ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்த ஜனாதிபதி

புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்த ஜனாதிபதி

7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்குச் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவுஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களை பேர்த்தில் சந்தித்தார்.

இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் பொருளாதார நவீனமயமாக்கல் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கமளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, காலநிலை மாற்றம், சுற்றுலா மற்றும் பொருளாதார அபிவிருத்தி போன்ற துறைகளில் அரசாங்கத்திற்கு உதவ விரும்புவதாக சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கையர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வொங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

காதல் உணர்வை அதிகரிக்கும் சொக்லெட்
Posted in இலங்கை செய்திகள்

காதல் உணர்வை அதிகரிக்கும் சொக்லெட்

காதல் உணர்வை அதிகரிக்கும் சொக்லெட்

பிப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்கான கொண்டாட்டங்கள் பிப்ரவரி 7 ஆம் திகதியே தொடங்கும் நிலையில், மூன்றாம் நாளாக சொக்லெட் தினம்

கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், உங்கள் அன்பு பிரியருக்கு நீங்கள் பரிசளிக்கும் சொக்லெட்டில் உள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.

சொக்லெட் ‘ட்ரைப்டோஃபன் ’என்கிற மூலப்பொருளை அதிகமாக கொண்டிருக்கிறது. அது நம் உடலில் உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடிய செரோடின் அமிலத்தை சுரக்கச் செய்கிறது. அதேபோல் கஃபைன் என்கிற மூலப்பொருளும் அதில் இருக்கிறது. இது மெல்லிய உணர்வை அதாவது

ரொமாண்டிக் மூடை தூண்டுகிறது. அதனால்தான் காதலர் தினத்தில் சாக்லெட்டை பரிமாறிக் கொள்கின்றனர். நீங்களும் உங்கள் காதலியிடமிருந்து ஒரு முத்தம் வேண்டுமெனில் பெரிய சொக்லெட்டை வாங்கிக் கொடுங்கள்.

காதல் உணர்வை அதிகரிக்கும் சொக்லெட்

உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் ஆற்றல் சொக்லெட்டில் இருக்கிறது. இதை ‘ஜர்னல் ஆஃப் நியூட்ரீஷியன்’ அமைப்பு ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளது.

சொக்லெட் உண்பதால் மூலையின் செயல்பாடுகள் கூர்மையாகின்றன. ஹார்வர்ட் ஆராய்ச்சியில் தினம் இரண்டு டம்ளர் சூடான சொக்லெட் ஷேக் உண்பதால் மூளையின் செயல் ஆற்றல், நினைவாற்றல் , அறிவாற்றல் போன்றவை அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

சொக்லெட் உண்பதால் இதயம் தொடர்பான பிரச்னைகள் வராது என பி.எம்.ஜே. நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது.

தினமும் 100 கிராம் சொக்லெட்டை சாப்பிட்டு வந்தால் பக்கவாதம் வராது என ஜர்னல் ஹார்ட் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. கனாவில் நிகழ்த்திய ஆய்வில் சாக்லெட் உட்கொள்வதால் பக்கவாதம் இருப்போருக்கு 22 சதவீதம் குறைய வாய்ப்பு என தெரிவித்துள்ளது.

இத்தனை நன்மைகளா ? என அதிகமாக சொக்லெட்டுகளை உண்டாலும் அது ஆபத்தானதே. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது அனைவருக்கும் தெரியும். எனவே அளவாக உண்ணுங்கள் ; ஆரோக்கியமாக வாழுங்கள்.

14000 வீடுகளுக்கு இலவச சூரிய ஔி மின்சாரம்
Posted in இலங்கை செய்திகள்

நாட்டில் மின் நெருக்கடி ஏற்படும் எச்சரிக்கை

நாட்டில் மின் நெருக்கடி ஏற்படும் எச்சரிக்கை

உத்தேசிக்கப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க மின் நிலையத் திட்டங்களை நடைமுறைப்படுத்தாவிட்டால், இந்த வருடத்தில் நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நிதி திவால்நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்பிப்பதற்காக மின்சார சபையின் அதிகாரிகள் பாராளுமன்ற விசேட குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் இதன்போது கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி தொடர்பில் விடயங்கள் கேட்கப்பட்டன.

