அதன்பின்னர் நாட்டின் நிதி

            நிலைவரம் தொடர்பில் கடந்த மூன்று மாதங்களாக நிதி அமைச்சர் நாடாளுமன்றத்துக்குத் தெளிவுபடுத்தவில்லை.

            எனவே, நாடாளுமன்றம் வந்து தெளிவுபடுத்துமாறு, நிதி அமைச்சருக்கு சபாநாயகர் உத்தரவிடவேண்டும் – என்றார்

              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கையில் 4 மணிநேரம் மின்சாரம் வெட்டு

              இலங்கையில் 4 மணிநேரம் மின்சாரம் வெட்டு

              இலங்கையில் இன்று நான்கு மணிநேரம் மின்சார வெட்டு என மின்சார வாரியம் அறிவித்துள்ளது

              நாள் தோறும் பலமணி நேரம் மின்சார வெட்டு இடம்பெற்று வருவதால் மக்கள் ஆளும்

              ஆட்சியர்கள் மீது கொதிப்பில் உறைந்துள்ளனர்

                Posted in Uncategorized

                யாழில் பஸ் சாரதியின் மூக்கை வெட்டிய நபர்

                யாழில் பஸ் சாரதியின் மூக்கை வெட்டிய நபர்

                யாழில் தனியார் பேருந்தை இடைமறித்த நபரொருவர் சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.

                யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நேற்று (08) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த குறித்த தனியார் பேருந்தினை நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வீதியில் வழிமறித்த நபரொருவர், சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.

                அதனை அடுத்து அங்கு நின்றவர்கள் சாரதியை மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

                சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

                  Posted in இலங்கை செய்திகள்

                  துறைமுகத்தில் தேங்கி கிடக்கும் உணவுகள் – பணம் இன்றி தவிக்கும் இலங்கை

                  துறைமுகத்தில் தேங்கி கிடக்கும் உணவுகள் – பணம் இன்றி தவிக்கும் இலங்கை

                  வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 2500 கொண்டனர் அடங்கிய உணவு பொருட்களை கொழும்பு துறைமுகத்தில் கப்பல்களில் தேங்கி கிடக்கின்றன

                  குறித்த உணவு பொருட்களுக்குரிய பணத்தை இலங்கையால் செலுத்த முடியாத நிலையில் இவை தேங்கி கிடப்பதாக தெரிவிக்க படுகிறது

                  நாட்டை மகிந்த ,கோட்டா குடும்பம் கொள்ளையடித்து வரும் நிலையில் ,இவ்விதம் நாடு கீழ் நிலைக்கு சென்றுள்ளதாக நோக்கர்கள் தெரிவிக்கினற்னர்

                    Posted in Uncategorized

                    யாழில் -போதையில் தந்தை ரகளை – காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுமி

                    யாழில் -போதையில் தந்தை ரகளை – காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுமி

                    யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் தந்தை ஒருவர் தினமும் போதையில் வந்து தாயாரை கொடுமை படுத்தி சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளார் ,

                    இந்த சம்பவத்தை பார்வையிட்ட சிறுமி அதில் இருந்து தப்பிக்க காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார் ,

                    இவ்விதம் தஞ்சம் அடைந்த 12 வயது சிறுமி நன்னடைத்தை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
                    இப்படியும் சீரழியும் குடும்பங்கள்

                      Posted in இலங்கை செய்திகள்

                      கோட்டா மாமியார் மரணம்

                      கோட்டா மாமியார் மரணம்

                      இலங்கை ஆளும் ஜனாதிபதி கோத்தபாயவின் மனைவியின் தயார் அமெரிக்காவில்

                      தனது 89 தாவது வயதில் மரணமாகியுள்ளார்

                      இவரது இறுதி நிகழ்விற்கு கோட்டபாய மனைவி செல்ல தயாராகி வருவதாக தெரிவிக்க படுகிறது

                        Posted in Uncategorized

                        சவூதி விமானத்தை சுட்டு வீழ்த்திய போராளிகள்

                        சவூதி விமானத்தை சுட்டு வீழ்த்திய போராளிகள்

                        ஏமன் நாட்டின் வடக்கு பகுதி Hajjah மேலாக பறந்து உளவு பார்த்தலில் ஈடுபட்டு

                        கொண்டிருந்த சவூதி நாட்டின் உளவு விமானம் ஒன்றை ஏமன் போராளிகள் குழுவினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்

                        ஈரான் ஆதரவுடன் இயங்கி வரும் கவுதிய படைகள் இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளமை குறிப்பிட தக்கது

