இஸ்ரேல் கப்பல்களை தாக்குவோம் ஹவுதி மிரட்டல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் கப்பல்களை தாக்குவோம் ஹவுதி மிரட்டல்

இஸ்ரேல் கப்பல்களை தாக்குவோம் ஹவுதி மிரட்டல்

இஸ்ரேல் கப்பல்களை தாக்குவோம் ஹவுதி மிரட்டல் ,செங்கடலில் உள்ள எந்த இஸ்ரேலிய கப்பலும் குறிவைக்கப்படும் என்று ஹவுதி கூறுகிறார்

காசாவின் கடக்கும் பாதைகளை மீண்டும் திறப்பதற்கான காலக்கெடு முடிந்ததால், இஸ்ரேலிய கப்பல்கள் மீதான தடையை ஏமன் மீண்டும்

தொடங்கியுள்ளதாக யேமன் அன்சாருல்லா இயக்கத்தின் தலைவர் தெரிவித்தார், இஸ்ரேலுக்குச் செல்லும் எந்த கப்பல்களையும் ஏமன் குறிவைக்கும் என்று எச்சரித்தார்.

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் செய்யும் எதற்கும் அமெரிக்கா முழு உடந்தையாக உள்ளது என்று யேமன் தலைவர் அப்துல்-மாலிக் அல்-ஹவுதி புதன்கிழமை ஆற்றிய உரையில் கூறினார்,

இஸ்ரேலிய ஆட்சி அமெரிக்கா, சில அரபு நாடுகளால் ஆதரிக்கப்படுகிறது, மேலும் அனைத்து வகையான குற்றங்களையும் செய்கிறது என்று கூறினார்.

“அறிவிக்கப்பட்ட செயல்பாட்டு மண்டலத்தைக் கடக்கும் இஸ்ரேலுக்குச் செல்லும் எந்தவொரு கப்பலும் யேமன் படைகளால் குறிவைக்கப்படும்” என்று அல்-ஹவுதி அடிக்கோடிட்டுக் காட்டினார்.

“அரபு ஆட்சிகள் எப்போதும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆட்சியால் நிர்ணயிக்கப்பட்ட முன்னுரிமைகளுக்குக் கட்டுப்பட்டு வருகின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.

“முதல் படியாக இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்களுக்கு எதிராக முற்றுகையை அமல்படுத்த ஏமன் நடைமுறை நடவடிக்கைகளை எடுக்கும்” என்று யேமன் புரட்சியின் தலைவர் கூறினார்.

“ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கான ஆதரவைப் பொறுத்தவரை அனைத்து விருப்பங்களும் மேசையில் உள்ளன,” என்று அல்-ஹவுதி தொடர்ந்து எச்சரித்தார்.

நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு

நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு

நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு ,ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (12) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் செயல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் இந்த ஆண்டு வரவு -செலவுத் திட்டத்தில் அந்த நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முன்னுரிமை வழங்கவேண்டிய

திட்டங்களை அடையாளம் கண்டு திறம்பட பயன்படுத்துவது தொடர்பில் ஆராயும் நோக்கத்துடன் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யபட்டது.

முறையான நகர்ப்புற அபிவிருத்தியின் மூலம் நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான சாத்தியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நகர அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரித்து செயல்படுத்தும்

போது பொருளாதார, சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பௌதீக அடிப்படையில் ஒருங்கிணைந்த திட்டங்களை தயாரிப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

நகர திட்டங்களை ஒன்லைனில் அங்கீகரிப்பதற்கான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதோடு அதற்காக தொடர்புடைய நிறுவனங்களை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

நாடு முழுவதும் 119 நகரங்களுக்கான நகர அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதோடு அந்தத் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவது

மற்றும் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.

