வேன டொல்பின் கொள்ளை
வேன டொல்பின் கொள்ளை
வேன டொல்பின் கொள்ளை ,மஸ்கெலியா பிரதேச சபைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 8 கோடியே 2 இலட்சத்து 50ஆயிரம் ரூபா பெறுமதியான வேனின் கண்ணாடியை உடைத்து கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (17) அன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வேன் உரிமையாளர் மஸ்கெலியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்பேரில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார பணிபுரையில், மஸ்கெலியா பொலிஸார் மற்றும் ஹட்டன் குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி, குறித்த வேன் கடத்தலுக்குச் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் ஒருவரை இரத்தினபுரி காவத்தை பொலிஸ் பிரிவில் உள்ள ஒபேவத்தை பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 28 வயது உடைய காவத்தை- ஒபேசேகர பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமையக் குறித்த வேன் வவுனியா பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் வலய குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவ முகாமில் சுகயீனம்
இராணுவ முகாமில் சுகயீனம்
இராணுவ முகாமில் சுகயீனம் ,மன்னார், விடத்தல்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் சுமார் 25 இராணுவ வீரர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
காய்ச்சல் தொற்றையடுத்து, அங்குள்ள இராணுவ வீரர்களை குறித்த முகாமிலேயே தனிமைப்படுத்தியுள்ளதாக இராணும் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் குழுவொன்றை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முகாமில் உள்ள மேலும் முகாமில் இருக்கும் மேலும் 500 இராணுவ வீரர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 11 ஆம் திகதி முதல் குறித்த இராணுவ முகாமில் காய்ச்சல் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவுடன் தடை
மேலதிக வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவுடன் தடை
மேலதிக வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவுடன் தடை ,கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், செயலமர்வுகள்
மற்றும் கருத்தரங்குகள் என்பன நாளை (19) நள்ளிரவுக்குப் பின்னர் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் 25ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிளவுபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி
பிளவுபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி
பிளவுபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி ,இலங்கையில் பிளவுபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவையை நியமித்ததன் பின்னர் ஆற்றிய உரையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
“இலங்கையின் அரசியல் கலாச்சாரம் நீண்ட காலமாக வடக்கை தெற்கிற்கு எதிராகவும் அதற்கு நேர்மாறாகவும் நிறுத்தும் முயற்சிகளால் வரையறுக்கப்படுகிறது.
“இருப்பினும், பிளவுபடுத்தும் அரசியல் இனியும் ஆட்சி செய்யாது என்பதை இந்தத் தேர்தல் காட்டுகிறது. இது அனைத்து மக்களின் அபிலாஷைகளையும் வெற்றிகரமாக ஒரே மையத்திற்கு கொண்டு வந்துள்ளது,” என்றார்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு வாக்களித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் நன்றி தெரிவித்ததுடன், இலங்கை
புலம்பெயர்ந்தோர் மற்றும் இளம் சமூக ஊடக ஆர்வலர்கள் தேர்தலின் போது ஆற்றிய பங்களிப்புகள் மற்றும் ஆதரவினையும் மேற்கோள் காட்டினார்.
சற்றுமுன் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்
சற்றுமுன் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்
சற்றுமுன் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் சற்றுமுன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
முதலாவதாக கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
பிரதமர் ஹரிணி – கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.
