மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

பாதாள உலக குழு உறுப்பினர்கள் மூவர் கைது

பாதாள உலக குழு உறுப்பினர்கள் மூவர் கைது

குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை ஒடுக்கும் விசேட நடவடிக்கைக்கு அமைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (19) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, பொரளை பிரதேசத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழு உறுப்பினர் கெசல்வத்த தினுகவின் நெருங்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் கஞ்சிபானை இம்ரானின் குற்றக் கும்பலைச் சேர்ந்த ‘கோடா ரிஸ்வான்’ என அழைக்கப்படும் அஹமட் ஜிப்ரி அஹமட் றிஸ்வான் என்ற சந்தேக நபர் 6,400 மில்லிகிராம் ஹெரோயினுடன் மாளிகாவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், காஜிமா வத்தை மைதானத்திற்கு அருகில் 6,620 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் குற்ற கும்பலைச் சேர்ந்த புகுடு கண்ணாவின் உதவியாளரான முனவீர ஆராச்சிலகே சுசந்த என்ற சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கோப் குழுவின் தலைவர் நீக்கப்படாவிடின் உண்ணாவிரத போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

கோப் குழுவின் தலைவர் நீக்கப்படாவிடின் உண்ணாவிரத போராட்டம்

கோப் குழுவின் தலைவர் நீக்கப்படாவிடின் உண்ணாவிரத போராட்டம்

பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவின் தலைவர் பதவி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார இன்று (20) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இந்த நியமனம் கோப் குழுவை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோப் குழுவில் இருந்து சுமார் 08 பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளதாகவும், கோப் குழுவின் தலைவர், அந்த பதவியில் இருந்து நீக்கப்படாவிட்டால் உண்ணாவிரதத்தில் ஈடுபட நேரிடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோப் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன அண்மையில் நியமிக்கப்பட்டதுடன், அந்த நியமனத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி அமைச்சரவை அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி அமைச்சரவை அனுமதி

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி அமைச்சரவை அனுமதி

குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, இரண்டு மாதங்களுக்கு இனங்காணப்பட்ட 2.75 மில்லியன் குடும்பங்களுக்கு 10 கிலோ கிராம் நாட்டரிசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அமைச்சரவை தீர்மானம் மேலே.

பிரிட்டனில் வட்டி வீதத்தை குறைக்க நடடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

நெல் விவசாயிகளுக்கு உர மானியம்

நெல் விவசாயிகளுக்கு உர மானியம்

2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்ரெயார்கள் பயிரிடுவதற்கு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக ஹெக்ரெயார்களுக்கு 15,000 ரூபாய் நிதி மானியமாக வழங்கப்படவுள்ளது.

குறித்த வைப்புத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வைப்பிலிடப்படவுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் மேலே

ஹாமாஸ் சாதனை ஈரான் அறிவிப்பு அமெரிக்கா விமானம் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹாமாஸ் சாதனை ஈரான் அறிவிப்பு அமெரிக்கா விமானம் மீது தாக்குதல்


ஹாமாஸ் சாதனை ஈரான் அறிவிப்பு அமெரிக்கா விமானம் மீது தாக்குதல்

ஹாமாஸ் வீர சாதனை படைப்பு , ஈரான் இராணுவம் பகிரங்க அறிவிப்பு .


அமெரிக்கா விமானம் மீது தாக்குதல் ,வெடித்து பிறக்கும் உச்ச கட்ட போர்

வீடியோ

ஈரான் ஏவுகனை கப்பல்கள் களத்தில் குதிப்பு அலறும் எதிரிகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் ஏவுகனை கப்பல்கள் களத்தில் குதிப்பு அலறும் எதிரிகள்


ஈரான் ஏவுகனை கப்பல்கள் களத்தில் குதிப்பு அலறும் எதிரிகள்

ஈரான் ஏவுகனை கப்பல்கள் களத்தில் குதிப்பு அலறும் எதிரிகள் .