நகர திட்டமிடல், மூலதன முதலீடுகள், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துதல், நகர காணிப் பயன்பாட்டுக் கொள்கையை தயாரித்து

செயல்படுத்துதல், புதிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளுதல், நிறைவு செய்வதற்குத் தவறியதால் புறக்கணிக்கப்பட்ட எந்தவொரு அபிவிருத்திபணியையும் பொறுப்பேற்று நிறைவு செய்தல்,

மூலதன அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரித்தல், சுற்றுச்சூழல் தரநிலைகளைத் தயாரித்தல் மற்றும் சுற்றுச்சூழல் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தயாரித்தல், கட்டிட பொறியியல் மற்றும் ஏனைய

செயல்பாடுகளை மேற்கொள்வது மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ள

பொறுப்பு மற்றும் செயல்பாடுகள் தொடர்பாகவும் இதன் போது மீளாய்வு செய்யப்பட்டது

மோடிக்கு மொரீசியஸின் தேசிய விருது
Posted in உலக செய்திகள்

மோடிக்கு மொரீசியஸின் தேசிய விருது

மோடிக்கு மொரீசியஸின் தேசிய விருது

மோடிக்கு மொரீசியஸின் தேசிய விருது ,இந்தியா – மொரிஷியஸ் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அந்நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் ஜனாதிபதி தரம்பீர் கோகுல் வழங்கினார்.

இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் மொரிஷியஸ் சென்றார். பயணத்தின் இரண்டாம் நாளான நேற்று (12), அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், எதிர்க்கட்சித்

தலைவர் ஜார்ஜஸ் பியர் லெஸ்ஜோங்கார்ட் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து மொரிஷியஸ் பிரதமர் நவின்சந்திர ராம்கூலம் தலைமையிலான குழுவினருடன், பிரதமர் மோடி தலைமையிலான

இந்திய குழு பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு மொரிஷியஸின் மிக உயரிய தேசிய விருதை, ஜனாதிபதி தரம்பீர் கோகுல் வழங்கினார்.

கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில், விருதைப் பெற்றுக்கொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “மொரிஷியஸின் மிக உயரிய தேசிய விருதை பெற்றதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

இதற்காக நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது எனக்கு மட்டுமல்ல, இந்தியாவின் 140 கோடி இந்திய மக்களுக்கும் கிடைத்த மரியாதை.

இது இந்தியாவிற்கும் மொரீஷியஸுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார மற்றும் வரலாற்று உறவுக்கு ஒரு மரியாதை” என தெரிவித்தார்

குரங்குகளை பிடித்தால் பணம் கொடுப்போம்
Posted in இலங்கை செய்திகள்

குரங்குகளை பிடித்தால் பணம் கொடுப்போம்

குரங்குகளை பிடித்தால் பணம் கொடுப்போம்

குரங்குகளை பிடித்தால் பணம் கொடுப்போம் ,பயிர்செய்கைகளை நாசம் செய்யும் குரங்குகளை பிடித்து கொடுத்தால் ஒரு குரங்குக்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை வழங்கப்படும் என்று அறிவியுங்கள் என ஐக்கிய மக்கள்

சக்தியின் கேகாலை மாவட்டஎம்.பி சுஜித் சஞ்சய பெரேரா அரசுக்கு ஆலோசனை வழங்கினார்

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்ற 2025 வரவு- செலவுத் திட்டத்தின் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலைஆலோசனை வழங்கிய அவர் மேலும் பேசுகையில்,

காட்டு விலங்குகளினால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்பு நாளாந்தம் தீவிரமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மோசமாக

பாதிக்கப்பட்டுள்ளார்கள். குரங்குகள் வருடாந்தம் 90 மில்லியன் அளவிலான தேங்காய்களை நாசம் செய்வதாக விவசாயத்துறை அமைச்சு குறிப்பிடுகிறது.

மார்ச் 15 ஆம் திகதி வீட்டுத் தோட்டங்களுக்கும், விளைநிலங்களுக்கும் வரும் காட்டு விலங்குகளை கணக்கிடுமாறு குறிப்பிடப்படுகிறது.

கணக்கிடுவதால் மாத்திரம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. குரங்குகளை பிடித்துக் கொடுத்தால் ஒரு குரங்குக்கு 500 அல்லது 1000 ரூபாய் வரை வழங்கப்படும் என்று அறிவியுங்கள்.

குரங்குகளே பயிர்ச்செய்கைகளை அதிகளவில் நாசம் செய்கின்றன. கருத்தடை செய்ய முடியாவிடின் அவற்றை தனித்த காட்டு பகுதிகளுக்காவது கொண்டு சென்று விடுங்கள் என்றார்.

