Tag: மோடி
இந்தியாவில் பதட்டம் மோடி திண்டாட்டம்
இந்தியாவில் பதட்டம் மோடி திண்டாட்டம்
இந்தியாவில் பதட்டம் மோடி திண்டாட்டம் ,பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கலால் வரிகளை இந்தியா குறைத்தது
ஈரான் போரினால் எரிபொருள் விநியோகம்
ஈரான் போரினால் எரிபொருள் விநியோகம் தடைபட்டு, அதன் விலை நிலையற்றதாக இருக்கும் நிலையில், இந்தியா பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தனது சிறப்பு கலால் வரிகளைக் குறைத்துள்ளது.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஓர் அரசாணையில், இந்திய நிதி அமைச்சகம் பெட்ரோல் மீதான சிறப்பு கலால் வரியை முன்னர் லிட்டருக்கு 13
ரூபாயிலிருந்து 3 ரூபாயாக ($0.0318) குறைத்துள்ளது. மேலும், டீசல் மீதான வரியை 10 ரூபாயிலிருந்து பூஜ்ஜியமாகக் குறைத்துள்ளது.
ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரினால், 40% கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான வழித்தடமாகச் செயல்படும் ஹார்முஸ் ஜலசந்தி
கிட்டத்தட்ட மூடப்பட்டுள்ளது. இது கப்பல் போக்குவரத்து மற்றும் எரிவாயு விநியோகத்தைப் பாதித்துள்ளது.
வரிக்குறைப்புகளால் அரசுக்கு எவ்வளவு செலவாகும்
இந்த வரிக்குறைப்புகளால் அரசுக்கு எவ்வளவு செலவாகும் என்பதை அமைச்சகம் தெரிவிக்கவில்லை.
எம்கே குளோபல் நிறுவனத்தின் பொருளாதார நிபுணரான மாதவி அரோரா, ஆண்டு நிதிப் பாதிப்பு கிட்டத்தட்ட 1.55 டிரில்லியன் ரூபாயாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளார்.
தற்போதைய விலையில் வாகன எரிபொருளுக்கான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் ஆண்டு இழப்புகளில் சுமார் 30%-40% வரை இந்த வரி குறைப்புகள் ஈடுசெய்யும் என்றும் அவர் மேலும் கூறினார்.
கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் மற்றும் எண்ணெய், எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகளால் இந்தியா கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளது, ஆனால் சீனாவைப் போலல்லாமல், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதிக்கவில்லை.
கோடைக்கால விதைப்புப் பருவத்திற்கான உர விநியோகம் மற்றும் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான நிலக்கரி
உள்ளிட்ட போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடியும் அவரது அரசும் வலியுறுத்தியுள்ளனர்.
உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரும் நுகர்வோருமான இந்தியா, தனது எண்ணெய் தேவைகளில் 90%-க்கும் மேலானவற்றை வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்வதன் மூலம் பூர்த்தி செய்கிறது.
அந்த தெற்காசிய நாடு கடந்த ஆண்டு 33.15 மில்லியன் மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்தியது, இதில் தேவையின் சுமார் 60% இறக்குமதியாகும். அந்த இறக்குமதிகளில் சுமார் 90% மத்திய கிழக்கிலிருந்து வந்தன.
திடீரென மோடிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த அநுர
திடீரென மோடிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த அநுர
திடீரென மோடிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த அநுர ,அண்மையில் 26 பேர் கொல்லப்பட்ட இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று (25) பிற்பகல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இரு நாட்டுத் தலைவர்களும் சுமார் பதினைந்து நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினர்.
இந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகக் கூறிய ஜனாதிபதி, இந்திய மக்களுடன் இலங்கை எப்போதும் சகோதரத்துவத்துடன் பிணைந்துள்ளது என்றார்.
உலகில் எங்கு இடம்பெற்றாலும், பயங்கரவாதத்தை தான் வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட ஜனாதிபதி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தித்தார்.