மத்திய தரைக்கடல் செங்கடல் பகுதியில் பாதுகாப்பை மேற்கொள்ள ஈரான் போர் கப்பல்கள் குவிக்க நடவடிக்கை ,சீறி பாய்ந்த தாக்குதல் கப்பல்கள்

வீடியோ

வவுனியா கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி மரணம்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி மரணம்

வவுனியா கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி மரணம்

வவுனியா, சமனங்குளம் பகுதியில் தோட்ட கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, சமனங்குளம் பகுதியில் வசித்து வரும் இளம் யுவதி ஒருவர் நேற்று முன்தினம் (17) மாலை கிணற்று மோட்டார் சுவிச்சை போட்ட போது அதன் குழாய் கழன்றமையால் அதனை பூட்ட முயற்சித்த போது கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.

தொடர்ந்து மோட்டார் இயங்கிக் கொண்டிருப்பதை அவதானித்த அயல் வீட்டார் கிணற்றடிக்கு சென்று பார்த்த போது குறித்த இளம் யுவதி கிணற்றில் விழுந்து இருந்ததை அவதானித்துள்ளனர். இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் யுவதியை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் மரணமடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் வவுனியா, சமனங்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய தவரூபன் லக்சிகா என்ற யுவதியே மரணமடைந்தவராவார். சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மரத்தால் வந்த வினை ஒருவர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

பெற்ற குழந்தையை கொலை செய்த தாய்

பெற்ற குழந்தையை கொலை செய்த தாய்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கற்ப்பமடைந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை கொலை செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த விடயம் புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு தெரியபபடுததப்பட்ட நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் குறித்த பெண்ணை கைது செய்துள்ள நிலையில் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த குழந்தையை புதைத்த இடத்தில் நீதிபதி முன்னிலையில் சோதனை நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளது.

மிக ஒழுக்கம் மிக்க சமூகமாக இருந்த வன்னி மண்ணின் விடுதலைப்புலிகளின் காலத்துக்கு (2009) பின்னர் போதைப்பொருள் பாவனை மற்றும் சமூக சீர்கேட்டு சம்பவங்கள் மிகவும் அதிகரித்து வருவதோடு பாலியல் துஸ்பிரயோகம் தவறான உறவுகள் என சமூகத்தின் போக்கு மாறி வருகிறது.

எனவே மக்கள் விழிப்படைந்து எமது சமூகத்தின் மதிப்பை பாதுகாக்க முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை திரும்பினார்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு

முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

நேற்று (18) பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றதாகவும், இதன்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய அபிவிருத்திப் பணிகள் உள்ளிட்ட அரசாங்கத்தின் பணிகளை விரைவில் நிறைவு செய்து ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி அமைச்சரவையில் அறிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ் உட்பட மூன்று மொழிகள் பேசக்கூடிய ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் வவுனியாவில் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

வெடுக்குநாறிமலை சம்பவம் – பாராளுமன்றில் அமைதியின்மை

வெடுக்குநாறிமலை சம்பவம் – பாராளுமன்றில் அமைதியின்மை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு சுலோக அட்டைகளை ஏந்தியவாறு பாராளுமன்றில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிசிவன் கோவிலில் பொலிஸாரினால் 8 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவர்கள் இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சபையின் பணிகள் சில நிமிடங்கள் தடைபட்டதுடன், சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அறிவித்ததையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் போராட்டத்தை கைவிட தீர்மானித்தனர்.

குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்

பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்க 20 குழுக்கள்

பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்க 20 குழுக்கள்

நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் யுக்திய நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக இன்று (19) முதல் பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக 20 விசேட பொலிஸ் குழுக்களை நிறுவுவதற்கு பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

புதிதாக நிறுவப்பட்ட இந்த 20 குழுக்கள் தற்போது செயற்படும் ஒவ்வொரு பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படவுள்ளதுடன், ஒவ்வொரு குழுவிலும் குற்றப்பிரிவு நிலைய பொறுப்பதிகாரி ஒருவரும், 04 புலனாய்வு அதிகாரிகள், 02 விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட 09 அதிகாரிகள் அடங்குகின்றனர்.