நாட்டில் மின் நெருக்கடி ஏற்படும் எச்சரிக்கை

இதன்போது, கருத்து தெரிவித்த மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா, கடந்த அரசாங்கங்கள் எடுத்த சில தீர்மானங்கள் மற்றும் மின் உற்பத்தித் திட்டங்களுக்கு அமைவாக மின் உற்பத்தி நிலையங்கள் இயங்காததன் விளைவுகளை மக்கள் தற்போது அனுபவிக்க நேரிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

செயற்திறன் ஆற்றல் வகைகளை பயன்படுத்தி எதிர்கால உற்பத்தித் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் என மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்தார்.

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

வட்டியில்லா கல்விக்கடனை தொடர்ந்தும் வழங்க தீர்மானம்

வட்டியில்லா கல்விக்கடனை தொடர்ந்தும் வழங்க தீர்மானம்

கே. ஐ. யு மற்றும் ஹொரைஸன் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு அரச வங்கிகளினால் வழங்கப்படும் வட்டியில்லாக் கடன் வசதிகளை தொடர்ந்தும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம்ஜயந்த இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதற்காக அமைச்சரவை தற்போது தயாராகி வருவதாகவும், அதற்கான வேலைகள் எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்டு ஒப்புதல் பெற்றுக்கொள்வதுடன் தற்போது அந்த நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் தொடர்ந்தும் கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்; தற்போதைய ஜனாதிபதி 2017ஆம் ஆண்டில் இக்கடன் யோசனை முறையை ஆரம்பித்தார். ஏழாவது குழுவினர் இம்முறை உள்ளெடுக்கப்படுவர்.

வட்டியில்லா கல்விக்கடனை தொடர்ந்தும் வழங்க தீர்மானம்

தற்போது வரை 6 குழுக்கள் நிறைவு செய்துள்ளன. அண்ணளவாக 5000 பேரளவில் தனியார் பல்கலைக்கழகங்களில் வட்டியில்லாக் கடன் வசதிகளை இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிகளின் ஊடாக பிள்ளைகளுக்கு பட்டம் பெறுவதற்கு வழங்கப்பட்டது.

இந்தப் பிரச்சினையை இதற்கு முன்னரும் எதிர்கட்சித் தலைவர் முன்வைத்தாலும் அதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடமெபெற்றது.

ஜனாதிபதியின் செயலாளரும், இலங்கை வங்கியின் பிரதி பிரதம முகாமையாளர் உட்பட பலரும், திறைசேரி அதிகாரிகளும், இணைந்து இதற்கான தீர்வைப் பெற்றுத் தந்தார்கள். இந்நிறுவனங்களுக்கு புதிதாக உள்ளெடுக்கப்பட்ட குழுவிற்கு கடன் வழங்காமை தாமதமாவதற்கு பிரதான காரணம் முதலாவது மற்றும் இரண்டாவது குழுவில் 200 பேரளவில் கடனை மீளச் செலுத்தாதிருப்பதாகும்.

முதலாவது மற்றும் இரண்டாவது குழுக்கள் பட்டம் முடியும் போது கொரோனாத் தொற்றுப் பிரச்சினை ஏற்பட்டதாக நான் இக்கலந்துரையாடலில் தெளிவுபடுத்தினேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் காணப்பட்டன. 200 என்றால் சராசரியாக பெரிய எண்ணிக்கை அல்ல. வங்கியின் மீளப்பெற்றுக்கொள்ளும் திணைக்களத்தினால் இது தொடர்பாக அறவீட்டைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிதாக பிணையாளிகள் இருவர் வங்கியினால் கோரி கடன் பணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கடன் நிதி தொடர்பாக பூர்த்தி செய்து கடந்த வாரத்தில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சில் தனியார் பல்கலைக்கழகங்களின் மேலதிக செயலாளருக்கு ஊடக இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்குத் தெரியப்படுத்துவதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வீடொன்றில் இருந்து தம்பதியினர் சடலமாக மீட்பு

