கொழும்பிலிருந்து சென்ற அதிசொகுசு பேருந்து விபத்து
கொழும்பிலிருந்து சென்ற அதிசொகுசு பேருந்து விபத்து
கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த அதிசொகுசு பேருந்து, கொடிகாமம் – மீசாலை பகுதிகளுக்கு இடையே ஏ9 வீதியில் வைத்து லாண்ட் மாஸ்டரை மோதி விபத்துக்குள்ளானதில் சிலர் காயமடைந்த சம்பவம் புதன்கிழமை (18) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் சிலர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
ஜனாதிபதி மாளிகையை இடமாற்றும் திட்டம் ஒத்திவைப்பு
ஜனாதிபதி மாளிகையை இடமாற்றும் திட்டம் ஒத்திவைப்பு
ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை, பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டைக்கு மாற்றும் திட்டத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய அரசாங்கம் கிடப்பில் போட்டுள்ளதாக தெரிய வருகிறது.
கடந்த அரசாங்கம் இந்த அலுவலகங்களை இடமாற்றம் செய்ய திட்டமிட்டதுடன், இதன் மூலம் அவற்றின் தற்போதைய கட்டிடங்கள் கொழும்பு பாரம்பரிய கட்டிடங்களாக சுற்றுலாத்துறைக்காக அபிவிருத்தி செய்யப்படுவதற்காக எத்தனிக்கப்பட்டது.
கடந்த அரசாங்கம் 2025 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டிருந்தது.
எவ்வாறாயினும், இந்த திட்டம் தற்போதைய அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான மாற்றுத் திட்டம்
குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த அரசாங்கம் மாதிவெலவில் பாராளுமன்ற வளாகத்திற்கு அருகாமையில் புதிய ஜனாதிபதி மாளிகையை நிர்மாணிக்க
திட்டமிட்டிருந்தது. இது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும்.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கடந்த ஆட்சியில் அதனை மீள்பரிசீலனை செய்து அதை
முன்னெடுத்து செல்ல முடிவெடுக்கும் வரை சந்திரிக்காவுக்குப் பின் வந்த அரசாங்கங்கள் அதில் கவனம் செலுத்தவில்லை.
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை நன்கு அறிந்த ஒரு தரப்பு, குறித்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பு பறவைகள் பூங்காவிற்கு பயன்படுத்தப்படும் என்று கூறினார்.
கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இதேபோன்ற சில திட்டங்களை புதிய அரசாங்கம் கைவிட்டுள்ளதுடன், நுவரெலியாவில் அமைந்துள்ள
பிரசித்தி பெற்ற தபால் நிலைய கட்டிடத்தை சுற்றுலாவிற்கு பயன்படுத்துவதற்கான திட்டமும் இதில் ஒன்றாகும்.
அதனை தபால் திணைக்களத்தின் பிரத்தியேக பாவனைக்காக தக்கவைக்க ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எனினும், புதிய அரசாங்கம், அரச பங்களாக்களை அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களாக ஒதுக்காமல் பொருளாதார பயன்பாட்டிற்கு பயன்படுத்த தீர்மானித்துள்ளது.
பதவி விலகத் தயார் என்கிறார் சஜித்
பதவி விலகத் தயார் என்கிறார் சஜித்
பதவி விலகத் தயார் என்கிறார் சஜித் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தான் கற்ற கல்வி, தன்னுடைய பட்டங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஆவணங்களை சமர்ப்பித்து உரையாற்றிக்கொண்டிருக்கின்றார்.
தான் சமர்ப்பித்துக்கும் ஆவணங்கள் அனைத்தும் உண்மையும். அதில் தவறு இருக்குமாயின் யாராவது கண்டறிந்தால், எம்.பி பதவியிலும் இருந்தும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் ஏன்? அரசியலில் இருக்கும் விலகத் தயார் என்றார்.