சஜித்துக்கு ரணில் காலக்கெடு
Posted in இலங்கை செய்திகள்

சஜித்துக்கு ரணில் காலக்கெடு

சஜித்துக்கு ரணில் காலக்கெடு

சஜித்துக்கு ரணில் காலக்கெடு ,ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு காலக்கெடு விதித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொழும்பு மாநகர சபையில் போட்டியிடுவதற்காக, ஐக்கிய மக்கள் சக்திக்கு (SJB) எதிர்வரும் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களிடையே நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி எடுத்த மேற்கண்ட முடிவை, சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற அமைப்பாளர்களுக்கான நியமன நிகழ்வில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன அறிவித்தார்.

யாழின் 17 உள்ளூராட்சி சபைகளிலும் தே ம ச ஆட்சி அமைக்கும்
Posted in இலங்கை செய்திகள்

யாழின் 17 உள்ளூராட்சி சபைகளிலும் தே ம ச ஆட்சி அமைக்கும்

யாழின் 17 உள்ளூராட்சி சபைகளிலும் தே ம ச ஆட்சி அமைக்கும்


யாழின் 17 உள்ளூராட்சி சபைகளிலும் தே ம ச ஆட்சி அமைக்கும் ,யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான அங்கீகரிக்கப்பட்ட முர்களை நியமிக்கும் நடவடிக்கைகளுக்காக

வியாழக்கிழமை (13) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்திற்கு வருகை தந்த போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், சண்முகநாதன் ஸ்ரீபவனந்தராஜா, தொகுதி அமைப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் வருகை தந்திருந்தனர்.

நடிகை சவுந்தர்யா மரணத்தில் நடிகருக்கு தொடர்பு
Posted in உலக செய்திகள்

நடிகை சவுந்தர்யா மரணத்தில் நடிகருக்கு தொடர்பு

நடிகை சவுந்தர்யா மரணத்தில் நடிகருக்கு தொடர்பு

நடிகை சவுந்தர்யா மரணத்தில் நடிகருக்கு தொடர்பு ,நடிகை சவுந்தர்யாவின் மரணத்தின் பின்னணியில், நடிகர் மோகன்பாபுவுக்கு தொடர்புள்ளதா ? என விசாரணை நடத்த கோரி தெலங்கானா மாநிலம் கம்மம் காவல் துணை

ஆய்வாளரிடம் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இது தென்னிந்திய திரைத்துறையில் புயலை கிளப்பி உள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சவுந்தர்யா. குடும்பப்பாங்கான நடிகை என இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது.

தமிழில் நடிகர் கார்த்திக்குடன் இவர் நடித்த பொன்னுமணி படத்தை தொடர்ந்து இவர் அருணாச்சலம், படையப்பா, காதலா காதலா,

சொக்கத்தங்கம் என ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் முன்னணி நடிகர்கள் அனைவருடன் நடித்து புகழ் பெற்றார்.

இதேபோன்று தெலுங்கிலும் இவர் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, மோகன்பாபு என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து புகழ் பெற்றார்.

இந்நிலையில் இவர் 2003-ம் ஆண்டில் உறவினர் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில், கடந்த 17.4.2004 ஆம் ஆண்டு, தேர்தல் பிரச்சாரத்திற்காக நடிகை சவுந்தர்யா பெங்களூரில் இருந்து தெலங்கானா மாநிலம் கரீம்நகருக்கு செஸ்னா-180 ரக சிறப்பு விமானத்தில் புறப்பட்டார்.

அவருடன் அவரது சகோதரர் அமர்நாத்தும் உடன் இருந்தார். புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானம், பெங்களூரு வேளாண் பல்கலை கழகத்தின், காந்தி க்ருஷி விஷன் கேந்திரா வளாகத்தில் தீப்பிடித்து விழுந்தது.

இந்த கோர விபத்தில் சவுர்யாவும், அவரது சகோதரர் அமர்நாத்தும் பரிதாபமாக உடல் கருகி உயிர் இழந்தனர்.

அந்த சமயத்தில் நடிகை சவுர்தர்யா கர்ப்பமாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த சம்பவம் நடந்து சுமார் 21 ஆண்டுகளாகிவிட்டன.

