மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி கடிதம்
மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி கடிதம்
மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி கடிதம் ,இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் .
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி

நிகழாமல் இருக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள், (09.10.2025) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்துத் தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப்
படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக
உரிய நடவடிக்கை எடுக்கவும்
மேற்கொள்ளவும், கூட்டுப்பணிக் குழுவை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி முதல்-அமைச்சர்
மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், 09.10.2025 அன்று அதிகாலை, ஐந்து இந்திய மீன்பிடிப் படகுகள் மற்றும் 47 மீனவர்கள் (30 தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் 17 காரைக்கால் மீனவர்கள்) இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதை மத்திய
வெளியுறவுத்துறை மந்திரியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ள முதல்-அமைச்சர், சிறைபிடிக்கப்பட்டவர்களில் தமிழ்நாட்டின் கடலோர
கிராமங்களைச் சேர்ந்த 30 மீனவர்களும், நான்கு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளும் அடங்கும் என்று கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கைது சம்பவம் மீனவ சமூகத்தினரிடையே பெருத்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், கடலோர மாவட்ட மக்களிடையே அச்சம் மற்றும்
நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர் 2025-ம் ஆண்டில், ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான
மீனவர்கள் கைது செய்யப்பட்ட முதல் நிகழ்வு இதுதான் என தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவது, நமது மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக்
கேள்விக்குறியாக்குவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் தங்களது பாரம்பரிய தொழிலைத் தொடர்வதில் உள்ள மன உறுதியையும், நம்பிக்கையையும்
வெகுவாக பாதிப்பதாகவும் உள்ளது என வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், இன்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 242 மீன்பிடிப்
படகுகளும், 74 மீனவர்களும் இலங்கைக் காவலில் உள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவித்திட உரிய
அதிகாரிகள் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளதோடு, இதுபோன்ற கைது
சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உரிய தூதரக முயற்சிகளை மேற்கொள்ளவும், கூட்டுப் பணிக்குழுவை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு
வரவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருமல் மருந்து விவகாரம் 22பலி
இருமல் மருந்து விவகாரம் 22பலி
இருமல் மருந்து விவகாரம் 22பலி ,மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் இருமல் மருந்து உட்கொண்டதில் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரவீன் சோனி கைது
இந்த சம்பவத்தில், அலட்சியத்துடன் செயல்பட்ட குற்றச்சாட்டிற்கு ஆளான டாக்டர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டு உள்ளார்.
இதேபோன்று, தமிழகத்தில் செயல்பட கூடிய, கோல்ட்ரிப் எனப்படும் இருமல் மருந்து உற்பத்தியில் ஈடுபட்டு வரும் மருந்து நிறுவனம் ஒன்றிற்கு எதிராக வழக்கு பதிவாகி உள்ளது.
குழந்தைகளின் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் குழந்தைகளின் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனை சிந்த்வாராவின் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் திரேந்திரா சிங் செய்தியாளர்களிடம் பேசும்போது உறுதி செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் இழப்பீடுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட நபர்களுடைய கணக்கிற்கு பணம் சென்று விட்டது என்றும் கூறினார்.
இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த 2 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்து உள்ளது.
விஷால் என்ற 5 வயது குழந்தை சனிக்கிழமை (11) மாலை உயிரிழந்தது. இதன்பின்னர், இரவில் மயங்க் சூரியவன்ஷி என்ற 4 வயது குழந்தையும் உயிரிழந்தது.
இந்த 2 குழந்தைகளும் சிந்த்வாரா மாவட்டத்தின் பராசியா நகரை சேர்ந்தவர்கள் ஆவர்.
கலப்பட இருமல் மருந்து குடித்ததில் அந்த குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். அதில் கலந்திருந்த நச்சு, உடலின் உள்ளுறுப்புகளை பாதித்து உள்ளது.
சில குழந்தைகள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த சூழலில், தமிழ்நாட்டை அடிப்படையாக கொண்ட ஸ்ரேசன் மருந்து நிறுவன உரிமையாளரான ரங்கநாதன் கோவிந்தன் சென்னையில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (12) கைது செய்யப்பட்டார்.
சிறப்பு விசாரணை குழு இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது. மருந்து நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என
பராசிய துணை மண்டல பொலிஸ் அதிகாரி ஜிதேந்திரா சிங் ஜாட் கூறியுள்ளார்.