மேலும், எழுந்துள்ள நிலைமையால் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலை விரைவில் தீர்க்கப்பட்டு பிராந்திய அமைதி நிலைநாட்டப்படும் என்பது இலங்கையின் எதிர்பார்ப்பாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்
மோடிக்கு விடுதலை புலிகளை நினைவு படுத்திய சஜித்
மோடிக்கு விடுதலை புலிகளை நினைவு படுத்திய சஜித்
மோடிக்கு விடுதலை புலிகளை நினைவு படுத்திய சஜித் சம்பவம் தமிழர்களினாலே கூர்ந்து கவனிக்க படுகிறது .
வில்பத்து தேசிய பூங்காவில் ஒரு கண் பார்வை இழந்த “ஐ-ஒன்” (eye-one) என அழைக்கப்படும் பெண் புலியின் இந்த சிறப்பு புகைப்படத்தை, இந்திய பிரதமர் கௌரவ நரேந்திர மோடிக்கு கொழும்பில் வைத்து 2025 ஏப்ரல் 5ஆம் திகதி வழங்குவது பெரும் கௌரவமாகும்.
ஒரு கண் பார்வை இழந்திருந்தாலும், காட்டின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வாழும் இந்த சிறப்பான விலங்கு — இலங்கையின் இயற்கை பாரம்பரியம் மற்றும் அழகின் உண்மையான சின்னமாகும்.
அதன் கவர்ச்சிகரமான நீல கண் சவால்களை எதிர்கொண்டு அதன் வாழ்க்கை பற்றிய நீண்ட கதையை சொல்கிறது — ஒருவேளை குளுகோமா (glaucoma), கெடரெக் (cataract),
அல்லது ஏதாவது விபத்து காரணமாக ஏற்பட்ட நிலை — ஆனால் அது காட்டில் பாதுகாப்பாக உறுதியாக இருப்பது விலங்குலகின் சவால்களை வெற்றிகொள்வதற்கான சின்னமாகும்.
எவ்வாறாயினும், துரதிருஷ்டவசமாக இந்த சிறப்பு விலங்கு கடந்த சில ஆண்டுகளாக காணப்படவில்லை, மேலும் அது உயிருடன் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
மோடியை முன்னாள் ஜனாதிபதிகள் ஐவர் சந்தித்தனர்
மோடியை முன்னாள் ஜனாதிபதிகள் ஐவர் சந்தித்தனர்
இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் ஜனாதிபதிகளான, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க, ஆகியோர், கொழும்பில் வைத்து மரியாதை நிமிர்த்தம்,சனிக்கிழமை (05) சந்தித்தனர்.
இதன் ஊடாக முக்கிய செய்தியை இந்தியா உலகிற்கு தெரிய படுத்தியுள்ளது என்பதை இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்ற்ன .



இலங்கையை விட்டு ஓட்டம் பிடித்தார் மோடி
இலங்கையை விட்டு ஓட்டம் பிடித்தார் மோடி
இலங்கையை விட்டு ஓட்டம் பிடித்தார் மோடி ,இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கான தனது மூன்று நாள், அரசு முறைப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவுக்குப் புறப்பட்டார்.
அவர் அனுராதபுரத்திலிருந்து ஹெலிகாப்டரில் தென்னிந்தியாவில் உள்ள ராமேஸ்வரத்திற்குப் புறப்பட்டார், அதே நேரத்தில் அவருடன் வருகைதந்திருந்த தூதுக்குழு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
இதற்கிடையில், அவர் X இல் பதிவிட்டதாவது, “எனது வருகையின் போது வழங்கப்பட்ட அரவணைப்புக்கு ஜனாதிபதி திசாநாயக்க, மக்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“கொழும்பாக இருந்தாலும் சரி, அனுராதபுரமாக இருந்தாலும் சரி, இந்தப் பயணம் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான
கலாச்சார, ஆன்மீக மற்றும் நாகரிக உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இது நமது இருதரப்பு உறவுகளுக்கு நிச்சயமாக உத்வேகம் அளிக்கும்.” என குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீ மகா போதியில் மோடி வழிபாடு
ஶ்ரீ மகா போதியில் மோடி வழிபாடு
ஶ்ரீ மகா போதியில் மோடி வழிபாடு ,இலங்கை்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அநுராதபுரத்தில் உள்ள ஜய ஶ்ரீ மகா போதியில் ஜனாதிபதி திசாநாயக்க அவர்களுடன் இணைந்து வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார்.