நான், எனது பிறப்புச்சான்றிதழையும் எடுத்துவந்தேன். யாராவது கேள்வி கேட்பார்கள் என்று நினைத்துதான் அவ்வாறு எடுத்துவந்தேன் என்றார்.
நோய் காவு வண்டி பேருந்து விபத்து
நோய் காவு வண்டி பேருந்து விபத்து
நோய் காவு வண்டி பேருந்து விபத்து மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நோய் காவு வண்டி (ஆம்புலன்ஸ்) அதே திசையில் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தில்
மோதி மூவர் காயமடைந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை(17) காலை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் இரு வாகனங்களிலும் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதுடன், நோய் காவு வண்டியில் பயணித்த சாரதி உட்பட
மூன்று பேர் காயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நோய் காவு வண்டியில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இருந்து புறப்பட்டு, களுவாஞ்சிகுடியில் நடைபெறவுள்ள
கூட்டம் ஒன்றுக்காக சென்றவேளையிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.
எனினும் நோய் காவு வண்டியின் முன் பகுதிக்கும் பேருந்தின் பின் பகுதியிலும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடுமையான சவாலை எதிர்கொள்கிறோம் கனடா துணைப் பிரதமர்
கடுமையான சவாலை எதிர்கொள்கிறோம் கனடா துணைப் பிரதமர்
நாங்கள் கடுமையான சவாலை எதிர்கொள்கிறோம்’: கனடா துணைப் பிரதமர் ட்ரூடோ ஃப்ரீலேண்டுடனான விரிசல் காரணமாக ராஜினாமா செய்தார், மேலும் அவர் நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகினார், மேலும் அவரது
ராஜினாமா பிரதமர் ட்ரூடோவுக்கு எதிராக அவரது அமைச்சரவைக்குள்ளேயே முதல் வெளிப்படையான அதிருப்தியைக் குறிக்கிறது மற்றும் அவரது அதிகாரத்தை பிடிப்பதற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம்.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் கட்டண அச்சுறுத்தல்கள் தொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோவுடன் கருத்து வேறுபாடு
கொண்ட கனடாவின் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் திங்கள்கிழமை திடீரென ராஜினாமா செய்தார்.
ஃப்ரீலாண்ட் நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகினார், மேலும் அவரது ராஜினாமா பிரதமர் ட்ரூடோவுக்கு எதிராக அவரது அமைச்சரவைக்குள்
இருந்து வந்த முதல் வெளிப்படையான அதிருப்தியைக் குறித்தது, மேலும் அவர் அதிகாரத்தை பிடிப்பதற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம்.
லிபரல் கட்சித் தலைவர் ட்ரூடோ தனது பிரதான போட்டியாளரான கன்சர்வேட்டிவ் பியர் பொய்லிவ்ரேவை விட 20 புள்ளிகள் பின்தங்கியுள்ளார்,
அவர் அரசாங்கத்தை கவிழ்க்கவும் மற்றும் திடீர் தேர்தலை கட்டாயப்படுத்தவும் செப்டம்பர் முதல் மூன்று முறை முயற்சித்தார்.
“எங்கள் நாடு இன்று ஒரு பெரிய சவாலை எதிர்கொள்கிறது,” என்று ஃப்ரீலாண்ட் தனது ராஜினாமா கடிதத்தில், கனேடிய இறக்குமதிகள் மீது டிரம்ப் திட்டமிட்டுள்ள 25 சதவீத வரிகளை சுட்டிக்காட்டினார்.
காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வாத்ராவின் பையை பாஜக எம்பிக்கள் ஒரு பிரிவினர் விமர்சித்துள்ளனர்
காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வாத்ராவின் பையை பாஜக எம்பிக்கள் ஒரு பிரிவினர் விமர்சித்துள்ளனர்
காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வாத்ராவின் பையை பாஜக எம்பிக்கள் ஒரு பிரிவினர் விமர்சித்துள்ளனர் நான் என்ன அணிய வேண்டும் என்பதை யார் முடிவு செய்யப் போகிறார்கள்?’’ ‘பாலஸ்தீன’ பை ரோவில் பிரியங்கா காந்தி
காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வாத்ராவின் பையை பாஜக எம்பிக்கள் ஒரு பிரிவினர் விமர்சித்துள்ளனர், அவர் முஸ்லிம்களை திருப்திப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வத்ரா, பாலஸ்தீனம் என்று எழுதப்பட்ட பையில் தனக்கு எதிராக பாஜகவினர் நடத்திய எதிர்ப்பை “வழக்கமான ஆணாதிக்கம்” என்று வர்ணித்துள்ளார்.
“நான் இப்போது என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை யார் முடிவு செய்யப் போகிறார்கள்? அதை யார் முடிவு செய்யப் போகிறார்கள்? பெண்கள் என்ன அணிய வேண்டும் என்பதையும் நீங்கள் முடிவு செய்வது வழக்கமான ஆணாதிக்கம்.
நான் அதற்கு சப்ஸ்கிரைப் செய்யவில்லை. நான் விரும்புவதை நான் அணிவேன்,” என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். நேற்று பாராளுமன்றத்தில் பெரும் அமளியை கிளப்பிய பை பற்றி கேட்கப்பட்ட பின்னர்.
பையை உயர்த்தி பிடித்தபடி, “இது சம்பந்தமாக எனது நம்பிக்கைகள் என்னவென்று நான் பலமுறை கூறியுள்ளேன். எனது ட்விட்டர் கைப்பிடியைப் பார்த்தால் எனது கருத்துகள் அனைத்தும் முடிந்துவிட்டன” என்றாள்.
வயநாடு எம்.பி., நேற்று நாடாளுமன்றத்துக்கு எடுத்துச் சென்ற பையில் பாலஸ்தீனம் என்று எழுதப்பட்டிருந்தது. அதில் பாலஸ்தீனத்துடனான ஒற்றுமையின் சின்னமான தர்பூசணியும் இடம்பெற்றிருந்தது. கடந்த ஆண்டு
அக்டோபர் மாதம் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக திருமதி காந்தி வத்ரா குரல் கொடுத்தார்.
“இனி நான் உடுத்தும் ஆடையை யார் முடிவு செய்யப் போகிறார்கள், அதுதான் வழக்கமான ஆணாதிக்கம்”‼️
ஒரு பெண் தன் இதயத்தையும் தன் நம்பிக்கைகளையும் தன் கைகளில் அணிந்துகொள்கிறாள். ராக்ஸ்டார் PGV 🔥#பாலஸ்தீன இனப்படுகொலை#PriyankaGandhipic.twitter.com/Ye0ZKC0n0r
— பிரியம்வாதா (@PriaINC) டிசம்பர் 16, 2024
காங்கிரஸ் எம்.பி.யின் பை அவரது ஆதரவாளர்களிடமிருந்து ஆரவாரத்தையும், பாஜக எம்.பி.க்களின் ஒரு பிரிவினரிடமிருந்து விமர்சன அலையையும் ஈர்த்தது. பாஜகவின் ராஜ்யசபா எம்.பி., குலாம் அலி கட்டானா, செய்தி
நிறுவனமான ஐ.ஏ.என்.எஸ்ஸிடம், “மக்கள் செய்திகளுக்காக இதுபோன்ற விஷயங்களைச் செய்கிறார்கள். மக்களால் நிராகரிக்கப்பட்டால், அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்
7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு சேதமடைந்த கட்டிடங்கள், கார்கள் நசுக்கப்பட்டன
7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு சேதமடைந்த கட்டிடங்கள், கார்கள் நசுக்கப்பட்டன
வனுவாட்டுவில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு சேதமடைந்த கட்டிடங்கள், கார்கள் நசுக்கப்பட்டன
செவ்வாயன்று பசிபிக் தீவான வனுவாட்டுவில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, தலைநகர் போர்ட் விலாவில் உள்ள கட்டிடங்கள் மற்றும் அமெரிக்கா மற்றும் பிற தூதரகங்கள் உட்பட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், வனுவாட்டுவின் முக்கிய தீவான எஃபேட் கடற்கரையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் 57 கிலோமீட்டர் (35 மைல்) ஆழத்தில் மதியம் 12:47 மணிக்கு (0147 GMT) ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிற தூதரகங்கள் உள்ள கட்டிடத்தின் தரை தளம் உயர்ந்த தளங்களின் கீழ் நசுக்கப்பட்டது, சமூக ஊடகங்களில் அழிவின் படங்களை வெளியிட்ட பின்னர், குடியிருப்பாளர் மைக்கேல் தாம்சன் செயற்கைக்கோள் தொலைபேசி மூலம் AFP இடம் கூறினார்.