விஜித ஹேரத் – வெளிநாட்டமைச்சு, வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
பேராசிரியர் சந்தன அபேரத்ன – பொதுநிர்வாகம் , மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
பேராசிரியர் ஹர்ஷன நாணயக்கார – நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
சரோஜா சாவித்ரி போல்ராஜ் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
கே.டி.லால்காந்த – விவசாயம் , கால்நடை , நீர்ப்பாசனம் , காணி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
அநுர கருணாதிலக – நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
இராமலிங்கம் சந்திரசேகர் – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
பேராசிரியர் உபாலி பன்னிலகே – கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
சுனில் ஹந்துன்நெத்தி – கைத்தொழில், தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
ஆனந்த விஜேபால – பொதுமக்கள் பாதுகாப்பு ,பாராளுமன்ற விவகார அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
பிமல் நிரோஷன் ரத்நாயக்க – போக்குவரத்து , நெடுஞ்சாலைகள், துறைமுக, சிவில் விமான சேவை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி – புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
சமந்த வித்யாரத்ன – பெருந்தோட்ட ., சமூக அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
நளிந்த ஜெயதிஸ்ஸ – சுகாதாரம் , ஊடகம் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
சுனில் குமார கமகே – இளைஞர் விவகாரம் ,விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
வசந்த சமரசிங்க – வர்த்தக , வாணிப , உணவுப்பாதுகாப்பு , கூட்டுறவு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன – விஞ்ஞானம் , தொழிநுட்பம் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ – தொழில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
குமார ஜெயக்கொடி – வலுசக்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
தம்மிக்க பட்டபெந்தி – சுற்றாடல் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
கறுப்பு ஆடு இவரா வெடித்த சர்ச்சை |குவிந்த பணம் எங்கே
கறுப்பு ஆடு இவரா வெடித்த சர்ச்சை |குவிந்த பணம் எங்கே
கறுப்பு ஆடு இவரா வெடித்த சர்ச்சை |குவிந்த பணம் எங்கே , காணொளியில் முழுமையான விபரங்கள் ,
பார்க்க தவறாதீர்கள்
சிக்கிய அர்ச்சுனா |கேள்வியால் துளைத்த மக்கள்
சிக்கிய அர்ச்சுனா |கேள்வியால் துளைத்த மக்கள்
சிக்கிய அர்ச்சுனா |கேள்வியால் துளைத்த மக்கள் ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தொடர்பாக மக்கள் தெரிவித்த காரசாரமான கேள்வி பதில்கள் .
முட்டி வெடித்த போர் .,காணொளியில் முழுமையான விடயங்கள்
ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்
ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்
ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல் குறித்த ரகசிய ஆவணங்களை கசியவிட்டதாக அமெரிக்காவில் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது
ஆசிப் வில்லியம் ரஹ்மான் இந்த வாரம் கம்போடியாவில் FBI ஆல் கைது
செய்யப்பட்டார் மற்றும் குவாமில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.
கடந்த மாதம் ஈரான் மீது இஸ்ரேல் திட்டமிட்ட ஏவுகணை தாக்குதலுக்கு முன்னதாக ரகசிய தகவல்களை கசியவிட்டதாக அமெரிக்க அரசாங்கத்திற்காக வெளிநாட்டில் பணியாற்றிய ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆசிஃப் வில்லியம் ரஹ்மான் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், கம்போடியாவில் இந்த வாரம் FBI ஆல் கைது செய்யப்பட்டார், மேலும் வியாழன் அன்று குவாமில் முதன்முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகவிருந்தார்,
அப்போது வழக்கறிஞர்கள் அவரை அமெரிக்க பிரதேசத்தில் இருந்து நீக்குமாறு கோருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கில்.
ரஹ்மான் கடந்த வாரம் வர்ஜீனியாவில் உள்ள அமெரிக்க நீதிமன்றத்தில் உளவுச் சட்டத்தின் கீழ் தேசிய பாதுகாப்புத் தகவல்களை வெளியிட்டதாக
இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, நீண்ட சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.
குற்றப்பத்திரிகையின் படி, ரஹ்மான் ஒரு இரகசிய ஆவணத்தை “வேண்டுமென்றே தக்கவைத்துக்கொண்டார்” மேலும் “அந்த ஆவணத்தை பெற தகுதியற்ற ஒருவருக்கு அந்த ஆவணத்தை அனுப்பினார்”.
ரஹ்மான் மத்திய புலனாய்வு அமைப்பில் (சிஐஏ) பணியமர்த்தப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சிஐஏ செய்தித் தொடர்பாளர் அல் ஜசீராவிடம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்
அவர்களைப் போன்ற உளவாளிகள்: ஈரான், இஸ்ரேல் இடையே உளவுத்துறை போர்
அவர்களைப் போன்ற உளவாளிகள்: ஈரான், இஸ்ரேல் இடையே உளவுத்துறை போர்
அவர்களைப் போன்ற உளவாளிகள்: ஈரான், இஸ்ரேல் இடையே உளவுத்துறை போர் ,அக்டோபரில் ஈரான் மீதான பழிவாங்கும் தாக்குதல்களுக்கு இஸ்ரேலிய தயாரிப்புகள் பற்றிய அமெரிக்க உளவுத்துறையை கசியவிட்டதாக CIA
அதிகாரி ஆசிப் ரஹ்மான் மீது குற்றம் சாட்டப்பட்டது, பல தசாப்தங்களாக பிராந்திய மோதலில் பூட்டப்பட்ட நடிகர்களிடையே உளவு மற்றும் எதிர்
உளவுத்துறையின் நிழல் யுத்தத்தை வெளிப்படையான பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.