இந்நிலையில், நடிகை சவுந்தர்யாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெலங்கானா மாநிலம், கம்மம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சிட்டிமல்லு

என்பவர் கம்மம் மாவட்ட ஆட்சியரிடமும், காவல் துறை ஆணையரிடமும் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் சிட்டிமல்லு கூறும்போது, “ஹைதராபாத் சம்ஷாபாத் விமான நிலையம் அருகே நடிகை சவுந்தர்யாவுக்கு 6 ஏக்கர் நிலம் இருந்தது.

இதனை நடிகர் மோகன்பாபு கேட்டார். ஆனால், அவருக்கு சவுந்தர்யா கொடுக்க மறுத்து விட்டார். இந்த தகராறு ஏற்பட்ட பின்னர், சவுந்தர்யா விமான விபத்தில் உயிர் துறந்தார்.

தற்போது அந்த இடம் நடிகர் மோகன்பாபு வசம் உள்ளது. இது எப்படி சாத்தியம் ? ஆதலால், நடிகை சவுந்தர்யாவின் மரணம் ஒரு சதித் திட்டமாக கூட இருக்க வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக நடிகர் மோகன்பாபுவை விசாரிக்க வேண்டும்” என்று புகார் மனுவில் கூறியுள்ளார்.

நடிகை சவுந்தர்யா இறந்த விவகாரம், 21 ஆண்டுகள் கழித்து மீண்டும் எழும்பியுள்ளது திரையுலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட இளைஞன்
Posted in இலங்கை செய்திகள்

கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட இளைஞன்

கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட இளைஞன்

கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட இளைஞன் ,அங்குணுகொலபெலஸ்ஸ – அபேசேகரகம வீதியில், கீரியகொடெல்ல சந்தியில், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 23 வயதுடைய அபேசிங்க விஜேநாயக்க சந்தீப லக்‌ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த மர்ம மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அனுராதபுர பெண் வைத்தியர் வன்புணர்வு
Posted in இலங்கை செய்திகள்

அனுராதபுர பெண் வைத்தியர் வன்புணர்வு

அனுராதபுர பெண் வைத்தியர் வன்புணர்வு

அனுராதபுர பெண் வைத்தியர் வன்புணர்வு ,அனுராதபுரம் மருத்துவமனையில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபருக்கு உதவிய மற்றும் உடந்தையாக

இருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அனுராதபுரம் பொலிஸ் நிலையம் அறிவித்துள்ளது.

அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் மருத்துவ விடுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, நபர் மருத்துவரை கத்தியால் மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்து, கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அவரது

மொபைல் போனை திருடி தப்பிச் சென்ற குற்றத்திற்காக அனுராதபுரம் தலைமையகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி சந்தேக நபரைக் கைது செய்தனர்.

இது தொடர்பாக 10.03.2025 அன்று அனுராதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தக் குற்றங்கள் தொடர்பாக சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்தக் குற்றத்திற்குப் பிறகு சந்தேக நபரை தலைமறைவாக வைத்திருக்க உதவியதற்காகவும், திருடப்பட்ட

தொலைபேசியை வைத்திருந்ததற்காகவும், அனுராதபுரம் காவல் நிலையத்தில் 12.03.2025 அன்று இரவு ஒரு பெண் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் எலா வீதி, கல் நெவா பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரின் 37 வயதுடைய சகோதரி ஆவார்.

அனுராதபுரம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லெபனானில் ஒரு வாகனத்தை குறிவைத்து இஸ்ரேலிய ஆளில்லா விமானம் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

லெபனானில் ஒரு வாகனத்தை குறிவைத்து இஸ்ரேலிய ஆளில்லா விமானம் தாக்குதல்

லெபனானில் ஒரு வாகனத்தை குறிவைத்து இஸ்ரேலிய ஆளில்லா விமானம் தாக்குதல்

லெபனானில் ஒரு வாகனத்தை குறிவைத்து இஸ்ரேலிய ஆளில்லா விமானம் தாக்குதல் ,சியோனிச இஸ்ரேலிய ஆட்சியின் புதிய ஆக்கிரமிப்பில், லெபனானில் ஒரு வாகனத்தை இஸ்ரேலிய ஆளில்லா விமானம்

குறிவைத்ததாக செவ்வாயன்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

டெய்ர் அல்-சஹ்ரானி நதி சாலையில் ஒரு காரை இஸ்ரேலிய ஆளில்லா விமானம் மோதியதாக ஹெஸ்பொல்லா அல்-மனார் தொலைக்காட்சி நிருபர் தெரிவித்தார்.