வீடொன்றில் இருந்து தம்பதியினர் சடலமாக மீட்பு

வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த தம்பதியினரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிரிஹான ஜுபிலி மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து நேற்று (08) இந்த சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

பொலிசார் குறித்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது, ​​வீட்டின் அறையில் கட்டிலில் சில நாட்களுக்கு முன் உயிரிழந்த ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் சமையலறை தரையில் நிர்வாணமாக பெண்ணின் சடலம் இருந்ததாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

சில நாட்களாக குறித்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதாக அயலவர் ஒருவர் மிரிஹான பொலிஸாருக்கு வழங்கிய அறிவித்தலின் படி குறித்த வீடு சோதனையிடப்பட்டுள்ளது.

80 வயதுடைய ஆணும் 96 வயதான பெண்ணுமே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

திருமணம் செய்த பெண் கைது

திருமணம் செய்த பெண் கைது

இலங்கையில் ஆண்ணொருவரை திருமணம் செய்து கொண்டு விசா இன்றி தந்தையுடன் தங்கியிருந்த எத்தியோப்பிய பெண், கண்டி சுற்றுலாத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இலங்கையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து அம்பிட்டிய பிரதேசத்தில் வசிப்பதாகவும், வெளிநாட்டு பெண், மீண்டும் வெளிநாட்டுக்குச் சென்றுவிடுவாரோ என அஞ்சிய இலங்கையை சேர்ந்த கணவர் பெண்ணின் கடவுச்சீட்டு மற்றும் ஏனைய ஆவணங்களை மறைத்து வைத்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எத்தியோப்பிய பெண் தனது முந்தைய திருமணமான எத்தியோப்பியாவில் தனது இரண்டு குழந்தைகளுடன் இந்த நாட்டிற்கு வந்துள்ளார், மேலும் அவரது விசா ஜனவரி 17 ஆம் திகதி காலாவதியானது, சம்பவம் குறித்து கண்டி சுற்றுலாப் பொலிஸ் பிரிவு இந்தியாவிலுள்ள எத்தியோப்பிய தூதரகத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இளம் தாய் துஷ்பிரயோகம் மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி
Posted in இலங்கை செய்திகள்

பெண் வைத்தியர் துஷ்பிரயோகம்: ஆண் வைத்தியர் கைது

பெண் வைத்தியர் துஷ்பிரயோகம்: ஆண் வைத்தியர் கைது

மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 28 வயதுடைய பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் வியாழக்கிழமை (8) கைது செய்யப்பட்டதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.

அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 45 வயதுடைய திருமணமான வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண் வைத்தியர் துஷ்பிரயோகம்: ஆண் வைத்தியர் கைது

பெண் வைத்தியரின் தந்தை அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் ஆண் வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் வைத்தியர் வேறு வைத்தியசாலையில் இருந்து இடமாற்றம் பெற்று கடந்த 5ம் திகதி அரநாயக்க மாவட்ட வைத்தியசாலைக்கு பணிக்காக வந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான வைத்தியர் மற்றும் அப்போது கடமையில் இருந்த 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவத்திற்கு முகம் கொடுத்த பெண் வைத்தியர் கேகாலை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

ஆட்டுப்பட்டி தெரு பொலிஸில் அதிர்ச்சி சம்பவம்

ஆட்டுப்பட்டி தெரு பொலிஸில் அதிர்ச்சி சம்பவம்

ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் நிலையத்தின் சிறையில் இருந்த சந்தேகநபர்கள் இருவர், இனந்தெரியாத ஒருவர் வழங்கிய பால் பாக்கெட்டை அருந்தி சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இவர்களுக்கு வழங்கப்பட்ட பால் பாக்கெட்டில் விஷம் கலந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி ஜிந்துபிட்டிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதன்போது சந்தேக நபர்களில் ஒருவரை பிரதேசவாசிகள் பிடித்ததுடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பிச் சென்றார்.