“பௌத்தமதத்தின் அதி சிறப்புமிக்கதும் மதிப்புக்குரியதுமான ஸ்தலங்களில் ஒன்றான இத்தலத்தில் வழிபாட்டினை மேற்கொள்வது உண்மையில் மிகவும் பணிவுக்குரிய தருணமாகும். அமைதி, ஞானம் மற்றும் ஆன்மீக நீட்சியின்
வாழும் குறியீடாக இத்தலம் திகழ்கின்றது. புத்தபெருமானின் போதனைகள் எப்போதும் எமக்கு வழிகாட்டட்டும்” என்று தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாசா மோடி சந்திப்பு
சஜித் பிரேமதாசா மோடி சந்திப்பு
சஜித் பிரேமதாசா மோடி சந்திப்பு .இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் திரு சஜித் பிரேமதாச அவர்களைச் சந்தித்தமையையிட்டு நான் பெருமகிழ்வடைகின்றேன்.
இந்திய இலங்கை நட்புறவை வலுவாக்குவதற்கான அவரது தனிப்பட்ட அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புக்காக பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.
எமது விசேட பங்குடைமைக்கு இலங்கையில் கட்சி வேறுபாடுகளின்றி சகலராலும் ஆதரவு வழங்கப்படுகின்றது.
அத்துடன், நமது ஒத்துழைப்பும் வலுவான அபிவிருத்தி பங்குடைமையும் நமது இரு நாட்டு மக்களினதும் நலன்களால் வழிநடத்தப்படுகின்றன.
என இந்தியா பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்துள்ளார் .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

இலங்கை அரசுக்கு மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் விஜய்
இலங்கை அரசுக்கு மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் விஜய்
இலங்கை அரசுக்கு மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் விஜய் ,3 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி இலங்கை செல்லவுள்ள நிலையில், கச்சத்தீவு விவகாரத்தில் இடைக்காலத் தீர்வு பெற பிரதமர் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர்கள் பாதுகாப்புக்கான நிரந்தரத் தீர்வு. ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனத்தை இலங்கை அரசு எப்போதும் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும்.
மீனவர்களின் உயிரையும் உணர்வையும் பாதுகாப்பதே ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தலையாய கடமை. மீனவர்கள் நலன் மற்றும் கச்சத்தீவு சார்ந்த தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழுத் தீர்மானம் தந்த அழுத்தம்,
தமிழ்நாடு அரசைத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடான கச்சத்தீவு மீட்பு மற்றும் மீனவர் பாதுகாப்பு நிலைப்பாடு நோக்கி நகர வைத்துள்ளது.
1974-ல் கச்சத்தீவு கைவிட்டுப் போகக் காரணம், ஆட்சி அதிகாரப் பசி கொண்ட அன்றைய ஆளும்கட்சியான தி.மு.க.தான். 1999 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசுகள் இயங்கியதே தி.மு.க.வின் தயவினால்தான்.
அத்தகைய நிலையில், அப்போதெல்லாம் கச்சத்தீவு விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இப்போது மட்டும் தனித் தீர்மானம் என்ற கண்துடைப்பு நாடகம் ஏன்? இந்தக் கேள்வியே தமிழக மக்களிடமும் எழுந்துள்ளது.
அன்று முதல் இன்றுவரை ஒன்றிய அரசுக்கு, வாஞ்சையோடு வருடிக் கொடுத்து, மறைமுக அன்பை வெளிப்படுத்தும் கடிதம் எழுதும் கபட நாடகம் மட்டுமே இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் மாயாஜால வித்தை.
அதிகார மையமாக இருக்கும்போதெல்லாம் கை விட்டுவிட்டு, 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், இப்போது தனித் தீர்மானம் இயற்றும் கபட நாடகத் தி.மு.க. அரசின் அந்தர் பல்டி அரசியலைத் தமிழக வெற்றிக் கழகம் கடுமையாகக் கண்டிக்கிறது.
இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் இதுவரை 800-க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். அவர்களின் உடைமைகளும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டுவிட்டன.
குஜராத் போன்ற மற்ற மாநில மீனவர்களுக்காக மட்டும் பாதுகாப்பாக இருக்கும் ஒன்றிய அரசு எங்கள் தமிழக மீனவர்களை மட்டும் கை விடுவது ஏன்?
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, கச்சத்தீவு மற்றும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சத்துடன் பாராமுகமாகவே இருக்கிறது.
எப்போதும் மீனவ நண்பனாகவே, உண்மையான உறுதியுடனும் உணர்வுடனும் நிற்கும் தமிழக வெற்றிக் கழகம், ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்தப் போக்கைத் தீர்க்கமாகக் கண்டிக்கிறது.
கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுக்குச் சொந்தமாவது மட்டுமே தமிழக மீனவர் பிரச்சினைக்கு ஒரே பரிகாரம் மற்றும் தீர்வு.
நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும்.
மாண்புமிகு ஒன்றிய பிரதமர் திரு.மோடி அவர்கள், கட்டாயமாக இலங்கை அரசிடம் இதை வலியுறுத்திப் பெற வேண்டும்.
இலங்கைத் தமிழர்களின் வாழ்வும் பாதுகாப்பும் அமைதியும் நிம்மதியும் நிரந்தரமானதாக இருக்க பொது வாக்கெடுப்பு மட்டுமே ஒரே தீர்வு.
நம் கழகத்தின் பொதுக்குழுத் தீர்மானமும். தீர்க்கமான நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பே. இந்நிலையை நோக்கி நகர, சர்வதேசச் சமூகத்தை ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும்.
போர்க் குற்றங்களுக்காகக் கண்டிப்பதோடு, நடுநிலையான பொது வாக்கெடுப்பு நடத்த, இலங்கை அரசுக்கு ஒன்றிய பிரதமர் அவர்கள், நேரடியான அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இலங்கை செல்லும் நம் மாண்புமிகு ஒன்றிய பிரதமர் அவர்கள், ‘கச்சத்தீவு இந்தியாவின் உரிமை நிலம்’ என்ற பயணத் திட்டத்தை முதன்மையாக வடிவமைக்க வேண்டும்.
நமது மீனவர்களின் துயர் நீங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற விதத்தில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஒன்றிய பிரதமரின் இந்த இலங்கைப் பயணம் தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் வலியுறுத்துகிறேன். சார்பாக, சமரசமின்றி இவை அனைத்தையும் வலியுறுத்துகிறேன்” என தவெக தலைவர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இன்று இலங்கைக்கு வருகின்றார் மோடி
இன்று இலங்கைக்கு வருகின்றார் மோடி
இன்று இலங்கைக்கு வருகின்றார் மோடி ,இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை மாலை இலங்கைக்கு வருகின்றார்.
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அவர் இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ‘நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்துக்கான உறுதிப்பாடு’ என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த விஜயத்தில் இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர்மட்ட இந்தியக் குழுவும் இணையவுள்ளது.
இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு நாளை சனிக்கிழமை காலை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதோடு இரு தரப்பு பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பிலும் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
இதன்போது எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகியவை பரிமாறிக்கொள்ளப்படும்.
நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தை நிறைவு செய்துகொண்டு இந்தியப் பிரதமர் நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்வார்
மோடிக்காக இந்தியாவில் இருந்து வந்த 4 ஹெலிகொப்டர்கள்
மோடிக்காக இந்தியாவில் இருந்து வந்த 4 ஹெலிகொப்டர்கள்
மோடிக்காக இந்தியாவில் இருந்து வந்த 4 ஹெலிகொப்டர்கள் ,இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) பிற்பகல் இலங்கைக்கு வருகை தர உள்ளார்.
இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு நாளை (05) காலை சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு வழங்கப்படவுள்ளது. இதன் பின்னர், ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையே இருதரப்பு கலந்துரையாடல் நடைபெறும்.