போர் நிறுத்தத்தை மீறிய புதிய ஆக்கிரமிப்பில் யார் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்பது குறித்து உடனடி அறிக்கை எதுவும் இல்லை.

ரஷ்யாவுடனான போரில் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் ஒப்புக்கொள்கிறது
Posted in இலங்கை செய்திகள்

ரஷ்யாவுடனான போரில் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் ஒப்புக்கொள்கிறது

ரஷ்யாவுடனான போரில் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் ஒப்புக்கொள்கிறது

ரஷ்யாவுடனான போரில் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் ஒப்புக்கொள்கிறது ,ரஷ்யாவுடனான போரில் உடனடியாக 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது,

ஏனெனில் இராணுவ உதவி மீதான அதன் கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்குவதாக அமெரிக்கா அறிவித்தது.

டொனால்ட் டிரம்ப் இப்போது விளாடிமிர் புடின் பதிலடி கொடுப்பார் என்று நம்புவதாகக் கூறினார். ரஷ்ய ஜனாதிபதி அவ்வாறு செய்தால், 2022 இல்

உக்ரைனில் தனது முழு அளவிலான இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இது முதல் போர் நிறுத்தத்தைக் குறிக்கும்.

ஜெட்டாவில் மூத்த அமெரிக்க மற்றும் உக்ரைன் அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஒரு கூட்டு அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், டிரம்பிற்கும் உக்ரைன் தலைவர்

வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான ஓவல் அலுவலக மோதல் ஏற்பட்ட கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு வந்தது, இதன் விளைவாக

அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளின் ஆட்சேபனைகள் காரணமாக உக்ரைனுக்கான உதவியை வெள்ளை மாளிகை நிறுத்தியது.

“இது ஒரு முழுமையான போர் நிறுத்தம்” என்று டிரம்ப் செவ்வாயன்று பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெள்ளை மாளிகைக்கு வெளியே

செய்தியாளர்களிடம் கூறினார். “உக்ரைன் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் ரஷ்யா அதற்கு ஒப்புக்கொள்ளும் என்று நம்புகிறேன்.”

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு இந்த ஒப்பந்தம் உதவும் என்று நம்புவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், வரும் நாட்களில் மாஸ்கோவிற்குச் சென்று புடினுக்கு போர்நிறுத்தத்தை முன்மொழிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்ப் தொடர்ந்தார், “நாங்கள் இன்றும் நாளையும் அவர்களை [ரஷ்யர்களை] சந்திக்கப் போகிறோம், மேலும் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க முடியும் என்று நம்புகிறோம். போர்நிறுத்தம் மிகவும் முக்கியமானது என்று நான்

நினைக்கிறேன். ரஷ்யாவை அதைச் செய்ய வைக்க முடிந்தால், அது சிறப்பாக இருக்கும். நம்மால் முடியவில்லை என்றால், நாம் தொடர்ந்து முன்னேறுவோம், மக்கள் கொல்லப்படுவார்கள், நிறைய பேர்.

இஸ்ரேலிய கப்பல்களுக்கு எதிரான தாக்குதல்களை ஏமன் மீண்டும் தொடங்கியது
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலிய கப்பல்களுக்கு எதிரான தாக்குதல்களை ஏமன் மீண்டும் தொடங்கியது

இஸ்ரேலிய கப்பல்களுக்கு எதிரான தாக்குதல்களை ஏமன் மீண்டும் தொடங்கியது

இஸ்ரேலிய கப்பல்களுக்கு எதிரான தாக்குதல்களை ஏமன் மீண்டும் தொடங்கியது ,காசா பகுதியின் கடவைகளை மீண்டும் திறந்து அதில் உதவிகளை அனுமதிக்க இஸ்ரேலிய ஆட்சிக்கு வழங்கப்பட்ட காலக்கெடு

முடிவடைந்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலிய கப்பல்களை குறிவைத்து இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதாக ஏமன் அறிவித்துள்ளது.