விசாரணையின் பின்னர், தம்பனை பகுதியில் வைத்து தப்பியோடிய துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதுடன், பின்னர் அவர் ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதன்படி குறித்த சந்தேகநபருக்கு உதவிய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் இருவரும் ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் நிலையத்தில் ஒரே சிறையில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆட்டுப்பட்டி தெரு பொலிஸில் அதிர்ச்சி சம்பவம்

இவ்வாறானதொரு பின்னணியில், துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் காதலி நேற்று காலை ஆட்டுப்பட்டி தெரு பொலிஸாருக்கு வந்து சுகம் விசாரித்ததுடன் மற்றுமொரு சந்தேக நபரிடம் நலம் விசாரிக்க மேலும் ஒருவரும் அங்கு வந்துள்ளார்.

குறித்த நபர், சந்தேக நபர்களிடம் இரண்டு மீன் பாணையும், பால் பால் பாக்கெட்டினை கொடுத்து விட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், சந்தேக நபர்கள் இருவரும் மீன் பாண்களை சாப்பிட்டுள்ளனர்.

ஜிந்துபிட்டியவில் துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு தம் கையில் வைத்திருந்த பால் பாக்கெட்டினை வழங்கியதாக துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் காதலி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அதைக் குடித்தவுடன் அவர் சுருண்டு விழுந்ததுடன், மற்றைய சந்தேக நபர் தரையில் விழுந்த பால் பாக்கெட்டை எடுத்து குடித்துள்ளார்.

இதனால் மயக்கமடைந்த சந்தேக நபர்கள், பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த பால் பாக்கெட்டில் விஷம் கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பால் பாக்கெட்டை கொடுத்த நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை
Posted in இலங்கை செய்திகள்

யுக்திய பொலிஸ் நடவடிக்கையில் மேலும் பலர் கைது

யுக்திய பொலிஸ் நடவடிக்கையில் மேலும் பலர் கைது

யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 728 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 558 சந்தேக நபர்களும் குற்றவியல் பிரியவிற்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்த 170 சந்தேக நபர்களும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 122 கிராம் ஹெரோயின், 101 கிராம் ஐஸ், 5 கிலோ 217 கிராம் கஞ்சா மற்றும் 1,852 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அவுஸ்திரேலியா பறந்தார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அவுஸ்திரேலியா பறந்தார்

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) அதிகாலை அவுஸ்திரேலியா பயணமானார்.

இந்தியா மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி சென்றுள்ளதோடு, ஏழாவது இந்து சமுத்திர மாநாடு பெப்ரவரி மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறுகிறது.

இந்து சமுத்திரத்தை அண்மித்த நாடுகள் மற்றும் இந்து சமுத்திரத்தை அதிகமாகப் பயன்படுத்தும் ஏனைய நாடுகளைப் பாதிக்கும் பொதுவான அபிலாஷைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இந்து சமுத்திர மாநாடு 2016 இல் ஆரம்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அவுஸ்திரேலியா பறந்தார்

“நிரந்தரமான மற்றும் நிலையான இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த ஆண்டு மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதான உரை நிகழ்த்த உள்ளார்.

இம்முறை மாநாட்டில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் 40 நாடுகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பங்கேற்புடன் வரைபடம் ஒன்றும் தயாரிக்கப்படும். மாநாட்டுடன் இணைந்ததாக இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தும் பல உயர்மட்ட கலந்துரையாடல்களிலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் இணைந்து கொள்ளவுள்ளதோடு, “எங்கள் நீல எதிர்காலம் : இந்து சமுத்திர வளங்களின் இருப்பைப் பாதுகாப்பதற்கு பிராந்திய தீவு நாடுகளுடன் இணைந்து செயற்படுவதெப்படி?” என்ற தலைப்பில் வெளிவிவகார அமைச்சர் உரையாற்றவுள்ளார்.