                          Posted in Uncategorized இலங்கை செய்திகள்

                          இலங்கையில் 68 வயதுடைய யானை மரணம்

                          இலங்கையில் 68 வயதுடைய யானை மரணம்

                          இலங்கையில் அதிக வயது கூடிய யானை என்ற பெயரை பெற்று விளங்கி வந்த

                          Nadugamuwa Raja என்ற யானை வெள்ளவெறியா பகுதியில் பலியாகியுள்ளது ,இந்த

                          யானையின் உடலை கண்டு தரிசித்து
                          செல்ல மக்கள் முண்டியடித்த வண்ணம் உள்ளனர் ,இது முறைப்படி அடக்கம் செய்ய படும் என தெரிவிக்க பட்டுள்ளது

                            Posted in Uncategorized

                            ரஷியாவில் 850 மக்டொனல்ஸ் உணவகங்கள் அடித்து பூட்டு

                            ரஷியாவில்; 850 மக்டொனல்ஸ் உணவகங்கள் அடித்து பூட்டு

                            அமெரிக்காவின் முதல்தர உணவகமாக விளங்கி வரும் மக்டொனால்ஸ் நிறுவனம்

                            ரஷியாவில் உள்ள தனது 850 உணவகங்களை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது

                            இந்த உணவகங்களில் வேலை புரியும் 62 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளன


                            ரசியாவின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்குடன் மக்களை

                            அரசுக்கு எதிராக திருப்பி விடும் நோக்கில் இவை அமெரிக்காவின் பின்புலத்தில் ஏற்படுத்த
                            பட்டு வருகின்றமை கவனிக்க தக்கது

                              ரஷியா இராணுவம்
                              Posted in Uncategorized

                              ரஷிய ராணுவ தாக்குதலில் 61 மருத்துவமனைகள் அழிப்பு

                              ரஷிய ராணுவ தாக்குதலில் 61 மருத்துவமனைகள் அழிப்பு

                              ரஷிய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.

                              ரஷிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 61 மருத்துவமனைகள் அழிந்தன – உக்ரைன் மந்திரி
                              ரஷிய ராணுவம்

                              உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி இன்றுடன் 14 நாட்கள் ஆகிறது. இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை நிறுத்தும்படி அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

                              ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இருதரப்பிலும் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

                              இந்நிலையில், ரஷிய ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 61 மருத்துவமனைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன என உக்ரைன் சுகாதாரத்துறை மந்திரி விக்டர் லியாஷ்கோ தெரிவித்துள்ளார்.

                              இதுதொடர்பாக பேசிய அவர், ரஷிய படையெடுப்பாளர்கள் ஜெனீவா உடன்படிக்கையை மீறுகிறார்கள். அவர்களால் ஜெனீவா ஒப்பந்தத்தை மீறுவது மற்றும்

                              மனிதாபிமான பாதைகளை அனுமதிக்காதது குறித்து உக்ரைன் உலக சுகாதார நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது என்றார்

                                Posted in சினிமா

                                சிவகார்த்திகேயனை பாராட்டிய விஜய்

                                .சிவகார்த்திகேயனை பாராட்டிய விஜய்

                                நடிகர் சிவகார்த்திகேயனை அரபிக் குத்து பாடலுக்காக விஜய் பாராட்டியதாக சமீபத்திய நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.

                                சிவகார்த்திகேயனை பாராட்டிய விஜய்
                                விஜய் – சிவகார்த்திகேயன்


                                விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து செல்வராகவன், பூஜா ஹெக்டே, யோகி பாபு, கிங்ஸ்லி உள்ளிட்ட பலர்

                                நடித்து வருகின்றனர். படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பீஸ்ட் படம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவுள்ளது.

                                பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ‘அரபிக்குத்து’ பாடல் அனைவரையும் கவர்ந்து பல சாதனைகளை முறியடித்தது. வித்யாசமான வரிகள் இடம்பெற்ற இந்த பாடலை நடிகர்

                                சிவகார்த்திகேயன் எழுத்தியுள்ளார். இப்பாடலுக்கு திரைதுறையினர், ரசிகர்கள் என பலரும் நடனமாடி பதிவிட்டு வருகின்றனர்.

                                இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் இப்பாடல் குறித்தும் விஜய் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். இப்பாடலை கேட்டு விஜய் சார் உங்களிடம் என்ன சொன்னார் என்ற கேள்விக்கு, இந்த பாடலை

                                முன்பே படமாக்கிவிட்டார்கள். அதனால் விஜய் சார் இந்த பாடல் குறித்து என்ன நினைத்தார் என்று தெரியவில்லை, சமீபத்தில் தான் இதன் புரோமோ வீடியோ ஷுட்

                                செய்தோம். அப்போது தான் விஜய் சார் தொலைபேசியில் “சூப்பர் பா. எழுதிக் கொடுத்ததிற்கு ரொம்ப தேங்க்ஸ் பா. அரபிக் எல்லாம் பயங்கரமா எழுதுறியே” என்று கூறினார்

                                  Posted in Uncategorized

                                  நாயை அடிப்பது போல் என்னை அடித்தார் – நடிகை குமுறல்

                                  நாயை அடிப்பது போல் என்னை அடித்தார் – நடிகை குமுறல்

                                  நடிகை கங்கனா ரணாவத் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பூனம் பாண்டே பங்கேற்று கணவரால் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி பேசினார்.