இதற்கிடையில், இந்தியப் பிரதமரின் வருகையை முன்னிட்டு, அவருடைய பயன்பாட்டிற்காக MI 17 வகை 4 ஹெலிகொப்டர்கள் நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், 40 இந்திய விமானப்படை வீரர்கள் வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை வரும் மோடி
இலங்கை வரும் மோடி
இலங்கை வரும் மோடி ,இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் மோடி தனது பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில், “இலங்கைக்கு எனது பயணம் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை நடைபெறும்.
இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வெற்றிகரமான இந்திய வருகைக்குப் பிறகு இந்தப் பயணம் இடம்பெறுகின்றது.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியா-இலங்கை நட்பை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம், மேலும் ஒத்துழைப்பின் புதிய வழிகளைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவோம்.
அங்கு நடைபெறும் பல்வேறு சந்திப்புகளிலும் நான் கலந்துகொள்ளவுள்ளேன்”. என தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் மோடி சந்திப்பு
ட்ரம்ப் மோடி சந்திப்பு
ட்ரம்ப் மோடி சந்திப்பு ,அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை சந்தித்துப் பேசினார். அப்போது பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிரான்ஸ் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அமெரிக்காவுக்கு சென்றார். தலைநகர் வொஷிங்டனில் உள்ள விமானப் படை தளத்தில் தரையிறங்கிய அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிகாலை நேரத்தில் கடும் குளிரை பொருட்படுத்தாமல் இந்திய வம்சாவளியினர் திரண்டு வந்து அவரை உற்சாகமாக வரவேற்றனர்.
அங்கிருந்து அமெரிக்க ஜனாதிபதி மாளிகையில் உள்ள விருந்தினர் இல்லமான பிளேர் ஹவுஸுக்கு பிரதமர் மோடி காரில் சென்றார். உலகின் முக்கிய தலைவர்கள் மட்டுமே பிளேர் ஹவுஸில் தங்க வைக்கப்படுகின்றனர்.
அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு (இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணி ) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இருவரும் பரஸ்பரம்
கைகுலுக்கி, கட்டியணைத்து ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து விட்டு, 45 நிமிடங்கள் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். குறிப்பாக பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது
சீனா பயணமாகும் இந்தியா மோடி
சீனா பயணமாகும் இந்தியா மோடி
சீனா பயணமாகும் இந்தியா மோடி , சீனாவிற்கு இந்தியாவின் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2025 ஆம் ஆண்டு திட்டமிட்டபடி இந்திய பிரதமர் அரச முறை பயணத்தை மேற்கொள்ளதாக இந்தியாவினுடைய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுடைய வெளியுறவு கொள்கையில் சீர் திருத்தும் தொடர்பாக கொள்கை மாற்றம் ஏற்பட்டதை அடுத்து தற்பொழுது திட்டமிட்டபடி 2025 ஆம் ஆண்டு இந்தியாவுடைய ஆளும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சீனாவுக்கு
சென்று சீனா அதிபரை சந்தித்து இரண்டு நாடுகளுடைய வர்த்தக பொருளாதார அரசியல் அனுபவித்து தொடர்பாக பேச்சு வார்த்தையில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதன்போது மிக முக்கியமான விடயங்கள் பேசி தீர்க்கதற்கான நடவடிக்கை அவர் மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு பயன்பெறும் நடவடிக்கை ஒன்றாக மாற்றம் வரும் எனவும் 2050 ஆம் ஆண்டளவில் இந்தியாவிற்கு சீனா நெருக்கடியாக மாறும் எனவும் உலக வல்லரசாக 2050 ஆம் ஆண்டு சீனா மாறிவிடும் என்பதால் தற்பொழுது தமது
கொள்கையிலே அதிரடி ஆட்டம் மாற்றங்களை இந்தியா ஏற்படுத்தி வருகிறதா என்று சந்தேகத்தை இதன் ஊடாக ஏற்படுத்தி இருக்கிறது .