அவரை சென்னையில் இருந்து நாளை பராசியா நகருக்கு அதிகாரிகள் கொண்டு செல்வார்கள்
வீடுகளும் ஒப்படைக்கப்படாது ஜீவன் தொண்டமான்
வீடுகளும் ஒப்படைக்கப்படாது ஜீவன் தொண்டமான்
வீடுகளும் ஒப்படைக்கப்படாது ஜீவன் தொண்டமான் ,எந்த வீடுகளும் உண்மையில் ஒப்படைக்கப்படாது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (12) பண்டாரவளையில் நடைபெறவிருக்கும் வீட்டுவசதி கையளிப்பு நிகழ்வு
குறித்து அரசாங்கம் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் கூற்றுக்களுக்கு மாறாக, இந்த நிகழ்வின் போது எந்த வீடுகளும் உண்மையில் ஒப்படைக்கப்படாது என்று பாராளுமன்ற உறுப்பினர் தொண்டமான் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அதற்கு பதிலாக, குடும்பங்கள் “எதிர்கால பயனாளிகள்” என்று பெயரிடும் ஒரு காகிதத்தைப் பெறுவார்கள் – இது சட்டப்பூர்வ எடை அல்லது உரிமை அந்தஸ்து இல்லாத ஆவணம்.
வீட்டுவசதித் திட்டம்
வீட்டுவசதித் திட்டம் தொடங்கியதிலிருந்து இதுவே வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது என்றும், ஆனால் இந்தச் செயல்முறையை
விளம்பரப்படுத்த இதுபோன்ற ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்றும் அவர் விளக்கினார்.
எதிர்க்கட்சி எம்.பி மேலும் கூறுகையில், 2025 ஆம் ஆண்டில் இதுவரை, தற்போதைய நிர்வாகத்தின் கீழ் ஒரு வீடு கூட கட்டப்படவில்லை, ஒப்படைக்கப்படவில்லை அல்லது முடிக்கப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் தயாரிக்கப்பட்ட 1,000 வீடுகளில், தற்போது 237 வீடுகள் மட்டுமே
விநியோகிக்கப்படுகின்றன, மேலும் நிகழ்வின் நாளில் 10 வீடுகள் மட்டுமே அடையாளமாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக மலையகப் பகுதியில், தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதியம், நில உரிமைகள் மற்றும் வீட்டுவசதி போன்ற முக்கியமான பிரச்சினைகளைத்
தீர்க்கத் தவறிவிட்டதால், அதன் திறமையின்மையை மறைக்க, பொறுப்பான அமைச்சகம் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக தொண்டமான் கூறினார்.
இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களால் கூட்டாக செயல்படுத்தப்படும் 10,000 வீடுகளுக்கான இந்திய நிதியுதவி வீட்டுவசதி திட்டத்தின் நான்காவது கட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு உள்ளது.
அரசாங்கத்தின் கூற்றுப்படி, தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அவர்களின் சமூக மற்றும் பொருளாதார அதிகாரமளிப்பை மேம்படுத்தவும் பயனாளிகளுக்கு 2,000 வீடுகளின் உரிமை வழங்கப்படும்.
வொலிபோல் சுற்றுப்போட்டி
வொலிபோல் சுற்றுப்போட்டி
வொலிபோல் சுற்றுப்போட்டி ,ராகல மண்ணில் இரண்டாவது முறையாகவும் நடத்தப்பட்ட மாஸ்டர் வொலிபோல் சுற்றுப்போட்டியில் மஸ்கெலியா
பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி
பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீ பாத பன் போய்ஸ் (Fun Boys) அணியினர் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டனர்.
இந்த அணியின் தலைவராக பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர் சுரேஷ்குமார் தலைமையில் களமிறக்கப்பட்ட அணி Sri pada fun boys அணியாகும்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் சமகால
நீண்ட நாட்களுக்கு பின்னர் சமகால ஓய்வினை தொடர்ந்து எமது மண்ணுக்கும் பிரதேசத்துக்கும் பெருமை சேர்த்த ஸ்ரீபாத Fun Boysஅணியினர்.