                                  நாயை அடிப்பது போல் என்னை அடித்தார் – கவர்ச்சி நடிகை குமுறல்
                                  பூனம் பாண்டே


                                  இந்தி பட உலகின் பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. இவரும், சாம் பாம்பே என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கோவாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தன்னை அடித்து சித்ரவதை

                                  செய்ததாக கோவா போலீசில் கணவர் மீது பூனம் பாண்டே புகார் அளித்தார். இதையடுத்து சாம் பாம்பேவை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது

                                  நடிகை கங்கனா ரணாவத் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பூனம் பாண்டே பங்கேற்று கணவரால் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி பேசினார்.

                                  பூனம் பாண்டே கூறும்போது, “நான் சாம் பாம்பேவுடன் 4 வருடங்கள் தொடர்பில் இருந்தேன். அந்த 4 வருடங்களும் சரியாக தூங்கவில்லை. சாப்பிடவில்லை. தினமும்

                                  அவரிடம் அடிவாங்கினேன். யாருக்கும் போன் செய்யக்கூடாது என்று செல்போனை உடைத்தார். நாயை அடிப்பது போன்று என்னை அடித்தார். ஒரு அறைக்குள் வைத்து

                                  பூட்டினார். இதனால் பல முறை தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தேன்’’ என்றார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

                                    Posted in Uncategorized

                                    லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக போராட்டம் – மக்களை படம் பிடித்த சிங்கள உளவுத்துறை -படங்கள் உள்ளே

                                    லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக போராட்டம் – மக்களை படம் பிடித்த சிங்கள உளவுத்துறை

                                    இன்று பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன் இலங்கை இனவாத அரசின் அப்பாவி பெண்களுக்கு எதிரான உரிமை மீறல்கள் ,வன்முறைகளை சுட்டி காட்டி,
                                    குற்றங்களை உடனடியாக நிறுத்த கோரி ஒரு ஆர்ப்பாட்டத்தினை இன்று செவ்வாய்

                                    கிழமை (08:03:2022) மதியம் 01 மணியளவில் தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் அமைதியான முறையில் கோவிட் விதிகளை பின்பற்றி பிரித்தானிய சட்டவிதிகளுக்கமைய ஏற்பாடு செய்திருந்தனர் .இப்போராட்டத்தில்

                                    .தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் இலங்கை அரசாங்கத்தை நோக்கி
                                    இலங்கையில் இன்றும் எமது கண்களை போன்று பாதுகாப்பாகவும் ,மரியாதையோடும் நடத்த படவேண்டிய தமிழ் பெண்கள் பல சொல்லமுடியாத பல இன்னல்களையும்

                                    ,துன்பங்களையும் சிங்களஅரசாலும் ,சிங்கள இராணுவ படைகளாலும் அனுபவித்தவண்ணம் உள்ளர்கள் .அவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்களையும் ,சித்திரைவதைகளும் உடனடியாக நிறுத்த வலியுறித்தி கோஷங்களாக

                                    முழங்கினர்.இதில் கலந்து கொண்ட அனைவரும் வன்முறைக்கு எதிரான தங்கள் எதிர்ப்பையும் ,பெண்களுக்கான தங்கள் ஆதரவையும் ஆணித்தரமாக தெரிவித்தனர்.இதில் கோஷங்களாக

                                    *தமிழ்ப் பெண்களைக் கொடுமைகளிலிருந்து காப்பாற்றுங்கள்
                                    *தமிழ் பெண்களை மதித்தல்

                                    *தமிழ் பெண்களை துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்துங்கள்
                                    *எங்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் தேவை

                                    என தங்கள் கோரிக்கைகளை மொழிந்தனர்

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    செல்பி மோகம் – ஆற்றில் விழுந்த மரணம்

                                    செல்பி மோகம் – ஆற்றில் விழுந்த மரணம்

                                    இப்பலோகம பகுதியில் உள்ள ஜயா ஆற்றின் கரையில் உள்ள மரத்தில் ஏறி செல்ஃபி

                                    எடுக்க முயன்ற சிறுவன் ஒருவன் கால் தவறி ஆற்றில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                    ஆற்றில் விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                                    இப்பலோகம பிரதேசத்தை சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                    நேற்று (07) மாலை காணாமல் போன குழந்தை தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

                                    பொலிஸார் மற்றும் அப்பகுதி மக்கள் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.