கடந்த சில வாரங்களாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் இடம்பெற்று வரும் பாதாள உலக செயற்பாடுகளை கருத்திற் கொண்டு பொலிஸ் மா அதிபர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

ஓகஸ்ட் மாதத்திற்கு முன் 162 பாலங்கள் மக்கள் பாவனைக்கு
Posted in இலங்கை செய்திகள்

ஓகஸ்ட் மாதத்திற்கு முன் 162 பாலங்கள் மக்கள் பாவனைக்கு

ஓகஸ்ட் மாதத்திற்கு முன் 162 பாலங்கள் மக்கள் பாவனைக்கு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

நிர்மாணிக்கப்பட்டு வரும் 162 பாலங்களின் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நாங்கள் ஏற்கனவே நிறைவேற்றியுள்ளோம். 16,000 மில்லியன் செலவில் 162 பாலங்கள் நிர்மாணிக்கப்படும் என்று கூறினோம்.

ஓகஸ்ட் மாதத்திற்கு முன் 162 பாலங்கள் மக்கள் பாவனைக்கு

அந்தப் பாலங்களில் ஒரு பகுதியை ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னதாக பொதுமக்களிடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம். இதன்படி 162 பாலங்களும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் மக்களிடம் கையளிக்கப்படும்.

அத்துடன், சுற்றுலாத் தலங்களை அபிவிருத்தி செய்வதற்காக உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்ட 1000 மில்லியன் ரூபா திட்டமும் ஓகஸ்ட் மாத இறுதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படவுள்ளது.

மேலும், 29,000 பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் பெரும்பாலானோருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும். இன்னும் 2600 உத்தியோகத்தர்கள் எஞ்சியுள்ளனர். அவர்களை வெற்றிடமாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளோம்.

இந்த ஆண்டில் ஓய்வு பெறுபவர்களுக்குப் பதிலாக PL 1-2 பிரிவுகளுக்கு மேலதிகமாக உள்ள ஊழியர்களை பணியமர்த்த அனுமதி அளித்துள்ளோம்.

மேலும் அனைத்து அமைச்சுக்களின் கீழும் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்க்கின்றோம். நாடு நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறது. இது அனைத்து துறைகளிலும் எடுத்துக் காட்டப்படுகிறது.

நாட்டை மீண்டும் கடந்த காலங்களில் இருந்த நிலைக்கு பின்னோக்கிக் கொண்டு செல்ல சிலர் முயற்சிக்கின்றனர். இப்படி இடையூறு செய்பவர்களுக்கு எதிராக தரா தரம் பாராமல் சட்டத்தை செயல்படுத்துவோம் என்று மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர மேலும் தெரிவித்தார்.

கப்பல் கப்பலாக குவிக்க பட்ட ஆயுதம் பறக்கும் ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

கப்பல் கப்பலாக குவிக்க பட்ட ஆயுதம் பறக்கும் ஏவுகணைகள்

கப்பல் கப்பலாக குவிக்க பட்ட ஆயுதம் பறக்கும் ஏவுகணைகள்

கப்பல் கப்பலாக குவிக்க பட்ட ஆயுதம், பறக்கும் அதி நவீன ஏவுகணைகள் , திகைப்பில் உறைந்திருக்கும் எதிரிகள் ,கொடி பறந்த ஆயுத வியாபாரம்

வீடியோ

துறைமுகத்தை உடைத்த கப்பல் வெடித்து பறந்த ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

துறைமுகத்தை உடைத்த கப்பல் வெடித்து பறந்த ஏவுகணைகள்


துறைமுகத்தை உடைத்த கப்பல் வெடித்து பறந்த ஏவுகணைகள்

துறைமுகத்தை உடைத்த கப்பல் ,உடைந்து நொறுங்கிய கிரேன்கள் ,
அலறிய துறைமுகம் ,வெடித்து பறந்த ஏவுகணைகள்,உக்கிரஞ் பெறும் போர்

வீடியோ

இஸ்ரேல் விமானம் தளம் சேதம் ஈராக் போர் படைகள் கடும் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானம் தளம் சேதம் ஈராக் போர் படைகள் கடும் தாக்குதல்


இஸ்ரேல் விமானம் தளம் சேதம் ஈராக் போர் படைகள் கடும் தாக்குதல்

இஸ்ரேல் கோலன் குன்று விமானம் தளம் சேதம் ,ஈராக் போர் படைகள் கடும் ஏவுகணை ,விமான தாக்குதல் .