ஏமன் ஆயுதப்படை செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி புதன்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டார், நாட்டின் அன்சாருல்லா எதிர்ப்பு இயக்கத்தின்

தலைவர் அப்துல்-மாலிக் அல்-ஹவுதி பிறப்பித்த தொடர்புடைய ஆணையின்படி தாக்குதல்கள் மீண்டும் தொடங்கும் என்று கூறினார்.

அன்சாருல்லா தலைவர் கடவைகளை மீண்டும் திறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு, டெல் அவிவ் மூடியுள்ளது, காசாவை தளமாகக் கொண்ட

எதிர்ப்பு இயக்கமான ஹமாஸை கடலோரப் பகுதியில் வைத்திருக்கும் மீதமுள்ள சியோனிச கைதிகளை விடுவிக்க கட்டாயப்படுத்தும் முயற்சியாக இது உள்ளது என்று ஆட்சிக்கு தெரிவித்திருந்தார்.

டெல் அவிவ் நடத்திய 15 மாதங்களுக்கும் மேலான இனப்படுகொலைப் போரின் கீழ் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள காசாவில் உள்ள

பாலஸ்தீனியர்கள் மீது பெரும் அழுத்தத்தை அதிகரிப்பதும் இந்த பணிநிறுத்தத்தின் நோக்கமாகும்.

“இந்த நோக்கங்களை அடைய மத்தியஸ்தர்கள் தவறியதால் (ஆட்சி முனையங்களை மீண்டும் திறந்து உதவிப் பொருட்களை அனுமதிக்கும் வரை),

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஏமன் தனது நிலைப்பாட்டை தீவிரப்படுத்தியுள்ளது” என்று ஆயுதப்படைகளின் அறிக்கை குறிப்பிட்டது, PressTV தெரிவித்துள்ளது.

“உடனடியாக அமலுக்கு வரும் வகையில், அனைத்து இஸ்ரேலிய கப்பல்களும் செங்கடல், அரேபிய கடல், பாப் அல்-மந்தாப் ஜலசந்தி மற்றும் ஏடன்

வளைகுடாவை உள்ளடக்கிய நியமிக்கப்பட்ட செயல்பாட்டு மண்டலங்களுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது,” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

தடையை மீற முயற்சிக்கும் எந்தவொரு இஸ்ரேலிய கப்பல்களும் குறிப்பிட்ட செயல்பாட்டு பகுதிகளுக்குள் குறிவைக்கப்படும் என்று படைகள் எச்சரித்தன.

“காசா பகுதிக்குள் கடக்கும் பாதைகள் மீண்டும் திறக்கப்பட்டு, அத்தியாவசிய உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் நுழைய அனுமதிக்கப்படும் வரை இந்த தடை தொடரும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ,பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டு வரும் மோசடியான ‘கிரிப்டோ’ பண வணிகம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த மோசடி விளம்பரங்கள் சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டு, வெளிநாட்டு நிறுவனங்களால் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லிதுவேனியாவிலிருந்து இயங்கும் இந்த மோசடி கணக்குகள் மூலம், இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துபவர்களை இலக்காகக் கொண்டு மோசடியான விளம்பரங்கள் மற்றும் பிரச்சாரங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனவே, அரச அதிகாரிகள் மற்றும் பிரபலமானவர்களின் அங்கீகாரம் உள்ளதாக பொய்யாகக் கூறும், கிரிப்டோ பண முதலீடுகளை விளம்பரப்படுத்தும் ஒன்லைன் விளம்பரங்களிடம் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பெண் எரித்துக் கொலை
Posted in இலங்கை செய்திகள்

பெண் எரித்துக் கொலை

பெண் எரித்துக் கொலை

பெண் எரித்துக் கொலை ,தம்பகல்ல பொலிஸ் பிரிவின் கொலொன்கந்தபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொலை தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் மகன், மகள் மற்றும் மருமகள் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்தவர் கொலொன்கந்தபிட்டிய, தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த பெண் மண்வெட்டியால் அடித்து பின்னர் எரித்துக் கொல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் மொனராகலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய அதிகாரிகள்
Posted in இலங்கை செய்திகள்

பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய அதிகாரிகள்

பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய அதிகாரிகள்

பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய அதிகாரிகள் ,சிலாபம் – பங்கதெனிய பகுதியில் பெண் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து, கூட்டுறவு அதிகாரிகள் குழுவொன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

பாதிக்கப்பட்டவர் மூன்று பிள்ளை தாய் எனவும், அவர் தற்போது சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த பெண், பங்கதெனிய சந்தியில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்திற்குப் பின்னால் ஒரு சமையலறையை கட்டி பல ஆண்டுகளாக சிறு வியாபாரத்தை நடத்தி வந்துள்ளார்.