7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டை இந்திய வெளியுறவு அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இந்திய மன்றம் ஏற்பாடு செய்துள்ளது. சிங்கப்பூர் எஸ்.ராஜரத்தினம் சர்வதேச கல்வி நிலையம் மற்றும் அவுஸ்திரேலியாவின் பெர்த்-அமெரிக்கா ஆசியா மையம் ஆகியவை இதற்கு பங்களிக்கின்றன.

2ஆவது இந்து சமுத்திர மாநாடு 2017ஆம் ஆண்டு அப்போதைய பிரதமரும், ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இலங்கையில் நடைபெற்றது நினைவூட்டத்தக்கது.

இஸ்ரேலுக்குள் கார் குண்டு வெடிப்பு மொசாட் அதிகாரி இலக்கு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் கார் குண்டு வெடிப்பு மொசாட் அதிகாரி இலக்கு


இஸ்ரேலுக்குள் கார் குண்டு வெடிப்பு மொசாட் அதிகாரி இலக்கு

இஸ்ரேல் தலைநகரில் பாரிய கார் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது ,
இஸ்ரேல் மொசாட் அதிகாரியை இலக்கு வைத்து
இந்த கார் குண்டு தகுதல் இடம்பெற்றதஹ்க தகவல்கள் கசிகிறது

வீடியோ

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்த பலர் கைது

பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்த பலர் கைது

பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுப்பவர்களை கண்டறியும் விசேட நடவடிக்கையில் நேற்று (07) மாத்திரம் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, பொது போக்குவரத்து சேவையில் பாலியல் தொல்லை கொடுத்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தவிர திருட்டு சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் சிவில் உடையில் பல பொலிஸ் குழுக்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் இராணுவத்தை குழப்பிய ஹிஸ்புல்லா போர் தந்திரம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தை குழப்பிய ஹிஸ்புல்லா போர் தந்திரம்


இஸ்ரேல் இராணுவத்தை குழப்பிய ஹிஸ்புல்லா போர் தந்திரம்

இஸ்ரேல் இராணுவத்தை குழப்பிய
ஹிஸ்புல்லா போர் வீரர்கள் போர் தந்திரம் ,
திணறும் இஸ்ரேல் இராணுவம் ,வெடித்து பறக்கும் ஹிஸ்புல்லா வீரம்,

வீடியோ

அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம் இஸ்ரேல் தளபதி அவுட்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம் இஸ்ரேல் தளபதி அவுட்


அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம் இஸ்ரேல் தளபதி அவுட்

அமெரிக்கா இராணுவ உலங்குவானூர்தி திடீர் மாயம்,தேடும் அமெரிக்கா இராணுவம் .


பாலஸ்தீனம் காசா போர் அரங்கில் இஸ்ரேல் படை தளபதி அவுட் ,

வீடியோ

இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு ஓயும் குண்டு சத்தம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு ஓயும் குண்டு சத்தம்


இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு ஓயும் குண்டு சத்தம்

இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவுக்கு வருகிறது ,ஹமாஸ் இஸ்ரேல் பேச்சுக்கு இணக்கம்
ஓயும் குண்டு சத்தம்

வீடியோ

இலங்கை பொலிசாரால் 955 பேர் கைது தொடரும் பொலிஸ் வேட்டை
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் சுற்றிவளைப்பு 785 பேர் 24 மணிநேரத்தில் கைது

பொலிஸ் சுற்றிவளைப்பு 785 பேர் 24 மணிநேரத்தில் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 785 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 596 சந்தேக நபர்களும், குற்றவியல் திணைக்களத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் 189 சந்தேக நபர்களும் உள்ளடங்குகின்றனர்.