ஒருவாரத்தில் இரண்டு விமான தளங்கள் மீது தாக்குதல் ,
நான்கு முனைகள் ஊடாக இஸ்ரேலை தாக்கும் ஈரான் ஆதரவு படைகள்

வீடியோ

சகரான் தீவிரவாத குழுவால் இலங்கையில் குண்டு வெடிக்கலாம் சிங்கள மக்கள் கவலை
Posted in இலங்கை செய்திகள்

சகரான் தீவிரவாத குழுவால் இலங்கையில் குண்டு வெடிக்கலாம் சிங்கள மக்கள் கவலை

சகரான் தீவிரவாத குழுவால் இலங்கையில் குண்டு வெடிக்கலாம் சிங்கள மக்கள் கவலை

சகரான் இஸ்லாமிய தீவிரவாத குழுவால் இலங்கையில் குண்டு வெடிக்கலாம் சிங்கள மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர் .

இலங்கையில் தேவாலயங்களை இலக்கு வைத்தும் ,கொட்டல்களை குறிவைத்து சகரான் என்கின்ற இஸ்லாமிய தீவிர வாத குழுவால் இலங்கையில் தாக்குதல் நடத்த பட்டது .

இதில் தமிழ் ,சிங்கள அப்பாவி பொதுமக்கள் 300 க்கு மேற்பட்டவர்கள் பலியாகினர் .

ஒன்று பட்ட இலங்கைக்குள் மக்கள் தற்போது ஒற்றுமையாக வசித்து வரும் இவ்வேளை மதவெறி பிடித்து, இலங்கை தமது நாடு என கொக்கரித்து திரியும் இஸ்லாமிய மதவாத தீவிரவாத குழுவால் தாக்குதல் நடத்த பட்டது .

வழிபாட்டில் ஈடுபட்ட அப்பாவி மக்கள் தூண்டும் ,சதையுமாக இரத்த வெள்ளத்தில் மீட்க பட்டனர் .

இவ்வாறான மனித மிருகங்களினால் மீண்டும் இலங்கையில் தாக்குதல் நடத்த படும் அபாயம் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் சிங்கள மக்கள் தமது கருத்துக்களை இவ்விதம் பகிர்ந்து வருகின்றனர் .

தேர்தல் இடம்பெற உள்ளதை அடுத்து இவை நடக்கலாம் என்பதாக மக்கள் கருதுகின்றனர் ,

இந்த சகறான் குண்டு வைப்பு பின்புலத்தில் ,றிசாத் பதியுதின் ,ஹிஸ்புல்லா போன்றவர்கள் செயல்பட்டதாக அன்றைய நாட்களில் தெரிவிக்க பட்டு விசாரணைகள் இடம்பெற்று இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

பாராளுமன்றமும் பழைய சேறும் சகதியுமாக மாறிவிடும் வயதான எம்.பிக்களை நீக்கவும்
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்றமும் பழைய சேறும் சகதியுமாக மாறிவிடும் வயதான எம்.பிக்களை நீக்கவும்

பாராளுமன்றமும் பழைய சேறும் சகதியுமாக மாறிவிடும் வயதான எம்.பிக்களை நீக்கவும்

இவ்வாறே தொடர்ந்தால் இன்னும் சிறிது காலத்தில் முழு பாராளுமன்றமும் பழைய சேறும் சகதியுமாக மாறிவிடும் என்றும் நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் பாராளுமன்றத்தில் உள்ள முதியோர்களை வெளியேற்றி

விட்டு, இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென கெட்டம்பே ஸ்ரீ ராஜோப வானராமாதிபதி ராமன்ய நிகாயா கப்பிட்டியாகொட சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரொஷான் ரன்சிங்க, அவரை சென்று வழிபட்டதன் பின்னர் கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளனர்.


அரசு ஊழியர்கள் 60 வயதை எட்டிய பின், கடினமாக உழைக்க முடியாது என்பதால் ஓய்வு பெறுகின்றனர். ஆனால் பாராளுமன்றத்தில் ஓய்வு பெறும் வயதை கடந்தவர்கள் ஏராளம். சிலர் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று பாராளுமன்றத்துக்கு வருகிறார்கள்.

