Author: நலன் விரும்பி
இலங்கை வந்த 3 எண்ணெய் கப்பல்
இலங்கை வந்த 3 எண்ணெய் கப்பல்
இலங்கை கடற்பரப்பிற்கு வந்த மூன்று எரிவாயு கப்பல்களில் ஒன்றிற்கான பணம்
செலுத்தப்பட்டதை அடுத்து முத்துராஜவெல எரிவாயு முனையத்திற்கு எரிவாயு அனுப்பும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எரிவாயு ஏற்றி வந்த மூன்று கப்பல்கள் வத்தளை, உஸ்வெட்டகேயாவ மற்றும் தல்தியவத்தை கடற்பரப்பில் சுமார் ஏழு நாட்களாக நங்கூரமிட்டு
நிறுத்தப்பட்டிருந்தன.
இதன்படி, தல்தியவத்தை எரிவாயு நிலையத்திலிருந்து முத்துராஜவெல எரிவாயு
முனையத்திற்கு 2,500 மெற்றிக் தொன் எரிவாயுவை வெளியேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எரிவாயுவை ஏற்றி வந்த மற்றுமொரு கப்பலுக்கான கொடுப்பனவுகள் இன்று செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி சூடு இருவர் காயம்
துப்பாக்கி சூடு இருவர் காயம்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுவூற்று கிராம சேவகர் பிரிவில் நேற்றிரவு (7)
இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் படுகாயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
30 வயதுடைய நஜிம்கான் வசிம், 32 வயதுடைய சாகுல் ஹமீத் முகம்மது ரமீஸ் ஆகிய
இருவருமே இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை தேடி பொலிஸார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மணல் வியாபாரத்தில் ஏற்பட்ட தகராறுகளை இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
கொவிட் தொற்றுக்குள்ளான இளைஞர், யுவதிகளுக்கு பாலியல் பிரச்சினைகள்
கொவிட் தொற்றுக்குள்ளான இளைஞர், யுவதிகளுக்கு பாலியல் பிரச்சினைகள்
கொவிட் தொற்றுக்குள்ளான இளைஞர், யுவதிகளுக்கு பாலியல் பிரச்சினைகள் அல்லது கருவுறுதல் தாமதமாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடல் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் பிரியங்கார ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொண்டால் மலட்டுத்தன்மை
ஏற்படக்கூடும் என வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் பெரும் அரசியல் சதி- ஐநாவில் முழக்கம்
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் பெரும் அரசியல் சதி- ஐநாவில் முழக்கம்
இலங்கையில் 2019 ஏப்பிரலில் நடந்த ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதல் பெரும் அரசியல் சதி வலைத் திட்டத்தின் ஒரு பகுதிதான்.”
-இவ்வாறு ஜெனிவா அமர்வில் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார் கொழும்புப் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை.
ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் பிரதான அரங்கில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:-
“2019 ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 14 நாடுகளைச் சேர்ந்த 47 வெளிநாட்டவர்கள், 52 குழந்தைகள் உட்பட 269 பேர் உயிரிழந்தனர். 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்தப் படுகொலைகள் சில இஸ்லாமிய தீவிரவாதிகளின் வேலையாகத்தான் இருக்கும் என்றே முதல் மனப்பதிவு ஏற்பட்டது. ஆனால், தொடர்ந்து நடைபெற்ற புலனாய்வுகள் இந்தப் படுகொலைகள் மிகப்பெரும் அரசியல் சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்பதைச் சுட்டி நிற்கின்றன.
நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் – சிவில் அமைப்புக்கள் உண்மைகளைப் பின்பற்றிச் சென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும் – இலங்கையின் தற்போதைய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கத் தவறிவிட்டது.
தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக்கொணர்ந்து, அதற்குக் காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்குப் பதிலாக நீதிக்காக குரல் எழுப்புபவர்களைத் துன்புறுத்தவும் அச்சுறுத்தவும் முயற்சிக்கப்படுகின்றது.