“அது இனி இல்லை. இது முற்றிலும் தட்டையானது. மேல் மூன்று தளங்கள் இன்னும் வைத்திருக்கின்றன, ஆனால் அவை கைவிடப்பட்டுள்ளன” என்று தாம்சன் கூறினார்.
“அந்த நேரத்தில் யாராவது இருந்திருந்தால், அவர்கள் போய்விட்டார்கள்.”
தரை தளத்தில் அமெரிக்க தூதரகம் இருந்ததாக தாம்சன் கூறினார். இதை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.
பப்புவா நியூ கினியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் சமூக ஊடகங்களில் ஒரு செய்தியில் கூறியது, பணிக்கு “கணிசமான சேதத்தை” மேற்கோள் காட்டி, அடுத்த அறிவிப்பு வரும் வரை தூதரகத்தை அமெரிக்கா மூடியது.
துப்பாக்கிச் சூடு நான்கு பேர் கைது
துப்பாக்கிச் சூடு நான்கு பேர் கைது
துப்பாக்கிச் சூடு நான்கு பேர் கைது மீட்டியாகொட, மஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மீட்டியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி, நேற்று (16) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
நேற்றிரவு முச்சக்கர வண்டியில் வந்த சிலர், வீடொன்றில் இருந்த ஆண் ஒருவர் மீதும் அவரது மகளும் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
தொழிலுக்காக வௌிநாடு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தொழிலுக்காக வௌிநாடு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தொழிலுக்காக வௌிநாடு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 2024ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காக புலம்பெயர்ந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைத் தாண்டியுள்ளதுடன், இந்த
வருடம் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி வரை 300,162 பேர் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களுக்காக புலம்பெயர்ந்துள்ளனர் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தையும் தாண்டியுள்ளது இது இரண்டாவது முறையாகும்,
இதற்குமுன்னர், 2022 ஆம் ஆண்டில் 310,948 தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக புலம்பெயர்ந்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டில், 177,804 ஆண்களும், 122,358 பெண்களும் வெளிநாட்டு வேலைகளுக்காக புலம்பெயர்ந்துள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் வெளிநாடு சென்றவர்களின் மொத்த எண்ணிக்கையில், 40.7 வீதமான பெண்களும், 60 வீதத்திற்கும் அதிகமான ஆண்களும் உள்ளடங்குவர்
சுனாமி எச்சரிக்கை
சுனாமி எச்சரிக்கை
சுனாமி எச்சரிக்கை பசுபிக் கடலில் வனுவாட்டு தீவுக்கு அருகே ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன
இலங்கை இந்திய ஜனாதிபதிகள் சந்திப்பு
இலங்கை இந்திய ஜனாதிபதிகள் சந்திப்பு
இலங்கை இந்திய ஜனாதிபதிகள் சந்திப்பு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை புதுடில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது, இந்திய – இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து கருத்துப் பரிமாறப்பட்டது.