மேலும் கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் பின்வருமாறு,

128 கிராம் ஹெரோயின்
115 கிராம் ஐஸ்
8 கிலோ 626 கிராம் கஞ்சா
138,676 கஞ்சா செடிகள்
57 கிராம் 200 மில்லி கிராம் மாவா
34 போதை மாத்திரைகள்
125 கிராம் மதன மோதக

பொலிஸ் சுற்றிவளைப்பு 785 பேர் 24 மணிநேரத்தில் கைது

போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 596 சந்தேக நபர்களில் 7 சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், போதைக்கு அடிமையான 4 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 11 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் கைது செய்யப்பட்ட 189 சந்தேக நபர்களில் 29 சந்தேக நபர்களுக்கு போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளும், 155 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வந்த 5 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

முன்னாள் கடற்படைத் தளபதி ஐக்கிய மக்கள் சக்தியில்
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் கடற்படைத் தளபதி ஐக்கிய மக்கள் சக்தியில்

முன்னாள் கடற்படைத் தளபதி ஐக்கிய மக்கள் சக்தியில்

முன்னாள் கடற்படைத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் பிரதானியுமான தயா சந்தகிரி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.

இலங்கை கடற்படையின் ஓய்வுபெற்ற 14வது கடற்படைத் தளபதியான தயா சந்தகிரி (VSV, USP rcds, MSc (DS), psc, FCMI), எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.

கடல் மற்றும் கடற்படைத் துறையில் அவருக்கு இருக்கும் அபார அறிவு மற்றும் அனுபவத்தின் காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவரை ஐக்கிய மக்கள் சக்தியின் கடல் மற்றும் கடற்படைக் கொள்கைகள் பற்றிய ஆலோசகராக நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்

சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி விபத்தில் பலி
Posted in உலக செய்திகள்

சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி விபத்தில் பலி

சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி விபத்தில் பலி

சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹெலிகொப்டர் விபத்தில் பலியானார்.

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜெபஸ்டின் பினிரா.

பெரும் பணக்காரரான இவர் 2010 முதல் 2014 வரை மற்றும் 2018 முதல் 2022 வரை என இரண்டு முறை சிலி நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

இந்நிலையில், அந்நாட்டின் பிரபல சுற்றுலா தலமான லகோ ரங்கொ பகுதிக்கு ஜெபஸ்டின் பினிரா நேற்று ஹெலிகொப்டரில் பயணம் மேற்கொண்டார்.

அந்த ஹெலிகொப்டரில் ஜெபஸ்டின் உள்பட மொத்தம் 4 பேர் பயணித்தனர்.

லகோ ரங்கொ அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 74 வயதான சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜெபஸ்டின் பினிரா உயிரிழந்தார்.

ஹெலிகொப்டரில் பயணித்த எஞ்சிய 3 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, இந்த விபத்துக்கான காரணம், ஜெபஸ்டின் பினிரா உடன் பயணித்த 3 பேர் யார்? என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. “,

கைதிகளை விடுவிக்க முடியாது ஹாமாஸ் அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

கைதிகளை விடுவிக்க முடியாது ஹாமாஸ் அறிவிப்பு


கைதிகளை விடுவிக்க முடியாது ஹாமாஸ் அறிவிப்பு

கைதிகளை விடுவிக்க வேண்டுமானால் போரை நிறுத்தி எமது கைதிகள் விடுவிக்க
வேண்டும் முடியாது என்றால் கைதிகளை விடுவிக்க முடியாது ஹாமாஸ் அறிவிப்பு

சோமாலியா சந்தையில் வெடித்த குண்டு 10 பேர் மரணம் 20 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

சோமாலியா சந்தையில் வெடித்த குண்டு 10 பேர் மரணம் 20 பேர் காயம்

சோமாலியா சந்தையில் வெடித்த குண்டு 10 பேர் மரணம் 20 பேர் காயம்

சோமாலியா தலைநகர் Mogadishu சந்தையில் குண்டு வெடித்ததில் 10 பேர் மரணமாகியும் 20 பேர் காயமடைந்துள்ளனர் .

இந்த சோமாலிய சந்தை பகுதியில் அடுத்தடுத்து பல குண்டுகள் வெடித்ததில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது .

குண்டு வெடித்த பொழுது அங்கு தரித்து நின்ற பல வாகனங்கள் எரிந்து அழிந்துள்ளன ,இந்த தாக்குதலுக்கு அல் சபா போராட்ட காரர்களே காரணம் என சோமாலிய அரசு அறிவித்துள்ளது