இதனால் இந்தக் கொடூரமான குற்றங்கள் நடந்து ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரும் அந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி நாம் இன்னும் அறியாமல் இருட்டில் இருக்கின்றோம்.
இது பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை கடுமையாக மீறும் விடயம் என்பதால், கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலினால் தொடங்கப்பட்ட சாட்சிய சேகரிப்பைத் தொடரவும், அதன்மூலம் ஈஸ்டர் ஞாயிறு படுகொலையின் உண்மைத்தன்மையை வெளிக்கொண்டு வருவதற்கான விசாரணை வழிமுறை ஒன்றை வகுக்கவும் ஆதரவு தருமாறு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் மற்றும் அதன் அனைத்து உறுப்பு நாடுகளையும் நாங்கள் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” – என்றா
இலங்கைப் பெண்கள் சமூகப் பொறுப்புடன் முன்னேறி வருகின்றனர்
இலங்கைப் பெண்கள் சமூகப் பொறுப்புடன் முன்னேறி வருகின்றனர்
வீரப் பெண் தலைமுறையின் வரலாற்றை பின்பற்றி இலங்கைப் பெண்கள் இன்று சமூகப் பொறுப்புடன் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:
வாழ்த்துச் செய்தி – 2022 மார்ச் 08
ஒரு தாயாக, மகளாக, சகோதரியாக மற்றும் பாட்டியாக ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வழிநடத்தும் துணிச்சலான பெண்களின் அர்ப்பணிப்பை
நினைவுகூரும் சர்வதேச மகளிர் தினத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு நிலையான சமுதாயத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் கருணை, ஆளுமை ஆகியவற்றைப் பகிரும் ஒரு பெண்ணின் பெருமையை ஒரு நாளுக்கு மட்டும் வரையறுக்க முடியாது.
மனித இனத்தை மாற்றிய அனைத்து தீர்க்கதரிசிகளின் பிறப்பு முதல், மனித இருப்பை அடையும் வரை அனைத்திற்கும் பெண்தான் காரணம் என்பது இரகசியமல்ல.
இதனால்தான், பிரபல ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கோர்க்கி அவர்கள், சூரிய ஒளி மற்றும் தாய்ப்பாலில் இருந்தே உலகம் படைக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
வீரப் பெண் தலைமுறையின் வரலாற்றை பின்பற்றி இலங்கைப் பெண்கள் இன்று சமூகப் பொறுப்புடன் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர்.
இந்த தைரியமான பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக நமது அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றும் என்று நான் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறேன்.
“நிலையான எதிர்காலத்திற்கு இன்று பாலின சமத்துவம்” என்ற சர்வதேச எண்ணக்கருவின் கீழ் கொண்டாடப்படும் இம்முறை சர்வதேச மகளிர் தினத்தில்
உங்களுக்கு எதிரான வன்முறைகளும் பாகுபாடுகளும் இலங்கை சமூகத்திலிருந்து துடைத்தழிக்கப்படும் தினத்தை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும்.
“அவள் ஒரு நாடு, ஒரு தேசம், ஒரு உலகம்” என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தின் ஊடாக நாட்டின் உயிர்நாடியாக விளங்கும் பெண்களின் பங்கு சரியான முறையில் பாராட்டப்படும் என நம்புகிறேன்.
கொவிட் தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் ஏற்பட்ட பல்வேறு சிரமங்களை சமாளிப்பதற்கு தொலைநோக்கு சிந்தனையுடன், சிக்கனமாகவும் பொறுமையாகவும்
செயற்படும் பெண்கள் நாட்டில் காணப்படும் சவால்களை வெற்றி கொள்வதற்கு பெற்றுக் கொடுக்கும் சிறந்த பங்களிப்பு நம் அனைவருக்குமான தைரியமாகும்.