சிநேகபூர்வ சந்திப்பின் பின்னர் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இராப்போசன விருந்து வழங்கினார்.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும் இந்தச் சந்திப்பில் இணைந்து கொண்டனர்
இந்திய முன்னணி வர்த்தகர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்
இந்திய முன்னணி வர்த்தகர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்
இந்திய முன்னணி வர்த்தகர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று (16) பிற்பகல் புதுடில்லியில் இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்திய கைத்தொழில் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடலில் இந்தியாவின் முன்னணி தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் முதலீடு செய்வதற்கான சாதகமான சூழல் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையில் முதலீடு செய்யுமாறு இந்திய தொழில் முனைவோரிடம் கோரிக்கை விடுத்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளின் அடிப்படையில் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை விஸ்தரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்த இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகள் விருப்பம் தெரிவித்ததுடன், அதற்குத் தேவையான முதலீட்டு வசதிகளை வழங்க இலங்கை அரசாங்கம் உடன்பாடு தெரிவித்தது.
தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோவும் இந்த சந்திப்பில் கருத்துத் தெரிவித்தார்
இராமேஸ்வரம் தலைமன்னார் கப்பல் போக்குவரத்து விரைவில்
இராமேஸ்வரம் தலைமன்னார் கப்பல் போக்குவரத்து விரைவில்
இராமேஸ்வரம் தலைமன்னார் கப்பல் போக்குவரத்து விரைவில் மீனவர்களின் வாழ்வாதார பிரச்னையை மனிதாபிமான முறையில் அணுக இலங்கை ஜனாதிபதியுடன் விவாதிக்கப்பட்ட போது ஒப்புக்கொள்ளப்பட்டது. இராமேஸ்வரம்- தலைமன்னார் வரை கப்பல் போக்குவரத்து துவங்கப்படும்’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தியா வந்துள்ள இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க, டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே உறவை வலுப்படுத்துவது குறித்து, இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.
குறித்த சந்திப்பின் போது ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளதாவது: மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்தியாவின் சிறப்பான வரவேற்புக்கு நன்றி.
இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும். இந்திய மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுருக்குமடி வலையால் மீன்வளம் பாதிக்கப்படும். மக்களுக்கான சேவைகளை
டிஜிட்டல் முறையில் வழங்க இந்தியா முன்வந்துள்ளது. நிதி நெருக்கடியை இலங்கை சந்தித்த போது, இந்தியா உதவி செய்தது. இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடி கூறியதாவது: மனிதாபிமான அடிப்படையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அணுக வேண்டும். ராமேஸ்வரம்- தலைமன்னார் வரை கப்பல் போக்குவரத்து துவங்கப்படும்.
இலங்கையின் வளர்ச்சி திட்டங்களுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும். இந்தியா இலங்கை உறவு வலுப்படும். பெட்ரோலியம், எரிவாயு, சூரிய ஒளி, மின்சார துறைகளில் ஒத்துழைப்பு வலுப்படும்.
நமது திட்டங்கள் அனைத்தும் இலங்கையின் வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு இயங்குகின்றன. காங்கேசன் துறைமுகத்தை புனரமைக்க நிதி உதவி அளிக்கப்படும்.
இயற்கை பேரிடரின் போதும் நிவாரணம் உள்ளிட்ட பணிகளில் ஒத்துழைப்பு அளிக்கப்படும்.
இலங்கையின் பால் வளம் மீன்வளத்துறை வளர்ச்சிக்கு இந்தியா நிதி உதவி அளிக்கும். என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளியான ஊழல் |அதிரடி காட்டும் அர்ச்சுனா|பதறும் எம்பிக்கள்
வெளியான ஊழல் |அதிரடி காட்டும் அர்ச்சுனா|பதறும் எம்பிக்கள்
வெளியான ஊழல் |அதிரடி காட்டும் அர்ச்சுனா|பதறும் எம்பிக்கள்
வன்னி மைந்தன் அர்ச்சுனாவுடன் மோதலா |உண்மையில் நடந்தது என்ன |
வன்னி மைந்தன் அர்ச்சுனாவுடன் மோதலா |உண்மையில் நடந்தது என்ன |
வன்னி மைந்தன் அர்ச்சுனாவுடன் மோதலா |உண்மையில் நடந்தது என்ன |
இந்திய இராஜதந்திரிகளுடன் சந்திப்பு
இந்திய இராஜதந்திரிகளுடன் சந்திப்பு
இந்திய இராஜதந்திரிகளுடன் சந்திப்பு இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தங்கியிருக்கும் புதுடில்லி ITC MAURYA ஹோட்டலுக்கு வருகைத்
தந்த இந்திய நிதி மற்றும் நிறுவன அலுவல்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், Dr.S.jayashankar) மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர்.