அவ்வாறான நிலை ஏற்பட்டால் இந்தியாவும் சீனாவும் இணைந்து பயணித்து தமது நாளுக்குள்ள பதட்டத்தை தவித்துக் கொள்வதுடன் ,
உலக நாடுகளுக்கு இந்த இரு நாடுகளும் ஒரு முன்னோடியான முன்னேற்றமான ஒரு உதாரணமாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஜனாதிபதிக்கு மோடி வாழ்த்து
புதிய ஜனாதிபதிக்கு மோடி வாழ்த்து
புதிய ஜனாதிபதிக்கு மோடி வாழ்த்து ,இலங்கை உடைய புதிய ஜனாதிபதியாக அதிர குமர திசநாயக்கா இந்து பதவி ஏற்றது அடுத்து அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது வாழ்த்தினை பாராட்டை தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பொழுது அவரது புகைப்படத்தை இட்டு அவருக்கு தனது வாழ்த்தினை இந்தியா பிரதமர் மோடி அவர் தெரிவித்துள்ளார்.
அணுக குமர திசநாயக்கா இலங்கை உடைய புதிய ஜனாதிபதியாக பதிவு பிரமாணம் செய்ததை அடுத்து பிராந்திய அரசாக விளங்கிவரும் இந்தியாவுடைய பிராந்திய அரசியல் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமையில் இவர் செயல்பட கூடுமான எதிர்பார்க்கப்படுகின்றது.
அதனை அடுத்து விரைவாக விரைந்து முதன் முதலாக முதலாவது வெளிநாட்டு பிரதமர் ஒருவர் இலங்கை ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மோடி மிக வேகமாக அவசரப்பட்டு ஒரு ஓடி வந்து இவருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்ததில் இருந்து பல்வேறுபட்ட அரசியல் விடயங்கள் வெளியாகி உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மோடி இலங்கை பயணம் இரத்து
மோடி இலங்கை பயணம் இரத்து
மோடி இலங்கை பயணம் இரத்து ,இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கை வருவதாக அறிவிக்க பட்டு இருந்தது ,ஆனல் அந்த பயணம் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது .
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறப்போவதாக அறிவிக்க பட்டிருந்த நிலையில் ,அந்த பயணம் இப்பொழுது திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது .
ஏன் பாரத பிரதமர் மோடியின் இந்த பயணம் இரத்து செய்யப்பட்டது என்பதற்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை .
இலங்கை வரும் இவருக்கு உயிர் ஆபத்து உள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ள நிலையில் ,நரேந்திர மோடியின் உத்தியோக பூர்வ பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஸ்ரீலங்கா வரும் நரேந்திர மோடியின் பயணத்தின் ஊடாக ,சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ள ,தமிழக மீனவர்கள் நூறுகணக்கில் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற விடயம் எதிர்பார்க்க பட்ட நிலையில் ,அது இடம் பெறாது போலுள்ளது .
தமது விடுதலை செய்யப்படக்கூடும் என எதிர்பார்க்க பட்ட உறவுகளுக்கு இந்த விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மோடியின் பதவி ஏற்புவிழாவில் ஜனாதிபதி
மோடியின் பதவி ஏற்புவிழாவில் ஜனாதிபதி
மோடியின் பதவி ஏற்புவிழாவில் ஜனாதிபதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார்.
நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (05) பிற்பகல், நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தனது பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்குமாறு ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாகவும், அந்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய அரசாங்கத்தின்
இதேவேளை, தற்போதைய இந்திய அரசாங்கத்தின் கடைசி அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ரஷ்தபதி பவனில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக சனிக்கிழமை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவும் பங்கேற்க உள்ளார்
Featured
மோடி ராஜினாமா கூட்டணி பேரம்
மோடி ராஜினாமா கூட்டணி பேரம்
மோடி ராஜினாமா கூட்டணி பேரம் இந்தியா தேர்தல் முடிவுகள் மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில் ,தற்போது மோடி கூட்டணி ஆட்சி அமைக்க தயாராகி வருகிறார் .