நீங்கள் “அவளுக்கு” பெருமை சேர்ப்பதற்கு இருமுறை சிந்திக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மஹிந்த ராஜபக்க்ஷ
சிரியாமீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
சிரியாமீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
சிரியா தலைநகர் டமகஸ் நகரில் உள்ள முக்கிய இலக்கை குறிவைத்து இஸ்ரேல்
நடத்திய ஏவுகணை தாக்குதலில் இருவர் பலியாகியுள்ளனர் என சிரியா தெரிவித்துள்ளது
எனினும் இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை
போரினை முடிவுக்கு கொண்டுவர ரசியாவுக்கு சீனா அழுத்தம்
போரினை முடிவுக்கு கொண்டுவர ரசியாவுக்கு சீனா அழுத்தம்
உக்கிரேன் ரசியவனுக்கு இடையில் ஏற்பட்ட போரினை முடிவுக்கு கொண்டும் வரும் படி
ரசியாவை சீனா கேட்டு வருகிறது ,இந்த அமைதி நடவடிக்கையை மேற்கொள்ள சீனா
ரசியாவுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன
போரினை முடிவிக்கு கொண்டு வந்து இயல்பு நிலைக்கு மீள்வும் இரு நாடுகளும் இயங்குவதற்கு
உக்கிரேனை ஆக்கிரமித்த பின்னரே ரசியா இந்த அமைதிக்கு உடன்படும் என எதிர்பார்க்க படுகிறது
உலக சந்தையில் எகிறிய ஒயில் விலை
உலக சந்தையில் எகிறிய ஒயில் விலை
ரசியா ,உக்கிரேன் போரினை அடுத்து உலக சந்தையில் ஓயிலின் விலை பரல் ஒன்றுக்கு 140 டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது
இந்த விலை 2008 ஆம் ஆண்டிற்கு பின்னர் 14 வருடங்களின் பின்னர் அதிகரித்துள்ளது
உலக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,அது போலவே தங்கத்தின்
விலையிலும் ஏற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை கைது செய்ய கோரி பிரிட்டன் எம்பி கோரிக்கை
இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை கைது செய்ய கோரி பிரிட்டன் எம்பி கோரிக்கை
இலங்கை இராணுவ தளபதியு ம் தமிழ் இன படுகொலையாளியுமான சவேந்திர சில்வாவை கண்டா இடத்தில கைது செய்யும் நடவடிக்கையை மனித உரிமை
கண்காணிப்பகம் மற்றும் பிரிட்டன் மேற்கொள்ள வேண்டும் என பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் கவுரவ Virendra Sharma அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்
ரசியாவின் இராணுவ தளபதிகளுக்கு இந்த பிடியாணை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கை இவரால் முன் வைக்க பட்டுள்ளது உலகமக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது
அவரது முழுமையான கோரிக்கை விபரம் கீழே
News:
Mr Virendra Sharma MP releases video publicly calling for Sanction against Shavendra Silva.
Another British Member of Parliament, Hon. Virendra Sharma MP, has joined a number of British MPs, human rights organizations and Tamil activists who have been calling on the British Foreign Secretary to impose Sanctions against the Sri Lankan War Criminal including , the notorious General Shavendra Silva, the current chief of Sri Lankan Army.
Mr Sharma released a video publicly calling upon the British government to impose sanctions against Shavendra Silva and others accused of war crimes in Sri Lanka. This video was released by him following a productive meeting with him which was chaired by Mr Geeth Kulasegaram who briefed him on this campaign. Miss Ambikai K Selvakumar, Director of the ICPPG and Mr Sen Kandiah, Chair of the Tamils for Labour also spoke and enlightened him with information on the on-going violations in Sri Lanka and insisted on the need to call the UK to take meaningful action. A number of torture survivors living in Mr Sharma’s constituency also attended and shared their terrific experiences with him in order to canvass his support. As a result of the meeting, Mr Sharma promised to extend his full support and wrote to the FCDO. In addition, he has also released this video confirming his support and publicly demanding the UK for immediate action.