ஈரானைத் தளமாகக் கொண்ட டெலிகிராம் சேனல் ரஹ்மான் ஈரான் அரசாங்கத்துடனான எந்தவொரு தொடர்பையும் மறுப்பதற்காக கசிந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, ஆனால் பென்டகன் ஆவணங்களை
கசியவிட்டதாக அதன் மற்றொரு அதிகாரியான ஜாக் டீக்ஸீராவின் முந்தைய தண்டனையிலிருந்து அமெரிக்க நிர்வாகத்தை இந்த விவகாரம் சங்கடப்படுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாதது.
ரஹ்மான் கசிவு ஈரானிய, இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க உளவு அமைப்புகளின் இருண்ட தொடர்பு பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது,
அவை தற்போதைய மோதலை வடிவமைக்க உதவியது மற்றும் கிட்டத்தட்ட முக்கியமாக, அது பற்றிய நமது கருத்து.
ஈரானின் ரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி நிலையத்தை இஸ்ரேல் அழித்தது
ஈரானின் ரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி நிலையத்தை இஸ்ரேல் அழித்தது
ஈரானின் ரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி நிலையத்தை இஸ்ரேல் அழித்தது ,ஈரானின் ரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி நிலையத்தை இஸ்ரேல் ‘அழித்தது’
வேலைநிறுத்தங்களால் தலேகான் 2 தளம் இரண்டு இடிபாடுகளாகக் குறைக்கப்பட்டதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகிறது
கடந்த மாதம் இஸ்லாமிய குடியரசின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் ரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி நிலையம் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த மாதம் இஸ்லாமிய குடியரசின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் ரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி நிலையம் அழிக்கப்பட்டது என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலின் அக்டோபர் 25 தாக்குதல்களால் தலேகான் 2 தளம் இரண்டு இடிபாடுகளாகக் குறைக்கப்பட்டதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
டெஹ்ரானில் இருந்து கிழக்கே 20 மைல் தொலைவில் உள்ள இந்த வசதி அணுகுண்டை வெடிக்க தேவையான வெடிக்கும் இயந்திரத்தை வடிவமைக்க பயன்படுத்தப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேலிய தாக்குதல்கள் பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கு திட எரிபொருளைக் கலக்கப் பயன்படுத்தப்பட்ட மூன்று அருகிலுள்ள கட்டிடங்களையும் அழித்ததாக அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தலேகான் 2, இது பெரிய பார்ச்சின் இராணுவத்தின் ஒரு பகுதியாகும்
ஆசிரியைகளால் மோசமாக தாக்கப்பட்ட மாணவி மரணம்
ஆசிரியைகளால் மோசமாக தாக்கப்பட்ட மாணவி மரணம்
ஆசிரியைகளால் மோசமாக தாக்கப்பட்ட மாணவி மரணம் ,வென்னப்புவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 2 ஆசிரியைகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பாடசாலை மாணவி ஒருவர் மூன்று மாதங்களுக்கு மேலாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இதன்படி, சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட 2 ஆசிரியைகளும் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வென்னப்புவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்றுவந்த குறித்த மாணவி, வகுப்பறையை விட்டு வேறொரு மாணவியுடன் வெளியேறியமை தொடர்பில்,
வகுப்பு ஆசிரியையுடன் இணைந்து மற்றுமொரு ஆசிரியையினால் தாக்கப்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பின்னர், சந்தேக நபர்களான ஆசிரியைகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுக் கடந்த செப்டம்பர் 13 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்தார். இதையடுத்து, இரண்டு ஆசிரியைகளும் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை
அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை
அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை ,ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட கிழக்கு தமிழ் மக்கள் வாக்கrpளித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 80 ஆயிரம் வாக்குகள் மட்டும் தான் கிடைத்தது
ஆனால் சமஷ்டியை வலியுறுத்தும் தமிழ் தரப்புகளுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன. EPDP மற்றும் அங்கஜன் போன்ரோரின் வாக்குகளே NPPகு கிடைக்கப் பெற்றுள்ளது அவர்களை மக்கள்
நிராகரித்துள்ளனர் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.
வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே இதை குறிப்பிட்டார்.
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் முழு நாட்டிற்கும் தமிழீழ மக்களுக்கும் பல செய்திகளை சொல்லியுள்ளது. தமிழ் மக்கள் வழங்கிய
தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றோம். தோல்விகள் பின்னடைவுகள் புதிதல்ல. மீண்டும் எழுந்து நிற்போம்.