அடுத்த வேலையைச் செய்ய பாராளுமன்றத்திற்கு வருகிறார்கள். இளைஞர்களுக்கு இடம்
கொடுத்து விட்டு செல்வதில் அவர்களுக்கு விருப்பம் இல்லை.

பாராளுமன்றமும் பழைய சேறும் சகதியுமாக மாறிவிடும் வயதான எம்.பிக்களை நீக்கவும்

பாராளுமன்றத்திற்கு வர போராடுகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கு நாட்டு மக்கள் மீது எந்த உணர்வும் இல்லை. அவர்கள் நாட்டின் வளங்களை விற்று தங்கள் தலைமுறையை மகிழ்ச்சியடையச்
செய்ய விரும்புகிறார்கள் என்றார்.

நாட்டில் ஒரு சாதாரண மனிதன் ஐம்பது அல்லது நூறு ரூபாய் திருடினால், அதிகபட்ச தண்டனை வழங்கப்படும். ஆனால், ஒரு பெரிய மனிதர் கோடிக்கணக்கில் அல்ல, பல கோடிக்கணக்கில் திருடினாலும், அவர்களுக்கு எதிராக சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

நாட்டில் நிலவும் ஊழலுக்கு எதிராக? புரட்சி செய்து பதவியை இழந்தவர் ரொஷான் ரணசிங்க. பதவிகளைத் துரத்தி எதேச்சதிகாரமாக தன்னைப் பற்றி மட்டும் நினைத்துக் கொண்டு வேலை செய்தவர் அல்லர். இந்த இளம் எம்.பி.க்களை போன்று நாட்டை நேசிக்கும் இளம் எம்.பி.க்களும்
உள்ளதாகவும், அந்த எம்.பி.க்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

வயதான எம்.பி.க்கள் பாராளுமன்றத்தை விட்டு வெளியேற வேண்டும், அவர்கள் வெளியேறவில்லை என்றால் புதிய சட்டங்களை கொண்டு வாருங்கள் அல்லது அவற்றை நீக்குவதற்கான நேரம் இது

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நிறைவு
Posted in இலங்கை செய்திகள்

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நிறைவு

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நிறைவு

கனடாவில் கொல்லப்பட்ட 06 இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று (17) பிற்பகல் ஒட்டாவாவில் இடம்பெற்றன.

ஒட்டாவாவின் Barrhaven பகுதியில் கொல்லப்பட்ட இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர் மற்றும் அவர்களது நண்பரின் இறுதிக் கிரியைகள் இவ்வாறு இடம்பெற்றதாக கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கு இரங்கல் குறிப்புகள் எழுதும் வாய்ப்பும் இருந்தது.

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நிறைவு

இந்த நிகழ்வில் உயிர் பிழைத்த இலங்கை குடும்பத்தின் தந்தை தனுஷ்க விக்ரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தார்.

கடந்த புதன்கிழமை, ஒட்டாவாவில் 19 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவர் 6 இலங்கையர்களை கொலை செய்திருந்ததாக செய்திகள் வௌியாகின.

பின்னர் சந்தேகநபரான இளைஞர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் உயிரிழந்த இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நேற்றைய தினம் பலரின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றிருந்தது.

பிரிட்டன் 9 நகரங்கள் மீது தாக்குதல் நடத்த தயாராகும் ரஷ்யா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

பிரிட்டன் 9 நகரங்கள் மீது தாக்குதல் நடத்த தயாராகும் ரஷ்யா


பிரிட்டன் 9 நகரங்கள் மீது தாக்குதல் நடத்த தயாராகும் ரஷ்யா

பிரிட்டன் மிக 9 நகரங்கள் மீது முக்கிய ஏவுகணை தாக்குதல் நடத்த தயாராகும் ரஷ்யா .


ரஷ்யா இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த போவதாக செய்திகள் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

வீடியோ

https://www.ethiri.com/?s=%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D+
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

செங்கடலில் வெடித்த கப்பல் ஹவுதி தாக்குதல்


செங்கடலில் வெடித்த கப்பல் ஹவுதி தாக்குதல்

செங்கடலில் வெடித்த சரக்கு கப்பல் ,ஹவுதி ஏவுகணை தாக்குதல் .


ஹவுதிகள் ஏவுகணை தாக்குதலில் அலறும் செங்கடல் ,

வீடியோ