இந்தியா – இலங்கை பொருளாதார ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்ளல் மற்றும் இருநாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புக்களை விரிவுபடுத்திக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மற்றும்
இந்திய நிதி, நிறுவன அலுவல்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அதேநேரம் இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அதிகளவில் அழைத்து வருவது மற்றும் இலங்கையின் விவசாய நவீனமயமாக்கல்,
டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சிநேகபூர்வமாக
இடம்பெற்றதோடு, இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு இந்தியாவின் மிகப்பெரிய சந்தையை பயன்படுத்திக்கொள்வது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், இந்நாட்டின் சுற்றுலா, முதலீடு மற்றும் வலுசக்தி துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவற்கும் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இதன்போது இணக்கம் தெரிவித்தார்.
மீன்பிடித்துறை மற்றும் தேசிய ஒற்றுமை மேம்பாடு உள்ளிட்ட இருநாடுகளுக்கும் அன்னியோன்யமான விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அதனையடுத்து இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் (Shri Ajith Doval) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து வலயத்தின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும்
பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இதன்போது கலந்துகொண்டனர்.
பொலிஸ் உத்தியோகத்தர் பலி
பொலிஸ் உத்தியோகத்தர் பலி
பொலிஸ் உத்தியோகத்தர் பலி வத்தேகம பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்த வீதி விபத்து தொடர்பில் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட காருடன் காரின் சாரதியும் மாத்தளையில் நேற்று கைது செய்யப்பட்டதாகவும், காரை மறைப்பதற்கு அவருக்கு உதவிய மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் 46 மற்றும் 48 வயதுடைய மாத்தளை மற்றும் உதிஸ்பத்துவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
சந்தேக நபர்கள் தொடர்பில் வத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சிறப்பு வரவேற்பு
இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சிறப்பு வரவேற்பு
இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சிறப்பு வரவேற்பு ,மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு திங்கட்கிழமை (16) இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதிபவனில் காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.
இதன்போது, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வரவேற்று அளித்தனர்.
அத்துடன், சிறப்பு இராணுவ அணிவகுப்பு மரியாதையும் இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.
நேற்று (15) மாலை சுமார் 5.30 மணியளவில் ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் பயணித்த விமானம் இந்தியாவின் புதுடில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தது.
அங்கு, தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். முருகன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இராஜதந்திரிகள் குழுவினர் ஜனாதிபதியை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கண்டி, பதுளை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எல்ல – நமுனுகுல தொழிற்சாலைப் பிரிவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது
பிரபல தபேலா இசை மேதை சாகிர் ஹுசைன் காலமானார்
பிரபல தபேலா இசை மேதை சாகிர் ஹுசைன் காலமானார்
பிரபல தபேலா இசை மேதை சாகிர் ஹுசைன் காலமானார் பிரபல தபேலா இசை மேதை சாகிர் ஹுசைன் தனது 73 ஆவது வயதில் இன்று காலமானார்.
அமெரிக்காவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலமானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதயக் கோளாறு காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரபல தபேலா இசைக்கலைஞரான இவர் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
அத்துடன் இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருதும் சாகிர் உசேனுக்கு வழங்கப்பட்டுள்ளது



