Master VolleyballChampions Trophy போட்டி தொடரில் ஒரு பிரமாண்டமான வெற்றியுடன் இந்த ஆண்டின் Runner Up மகுடத்தை சூடியது
லொரி விபத்து இருவர் பலி
லொரி விபத்து இருவர் பலி
லொரி விபத்து இருவர் பலி ,நாரம்மல பொலிஸ் எல்லையில் ஞாயிற்றுக்கிழமை (12) அன்று அதிகாலை நடந்த விபத்தில் இருவர் பலி
கட்டுப்பாட்டை இழந்து, தொலைபேசி
சொரொம்பாவ நோக்கிச் சென்ற லாரி, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, தொலைபேசி கம்பம் மற்றும் ஒரு
கல்வெர்ட் மோதியதில் சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொரியின் பின்னால் பயணித்த இருவர்
லொரியின் பின்னால் பயணித்த இருவர் வாகனத்தில் நசுங்கி, நாரம்மல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் 26 மற்றும் 29 வயதுடைய வவுனியா மற்றும் நெடுங்கேணியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
லொரியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வித்தியாசமாக திருடிய பெண்களுக்கு வலை
வித்தியாசமாக திருடிய பெண்களுக்கு வலை
வித்தியாசமாக திருடிய பெண்களுக்கு வலை ,நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி சனிக்கிழமை 11 ஆம் திகதி காலை 7.30 மணிக்கு பயணித்த
அரச பேருந்தில் பயணம் செய்த பெண்
அரச பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவரின் 3 பவுன் எடை உள்ள தங்க சங்கிலி ஒன்று களவாடப்பட்டுள்ளது
என திம்புள்ள- பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்டோனிகிலிப் தோட்ட சிறுவர் காப்பக உத்தியோகத்தரே முறைப்பாடு செய்துள்ளார்.
பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருந்த போது தனக்கு அருகில் கர்ப்பிணி அமர்ந்திருந்தார்., குழந்தை ஒன்றை வைத்து கொண்டு இருந்த பெண்,
பெண் தனக்கு அருகில் நின்று கொண்டு பயணித்தனர்
மற்றொரு பெண் தனக்கு அருகில் நின்று கொண்டு பயணித்தனர். பேருந்து சற்று பிரேக் செய்த வேளையில் என் மீது இரண்டு பெண்களும் சரிந்துவிட்டனர்.
அந்த மூன்று பெண்களும் டெவோன் பகுதியில் வைத்து பேருந்தில் ஏறி கொட்டகலை அரச வைத்தியசாலை பகுதியில் இறங்கி சென்று உள்ளனர்.
சற்று தூரம் சென்ற பின்னர் தனது கழுத்தில் இருந்த சங்கிலி இல்லாமை தெரிய வந்தது பேருந்தில் இருந்து உடனடியாக இறங்கி முச்சக்கர வண்டி
எடுத்து அப் பகுதியில் தேடியும் அவர்கள் அகப்படவில்லை என தெரியவந்துள்ளது.
அவர்கள் பற்றி விரிவாக தேடுதல் நடவடிக்கையில் பத்தனை பொலிஸார். மேற்கொண்டு வருகின்றனர் மேலும் தற்போது பண்டிகை காலம் என்பதால்
மலையக பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1750 சம்பளம் கிடைக்கும்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1750 சம்பளம் கிடைக்கும்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1750 சம்பளம் கிடைக்கும் ,இந்த வருடத்திற்குள் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,750 ரூபாவாக அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மலைநாட்டு மலையக சமூகத்தைச் சேர்ந்த
மலைநாட்டு மலையக சமூகத்தைச் சேர்ந்த 2,000 பயனாளிகளுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும்
நிகழ்வில் பண்டாரவளையில் கலந்து கொண்டபோதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்திய உதவியுடன் 10,000 வீடுகளை கட்டும் திட்டத்தின் நான்காவது கட்டத்தின் கீழ் இன்று (12) காலை இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வின்
போது, 2,000 பயனாளிகளுக்கு அடையாளமாக உரிமைப் பத்திரங்களை ஜனாதிபதி வழங்கினார்.
கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திசாநாயக்க
கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திசாநாயக்க, மலையக சமூகத்தினர் நாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளதாகவும்,
இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக கடினமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.
அவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் மற்றும் கண்ணியமான வாழ்க்கை கிடைப்பதை உறுதி செய்யும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்றும் அவர் கூறினார்.
“அவர்களுக்கு வீட்டு உரிமையை வழங்குதல் மற்றும் நியாயமான ஊதியத்தை உறுதி செய்தல் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்படுகிறது.