In January 2019, the ITJP submitted a dossier containing evidence of Shavendra Silva’s involvement in the war crimes during the war that ended in 2009. Subsequently, In May 2021, the ICPPG also made submissions on the basis of testimonies from the most recent victims of the on-going systematic torture and sexual violence currently being committed by the Sri Lankan armed forces under the command of Shavendra Silva. Since then, the Tamil Youth in the UK launched an online signature campaign and began to organise meetings with British MPs to canvass their support. On 18th May 2021 an Early Day Motion (EDM 64) was also tabled by an MP of the Scottish National Party. International organizations including REDRESS and Sri Lanka Campaign also joined the drive.
In his video, Mr Sharma stated “I am calling on the British government to impose sanction on General Shavendra Silva, a senior commander of Sri Lankan Army. He’s accused of responsibilities for War crimes during the last war in Sri Lanka and torture in ongoing repression in Sri Lanka”.
He further insisted that the UK government should follow the lead of the United States which has already placed sanctions and travel ban on Silva and his family.
He went on to strongly suggest that “the British government should take necessary action to prove its commitment to deliver justice to the victims of genocide in Sri Lanka”.
Mr Sharma concluded by stating “Tamils in Ealing, Southall, across UK and around the world deserve Justice”.
As a result of the on-going tireless campaign being taken forward by the Tamil Youth and victims in the UK, the support from the British Parliamentarians are on the raise and the pressure on the FCDO is mounting. 32 cross-party MPs also already signed the EDM and an wide range of senior politicians including the Leader of the Liberal Democrat Party Rt. Hon. Sir Ed Davey, Labour Shadow Minister for Asia Hon. Stephen Kinnock, Chair of the APPG for Tamils Hon. Elliot Colburn, Rt. Hon. Theresa Villiers, Rt. Hon. Stephen Timms, Sam Tarry, Bob Blackman, Siobhan McDonagh and several others have written to the FCDO and released videos calling for sanctions. The Tamil Youth and the victims are determined to continue until they see real action by the FCDO.
ரகுமானின் பதிவிற்கு பதிலளித்த இளையராஜா
ரகுமானின் பதிவிற்கு பதிலளித்த இளையராஜா
ஏ.ஆர்.ரகுமானின் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் இளையராஜா பதிவிட்டிருக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமானின் பதிவிற்கு பதிலளித்த இளையராஜா
இளையராஜா – ஏ.ஆர்.ரகுமான்
‘துபாய் எக்ஸ்போ’ நிகழ்ச்சிக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமானின் பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு சென்று அவருடன் இளையராஜா எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வந்தது. இதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஏ.ஆர்.ரகுமான், “மேஸ்ட்ரோ இளையராஜா
அவர்களை பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. எதிர்காலத்தில் எங்கள் ஸ்டூடியோவில் அவர் இசையமைப்பார் என நம்புகிறேன்” என பதிவிட்டிருந்தார்.