தமிழ்த் தேசியத்தை எவரும் பேச கூடாது என்று அர்த்தமல்ல. தமிழ்த் தேசியம் தொடர்பில் அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை.
மக்களின் தீர்ப்பின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுங்கள்.
நிதி நெருக்கடி தொடர்பில் பத்திரிகை செய்தி மூலம் அறிந்து கொண்ட உள்ளூர் மற்றும் புலம்பெயர் வாழ் தமிழர்கள் தங்களால் முடிந்த அளவு நிதி உதவிகளை செய்திருந்தனர்.
நிதி உதவிகளை அனுப்பியிருந்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியிருந்தது.
தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்பதே மக்கள் தீர்ப்பு.
தமிழீழத்திலே சிங்கள இனவாத கட்சிகளின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் ஓரணியாக ஒன்றுபட வேண்டும் என்றார்.
தேசியப்பட்டியல் எம்.பிகள் குறித்து ஆணைக்குழுவின் விளக்கம்
தேசியப்பட்டியல் எம்.பிகள் குறித்து ஆணைக்குழுவின் விளக்கம்
தேசியப்பட்டியல் எம்.பிகள் குறித்து ஆணைக்குழுவின் விளக்கம் ,தேசியப் பட்டியலில் இருந்து 10ஆவது பாராளுமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்களின் பெயர்களை சில கட்சிகள் இன்னும் அனுப்பவில்லை என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, சில கட்சிகள் வழங்கிய பெயர்களை அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தொகுதி மட்டத்தில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி
அறிவித்தலை வெளியிடுவதற்கு உரிய பெயர்கள் அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்களைத் தவிர வேறு நபர்களை தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு நியமிக்க முடியாது எனவும், தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
IMF இலங்கை விஜயம்
IMF இலங்கை விஜயம்
IMF இலங்கை விஜயம் ,இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று நவம்பர் 17 முதல் 23 வரை கொழும்பிற்கு விஜயம் செய்யவுள்ளது.
IMF இன் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழான இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வை இக்குழு நடாத்தவுள்ளதாக, IMF பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதையும் நாடு எதிர்நோக்கும் நிதி சவால்களை எதிர்கொள்வதையும் இலக்காகக் கொண்ட
சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதில் இந்த மீளாய்வு ஒரு முக்கியமான படியாகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதித் திட்டம் இலங்கையின் பொருளாதார மீட்பு முயற்சிகளை எளிதாக்குவதற்கு தேவையான நிதி உதவி மற்றும் கொள்கை வழிகாட்டல்களை வழங்குகிறது
டிரம்புடன் ஒத்துழைக்கத் தயார் சீன ஜனாதிபதி
டிரம்புடன் ஒத்துழைக்கத் தயார் சீன ஜனாதிபதி
டிரம்புடன் ஒத்துழைக்கத் தயார் சீன ஜனாதிபதி ,எதிர்வரும் ஜனவரி மாதம் ஓய்வுபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (16) இடம்பெற்றுள்ளது.
பெருவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் போது இந்த சந்திப்பு நடந்தது.
இதன்போது அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்புடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக சீன அதிபர் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், டிரம்பின் முதல் பதவிக் காலத்தில், சீன-அமெரிக்க உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன, மேலும் கோவிட் ஒரு சீன வைரஸ் என்று டிரம்ப்
கூறிய பிறகு, அந்த உறவுகள் வீழ்ச்சியடையும் நிலையை எட்டியமை குறிப்பிடத்தக்கது.