அவர்கள் நீண்ட காலமாக ரூ. 1,750 தினசரி ஊதியத்தை கோரி வருகின்றனர், மேலும் இந்த ஆண்டுக்குள் அதை எப்படியாவது யதார்த்தமாக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்,” என்று ஜனாதிபதி கூறினார்.
ஊழல் வாதி வாறன் உருட்டு அரசியல் வாதிக்கு பாட்டால் கிழி
ஊழல் வாதி வாறன் உருட்டு அரசியல் வாதிக்கு பாட்டால் கிழி’ஊழல் வாதி வாறன் |உருட்டு அரசியல் வாதிக்கு கிழி |oolal Vaathi Vaaran |வன்னி மைந்தன் பாடல்.
நாட்டை கொள்ளை ஆட்சி ஊழல் வாதி வாறன்
ஊழல் வாதி வாறன் நாட்டை கொள்ளை ஆட்சி ஊழல் வாதி வாறன் எனும் பாடலை வன்னி மைந்தன் எழுதி வெளியிட்டுளளார் .
தமிழ் தேசியம் பேசுற தமிழர் அரசியல் வாதிகள் உருட்டு உருட்டை அப்படியே அம்பல ப்படுத்தியுளளார் .
இவர்களை கேள்வி கேட்டால் பதில் தர மறுத்து ஒளித்து ஓடியவர்களுக்கு பாட்டை போட்டு மக்களுக்கு விழிப்புணரவை ஏற்படுத்தியுள்ளார் .
வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையம்
வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையம் இணைந்து நாள் தோறும் மூன்று புதிய பாடலக்ளை வெளியிட்டு வருகின்றன .
அவ்விதம் இன்று இந்த பாடல் வெளி வந்துள்ளது .
உலக தமிழர் ஊடகங்கள் எவரும் செய்யாத மிக பெரும் விடியம் ஒன்றை வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையம் முன்னெடுத்து வருகிறது .
இந்த வெள்ளை வேட்டி வெட்டி அரசியல் வாதிகளை நம்பி பயனில்லை .மக்கள் வெகுஜன புரட்சியே இந்த கேடு கேட்ட ஊழல் அரசியல்வாதிகளையும் ,உருட்டு அரசியல் வடகியாக்களையும் மிரடட முடியும் .
ஆகையால் சிறந்த முயற்சியை எடுத்து துணிகரமாக செயல் படும் வன்னி மைந்தன் தளம் கீரோ தான் .
இதில் அழுத்தி காணொளி பாருங்கள்
விமான விபத்தில் மூன்றுபேர் பலி
விமான விபத்தில் மூன்றுபேர் பலி
விமான விபத்தில் மூன்றுபேர் பலி ,ஆஸ்திரேலியாவில் நடந்த லேசான விமான விபத்தில் மூன்று பேர் பலி.
விமான நிலையத்தில் நடந்த விமான விபத்தில்
நியூ சவுத் வேல்ஸின் இல்லவர்ரா ஏரி பகுதியில் உள்ள ஷெல்ஹார்பர் விமான நிலையத்தில் நடந்த விமான விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
சனிக்கிழமை காலை 10 மணியளவில், வொல்லொங்கொங்கிலிருந்து 20 கிலோமீட்டர் தெற்கே
உள்ள ஷெல்ஹார்பர் விமான நிலையத்தில் விமான விபத்து ஏற்பட்டதாக வந்த தகவலின் பேரில் அவசர சேவைகள் பதிலளித்தன.
பைபர் செரோகி லான்ஸ் லைட் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானதாக லேக் இல்லவர்ரா காவல் மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
தனியார் விமானம்
தனியார் விமானம் மாநிலத்தின் மத்திய மேற்கில் உள்ள பாதர்ஸ்டுக்கு பறக்க திட்டமிட்டிருந்ததாக தலைமை ஆய்வாளர் ஆரோன் வுண்டர்லிச் கூறினார்.
“விமானம் தார் சாலையிலிருந்து புறப்பட்டு சுமார் 30 மீட்டர் காற்றில் இறங்கியுள்ளது” என்று இன்ஸ்பெக்டர் வுண்டர்லிச் கூறினார்.
“அந்த நேரத்தில், விமானம் அதன் இடது இறக்கை கீழே விழுந்து தார் சாலையைத் தொடர்பு கொண்டதாக சாட்சிகள் விவரித்தனர்.”