அந்தக் கட்டிடம் சமீபத்தில் சிலாபம் பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்தால் வாங்கப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

கூட்டுறவு கட்டிடத்துடன் கூடிய நிலத்தை வாங்கிய போதிலும், அந்த பெண் குறித்த இடத்தை விட்டு நகரவில்லை.

இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடலைத் தொடர்ந்து, சிலாபம் பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்தின் பொது மேலாளர் மற்றும் பிற ஊழியர்கள் குழு சம்பவ இடத்திற்குச் சென்று, அந்தப் பெண்ணை ஒரு கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், அந்தப் பெண் தமது கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான நிலத்தை வலுக்கட்டாயமாக கையகப்படுத்த முயற்சித்த போதிலும், எந்தத் தாக்குதலும் நடக்கவில்லை என சிலாபம் பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் சரத் விஜேசிங்க கூறியுள்ளார்.

ரயில் கடத்தல் தீவிரவாதிகள் பிடியில் 182 பிணைக் கைதிகள்
Posted in உலக செய்திகள்

ரயில் கடத்தல் தீவிரவாதிகள் பிடியில் 182 பிணைக் கைதிகள்

ரயில் கடத்தல் தீவிரவாதிகள் பிடியில் 182 பிணைக் கைதிகள்

ரயில் கடத்தல் தீவிரவாதிகள் பிடியில் 182 பிணைக் கைதிகள் ,பாகிஸ்தான் நாட்டில் சுமார் 400-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ரயிலை மறித்த தீவிரவாதிகள், துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், சுமார் 182 பேரை

பிணைக் கைதிகளாக வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அந்த நாட்டு பாதுகாப்பு படையை சேர்ந்த சுமார் 20 பேரை தீவிரவாதிகள் கொன்றுள்ளனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் க்வெட்டாவில் இருந்து 400-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெஷாவர் நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை தீவிரவாதிகள்

செவ்வாய்கிழமை (11) கடத்தினர். இதற்கு பலூச் விடுதலை இராணுவம் (Baloch Liberation Army-BLA) எனும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த நிலையில், பாதுகாப்பு படையை சேர்ந்த சுமார் 20 பேரை கொன்றுள்ளதாக அந்த தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், தங்கள் வசம் சுமார் 182 பேர் பிணைக் கைதிகளாக உள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. பாதுகாப்பு படை அதிகாரிகள் தங்களை

நெருங்கினால் பிணைக்கைதிகள் அனைவரையும் கொல்வதாக மிரட்டல் விடுத்துள்ளது.

தங்களை தரை வழியாக ராணுவம் நெருங்க முடியாத சூழல் நிலவுவதாக பலூச் தீவிரவாத அமைப்பு கூறியுள்ளது.

அந்த அளவுக்கு தங்கள் தரப்பில் இருந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

இருப்பினும் வான்வழியாக தங்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்துவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. ஹெலிகாப்டர் மற்றும் ட்ரோன்களை பாகிஸ்தான் ராணுவம் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தி வருகிறது.

ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகளை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருப்பதாக ரயில்வே துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தீவிரவாதிகளின் இந்த செயலுக்கு இதற்கு பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

அரசு அதிகாரிகள் மற்றும் கூடுதல் ராணுவ படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

தீவிரவாதிகளின் இந்த கொடுஞ்செயலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தான் அரசு இதுவரை தெரிவிக்க்காமல் உள்ளது.

என்ன நடந்தது? – 9 பெட்டிகளைக் கொண்ட ஜாஃபர் எக்ஸ்பிரஸ், செவ்வாய்க்கிழமை (11) அன்று பலுசிஸ்தான் மாகாண தலைநகர் க்வெட்டாவில் இருந்து பயணிகளுடன் கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெஷாவர் நகர் நோக்கி சென்றுகொண்டிருந்தது.