ஏ.ஆர்.ரகுமான் – இளையராஜா
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமானுக்கு பதிலளிக்கும் வகையில் இளையராஜா பதிவிட்டிருக்கிறார். அதில், ”கோரிக்கை
ஏற்கப்பட்டது. விரைவில் இசையமைப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த பிப்ரவரி தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும் கொரோனா
பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று பதிவிட்டார். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர், மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படம் ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
முக கவசம் அணியுங்கள். தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள். பாதுகாப்புடன் இருங்கள் என்றும் அவர் கேட்டு கொண்டார். அவருக்கு பாதிப்பு இருப்பது பற்றி அறிந்ததும், குணமடைந்து விரைவில் திரும்ப வேண்டும். கவனமுடன் இருங்கள் என அவருடைய ரசிகர்கள் பதிவிட்டனர்.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் செய்த நிலையில், கடந்த ஜனவரி 17ந்தேதி இரவு, நடிகர் தனுஷ் தனது மனைவியை விவாகரத்து செய்து பிரிவதாக திடீர் என்று அறிக்கை வெளியிட்டார். அதில், கடந்த 18 ஆண்டுகள் தம்பதியராகவும், பெற்றோர்களாகவும் ஒன்றாக பயணித்தோம். தற்போது நானும், ஐஸ்வர்யாவும் அவரவர் பாதையில் தனித்தனியாக பிரிந்து செல்ல முடிவு செய்து உள்ளோம். எங்களது இந்த முடிவை மதிக்கும்படி அனைவரையும் கேட்டு கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுபற்றி அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனாவுக்கு முன்னும், பின்னும்… மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். காய்ச்சல் மற்றும் தலைச்சுற்றல் இருப்பது போன்று உணர்கிறேன். ஆனால், உங்களுக்கு ஊக்கமளிக்க கூடிய வகையில், பன்முக தன்மை கொண்ட உங்களிடம் வந்து, உங்களுடன் நேரம் செலவிட கூடிய மருத்துவர்களை நீங்கள் சந்திக்கும்போது, இந்த காய்ச்சலெல்லாம் மோசமென தோன்றவில்லை. என்னவொரு தொடக்கம் உங்களை சந்திப்பதில் மகளிர் தினத்திற்கான கொண்டாட்டம் தொடங்குகிறது மருத்துவர் பிரீத்திகாசாரி அவர்களே! என அதில், தெரிவித்து உள்ளார்.
அதனுடன், தனக்கு சேவை செய்யும் மருத்துவருடன் புன்சிரிப்புடன் இருக்க கூடிய புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து உள்ளார். இந்த தகவல் பற்றி அறிந்ததும் சமூக ஊடக பயனாளர்கள் பலரும், குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என வலைதள பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்
24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு
24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான 13 வாகன விபத்துகளில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிரிபாவ, இங்கிரிய, புவரசங்குளம், அநுராதபுரம், பொரளை, பதியத்தலாவ மற்றும்
ஹபரணை ஆகிய பகுதிகளில் விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், ஆனமடுவ, நவகுருதுவத்தை, இரத்தினபுரி, அங்குனகொலபெலஸ்ஸ, கிளிநொச்சி மற்றும் வெலிக்கடை ஆகிய இடங்களில் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
உயிரிழந்தவர்கள் 12 வயதுக்கும் 78 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும்
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்த எண்ணெய் விலை
13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்த எண்ணெய் விலை
ரஷ்யா – யுக்ரைன் போர் நெருக்கடி நிலையை அடுத்து, கடந்த 13 வருடங்களுக்குப்
பின்னர் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 130 டொலராக உயர்வடைந்துள்ளது.
இதனால் மசகு எண்ணெய் இறக்குமதியாளர்களும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்
மைத்திரி அதிரடி: மொட்டிலிருந்து விலக முடிவு
மைத்திரி அதிரடி: மொட்டிலிருந்து விலக முடிவு
தற்போதைய அரசாங்கத்தில் இருந்து முழுமையாக விலகுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தீர்மானம், கட்சியின் தொகுதி அமைப்பாளர்களால் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில்
கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் முகாமையாளர்களுடனான விசேட சந்திப்பிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
“தற்போதை அரசியல் பிரச்சினைக்கு மத்தியில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை என்ன?” என இந்தக் கூட்டத்தின் போது மைத்திரிபால சிறிசேன கேட்டுள்ளார்.
அப்போது அங்கிருந்தவர்கள், அரசாங்கத்தில் இருந்து விலகவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
எனினும், “அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு இது சரியான தருணம் அல்ல, சரியான சந்தர்ப்பத்தில் விலகுவோம்” என மைத்திரிபால சிறிசேன பதிலளித்துள்ளார்.