11 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்
11 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்
11 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர் ,ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே குறைந்தது 11 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானுடனான நாட்டின் எல்லைக்கு அருகே
ஆப்கானிஸ்தானுடனான நாட்டின் எல்லைக்கு அருகே தீவிரவாதிகளுடனான மோதலில் பதினொரு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானுடனான நாட்டின் எல்லைக்கு அருகே தீவிரவாதிகளுடனான மோதலில் குறைந்தது 11 பாகிஸ்தான்
பாகிஸ்தானில் பாதுகாப்பு அதிகாரிகள்
வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானில் பாதுகாப்பு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாக ரியர்ட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் தலிபான் பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடைய ஒரு குழு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
அமெரிக்கா முகாமில் வெடித்த ஆயுதம் 9பேர காணவில்லை
அமெரிக்கா முகாமில் வெடித்த ஆயுதம் 9பேர காணவில்லை
அமெரிக்கா முகாமில் வெடித்த ஆயுதம் 9பேர காணவில்லை ,அமெரிக்க இராணுவ வெடிமருந்து ஆலையில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு
இராணுவ வெடிமருந்து ஆலையில் ஏற்பட்ட வெடிப்
டென்னசி இராணுவ வெடிமருந்து ஆலையில் ஏற்பட்ட வெடிப்பில் 19 பேர் காணாமல் போயுள்ளதாகவும்,
உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெற்கு அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தின் கிராமப்புறத்தில் உள்ள அக்யூர்ட் எனர்ஜெடிக் சிஸ்டம்ஸில் வெள்ளிக்கிழமை குண்டுவெடிப்பு
மக்கள் தெரிவித்தனர்.
நிகழ்ந்தது. வெடிப்பை மைல்கள் தொலைவில் கேட்டதாகவும் உணர்ந்ததாகவும் மக்கள் தெரிவித்தனர்.
ஹம்ப்ரிஸ் கவுண்டி ஷெரிப் கிறிஸ் டேவிஸ் கூறுகையில், இது தான் இதுவரை பார்த்த மிகவும் பேரழிவு தரும் காட்சிகளில் ஒன்றாகும். எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பதை அவர் குறிப்பிடவில்லை,
ஆனால் காணாமல் போன 19 பேரை “ஆன்மாக்கள்” என்று குறிப்பிட்டார், மேலும் அதிகாரிகள் இன்னும் குடும்ப உறுப்பினர்களுடன் பேசி வருவதாகவும் கூறினார்.
நாஷ்வில்லுக்கு தென்மேற்கே சுமார் 97 கிலோமீட்டர் (60 மைல்) தொலைவில் உள்ள பக்ஸ்நார்ட் பகுதியில் உள்ள மரங்கள் நிறைந்த மலைகளில் பரந்து
விரிந்துள்ள எட்டு கட்டிட வசதியில் வெடிபொருட்களை தயாரித்து சோதனை செய்வதாக நிறுவனத்தின் வலைத்தளம் கூறுகிறது.
டேவிஸ் “பேரழிவு” என்று அழைத்த வெடிப்புக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை, மேலும் விசாரணைக்கு நாட்கள் ஆகலாம் என்று ஷெரிப் கூறினார்.
WTVF-TV செய்தி சேனலில் இருந்து எடுக்கப்பட்ட வான்வழி காட்சிகள், வெடிப்பு நிலையத்தின் மலை உச்சியில் உள்ள கட்டிடங்களில் ஒன்றை அழித்துவிட்டது,
புகைந்து கொண்டிருக்கும் இடிபாடுகளையும், எரிந்த வாகன ஓடுகளையும் மட்டுமே விட்டுச் சென்றிருப்பதைக் காட்டியது.
வெடிப்புகள் ஏற்படும் அபாயம் இல்லை, மேலும் வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குள் அந்த இடம் கட்டுப்பாட்டில் இருந்ததாக ஹம்ப்ரிஸ் கவுண்டி
அவசரநிலை மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிரே கோலியர் தெரிவித்தார்.
தொடர்ச்சியான வெடிப்புகள் காரணமாக அவசரகால குழுவினரால் ஆரம்பத்தில் ஆலைக்குள் நுழைய முடியவில்லை என்று ஹிக்மேன் கவுண்டி
மேம்பட்ட EMT டேவிட் ஸ்டீவர்ட் தொலைபேசி மூலம் தெரிவித்தார். உயிரிழப்புகள் குறித்து அவருக்கு எந்த விவரங்களும் இல்லை.