கண்காணிப்பாளர்களுக்கு அலைபேசி எடுத்துச் செல்ல தடை
கண்காணிப்பாளர்களுக்கு அலைபேசி எடுத்துச் செல்ல தடை
கண்காணிப்பாளர்களுக்கு அலைபேசி எடுத்துச் செல்ல தடை ,இம்முறை, கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சை நடைபெறும் பரீட்சை
நிலையங்களுக்குள், உதவி அதிபர் உட்பட கண்காணிப்பு ஆசிரியர்களுக்கு அலைபேசிகளை எடுத்துச் செல்லதடை விதிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை மையத்தின் நிலைய அதிகாரி மற்றும் மேலதிக கண்காணிப்பாளர் மட்டுமே அலைபேசிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
கடந்த காலங்களில் எழுந்த பிரச்சினைகள் காரணமாக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், பரீட்சை காலத்தில் தேர்வு கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, பரீட்சை திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக, மாகாண மற்றும் பிராந்திய அலுவலகங்களின் அதிகாரிகளும் கண்காணிப்புக்கு ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
ஒரு கண்காணிப்பாளர் 15 நாட்களில் 20 பரீட்சை மையங்களை கண்காணிக்க வேண்டும்
70 ஆண்டுகளுக்குப் பிறகு காணாமல் போன பிரிட்டிஷ் வீரர்களின் உடல்
70 ஆண்டுகளுக்குப் பிறகு காணாமல் போன பிரிட்டிஷ் வீரர்களின் உடல்
70 ஆண்டுகளுக்குப் பிறகு காணாமல் போன பிரிட்டிஷ் வீரர்களின் உடல்களுடன் குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைகின்றன
அவரது சக்கர நாற்காலியில் இருந்து, மைக்கேல் நார்த்தி தனது தந்தையின் கல்லறையை அமைதியாகப் பார்த்து, முதல் முறையாக ஒரு பூவை வைக்கிறார்.
“70 ஆண்டுகளில் நான் அவருக்கு மிக நெருக்கமாக இருப்பது இதுதான், இது அபத்தமானது,” என்று அவர் கடுமையாக கேலி செய்கிறார்.
13 குழந்தைகளில் இளையவரான அவரது தந்தை கொரியப் போரில் சண்டையிடச் சென்றபோது, போர்ட்ஸ்மவுத்தின் பின் தெருக்களில் ஒரு ஏழைக்
குடும்பத்தில் பிறந்த மைக்கேல் இன்னும் குழந்தையாகவே இருந்தார். அவர் செயலில் கொல்லப்பட்டார், அவரது உடல் அடையாளம் காணப்படவில்லை.
பல தசாப்தங்களாக, அது கொரியாவின் தெற்கு கடற்கரையில் உள்ள பூசானில் உள்ள ஐநா கல்லறையில் குறிக்கப்படாத கல்லறையில் கிடந்தது,
‘பிரிட்டிஷ் இராணுவத்தின் உறுப்பினர், கடவுளுக்குத் தெரிந்தவர்’ என்ற பலகையால் அலங்கரிக்கப்பட்டது.
இப்போது அது அவரது பெயரைக் கொண்டுள்ளது – சார்ஜென்ட் டி. நார்தே, 24 ஏப்ரல் 1951, 23 வயதில் இறந்தார்.
சார்ஜென்ட் நோர்தே, மேலும் மூவருடன் சேர்ந்து, கொரியப் போரில் கொல்லப்பட்ட முதல் அறியப்படாத பிரிட்டிஷ் வீரர்கள் வெற்றிகரமாக
அடையாளம் காணப்பட்டனர், மேலும் மைக்கேல் மற்ற குடும்பங்களுடன் சேர்ந்து அவர்களின் கல்லறைகளை மறுபெயரிடுவதற்கான ஒரு விழாவில் கலந்து கொள்கிறார்.
டிரம்ப் அமைச்சரவை வேட்பாளர்கள் தவறான நடத்தை
டிரம்ப் அமைச்சரவை வேட்பாளர்கள் தவறான நடத்தை
டிரம்ப் அமைச்சரவை வேட்பாளர்கள் தவறான நடத்தை உரிமைகோரல்கள் மற்றும் சர்ச்சையை எதிர்த்துப் போராடுகிறார்கள்
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் அமைச்சரவை வேட்பாளர்களில் பலர் தவறான நடத்தை கூற்றுக்கள் உட்பட கடுமையான ஆய்வுகளை எதிர்கொள்கின்றனர்.
அவரது பாதுகாப்பு செயலாளரான பீட் ஹெக்செத் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை மறுக்கிறார் மற்றும் சாத்தியமான அட்டர்னி ஜெனரல் மாட் கேட்ஸ் ஒரு நெறிமுறை விசாரணையின் மையத்தில் உள்ளார்.
டிரம்பின் சுகாதார செயலாளர் வேட்பாளர், ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர், அவரது தடுப்பூசி சந்தேகத்திற்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறார்.
ட்ரம்ப் ஜனவரியில் பதவியேற்கும் போது இந்த வேட்பாளர்களை உறுதிப்படுத்த அமெரிக்க செனட் தேவைப்படும், மேலும் அறை அவரது சக குடியரசுக்
கட்சியினரால் கட்டுப்படுத்தப்படும் என்றாலும், அவரது அமைச்சரவைப் போட்டியாளர்கள் இருதரப்பு விசாரணைகளின் போது கடுமையான கிரில்லை எதிர்கொள்வார்கள்.