இந்நிலையிலேயே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை
பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்தில் நாளை (08) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது
- இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 100 பாலஸ்தீனியர்களுக்கு காசாவில் இறுதிச் சடங்கு
- லெபனானின் அரப் சலீம் பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக் கொண்டது
- லெபனானின் அரப் சலீம் நகரில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி
- ஜனாதிபதியின் தலைமையில் இன்று முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்தவுள்ளது NPP
- பூட்டானுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரினி திரும்பினார்
ஆரையம்பதியில் சர்வதேச மகளிர் தினம்
.ஆரையம்பதியில் சர்வதேச மகளிர் தினம்
மார்ச் 08ஆந் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர்
தினத்தின நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் ஆரையம்பதி சிறுவர் பூங்காவிற்கு அருகில் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தின்
தலைமையில் (06) திகதி ஆரம்பமானதுடன் இதில் குடும்ப வன்முறை தொடர்பான வீதியோர நாடகம் இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வில் உதவி பிரதேசசெயலாளர் திருமதி.வி. லோகினி, கிராமசேவை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , ஆரையம்பதி கிழக்கு
மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், சிறுவர் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
ஜனாதிபதி,பிரதமர் தலைமையில் பாரிய சீமேந்துத் தொழிற்டசாலை திறப்பு
ஜனாதிபதி,பிரதமர் தலைமையில் பாரிய சீமேந்துத் தொழிற்டசாலை திறப்பு
ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலவில் அமைக்கப்பட்ட அதிநவீன வசதிகளைக் கொண்ட பாரிய சீமெந்துத் தொழிற்சாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோர் தலைமையில் இன்று (07) திறக்கப்படவுள்ளது.
மாகம்புர லங்வா தொழிற்சாலையானது 63 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இது அந்த வலயத்தின் மிகப்பெரிய சீமெந்து உற்பத்தித் தொழிற்சாலையாகும்.
முதற்கட்டமாக வருடாந்தம் இரண்டு தசம் எட்டு மில்லியன் மெற்றிக்தொன் சீமெந்து உற்பத்தி செய்யப்படும். ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்படும் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் கொழும்புத் துறைமுக நகர் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்டு முன்னணி நிர்மாண வேலைத்திட்டங்களுக்குத் தேவையான சீமெந்து வழங்கலை இந்தத் தொழிற்சாலையே மேற்கொள்ளும் என நிறுவனத்தின் தலைவர் நந்தன லொக்குவிதான தெரிவித்தார்.
இந்தத் தொழிற்சாலையின் உற்பத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து நாட்டின் சீமெந்துத் தட்டுப்பாடு இல்லாமல் போகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இரண்டாவது திருமணம் செய்யும் இசையமைப்பாளர் இமான்
இரண்டாவது திருமணம் செய்யும் இசையமைப்பாளர் இமான்
சமீபத்தில் மனைவியை பிரிந்த இசையமைப்பாளர் டி.இமான் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாவது திருமணம் செய்யும் இசையமைப்பாளர் இமான்
டி.இமான்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.இமான். இவர்
இசையில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல படங்களுக்கு இமான் இசையமைத்து
வருகிறார். சமீபத்தில் அவருடைய மனைவி மோனிகாவை பிரிந்து விட்டதாக அறிவித்தார்.
2008-ஆம் ஆண்டு மோனிகா என்பவரை இமான் திருமணம் செய்து கொண்டார். இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே விவாகரத்து செய்ததாக கூறப்பட்டு பிறகு டிசம்பர் இறுதியில் அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தார்.
இந்நிலையில் சட்ட ரீதியாக தனது மனைவியை பிரிந்த டி.இமான், தற்போது சென்னையை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்
வெளியாகியுள்ளது. இவர்கள் திருமணம் குறித்து இரு வீட்டாரும் பேசி வருவதாக கூறப்படுகிறது. இந்த திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
.தனுஷ் பட நாயகியின் கவர்ச்சி புகைப்படம்
.தனுஷ் பட நாயகியின் கவர்ச்சி புகைப்படம்
அனேகன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த அமைரா தஸ்தூர் கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தனுஷ் பட நாயகியின் கவர்ச்சி புகைப்படம்
அமைரா தஸ்தூர்
இந்தி திரையுலகில் அறிமுகமாகி பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அனேகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர்.