எலி காய்ச்சல் 10பேர் பலி
எலி காய்ச்சல் 10பேர் பலி
எலி காய்ச்சல் 10பேர் பலி ,அநுராதபுரம் மாவட்டத்தில் எலிக்காய்சல் நோயினால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பிரதேச சுகாதார சேவை அநுராதபுரம் அலுவலக தொற்றுநோய் பிரிவின் வைத்திய அதிகாரி தேஜன சோமதிலக்க தெரிவித்தார்.
அநுராதபுரம் மாவட்டத்தில்
2024 மற்றும் 2025 ஆண்டுகளில் அநுராதபுரம் மாவட்டத்தில் வருடந்தோறும் 300 க்கும் அதிகமான எலிக்காய்சல் நோயாளிகள் பதிவாகின்றனர்.
அதிகமான நோயாளர்கள் அநுராதபுரம் மாவட்டத்தின்
அதிகமான நோயாளர்கள் அநுராதபுரம் மாவட்டத்தின் கெப்பித்திகொள்ளாவ பிரதேச செயலாளர் பிரிவிலேயே பதிவாகியுள்ளனர்.
இதில், நாச்யாதுவ, நொச்சியாகம, விளச்சிய, திறப்பனை, இபலோகம, தலாவ, தம்புத்தேகம, ராஜாங்கனை, மதவாச்சி உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே எலிக்காய்சல் நோயினால் பத்து பேர் உயிரிழந்துள்ளனர்
மகாவலி ஆற்றில் மிதந்த சடலம்
மகாவலி ஆற்றில் மிதந்த சடலம்
மகாவலி ஆற்றில் மிதந்த சடலம் ,கண்டி – தென்னேகும்புர பாலம் அருகே காணாமல் போன இரண்டு மாணவர்களில் ஒருவரின் சடலம் மகாவலி ஆற்றில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட மாணவர்
சடலமாக மீட்கப்பட்ட மாணவர் 14 வயதுடைய ஜெகதீஸ் என தெரியவந்துள்ளது.
நேற்று (09) இரண்டு பாடசாலை மாணவர்கள் காணாமல் போனதாக முறைப்பாடு அளிக்கப்பட்டது.
கண்டி நகரில் இரு பாடாலைகளில் கல்வி கற்று வந்த ஜெகதீஷ் மற்றும் எம். மிலான் ஆகியோர் நேற்று மாலை வளர்ப்பு
மீன்களை கொள்வனவு செய்வதாக கூறி வீடுகளில் இருந்து திகன பகுதிக்கு சென்றுள்ளனர்.
மகாவலி ஆற்றில் இறங்கி
இதற்கிடையில், குறித்த இருவரும் மகாவலி ஆற்றில் இறங்கி பாறைக் கரையில் இருந்ததாக அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் பலர் இரண்டு மாணவர்களும் மகாவலி ஆற்றில் இறங்குவதைக் கண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
கண்டி தலைமையக பொலிஸார் மற்றும் பலகொல்ல பொலிஸாரும் இணைந்து காணாமல் போன மாணவர்களைத் தேடுவதற்காக கூட்டு
நடவடிக்கையை மேற்கொண்டதுடன், மகாவலி ஆற்றில் தேடுவதற்காக கடற்படையின் சுழியோடிகளும் பயன்படுத்தப்பட்டிருந்தனர்.
இதன்போதே காணாமல் போயிருந்த ஒரு மாணவன் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
டிரம்ப்புக்கு கிடைக்காத நோபல் பரிசு
டிரம்ப்புக்கு கிடைக்காத நோபல் பரிசு
டிரம்ப்புக்கு கிடைக்காத நோபல் பரிசு .உலகளவில் நடைபெற்றுவந்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் உள்பட 8-க்கும் மேற்பட்ட போர்களைத் தடுத்து நிறுத்தியதாக தொடர்ந்து கூறி வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு .
நோபல் பரிசு வழங்கப்படும்
நோபல் பரிசு வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், வேறு ஒருவருக்கு பரிசு வழங்கப்பட்டதால் அவர் பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதிபர் டிரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்ட விவகாரத்தில் மரியாவையும், நோபல் தெரிவு
குழுவினரையும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங் கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நோபல் பரிசு குழுவின் பதிவை மறுப்பதிவிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதிபர் டிரம்ப் தொடர்ந்து பல போர்களை முடிவுக்கு கொண்டுவருவார்,
அந்தப் பதிவில், “அதிபர் டிரம்ப் தொடர்ந்து பல போர்களை முடிவுக்கு கொண்டுவருவார், அமைதி ஒப்பந்தங்களை மேற்கொள்வார், உயிர்களைக் காப்பாற்றுவார்.