2017ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் பென்டகன் வேட்பாளர் ஹெக்செத் விசாரிக்கப்பட்டதாக வெள்ளிக்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.
ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளரும், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடந்த போர்களில் மூத்தவருமான ஹெக்சேத், ஒருபோதும் கைது செய்யப்படவில்லை, மேலும் அவர் செய்த தவறுகளை மறுக்கவில்லை.
டிரம்ப் செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங் கூறினார்: “எந்தவொரு மற்றும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் திரு ஹெக்செத் கடுமையாக மறுத்துள்ளார், மேலும் எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.”
திருமணத்தை மறுத்ததால் ஒரு டீனேஜ் பெண் அவளது பெற்றோரால் கௌரவக் கொலை
திருமணத்தை மறுத்ததால் ஒரு டீனேஜ் பெண் அவளது பெற்றோரால் கௌரவக் கொலை
திருமணத்தை மறுத்ததால், ஒரு டீனேஜ் பெண், அவளது பெற்றோரால் ‘கௌரவக் கொலை ,நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை மறுத்ததால், ஒரு டீனேஜ் பெண், அவளது பெற்றோரால் ‘கௌரவக் கொலை’ செய்ததாகக் கூறப்படும்
ஒரு குற்றச்சாட்டில், அவள் பள்ளிக்கு வெளியே கிட்டத்தட்ட மூச்சுத்திணறிக் கொல்லப்பட்டாள்.
இஹ்சான் அலி, 44, மற்றும் அவரது மனைவி சஹ்ரா சுபி மொஹ்சின் அலி, 40, ஆகியோர் மீது கொலை முயற்சி மற்றும் கடத்தல் முயற்சி ஆகிய
குற்றச்சாட்டுகள் அக்டோபர் 18 ஆம் தேதி கைது செய்யப்பட்ட பின்னர் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதிர்ச்சியூட்டும் காணொளியில், தந்தை தனது மகளை தரையில் வைத்து, அவர் கழுத்தை நெரித்ததைக் காட்டியது.
பெயர் குறிப்பிடப்படாத 17 வயதான சிறுமி, வாஷிங்டனில் உள்ள லேசியில் உள்ள டிம்பர்லைன் உயர்நிலைப் பள்ளிக்கு ஓடிவிட்டார், அங்கு அவரது 16 வயது காதலனும் படித்தார், அவரது பெற்றோர் அவளை ஈராக்கிற்கு விமானத்தில் ஏற்ற முயன்றதை அடுத்து.
‘வேறொரு மாவட்டத்தில் உள்ள வயதான ஒருவருடன் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை மறுத்ததற்காக அவரது தந்தை சமீபகாலமாக தன்னை கவுரவக்
கொலை செய்வதாக மிரட்டினார்’ என்று சிறுமி பொலிஸாரிடம் கூறியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
காதலனின் தந்தையான விக்டர் பார்ன்ஸ், DailyMail.com இடம், சிறுமியின் பெற்றோர், அவள் எங்கே இருக்கிறாள் என்பதை அறியக் கோரி அன்று காலை பொலிசாருடன் அவனது வீட்டிற்கு வந்ததாகக் கூறினார்.
அவள் அங்கு இல்லை என்றும், பள்ளியில் இருப்பாள் என்றும் அவர் அவர்களிடம் கூறினார், பின்னர் அவரை எச்சரிக்க தனது மகனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்..
ஜனாதிபதியை வாழ்த்தினார் இந்திய உயர்ஸ்தானிகர்
ஜனாதிபதியை வாழ்த்தினார் இந்திய உயர்ஸ்தானிகர்
ஜனாதிபதியை வாழ்த்தினார் இந்திய உயர்ஸ்தானிகர் ,பொதுத் தேர்தலில் விசேட வெற்றியை பதிவு செய்துள்ள தேசிய மக்கள் சக்திக்கு வாழ்த்து
தெரிவிப்பதற்காக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துள்ளார்.
அருகிலுள்ள ஜனநாயக நாடாக தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ள ஆணைக்காக இந்தியா வாழ்த்து தெரிவிப்பதுடன் இருநாட்டு மக்களின் நலனுக்காக
இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்
