காணொளியில் விபரம்
பிரதமர் மோடியை கொல்ல சதி
பிரதமர் மோடியை கொல்ல சதி
டெல்லி திகார் சிறையில் இருக்கும் தாதா லாரன்ஸ் பிஷ்னாயை விடுவித்து ரூ.500 கோடி தராவிட்டால் பிரதமர் மோடியை படுகொலை செய்வோம்,
நரேந்திர மோடி ஸ்டேடியத்தை குண்டு வைத்து தகர்ப்போம் என இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்து மும்பை காவல் துறை மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரதமர் மோடியை கொல்ல சதி
மத்திய பாதுகாப்பு பிரிவு ஒன்றுக்கு மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்துள்ளது. அதில், ‘‘சிறையில் இருக்கும் தாதா லாரன்ஸ் பிஷ்னாயை விடுவிக்க வேண்டும். ரூ.500 கோடி தர வேண்டும். இல்லையென்றால், பிரதமர் நரேந்திர மோடியை
படுகொலை செய்வோம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தையும் குண்டுவைத்து தகர்ப்போம். இந்தியாவில் அனைத்தும் விற்பனை செய்யப்படுகிறது. நாங்களும் சிலவற்றை வாங்க வேண்டும்.
நீங்கள் எவ்வளவு பாதுகாப்புடன் இருந்தாலும், நீங்கள் எங்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியாது. நீங்கள் பேச விரும்பினால், நாங்கள் கூறியதை
செய்யுங்கள்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இ-மெயில்எங்கிருந்து வந்தது என்ற விசாரணை நடைபெற்று வருகிறது.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது
- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து
- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு
- அதிக விலையில் கீரி சம்பா அரிசி
- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்
- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை
- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்
- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா
- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்
- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்
ஜெர்மனியில் மோடி – குவிந்த இந்தியர்கள்
இந்தியா, ஜெர்மன் நாடுகள் தூதரக உறவை தொடங்கி 70 ஆண்டுகள் ஆகும் நிலையில், பிரதமர் ஓலப் ஸ்கால்சுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி ஈடுபடுகிறார்.
பாட்டு பாடிய சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி – பெர்லினில் ருசிகரம்
சிறுவனை பாராட்டிய பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளுக்கு இன்று அதிகாலை சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முதல் கட்டமாக,
ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்சின் அழைப்பின் பேரில் இன்று ஜெர்மன் தலைநகர் பெர்லினுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார்.
இதற்கிடையே, 6-வது இந்தியா, ஜெர்மன் அரசுகளுக்கு இடையிலான ஆலோசனைக்கு இரு நாட்டு பிரதமரும் தலைமை வகிக்கிறார்கள். தொடர்ந்து, இந்திய மந்திரிகள்
பலரும் ஜெர்மனி வந்து தங்கள் இலாகா மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பெர்லினில் இந்திய வம்சாவளியினரை பிரதமர் மோடி சந்தித்தார்.
அப்போது பிரதமர் மோடி ஒரு சிறுமி வரைந்திருந்த படத்தில் கையெழுத்திட்டார். ஏராளாமானோர் பிரதமர் மோடியுடன்
செல்பி எடுத்துக் கொண்டனர். மேலும் ஒரு சிறுவன் பாடிய பாடலை தாளம் போட்டபடி கேட்டு ரசித்தார் பிரதமர் மோடி.
றோவின் விளையாட்டு -யாழ்ப்பாண விமான நிலையத்தில் தரை இறங்கும் மோடி
றோவின் விளையாட்டு -யாழ்ப்பாண விமான நிலையத்தில் தரை இறங்கும் மோடி
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று முக்கியதத்துவம் வாய்ந்த இலங்கை பயணம் ஒன்றை மேற்கொள்கிறார்
இவர் எதிர்வரும் முப்பதாம் திகதி யாழ்ப்பாணம் விமான நிலையம் என பெயர் மாற்ற பட்டுள்ள பலாலி விமான நிலையத்தில் தரை இறங்குகிறார்
இந்தியாவில் இருந்து நேரடியாக தமிழர் வான் தளத்தில் தரை இறங்கும் முதலாவது வெளிநாட்டு தலைவர் என்ற பெருமையை இவர் தட்டி செல்கிறார்
இலங்கையின் பொருளாதார நிலை தொடர்பாக முக்கிய விடயங்கள் இதில் பேச படும் என எதிர் பார்க்க படுகிறது








