அவர் மனிதாபிமானமிக்கவர், அவரின் முழு சக்தியால் மலைகளைக்கூட நகர்த்தும் வல்லமை மிக்கவர், அவரைப் போல யாரும் இருக்க மாட்டார்கள்.
நோபல் குழுவினர் அமைதியைவிட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பதை நிரூபித்துவிட்டனர்” எனப் பதிவிட்டுள்ளார்
பெற்றோருக்கு எதிராக பிள்ளைகள் முறைப்பாடளிக்கலாம்
பெற்றோருக்கு எதிராக பிள்ளைகள் முறைப்பாடளிக்கலாம்
பெற்றோருக்கு எதிராக பிள்ளைகள் முறைப்பாடளிக்கலாம் ,பெற்றோர், பிள்ளைகளுக்கு தண்டனை வழங்கினால் அதற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்க முடியும் என்ற சட்டம் கலாசாரத்துக்கு முரணானது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
பெற்றோர் பிள்ளைகளுக்கு ஆலோசனை
இதன் மூலம் பெற்றோர் பிள்ளைகளுக்கு ஆலோசனை வழங்கினால் அவர்கள் மீது முறைப்பாடளிக்க வாய்ப்புள்ளது.
அத்துடன் ஆசிரியர்களுக்கும் இந்த நிலை ஏற்படும் என்று கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற சட்டங்கள் மேற்கத்தேய நாடுகளில் வழக்கத்தில் உள்ளன.
இதுபோன்ற சட்டங்கள் மேற்கத்தேய நாடுகளில் வழக்கத்தில் உள்ளன. அவற்றை இலங்கையில் நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும் கர்தினால் வலியுறுத்தியுள்ளார்.
எனவே இந்த விடயத்தின் மூலம் அரசாங்கம் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குவதை தாம் விரும்பவில்லை எனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணதிருத்தம் இறுதி முடிவு
மின்சாரக் கட்டணதிருத்தம் இறுதி முடிவு
மின்சாரக் கட்டணதிருத்தம் இறுதி முடிவு ,மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இம்மாதம் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை
மின்சாரக் கட்டணத்தை 6.8% உயர்த்த இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக அதன் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் கூறினார்.
மறுசீரமைப்பு திட்டங்களை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தத் தவறியதால் கட்டண உயர்வு தேவைப்படுவதாக இலங்கை மின்சார சபையின்
தொழில்நுட்ப பொறியாளர்கள்
தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் பிரதித் தலைவர் நந்தன உதயகுமார தெரிவித்தார்.
20ரூபாய்க்கு ஆசைப்பட்டு 6இலட்சம் கட்டியநபர்
20ரூபாய்க்கு ஆசைப்பட்டு 6இலட்சம் கட்டியநபர்
20ரூபாய்க்கு ஆசைப்பட்டு 6இலட்சம் கட்டியநபர் ,தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 6 இலட்சம் ரூபா
அபராதம் விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (09) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதேசத்தில் உள்ள கடை
கொழும்பு பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றின் உரிமையாளர் 70 ரூபாவுக்கு விற்கப்படும் தண்ணீர்
போத்தலை 90 ரூபாவுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள்
இது தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டின்
அடிப்படையில் கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
ஈரானுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் டிரம்ப்
ஈரானுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் டிரம்ப்
ஈரானுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் டிரம்ப் ,அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அமைச்சரவை இப்போது ஈரானுடன் இணைந்து செயல்படும் என்று கூறுகிறார்.
பிபிசியின் கூற்றுப்படி, அமைச்சரவைக் கூட்டத்தில், டிரம்ப்
பிபிசியின் கூற்றுப்படி, அமைச்சரவைக் கூட்டத்தில், டிரம்ப் இப்போது காசாவின் எதிர்காலம் குறித்து தனது பார்வையை அமைத்து, காசாவை
பிராந்தியத்தில் உள்ள பணக்கார நாடுகளால் “மெதுவாக மீண்டும் உருவாக்கப்படும்” என்று கூறினார்.