அப்போது தீவிரவாதிகள் திடீரென ஓட்டுநரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவர் காயமடைந்ததை அடுத்து, ரயில் தடத்தில் இருந்து விலகி உள்ளது.

இதையடுத்து, ரயிலில் இருந்த பயணிகள் பதற்றமடைந்துள்ளனர். அவர்களை தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.

அப்போது, ரயிலில் இருந்த பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், தீவிரவாதிகள் பதில் தாக்குதலில் நடத்தியதாகவும் த ஹிந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்கு பதிவு இன்றுடன் நிறைவு
Posted in இலங்கை செய்திகள்

தபால் மூல வாக்கு பதிவு இன்றுடன் நிறைவு

தபால் மூல வாக்கு பதிவு இன்றுடன் நிறைவு

தபால் மூல வாக்கு பதிவு இன்றுடன் நிறைவு ,உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்குகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலம் புதன்கிழமை (12) நள்ளிரவு

12.00 மணியுடன் முடிவடையும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அஞ்சல் வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள், சான்றளிக்கும் அதிகாரிகள் மூலம்

சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிப் பகுதிக்கான மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

வேட்பு மனு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளின் நியமனக் கடிதங்களை

எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு முன்னர் ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனங்களின் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நாளை 13ஆம் திகதி போயா தினமாக இருந்தாலும், தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட தேர்தல்

அலுவலகங்களும் திறந்திருக்கும் என்று தேர்தல் ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு விஜயம்
Posted in இலங்கை செய்திகள்

சுகாதார அமைச்சர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு விஜயம்

சுகாதார அமைச்சர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு விஜயம்

சுகாதார அமைச்சர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு விஜயம் ,சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று காலை அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சென்று, வைத்தியசாலைப் பணிப்பாளர் மற்றும் துணை

இயக்குநர் உள்ளிட்ட மருத்துவக் குழுவுடன் சிறப்புக் கூட்டத்தை நடாத்தினார்.

குறித்த சந்திப்பின் போது மருத்துவமனையில் பெண் வைத்தியர் ஒருவர் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவம் குறித்து பேசியதுடன் தற்போதைய நிலைமைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் எங்கே
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் எங்கே

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் எங்கே

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் எங்கே ,எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான நிஜாம் காரியப்பர், இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை,

நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரிட் மனு மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுகிறார்.

நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய காரியப்பர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யும்போது தென்னகோன் சமாதான நீதிபதி முன் கையொப்பமிட்டு சத்தியப்பிரமாணம் செய்ய

வேண்டியிருப்பதால், இந்த மனுவின் மூலம் அவர் இருக்கும் இடத்தை தீர்மானிக்க முடியும் என்று சுட்டிக்காட்டினார்.

“தேசபந்து தென்னகோனுக்கு எதிரான பிடியாணையை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல்

செய்யும்போது உறுதிமொழி எடுக்கப்பட வேண்டும். சமாதான நீதிபதி முன் சத்தியப்பிரமாணம் எடுக்கப்பட வேண்டும். அவர் சமாதான நீதிபதி முன் மனுவில் கையொப்பமிட வேண்டும்.

அந்த ஆவணம் இப்போது நீதிமன்றத்தில் உள்ளது. சமாதான நீதிபதியைக் கண்டு பிடித்தால், தப்பிச் சென்ற ஐஜிபியைக் கண்டுபிடிக்க முடியும்,” என்று அவர் கூறினார்.

சட்ட அமலாக்க அதிகாரிகள் இந்த வழியில் சிந்திக்க வேண்டும் என்று கூறிய எம்.பி நிஜாம் காரியப்பர், “எங்கள் சிஐடிக்கு என்ன ஆனது என்று எனக்குத் தெரியவில்லை” என்றார்.

2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள ஒரு முக்கிய ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோன் தேடப்பட்டு வருகிறார்.

கடந்த வாரம், தென்னக்கோன் தன்னைக் கைது செய்வதற்கான மாத்தறை நீதவானின் உத்தரவை இடைநிறுத்தி வைக்கக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்தார்.

இருப்பினும், குற்றப் புலனாய்வுத் திணைக்கள கோரிக்கையின் அடிப்படையில், தென்னகோனை உடனடியாகக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று பிறப்பித்தது.

தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா |கொதிக்கும் எதிரிகள்