மறுஜென்ம காதல் கதையாக உருவான இப்படத்தில் வெவ்வேறு ஜென்மங்களில் தனுசுடன் இணையும் காதலியாக நடித்தார். ஆனால் ஒரு படத்தோடு பாலிவுட்டுக்கு சென்றுவிட்டார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள சைக்காலஜிகல் திரில்லர் படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக அமைரா நடித்திருக்கிறார்.
இவர் அவ்வப்போது பதிவிடும் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஏராளம். தற்போது இவர் நீண்ட தென்னை மரத்தில் படுத்திருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை சமூக
வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது
உக்ரைன் ஆயுதங்களைக் கீழே போடும் வரை தாக்குதலை நிறுத்தப் போவதில்லை- ரசியா
உக்ரைன் ஆயுதங்களைக் கீழே போடும் வரை தாக்குதலை நிறுத்தப் போவதில்லை- ரசியா
உக்ரைனில் போரை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும்படி உலக நாடுகளை உக்ரைன் மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உக்ரைன் ஆயுதங்களைக் கீழே போடும் வரை தாக்குதலை நிறுத்தப் போவதில்லை- புதின் உறுதி
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் இன்று 11-வது நாளாக நீடிக்கிறது. முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. உக்ரைனின்
கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. மேலும் அந்நாட்டின் 2 அணுமின் நிலையங்களும் ரஷியா வசம் சென்றுள்ளது.
தலைநகர் கீவ் மற்றும் 2-வது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிரமாக உள்ளன. அந்நகரங்களில் தாக்குதல் கடுமையாக இருந்து
வருகிறது. ஏவுகணை வீச்சு, வான் வெளி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கீவ், கார்கிவ் நகருக்குள் ரஷிய படையினர் புகுந்து சண்டையிட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவமும் கடுமையாக போராடி வருகிறது. விரைவில் கீவ் நகருக்குள் விரைவில் பெருமளவில் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதலில் ஈடுபடலாம் என்ற பீதி நிலவுகிறது.
தாக்குதலை நிறுத்தும்படி உக்ரைன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக ஐ.நா. சபையிடமும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டு மக்களும் போரை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும்படி உலக நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், துருக்கி அதிபர் எர்டோகன் ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, உக்ரைன் நிலவரம் குறித்து எடுத்துரைத்த எர்டோகன்,
உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த புதின், உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்திவிட்டு ஆயுதங்களை கீழே போடும் வரை தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என்றார்.
உக்ரைன்-ரஷியா போர் பதற்றத்துக்கு மத்தியில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன், நட்பு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இன்று மால்டோவாவில் முகாமிட்டுள்ளார். அங்கு பேசிய அவர், அமெரிக்கா தனது போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்குவதற்காக, போலந்துடன் ஒப்பந்தம் செய்ய
உள்ளதாகவும், இதுகுறித்து அமெரிக்கா தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். ஆனால், எப்போது ஒப்பந்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கவில்லை
இராணுவ சிப்பாயாக மாறிய உக்கிரேன் அதிபர்
இராணுவ சிப்பாயாக மாறிய உக்கிரேன் அதிபர்
உக்கிரேன் நாட்டினை ரசியா இராணுவம் ஆக்கிரமித்து வரும் நிலையில் தமது
நாட்டினை காப்பாற்றி கொள்ளும் முகமாக இராணுவ உடையணிந்து களத்தில் தான் நிற்பதாக காண்பிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
தோற்போம் என அறிந்தும் இவ்விதம் முட்டாள்தனமாக செயல் ஆற்றும் ஒரு தலைவர் உள்ளாரா என கிண்டல் புரிபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்