“அவர்கள் [அந்த நாடுகள்] செய்வது காசாவிற்கு அதிசயங்களைச் செய்யும்,” என்று அவர் கூறுகிறார். “நான் பார்த்திராத அளவுக்கு மிகப்பெரிய மனப்பான்மை உள்ளது.”
“ஒரு கட்டத்தில், அந்த முழு விஷயமும் நிறுத்தப்பட வேண்டும்,” என்று அவர் கூறுகிறார். “நாங்கள் அதைப் பார்க்கப் போகிறோம்.”
மீதமுள்ள கைதிகளை “திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை” விடுவிக்க வேண்டும் என்று டிரம்ப் கூறுகிறார்.
ஈரான் இப்போது அமைதிக்காகப் பாடுபட விரும்புகிறது
“ஈரான் இப்போது அமைதிக்காகப் பாடுபட விரும்புகிறது, அவர்கள் எங்களுக்குத் தகவல் அளித்துள்ளனர். மேலும் இந்த [காசா அமைதி] ஒப்பந்தத்திற்கு அவர்கள் முற்றிலும் ஆதரவாக இருப்பதாக அவர்கள்
ஒப்புக்கொண்டுள்ளனர், இது ஒரு சிறந்த விஷயம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்,” என்று டிரம்ப் தனது கருத்துக்களில் வேறு இடங்களில் கூறினார், அவர்கள் ஈரானுடன் இணைந்து செயல்படுவார்கள் என்று கூறினார்.
டிரம்ப் எகிப்து மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திற்குச் செல்வார் என்றும் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது, ஆனால் காசாவில் நிறுத்துவது நிராகரிக்கப்பட்டுள்ளது அல்லது
காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தியது
காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல்நிறுத்தியது
காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தியது ,போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த பிறகு காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தியது.
காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் வான்வழித் தாக்குதல்
காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நிறுத்தியுள்ளது.
அல் ஜசீரா தொலைக்காட்சி சேனலின்படி, இஸ்ரேலிய அமைச்சரவை போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த பிறகு தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.
முன்னதாக, பாலஸ்தீனிய இயக்கமான ஹமாஸ், காசா பகுதியில் மறைமுக போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளின் மத்தியஸ்தர்களும், அமெரிக்கத்
தலைமையும் இஸ்ரேல் மீது ஷெல் தாக்குவதை நிறுத்த வேண்டும் என்று கோரியதாக தெரிவிக்கப்பட்டது. மேற்கு காசா நகரத்தின் மீது ஷெல்
தாக்குதலைத் தொடர்ந்து 70 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்
தாக்குதலைத் தொடர்ந்து 70 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 9 அன்று, எகிப்தில் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இஸ்ரேலும் ஹமாஸும் ஒரு சமாதானத் திட்டத்தின் முதல் கட்டத்தில் உடன்பாடுகளை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்
அறிவித்தார். அவரைப் பொறுத்தவரை, இந்த கட்டத்தில் எதிர்காலத்தில் அனைத்து கைதிகளையும் விடுவிப்பதும், காசா பகுதிக்குள் ஒப்புக்
கொள்ளப்பட்ட கோட்டிற்கு இஸ்ரேலிய துருப்புக்கள் திரும்பப் பெறுவதும் அடங்கும்.
“வலுவான, நீடித்த மற்றும் நித்திய அமைதியை நோக்கி” முதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று டிரம்ப் வலியுறுத்தினார்.
இராமர் பாலத்தை பார்வையிடவிசேட படகுசேவை
இராமர் பாலத்தை பார்வையிடவிசேட படகுசேவை
இராமர் பாலத்தை பார்வையிடவிசேட படகுசேவை ,தலைமன்னார் கடற்பரப்பில் அமைந்துள்ள இராமர் பாலத்தைப் பார்வையிடச் செல்லும் .
சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட படகு சேவை
சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட படகு சேவையை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய குறித்த தீர்மானம் பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களின்
படகு சேவைக்கான கட்டண அறவீட்டை
போது எடுக்கப்பட்டுள்ளதுடன், படகு சேவைக்கான கட்டண அறவீட்டை வன ஜீவராசிகள் திணைக்களத்தினூடாக முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
இதில் கட்டண அறவீடு குறித்து, வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் மன்னார் பிரதேசசபை உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது










































